Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

கிரெடிட் கார்டு – நல்லதோர் வீணை செய்தே – சாதகங்களும், பாதகங்களும்

கிரெடிட் கார்டு – நல்லதோர் வீணை செய்தே – சாதகங்களும், பாதகங்களும்

Advantages and Disadvantages of Using Credit Cards

இன்றைய காலத்தில், நம்மிடம் ஒருவர் அவசர தேவைக்காக பணம் கேட்டிருந்தால் நான் ஏன் இவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு  ஏற்படுவதுண்டு. மற்றவர்களுக்கு உதவிட வேண்டுமா என்ற ஐயம் உள்ள நமக்கு கிரெடிட் கார்டு என்ற பற்றட்டை (கடன் அட்டை) வாங்குவதில் எப்போதும் ஆர்வம் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிதி சார்ந்த சில விஷயங்களில் நாம் கவனமாக இருந்து வருகிறோம் என நினைத்தாலும், நமக்கு தேவையில்லாத நிதி சாதனங்களை தேர்ந்தெடுத்து வருவதுண்டு. போதுமான இன்சூரன்ஸ் தொகையை(Term Insurance) நமக்கு எடுத்து கொள்ளாமல், 5 லிருந்து 10 எண்டோவ்மென்ட் மற்றும் மணிபேக் பாலிசிகளை(Endowment & Moneyback Policies) எடுத்து விட்டு, நான் நிறைவான காப்பீட்டை பெற்றுள்ளேன் என எண்ணுவது. அதிகப்படியான ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து விட்டு, கடன்களை குறைப்பதில் அலட்சியம் காட்டுவது. இது போன்ற நிலை தான் கிரெடிட் கார்டு என்று சொல்லப்படும் கடன் அட்டை(Credit Card) வாங்குவதிலும்.

 

இன்று மாத சம்பளம் வாங்கும் பெரும்பாலோருக்கு கிரெடிட் கார்டு வாங்குவது என்பது அத்தியாவசிய சாதனமாக மாறி விட்டது. தங்களுக்கு இது தேவை தானா என சற்றும் யோசிக்காமல், கிரெடிட் கார்டு வைத்திருந்தால் நமக்கும் இந்த சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும் என்று பலர் நினைத்து நிதி பொறுப்பை சுமந்து வருகின்றனர். ஏற்கனவே சர்வதேச புள்ளிவிவரங்கள் நுகர்வோர்(Consumer Behavior) பயன்பாடுகளில் நம் நாட்டை எச்சரித்து வருகின்றன. இன்று நம் நாட்டில் நுகர்வோர் சார்ந்த பல பொருட்களும், சேவைகளும் வந்து விட்டன. இன்னும் பலவகைகள் அயல்நாட்டிலிருந்து இறக்குமதியாக உள்ளன. நாம் அவற்றை புத்திசாலித்தனமாக தொழில்முறையாக மாற்றினால் நல்லது. மாறாக, நுகர்தலை மட்டுமே கொண்டிருந்தால் நமக்கு கடனும், வியாபாரம் செய்பவருக்கு லாபமும் கிடைக்கும்.

 

கிரெடிட் கார்டுகள் என்று சொல்லப்படும் கடன் அட்டைகள் இன்றளவில் மிக எளிமையாக பயன்படுத்த முடியும் நிதி சாதனமாக இருக்கிறது. இருப்பினும், கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது உங்களை பெரும் நிதி சிக்கலில்(Debt Trap) மாட்டிக்கொள்ள செய்யும். நம் நாட்டில் தொழில் புரிபவர்களிடம் பெரும்பாலும் கிரெடிட் கார்டுகள் இருப்பதில்லை. மாத வருமானம் பெறுபவர்களே இதனை அதிகமாக பயன்படுத்தி வருவது எதிர்மறையான விஷயம்(Negative).

 

கிரெடிட் கார்டு என்பது ஒரு நிதி நிறுவனத்தால் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் அட்டையாகும். இதனை வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பொதுவாக விற்பனையின் அடிப்படையில், இது வாடிக்கையாளர்களுக்கு கடன் வாங்குவதற்கான ஒரு விருப்ப தேர்வை கொடுக்கிறது. குறுகிய கால நிதி(Short term Finance) தேவைக்கு அல்லது கடனாக இந்த கிரெடிட் கார்டை ஒருவர் பயன்படுத்தலாம். ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரையிலான காலவரையறை இந்த கடன் அட்டையின் மூலம் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கு கொடுக்கப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் உங்கள் கிரெடிட் கார்டு கடனை செலுத்தியிருந்தாலும், உங்கள் அட்டைக்கான பராமரிப்பு கட்டணம் உண்டு. கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால், உங்களுக்கான வட்டி தொகை நாட்கணக்கில் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும். இந்த வட்டி தொகை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் அதிகபட்ச வட்டி விகிதம் ஆகும்.

 

பொதுவாக கடன்  அட்டையை நாம் எங்கும் பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் இதனை நாம் சிறப்பாக உபயோகிக்கலாம். உங்களுக்கான அவசர நிதி தேவை(Emergency Needs), எதிர்பாராத செலவுகள்(Unexpected), வேலையிழப்பு(Loss of a Job) போன்ற நேரங்களில் இந்த கடன் அட்டைகள் உதவும். அதே வேளையில், பெற்ற தொகையை நாம் திரும்ப செலுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் அதற்கான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும்(Credit Card Offers) ஏராளம். புள்ளிகளின் அடிப்படையிலும் கடன் அட்டை உள்ளவருக்கு சலுகைகள் கிடைக்கும். இன்னும் சில கடன் அட்டையில் நீங்கள் ஷாப்பிங் செய்யும் போது, உங்களுக்கான கேஷ் பேக் சலுகையும் வருவதுண்டு.

 

கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தும் போது, உங்களுக்கான கிரெடிட் மதிப்பீடும்(Credit Score) சரியாக இருக்கும். இதன் மூலம், நீங்கள் எதிர்காலத்தில் வங்கிகளில் கடன் வாங்கப்போகும் போது, இந்த கிரெடிட் மதிப்பீடுகள் உங்களுக்கு உதவலாம். தொழில்கள் மற்றும் சேவையில் தங்களுக்கான பண தேவை உள்ளவர்கள் சரியான அணுகுமுறையில் கடன் அட்டையை பயன்படுத்தலாம். தங்கள் தொழிலுக்கான ஆர்டர் கிடைத்தவுடன், தயாரிப்புக்கான முதலீடு இல்லையே என சிந்திக்க வேண்டாம். இந்த கிரெடிட் கார்டுகள் குறுகிய கால கடன் அளிப்பவராக உங்களுக்கு உதவும். ஆனால், நிகழ்காலத்தில் பெரும்பாலான தொழில் புரிபவர்கள் கிரெடிட் கார்டை சார்ந்து இருப்பதில்லை.

 

கிரெடிட் கார்டு பயன்பாட்டை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் வைத்திருக்கும் கடன் அட்டை இனி நமக்கு தேவையில்லை எனும் போது, அதனை நிறுவனங்களில் முறையாக ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில், பின்னாளில் கட்டணங்கள் உங்கள் வங்கிக்கணக்கில் பிடித்தம் செய்யப்படும். கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டையை கொண்டிருக்கும் ஒருவர் செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனால் சில நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் வருமானத்திற்கு அதிகமாக செலவழிக்கும் பழக்கத்திற்கு மாறுகின்றனர்.

 

அதிகப்படியான கிரெடிட் கார்டுகளை வாங்கும் போது, அதிகமான தள்ளுபடிகள் கிடைக்கும் என்ற எண்ணம், உண்மையில் உங்களை கடன் சுமையில் தள்ளும்.  சேமிப்பவரை விட, அதிகமாக செலவழிப்பவரையே பெரும்பாலான சமயங்களில் வங்கிகள் விரும்புகிறது..

 

செலவழிப்பவரை நிதி நிறுவனங்கள் வரவேற்கலாம், தங்களின் லாபத்திற்காக…

 

  வாழ்க வளமுடன்,

 

   நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 14.73 பில்லியன் டாலராக சரிந்தது

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 14.73 பில்லியன் டாலராக சரிந்தது

India’s Trade deficit fell to USD 14.73 Billion in January 2019

 

நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 14.73 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்தது. ஏற்றுமதி(Exports) 3.74 சதவீதம் அதிகரித்து 26.36 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளன. ரசாயன விற்பனை(Chemicals), மருந்துகள்(Pharmaceuticals), ஆயுத்த ஆடைகள், நகைகள் மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி அளவு அதிகரித்ததால் இந்த 3.74 சதவீதம் சாத்தியமானது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏற்றுமதியில் ரசாயன விற்பனை 15.56 சதவீதத்தையும், மருந்துகள் 15.2 சதவீதமும், ஆயுத்த ஆடைகள்(Ready made garments) 9.33 சதவீதத்தையும், கற்கள் மற்றும் நகைகள்(Gems & Jewellery) 6.67 சதவீதத்திலும் மற்றும் பொறியியல் பொருட்கள்(Engg goods) 1.07 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டிருந்தன. கடந்த மாதத்தில் இறக்குமதி(Imports) 41.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதன் காரணமாக நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 14.73 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

 

கடந்த 2018ம் வருடத்தில் சொல்லப்பட்ட இதே காலத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) 15.67 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இறக்குமதியில் தங்கத்தின் பங்கு 38 சதவீதம் உயர்ந்து 2.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக முடிவடைந்தது. கடந்த ஜனவரி 2018ல் தங்கத்தின் இறக்குமதி பங்களிப்பு 1.8 பில்லியன் டாலர்களாகும்.

India Trade Deficit January 2019

நடப்பு நிதியாண்டின்(FY2019) முடிவடைந்த 10 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 155.93 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த காலத்தில்(ஏப்ரல் 2017- ஜனவரி 2018) 136.25 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. நடப்பு நிதி வருடத்தின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி 9.5 சதவீத வளர்ச்சியையும், இறக்குமதி 11 சதவீத வளர்ச்சியையும் கொண்டிருந்தது.

 

இறக்குமதியில் கடந்த டிசம்பர் 2018ம் காலத்தில் 2.44 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இது கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அடைந்த அதிகபட்ச சரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் உலோக தாதுக்கள், முத்து மற்றும் விலையுயர்ந்த கற்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களில் 20 சதவீதத்திற்கு மேல் சரிவை கண்டிருந்தாலும், தங்கத்தின் இறக்குமதி(Gold Imports) 38 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

1957ம் ஆண்டு முதல் ஜனவரி 2019ம் காலம் வரை, (Balance of Trade) நாட்டின் வர்த்தக சமநிலை (-2544.12) மில்லியன் டாலராக இருந்துள்ளது. உச்சபட்சமாக 1977ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 258.90 மில்லியன் அமெரிக்க டாலராகவும், குறைந்தபட்சமாக கடந்த 2012ம் வருடம் அக்டோபர் மாதத்தில் (-20210.90) மில்லியன் டாலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

Which is the best Investment – Physical Gold or Gold Funds

 

நமது வர்த்தக மதுரை இணையதளத்தில் கடந்த சில கட்டுரைகளுக்கு முன், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் மற்றும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருந்தோம். கடந்த பத்து வருட கால அளவில் மதிப்பீடும் போது, தங்கத்தின் மீதான வருமானம் பெரும்பாலும் வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதிக்கான(Fixed Deposits) வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தங்கத்தை நகைகளாக(Jewels) வாங்குவதை காட்டிலும் அதனை ஒரு முதலீட்டு சாதனமாக மாற்றுவதே நமக்கான புத்திசாலித்தனமாகும். நாம் ஏற்கனவே சொன்னது போல, தங்க ஆபரணங்கள் என்பது ஒரு தேய்மான பொருளாகவும், வருமானம் எதுவும் தராமல் போகும் அணிகலனாக மட்டுமே (Liability) உள்ளது. நம்முடைய பெரும்பாலான சேமிப்பு தொகை தங்க நகைகள் வாங்குவதற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. மாறாக நமக்கான நிதி இலக்குகளுக்கு(Financial Goals) அது துணைபுரிவதில்லை.

 

எந்த ஒரு முதலீட்டு சாதனத்திற்கும் வருமான வாய்ப்பு மற்றும் நீண்ட காலத்தில் வளர்ச்சியும் உண்டு. அந்த வகையில் காணும் போது, நாம் நமது நகைகளை கொண்டு எவ்வளவு சம்பாதித்தோம் என பார்த்தால், தேய்மான செலவும்(Depreciation), தங்கத்தை பரிமாற்றம் செய்த செலவுகள்(Exchange) தான் மிஞ்சும். நமக்கு தேவையான சிறிதளவு நகைகளை மட்டும் வைத்து கொண்டு, தங்கத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை கண்டறிவது நல்லது.

 

தங்க நகைகளுக்கு மாற்றாக தங்க பண்டுகள் (அ) தங்க இ.டி.எப்.(Gold ETF) என்று சொல்லக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் நமது முதலீடு இருக்கும் போது, நாம் போதுமான வருமானத்தை பெறலாம். தங்க நகைகளுக்கும், கோல்டு இ.டி.எப். திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை பின்வரும் படத்தில் பாருங்கள்.

Gold vs Gold Fund

பொதுவாக நாம் தங்க நகைகளாக வைத்திருக்கும் போது, அவற்றில் ரிஸ்க் அதிகம். அது ஒரு பாதுகாப்பான முதலீடு என்று நாம் கூறினாலும், நகைகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமா என்பதை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் 91.6 சதவீத சுத்தமான தங்கத்தை மட்டுமே நாம் வாங்கும் வாய்ப்புண்டு. அதே வேளையில் பரஸ்பர நிதி திட்டங்கள் அளிக்கும் கோல்டு பண்டுகளில்(Gold Mutual Funds) 99.5 சதவீத மதிப்பிலான சுத்த தங்கத்தின் அடிப்படையில் நமது முதலீடு அமையும்.

 

வெறும் தங்க நகைகளாக மட்டுமே நாம் இப்போது வைத்திருக்கும் போது, பிற்காலத்தில் அந்த நகைகள் தேய்மானம் அடைவதும், மீண்டும் நாம் அதற்கான மாற்று பொருளாக புதிய நகைகளை வாங்குவதும் நமக்கு வீண்செலவு தான். அதற்கு பதிலாக இது போன்ற தங்க பண்டுகளில் நாம் முதலீட்டை மேற்கொள்ளும் போது, தேவைப்படும் காலத்தில் நமக்கான புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம், நமக்கும் இதன் மூலம் வருவாயும் கிடைத்திருக்கும்.

 

நாம் வைத்திருக்கும் தங்க நகைகளை அவ்வளவு எளிதாக பணமாக மாற்ற முடியாது. நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ மட்டுமே நம்மால் முடியும். மேலும் நகைகளின் மதிப்பில் குறைவான பணமே நமக்கு கிடைக்கும். ஆனால் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டங்களில் நாம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு தேவையான தொகையை பெற்றுக்கொள்ளலாம். பாதுகாப்பான முதலீடும் மட்டுமில்லாமல் இதனை வாங்குவதற்கான செலவும் மிக குறைவு.

 

தங்க இ.டி.எப். திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடாக(Minimum Investment) ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை கூட நாம் வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி அடிப்படையில் தங்க நகைகளுக்கு உள்ள காலங்களே இ.டி.எப். பரஸ்பர நிதி திட்டத்திற்கும் பொருந்தும். நாம் தங்க நகைகளை விற்பனை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் லாபத்திற்கு செல்வ வரி(Wealth Tax) உண்டு. ஆனால் தங்க பண்டுகளுக்கு இது போன்ற வரிகள் இல்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சந்தை வல்லுநர்களை ஆச்சரியப்படுத்திய சன் பார்மா காலாண்டு நிகர லாபம்

சந்தை வல்லுநர்களை ஆச்சரியப்படுத்திய சன் பார்மா காலாண்டு நிகர லாபம்

Sun Pharma Q3FY19 results surpasses Market Analysts

 

இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சன் பார்மா(Sun Pharmaceutical) தனது மூன்றாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1461 கோடியை ஈட்டியுள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மதிப்பை கொண்ட சன் பார்மா நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் ரான்பாக்ஸி(Ranbaxy Laboratories) மருந்து நிறுவனத்தை 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கையகப்படுத்தியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகளவில் 5வது மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான(Pharmaceutical formulations) இது கடந்த சில வருடங்களாக, அதாவது ரான்பாக்ஸி நிறுவனத்தை வாங்கிய பின் பல சிக்கல்களில் மாட்டி கொண்டிருந்தது. 2018-19ம் நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் இந்நிறுவனம் முதன்முறையாக 160 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் 26 சதவீத வருமான இழப்பை(Negative Returns) ஏற்படுத்தியுள்ளது.

 

சந்தையில் முதலீட்டாளர்களிடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த சன் பார்மா நிறுவனம் 2018-19ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. சந்தை வல்லுநர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இதன் காலாண்டு முடிவுகள் இருந்தன. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய்(Revenue) 7,740 கோடி ரூபாயாகவும், இயக்க விகிதம்(Operating Margin) 28 சதவீதமாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய வருமானம் ரூ. 1,730 கோடி மற்றும் நிகர லாபம் 1,461 கோடி ரூபாய்(Net Profit).

 

கடந்த 2017-18ம் நிதியாண்டில் இதே காலத்தில்(YoY) நிறுவனத்தின் வருவாய் ரூ.6,653 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 356 கோடியாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.27 ஆக இருந்துள்ளது. கடந்த மூன்று வருட காலத்தில் லாப வளர்ச்சி (-14.35) சதவீதமாகவும், 12 மாத கால அளவில் பார்க்கும் போது, 65 சதவீத லாப வளர்ச்சியையும் கொண்டிருந்தது.

 

பங்கு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் சன் பார்மா 6.71 சதவீத வருமானத்தையும், பத்து வருட காலத்தில் 295 சதவீதத்தையும் வருமானமாக முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. தற்போது வெளிவந்த மூன்றாம் காலாண்டு முடிவுகளை இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது(QoQ), தற்போது வருவாய் 12 சதவீத வளர்ச்சியை கொடுத்துள்ளது. இதே வேளையில் நிறுவனத்தின் நிகர லாபம் காலாண்டில் 667 சதவீத வளர்ச்சியுடன் இருந்தது.

 

சன் பார்மா நிறுவனம் நீரழிவு(Diabetes), இருதய கோளாறுகள், வளர்சிதை மாற்ற நோய்கள்(Metabolic Disorders), கண், புற்றுநோய், இரைப்பை கோளாறு மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து தயாரித்து, உலகளவில் 26 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் – என்ன செய்யலாம் ?

தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் – என்ன  செய்யலாம் ?

What to do while the prices of Gold increases ?

 

நம் நாட்டிற்கும், தங்கத்திற்கும் இடையே மிகவும் ஆழமான நட்பு இருந்து கொண்டிருப்பதை வரலாற்று புள்ளிவிவரங்களில் நாம் அறியலாம். நமது குடும்பத்திற்கு தேவையான நிதி ஆதாரம் இல்லாவிட்டாலும், தங்கத்தை அதுவும் நகைகளாக வாங்குவது நம்மிடையே இன்னும் குறையவில்லை. தங்கம் விலை இந்த மாதத்தின் துவக்கத்தில் (பிப்ரவரி 2, 2019) 24 காரட் விலை கிராமுக்கு ரூ. 3358/- ஆகவும், 22 காரட் விலை கிராமுக்கு 3170 /- ரூபாயாகவும் வர்த்தகமானது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 2613/- ஆக இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த விலை கடந்த ஐந்து வருடங்களில் இருந்த அதிகபட்ச விலையாக சொல்லப்படுகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களை தொடர்ந்து தங்கத்தின் விலை தற்சமயம் அதிக விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பிலும் ஸ்திரத்தன்மை(Stability on Dollar Conversion) உள்ளதால், தங்க இறக்குமதி விலையிலும்(Gold import) வித்தியாசம் காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து இருந்ததும், விழா காலங்களை முன்னிட்டு மக்களிடையே தங்கத்தின் தேவை அதிகரித்ததும் தான் தங்க நகைகளின் விலையை அதிகரித்துள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் மட்டும் தங்கத்தின் இறக்குமதி 46 டன்கள், இது கடந்த 2018 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 64 சதவீதம் அதிகமாகும். கடந்த 2013ம் ஆண்டில் மும்பை சந்தையில் தங்கத்தின் பென்ச்மார்க்(Benchmark Gold Futures) மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.35,074 /- வரை சென்றது. 2013ம் வருடம் பிப்ரவரி 4ம் தேதியன்று 10 கிராம் விலை 33,646 ரூபாயாக இருந்தது. இந்த விலை மதிப்பில் தான் தற்போது வர்த்தகமாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

பொதுவாக நமது நாட்டில் தங்க நகைகளின் விலை அதிகரிப்பதற்கு காரணமாக சொல்லப்படுவது(Reason) அயல்நாட்டில் இருந்து தங்க இறக்குமதி (டாலர் மதிப்பில்), கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் தேவைகள்(Domestic Demand). தங்கத்தின் அதிகபட்ச இறக்குமதியால் நாட்டின் நிதி பற்றாக்குறை கணக்கிலும்(Fiscal Deficit) சுமை அதிகரிக்கிறது. அரசாங்கத்தை பொறுத்தவரை தங்கம் ஒரு இழப்புக்காப்பு(Hedging) சார்ந்த சாதனமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இது போர் நிலவும் அவசர காலங்களில் மட்டுமே பயன்பட முடிகிறது. மற்ற நேரங்களில் மக்களின் அணிகலன் விருப்பத்திற்காக மட்டுமே இது உபயோகப்படுத்தப்படும்..

 

கடந்த பத்து ஆண்டுகளில் தங்கத்தை ஒரு முதலீடாக(History of Gold prices) காணும் போது, அதன் வருமானம் வங்கிகளின் வைப்பு நிதி வட்டி விகிதத்தை ஒட்டியே இருந்துள்ளது. இந்த வருமானம் பணவீக்கத்தை(Inflation) தாண்டியதாக இருக்கவில்லை. ஆனால் கடந்த வருடம் பங்குச்சந்தை மந்தமாக இருந்ததால், அதனை காட்டிலும் தங்கத்தில் முதலீடு குறிப்பிடத்தக்க வருமானத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் நாட்டின் பணவீக்கமும் குறைந்த அளவிலே உள்ளதால், தங்கத்திற்கு எந்த தாக்கமும் ஏற்படவில்லை. நிதி பற்றாக்குறையை குறைக்க அரசும் தங்கத்தின் இறக்குமதி விகிதத்தை குறைத்து வருவது கவனிக்கத்தக்கது.

 

தங்கத்தில் முதலீடு செய்கிறேன் என்று நாம் தங்க ஆபரணங்களை வாங்கி கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. முதலீடு என்பது வளர்ச்சியை(Investment must grow) நோக்கி செல்ல வேண்டும். முதலீட்டிற்கு லாப-நட்டங்கள் இருக்கலாம். ஆனால் தேய்மானத்தை மட்டுமே கொண்டிருத்தல் கூடாது. அவ்வாறு காணும் போது, நாம் வாங்கும் தங்க நகைகள் தேய்மானத்தை மட்டுமே கொண்டுள்ளது, எனவே இதனை ஒரு சிறந்த முதலீடாக கருத முடியாது.

 

தங்கத்தின் விலை அதிகரிப்பை லாபமாக பெற விரும்புபவர்கள் முதலீட்டு சாதனமாக தங்க பத்திரங்கள்(Gold Bonds), தங்க இ.டி.எப்.(Gold ETF) திட்டங்களில் முதலீடு செய்யலாம். தங்கள் பெண் குழந்தைகளுக்கு நகை வாங்க விரும்புபவர்களும் இது போன்ற திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, பிற்காலத்தில் தேவைப்படும் நாட்களில் இதனை விற்று வரும் பணத்தில் தங்கத்தினை அதன் மதிப்பில் வாங்கி கொள்ளலாம். நமக்கான நகைகளும் புதிதாக கிடைக்கும், பழைய நகைகள் மற்றும் தேய்மானம்(Depreciation) போன்ற விஷயங்கள் நடைபெறாது. அரசாங்கம் வெளியிடும் தங்க பத்திரங்களில் குறிப்பிட்ட காலத்தில் வட்டியும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

 

நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் நமக்கு இப்போது தேவைப்படவில்லை என்றால், வங்கிகள் அளிக்கும் தங்க டெபாசிட் திட்டத்தில்(Gold Deposit Scheme) நமது தங்கத்தை முதலீடாக கொண்டு, வட்டி வருமானத்தை பெறலாம். தங்க நகைகள் நமக்கு அவசரகாலத்தில் உதவலாம் என்று நாம் கூறினாலும், இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் உங்கள் வங்கி அட்டையும்(Debit & Credit Cards), ரொக்கமும்(Cash is King) தான் உதவ நேரிடும். தங்கத்தின் விலை அதிகரிப்பு உலகளாவிய பொருளாதார காரணிகள் மற்றும் டாலரின் மதிப்பை சார்ந்தே உள்ளன என்பதை மட்டும் நாம் மறந்திற கூடாது. நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் சரியாக தேர்ந்தெடுக்கும் போது, வருமான வளர்ச்சி தானியங்கியாகவே செயல்படும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

Best 5 Tax Saving Mutual Funds – ELSS – 2019

 

நடப்பு நிதி வருடத்திற்கான(2018-19) காலம் முடிவடைவதற்கு இன்னும் ஏழு வாரங்களே உள்ளன. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் பட்ஜெட் வாயிலாக தனி நபர் வருமான வரியில் தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகள் கொடுக்கப்பட்டன. இந்த வரி தள்ளுபடிகளும், மற்ற சலுகைகளும் அடுத்து வரும் 2019-20ம் நிதியாண்டுக்கானது. இருப்பினும் நமக்கு நடப்பு வருடத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை கொண்டு நாம் வருமான வரி தாக்கல்(Income Tax filing) செய்ய போகிறோம். நடப்பு வருடத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை, வரி தள்ளுபடியாக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நம்மில் பெரும்பாலோர் வருமான வரியில் விலக்கு பெற(Income Tax exemption), கடைசி நேரத்தில் வரி சலுகை திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். வரி சலுகையை பெற ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்தில் முதலீட்டை துவங்குவதே நல்லது. நீங்கள் செய்யப்போகும் முதலீடு வரி சலுகைக்காக மட்டுமில்லாமல், உங்களின் நிதி இலக்குகளை(Financial Goals) சார்ந்து இருக்க வேண்டும். இன்னும் சிலரோ வருமான வரி சலுகைக்கு வெறும் காப்பீட்டு திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளனர் என்பது வருந்தத்தக்க விஷயம். வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் உள்ள ஒரு தனி நபர், தனக்கு போதுமான காப்பீட்டு தொகையை எடுத்து விட்டு பின்னர் மற்ற வரி சலுகை திட்டங்களை பற்றி யோசிக்கலாம். போதுமான காப்பீடு என்பது இன்று டேர்ம் பாலிசியில்(Term Insurance Policy) மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கிறது. காப்பீடு போக மீதமுள்ள தொகைக்கு நாம் வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ் மற்ற வரி சலுகை திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். Income Tax Act – 80 சி பிரிவின் கீழ் தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்.

 

வரி சலுகைக்கான திட்டங்கள் எனும் போது, பொதுவாக அஞ்சலக மற்றும் வங்கிகளில் வழங்கப்படும் திட்டங்கள் ஞாபகம் வரலாம். பொது வருங்கால வைப்பு நிதி(PPF), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), செல்வமகள் திட்டம்(Sukanya Samriddhi), காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் அளிக்கும் வரிச்சலுகை முதலீடுகள்(Tax Saving Mutual Funds) ஆகியவை நமக்கான வாய்ப்புகளாக உள்ளன.

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களும் வருமான வரி சட்டம் பிரிவு 80சி ன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை (அனைத்துக்கும் சேர்த்து) வரி சலுகை பெறக்கூடியவை. வரி சலுகை திட்டங்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு(Lock-in Period) பிறகு தான் நாம் அந்த திட்டங்களில் இருந்து பணத்தை பெற வேண்டும். இதன் காரணமாக தான் நமக்கு வரிச்சலுகை கிடைக்க பெறுகிறது. அவ்வாறு பார்க்கும் போது, குறைந்த காலத்தில் முதலீட்டை எடுக்கக்கூடியதாகவும், ரிஸ்க்குடன் கூடிய நல்ல வருமானத்தை தருவதாக பரஸ்பர நிதி வரிச்சலுகை  திட்டங்கள்(ELSS -Equity linked Savings Scheme) உள்ளன. இவை மற்ற வரி சலுகை திட்டங்களை காட்டிலும் நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை கொடுப்பவை.

 

நடப்பு நிதியாண்டு 2019ல் சிறந்த மற்றும் வரி சலுகை அளிக்கக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்கள்(Tax Saving Mutual Funds),

 

  • Canara Robeco Equity Tax Saver
  • Axis Long Term Equity Fund
  • Mirae Asset Tax Saver Fund
  • Taurus Tax Shield Fund
  • Kotak Tax Saver Fund

 

இந்த ஐந்து திட்டங்களும் வருவாய் மற்றும் ரிஸ்க் விகிதத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. Value Research Online மற்றும் Morningstar தளங்கள், சொல்லப்பட்டுள்ள ஐந்து பரஸ்பர நிதி திட்டங்களுக்கும் ஒன்று முதல் ஐந்து வரை தரவரிசை பட்டியலில் இடம் கொடுத்துள்ளது. ஒரு பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்கும் போது, அதன் நிர்வாகம்(Fund Manager), வருவாய் மதிப்பீடு, துறை சார்ந்த மற்றும் பென்ச்மார்க் வருமானம்(Benchmark Returns), ரிஸ்க் விகிதங்கள்(Risk ratios) போன்றவற்றை ஆய்வு செய்வது அவசியம்.

 

மேலே சொல்லப்பட்டுள்ளன வரி சலுகை அளிக்கும் பரஸ்பர நிதி திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500/- மட்டுமே. செலவின விகிதம்(Expense ratio) 2.0 – 2.75 % என்ற அளவிலும், பணத்தை திரும்ப பெறும் போது வெளியேறும் கட்டணம்(No exit load) எதுவுமில்லை. பண்டுகளின் ரிஸ்க் அளவு குறைந்தது முதல் மிதமானதாக(Low to Average) உள்ளது. நியமச்சாய்வு(Standard Deviation) 14லிருந்து 15 புள்ளிகள் வரை கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட கால வருவாய் என பார்க்கும் போது, சராசரியாக மூன்றிலிருந்து ஏழு சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த வருடத்தில் சந்தை மந்தமாக இருந்ததும், இந்த வருவாய் குறைவுக்கான காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் ஐந்து வருட காலத்தில் அனைத்து பண்டுகளும் 15 சதவீதத்திற்கும் மேல் வருமானத்தை தந்துள்ளது.

 

5 சிறந்த பரஸ்பர நிதி திட்டங்களில் ஒவ்வொரு பண்டின் சந்தை மூலதனமும் ரூ.50,000 கோடிக்கும் மேல் உள்ளது. நட்சத்திர மதிப்பீடை(Star Rating) மட்டுமே கருத்தில் கொள்ளாமல், மற்ற விஷயங்களையும் நாம் ஆராயும் போது சிறந்த பரஸ்பர நிதி திட்டங்கள் நமக்கு கிடைக்கும். சொல்லப்பட்ட வருமான விகிதங்கள் மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் கடந்த கால செய்தியே. இனிவரும் காலத்தில் அவை நன்றாக செயல்படுமா என்பது சந்தை மற்றும் நிர்வாகத்தை சார்ந்தது.

 

மறவாதீர்கள், கடைசி நேர வரிச்சலுகை திட்டங்களை தவிருங்கள். உங்களுக்கான நிதி இலக்குகளை அல்லது தேவைகளை முதலில் தீர்மானியுங்கள். அதனை சார்ந்து வரி சலுகை திட்டங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். செய்யப்படும் வரி சலுகை முதலீடு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் நிதியாண்டின் (ஏப்ரல் மாதம்) தொடக்கத்தில் இருக்கட்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

Unemployment or Entrepreneurship – Unemployment Rate

 

சமீபத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து கொண்டு வருவதாக ஆய்வுகளும், அதனை தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வருவதுமாக உள்ளது. சி.எம்.ஐ.இ.(Centre for Monitoring Indian Economy -CMIE)  தரவுகளின் படி கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.13 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.80 சதவீதமாகவும் மற்றும் கிராமப்புறங்களில் 6.24 சதவீதமாகவும் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதிகபட்ச வேலைவாய்ப்பின்மையாக திரிபுராவில் 30.9 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 1.50 % என்ற அளவிலும் தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.5 சதவீதமும் மற்றும் புதுச்சேரியில் 1.7 என்ற விகிதமும் இருந்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக(Unemployment Rate) காணப்பட்ட வருடமாக 2016-17ம் வருடங்களை குறிப்பிட்டுள்ளது. அதாவது தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம்(Labour Participation Rate -LPR %) மிக குறைவாக இருப்பதாக கணிப்பில் உள்ளது.

 

அரசு சார்பாக நடத்தப்படும் வேலைவாய்ப்பின்மை சார்ந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் இப்போதைய காலத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கல்வியில் வளர்ச்சி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மத்திய அரசின் ஆட்சி மாறும் போது, வேலைவாய்ப்பின்மை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மையில் இங்கு வேலை வாய்ப்பு இல்லையா அல்லது பயன்படுத்தப்படுவது இல்லையா என்பதே ஒவ்வொருவரின் கேள்வியாக இருக்கிறது.

Unemployment rate CMIE

நுகர்வோர் பயன்பாடு(Consumerism) அதிகரித்து வரும் நம் நாட்டில், பொருளாதாரமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டு தான் உள்ளது. அப்படியிருக்கும் போது, இந்த புள்ளி விவரங்கள் எதனை குறிப்பிடுகிறது என்பதே ஒரு ஐயம். பொதுவாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் கருத்துக்கணிப்புகள் செயல்படாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஏனெனில் அதன் வளர்ச்சி ஒவ்வொரு காலத்திலும் மிகவும் வேறுபடும். தூங்கா நகரத்தில் இன்று விடிய விடிய வணிக கடைகள் செயல்படாவிட்டாலும், ஸ்விக்கி(Swiggy), உபேர் ஈட்ஸ்(Uber Eats), ஜொமாடோ(Zomato) போன்ற உணவு சார்ந்த நிறுவனங்கள் வந்திருக்க முடியாது.

 

ஒரு புறம் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் மற்றொரு வேலைக்கு செல்வதும், அயல்நாட்டு வாய்ப்பை(Overseas Job Opportunity) அறிவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை என்ற ஒற்றை கருத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கும் இந்த வேளையில், தொழில்முனைவுகளை(Entrepreneurship) தேடி செல்வதையும் நாம் மறுக்க முடியாது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களின் மேற்படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு செல்ல விரும்புவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதில் ஆர்வமாக உள்ளனர்.

 

தொழில்முனைவதின் அவசியமும் இன்றைய காலகட்டத்தில் தேவையே. தொழில்முனைதலின் ரகசியமே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான(Creating Jobs -Employment) சூழல் தான். எனினும், இன்று பெரும்பாலான தொழில்கள் தோல்வியடைய காரணம் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாததே என சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் தனக்கென விவசாய நிலம் கொண்டு, தொழில்முனைதல் புரிந்தவர்கள் தான் நாம். ஆனால் விவசாய நிலங்களில் நமது பங்களிப்பு தற்போது அதிகம் இல்லையென்றாலும், புதுமையான விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அரசாங்கம் மட்டுமே ஒரு நாட்டில் உள்ள அனைவருக்குமான வேலைவாய்ப்பை உறுதி செய்து விட முடியாது. இருப்பினும் இதனை அலட்சியப்படுத்துவதற்கும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புதிய தொழில்களை உருவாக்குவதும்(Creating new and more business), நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுவடைய செய்யும். ஆங்கிலத்தில், ‘Sharing is Caring ‘ என சொல்வதுண்டு. வெறும் நுகர்வோர் கலாச்சாரம் மட்டுமே நம்மை மேம்படுத்தி விட முடியாது. வெகுவாக வளர்ந்து வரும் நுகர்வோர் விகிதத்தை சார்ந்து நமது வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் நமக்கு நாம் செய்யும் கடமை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

வட்டி விகித குறைப்பு, மழுங்கும் வங்கி முதலீடுகள் – இனி எங்கு முதலீடு செய்ய போகிறீர்கள் ?

வட்டி விகித குறைப்பு, மழுங்கும் வங்கி முதலீடுகள் – இனி எங்கு முதலீடு செய்ய போகிறீர்கள் ?

Interest rate falling and Diminishing Bank Deposits – Where are you going to invest ?

 

இன்று (07-02-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee -MPC) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து பாரத ரிசர்வ் வங்கி(RBI). ரெப்போ விகிதம்(REPO Rate) என்பது நாட்டில் உள்ள வங்கிகளுக்கு பாரத ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமாகும். பொதுவாக ரெப்போ விகிதம் குறையும் போது, வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் இனி 6.25 சதவீதத்தில் இருக்கும். இதனால் ரிவெர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse REPO) 6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. வங்கிகளின் வட்டி விகிதம் 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரொக்க இருப்பு விகிதத்தில்(CRR) மாற்றமில்லாமல் அதே 4 சதவீதத்தில் தொடரும் என கூறப்பட்டுள்ளது. நடப்பு காலாண்டில் பணவீக்கம்(Inflation) 2.8 சதவீதமாக இருக்கும் எனவும், 2019-20ம் நிதியாண்டில் முதல் பாதியில் இது 3.4 சதவீதமாகவும், அடுத்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 3.9 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 7.4 சதவீதத்தில் இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கணித்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற விவசாய கடன் தொகையை ரூ. 1 லட்சத்திலிருந்து 1.6 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த நிதி கொள்கை குழு கூட்டம் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும்.

 

ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது, வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தில்(Interest rate) சலுகை பெறுவர். அப்படியிருக்கும் போது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகித குறைப்பு வீட்டுக்கடன் பெறுவோருக்கும், தொழிலுக்கான கடன் பெறும் வாடிக்கையாளருக்கும் நலன் பயக்கும். அதே வேளையில், கடந்த சில வருடங்களாக வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருவது, வங்கியில் சேமிக்கும் மற்றும் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான வட்டி வருமானத்தை தருவதில்லை.

 

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, அது கடன் சந்தைக்கு(Debt Market) சாதகமாக அமையும். வங்கிகளில் வட்டி குறையும் காலத்தில், கடன் சந்தையில் வட்டி விகிதம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கடன் சந்தையை நோக்கி செல்வதுண்டு. அதே நேரத்தில், வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் காலத்தில், கடன் சந்தையில் மதிப்பு குறைவாக அமையும். அப்போது முதலீட்டாளர்கள் வங்கிகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் முதலீட்டு சாதனத்தையோ தேடுவதுண்டு.

 

தற்போது குறைக்கப்பட்ட வங்கிகளின் வட்டி விகிதம் கடன் பெறுவோருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும், தொடர் வைப்பு(Recurring) மற்றும் வைப்பு நிதிகளில்(Fixed Deposits) முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டி வருமானமும் கிடைக்க கூடியதாக இருக்கும். இது போன்ற காலங்களில் கடன் சந்தையில் முதலீடு செய்வதும், கடன் சந்தை சார்ந்த பரஸ்பர நிதித்திட்டங்களிலும்(Debt Mutual Funds) முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும். இன்று பரஸ்பர நிதிகள் வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி வருமானத்தையே கொடுத்து வருகிறது. நடப்பு காலத்தில் அரசாங்கத்தின் பத்து வருட பத்திர வருவாய்(10 Year Bond Yield) 7.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே பரஸ்பர நிதித்திட்டங்களில் பத்திர வருவாயாக ஆண்டுக்கு 8.5 % லிருந்து 10 சதவீதம் வரை கிடைக்க பெறுகிறது. கடன் சார்ந்த மற்ற பரஸ்பர நிதி திட்டங்களிலும் சராசரி வருமானமாக 9 சதவீதம் வரை உள்ளது.

Best Ultra Short Duration Funds

 

வங்கி வைப்பு நிதி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் இக்காலத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் ஒருவர் முதலீடு செய்து நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். குறுகிய கால திட்டங்களில்(Ultra Short Duration Funds) பிராங்க்ளின் பண்டு(Franklin India) ஒரு வருட காலத்தில் 9 சதவீதமும், 2 வருட காலத்தில் 8.5 சதவீதமும், 5 வருட காலத்தில் 9.3 சதவீத வருமானத்தை தந்துள்ளது. இதே போன்று ரிலையன்ஸ் அல்ட்ரா ஷார்ட் கால பண்டு(Reliance Ultra Short Duration) 7.5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதம் வரை வருமானத்தை தந்து கொண்டிருக்கிறது. ஆதித்யா பிர்லா(ABSL), ஐ.சி.ஐ.சி.ஐ.(ICICI) மற்றும் எஸ்.பி.ஐ. பண்டுகளும்(SBI Mutual Funds) வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி வருமானத்தை கொடுத்துள்ளது.

 

மிகவும் குறுகிய கால பண்டுகளான லிக்விட் பண்டுகளும்(Liquid Funds) 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை வருமானத்தை தருகிறது. லிக்விட் பண்டுகள் பொதுவாக கருவூல மசோதா மற்றும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் முதிர்வடையும் காலம் 91 நாட்கள். தற்போதைய காலத்தில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

PPF(Public Provident Fund) Interest rate over the past 20 years

 

நமது நாட்டின் பலம் மிகுந்த தன்மையே பண்பாடும், அதனை சார்ந்த ஒருமைப்பாடும் தான். கூட்டு குடும்பத்தின் இலக்கணமாக திகழ்ந்த நம் நாட்டில் இன்று தனிக்குடும்பம் என்ற நிலை இருந்தாலும், விழா காலங்களிலும், ஒவ்வொரு குடும்பத்தில் நிகழும் சுக-துக்க நிகழ்ச்சிகளில் நமது ஒற்றுமை எப்போதும் வெளிப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பண்பாடும், ஒருமையும் மட்டுமே நமது வலிமை என்று கூறினால் அது மட்டுமே இல்லை. நமது மற்றொரு பலம் ஒவ்வொருவரின் சேமிப்பிலும் உள்ளது. மற்ற நாடுகளை போல் இல்லாமல், நம்மிடம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது. நமது பாரம்பரியத்தில் ரிஸ்க்(Risk reward) எடுக்கும் திறன் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அதனால் தான் நம்மில் பெரும்பாலோர் பாதுகாப்பாக இருக்கும் முதலீட்டு சாதனத்தில் நம்முடைய பணத்தை அதிகளவில் கொண்டிருக்கிறோம்.

 

பாதுகாப்பான சேமிப்பு(Safe Investments) என்று சொல்லும் போது, வங்கி மற்றும் அஞ்சலகத்தின் மீது நம்முடைய பற்று அதிகமாகவே .காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன வேலையில் இன்று ஓய்வூதியம் என்ற விஷயம் இல்லையென்றாலும், வருங்கால வைப்பு நிதி(PPF) என்ற சாதனம் இன்றும் கவர்ச்சிகரமாகவே உள்ளது. பணவீக்க விகிதம் குறைவாக இருக்கும் இக்காலத்தில், வருங்கால வைப்பு முதலீட்டில் சேமிக்கப்படும் தொகை அதிகமாக தான் இருந்துள்ளது. கடந்த சில வருடங்களாக பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்(Interest rate) 7-8 சதவீதம் என்ற நிலையிலே உள்ளது. இது கடந்த 20 வருட காலத்தில்(PPF Interest rate History) எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

 

கடந்த 2001ம் வருடத்திற்கு முன்பு, பி.பி.எப். வட்டி விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது. அப்போதைய பணவீக்கமும்(Inflation) சற்று அதிகம் தான். 1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, பொது வருங்கால வைப்பு நிதியில் வழங்கப்பட்ட வட்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இன்று பரஸ்பர நிதித்திட்டங்கள்(Mutual Funds) சராசரியாக கொடுக்கும் வட்டி இதுவாகும். பின்னர் 2001 மற்றும் 2002ம் வருடங்களில் இதன் வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரைக்குள்ளாக அமைந்துள்ளது.

PPF Interest Rates History

2003ம் ஆண்டுக்கு பிறகு பி.பி.எப். சாதனத்திற்கான வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைந்துள்ளது எனலாம். சொல்லப்பட்ட இந்த காலத்தில் தொடர் வைப்பு நிதியில்(Recurring Deposit -RD) வட்டி விகிதம் 10-14 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் 9 சதவீதமாக இருந்த பி.பி.எப். வட்டி விகிதம் 2016-17ம் நிதியாண்டில் 8 சதவீதமாக முடிவடைந்துள்ளது. 2018ம் ஆண்டின் துவக்கத்தில் 20 வருட கால குறைவாக 7.60 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இருந்தது.

 

கடந்த ஆண்டின் இறுதியில், அதாவது சென்ற காலாண்டில் 7.60 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு வருடத்தின் ஜனவரி-மார்ச் காலத்திற்கு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அதே 8 சதவீத வட்டியில் தொடரும் நிதி அமைச்சகம்(Ministry of Finance) கூறியுள்ளது. சிறு சேமிப்புக்கான வட்டி(Small Savings Scheme) விகித மாற்றத்தை அரசு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடும். இன்று பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தருகிற போதிலும், ஓய்வு காலத்திற்கான(Retirement Fund) பாதுகாப்பான முதலீடாக பி.பி.எப். கருதப்படுகிறது.

 

தற்போது கொடுக்கப்படும் வட்டி விகிதம் குறைவு தான் எனினும், அனைவருக்குமான ஓய்வூதிய முதலீட்டு சாதனம் இதுவே. பொது வருங்கால வைப்பு நிதியில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ. 500/- உள்ளது. இத்திட்டத்தில் கூட்டு வட்டியின் பலன் வருட காலத்தில்(Annually Compounding) செயல்படும். பிரிவு 80C (Income Tax act) ன் கீழ் வருமான வரிச்சலுகையும் பி.பி.எப். முதலீட்டுக்கு உண்டு. பி.பி.எப். கணக்கை ஒருவர் வங்கியிலோ அல்லது அருகில் இருக்கும் அஞ்சலகத்திலோ தொடங்கலாம். புதிய பி.பி.எப். கணக்கை ஆன்லைன்(PPF Online) மூலமும் ஆரம்பித்து முதலீடு செய்யலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்

பட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்

Budget 2019 Highlights (FY 2019-20)

 

பிப்ரவரி ஒன்றாம் தேதி நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். வருமான வரி சார்ந்த தள்ளுபடிகளும், பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 /- வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட்டை ஒரு ரூபாய்(One Rupee Budget) வரவு-செலவில் கணக்கிடும் போது, வரவு தொகையில் 21 பைசா ஜி.எஸ்.டி.(GST) வரி மூலமும், 21 பைசா நிறுவனங்களின் வரி மூலமும், வருமான வரியில்(Income Tax) 17 பைசாவும் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டது. செலவு தொகையில் 23 பைசா வரி வருவாயில் மாநிலங்களுடன் பங்கு பிரித்தது(Shares of Taxes), அரசு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ஒரு ரூபாயில் 18 பைசாவும், மானியங்களுக்கு 9 பைசாவும் செலவிடப்பட்டுள்ளது.

 

மத்திய நிதியுதவி திட்டத்தில் 9 பைசாவும், மத்திய துறையின்(Central Sector) திட்டங்களுக்கு 12 பைசாவும், ஓய்வூதியத்திற்கு(Pension) 5 பைசாவும், ராணுவத்திற்கு 8 பைசாவும் செலவில் உள்ளது. 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு வருடத்தில் ரூ. 6.34 லட்சம் கோடியில் முடிவடையலாம் என மறுமதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

 

இடைக்கால பட்ஜெட் 2019ல் அறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் சில துளிகள் இங்கே,

 

  • அமைப்புசாரா துறையில்(Unorganized) பணிபுரியும் தொழிலாளிகளுக்கு பிரதம மந்திரியின் யோகி மாந்தன்(Yogi Maandhan) திட்டத்தின் மூலம் மாதாமாதம் ரூ. 3000/- பென்ஷன் வழங்கப்படும். இந்த துறையில் மாதம் ரூ. 15,000 வரை சம்பளம் பெறும் தொழிலாளிகள் வரை பயனடைவர். இது ஒரு ஓய்வூதிய திட்டம், தொழிலாளிகளின் சார்பாக ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும், அதே குறிப்பிட்ட தொகையை அரசும் பங்களிக்கும். 60 வயதின் முடிவில் அவர்களுக்கான ஓய்வூதியம், சேமிப்பிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் அளிக்கப்படும்.

 

  • கிசான்(Kisan) திட்டத்தின் மூலம் 2 ஹெக்டருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.6000 /-(ஆண்டுக்கு) நேரடியாக ஆதரவளிக்கும் தொகை.

 

  • டிஜிட்டல் இணைப்பின் வாயிலாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் திட்டம்.

 

  • ஒரு நிதி வருடத்தில் ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் முழுமையான வரி தள்ளுபடி(Full Tax Rebate).

 

  • வருமான வரியில் நிலைக்கழிவு(Standard Deduction) ரூ. 40,000/- லிருந்து 50,000/- ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • வங்கி மற்றும் அஞ்சலக வைப்பு தொகைக்கான வட்டி வருமான(Interest income) வரம்பு ரூ.10,000 லிருந்து 40,000 /- ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

  • நேரடி வரி நடைமுறை(Direct Taxes) எளிமையாக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர் அறிக்கை தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் வரவு பெறும் வசதி(Refund).

 

  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாங்கும் கடனில் (ஒரு கோடி ரூபாய்) 2 சதவீத வட்டி சலுகை.

 

  • பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை முதன்முறையாக ரூ. 3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

 

  • சுங்கத்துறையில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்கும் முடிவு.

 

  • மீன்பிடிப்புக்கு(Fisheries) தனி துறை அமைக்கப்படும். இந்திய திரைப்படங்களுக்கு ஒற்றை சாளர முறையை நடைமுறைப்படுத்தல் மற்றும் திரைப்படங்களை திருடுவதை தடுக்க புதிய ஒளிப்பதிவு சட்டம் கொண்டுவரப்படும்.

 

நாட்டின் பொருளாதாரம் அடுத்த ஐந்து வருடங்களில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், அடுத்த பத்து வருடங்களில் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை(10 Trillion Dollar Indian Economy) கொண்ட நாடாகவும் இருக்கும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘ இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு உண்டானது ‘.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com