வட்டி விகித குறைப்பு, மழுங்கும் வங்கி முதலீடுகள் – இனி எங்கு முதலீடு செய்ய போகிறீர்கள் ?
Interest rate falling and Diminishing Bank Deposits – Where are you going to invest ?
இன்று (07-02-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee -MPC) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து பாரத ரிசர்வ் வங்கி(RBI). ரெப்போ விகிதம்(REPO Rate) என்பது நாட்டில் உள்ள வங்கிகளுக்கு பாரத ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமாகும். பொதுவாக ரெப்போ விகிதம் குறையும் போது, வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் இனி 6.25 சதவீதத்தில் இருக்கும். இதனால் ரிவெர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse REPO) 6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. வங்கிகளின் வட்டி விகிதம் 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரொக்க இருப்பு விகிதத்தில்(CRR) மாற்றமில்லாமல் அதே 4 சதவீதத்தில் தொடரும் என கூறப்பட்டுள்ளது. நடப்பு காலாண்டில் பணவீக்கம்(Inflation) 2.8 சதவீதமாக இருக்கும் எனவும், 2019-20ம் நிதியாண்டில் முதல் பாதியில் இது 3.4 சதவீதமாகவும், அடுத்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 3.9 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 7.4 சதவீதத்தில் இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கணித்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற விவசாய கடன் தொகையை ரூ. 1 லட்சத்திலிருந்து 1.6 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த நிதி கொள்கை குழு கூட்டம் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும்.
ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது, வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தில்(Interest rate) சலுகை பெறுவர். அப்படியிருக்கும் போது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகித குறைப்பு வீட்டுக்கடன் பெறுவோருக்கும், தொழிலுக்கான கடன் பெறும் வாடிக்கையாளருக்கும் நலன் பயக்கும். அதே வேளையில், கடந்த சில வருடங்களாக வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருவது, வங்கியில் சேமிக்கும் மற்றும் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான வட்டி வருமானத்தை தருவதில்லை.
பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, அது கடன் சந்தைக்கு(Debt Market) சாதகமாக அமையும். வங்கிகளில் வட்டி குறையும் காலத்தில், கடன் சந்தையில் வட்டி விகிதம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கடன் சந்தையை நோக்கி செல்வதுண்டு. அதே நேரத்தில், வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் காலத்தில், கடன் சந்தையில் மதிப்பு குறைவாக அமையும். அப்போது முதலீட்டாளர்கள் வங்கிகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் முதலீட்டு சாதனத்தையோ தேடுவதுண்டு.
தற்போது குறைக்கப்பட்ட வங்கிகளின் வட்டி விகிதம் கடன் பெறுவோருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும், தொடர் வைப்பு(Recurring) மற்றும் வைப்பு நிதிகளில்(Fixed Deposits) முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டி வருமானமும் கிடைக்க கூடியதாக இருக்கும். இது போன்ற காலங்களில் கடன் சந்தையில் முதலீடு செய்வதும், கடன் சந்தை சார்ந்த பரஸ்பர நிதித்திட்டங்களிலும்(Debt Mutual Funds) முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும். இன்று பரஸ்பர நிதிகள் வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி வருமானத்தையே கொடுத்து வருகிறது. நடப்பு காலத்தில் அரசாங்கத்தின் பத்து வருட பத்திர வருவாய்(10 Year Bond Yield) 7.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே பரஸ்பர நிதித்திட்டங்களில் பத்திர வருவாயாக ஆண்டுக்கு 8.5 % லிருந்து 10 சதவீதம் வரை கிடைக்க பெறுகிறது. கடன் சார்ந்த மற்ற பரஸ்பர நிதி திட்டங்களிலும் சராசரி வருமானமாக 9 சதவீதம் வரை உள்ளது.
வங்கி வைப்பு நிதி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் இக்காலத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் ஒருவர் முதலீடு செய்து நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். குறுகிய கால திட்டங்களில்(Ultra Short Duration Funds) பிராங்க்ளின் பண்டு(Franklin India) ஒரு வருட காலத்தில் 9 சதவீதமும், 2 வருட காலத்தில் 8.5 சதவீதமும், 5 வருட காலத்தில் 9.3 சதவீத வருமானத்தை தந்துள்ளது. இதே போன்று ரிலையன்ஸ் அல்ட்ரா ஷார்ட் கால பண்டு(Reliance Ultra Short Duration) 7.5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதம் வரை வருமானத்தை தந்து கொண்டிருக்கிறது. ஆதித்யா பிர்லா(ABSL), ஐ.சி.ஐ.சி.ஐ.(ICICI) மற்றும் எஸ்.பி.ஐ. பண்டுகளும்(SBI Mutual Funds) வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி வருமானத்தை கொடுத்துள்ளது.
மிகவும் குறுகிய கால பண்டுகளான லிக்விட் பண்டுகளும்(Liquid Funds) 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை வருமானத்தை தருகிறது. லிக்விட் பண்டுகள் பொதுவாக கருவூல மசோதா மற்றும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் முதிர்வடையும் காலம் 91 நாட்கள். தற்போதைய காலத்தில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை