Category Archives: Financial Survey

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான்காம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra Day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?

 

விடை:   இல்லை.

 

விளக்கம்:  பொதுவாக பங்குச்சந்தை மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் ரிஸ்க் நிறைந்தவை. சந்தையில் வர்த்தகத்தின் போது ஏற்ற-இறக்கம்(Volatility) எப்போதும் காணப்படும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஒருவர் நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை நிச்சயம் பெறலாம்.

 

பங்குச்சந்தையில் நாம் பங்குகளை தினமும் வாங்கி விற்கலாம்(Intra day), குறுகிய காலத்தில்(Short term) வர்த்தகம் செய்யலாம் மற்றும் நீண்ட கால முதலீடாகவும் கொள்ளலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவே ஆகும். சந்தையில் தினசரி வர்த்தகத்தில் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தாலும், எப்போதும் இது சாத்தியமில்லை. உதாரணத்திற்கு நாம் தினமும் பங்குச்சந்தையில் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்பது நமது ரிஸ்க் திறனை பொறுத்தது. ஐயாயிரம் ரூபாய் லாபம் என்பது போல, அதற்கு நேரெதிரான நஷ்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் தினசரி வர்த்தகத்தின் மூலம் நாம் விரைவாக செல்வம் சேர்ப்பதற்கு வாய்ப்பு குறைவே. குறுகிய காலத்தில் பங்குச்சந்தையின் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று யாரவது உங்களிடம் சொன்னால், எச்சரிக்கை தேவை – இது ஏமாற்று பேர்வழிகளின் போன்சி திட்டங்களாக(Ponzi Schemes) இருக்கலாம்.

 

  • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை ?

 

விடை: இல்லை (தவறு).

 

விளக்கம்: வங்கியில் கிடைக்கும் வட்டி வருமானம் வரி செலுத்துதலுக்கு

உட்பட்டது. சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு(Fixed Deposit) வழங்கப்படும் வட்டி, தனி நபர் ஒருவரின் வருமான வரம்பிற்கு உட்பட்டு வரி விதிக்கப்படும். வருமான வரிச்சட்டம் பிரிவு 80TTA ன் கீழ் ஒருவரின் சேமிப்பு கணக்கில் உள்ள வட்டி தொகை வருடத்திற்கு ரூ.10,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேலாக கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி உண்டு.

 

வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வங்கிகள் பொதுவாக டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்த தொகையை திரும்ப பெற சிறப்பு படிவத்தை(Form 15G & 15H) பூர்த்தி செய்யலாம். நடப்பு வருட பட்ஜெட் தாக்கலின் படி, உங்களின் வைப்பு நிதியில் உள்ள வட்டி தொகை(Interest Income) ரூ. 40,000 மற்றும் அதற்கு குறைவாக இருக்கும் நிலையில், வங்கிகள் உங்களிடம் பிடித்தம் செய்யாது. அதே வேளையில் நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், வரி தாக்கல் செய்யும் போது உங்களது வட்டி வருமானம் மற்றும் டி.டி.எஸ். பிடித்தம் பதிவு செய்யப்படும்.

 

  • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?

 

நாம் கற்கும் எந்தவொரு கல்வியும் நமக்கும், நமது சமுதாயத்திற்கும் பயன்படுமாறு இருத்தல் வேண்டும். அது பண்பாடு அல்லது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி. நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கோ அல்லது தொழிலை தொடங்குவதற்கோ நம்மிடம் தேவையான அடிப்படை திறன்(Basic Skills) இருத்தல் வேண்டும். இதனை நாம் கற்ற கல்வி அல்லது வேலைப்பயிற்சி மூலமாகவோ நாம் பெற்றிருக்கலாம்.

 

நமக்கான வேலை அல்லது தொழிலை செய்வதற்கு முன், நாம் பல வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி கற்றலில் அனுபவம் பெறுகிறோம். பின்னர் ஒரு நிறுவனத்தில் ஆரம்பகட்ட நிலையில் வேலை செய்கிறோம். ஐந்து முதல் பத்து வருட தொழில் அனுபவத்திற்கு பிறகே, நாம் அந்த தொழிலை 50 சதவீதம் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வருகிறது.

 

பெரும்பாலோருக்கு ஒரே நிறுவனத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாம் சம்பாதிப்பதற்காகவே நம் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்யும் போது, பொருளாதாரம் அல்லது நிதி சார்ந்த அறிவை(Financial Education) கற்பதற்கு நாம் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் ?

 

நமது குடும்பத்திற்கான மாத வரவு-செலவு, குழந்தைகளுக்கான எதிர்கால நிதி திட்டமிடல், நமக்கான ஓய்வு கால திட்டமிடல், அவசர காலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கிறோமா என்பதனை நாம் சிறிது நேரத்தை ஒதுக்கி தான் திட்டமிட வேண்டும்.

.

உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட், பில் கேட்ஸ் போன்றோர் புத்தக வாசிப்புக்கு மட்டும் தினமும் ஆறு மணிநேரம் செலவிடுகின்றனர். நமக்கு நேரமில்லாமலா போகும் !

 

அட, நம்ம பேஸ்புக் நிறுவனர் மார்க்(Mark Zuckerberg) இரண்டு வாரத்துக்குள் ஒரு புத்தகத்தை படித்து முடித்து விடுகிறாராமே 🙂

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

 

விளக்கம்: அவசர கால நிதி (Emergency Fund) என்றால் என்ன மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் ஏற்கனவே கீழ்காணும் கட்டுரையில் பதிவிட்டுள்ளோம்.

 

அவசர கால நிதிக்கான திட்டமிடல்

 

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ?

 

  • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

விளக்கம்: அவசரத்திற்கு தவணை திட்டம்(Equated Monthly Installment -EMI) உதவலாம். வருமுன் காப்பது நல்லதா, வந்த பின் வருந்துவதா ? மூளையை யோசிக்க விடுங்கள். கீழே உள்ள சிறு பதிவை படியுங்கள். பின்னர் நீங்களே சாமர்த்தியமாக முடிவெடுப்பீர்கள்.

 

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

நிறைவு பெறுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4

Personal Finance – Survey / Polling

 

மூன்றாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?

 

விடை:       9 வருடங்கள்

 

விளக்கம்:  பணத்தை சேர்த்து வைப்பது என்னவோ பலருக்கு கஷ்டமான காரியமாக இருக்கலாம். ஆனால் நம்மில் பலருக்கு நாம் வைத்திருக்கும் பணம் இரண்டு மடங்காக மாறினால், மிகவும் சந்தோசப்படுவோம். நிதி கல்வியில் கூட்டு வட்டியின் பலன்(Compound Interest) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே நேரத்தில், கூட்டு வட்டியின் தன்மை இல்லாமல் நமது பணம் குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாவதற்கு வாய்ப்பு எங்கும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

போன்சி திட்டங்களில்(Ponzi Schemes) நமது பணத்தை செலவு செய்து ஏமாற்றம் அடையாமல், பணம் எவ்வாறு இரு மடங்காகிறது என்பதை நாம் கற்று கொண்டாலே, நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் தேட செல்வோம். (Rule 72)விதி எண் – 72 என்ற எளிமையான கணக்கு நமது பணம் எத்தனை வருடங்களில் இரண்டு மடங்காக மாறும் என சொல்லிவிடும்.

Rule No. 72  = 72 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்

 

உதாரணத்திற்கு உங்களிடம் உள்ள ரூ. 1 லட்சம் எத்தனை வருடங்களில் இரு மடங்காகும் என்பதை அறிய, நமக்கு தேவையான தகவல் நமது பணத்தின் மதிப்பு மற்றும் கிடைக்கக்கூடிய வட்டி விகிதம். நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை 8 சதவீத வட்டியில் முதலீடு செய்தால், 9 வருடங்களுக்கு பிறகு அது இரண்டு லட்ச ரூபாயாக (72/8 =9 Years) மாறும். இது ஒரு மனக்கணக்கு போல செயல்படும். இதே போன்று நமது பணம் மூன்று மடங்காக வேண்டுமானால், அதற்கான சூத்திரம்:

 

115 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்

 

  • நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?

 

விடை:  4.16 ரூபாய்

 

விளக்கம்: 1947ம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு முன், நம் நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அப்போதைய காலத்தில் நம் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ரூபாய் – பவுண்ட்(Rupee – Pound) மதிப்பில் தான் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 1927ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை நமது வர்த்தகம் ரூபாய் – பவுண்ட் மாற்றத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அப்போது ஒரு பவுண்ட் மதிப்பு 13 ரூபாய் (13.37) என்ற அளவில் இருந்தது.

 

அப்படியிருக்கும் சமயத்தில், ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 4 டாலர் என்ற அளவில் இருந்து வந்துள்ளது. அதாவது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – மூன்று ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. எனவே நாம் சுதந்திரம் பெற்ற தருணத்தில்(இந்திய அரசியலமைப்பு துவக்கத்தின் போது), ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.16 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. நாம் நினைப்பது போல ஒரு டாலர் – ஒரு ரூபாய் என்ற மதிப்பில் இல்லை. 1913ம் ஆண்டு வாக்கில் ஒரு டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயில் 9 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?

 

விடை: ரிஸ்க் இல்லை

 

விளக்கம்: லிக்விட் பண்ட் என்பது பரஸ்பர நிதிகள் வழங்கும் கடன் சார்ந்த திட்டங்களாகும்(Debt Mutual Funds). இதில் பெறப்படும் முதலீடு அரசாங்க பத்திரங்கள், கருவூல மசோதா(Treasury Bills), வணிக ஆவணங்கள் மற்றும் வைப்பு சான்றிதழ்(Certificate of Deposit) போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக 91 நாட்களுக்குள் முதிர்வடையும் சாதனம்(Maturity) ஆகும். இவற்றில் ரிஸ்க் என்பது மிக குறைவு மற்றும் வங்கிகளில் உள்ள ரிஸ்க் தன்மையே லிக்விட் பண்டிலும் இருக்கும். எனவே இந்த பண்ட் வகைகளை ரிஸ்க் இல்லா முதலீடு(Risk Free) என்றே சொல்லலாம்.

 

லிக்விட் பண்டுகள் பொதுவாக வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட அதிக வட்டி கொடுக்கும் குறுகிய கால முதலீட்டு சாதனமாக பயன்படும். வங்கியில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறையும் போதும், லிக்விட் பண்டுகளில் வட்டி விகிதம் சற்று அதிகமாக தான் காணப்படும்.

  • உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

விளக்கம்: எந்தவொரு முதலீட்டையும் நாம் மேற்கொள்ளும் முன், அவற்றில் முதலீடு செய்வதற்கான காரணத்தை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது, எனக்கு இவ்வளவு மடங்குகள் பணம் வேண்டும் என நாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.

 

நாம் கற்க போகும் கல்விக்கு, ஒரு அடிப்படை நோக்கம் இருப்பது போல முதலீட்டிற்கும் நோக்கம் இருந்தாக வேண்டும். இதனை தான் நாம் நிதி இலக்குகள்(Financial Goals) என சொல்கிறோம். உதாரணத்திற்கு, 5 வருட கல்வி செலவு, குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவு, நான்கு சக்கர வாகனம் வாங்கும் திட்டம், ஓய்வு கால தொகை(Retirement Corpus), புதிய வீடு வாங்குதல் ஆகியவை நிதி இலக்குகள் என சொல்லலாம்.

 

நிதி இலக்குகளுக்கு முதலீடு செய்ய நம்மிடம் தேவையான பணம், காலம் மற்றும் தோராயமான வட்டியை அளிக்கும் முதலீட்டு சாதனம் அமைய பெற வேண்டும்.

 

குமார் என்பவருக்கு அடுத்த 15 வருடங்களில் தனது மகளின் மேற்படிப்புக்காக 10 லட்சம் ரூபாய் (இன்றைய மதிப்பில்) தேவை உள்ளது. 15 வருடங்களில் அவரது நிதி இலக்கினை அடைய தேவைப்படும் முதலீட்டு வாய்ப்பு – பங்குகள் / பரஸ்பர நிதிகள் / வங்கி வைப்பு நிதி / நிலம் / தங்கம். பொருத்தமான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நம் கடமை.

 

  • DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

விடை:  ரூ. 1 லட்சம்  

 

விளக்கம்: பொதுவாக நம்மிடம் உள்ள காலங்காலமாக இருந்த நம்பிக்கை வங்கியில் பணம் போட்டால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது. தற்போது அந்த நம்பிக்கையும் நம்மிடம் இல்லை எனலாம். வங்கிகளின் வாராக்கடன் சிக்கலுக்கு பின், வங்கிகளின் மேல் மக்களின் நம்பிக்கையும் குறைந்து விட்டது எனலாம்.

 

பாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் துணை நிறுவனம் தான் DICGC(Deposit Insurance and Credit Guarantee Corporation) எனப்படும் வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கூட்டுஸ்தாபனம். இந்த நிறுவனம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளில் செய்யப்பட்ட வைப்பு தொகை, சேமிப்பு மற்றும் தொடர் கணக்கு தொகை, தொடர் வைப்பு தொகை(Recurring) ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யப்படும். சொல்லப்பட்ட கணக்கில் உள்ள தொகை அல்லது முதலீட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு எடுக்கப்படும். ஏதேனும் ஒரு காரணத்தால் வங்கியில் உள்ள நமது பணத்தை இழக்க நேரிட்டால், நமக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனிநபர் ஒருவர் ஒரு வங்கியின் கீழ் பல்வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அவருக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாய் மட்டுமே. வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு ஒவ்வொரு வங்கிகளின் கீழும் ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கான ப்ரீமியத்தை குறிப்பிட்ட வங்கிகளே செலுத்த வேண்டும். வங்கிகள் சொல்லப்பட்ட ப்ரீமியத்தை செலுத்த தவறினால், வங்கியின் பதிவு மற்றும் காப்பீட்டை ரத்து செய்யும் அதிகாரம் DICGC க்கு உண்டு. எனவே வங்கிகளில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு(Rs.1 Lakh Insurance) தொகை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.

 

இந்த வார கேள்விகள்:

 

  • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?
  • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு(Interest Income) வரி செலுத்த தேவையில்லை ?
  • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?
  • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
  • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

https://www.surveymonkey.com/r/8QLXFGZ

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் என்ற திட்டத்தை தவிர பல வழிகளில் நாம் வரி சேமிப்பினை பெறலாம். வருமான வரிச்சட்டம் பிரிவுகள் 80C, 80D, 80E, 80G, 80U மற்றும் மேலும் பல வகைகளில் வருமான வரியை சேமிக்கலாம். வரி சேமிப்பை அறிய,

 

வருமான வரி சேமிப்பு வழிகள்

 

வருமான வரி சேமிப்பிற்கு காப்பீடு திட்டத்தை மட்டுமே பயன்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.

  • நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?

 

விடை: டாலர் மதிப்பு (Dollar)

 

விளக்கம்: பொதுவாக ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு, உற்பத்தி மற்றும் தேவைக்கு உள்ள இடைவெளியே(Demand-Supply) அதன் விலை மதிப்பை நிர்ணயிக்கும். உற்பத்தி பெருகி தேவை குறைந்திருப்பின், பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவாகவே இருக்கும். மாறாக தேவைகள் அதிகமாகவும், அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் விலைத்தன்மை அதிகமாக இருக்கும்.

 

நம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதி மூலமாக(Gold Imports) தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆகையால் உற்பத்தி என்பது நம் நாட்டை சார்ந்ததல்ல. விழாக்காலங்களில் நகைக்கடைகளில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் என்பது உள்ளூர் சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை மதிப்பு அதிகரிப்பதையே காட்டுகிறது. மாறாக தங்கம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும், அதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தே தங்கத்தின் விலையும் பெறப்படும். ஆக தங்கத்தின் விலை தினமும் மாற்றம் பெறுவது பெரும்பாலும் டாலர் மதிப்பின் மாற்றமே.

 

  • பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும் வெவ்வேறானவை. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் பரஸ்பர நிதி திட்டங்களில்(Mutual Fund Schemes) உள்ளன. ஆனால் பரஸ்பர நிதிகளில் உள்ள அனைத்து முதலீட்டு வகைகளும் பங்குச்சந்தையில் நாம் காண முடிவதில்லை. இரண்டுமே செபி(SEBI) என்ற ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், அதற்கான வழிமுறைகள் வேறுபாடுகள் கொண்டவை.

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை திரட்ட பொதுவெளியில் வருகின்றன. நிறுவனத்தின் வருவாயும், நிர்வாக திறனும் ஒரு முதலீட்டாளராக கவனிக்க வேண்டியது அவசியம். நாம் வாங்கிய பங்குகளின் நிறுவனம் சரியில்லை என்றால், நமது முதலீட்டிற்கு ரிஸ்க் அதிகம் தான். ஆதலால் தான் பங்குச்சந்தை ஒரு தொழில் சார்ந்த விஷயம் என்கிறோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதிகள் என்பது டிரஸ்ட்(Sponsor or Trust) என்று சொல்லக்கூடிய அறக்கட்டளை அமைப்பு முறையில் இயங்கி வருவது. பரஸ்பர நிதிகளுக்கு பொதுவாக பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்று எந்த முதலீடும் தேவையில்லை. பரஸ்பர நிதிகள் வங்கிகள் போன்ற செயல்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. பரஸ்பர நிதிகளில் நீங்கள் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, ஆர்.டி. டெபாசிட்(Recurring Deposit), கடன் பத்திரங்கள், தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீடு, அரசாங்க பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த  முதலீடுகள் என பல வகை திட்டங்களை காணலாம்.

 

இங்கே சேமிப்பு கணக்கு என்பது லிக்விட் பண்ட்(Savings -Liquid Fund) எனவும், வைப்பு நிதி என்பது Lumpsum முதலீடு எனவும், ஆர்.டி. முறை SIP(Systematic Investment Plan) முதலீடு எனவும் பெயர் மாற்றம் பெறுகிறது, அவ்வளவே. வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானவை  என நாம் நினைத்தால், பரஸ்பர நிதி திட்டங்களும் பாதுகாப்பானவை தான், திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

  • நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?

விளக்கம்: நம் நாட்டில் சேமிப்பு என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், முதலீடு என்ற சாதனத்தில் சிலர் மட்டுமே பங்குபெறுவது வருந்தத்தக்க விஷயம். உண்மையில் நாம் சொல்லும் வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளோ, பணக்காரர்களோ அதிகமில்லை. மாறாக அங்கே தொழில் சார்ந்த விஷயங்களும், முதலீடு பற்றிய விழிப்புணர்வும் தான் தாக்கத்தை பெறுகிறது.

 

பொதுவாக நாம் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை என்றாலும், மிகவும் ரிஸ்க் எடுக்கும் தன்மை நம்மிடம் உள்ளது எனலாம். இன்றும் போன்சி திட்டங்கள்(Ponzi Schemes) என்னும் சதுரங்க வேட்டைகள், தங்க முதலீடு(Gold Scam), பிட் காயின்(Bitcoin) முதலீடு, இன்னும் நமக்கு தெரியாத என்னென்னவோ விஷயங்களை செய்து வருகிறோம். பின்பு சில காலங்களுக்கு அவை மறைந்து விடும். நம்மிடம் உள்ள குறுகிய கால அணுகுமுறை தான் நம்மை தவறான வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முனைகிறது. பெரும்பாலும் நாம் ஏமாற்றப்படுவது நம்முடைய பணத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தான். புரிந்து கொள்ளுங்கள், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் உங்கள் பணம் இரட்டிப்பாக பத்து வருடங்களாகும். பங்குச்சந்தை மற்றும் தொழில்களில் நீங்கள் முதலீடு செய்தாலும் உங்கள் பணம் ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு பின்னரே இரண்டு மடங்காகும். பங்குச்சந்தையில் நீண்டகால சராசரி வருமானம் 12-15 சதவீதம் மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

 

அப்படியிருக்க, போன்சி திட்டங்கள் என்றும் சொல்லப்படும் ஏமாற்று முறைகளில் ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாவது எவ்வாறு சாத்தியம் என்பதை சிந்தியுங்கள். உண்மையில் அப்படி ஒரு முதலீடு இருந்திருந்தால், ஏன் நம் நாட்டின் அம்பானியும், அதானியும், டாடா மற்றும் டி.வி.எஸ். நிறுவனமும் காலங்காலமாக தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இல்லாத பணமா, முதலீடு செய்வதற்கு. அவர்கள் நினைத்திருந்தால் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் முதலீடு செய்து பல்லாயிரம் கோடிகளை பல மடங்காக மாற்றியிருக்கலாமே. மீண்டும் சிந்தியுங்கள்.

 

நாம் கற்ற கல்வி நமக்கு பல வருடங்களுக்கு பிறகே அதன் பயனை தருகிறது. நாம் நமக்கான கல்விக்கு செலவழித்த பணத்தை திரும்ப பெற, நம்மால் உடனே முடிவதில்லை. நமது மேற்படிப்பு கல்வி மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரை உள்ளன. பின்பு நாம் அந்த துறையில் புதிய மனிதராக வேலை செய்கிறோம். ஐந்து வருட அனுபவத்திற்கு பிறகே நம்மால் அந்த துறையை பற்றிய ஒரு புரிதல் வருகிறது. அப்படியிருக்க முதலீடு என்ற விஷயத்திற்குள் நாம் நுழையும் போது, நாம் அதற்கான கல்வியை கற்கிறோமா, முதலீட்டை கற்று கொள்வதற்கு எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம், அதற்கான செலவின விகிதம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்று.

 

பொறியியல் படிப்பு முதல் மருத்துவ படிப்பு வரையிலான கல்விச்செலவை நாம் திரும்ப பெற, பல வருட காலங்களாகும்.

 

  • பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

விடை: தொழில்

 

விளக்கம்: பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்லிக்கொண்டாலும், அது ஒரு தொழில் சார்ந்த விஷயமே. ஏன், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு திரு. ராபர்ட் கியோசகி(Robert Kiyosaki) அவர்களின், ‘ பணக்கார தந்தை, ஏழை தந்தை ‘ புத்தகமே சிறந்த உதாரணம்.

 

பணத்தை பற்றிய நமது கல்வி தான் பெரும்பாலும் நமது நிதி வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது. ஐந்தாம் வகுப்பை தாண்டாத ஒருவர் மாபெரும் தொழிலதிபராக வருவதும், மெத்தபடித்தவர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதும் இதன் பின்னணியில் தான். பணம் மட்டுமே நம் வாழ்க்கையில்லை என நாம் சொல்லிக்கொண்டாலும், அதன் பின்பு தான் நாம் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறோம். மாறாக, பணத்தை நிர்வகிக்க தெரிந்தவர்கள் உண்மையில் தங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை மகிழ்வாகவும் வைத்து கொள்கிறது.

 

ஒரு மரக்கன்றை தண்ணீர் ஊற்றி, அதனை பாதுகாத்து மரமாக்க பல வருடங்கள் ஆகும். இதனை போன்று தான் ஒரு தொழிலும், பங்குச்சந்தையும். உண்மையில் பங்குச்சந்தையிலும், எந்தவொரு தொழிலிலும் குறுகிய காலத்தில் நாம் வேகமாக வளர்ந்ததாக வரலாறு சொல்லவில்லை. அது நீண்டகால பயணம் மட்டுமே. ஒரு துறையை பற்றி நாம் எந்த அடிப்படை விஷயங்களையும் கற்காமல், அதனை பற்றிய கருத்துக்கு நாம் எப்படி செவிசாய்க்க முடியும்.

 

உங்கள் ஐந்து வயது குழந்தையின் இயல்பான குணம், போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கல்வி அறிவை அதன் இருபது வயதில் எவ்வாறு இருக்கும் என உங்களால் இப்போதே உறுதியாக கணித்து சொல்ல முடியுமா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?
  2. நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?
  3. லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?
  4. உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
  5. DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 3

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

Personal Finance – Survey / Polling

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

 

முதல் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • சேமிப்பு, முதலீடு  – இரண்டும் ஒன்றா ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  சேமிப்பு என்பது வெறுமனே உண்டியலில் பணம் சேர்ப்பது போன்று. அது வளர்ச்சியை பெறுவதில்லை. உதாரணத்திற்கு நமது சேமிப்பு வங்கி கணக்கு போல, பணவீக்கத்தை விட குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும். முதலீடு என்பது வளர்ச்சியையும், தொடர்  வருமானத்தையும் கொடுக்கக்கூடியது. உதாரணமாக நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், தொழிலில் முதலீடு.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 

விளக்கம்: ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனிநபருக்கான சலுகைகள், தொழிலுக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை பட்ஜெட்டில் விவாதிக்கப்படும். நமது வரவு-செலவை பாதிக்கும் காரணிகள் பட்ஜெட்டில் இடம்பெறும், அவை நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையலாம்.

 

  • உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?

 

விளக்கம்: அரசின் பட்ஜெட்டை போலவே ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டும் அவசியமாகும். வரவு-செலவு அறிக்கையை முறையாக நாம் பராமரிப்பதால் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்க பட்ஜெட் திட்டமிடல் உதவும். நமது தளத்தில் பட்ஜெட் திட்டமிடல் எவ்வாறு அமைப்பது என்பதை எளிமையாக விளக்கியுள்ளோம் –

 

பட்ஜெட் திட்டமிடலை உருவாக்குவது எப்படி ?

 

  • முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?

 

விடை: பணத்தை பெருக்க (Capital Appreciation)

 

விளக்கம்: முதலீடு என்பது பொதுவாக வளர்ச்சியையும், அதனை சார்ந்து தொடர் வருமானத்தையும் தருவதாக இருக்க வேண்டும். நிலம், பங்குகள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றை முதலீடாக சொல்லலாம்.

 

  • காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: காப்பீடு என்பது ஒரு முதலீட்டு சாதனமாக கருத முடியாது. காப்பீட்டின் நோக்கமே எதிர்பாராத நிதி இழப்பினை சரி செய்வதற்கான பாதுகாப்பு அம்சம் தான். இதனை ஒரு முதலீடாக எடுத்து கொள்ள கூடாது. முழுமையான காப்பீடு திட்டத்திற்கு டேர்ம் பாலிசிகளை வாங்கி கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனங்களில் விற்கப்படும் காப்பீட்டுடன் முதலீடு என்று கூறப்படும் சாதனங்கள் குறிப்பிடத்தக்க வருவாய் தராது.

 

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?
  2. நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?
  3. பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?
  4. நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?
  5. பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

குறிப்பு:

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 2

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 1

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 1

Personal Finance – Survey / Polling

 

வர்த்தக மதுரை சார்பாக வாசகர்கள் சிலர் நிதி கல்வியில் தாங்கள் கற்ற, தெரிந்த, அறியாத விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் படி கேட்டு கொண்டிருந்தனர். ஒரு புறம் மட்டுமே தகவல் வெளிச்செல்ல கூடாது, மறுபுறம்  இருந்தும் நமக்கு தகவல்கள் கிடைப்பது அனுபவம் தானே.

 

எனவே, நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்(Financial Blog in Tamil).

 

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

  1. சேமிப்பு, முதலீடு  – இரண்டும் ஒன்றா ?
  2. அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
  3. உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?
  4. முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?
  5. காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?

குறிப்பு:

நீங்கள் வாக்கு பதிவு தகவல்களை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

Personal Finance – Survey 1

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com