Tag Archives: public provident fund

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜனவரி 2021

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஜனவரி 2021

Small savings scheme interest rate for the Period – January to March 2021

நாட்டில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித மாற்றம், காலாண்டுக்கு ஒரு முறை அறிவிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் காணப்படும் திட்டங்கள், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் தான் வருகிறது. கடந்த சில வருடங்களாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுக்கான (ஜனவரி-மார்ச்) சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 2020 வரையிலான வட்டி விகிதமே இம்முறையும் தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.

அடிப்படை சேமிப்பு கணக்குக்கான(Savings account) வட்டி விகிதம், ஜனவரி-மார்ச் 2021 காலத்திற்கு 4 சதவீதம் என்ற அளவில் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் வங்கிகளில் காணப்படும் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும். ஒரு வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 5.50 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு மற்றும் மூன்று வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம், சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் 5.50 சதவீதமாக உள்ளது. ஐந்து வருட காலத்திற்கான டெபாசிட் தொகைக்கு(Term Deposit) மட்டும் இது 6.70 சதவீதமாக உள்ளது. 5 வருட தொடர் சேமிப்பு திட்டத்திற்கு(Recurring Deposit – RD) 5.80 சதவீதமாக இருக்கிறது.

Small savings scheme interest jan 2021

மூத்த குடிமக்களுக்கான(Senior Citizen savings scheme) ஐந்து வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.4 சதவீதமாகவும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள்(Sukanya Samriddhi) திட்டத்தில் வட்டி விகிதம் 7.60 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அதிக வட்டி விகிதத்தை செல்வமகள் திட்டம் மட்டுமே பெறுகிறது.

5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டத்திற்கு 6.80 சதவீத வட்டி விகிதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 6.90 சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வருவாய் பெறுவோருக்கான(5 Years Monthly Income Scheme) திட்டத்தின் வட்டி விகிதம் 6.60 சதவீதமாக உள்ளது.

பொது வருங்கால வைப்பு(PPF) நிதி திட்டத்தில் 7.10 சதவீத வட்டி விகிதம் சொல்லப்பட்டிருக்கிறது. செல்வமகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் முழுமையான வரி சேமிப்பு(Tax Exempted – EEE) திட்டங்களாகும். இந்த இரண்டும் நீண்டகால சேமிப்பு திட்டமாக அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள்

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் 

Recent Changes in Public Provident Fund(PPF) – 2019

பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, சிறு சேமிப்பு திட்டத்தின் அங்கமாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் பி.எப். கணக்கிற்கு மாற்றாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் சட்டத்தில் பி.பி.எப். க்கான சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப்.(Public Provident Fund) கணக்கு என்பது 15 வருட கால சேமிப்பு திட்டமாகும். தேவைப்பட்டால், 15 வருட காலத்திற்கு பிறகு 5 வருட கால அளவில் திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது.. ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை. பி.பி.எப். முதலீட்டிற்கு வருமான வரி சலுகையும் உண்டு.

கணக்கில் உள்ள பணத்தை திரும்ப பெறுவதென்றால், இதற்கு முன்பு 7 வருடங்களுக்கு பிறகு மட்டுமே முடியும். ஆனால் தற்போது 5 வருடங்கள் (நிதியாண்டுகள்) முடிந்தவுடன் பணத்தை திரும்ப பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு படிவம் 5 ஐ நிரப்பி, பணத்தை கோரலாம்.

முன்னர் 7 வருடங்களுக்கு பிறகு, 25 சதவீத தொகையை மட்டுமே எடுக்க கூடிய நிலை இருந்தது. தற்போது 5 நிதியாண்டுகளுக்கு பின்னர் வரவில் உள்ள 50 சதவீத தொகையை பெறலாம். பணத்தை பெறுவதற்கான காரணங்கள் கடுமையான நோய்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்க்கான சிகிச்சை தேவைக்காக, உயர்கல்வி தேவை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியராக செல்லும் பட்சத்தில் என சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப். கணக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI) முதலீடு செய்ய முடியாது என்ற சட்டத்தை சற்று மாற்றி, கணக்கை துவங்கும் போது இந்திய குடிமக்களாக இருந்து பின்னாளில் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தாலும், முதிர்வு காலம் முடியும் வரை, முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது குழந்தைகளின் பெயரிலும்(Minor Child) பி.பி.எப். கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்கும்(Joint Account) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை, கணக்கு வைத்திருப்பவருக்கு எந்தவொரு கடன் அல்லது நிதி தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது ஆணையின் கீழ் இணைக்கப்படாது.

பி.பி.எப். கணக்கில் உள்ள தொகையை கொண்டு, கடன் வசதியும் பெறலாம். முன்னர், கடனுக்கான வட்டி விகிதம் பி.பி.எப். கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது இது ஒரு சதவீதமாக (பி.பி.எப். வட்டி மற்றும் கூடுதலாக 1 %) சொல்லப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வு காலத்திற்கான(Retirment Savings) திட்டமாகும். இதனை சரியாக திட்டமிட்டு, நீண்ட காலத்தில் சேமித்து வரும் பட்சத்தில் நமக்கான ஓய்வு கால கார்பஸ் தொகை பலனளிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எப்.) – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

Public Provident Fund (PPF) – Postal Savings Scheme

முன்னொரு காலத்தில் அரசு வேலை அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியமும், கூடுதலாக வருங்கால வைப்பு நிதி என சொல்லப்படும் பி.எப்.(Provident Fund) சேமிப்பும் ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. ஆனால் 2004ம் ஆண்டிற்கு பின், அரசு மற்றும் பொதுத்துறையில் ஓய்வூதிய முறை நிறுத்தப்பட்டு புதிய பென்ஷன் திட்டம் என்ற புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

புதிய பென்ஷன் திட்டம்(NPS), பழைய ஓய்வூதிய முறையை போல பாதுகாப்பான பலனை கொடுக்கும் என அரசு சார்பில் சொல்லப்படவில்லை. அது போக, இன்று அரசு வேலையில் பி.எப். சேமிப்பும் பிடிக்கப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமே தற்போது பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி போன்ற சேமிப்பு முறை இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முறையை பயன்படுத்தி கொள்ளலாம். இன்று அஞ்சலகம் மற்றும் அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் சேமிப்பு சாதனமாக பி.பி.எப். நிதி உள்ளது.

இந்திய குடிமக்களாக உள்ள தனிநபர் ஒருவர் பி.பி.எப். கணக்கை தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலோ அல்லது வங்கி கிளையிலோ துவங்கலாம். கணக்கு துவங்கும் போது 100 ரூபாய் முதலீட்டுடன் ஆரம்பிக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் சேமிப்பது அவசியம். அதிகபட்ச முதலீடு ரூ. 1,50,000.

பி.பி.எப். கணக்கில் ஒரு முறை முதலீடு அல்லது மாதாமாதம் தவணை முறையிலும் சேமிக்கலாம். கூட்டு கணக்கை(Joint Account) பி.பி.எப். நிதியில் துவங்க இயலாது. நாமினியை எப்போது வேண்டுமானாலும் நியமித்து கொள்ளலாம். இருப்பினும், கணக்கு துவங்கும் போது நாமினியை நியமிக்கும் பட்சத்தில், பின்னாளில் எந்த சிக்கலும் வராது.

பொது வருங்கால வைப்பு நிதி ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம்(Long term Savings Plan). இதன் முதலீட்டு காலம் 15 வருடங்கள். தேவைப்பட்டால், கூடுதலாக ஐந்து வருடங்கள் நீட்டித்து கொள்ளும் வசதியும் உண்டு. பி.பி.எப். நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் உண்டு.

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

வரி சலுகை என்பது பி.பி.எப். நிதியில் மூன்று விதமான நிலையில்(EEE – Exempt) பலனை தருகிறது. முதலீடு செய்யும் போதும், கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் பெறப்படும் மொத்த தொகை என மூன்று நிலையிலும் வரி செலுத்த தேவையில்லை.

பி.பி.எப். கணக்கை துவங்கிய மூன்றாவது நிதியாண்டிலிருந்து கடன் வசதியும் உண்டு. கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்ப, நமது கடன் தொகையும் மாறுபடும். அவசர காலத்திற்கு பணம் தேவைப்படும் நிலையில், கணக்கு துவங்கிய ஏழாவது நிதியாண்டிலிருந்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் வசதி உண்டு.

நடப்பில் பி.பி.எப். நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9 சதவீதம். பொது வருங்கால வைப்பு நிதி ஒரு ஓய்வூதிய திட்டமாக(Retirment Plan) நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நன்மையை அளிக்கும். நீண்ட காலத்தில் சேமிக்கப்படும் போது, நமது ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகையை பெறலாம். இதனை கொண்டு மாதாமாதம் வருமானத்தை தரும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தில் போட்டு வைக்கலாம்.

பி.பி.எப். கணக்கை இணைய வாயிலாகவும் தொடங்கும் வசதி உண்டு. தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பி.எப்.(PF, VPF) கணக்கு இல்லாதவர்கள் பொது வருங்கால வைப்பு நிதியை பயன்படுத்தி கொள்வது சிறப்பம்சம்.

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

PPF(Public Provident Fund) Interest rate over the past 20 years

 

நமது நாட்டின் பலம் மிகுந்த தன்மையே பண்பாடும், அதனை சார்ந்த ஒருமைப்பாடும் தான். கூட்டு குடும்பத்தின் இலக்கணமாக திகழ்ந்த நம் நாட்டில் இன்று தனிக்குடும்பம் என்ற நிலை இருந்தாலும், விழா காலங்களிலும், ஒவ்வொரு குடும்பத்தில் நிகழும் சுக-துக்க நிகழ்ச்சிகளில் நமது ஒற்றுமை எப்போதும் வெளிப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பண்பாடும், ஒருமையும் மட்டுமே நமது வலிமை என்று கூறினால் அது மட்டுமே இல்லை. நமது மற்றொரு பலம் ஒவ்வொருவரின் சேமிப்பிலும் உள்ளது. மற்ற நாடுகளை போல் இல்லாமல், நம்மிடம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது. நமது பாரம்பரியத்தில் ரிஸ்க்(Risk reward) எடுக்கும் திறன் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அதனால் தான் நம்மில் பெரும்பாலோர் பாதுகாப்பாக இருக்கும் முதலீட்டு சாதனத்தில் நம்முடைய பணத்தை அதிகளவில் கொண்டிருக்கிறோம்.

 

பாதுகாப்பான சேமிப்பு(Safe Investments) என்று சொல்லும் போது, வங்கி மற்றும் அஞ்சலகத்தின் மீது நம்முடைய பற்று அதிகமாகவே .காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன வேலையில் இன்று ஓய்வூதியம் என்ற விஷயம் இல்லையென்றாலும், வருங்கால வைப்பு நிதி(PPF) என்ற சாதனம் இன்றும் கவர்ச்சிகரமாகவே உள்ளது. பணவீக்க விகிதம் குறைவாக இருக்கும் இக்காலத்தில், வருங்கால வைப்பு முதலீட்டில் சேமிக்கப்படும் தொகை அதிகமாக தான் இருந்துள்ளது. கடந்த சில வருடங்களாக பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்(Interest rate) 7-8 சதவீதம் என்ற நிலையிலே உள்ளது. இது கடந்த 20 வருட காலத்தில்(PPF Interest rate History) எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

 

கடந்த 2001ம் வருடத்திற்கு முன்பு, பி.பி.எப். வட்டி விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது. அப்போதைய பணவீக்கமும்(Inflation) சற்று அதிகம் தான். 1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, பொது வருங்கால வைப்பு நிதியில் வழங்கப்பட்ட வட்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இன்று பரஸ்பர நிதித்திட்டங்கள்(Mutual Funds) சராசரியாக கொடுக்கும் வட்டி இதுவாகும். பின்னர் 2001 மற்றும் 2002ம் வருடங்களில் இதன் வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரைக்குள்ளாக அமைந்துள்ளது.

PPF Interest Rates History

2003ம் ஆண்டுக்கு பிறகு பி.பி.எப். சாதனத்திற்கான வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைந்துள்ளது எனலாம். சொல்லப்பட்ட இந்த காலத்தில் தொடர் வைப்பு நிதியில்(Recurring Deposit -RD) வட்டி விகிதம் 10-14 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் 9 சதவீதமாக இருந்த பி.பி.எப். வட்டி விகிதம் 2016-17ம் நிதியாண்டில் 8 சதவீதமாக முடிவடைந்துள்ளது. 2018ம் ஆண்டின் துவக்கத்தில் 20 வருட கால குறைவாக 7.60 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இருந்தது.

 

கடந்த ஆண்டின் இறுதியில், அதாவது சென்ற காலாண்டில் 7.60 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு வருடத்தின் ஜனவரி-மார்ச் காலத்திற்கு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அதே 8 சதவீத வட்டியில் தொடரும் நிதி அமைச்சகம்(Ministry of Finance) கூறியுள்ளது. சிறு சேமிப்புக்கான வட்டி(Small Savings Scheme) விகித மாற்றத்தை அரசு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடும். இன்று பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தருகிற போதிலும், ஓய்வு காலத்திற்கான(Retirement Fund) பாதுகாப்பான முதலீடாக பி.பி.எப். கருதப்படுகிறது.

 

தற்போது கொடுக்கப்படும் வட்டி விகிதம் குறைவு தான் எனினும், அனைவருக்குமான ஓய்வூதிய முதலீட்டு சாதனம் இதுவே. பொது வருங்கால வைப்பு நிதியில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ. 500/- உள்ளது. இத்திட்டத்தில் கூட்டு வட்டியின் பலன் வருட காலத்தில்(Annually Compounding) செயல்படும். பிரிவு 80C (Income Tax act) ன் கீழ் வருமான வரிச்சலுகையும் பி.பி.எப். முதலீட்டுக்கு உண்டு. பி.பி.எப். கணக்கை ஒருவர் வங்கியிலோ அல்லது அருகில் இருக்கும் அஞ்சலகத்திலோ தொடங்கலாம். புதிய பி.பி.எப். கணக்கை ஆன்லைன்(PPF Online) மூலமும் ஆரம்பித்து முதலீடு செய்யலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

Is it better to invest in PPF ?

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

PPF (Public Provident Fund) ஐ பற்றி…

  • PPF என்பது ஒரு பொது வருங்கால வைப்பு நிதி; ஓய்வு காலத்திற்கான ஒரு சிறந்த முதலீட்டு திட்டம்.
  • VPF, EPF ல் பயனடைய முடியாதவர்கள் PPF Account ஐ, மிக எளிதாக பெறலாம்.
  • இது ஒரு வரி சேமிப்புடன் வரும் ஓய்வு காலத்திற்கான நிதி திட்டம்; ஆகையால் வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், இதன் மூலம் வரி சலுகை பெறலாம்.
  • PPF ல் வருமான வரி சலுகை பெற, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1,50,000 /- வரை முதலீடு செய்யலாம். (IT Rebate Under Section 80C of Income Tax Act, FY 2014-15 On wards)
  • PPF ல் தற்போதைய வைப்பு வட்டி விகிதம்:   ஆண்டுக்கு  8.0 % ( Jan-Mar 2019)
  • PPF கணக்கில் நாம் கடனும் பெற்று கொள்ளலாம். (நாம் கணக்கு தொடங்கிய 3 ம் நிதியாண்டிலிருந்து, 5 ம் நிதியாண்டு வரை கடன் பெறலாம்)
  • கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, 6 ம் நிதியாண்டிலிருந்து அனுமதிக்கப்படும்.
  • இத்திட்டத்தில் NRI, On behalf of a HUF, Association of Persons ஆகியோர் முதலீடு செய்ய முடியாது.
முதலீடு…
  • குறைந்த முதலீடு:   ரூ. 500 /-
  • அதிகபட்ச முதலீடு:  ரூ. 1,50,000 /- (வருமான வரிச்சட்டம் 2014-15 ன் படி)
எப்போது முதலீடு செய்யலாம் ?
  • பொதுவாக, நாம் PPF கணக்கை, எந்த தபால் அலுவலகத்திலும் (அ) வங்கியிலும் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். (நடப்பில், SBI, ICICI வங்கிகள்  வழங்குகிறது)
  • PPF கணக்கில் வைப்பு  வட்டி விகிதமானது, ஒரு மாதத்தின் 5 ம் தேதியிலிருந்து அம்மாதத்தின் 30/31 ம் தேதிக்குள் இருக்கும் குறைந்த பட்ச இருப்பு பணத்திற்கு கணக்கிடப்படுகிறது.  ஆகையால், மாதத்தின் முதல் தேதியிலிருந்து 5 ம் தேதிக்கு முன் நாம் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் நல்ல பலனை பெறலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019
நினைவில் கொள்க:
  • PPF என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு சாதனம், குறுகிய காலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்படாத பட்சத்தில், கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வேண்டாம்.
  • PPF கணக்கை நாம் இணையதளத்திலும் (PPF Account Online) தொடங்கலாம், பணம் செலுத்தலாம் மற்றும் பெறலாம்.
  • உங்களுடைய முதலீடு பங்குசந்தையில், பரஸ்பர நிதியில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் PPF Account ல் முதலீடு செய்யலாம்; இது ஒரு பாதுகாப்பு திட்டமும் கூட…
  • வருமான வரிசலுகை பெற நினைப்பவர்கள், காப்பீடு திட்டத்தில் அதிக பணத்தை போட்டு வைப்பதற்கு பதில், PPF கணக்கில் வரிசலுகை பெறலாம்.
நன்றி – வர்த்தக மதுரை