Category Archives: Taxes

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

Income Tax Returns – Filing Deadline – July 31, 2023

கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு ஆண்டு 2023-24 காலத்தில் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். பொதுவாக ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கப்படும் வரி தாக்கல், இம்முறை தாமதமாக துவங்கியது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. 

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு இம்முறை பெரும்பாலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சிரமத்தை சமாளிக்க வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இது ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே இருந்தது.

வருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யாத நிலையில், அபராத கட்டணம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 60 வயதுக்குட்பட்ட தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் அவரது மொத்த வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். அவருக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

நடப்பு ஜூலை 26ம் தேதி வரை, நாட்டில் சுமார் 4.75 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதே வேளையில் வருமான வரி தளத்தில்(IT Portal) தங்களது பான் எண் கணக்கை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 11.44 கோடி (தனி நபர்). சொல்லப்பட்ட 4.75 கோடி வருமான வரி தாக்கலில் இதுவரை 4.24 கோடி பேர் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை(E-Verification) முடித்துள்ளனர்.

பொதுவாக வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும், மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்தால் மட்டுமே அது முழுமையான வரி தாக்கலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தனிநபர் வருமான வரி தாக்கலை செய்துள்ளவர்களில் பெரும்பாலும் ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தியுள்ளவர்களே அதிகம். 

2022-23 மதிப்பீட்டு ஆண்டில்(Assessment year) ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தி வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சமாக இருந்த நிலையில் நடப்பு 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டில் இது 72.95 லட்சமாக(ஜூன் மாத முடிவில்) இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை சுமார் 95.50 சதவீதம் அதிகமான வரி தாக்கல் நடைபெற்றுள்ளது. 

மாநிலங்கள் வாரியாக காணும் போது, மகாராஷ்டிராவில் சுமார் 18.52 லட்சம் வரி தாக்கலும், குஜராத்தில் 14.02 லட்சமும் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் 11.92 லட்சமும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஜூன் மாத முடிவின் படி, 8.19 லட்சம் வரி தாக்கல் பதிவாகியுள்ளன. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? ஜூலை 31, 2022 காலக்கெடு 

Income Tax Filing Returns – Deadline for AY 2022-23 (FY 2021-22)

2021-22ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஈட்டிய வருமானத்திற்கு 2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 60 வயதுக்கு உட்பட்டவர்கள் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒட்டுமொத்த வருமானமாக ரூ.2.50 லட்சத்திற்கு மிகும் போது, வரி தாக்கல் செய்வது அவசியம். 

2022-23ம் மதிப்பீட்டு ஆண்டில், இதுவரை(16-07-2022) 1.45 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி தாக்கல் தளத்தில் தங்களது பான் எண்ணை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10.30 கோடியாக இருப்பது கவனிக்கத்தக்கது.

நடப்பில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு அரசின் இணையதளம்(Income Tax Portal) மட்டுமின்றி, சில மூன்றாம் தரப்பு தளங்களும் இந்த சேவையை வழங்குகின்றன. எனினும் வரி தாக்கல் செய்த பின், மின்னணு சரிபார்ப்பை(E-Verification) நிறைவு செய்வது அவசியமாகும். 

E-Verification ஐ நிறைவு செய்யும் நிலையில் மட்டுமே அது வரி தாக்கல் செய்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும். மேலே சொல்லப்பட்ட 1.45 கோடி பேர் வரி தாக்கல் செய்திருந்தாலும், இதுவரை 1.21 கோடி நபர்கள் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்துள்ளனர்.

2022-23ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (2021-22ம் நிதியாண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 31, 2022 என சொல்லப்பட்டுள்ளது. காலங்கடந்த வரி தாக்கலுக்கு அபராத கட்டணம் செலுத்த நேரிடும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு மதிப்பீட்டு ஆண்டுகளில்(AY 2020-21, AY 2021-22) வரி தாக்கலுக்கான காலக்கெடு அந்த வருடத்தின் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021

Income Tax Returns Filing for Individuals extended to 10, January 2021

2019-20ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு (AY 2020-21) வருடத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமத்தால் வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு சில மாதங்களுக்கு முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதன் படி தனிநபர் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான காலக்கெடு இன்றுடன் (31-12-2020) முடிவடையும் நிலையில், மீண்டும் ஒரு முறை இதனை நீட்டித்துள்ளது நிதி அமைச்சகம்.

தனிநபர் வருமான வரி தாக்கலில் ஆண்டு வருவாய் (ஒட்டுமொத்த வருவாய்) ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்தை கடந்தால், ஒருவருக்கு வரிப்பிடித்தம் இல்லையென்றாலும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.

நேற்று (30-12-2020) மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மதிப்பீட்டு ஆண்டு 2020-21க்கு வருமான வரி தாக்கல் செய்பவர்களில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குதாரர்களுக்கு(Accounts audited) முன்னர் இருந்த 31, ஜனவரி 2021 என்ற காலக்கெடு தற்போது 15, பிப்ரவரி 2021 என சொல்லப்பட்டுள்ளது.

இது போல சர்வேதச மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களுக்கு முன்னர் இருந்த 31,ஜனவரி 2021 என்ற கடைசி தேதி, இப்போது 2021ம் ஆண்டின் பிப்ரவரி 15ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வரிதாரர்களுக்கு (தனிநபர் உட்பட) ஏற்கனவே சொல்லப்பட்ட டிசம்பர் 31, 2020 என்ற காலக்கெடு, தற்போது 2021 ஜனவரி மாதம் 10ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவாத்(Vivad Se Vishwas Scheme) திட்டத்திற்கு 31, ஜனவரி 2021 மற்றும் நேரடி வரி மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் செல்லும் அறிவிப்பிற்கு 31, மார்ச் 2021 எனவும் காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி(CGST) 2017 சட்டம், பிரிவு 44ன் கீழ் ஆண்டு வருவாயை சமர்பிப்பதற்கான தேதி 28, பிப்ரவரி 2021 ஆக சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10

வீட்டு வாடகை படி – வருமான வரி தாக்கல் – பாடம் 10

House Rent Allowance(HRA)  – Income Tax Returns – Lesson 10

 

வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் அல்லது வருமான வரி செலுத்துபவர்கள் பெரும்பாலோருக்கு குழப்பம் ஏற்படுவதே இந்த வீட்டு வாடகை படி கணக்கில் தான். ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு, அந்த நிறுவனத்திடம் வாடகை படியை மாதாமாதம் சம்பளத்தில் பெற்று வந்தாலும், வருமான வரி தாக்கலின் போது எவ்வளவு தொகைக்கு வீட்டு வாடகைப்படியில் வரி சலுகை பெற வேண்டும் என்பதில் தனிநபருக்கு ஐயம் ஏற்படுவது இயல்பு.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மாத சம்பளம் வாங்கும் தனிநபர் ஒருவர் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் பட்சத்தில், வருமான வரி தாக்கலின் போது, அதற்கான வரி சலுகையை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் வரி செலுத்தும் தொகையையும் குறைத்து(Save Tax) கொள்ளலாம். வருமான வரி சட்டப்படி, வீட்டு வாடகை படியை தனது வருமானத்தில் கழித்து கொள்ள பின்வரும் மூன்று நிபந்தனைகள் உதவுகின்றன.

 

  • வேலை பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து பெற்ற வீட்டு வாடகைப்படி(HRA)

 

  • அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 50 சதவீதம். (50 % of Basic Salary + DA)

 

  • வீட்டு வாடகையாக செலுத்திய தொகை(Actual Rent Paid) – அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 10 சதவீதம் (10% of Basic Salary + DA).

 

மேலே சொன்னவற்றில் எவை குறைந்த தொகையாக வருகின்றனவோ அவற்றை தனிநபர் ஒருவர் தனது வருமானத்திலிருந்து கழித்து கொள்ளலாம். இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காண்போம்.

 

குமார் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (அரசு நிறுவனமாக இருந்தாலும்) பணிபுரிகிறார். இவருடைய மாத அடிப்படை சம்பளம் – ரூ. 30,000/- மற்றும் மாத அகவிலைப்படி(Dearness Allowance) ரூ. 3,000/-. அவர் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் சம்பளத்தில் பெறும் வீட்டு வாடகைப்படி ரூ. 10,000/-. குமார் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் மாதம் ரூ.12,000/- கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இனி இவருக்கான வீட்டு வாடகைப்படி சலுகையை கணக்கிடுவோம்.

 

  • நிறுவனத்திடம் இருந்து பெற்ற வீட்டு வாடகைப்படி(HRA) ஆண்டுக்கு – ரூ. 1,20,000/- ( 10,000 X 12 மாதங்கள்)

 

  • அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வரும் தொகையில் 50 %  – ரூ. 1,98,000/- (33,000 X 12 மாதங்கள் – 50 சதவீதம்)

 

  • வீட்டு வாடகையாக செலுத்திய தொகை(Rent Paid) ஆண்டுக்கு – [ ரூ. 1,44,000 ] – அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% – [ ரூ. 39,600 ] =  ரூ. 1,04400 /-

 

மேலே சொல்லப்பட்ட மூன்று நிபந்தனைகளில் (ரூ. 1,20,000 / 1,98,000 / 1,04400) குறைந்தபட்ச தொகையான 1,04400/- ரூபாய்க்கு அவர் தனது வீட்டு வாடகைப்படி சலுகையாக(HRA Exemption) கோரலாம்.

 

வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீட்டு வாடகைப்படியை பெறாதவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் 80GG பிரிவின் கீழ் வீட்டு வாடகைப்படி சலுகையை பெறலாம். அதே வேளையில் வேலை பார்க்கும் இடத்திலோ அல்லது வசிக்கும் பகுதியிலோ சொந்த வீட்டை கொண்டிருந்தால் 80GG பிரிவின் மூலம் வரி சலுகையை பெற முடியாது. வருமான வரிச்சட்டம் பிரிவு 80GGன் கீழ் சலுகை பெற நிபந்தனைகள்:

 

  • மாதத்திற்கு ரூ. 5,000/-
  • சரிகட்டப்பட்ட மொத்த வருமானத்தில் 25 சதவீதம்
  • வீட்டு வாடகையாக செலுத்திய தொகை – சரிகட்டப்பட்ட மொத்த வருமானத்தில் 10 சதவீதம்

 

மேலே சொன்னவற்றில் குறைந்தபட்ச தொகைக்கு மட்டுமே ஒருவர் 80GGன் கீழ் சலுகை பெற முடியும். பொதுவாக சரிகட்டப்பட்ட மொத்த வருமானம்(Adjusted Total Income) என்பது தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருமானத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்டகால ஆதாயம் மற்றும் 80C முதல் 80U வரையிலான தொகையை கழித்தது போக மீதம் வரும் தொகையாகும்.

 

தனிநபர் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு வீட்டு கடனுக்கான வட்டி தொகையை வங்கியில் செலுத்தி வந்தாலும், வீட்டு வாடகைப்படியில் சலுகை கோரலாம். அது போல ஒருவர் தனது வீட்டு வாடகை தொகையாக ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் செலுத்தி விட்டு, அதற்கான வரி சலுகை கோரினால் வீட்டு உரிமையாளரின் பாண் எண்ணை(PAN) சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

 

வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர், வீட்டு வாடகை தொகை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்வது அவசியமாகும். இல்லையெனில் தான் செலுத்தும் வாடகையை ரொக்கமாக செலுத்தாமல் வங்கி கணக்கு, காசோலை அல்லது இணைய பரிமாற்றம்(Online Payment) மூலம் செலுத்தும் போது அவருக்கான விவரங்கள் பதிவு செய்யப்படும். இது பின்னாளில் வருமான வரி சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க உதவும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை – எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 9

வருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை – எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 9

How to save tax if you are earning up to 6 Lakh per annum – Income Tax Returns – Lesson 9

 

நடப்பு வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஒரு நிதியாண்டில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்தை கொண்டுள்ளவருக்கு முழுவதுமாக வரியில்லை என அரசு சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, மாறாக வரி தள்ளுபடி(Tax Rebate) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2019-20ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஆண்டு வருமானமாக ரூ.5 லட்சம் பெற்றிருப்பின் அவருக்கு வருமான வரி விகிதமாக 5 சதவீதம் வசூலிக்கப்படும். 5 சதவீத வரி எனும் போது, அவர் வரியாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 12,500/-. இந்த வரி தொகையை, ஒருவர் வேலை பார்க்கும் நிறுவனமே டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்து வருமான வரி துறைக்கு செலுத்தும். இந்த தொகையை நாம் வருமான வரி தாக்கல் செய்யும் போது வரி தள்ளுபடியாக திரும்ப கிடைக்க பெறும். இதனையே பட்ஜெட்டில் வரி தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது.

 

2018-19ம் நிதியாண்டில் ரூ.3.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடியாக (பிரிவு 87A) 2500 ரூபாய் இருந்தது. இது 2019-20ம் காலத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 12,500 ரூபாய் என சொல்லப்பட்டது, அவ்வளவே. இருப்பினும் மற்ற பிரிவுகளில் வருமான வரி சலுகைகள் தரப்பட்டுள்ளது. இதனை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.

 

குமார் என்பவர் தனது வேலையின் மூலம் ஒரு நிதியாண்டில்(2018-19) சம்பாதித்த மொத்த வருமானம் ரூ. 3 லட்சம் எனில், அவர் தனது வருமானத்தில் நிலைக்கழிவாக ரூ. 40,000/- ஐ கழித்து கொள்ளலாம். மீதம் உள்ள ரூ.2,60,000 தொகையில் 2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி ஏதுமில்லை. நிலைக்கழிவு மற்றும் அடிப்படை வரி வரம்பு சலுகை (ரூ. 2.5 லட்சம்) போக உள்ள தொகைக்கு 500 ரூபாய் (10,000 X 5%) வருமான வரி விதிக்கப்படும். இதனை அவர் பிரிவு 87A ன் கீழ் வரி தள்ளுபடியாக பெறலாம். எனவே வருமான வரி தாக்கலுக்கு பின், வரி ஏதும் செலுத்த தேவையில்லை (வரி தள்ளுபடி காரணத்தால்). டி.டி.எஸ். பிடித்தம் செய்த தொகையை ஒருவர் வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே திரும்ப பெற முடியும்.

 

குமாரின் ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் என வைத்து கொள்வோம். தனது வருமானத்தில் நிலைக்கழிவாக ரூ.40,000/- வரை(2018-19) கழித்து கொள்ள குமாருக்கு அனுமதி உண்டு. மீதம் உள்ள 5,60,000/- ரூபாய்க்கு அவர் வரி செலுத்த வேண்டிய தொகை ரூ. 24,500/- ஆகும்.

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு (ரூ. 40,000) = வரி வருவாய் (ரூ.5,60,000)

 

வரி வருவாய் (ரூ. 5,60,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 3,10,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

 

ரூ. 5,00,001-ரூ. 5,60,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 20% = ரூ. 12,000/-*

 

(* செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தனி)

 

குமார் வரி சலுகை திட்டங்களை பயன்படுத்துவதன் மூலமாக வரி செலுத்த வேண்டிய தொகையை குறைத்து கொள்ளலாம் – இதற்கு 80C, 80D, 80E மற்றும் 80G ஆகிய வரி பிரிவுகள் உள்ளன.

 

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

 

2019-20ம் நிதியாண்டிற்கு நிலைக்கழிவு தொகையாக ரூ. 50,000/- வரை சலுகை பெறலாம். நடப்பு நிதியாண்டில் குமாரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கான நிலைக்கழிவு கூடுதலாக 10,000 ரூபாய் கிடைக்கப்பெறும். இவருக்கான வருமான வரியை கணக்கிட,

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு (ரூ. 50,000) = வரி வருவாய் (ரூ.5,50,000)

 

வரி வருவாய் (ரூ. 5,50,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 3,00,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

 

ரூ. 5,00,001-ரூ. 5,50,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 20% = ரூ. 10,000/-*

 

(* செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தனி)

 

வரியில்லா (வரி தள்ளுபடி) திட்டம்:

 

லைப் இன்சூரன்ஸ்(Life Insurance) மற்றும் மருத்துவ காப்பீடு – ரூ. 50,000/- ஆண்டுக்கு

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு(ரூ.50,000) – காப்பீடு(ரூ.50,000) =  வரி வருவாய்(ரூ. 5,00,000/-)

 

வரி வருவாய் (ரூ. 5,00,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 2,50,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வருமான வரி தாக்கலுக்கு பின், வரி தள்ளுபடியாக 12,500/-  ரூபாயை திரும்ப பெற்று கொள்ளலாம். இது 2019-20ம் நிதியாண்டிற்கான வருமானம், அதாவது ஒருவர் 2020-21 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த சலுகையை பெறலாம்.

 

வரி சலுகையை (80C, 80D, 80E, 80G, etc) பெறும் தனிநபர் ஒருவர் அதற்கான ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்வது அவசியம். வரி சலுகைக்கான திட்டத்தில்(Tax Savings Plan) ஒருவர் முதலீடு செய்யாமல், வரி சலுகையை பெற முற்பட்டால் வருமான வரி சிக்கலில் மாட்டி கொள்ள நேரிடும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

வங்கி வைப்பு நிதிக்கு வரிகள்(Fixed Deposit) எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 8

வங்கி வைப்பு நிதிக்கு வரிகள்(Fixed Deposit) எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 8

Tax for Fixed Deposits – Income Tax Returns – Lesson 8

 

வங்கியில் முதலீடு செய்யும் வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி வருமானம் வரி விதிப்புக்கு உட்பட்டது என நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். பொதுவாக வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வட்டி வருவாய், வருமான வரி சட்டத்தின் படி இதர வருமானமாக(Other Source of Income) கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வட்டி வருவாய் கிடைக்கும் போது, வங்கி மூலம் டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். நடப்பு மதிப்பீட்டு வருடத்தின்(AY 2019-20) படி, வைப்பு நிதி வட்டி வருமானம் ஒரு நிதியாண்டில் ரூ.10,000/- ஐ தாண்டும் பட்சத்தில் டி.டி.எஸ். உண்டு. 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்திற்கு 10 சதவீதம்(பாண் எண்ணை சமர்பித்திருந்தால்) டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படும். பாண்(PAN) எண்ணை வங்கியில் இணைக்காத நிலையில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை வங்கிகள் வரி பிடித்தம் செய்யலாம்.

 

வங்கிகளில் டி.டி.எஸ்.(Tax Deducted at Source) பிடித்தம் செய்யாமல் இருக்க படிவம் 15G ஐ ஒருவர் பயன்படுத்தலாம். அதே வேளையில் ஒருவர் வருமான வரி செலுத்துபவராக இருப்பின், அவர் வருமான வரி தாக்கல் செய்யும் போது, இந்த வட்டி தொகைக்கு வரி செலுத்த நேரிடலாம். வங்கிகளில் வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வருவாய், படிவம் 26AS மூலம் கண்டறியப்படும். வருமான வரம்பிற்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை, வரி தாக்கல் செய்த பின் திரும்ப பெறலாம்.

 

ஒருவர் வெவ்வேறு வங்கிகளில் அல்லது ஒரே வங்கியில் பல பிக்ஸட் டெபாசிட் கணக்குகளை வைத்திருந்தாலும், அனைத்தும் ஒன்றாக சேர்க்கப்பட்டு வட்டி வருமானம் கணக்கிடப்படும். மூத்த குடிமக்களுக்கு பெறப்படும் வட்டி வருமானத்தில் ரூ.50,000/- வரை டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படமாட்டாது. மூத்த குடிமக்களுக்கு டி.டி.எஸ். பிடிக்காமல் இருக்க படிவம் 15H ஐ நிரப்ப வேண்டும்.

 

தனிநபர் ஒருவரின் மாத சம்பளத்துடன், வங்கியில் பெறும் வட்டி வருவாய் இதர வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அவரது மொத்த வருமானத்தில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். வைப்பு நிதிக்கு சொல்லப்பட்ட வரி விதிப்பு முறை, தொடர் வைப்பு கணக்கு(Recurring Deposit) மற்றும் சேமிப்பு கணக்கிற்கும் பொருந்தும்.

 

வரி சேமிப்பை கொண்ட ஐந்து வருட வங்கி வைப்பு நிதி திட்டமும்(Tax saving FD) உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து வருட காலத்திற்கு முதலீட்டை பெற முடியாது. வருமான வரி சட்ட பிரிவு 80சி மூலம் ஒருவர் இதற்கு வரி சலுகையை பெறலாம். ஆனால் முதலீட்டின் முடிவில் கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வரி விதிப்பு உண்டு. இது போன்ற சமயங்களில் ஒருவர் பங்கு சார்ந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதிகளை(Equity linked savings scheme -ELSS) தேர்ந்தெடுக்கலாம். பங்கு சார்ந்த வரி சேமிப்பு திட்டத்தில் மூன்று வருட லாக்-இன்(Lock-in) காலமாகும். இவற்றில் கிடைக்கும் வருமானத்திற்கும் வரி சலுகை உண்டு(EEE -Exempt) என்பதை கவனிக்கலாம்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் – வருமான வரி தாக்கல் – பாடம் 6

குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் – வருமான வரி தாக்கல் – பாடம் 6

Short term and Long term Capital Gains – Income Tax Returns – Lesson 6

வீட்டுக்கடன் மூலம் வாங்கிய அல்லது கட்டிய வீடு உங்கள் சொத்தாக கருத முடியாது, அது ஒரு கடனே(Liability). நீங்கள் உங்கள் கடனை முடிக்கும் வரையில், அது மற்றொருவரின் (வங்கியின்) சொத்து ஆகும். நீங்கள் உரிமையாளர் அல்ல… இதனை நம்மில் எத்தனை பேர் ஒத்துக்கொள்வோம் என தெரியவில்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக நம் நாட்டில் சொத்து(Assets) எனப்படுவது ஒரு நிலமாகவோ, கட்டிடமாகவோ, தங்கமாகவோ அல்லது மதிப்புமிக்க ஏதோ ஓன்றாக இருக்கலாம். சொத்துக்கள் என்பது தொட்டு உணரக்கூடிய உறுதியான சொத்துக்கள் மற்றும் நிதி சார்ந்த சொத்துக்களாக இருக்கலாம். நிலம், வீடு, கட்டிடம், அணிகலன்கள், காப்புரிமைகள், பங்கு உரிமை மற்றும் இயந்திரங்கள் போன்றவை மூலதன சொத்துக்களாக(Capital Assets) சொல்லப்படுகிறது. விவசாய நிலம் மூலதன சொத்தாக கருதப்படாது.

 

நிலம், வீடு, இயந்திரங்கள் ஆகியவை தொட்டு உணரக்கூடிய சொத்தாகவும்(Physical Assets), காப்புரிமை, பங்குகள், வங்கி முதலீடுகள், வர்த்தக முத்திரைகள் ஆகியவை நிதி சார்ந்த சொத்துக்களாகவும்(Financial Assets)  சொல்லப்படுகிறது. நிதி சார்ந்த சொத்துக்கள் காகித வடிவிலான சொத்துக்கள் எனவும் அழைக்கப்படும்.

Capital Gains Assets Holding Period

மூலதன சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானம் அல்லது லாபம், மூலதன ஆதாயம்(Capital Gains) எனப்படுகிறது. மூலதன ஆதாயம் – குறுகிய கால மற்றும் நீண்டகால ஆதாயம் என இரு வகைப்படும். மூலதன ஆதாய காலத்திற்கு(Holding Period) ஏற்ப வரி விகிதங்களும் மாறுபடும்.

 

அசையா சொத்துக்கள்(Immovable) மூலம் கிடைக்கப்பெறும் வருமானம், சொத்தினை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்திருப்பின் அது குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) எனப்படும். இதுவே 24 மாதங்களுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில், நீண்ட கால மூலதன ஆதாயமாகும். பட்டியலிடப்படாத பங்குகளுக்கு மேலே சொன்ன 24 மாத வரையறை பொருந்தும்.

 

சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள்(Public Listed Shares) மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு குறுகிய காலம் என்பது 12 மாதங்களாகும். வாங்கிய பங்குகள் அல்லது யூனிட்களை 12 மாதங்களுக்குள் விற்றால் அது குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படும். 12 மாதங்களுக்கு மேலான விற்பனை நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகும்.

 

கடன் சார்ந்த பத்திரங்கள்(Debt Instruments) அல்லது கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் மற்றும் இதர சொத்துக்களுக்கு 36 மாதங்கள் வரை குறுகிய காலமாகும். 36 மாதங்களுக்கு மேலான முதலீட்டு விற்பனை நீண்ட கால மூலதன ஆதாயம்(LTCG -Capital Gains) என சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5

பரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5

Mutual Funds Taxation – Income Tax Returns – Lesson 5

 

வங்கிகளில் பெறப்படும் வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டவை என கூறியிருந்தோம். அது போல வங்கி வைப்பு நிதிகளுக்கு டி.டி.எஸ். பிடித்தம் உள்ளது என்பதையும் நாம் அறிந்து கொண்டோம். மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என நாம் காண்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளுக்கு(Shares) டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதே வேளையில் பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளுக்கு பங்கு பரிவர்த்தனை வரி உண்டு. இருப்பினும் நாம் பரஸ்பர நிதித்திட்டங்கள் மற்றும் சந்தையில் விற்கும் பங்குகளின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை நாம் தான் வருமான வரி தாக்கலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

 

பரஸ்பர நிதித்திட்டங்களில் வரி விதிப்பு இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று கடன்(Debt) சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள், மற்றொன்று பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Oriented) மற்றும் கலப்பின திட்டங்கள் ஆகும். கலப்பின திட்டங்கள்(Hybrid or Balanced Funds) என்பது கடன் சந்தை மற்றும் பங்கு சந்தை சார்ந்த இரண்டும் கலந்த முதலீடாகும்.

 

கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, அதனை மூன்று வருடத்திற்குள் வெளியே எடுக்கும் பட்சத்தில், தனி நபர் ஒருவரின் வருமான வரி வரம்பிற்கு தகுந்தாற் போல் வரி விதிக்கப்படும். இதுவே முதலீடு செய்த மூன்று வருடத்திற்கு பிறகு, நாம் திரும்ப பெறும் பட்சத்தில் பணவீக்க சரிக்கட்டலுடன் கூடிய 20 சதவீத வரி விதிக்கப்படும்.

Mutual Funds Taxation

 

உதாரணத்திற்கு, சேகர் என்பவர் ரூ. 1 லட்ச ரூபாயை கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்கிறார். பத்து மாதங்களுக்கு பிறகு அவரது முதலீட்டை சேர்த்து ரூ. 1,06,000 ஐ திரும்ப பெறுகிறார். சேகர் வருமான வரி செலுத்துபவராக இல்லாத நிலையில், பெறப்பட்ட வருமானத்திற்கு வரி எதுவுமில்லை. 20 சதவீத வரி வரம்பிற்குள் சேகர் இருந்திருந்தால், அவர் பெற்ற 6,000 ரூபாய்க்கு (1,06,000 – 1,00,000) 1200 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். [ இதர வரி மற்றும் கட்டணங்கள் தனி ]

 

மூன்று வருடத்திற்கு பின்பு சேகரின் ரூ. 1 லட்சம் முதலீடு 1,24,000 ரூபாயாக உள்ளது. இப்போது அவர் பணத்தை திரும்ப பெறும் பட்சத்தில், பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு(Indexation) 20 சதவீத வரியை செலுத்தினால் போதும். அதாவது பணத்தை வெளியே எடுக்கும் காலத்தில் உள்ள பணவீக்கத்தை, நாம் பெற்ற வருமானத்தில் கழித்து விட்டு மீதம் இருக்கும் தொகைக்கு 20 சதவீத வரி செலுத்த வேண்டும். உதாரணமாக பணவீக்க சரிக்கட்டல் மதிப்பு(Indexation Benefit Cost) 12,000 ரூபாய் எனில், நாம் பெற்ற ரூ. 24,000 /- வருமானத்தில் 12,000 ரூபாயை கழித்து விட்டு மீதமிருக்கும் தொகைக்கு இருபது சதவீத வரி விதிக்கப்படும்.

 

பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு நமக்கு கிடைக்கும் வருமானம், வங்கி வைப்பு நிதி வட்டியை(Fixed Deposit Rates) காட்டிலும் சற்று அதிகமாக தான் இருக்கும். இது நமது முதலீட்டுக்கு சாதகமான விஷயம் எனலாம்.

 

பங்கு சார்ந்த மற்றும் கலப்பின திட்டங்களில் நாம் ஒரு வருடத்திற்கு முன், பணத்தை வெளியே எடுக்கும் பட்சத்தில் 15 சதவீத வரி விதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு மேலாக முதலீட்டை திரும்ப பெறும் போது, மூலதன ஆதாயம்(Capital Gains) ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் 10 சதவீத வரி செலுத்த வேண்டும். இது சந்தையில் உள்ள பங்குகளுக்கும் பொருந்தும். உதாரணமாக சேகர் பங்கு சார்ந்த திட்டங்களில் பத்து லட்ச ரூபாயை முதலீடு செய்து விட்டு, ஒரு வருடத்திற்கு பிறகு லாபத்துடன் 11,25,000 ரூபாயாக பெறுகிறார் என வைத்து கொள்வோம். இப்போது அவர் மொத்த பணத்தையும் வெளியே எடுக்கும் போது, பெறப்பட்ட மூலதன ஆதாயமான 1.25 லட்சத்தில், ஒரு லட்ச ரூபாய்க்கு வரி சலுகையை பெறலாம். மீதமிருக்கும் 25,000 ரூபாய்க்கு மட்டும் 10 சதவீத வரி செலுத்தினால் போதுமானது.

 

இது போல, பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்படும் நஷ்டத்திற்கும்(Carry Forward on Loss) வரி சலுகை பெறலாம். இதனை பின்வரும் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

இந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4

இந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4

Hindu Undivided Family (HUF) – Income Tax Returns – Lesson 4

 

வருமான வரி சட்டத்திலும் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில், கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகமிருந்தாலும் இன்று நாம் அவ்வாறான கூட்டு குடும்பங்களை பார்க்க முடிவதில்லை. இந்து கூட்டு குடும்பம்(HUF) போன்று மற்ற மதங்களுக்கும் வருமான வரி சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக புத்தம், ஜெயின் மற்றும் சீக்கிய குடும்பங்களும் இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்து கூட்டு குடும்பத்தினை உருவாக்குவதன் மூலம் வருமான வரியையும் சேமிக்கலாம். ஒரு தனிநபர் மட்டுமே இந்து கூட்டு குடும்பத்தை ஏற்படுத்த முடியாது. இந்து கூட்டு குடும்பத்தில் குடும்ப தலைவர், மனைவி மற்றும் பிள்ளைகள் இடம் பெறுவர். இந்த குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் அனைவருக்கும் சமமாகவே பிரித்து கொடுக்கப்படும்.

 

இங்கு குடும்ப தலைவர் பெரும்பாலும் மூத்த வயதுள்ள ஆணாக இருப்பார். இவரை கர்த்தா(Karta) என்பார்கள். 2016ம் ஆண்டுக்கு முன் பெண் ஒருவர் கர்த்தாவாக இருக்க முடியாது. ஆனால் தற்போது இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பெண் ஒருவரும் தலைவராக இருக்கலாம். குடும்பத்தில் ஒரு தலைவரை அடுத்து மற்றவர்கள் உறுப்பினர்கள் ஆவர்.

 

இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்க விரும்புபவர்கள் அதற்கான குடும்ப உறுப்பினர்களை கொண்டிருப்பதோடு, குடும்ப பெயரில் பான் எண்ணை(PAN) பெற வேண்டும். வங்கி கணக்கும் இந்து கூட்டு குடும்ப பெயரில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். வரி சட்டம் பிரிவு(Income Tax Act) 80 C ன் கீழ் இந்து கூட்டு குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்(Members) என தனித்தனியாக வரி சலுகை பெறலாம். ஆனால் ஒரே முதலீடு அல்லது சேமிப்புக்கு இருவரும் சலுகை பெற முடியாது.

 

உதாரணத்திற்கு குமார் என்பவரின் குடும்பம் இந்து கூட்டு குடும்பத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு குடும்பத்தின் பெயரில் செய்யப்பட்ட முதலீடு மற்றும் வருமானம், குடும்பத்தின் வருமானமாக எடுத்து கொள்ளப்பட்டு வரி விகிதங்கள் கணக்கிடப்படும். இப்போது குமார் என்பவரும் தனி நபராக வருமான வரி செலுத்துபவர் எனில், அவருக்கான வரி சலுகை தனியே கணக்கிடப்படும். இதன் மூலம் வரி சேமிப்பை(Save Income Tax) ஏற்படுத்தலாம்.

 

கூட்டு குடும்பத்தின் கீழ் சொத்துக்கள், காப்பீடு, வருமானங்களை பெறலாம். பூர்வீக சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து கூட்டு குடும்ப பெயரிலும், குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்குரிய வருமானத்தை தனித்தனியாகவும் வருமான வரி கணக்கில் சமர்ப்பிக்கலாம்.

 

இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பாதகமே, சொத்துக்களில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தனது சொத்தினை பிரிக்க முயற்சிக்கையில், அனைத்து உறுப்பினர்களின் அனுமதி தேவைப்படும். கூட்டு குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூர்வீக சொத்தில் சம உரிமையை பெறும். அது போல குடும்ப உறுப்பினர் ஒருவர் மணம் முடிக்கும் பட்சத்தில், அவரது துணையும் இந்து கூட்டு குடும்பத்தில் அங்கம் பெறுவர். எனவே நிர்வாக திறனை கருத்தில் கொள்வது அவசியம்.

 

கூட்டு குடும்பமாக செயல்பட்டால் நன்று. இல்லையெனில் நிதி சார்ந்த விஷயங்களில் அது பாரமாகவே அமையும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com