Tag Archives: unemployment rate

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் – 7.80 சதவீதம் – மார்ச் 2023

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் – 7.80 சதவீதம் – மார்ச் 2023

India’s unemployment rate(CMIE Data) – 7.8 Percent in March 2023

நாட்டில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான நபர்களை கொண்டு, அவர்களை நேரடியாக சந்தித்து கடந்த 30 நாட்களின் சராசரி அடிப்படையில், வேலைவாய்ப்பின்மை விகிதம் கணக்கிடப்படுகிறது. மாதந்தோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கையில் மாநிலங்கள் வாரியாகவும், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் எடுத்துரைக்கிறது. 

ஏற்கனவே வேலையிழந்தோர் தற்போதைய நிலையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனரா, வேலைக்கு செல்வதற்கான ஆர்வம் அவர்களிடம் காணப்படுகிறதா மற்றும் வேலை கிடைக்காததற்கான காரணம் என்ன போன்ற விவரங்களையும்(Consumer Pyramids Panel) இம்மதிப்பீடு கணக்கில் எடுத்து கொள்கிறது. 

நடப்பு 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) 7.8 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 8.51 சதவீதமாகவும், இதுவே கிராமப்புறங்களில் 7.47 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.45 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகபட்சமாக டிசம்பர் மாதத்தில் 8.30 சதவீதமாக இருந்துள்ளது. மிகக்குறைவான அளவாக செப்டம்பர் மாதத்தில் 6.43 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. மார்ச் மாத விகிதத்தில் மாநிலங்கள் வாரியாக காணும் போது, ராஜஸ்தான், சிக்கிம், அரியானா, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது.

வளர்ந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை காணும் போது, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 7 சதவீதத்திற்கு குறைவாக காணப்படுகிறது. 

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்(GDP) மாநிலம் வாரியாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் முறையே தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் கர்நாடகா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ன்றி, வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

www.varthagamadurai.com

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும்

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் 

India’s CPI – Retail Inflation and Unemployment Rate (CMIE Data) – August 2022

நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) 7 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவாக 8.28 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கிராமப்புறங்களை காட்டிலும் நகரத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து 9.57 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும் சிறிது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 6.75 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் பொருட்களின் விலை(CPI)  206 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 192 சதவீதமும், மசாலா பொருட்களின் பணவீக்க விகிதம் 194 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

காய்கறி மற்றும் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கான காரணியாக உள்ளது. இருப்பினும் எரிபொருட்களின் விலை சற்று தணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 11.8 சதவீதமாக இருந்த எரிபொருட்களின் பணவீக்க விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 10.78 சதவீதமாக குறைந்துள்ளது. 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது. வீட்டுமனை 10 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.60 சதவீதமும், சுகாதாரம் 6 சதவீதமும் மற்றும் கல்வி 4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. 

நாட்டின் பணவீக்க விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மேம்படுத்தப்படாத உட்கட்டமைப்பு, உணவுப்பொருட்களை சந்தைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் மற்றும் அதிக நிதி பற்றாக்குறை ஆகியவை உள்ளது.

2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.86 சதவீதமாக இருந்துள்ளது. இது நகர்ப்புறங்களில் 8.64 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.04 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக குறைந்து வந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை 2022ல் 6.83 சதவீதமாக இருந்தது. இது நகர்ப்புறங்களில் 8.22 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.17 சதவீதமாகவும் இருந்துள்ளது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்து காணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

நாட்டில் அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதம்(CMIE Data) காணப்படும் மாநிலங்களாக அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு உள்ளன. இதற்கடுத்தாற் போல ஜார்கண்ட், திரிபுரா, பீகார் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம் 7.2 சதவீதமாகவும், தெலுங்கானா 6.9 சதவீதம், கேரளா 6.1 சதவீதம், ஆந்திரா 6 சதவீதம் மற்றும் கர்நாடகா 3.5 சதவீதமாகவும் உள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்

மீண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 

Unemployment rate is rising again – CMIE Data

நடப்பாண்டில் ஏப்ரல் மாத ஊரடங்கின் போது, நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்தனர். குறிப்பாக அமைப்பு சாரா வேலைகளில் தான் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது.

எதிர்பாராமல் ஏற்பட்ட தேவையின் காரணமாக உணவுப்பொருட்கள் சார்ந்த துறையில் பெரிதான பாதிப்பு எதுவுமில்லை. மார்ச் மாதத்தில் காணப்பட்ட நாட்டின் 8.75 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதம், ஏப்ரல் மாத ஊரடங்கில் 23.52 சதவீதமாக அதிகரித்தது. இது வரலாற்றில் இல்லாத அளவாக சொல்லப்பட்டது.

2020ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புறங்களில் 24.95 சதவீதமும், கிராமப்புறங்களில் 22.89 சதவீதமும் வேலைவாய்ப்பின்மை காணப்பட்டது. பின்னர் மே மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 21.73 சதவீதமாகவும், இதுவே ஜூன் மாதத்தின் முடிவில் 10.18 சதவீதமாகவும் இருந்தது.

பின்னர் படிப்படியாக குறைந்த இந்த விகிதம் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 6-8 சதவீதம் என்ற அளவிற்குள் இருந்தது கவனிக்கத்தக்கது. பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்களில் தற்போது 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வர தொடங்கியது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு துணைபுரியும்.

அதே வேளையில், பொருளாதார மந்தநிலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்படுவர் என சுகாதார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் குறிப்பாக குறைந்த அளவிலான வருவாய் கொண்டிருப்போர் மற்றும் நீண்டகாலமாக குறைவான வருவாயை மட்டுமே கொண்டிருக்கும் நாடுகள் பாதிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

உள்நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் ஒருபுறம் உயர்ந்த நிலையிலும், வேலை இழந்தவர்களில் பெரும்பாலான நபர்கள், இன்னும் கொரோனாவுக்கு முந்தைய ஊதிய விகிதத்தை பெறவில்லை என கொள்கை ஆராய்ச்சிக்கான மையம்(CPR) கூறுகிறது.

நடப்பு மாதத்தில் டிசம்பர் 18ம் தேதி முடிவின் படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.6 சதவீதம் மற்றும் கிராமப்புறங்களில் 8.2 சதவீதமாகவும் உள்ளது. டிசம்பர் 1ம் தேதி 6.60 சதவீதமாக இருந்த விகிதம், 18ம் தேதி முடிவில் 8.34 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக, நாளொன்றுக்கு 3500 கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்பட உள்ளதாக அசோசம் வர்த்தக அமைப்பு(Assocham) தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் ஒரு பாதகத்தை ஏற்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் மே மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் – 23.50 சதவீதம்

நாட்டின் மே மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் – 23.50 சதவீதம் 

India’s Unemployment rate to 23.50 Percent in May 2020 – CMIE

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(CMIE) சார்பில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். கோவிட்-19 தாக்கத்தால் கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை சரிவர கணக்கிடப்படாதது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். மேலே சொல்லப்பட்ட கண்காணிக்கும் மையம் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளும். கடந்த மார்ச் மாத முடிவில் 8.75 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) ஏப்ரல் மாதத்தில் 23.52 சதவீதம் என்ற உச்சகட்ட விகிதத்தை அடைந்தது.

புலம் பெயர்ந்தோர் தங்களது வாழ்வாதாரத்திற்காக சொந்த மாநிலத்தை தேடி சென்ற நிலையில், சிறு மற்றும் குறு தொழில்களில் பெரும்பான்மையான வேலையாட்கள் இல்லாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. மே மாத முடிவிலும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.48 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் காணப்படும் விகிதம் 25.80 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 22.50 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில் தான் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மாநிலங்களின் வாரியாக காணும் போது, மே மாதத்தில் தமிழகம் 33 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதத்தை கொண்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 50 சதவீதத்திற்கு அருகாமையில் இருந்தது கவனிக்கத்தக்கது. நாட்டில் அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 59 சதவீதமும், புதுச்சேரியில் 58.2 சதவீதமாகவும் மற்றும் பீகாரில் 46.2 சதவீதமாகவும் உள்ளது.

குறைந்த அளவாக ஜம்மு & காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5 சதவீதமாகவும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 சதவீதம் மற்றும் ஒடிசாவில் 9.6 சதவீதமாக உள்ளது. வார அடிப்படையில்(Weekly jobless) காணும் போது, கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 20.19 சதவீதமாக உள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது 4 சதவீத குறைவாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை விகிதம் – பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் உண்மை

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை விகிதம் – பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் உண்மை 

Rising Unemployment rate – More Job loss in India – CMIE

கொரோனா வைரஸ் தாக்கத்தின் செய்தி கடந்த இரண்டு மாதங்களாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் முழு ஊரடங்கு சொல்லப்பட்டிருந்தது. கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 2,58,900 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,50,000 ஆகவும் உள்ளது.

ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஐந்து வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது நம் நாட்டிலும் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(CMIE) வெளியிட்ட அறிக்கையின் படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.52 சதவீதமாக உள்ளது. இது மார்ச் முடிவில் 8.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாராந்திர முடிவின் படி, மே 3ம் தேதியில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) 27.11 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் வேலைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஊரடங்கு நிகழ்வுக்கு பின்பு, இதுவரை 12 கோடி பேர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு நபர்களில் ஒருவர் வேலையை இழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

ஏப்ரல் மாத அறிக்கையின் படி, அதிகபட்ச வேலையிழப்பாக தமிழகத்தில் 49.8 சதவீதமும், பீகாரில் 46.6 சதவீதமும் மற்றும் ஜார்கண்டில் 47 சதவீதமும் உள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஏப்ரல் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 43 சதவீதமாக உள்ளது. எதிர்பார்க்காத வகையில் புதுச்சேரியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா, விடுதிகள் மற்றும் உணவகங்களின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சொல்லப்பட்ட தகவல்கள் அமைப்பு சார்ந்த தொழில்களை கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் போது இதனை விட அதிகமாக இருக்கலாம்.

ஊரடங்கு அடுத்த சில நாட்களுக்கு பின்பு தளர்த்தப்பட்டாலும், பெரும்பாலான தொழில்கள் தற்போதைய நிலையில் இயங்குவதற்கான சூழல் இல்லை. மேலும் பிற மாநிலத்தவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வேளையில், உற்பத்தி துறை மீண்டும் வேகமெடுக்குமா என்பது சந்தேகமே.

கொரோனா வைரஸ் தாக்கம் பொருளாதார பின்னணிக்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், உண்மையில் பொருளாதார மந்தநிலை என்பது கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை விகிதமும் பல மாதங்களாக அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில், சுமார் 40 கோடி மக்கள் இந்தியாவில் மட்டும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

நோய் தாக்கத்திற்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என சில நாடுகள் முன்னுக்கு வந்தாலும், இதன் உண்மை நிலை வரும் வாரங்களில் தெரிய வரும். ஆனால், வேலை இல்லாத சூழல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்காது. எனவே, இப்போதைய அனைவருக்குமான தேவை அத்தியாவசியங்களை பூர்த்தி செய்வதே. இதனை தான் அரசாங்கத்திடம் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் வரும் நாட்களில் அதிகரிக்குமா ?

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் வரும் நாட்களில் அதிகரிக்குமா ?

Will the Unemployment Rate in India increase in the coming days ?

 

நாம் முன்னொரு முறை, ‘ வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? ‘ என்ற தலைப்பில் வர்த்தக மதுரை இணைய பக்கத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சார்ந்த பதிவை எழுதியிருந்தோம். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 30 வருடங்களில் தற்போது தான் அதிகளவாக காணப்படுகிறது. இதற்கு முன்பு, கடந்த 1983ம் ஆண்டில் காணப்பட்ட 8.30 சதவீதம் தான் நாட்டின் அதிகபட்ச அளவாக சொல்லப்படுகிறது. குறைந்த விகிதமாக கடந்த 2011ம் ஆண்டில் 3.53 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதம் நிலவியுள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.19 சதவீதமாக உள்ளது. நகர்புறத்தில் 9.71 சதவீதம் எனவும், கிராமப்புறங்களில் 7.48 சதவீதம் எனவும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு(CMIE) சொல்கிறது. 1983ம் ஆண்டு முதல் கணக்கிடும் போது, இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் சராசரியாக 4.32 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

 

தற்போது நடைமுறையில் வேகமாக வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டின் அளவு சற்று அதிகமே. வெறும் வேலைவாய்ப்பின்மை விகிதத்தை மட்டுமே நாம் கருத்தில் எடுத்து கொள்ள முடியாது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP), நிதி மற்றும் வர்த்தக பற்றாக்குறை ஆகியவற்றையும் நாம் கவனிப்பது அவசியமாகும். 

 //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment Rate) ஒருபுறம் சொல்லப்பட்டாலும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை மற்றும் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் சரியான அளவில் தென்படவில்லை. இந்த தகவல்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அவை நாட்டின் பொருளாதாரத்திற்கு துணைபுரிகிறதா அல்லது உண்மையில் வேலைவாய்ப்பின்மை ஐயம் ஏற்பட்டுள்ளதாக என்பதனை அறியலாம். 

 

உள்நாட்டில் வட மாநிலங்களை காட்டிலும், தென் மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவாகவே காணப்படுகிறது. குறைந்தபட்ச அளவாக கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 0.7 சதவீதம் உள்ளது. இது தான் இந்தியாவின் குறைந்தபட்ச மாநில அளவாகும். ஆந்திராவில் 3.7 சதவீதமும், தமிழகத்தில் 5.8 சதவீதமும் மற்றும் கேரளாவில் 9.1 சதவீதமும் உள்ளது. தெலுங்கானாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

 

அதே போல தென் மாநிலங்கள் தவிர்த்து, குஜராத்தில் 3.9 சதவீதமும், கோவாவில் 3.7 சதவீதமும், ஒடிசாவில் 3.6 சதவீதமும், மேற்கு வங்காளம் 6.1 சதவீதம் மற்றும் சிக்கிமில் 2.1 சதவீதம் என்ற அளவிலும் வேலைவாய்ப்பின்மை குறைந்த விகிதமாக அமைந்துள்ளது.

 

உ.பி.(U.P) யில் 12.3 சதவீதமும், ராஜஸ்தானில் 13.1 சதவீதம், பீகார் 11.8 சதவீதம், ஜார்கண்ட் 14.3 சதவீதம், ஹரியானாவில் 28.7 சதவீதம், டெல்லியில் 13.6 சதவீதம் மற்றும் திரிபுராவில் 27.9 சதவீதம் என்பது அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டுள்ளது. 

 

வரும் நாட்களிலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்கலாம் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்றம் பெறும் நிலையில், இது சிறிதளவு மாறுபடலாம் எனவும் சொல்லப்படுகிறது. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்தது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்தது

India’s GDP declined to 5.8 percent in January – March Quarter

 

நடப்பு வாரத்தில் மத்திய புள்ளியியல் அமைச்சகம்(CSO) வெளியிட்ட பொருளாதார தகவலில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) விகிதம் 2018-19ம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு முன்னர் 2013-14ம் வருடத்தில் காணப்பட்ட 6.4 சதவீதமே அப்போதைய குறைந்த வளர்ச்சியாக சொல்லப்பட்டது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போதைய அறிவிக்கப்பட்ட 5.8 சதவீத வளர்ச்சி என்பது கடந்த ஐந்து வருடங்களில் குறைவாக காணப்பட்டதாகும். கடந்த 2018-19ம் நிதியாண்டு முழுவதுமான பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2017-18ம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

 

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(Gross Domestic Product) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 6.4 சதவீதமாக இருந்துள்ளது. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது விவசாயம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்பட்ட மந்த நிலையே.

 

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதமும்(Unemployment rate) கடந்த 45 வருடங்களில் காணப்படாத அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில நாட்களில் அறிவிக்கப்பட்ட இந்த பொருளாதார புள்ளிவிவரங்கள் அரசுக்கு பெரும் சவாலாக உள்ளன.

 

நாட்டின் புதிய நிதி அமைச்சராக திருமதி. நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது இளங்கலை பட்டப்படிப்பை பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்து திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியிலும்(Seethalakshmi Ramasamy College), முதுகலை மேற்படிப்பை டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

 

வரும் ஜூலை மாதத்தில் நாட்டின் பட்ஜெட் தாக்கல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார புள்ளிவிவரங்கள் தொய்வை ஏற்படுத்தியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை  

 

www.varthagamadurai.com

 

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

Unemployment or Entrepreneurship – Unemployment Rate

 

சமீபத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து கொண்டு வருவதாக ஆய்வுகளும், அதனை தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வருவதுமாக உள்ளது. சி.எம்.ஐ.இ.(Centre for Monitoring Indian Economy -CMIE)  தரவுகளின் படி கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.13 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.80 சதவீதமாகவும் மற்றும் கிராமப்புறங்களில் 6.24 சதவீதமாகவும் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதிகபட்ச வேலைவாய்ப்பின்மையாக திரிபுராவில் 30.9 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 1.50 % என்ற அளவிலும் தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.5 சதவீதமும் மற்றும் புதுச்சேரியில் 1.7 என்ற விகிதமும் இருந்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக(Unemployment Rate) காணப்பட்ட வருடமாக 2016-17ம் வருடங்களை குறிப்பிட்டுள்ளது. அதாவது தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம்(Labour Participation Rate -LPR %) மிக குறைவாக இருப்பதாக கணிப்பில் உள்ளது.

 

அரசு சார்பாக நடத்தப்படும் வேலைவாய்ப்பின்மை சார்ந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் இப்போதைய காலத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கல்வியில் வளர்ச்சி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மத்திய அரசின் ஆட்சி மாறும் போது, வேலைவாய்ப்பின்மை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மையில் இங்கு வேலை வாய்ப்பு இல்லையா அல்லது பயன்படுத்தப்படுவது இல்லையா என்பதே ஒவ்வொருவரின் கேள்வியாக இருக்கிறது.

Unemployment rate CMIE

நுகர்வோர் பயன்பாடு(Consumerism) அதிகரித்து வரும் நம் நாட்டில், பொருளாதாரமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டு தான் உள்ளது. அப்படியிருக்கும் போது, இந்த புள்ளி விவரங்கள் எதனை குறிப்பிடுகிறது என்பதே ஒரு ஐயம். பொதுவாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் கருத்துக்கணிப்புகள் செயல்படாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஏனெனில் அதன் வளர்ச்சி ஒவ்வொரு காலத்திலும் மிகவும் வேறுபடும். தூங்கா நகரத்தில் இன்று விடிய விடிய வணிக கடைகள் செயல்படாவிட்டாலும், ஸ்விக்கி(Swiggy), உபேர் ஈட்ஸ்(Uber Eats), ஜொமாடோ(Zomato) போன்ற உணவு சார்ந்த நிறுவனங்கள் வந்திருக்க முடியாது.

 

ஒரு புறம் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் மற்றொரு வேலைக்கு செல்வதும், அயல்நாட்டு வாய்ப்பை(Overseas Job Opportunity) அறிவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை என்ற ஒற்றை கருத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கும் இந்த வேளையில், தொழில்முனைவுகளை(Entrepreneurship) தேடி செல்வதையும் நாம் மறுக்க முடியாது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களின் மேற்படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு செல்ல விரும்புவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதில் ஆர்வமாக உள்ளனர்.

 

தொழில்முனைவதின் அவசியமும் இன்றைய காலகட்டத்தில் தேவையே. தொழில்முனைதலின் ரகசியமே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான(Creating Jobs -Employment) சூழல் தான். எனினும், இன்று பெரும்பாலான தொழில்கள் தோல்வியடைய காரணம் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாததே என சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் தனக்கென விவசாய நிலம் கொண்டு, தொழில்முனைதல் புரிந்தவர்கள் தான் நாம். ஆனால் விவசாய நிலங்களில் நமது பங்களிப்பு தற்போது அதிகம் இல்லையென்றாலும், புதுமையான விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அரசாங்கம் மட்டுமே ஒரு நாட்டில் உள்ள அனைவருக்குமான வேலைவாய்ப்பை உறுதி செய்து விட முடியாது. இருப்பினும் இதனை அலட்சியப்படுத்துவதற்கும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புதிய தொழில்களை உருவாக்குவதும்(Creating new and more business), நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுவடைய செய்யும். ஆங்கிலத்தில், ‘Sharing is Caring ‘ என சொல்வதுண்டு. வெறும் நுகர்வோர் கலாச்சாரம் மட்டுமே நம்மை மேம்படுத்தி விட முடியாது. வெகுவாக வளர்ந்து வரும் நுகர்வோர் விகிதத்தை சார்ந்து நமது வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் நமக்கு நாம் செய்யும் கடமை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com