Tag Archives: gold funds

முதலீட்டில் தங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு இருக்கலாம் ?  – உலக தங்க கவுன்சில் பரிந்துரை 

முதலீட்டில் தங்கத்தின் பங்களிப்பு எவ்வளவு இருக்கலாம் ?  – உலக தங்க கவுன்சில் பரிந்துரை 

Share of Gold in your Investment Portfolio – World Gold Council 2026

 

நேற்று(17-07-2026) மாலை வேளையில், மதுரை மாநகரத்தின் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டெர்லிங் வி கிராண்ட் ஹோட்டலில் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட் இந்தியா(AAFM) மற்றும் உலக தங்க கவுன்சில்(World Gold Council) சார்பாக, ‘ஒரு சொத்து வகையாக தங்கத்தில் முதலீடு’ என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.

இவற்றில் சொல்லப்பட்டவை இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1990 களில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பெரும்பாலும், நகைகளாக தான் இருந்துள்ளது. இதற்கான காரணம், இந்தியப் பெண்களுக்கான சேமிப்பு என்பது பெரும்பாலும் தங்க நகைகளை சிறுகச்சிறுக வாங்குவது தான். ஆனால் இந்த நிலை, 2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மாறி உள்ளது. அதாவது தங்கத்தினை மக்கள் நகைகளாக மட்டும் வாங்காமல், தங்கப் பத்திர திட்டம்(Sovereign Gold Bond – SGB), தங்கத்தின் மீதான மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். திட்டங்கள் வரவேற்பை பெற்று, அவை ஒரு முதலீடாக வாங்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக தங்கத்தின் மீதான மதிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் சார்ந்திருக்காமல் உலகெங்கிலும் பரவி உள்ளது. அதாவது, நாம் வாங்கிய தங்கத்தினை நமது நாட்டில் மட்டுமில்லாமல், உலகத்தின் பெரும்பாலான நாடுகளில் விற்று பணமாக்கக்கூடிய நிலை, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு சாதகமாக உள்ளது. பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு இருப்பது போல, தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு பெரும்பாலும் எதிர் தரப்பு இடர்(Zero counterparty risk – Physical Gold ) என்ற ஒன்றில்லை எனலாம். 

தங்கத்தின் மீதான முதலீட்டில் பொதுவாக அதிக ஏற்ற-இறக்கம் இருப்பதில்லை(பங்குச்சந்தையை போல). அதே வேளையில் கடந்த சில வருடங்களாக உலக பொருளாதார காரணிகள் விரைவாக மாற்றம் பெற்று வருவதன் காரணமாக, பங்குச்சந்தையை போல தங்கத்திலும் ஏற்ற-இறக்கத்தை காணலாம். தங்கத்தில் நீர்மை நிறை(Liquidity) கிடைக்கப்பெறுவது அதன் சாதகமான அம்சம். அதாவது, நாம் வாங்கிய தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் அடமானம் வைத்துக் கொள்ளலாம், விற்று விடலாம். அதே வேளையில், ஊரடங்கு காலத்தில் அவ்வளவு எளிதாக இது அமையவில்லை.

தங்கத்தின் மீதான உண்மையான முதலீடு என்பது பொதுவாக தங்கக் கட்டிகள், நாணயங்கள், மியூச்சுவல் பண்டுகள்(Gold Funds) மற்றும் இ.டி.எப்.(Gold ETF) என்ற வடிவங்களில் கிடைக்கப்பெறுகிறது. நகைகளாக வாங்குவது என்பது ஒரு தங்கத்தின் மீதான முதலீடல்ல. அதனை சொத்தாகவும் கருத முடியாது. அதன் காரணமாக தான் அதன் செலவினமே(நகைகளை உருவாக்க), மதிப்பையும் குறைத்து விடுகிறது. நடப்பில், சில தனியார் நிறுவனங்களால்  ‘டிஜிட்டல் கோல்டு (Digital Gold)’ என்ற பெயரில் வெளியிடப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும், அவை ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் உலக தங்க கவுன்சில் கூறுகிறது. 

உலக தங்க கவுன்சில் பரிந்துரையின் படி,  தங்கக் கட்டிகள், நாணயங்கள், தங்கக் கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். தங்க நகைகளாக வாங்க விரும்புவோர், தங்களுக்கு அருகே உள்ள நம்பிக்கைக்குரிய மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு பெற்ற நகை கடைகளில் வாங்கி கொள்ளலாம்.

ஒருவரது முதலீட்டில் தங்கம், பங்குகள், வங்கி வைப்புத்தொகை, நிலம், பரஸ்பர நிதிகள்(Mutual Funds) என பரவலாக்கம் செய்வது அவசியம். இதன் மூலம், நாம் முதலீட்டில் உள்ள ரிஸ்க் தன்மையை குறைத்து, நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெற முடியும். உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது பொதுவாக 7.5 % முதல் 15% வரை இருக்கலாம் என உலக தங்க கவுன்சில் பரிந்துரைக்கிறது. முதலீட்டுத் தொகுப்பை சீரமைத்தலில்(Portfolio Rebalancing) தங்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 16.85% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முந்தைய இலக்கான சுமார் 15%-ஐ ஏற்கனவே கடந்துவிட்டது. நேரடித் தங்கம் சேகரிப்பு மற்றும் உலகளவில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை ஆகியவற்றால் இந்த நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2026ம் ஆண்டின் காலாண்டு முடிவில், இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 34,600 டன்கள் (3.7 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்) என சொல்லப்படுகிறது. இவற்றில் ரிசர்வ் வங்கியிடம் இருப்பது மட்டும் 880 டன்கள். மியூச்சுவல் பண்டு மற்றும் இ.டி.எப். முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும் போது 99.5% + சுத்தமான தங்கம் மற்றும் 24 காரட் மதிப்பு  கிடைப்பதுடன், அதன் செலவினமும் குறைவு. கோல்டு இ.டி.எப். முறையில் முதலீடு செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய்க்கு மேலாக இருந்தால், நாம் அதனை தங்கமாகவும்(கட்டிகள் அல்லது நாணயங்கள்) பெற்றுக் கொள்ளலாம்.   

நன்றி:  ஷீலா குல்கர்னி

உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) இந்தியப் பிரிவு சந்தை மேம்பாடு (முதலீடு) மற்றும் நிறுவன முதலீட்டாளர் உறவுகள் பிரிவின் தலைவர்.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?

ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?

23 Percent hike in a year – Gold Price in INR

நமது நாட்டில் கூட்டு குடும்பத்தின் மீது நம்பிக்கை உள்ளதோ இல்லையோ, ஆனால் தங்கத்தின் மீதான நம்பிக்கை பெரும்பாலானவர்களிடம் அதிகமாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு சாதனத்தையும் விட, தங்கம் பாதுகாப்பானதாகவும் மற்றும் அதிக வருவாய் தரக்கூடிய முதலீடாகவும் நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. மேலும், அது குடும்பத்தின் கவரமாகவும் காணப்படுகிறது எனலாம்.

10 கிராம் அளவை கொண்ட 24 காரட் சுத்த தங்கம் (99.9 சதவீதம்), சென்னை விலை அடிப்படையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 31,970 (10 கிராம்) என்ற விலையில் வர்த்தகமானது. தற்போது 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 39,500 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 23 சதவீத வருவாய் வளர்ச்சி எனலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இதன் விலை அதிகபட்சமாக 40,450 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. நடப்பில் தங்கத்தின் விலை(Gold Price) ஒரு கிராம் 3,416 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அவுன்ஸ் அடிப்படையில் 1,06,268 ரூபாய் என்ற விலையில் காணப்படுகிறது.

பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் காணும் போது, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். இது போல, உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, போர் வரும் சூழல் மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும் போது தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலையில் மாற்றம் அமையும்.

உலகளவில் வர்த்தகமாகும் தங்கம் ஒரு நல்ல முதலீட்டு சாதனம் என்றாலும், நாம் நினைப்பது போல, அது பாதுகாப்பான சாதனம் என நாம் சொல்ல முடியாது. காரணம், தங்கம் என்பது பங்குச்சந்தையை ஒட்டிய ரிஸ்க் தன்மையை எப்போதும் கொண்டிருக்கும். பங்குச்சந்தை போல அதிக ஏற்ற-இறக்கங்கள் இல்லையெனினும், மிதமான ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது தான் தங்கத்தின் முதலீடு. இதன் காரணமாக தான் அதன் விலை கடந்த 50 வருடங்களில் அதிகரித்துள்ளது எனலாம்.

இன்று அதிகளவிலான தங்கத்தினை கையிருப்பாக வைத்திருக்கும் நாடு, அமெரிக்கா. இதற்கான காரணமும் உண்டு, உலகளவில் தேவைப்படும் தங்கத்தின் வர்த்தகத்தை நிர்வகிக்கவும், டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும் அதனை சரிப்படுத்தவே தங்கம் உதவிகரமாக உள்ளது. எப்போதெல்லாம் டாலர் மதிப்பு உயர்கிறதோ, அப்போது தங்கத்தின் தேவை குறையும். ஏனெனில், பெரும்பாலான நாடுகள் அந்நிய செலவாணியை (டாலர்) அதிகளவில் கையிருப்பாக கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை இறங்கும்.

இதற்கு மாற்றாக, எப்போதெல்லாம் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைகிறதோ, தங்கத்தின் மீதான தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும். சீன-அமெரிக்க வர்த்தக போர் என்றால், டாலரின் மீதான நம்பிக்கை குறைந்து, தங்கத்தின் மீது ஈடுபாடு இருக்கும். ஆக, பெரும்பாலான நாடுகள் தங்கத்தை ஒரு இழப்பு காப்பு வணிகமாக பயன்படுத்தி வருகிறது.

நம் நாட்டில் தங்கத்தின் விலை ஏறுவதற்கான காரணம் பொதுவாக நாம் டாலர் மதிப்பின் அடிப்படையில் இறக்குமதி செய்வதால் தான். எப்படியிருந்தாலும், நமக்கு கிடைக்கப்பெறும் தங்கம் சற்று விலை அதிகமானதே. டாலர் மதிப்பு அதிகரித்தாலும், இல்லையெனில் டாலர் மதிப்பு வீழ்ச்சி பெற்றாலும் நாம் தங்கத்தை அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.

தங்கத்தின் விலை அதிகரித்து வருவது சரி தான். நாம் அதனை நல்ல ஒரு முதலீடாக மாற்றுவது எப்படி ?

  • தங்க ஆபரணத்தை வாங்கி கொண்டு, அதனை முதலீடு என்று நாம் சொல்ல கூடாது. தங்கத்தின் விலையை காட்டிலும், நாம் கூடுதலாக சில செலவுகளை(செய்கூலி, சேதாரம், வரி மற்றும் இதர செலவுகள்) ஏற்க வேண்டியிருக்கும். நாம் அதனை விற்கும் போது, நமக்கு சந்தையில் வர்த்தகமாகும் விலை முழுவதுமாக கிடைக்கும் என சொல்ல முடியாது. நகை அடமான கடைகள் வருங்காலத்தில் அரசு மூலம் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிலை உள்ளது. இதனால், நாம் அடமானம் வைத்தாலும் நமக்கு சரியான விலையில் கடன் கிடைக்குமா என்பது சந்தேகமே.
  • தங்கத்தை ஆபரணமாக கொண்டிருப்பதில் பாதுகாப்பு இல்லை. தங்கத்தை முதலீடாக கொண்டிருக்க தங்க பத்திர திட்டங்கள்(Gold Bond Scheme), கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு(Gold Funds) போன்றவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதற்கான செலவினங்களும் மிக குறைவு. பின்னாளில் வர்த்தகத்தின் விலையில் பணமாக அல்லது நகையாக பெறலாம்.
  • பொருளாதார மந்தநிலை காலங்களில் தங்கத்தில் சிறிய அளவில் முதலீடு செய்யலாம். ஆபரணங்களை வாங்கி வைத்து கொண்டு முதலீடு என சொல்லாதீர்கள். உங்களுக்கு நகைகளாக வேண்டுமானால், விருப்பத்திற்கு ஏற்றாற் போல் வாங்கி கொள்ளுங்கள். அதே வேளையில் அதனை ஒரு செலவாக மதிப்பிடுங்கள். (உங்கள் சொந்த வீட்டை போல !)
  • முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) செய்யும் போது, தங்கத்திலும் முதலீடு செய்யுங்கள். உங்கள் முதலீட்டில் வங்கி டெபாசிட்டுகள், பங்குகள், பரஸ்பர நிதிகள், நிலம் மற்றும் தங்கத்திற்கும் பங்களிப்பு இருக்கட்டும். ஒரே முதலீட்டு சாதனத்தில் முழு பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம்.
  • தங்கத்தை ஒரு இழப்பு காப்பாகவும்(Hedge), பணவீக்கத்தை சரிக்கட்டவும் பயன்படுத்துங்கள்.

கடந்த மாதத்தில் நாட்டின் தங்க இறக்குமதி அளவு 5 மாத உச்சத்தில் உள்ளது. இருப்பினும், கடந்த வருடத்தை இதே காலத்துடன் ஒப்பிடும் போது, சொல்லப்பட்ட இறக்குமதி அளவு குறைவே. மத்திய அரசு கடந்த சில வருடங்களாக தங்கத்தின் இறக்குமதி அளவை குறைத்து வருகிறது. வர்த்தக சுமையை குறைப்பதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

Which is the best Investment – Physical Gold or Gold Funds

 

நமது வர்த்தக மதுரை இணையதளத்தில் கடந்த சில கட்டுரைகளுக்கு முன், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் மற்றும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருந்தோம். கடந்த பத்து வருட கால அளவில் மதிப்பீடும் போது, தங்கத்தின் மீதான வருமானம் பெரும்பாலும் வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதிக்கான(Fixed Deposits) வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தங்கத்தை நகைகளாக(Jewels) வாங்குவதை காட்டிலும் அதனை ஒரு முதலீட்டு சாதனமாக மாற்றுவதே நமக்கான புத்திசாலித்தனமாகும். நாம் ஏற்கனவே சொன்னது போல, தங்க ஆபரணங்கள் என்பது ஒரு தேய்மான பொருளாகவும், வருமானம் எதுவும் தராமல் போகும் அணிகலனாக மட்டுமே (Liability) உள்ளது. நம்முடைய பெரும்பாலான சேமிப்பு தொகை தங்க நகைகள் வாங்குவதற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. மாறாக நமக்கான நிதி இலக்குகளுக்கு(Financial Goals) அது துணைபுரிவதில்லை.

 

எந்த ஒரு முதலீட்டு சாதனத்திற்கும் வருமான வாய்ப்பு மற்றும் நீண்ட காலத்தில் வளர்ச்சியும் உண்டு. அந்த வகையில் காணும் போது, நாம் நமது நகைகளை கொண்டு எவ்வளவு சம்பாதித்தோம் என பார்த்தால், தேய்மான செலவும்(Depreciation), தங்கத்தை பரிமாற்றம் செய்த செலவுகள்(Exchange) தான் மிஞ்சும். நமக்கு தேவையான சிறிதளவு நகைகளை மட்டும் வைத்து கொண்டு, தங்கத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை கண்டறிவது நல்லது.

 

தங்க நகைகளுக்கு மாற்றாக தங்க பண்டுகள் (அ) தங்க இ.டி.எப்.(Gold ETF) என்று சொல்லக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் நமது முதலீடு இருக்கும் போது, நாம் போதுமான வருமானத்தை பெறலாம். தங்க நகைகளுக்கும், கோல்டு இ.டி.எப். திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை பின்வரும் படத்தில் பாருங்கள்.

Gold vs Gold Fund

பொதுவாக நாம் தங்க நகைகளாக வைத்திருக்கும் போது, அவற்றில் ரிஸ்க் அதிகம். அது ஒரு பாதுகாப்பான முதலீடு என்று நாம் கூறினாலும், நகைகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமா என்பதை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் 91.6 சதவீத சுத்தமான தங்கத்தை மட்டுமே நாம் வாங்கும் வாய்ப்புண்டு. அதே வேளையில் பரஸ்பர நிதி திட்டங்கள் அளிக்கும் கோல்டு பண்டுகளில்(Gold Mutual Funds) 99.5 சதவீத மதிப்பிலான சுத்த தங்கத்தின் அடிப்படையில் நமது முதலீடு அமையும்.

 

வெறும் தங்க நகைகளாக மட்டுமே நாம் இப்போது வைத்திருக்கும் போது, பிற்காலத்தில் அந்த நகைகள் தேய்மானம் அடைவதும், மீண்டும் நாம் அதற்கான மாற்று பொருளாக புதிய நகைகளை வாங்குவதும் நமக்கு வீண்செலவு தான். அதற்கு பதிலாக இது போன்ற தங்க பண்டுகளில் நாம் முதலீட்டை மேற்கொள்ளும் போது, தேவைப்படும் காலத்தில் நமக்கான புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம், நமக்கும் இதன் மூலம் வருவாயும் கிடைத்திருக்கும்.

 

நாம் வைத்திருக்கும் தங்க நகைகளை அவ்வளவு எளிதாக பணமாக மாற்ற முடியாது. நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ மட்டுமே நம்மால் முடியும். மேலும் நகைகளின் மதிப்பில் குறைவான பணமே நமக்கு கிடைக்கும். ஆனால் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டங்களில் நாம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு தேவையான தொகையை பெற்றுக்கொள்ளலாம். பாதுகாப்பான முதலீடும் மட்டுமில்லாமல் இதனை வாங்குவதற்கான செலவும் மிக குறைவு.

 

தங்க இ.டி.எப். திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடாக(Minimum Investment) ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை கூட நாம் வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி அடிப்படையில் தங்க நகைகளுக்கு உள்ள காலங்களே இ.டி.எப். பரஸ்பர நிதி திட்டத்திற்கும் பொருந்தும். நாம் தங்க நகைகளை விற்பனை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் லாபத்திற்கு செல்வ வரி(Wealth Tax) உண்டு. ஆனால் தங்க பண்டுகளுக்கு இது போன்ற வரிகள் இல்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com