Tag Archives: income tax

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

2022-23ம் நிதியாண்டுக்கான மியூச்சுவல் பண்ட் தனிநபர் வரி விகிதங்கள் எப்படி ?

Income Tax rates for Mutual Fund Investments – Individuals – FY 2022-23 (AY 2023-24)

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாட்டின் பட்ஜெட் தாக்கலில் வருமான வரி விகிதங்கள் சார்ந்த மாற்றங்கள் நிறைய சொல்லப்பட்டிருந்தது. நடப்பு 2022-23ம் நிதியாண்டுக்கான வரி விகிதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds) மூலம் கிடைக்கப்பெறும் வருவாய்க்கான வரி விகிதங்களும் அறிக்கையாக வெளியிடப்பட்டது.

மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பொறுத்தவரை உள்ளூர் முதலீட்டாளர்கள்(Resident) மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(NRI) என வரி விதிப்பு முறை தனித்தனியாக அமைந்துள்ளது. திட்டங்களின் அடிப்படையில் காணும் போது பங்கு சார்ந்த திட்டங்களுக்கும், பங்கு சாராத திட்டங்கள் என வரி விதிப்பு முறையும் வேறுபட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான, அதாவது 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி விகிதங்கள் குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) மற்றும் நீண்டகால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இங்கே சொல்லப்படும் காலம்(Short or long term) என்பது வருமான வரி விகிதங்களுக்கான கணக்கீட்டு காலம் மட்டுமே, அவை ஒரு குறிப்பிட்ட திட்டங்களில் மேற்கொள்ளப்படும் காலமல்ல. எனவே நாம் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்யவிருந்தாலும், மூலதன ஆதாய  வரி என்பது நாம் நம் முதலீட்டை விற்பனை செய்யும் காலத்தினை பொறுத்து வரி விகிதங்கள் மாறுபடும்.

பொதுவாக பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் நாம் அதனை விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், ஒரு வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் சொல்லப்பட்டு வரி விதிக்கப்படும். இதுவே பங்கு சாராத திட்டங்களுக்கு(Debt Mutual Funds or other than Equity oriented schemes) முதலீடு செய்த மூன்று வருடத்திற்குள் விற்கும் நிலையில், அவை குறுகிய கால மூலதன ஆதாயமாகவும், மூன்று வருடத்திற்கு மேலான விற்பனை நீண்டகால மூலதன ஆதாயமாகவும் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும்.

எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்கையில் ஒவ்வொரு மாதாந்திர அல்லது வாராந்திர முதலீடும், வரி விகிதத்தை பொறுத்தவரை தனித்தனி முதலீடாக கருதப்படும். உதாரணமாக ஜனவரி மாதத்தில் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, சொல்லப்பட்ட முதலீட்டு தேதியிலிருந்து(ஜனவரி 5) கணக்கிடப்படும். இதுவே பிப்ரவரி மாதம் 5ம் தேதி செய்யப்பட்ட முதலீடு, தனி முதலீடாக கருதப்பட்டு அவை பின்னொரு காலத்தில் விற்கப்படும் போது, காலத்தை சார்ந்து வரி விகிதங்கள் மாறுபடும். இந்த குழப்பங்கள் பெரும்பாலும் வரி சேமிப்பு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்(ELSS) முதலீடு செய்வோருக்கு ஏற்படும்.

 ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை மட்டும்(Lumpsum investment) செய்யப்படும் முதலீடாக இருக்கும் நிலையில், முதலீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து விற்பனை தேதியை கணக்கிடுகையில் சிரமம் இருக்காது. எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டிற்கு மட்டும் இந்த கவனம் தேவை. எனினும், வரி கணக்கீட்டினை பொறுத்தமட்டில் இன்றைய நிலையில் பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் இந்த கணக்கீட்டு அறிக்கையை முதலீட்டாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. எனவே வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த அறிக்கையை பயன்படுத்தி கொள்ளலாம்.

2018ம் ஆண்டுக்கு முன்பிருந்து, நீங்கள் பங்குகள் அல்லது பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகிறீர்களா ? (உங்களுக்கான பதிவு தான் இது)

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15 சதவீதமும், நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதமும் விதிக்கப்படும். நீண்டகால மூலதன ஆதாயத்தில் கிடைக்கப்பெறும் முதல் ரூ. 1 லட்சத்திற்கு வரி எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாயத்திற்கு மட்டுமே 10 சதவீத வரியாகும்.

மியூச்சுவல் பண்ட் – தனிநபர் வரி விகிதங்கள் – நிதியாண்டு 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)

முதலீட்டு பிரிவு

தனிநபர் – உள்ளூர் முதலீட்டாளர் 

வெளிநாடு வாழ் இந்தியர் 

பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

15%

15%

நீண்டகால மூலதன ஆதாயம் 

10%*

10%*

பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் 
குறுகிய கால மூலதன ஆதாயம் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

தனிநபர் வருமான வரி வரம்பின் அடிப்படையில் 

நீண்டகால மூலதன ஆதாயம் 

பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20%

10% – (பட்டியலிடப்படாத)

20% – (பட்டியலிடப்பட்ட மற்றும் பணவீக்க விகித சரிக்கட்டலுடன்)

வர்த்தக மதுரை | www.varthagamadurai.com

* ஒரு லட்சம் ரூபாய் வரையிலான(குறிப்பிட்ட நிதியாண்டில்) லாபத்திற்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை. ஒரு லட்சத்திற்கும் மேலான லாபத்திற்கு மட்டுமே 10 சதவீத வரி. 

இதுவே பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய  வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பின் அடிப்படையில்(Individual’s Income Tax Slab) அமைகிறது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக, பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு (Indexation Benefit) 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பணவீக்க விகிதத்திற்கான சரிக்கட்டல் மதிப்பை(Cost Inflation Index) ஒவ்வொரு ஆண்டும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும் (ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான தொகைக்கு) சொல்லப்பட்டுள்ளது. பங்கு சாராத திட்டங்களில் குறுகிய கால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பு அடிப்படையில் உள்ளது. நீண்டகால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதம் (பட்டியலிடப்படாத – Unlisted, No indexation benefit) மற்றும் 20 சதவீதமாக (Listed, With Indexation Benefit) சொல்லப்பட்டுள்ளது. 

முதலீட்டில் கிடைக்கப்பெறும் லாபத்திற்கு எவ்வளவு தொகையை வரியாக செலுத்த வேண்டுமென்பதை வரி ஆலோசகர் அல்லது பட்டய கணக்காளர்(Chartered Accountant) ஒருவரின் துணையுடன் கணக்கிடுவது நல்லது. 

கவனிக்க:

  • 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாத பட்ஜெட் அறிக்கையில், பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்களின் வரி முறையில் சில மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் செய்துள்ளது. இந்த புதிய முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி, 2023 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.      
  • பங்கு சாராத பரஸ்பர நிதி திட்டங்கள் எனும் போது, சிறிய பங்களிப்பில் பங்குகளை கொண்டிருந்தாலும் அவ்வகையான திட்டங்கள்  வரிச்சட்டத்தில் பங்கு சாராத திட்டமாகவே சொல்லப்படுகிறது. வரும் ஏப்ரல் 1, 2023 முதல் பங்கு சாராத திட்டங்களில், பங்குகளின் பங்களிப்பு 35 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால், குறுகிய மற்றும் நீண்டகால மூலதன ஆதாய வரி, தனிநபர் ஒருவரின் வருமான வரம்பில் அமையும் என சொல்லப்பட்டுள்ளது.
  • இதுவே அத்திட்டத்தில் பங்குகளின் பங்களிப்பு 36 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை இருக்கும் பட்சத்தில், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக, தனிநபர் ஒருவரின் வருமான வரி வரம்பிலும், நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது பணவீக்க விகித சரிக்கட்டலுக்கு பிறகு 20 சதவீதமாகவும் கூறப்பட்டுள்ளது. 
  • 65 சதவீதத்திற்கும் மேல் பங்குகளின் பங்களிப்பை கொண்டிருக்கும் திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்களின் வரி விதிப்பு மற்றும் முதலீட்டு கால முறையை(Holding period) போலவே கொண்டிருக்கும். அதாவது ஒரு வருடத்திற்குள்ளான குறுகிய கால மூலதன ஆதாய வரி 15 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட நீண்டகால மூலதன ஆதாய வரி 10 சதவீதமாகவும்(ஒரு லட்சம் லாபத்திற்கு பிறகான) இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு 

PAN-Aadhaar linking deadline extended to March 31, 2022

நடப்பில் எந்தவொரு நிதி சார்ந்த தேவைகளுக்கும், அரசின் உதவிகளை பெறுவதற்கும் ஆதார் எண்ணை கொண்டிருப்பது அவசியமாக உள்ளது. ரேசன் கடை முதல் வருமான வரி தாக்கல் செய்வது வரை ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. இவற்றில் நம்மிடம் உள்ள பான்(PAN) எண்ணுடன் ஆதார்(Aadhaar) எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணை பெறுவதற்கு வருமான வரி செலுத்துபவர்கள் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்று நடைமுறையில் இல்லை. வங்கியில் புதிய கணக்கை துவங்குதல், ஒரு பரிவர்த்தனை(Transaction) 50,000 ரூபாய்க்கு மிகும் போது, தொழில் நிறுவனத்தினை பதிவு செய்கையில், சொத்துக்களை வாங்க மற்றும் விற்க, அன்னிய செலாவணி(வெளிநாட்டு வருவாய்) போன்றவற்றுக்கும் பான் எண்ணை கொண்டிருப்பது அவசியமாகிறது.

பான் எண்ணை பெறுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. 5 வயது குழந்தைக்கும் பான் கார்டு எண்ணை பெறலாம். நமக்கான அடையாள சான்றாகவும் சில சமயங்களில் பான் கார்டு எண் பயன்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. வரி ஏய்ப்பை தடுக்கும் ஏற்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது.

பான் – ஆதார் இணைப்பில் பொது மக்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களால் இதற்கான காலக்கெடு ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பான் மற்றும் ஆதார் எண்களில் உள்ள தரவுகள் சரியாக பொருந்தினால் மட்டுமே அவை இணைக்கப்படுவது சாத்தியமாகிறது. இல்லையெனில், அவை இணைக்கப்படாத நிலையாகவே எடுத்து கொள்ளப்படுகிறது.

பெயரில் உள்ள பிழை, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பான் எண்ணில் பெயர் பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. அவற்றுக்கு சரியான அடையாள ஆவணம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, ஆதார் கார்டில் உள்ள தகவல் சரிசெய்யப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பான் – ஆதார் எண்ணுக்கான இணைப்பு காலக்கெடு 2022ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர்  30, 2021 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தளத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் வருமான வரி குறைப்பு எப்போது ? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தனிநபர் வருமான வரி குறைப்பு எப்போது ? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

Cut in Personal Income Tax – Expected to be soon

 

நாட்டின் பொருளாதார மந்தநிலையை சரி செய்யவும், நிறுவனங்களின் வருவாயை தக்க வைக்கவும், மத்திய நிதி அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு சலுகையை அறிவித்தது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை நஷ்டத்தில் செல்லாமல், லாபத்தில் தக்க வைத்து கொண்டன.

 

வரி குறைப்பு நடவடிக்கை இல்லாத நிலையில், அவை நஷ்டத்தில் இயங்க கூடும். விற்பனையும் குறைவாக இருப்பதால், நஷ்டத்தில் செல்லக்கூடிய நிறுவனங்கள் தாங்கள் பெற்ற வங்கி கடனை செலுத்த முடியாமல் போகலாம் அல்லது தொழில் செய்ய மேலும் கடனை வாங்க நேரிடலாம். இது வங்கிகளின் நிதிநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு, அரசு வரி குறைப்பை ஏற்படுத்தியிருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதனிடையே ஜி.எஸ்.டி.(GST) என சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரி குறைப்பும், ஜி.எஸ்.டி. வருவாயும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. ஒரு புறம் ஜி.எஸ்.டி. மூலம் பெறப்பட வேண்டிய தொகை(GST Refund) இன்னும் கிடைக்கவில்லை என நிறுவனங்கள் சார்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் உயர்த்தப்படும் பட்சத்தில், அவை வரும் நிதியாண்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். கடந்த செப்டம்பர் மாதத்தில் குறைக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வரி காரணமாக, அரசுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் சுமையாக சொல்லப்பட்டிருந்தது. இது நாட்டின் நிதி பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

ஏற்கனவே நாட்டின் பட்ஜெட் வருவாய்க்கு அதிகமான செலவினங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், தனிநபர் சார்ந்த வருமான வரி வரம்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா என நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ‘ நாட்டில் வரிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விலக்கு இல்லாத வரி திட்டங்களை அமல்படுத்தவும் அரசு தயாராக உள்ளது ‘ என்றார். 

 

தனிநபர் வருமான வரி குறைப்பு வரவிருக்கும் நிதியாண்டில் இருக்கலாம் என்பதையும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனிநபர் வருவாய் அதிகரிக்கலாம். மேலும் சந்தையில் வாங்கும் தன்மை மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இது துணைபுரியும் என சொல்லப்படுகிறது. தனிநபர் வருமான வரி விகிதங்கள் தற்போது 5,20 மற்றும் 30 சதவீதம் என்ற முறைகளை கொண்டுள்ளது. எப்படியிருந்தாலும், இதனால் ஏற்படப்போகும் நிதி சுமையை அரசு எவ்வாறு கையாள போகிறது என்பதே அனைவருடைய கேள்வி.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

Best 5 Tax Saving Mutual Funds – ELSS – 2019

 

நடப்பு நிதி வருடத்திற்கான(2018-19) காலம் முடிவடைவதற்கு இன்னும் ஏழு வாரங்களே உள்ளன. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் பட்ஜெட் வாயிலாக தனி நபர் வருமான வரியில் தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகள் கொடுக்கப்பட்டன. இந்த வரி தள்ளுபடிகளும், மற்ற சலுகைகளும் அடுத்து வரும் 2019-20ம் நிதியாண்டுக்கானது. இருப்பினும் நமக்கு நடப்பு வருடத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை கொண்டு நாம் வருமான வரி தாக்கல்(Income Tax filing) செய்ய போகிறோம். நடப்பு வருடத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை, வரி தள்ளுபடியாக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நம்மில் பெரும்பாலோர் வருமான வரியில் விலக்கு பெற(Income Tax exemption), கடைசி நேரத்தில் வரி சலுகை திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். வரி சலுகையை பெற ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்தில் முதலீட்டை துவங்குவதே நல்லது. நீங்கள் செய்யப்போகும் முதலீடு வரி சலுகைக்காக மட்டுமில்லாமல், உங்களின் நிதி இலக்குகளை(Financial Goals) சார்ந்து இருக்க வேண்டும். இன்னும் சிலரோ வருமான வரி சலுகைக்கு வெறும் காப்பீட்டு திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளனர் என்பது வருந்தத்தக்க விஷயம். வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் உள்ள ஒரு தனி நபர், தனக்கு போதுமான காப்பீட்டு தொகையை எடுத்து விட்டு பின்னர் மற்ற வரி சலுகை திட்டங்களை பற்றி யோசிக்கலாம். போதுமான காப்பீடு என்பது இன்று டேர்ம் பாலிசியில்(Term Insurance Policy) மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கிறது. காப்பீடு போக மீதமுள்ள தொகைக்கு நாம் வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ் மற்ற வரி சலுகை திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். Income Tax Act – 80 சி பிரிவின் கீழ் தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்.

 

வரி சலுகைக்கான திட்டங்கள் எனும் போது, பொதுவாக அஞ்சலக மற்றும் வங்கிகளில் வழங்கப்படும் திட்டங்கள் ஞாபகம் வரலாம். பொது வருங்கால வைப்பு நிதி(PPF), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), செல்வமகள் திட்டம்(Sukanya Samriddhi), காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் அளிக்கும் வரிச்சலுகை முதலீடுகள்(Tax Saving Mutual Funds) ஆகியவை நமக்கான வாய்ப்புகளாக உள்ளன.

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களும் வருமான வரி சட்டம் பிரிவு 80சி ன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை (அனைத்துக்கும் சேர்த்து) வரி சலுகை பெறக்கூடியவை. வரி சலுகை திட்டங்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு(Lock-in Period) பிறகு தான் நாம் அந்த திட்டங்களில் இருந்து பணத்தை பெற வேண்டும். இதன் காரணமாக தான் நமக்கு வரிச்சலுகை கிடைக்க பெறுகிறது. அவ்வாறு பார்க்கும் போது, குறைந்த காலத்தில் முதலீட்டை எடுக்கக்கூடியதாகவும், ரிஸ்க்குடன் கூடிய நல்ல வருமானத்தை தருவதாக பரஸ்பர நிதி வரிச்சலுகை  திட்டங்கள்(ELSS -Equity linked Savings Scheme) உள்ளன. இவை மற்ற வரி சலுகை திட்டங்களை காட்டிலும் நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை கொடுப்பவை.

 

நடப்பு நிதியாண்டு 2019ல் சிறந்த மற்றும் வரி சலுகை அளிக்கக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்கள்(Tax Saving Mutual Funds),

 

  • Canara Robeco Equity Tax Saver
  • Axis Long Term Equity Fund
  • Mirae Asset Tax Saver Fund
  • Taurus Tax Shield Fund
  • Kotak Tax Saver Fund

 

இந்த ஐந்து திட்டங்களும் வருவாய் மற்றும் ரிஸ்க் விகிதத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. Value Research Online மற்றும் Morningstar தளங்கள், சொல்லப்பட்டுள்ள ஐந்து பரஸ்பர நிதி திட்டங்களுக்கும் ஒன்று முதல் ஐந்து வரை தரவரிசை பட்டியலில் இடம் கொடுத்துள்ளது. ஒரு பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்கும் போது, அதன் நிர்வாகம்(Fund Manager), வருவாய் மதிப்பீடு, துறை சார்ந்த மற்றும் பென்ச்மார்க் வருமானம்(Benchmark Returns), ரிஸ்க் விகிதங்கள்(Risk ratios) போன்றவற்றை ஆய்வு செய்வது அவசியம்.

 

மேலே சொல்லப்பட்டுள்ளன வரி சலுகை அளிக்கும் பரஸ்பர நிதி திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500/- மட்டுமே. செலவின விகிதம்(Expense ratio) 2.0 – 2.75 % என்ற அளவிலும், பணத்தை திரும்ப பெறும் போது வெளியேறும் கட்டணம்(No exit load) எதுவுமில்லை. பண்டுகளின் ரிஸ்க் அளவு குறைந்தது முதல் மிதமானதாக(Low to Average) உள்ளது. நியமச்சாய்வு(Standard Deviation) 14லிருந்து 15 புள்ளிகள் வரை கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட கால வருவாய் என பார்க்கும் போது, சராசரியாக மூன்றிலிருந்து ஏழு சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த வருடத்தில் சந்தை மந்தமாக இருந்ததும், இந்த வருவாய் குறைவுக்கான காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் ஐந்து வருட காலத்தில் அனைத்து பண்டுகளும் 15 சதவீதத்திற்கும் மேல் வருமானத்தை தந்துள்ளது.

 

5 சிறந்த பரஸ்பர நிதி திட்டங்களில் ஒவ்வொரு பண்டின் சந்தை மூலதனமும் ரூ.50,000 கோடிக்கும் மேல் உள்ளது. நட்சத்திர மதிப்பீடை(Star Rating) மட்டுமே கருத்தில் கொள்ளாமல், மற்ற விஷயங்களையும் நாம் ஆராயும் போது சிறந்த பரஸ்பர நிதி திட்டங்கள் நமக்கு கிடைக்கும். சொல்லப்பட்ட வருமான விகிதங்கள் மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் கடந்த கால செய்தியே. இனிவரும் காலத்தில் அவை நன்றாக செயல்படுமா என்பது சந்தை மற்றும் நிர்வாகத்தை சார்ந்தது.

 

மறவாதீர்கள், கடைசி நேர வரிச்சலுகை திட்டங்களை தவிருங்கள். உங்களுக்கான நிதி இலக்குகளை அல்லது தேவைகளை முதலில் தீர்மானியுங்கள். அதனை சார்ந்து வரி சலுகை திட்டங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். செய்யப்படும் வரி சலுகை முதலீடு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் நிதியாண்டின் (ஏப்ரல் மாதம்) தொடக்கத்தில் இருக்கட்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

2017-18 பட்ஜெட்டும் , வருமான வரியும் -Budget 2017 Highlights

2017-18  பட்ஜெட்டும் , வருமான வரியும்…

Union Budget 2017 Highlights…

 

2017-18(Financial Year) ம் நிதியாண்டுக்கான  பட்ஜெட் தாக்கலை கடந்த பிப். 1 ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ அறிவித்தார். அறிக்கைகளில் சில…

 

  • விவசாய துறை 4.6 சதவீத அளவில் வளர்ச்சி அடையும். விவசாயத்துக்கான கடன்  ரூ.10 லட்சம் கோடி  வழங்கப்படும்.

 

  • கிராமப்புற, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 24% அதிகம்.

 

  • பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின்(Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY))  கீழ் ஒரு நாளைக்கு 133 கி.மீ  சாலை அமைக்கப்படும்.

 

  • 2019 ம் ஆண்டுக்குள் ஒரு கோடி ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • வரும் நிதி ஆண்டில்(2017-18)  உரமானியத்துக்கு ரூ.70,000 கோடி மற்றும் சுகாதார துறைக்கு ரூ.48,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • உள் கட்டமைப்புத் துறைக்காக ரூ.3,96,135 கோடி மற்றும் பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • மூத்த குடிமக்களுக்கான ஆதார் அட்டையில், அவர்களின் உடல் நலம் சம்மந்தமான விவரங்கள் (அறிக்கை) இடம்பெறும் வசதி.

 

  • ரயில் பாதுகாப்பு நிதிக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

 

  • IRCTC இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து மற்றும் 3,500 கி.மீ  தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

 

  • பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நீக்கப்படுகிறது மற்றும் அந்நிய நேரடி முதலீடு 36% உயர்ந்துள்ளது;  தற்போதைய அந்நிய செலவாணி கையிருப்பு – 36,100 கோடி டாலர்.

 

  • டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ‘BHIM APP’ செயலியை 1 கோடி மக்கள் பயன்படுத்துவதாகவும், வணிகர்களுக்கான ‘AADHAR PAYMENT’ செயலி விரைவில் அறிமுகமாகும்.

 

  • வரும் நிதியாண்டுக்கான(FY 2017-18) நிதி பற்றாக்குறை இலக்கு – 3.2 %  அதற்கு அடுத்த அடுத்த ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு – 3 %

 

  • ரொக்க பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 3,00,000 /-(Cash Transaction Limit)

 

  • அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நன்கொடைகளை பெறலாம்.

 

  • அரசியல் கட்சிகள் ரொக்கமாக ரூ.2,000/- மட்டுமே நன்கொடையாக  வாங்க முடியும் மற்றும் கட்சிகள் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு  ரிசர்வ் வங்கி சட்டம்  கொண்டு வர உள்ளது.

 

  • ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 % வரி செலுத்தினால் போதும்; தற்போது இது 10 % வரியாக உள்ளது.

 

  • ரூ.50 லட்சம் முதல் ரூ.1  கோடி வரையிலான வருமானத்துக்கு 10 % சர்சார்ஜ்(Surcharge) செலுத்த வேண்டும்.

 

  • ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்கள் 15 % சர்சார்ஜ்(Surcharge) செலுத்த வேண்டும்.

 

2017-18 நிதி ஆண்டுக்கான வருமான வரிகள்(Income Tax Slabs):

நன்றி,

 

contact@varthagamadurai.com

www.varthagamadurai.com

 

வரிகள் ஜாக்கிரதை : Tax Planning

 

வரிகள் ஜாக்கிரதை : Taxes / Tax Planning

 

“ வரிகள் ” என்று சொன்னாலே நமக்கு திகிலூட்டும் விஷயமாகத்தான் நாம் பார்த்திருக்கிறோம்; ஏனென்றால் நமது பொருளாதார (வருமான) வாழ்க்கையோடு எப்போதும் தொடர்பு கொண்டிருப்பது இந்த ‘வரிகள்’ தான். நாம் நுகரும் ஒவ்வொரு பொருளிலும், பயன்படுத்தும் எந்த சேவையிலும் வரிகள் என்பது இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது; வரிகள் பற்றிய அறியாமை மற்றும் அலட்சியத்தாலேயே பெரும்பாலானோர் அவற்றை தவிர்ப்பதும், முடிவில் அபாரதத்திலும், ஊழலிலும் சென்றடைகிறது.

 

வரிகள் ஏன் :  Why Taxes  ?

 

TAX – A Fee or Charge against a Citizen’s Person, Property or Activity for the support of Government

 

  • போர்க்காலங்களில் நிதி உதவி திரட்டுவதற்கு மற்றும் நிலங்களுக்கும் வரி விதிப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

 

  • அமெரிக்காவாலும், இங்கிலாந்தாலும் ஆரம்பகாலத்தில் வரிகள் ஏற்படுத்தப்பட்டாலும் இன்று உலகளவில் பெரும்பாலான நாடுகள் வரி விதிப்பு கொள்கையை ஏற்படுத்தியுள்ளன.

 

  • இன்று வரி விதிப்பின் மூலமான வருமானத்தை கொண்டே ஏறக்குறைய எல்லா நாடுகளும் தங்களது நாட்டின் நிதி அறிக்கையை தயார் செய்கின்றன. வரி வருமானத்தை கொண்டே மக்களுக்கும் செலவிடுகின்றன.

 

வரிகள் எத்தனை : Types of Taxes ?

 

  • நேரடி வரிகள் (Direct Taxes)
  • மறைமுக வரிகள் (Indirect Taxes)
  • வருமான வரி (Income Tax)
  • சேவை வரி  (Service Tax)
  • சுங்க வரி (Customs Duty)
  • கலால் வரி (Excise Duty)
  • மதிப்பு கூட்டு வரி (Value Added Tax)
  • விற்பனை வரி (Sales Tax)
  • சொத்து வரி (Property Tax)
  • செல்வ வரி  (Wealth Tax)
  • நிறுவன வரி (Corporate Tax)

 

இன்னும் பல….(Goods and Service Tax -GST)  🙂

 

வரிகளை அலட்சியப்படுத்துவதா  (அ) திறமையாக கையாள்வதா  ?

 

வரி விதிப்புகள் தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு என தனித்தனியாக வரிச்சட்டம் உண்டு.

 

வரிகளை அலட்சியப்படுத்தவது  என்பதை விட, அவற்றை ஓரளவு கற்று கொள்வதன் மூலம் நாம் பயனடையலாம்; தவிர்க்கிறோம் என்று வரிகளை கட்டாமல் விடுவதோ (அ) வரி சலுகை பெறுகிறேன் என்று தவறாக முதலீட்டை மேற்கொள்வதோ, நிதி ஆரோகியமாகாது. வரிகளை சரியாக கையாண்டால் அது நமக்கு பல வழிகளில் பயன் தரும்; அதனால் தான்,

 

வரிகளும், பணவீக்கமும் அறியாமை ஏழைகள் ஏழைகளாகவும், கற்று தெரிந்த பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் வைத்திருக்கிறது.

 

நம்மில் சிலர் உண்மையிலே விவசாயம் செய்யாமல், விவசாய வருமானத்திற்கு வரியில்லை என்று கணக்கு காட்டி வருகிறார்கள்; இப்போது நிதி அமைச்சகமும், சில விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது 🙂

 

வரிகளால் நாம் படும் பாடு, திண்டாட்டம் தான் 🙂   எனவே, அவற்றை திறமையாக கையாள்வதே சிறந்தது !

 

எவ்வாறு திறமையாக கையாள்வது ? (How to avoid Taxes Legally)

 

  • வரிகள் சம்மந்தமான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் (அ) ஒரு வரி ஆலோசகரை தேர்ந்தெடுப்பதன் மூலம் (Hire a Tax Professional)

 

  • நீண்ட கால சேமிப்பு / முதலீடு மூலம், வரி விலக்கு பெறுவது (Long term Savings / Investment )

 

  • திறமையான வணிக தேர்வு (Tax Efficient Business)

 

  • மூலதன இழப்பை சமர்பிப்பதன் மூலம் (Capital Loss)

 

  • செயலில்லாத வருமானம் மூலம் (Create Passive Income)

 

  • குறைந்த வரி செலுத்துவதன் மூலம் வாங்கும் நிலம் (அ) சொத்து (Buying a Property / Asset in a Low Tax Region )

 

  • சொத்துக்களை விற்று லாபத்தை மறுபடியும்  சொத்துக்களாக மாற்றுவது (Reinvest on Profits)

 

  • பிறருக்கு உதவி செய்வதன் மூலம் (Charity / Donation)

 

  • வாடகை வருமானத்தில் தேய்மானம் மற்றும் பராமரிப்பு செலவுகளை கையாள்வதன் மூலம் (Depreciation and Maintenance Cost)

 

  • தொழிலில் அதிகம் செலவு செய்வது;  வேலையில் குறைந்த ஊதியம் மற்றும் குறைவாக செலவு செய்வதன் மூலம். (Spend more on Business, Earn and Spend less in a Job).

 

மேலே நான் சொன்ன ‘வரிகளை திறமையாக கையாள்வது’ (Tax Planning) என்பது அனைத்தும் அரசாங்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டதே. சிறந்த தகவல் மற்றும் உதவிகளுக்கு ஒரு வரி ஆலோசகர் (அ) தணிக்கையாளரை ஆலோசிப்பது நன்று.

 

வாழ்த்துக்கள் வரிகளுடன் 🙂

 

வாழ்க வளமுடன் !