Category Archives: Investopedia

பங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் ?

பங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் ?

Are you Day Trader (Intra day) in the Stock Market ?

 

சேமிப்பும், முதலீடும் (Savings & Investing) வெவ்வேறு என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான், செல்வம் சேர்ப்பதை பற்றிய புரிதல் அமையும். அதே போல தான் பங்குச்சந்தை முதலீடும். இன்று நாம் காணும் செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் – ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தை. நம்மில் சிலர் மெய்நிகர் நாணயமும் (Crypto Currency – Bitcoin) ஒரு செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பு என கூறினாலும், இன்னும் நம் நாட்டில் அதற்கான புரிதலும், வழிமுறைகளும் உருவாக்கப்படவில்லை. அதனாலேயே பாரத ரிசர்வ் வங்கி (RBI), மெய்நிகர் நாணய வர்த்தகத்தை தடை செய்துள்ளன.

 

மேலை நாடுகளிலும், இது சார்ந்த தகவல்கள் இன்றும் வெளிப்படையாக இல்லை. இருப்பினும் இதன் வர்த்தகம் சில நாடுகளில் விதிமீறலாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட் (Warren Buffet) கூறும் போது, ” மெய்நிகர் நாணயத்தை ஒரு சொத்தாக கருத முடியாது ” என்கிறார். ஆக, சொத்தினை உருவாக்க பயன்படும் சாதனமே இன்று உலகில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்திகிறது. இதன் காரணமாக தான் ரியல் எஸ்டேட்டும், அதனை சார்ந்த வாடகை வருமானமும் இன்றளவிலும் மதிப்புமிக்கதாக உள்ளன.

 

ரியல் எஸ்டேட்டும், தங்கமும் கடந்த சில வருடங்களாக பெரிய வருமானத்தை ஏதும் தராதது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளின் வட்டி விகிதமும் முதலீட்டிற்கு சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஆனால் பங்குச்சந்தை (Share Market) என்னவோ ஏற்ற-இறக்கத்துடன் இருந்தாலும் வருமானம் பண்ணுவதற்கான மற்றும் நீண்டகால செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்பாகவே உள்ளது. பங்குச்சந்தை ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டு சாதனம் எனினும், இன்று நாம் பணவீக்கத்தை விட சிறந்த வருமானம் ஈட்டுவதற்கான நீண்டகால முதலீடு பங்குச்சந்தையை தவிர வேறு எதுவும் இல்லை.

 

பங்குசந்தையில் மூன்று விதமான மனிதர்கள் பொதுவாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தினசரி வர்த்தகர் (Day Trader), குறுகிய கால முதலீட்டாளர் (Short Term Investor), நீண்ட கால முதலீட்டாளர் (Longterm Investor). பங்குச்சந்தையை ஒரு சொத்தாக கருதி, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும் நபர் – நீண்ட கால முதலீட்டாளர். வாங்கிய பங்குகளை மூன்று மாதத்திலிருந்து மூன்று வருடம் வரை வைத்திருக்க கூடியவர்கள் குறுகிய கால முதலீட்டாளர். தினமும் பங்குகளை வாங்கி அன்றே சந்தையில் விற்று விட்டு (Intra day) செல்பவர் தினசரி வர்த்தகர்  ஆவர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தினசரி வர்த்தகரா (Day Trader) நீங்கள் ?

 

தினசரி வர்த்தகர் என்பது அதிக ரிஸ்க் கொண்ட மனநிலை ஆகும். நீங்கள் 100 சதவீத லாபம் ஈட்டினாலும், அளவில்லா நஷ்டத்தை அடைய வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், சில நேர்த்தியான குறிப்புகளால் (Intra day Strategy) நீங்கள் உங்கள் நஷ்டத்தை குறைக்கலாம். நஷ்டத்தை நாம் குறைப்பதிலிருந்தே நமக்கான லாபம் வளரும். தினசரி வர்த்தகம் என்பது எல்லோருக்குமானதல்ல. சந்தையில் ஆளுமை உணர்வை (Aggressive) செலுத்தக்கூடியவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய வர்த்தகமிது.

 

  • தினசரி வர்த்தகம் (Day Trading) என்பது உங்கள் ரிஸ்குக்கான வெகுமதியை அளிக்கும். அது லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ (Risk-Reward) இருக்கலாம். இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களிடத்தில் வேண்டும். எல்லோரும் சந்தையில் பங்குகள் வாங்குகிறார்கள் என்ற மனநிலையை நீங்கள் கைவிட வேண்டும். எப்போதும் பங்குகள் வாங்கலாம் என்ற நினைப்பையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. நாம் எந்த விலையில் பங்கினை வாங்க வேண்டும் (Entry price) மற்றும் எந்த விலைக்கு பங்கினை விற்க (Exit price) வேண்டும், எவ்வளவு நஷ்டம் வந்தால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் (Tolerance) போன்றவற்றை முன்னரே திட்டமிட்டு நீங்கள் சந்தைக்குள் செல்ல வேண்டும்.

 

  • சந்தையின் போக்கினை (ஏற்ற-இறக்கம்) நன்றாக கணிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு நீண்ட கால முதலீட்டாளர் வேண்டுமானால் சந்தை போக்குக்கு எதிரே செயல்பட்டு பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். அதனால் அவருக்கு பெரிய பாதிப்பு உண்டாகாது. ஆனால் தின வர்த்தகரை பொறுத்தவரை, அவரிடம் இருப்பது அன்றைய நாள் மட்டுமே – சந்தை போக்கினை (Market Trend) பின்பற்ற வேண்டும்.

 

  • உங்களுக்கான திட்டம் (Entry, Exit, Stoploss) செயல்பட்டவுடன், நீங்கள் அதனை உணர்வுபூர்வமாக (Emotional) அணுக கூடாது. உங்களுக்கான லாபமோ, நட்டமோ வந்தவுடன் வெளியேறுவதே உங்களுக்கான சிறந்த திட்டமாகும். Over Trade செய்வதை தவிர்ப்பது நலம்.

 

  • எப்போதும் சந்தையில் ஒதுக்கப்பட்ட அளவை மீறி வெளிப்பாடை அதிகரிக்க வேண்டாம். (Don’t take over exposure on Margin) முடிந்தளவு உங்களிடம் உள்ள பணத்தை கொண்டே வர்த்தகம் செய்ய பழகுங்கள்.

 

  • இழப்பை குறைப்பதற்கான STOP LOSS தேர்வை எப்போதும் குறிப்பிடுங்கள். STOP LOSS ஒரு பயனுள்ள தேர்வு என்பதை மறக்க வேண்டாம். இன்று நீங்கள் தோற்றாலும், நாளை வெற்றியடைவதற்கான பாதை தான் Stoploss.

 

  • ஒவ்வொரு நாளும் சந்தை முடியும் முன், உங்களுடைய வர்த்தக செயல்பாட்டை (Order and Trade Execution) சரி பார்த்து கொள்ளுங்கள். அதே போல, வர்த்தகத்திற்கு பிந்தைய பரிவர்த்தனை அறிக்கைகளை (Transactions – Contract note) பொறுமையாக படியுங்கள்.

 

  • பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் உலகளவிலான செய்திகள், வதந்திகள், நிறுவனத்தின் தாக்கங்கள், அரசின் கொள்கைகள் ஆகியவற்றால் தாக்கமடையும். அதனால் எல்லா நாட்களையும் ஒரே அளவில் கருதக்கூடாது. தின வர்த்தகத்துக்கு தேவையான அடிப்படை கல்வியை கற்று கொண்ட பின்னரே சந்தைக்கு வர வேண்டும். எல்லோரும் பங்குசந்தையில் உள்ளார்கள் என்று நீங்களும் பணத்தை கொண்டு வந்தால் – பங்குச்சந்தை உங்கள் பணத்தை உள்வாங்கி கொள்ளும், உங்களுக்கு பணம் திரும்ப வராது.

 

  • நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis), தின மற்றும் குறுகிய கால வர்த்தகர்களுக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis) போன்ற பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கல்வியை கற்று கொள்வது, உங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும்.

 

இலவச பங்குச்சந்தை வகுப்புகள் – Free Share Market Course online

 

ஆம், பங்குச்சந்தை ஆபத்தானது தான் – சாலையில் நாம் வாகனத்தை ஓட்டுவது போல..

 

பங்குச்சந்தை ஒரு முதலீட்டு வாய்ப்பு தான் – சாலை விதிமுறைகளை பின்பற்றும் போதும், நமக்கான வேகத்தை கொண்டிருக்கும் போதும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 5

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 5

Budget Planning for Middle Class Family – Part 5

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடலின் ஐந்தாவது மற்றும் இறுதி பகுதிக்கு வந்துள்ளோம். நாம் ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு குறுந்தொடர் பகுதியாகும். வர்த்தக மதுரை முகநூல் வாசகர்களின் கோரிக்கையால் தான் இந்த தொடர் துவங்கப்பட்டது. அவர்களின் இத்தொடர் சார்ந்த வரவேற்பிற்கு, வர்த்தக மதுரை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 

திரு. தங்கத்துரை இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியர். இரு பிள்ளைகளின் படிப்பு மற்றும் அவர்களுக்கான திருமணத்தை நன்றாக முடித்து விட்டு தனது மனைவியுடன் ஓய்வு காலத்தை கழித்து வருகிறார். மாத பென்ஷனாக (Monthly Pension) ரூ. 20,000 /- ஐ பெறும் திரு. தங்கத்துரை தனக்கென்று சொந்த வீடு இல்லாமல், மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டு வாடகையாக மாதாமாதம் ரூ. 3500 ஐ செலுத்துகிறார்.

 

தனது மற்றும் மனைவியின் மருத்துவ செலவுக்காக ரூ. 10,000 ஐ மாதத்திற்கு ஒரு முறை ஒதுக்கியுள்ளார் தங்கத்துரை. தனது ஓய்வூதியம் போக, பங்குச்சந்தை வர்த்தகத்தின் (Share Trading) மூலம் மாதம் 5000 ரூபாய் சம்பாதிப்பதாக கூறுகிறார். ஓய்வு காலத்தில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் நல்ல உணவும், மருத்துவ உதவியும் தான் தேவைப்படும். அவர்களுக்கான போக்குவரத்து மற்றும் ஆடம்பர செலவுகள் பொதுவான தேவையை விட குறைவாக தான் இருக்கும்.

 

Budget Financial Planning

 

பங்குசந்தையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, தன்னுடைய ஓய்வூதிய தொகையை காட்டிலும் சற்று அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது தங்கத்துரை அவர்களின் விருப்பம். பங்குச்சந்தையை முறையாக கற்றுக்கொண்டால் நீண்ட காலத்தில் நல்ல வருமானம் பெறலாம். Capital Gains என்று சொல்லக்கூடிய மூலதன ஆதாயம் மற்றும் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் என்பது பங்குசந்தையில் சுலபமான ஒன்று. ஆனால் நீண்ட காலத்தில் முதலீடு செய்து காத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

 

நினைவில் கொள்க:

 

  • மருத்துவ  செலவுக்கென்று  மாதம் ரூ. 10,000 என்றிருக்கும் போது, தங்கத்துரை  மற்றும் அவர்களின் திருமதி – இருவருக்கும் சேர்த்து மருத்துவ காப்பீடு (Health Insurance) எடுத்து கொள்வது நன்று.

 

  • சர்க்கரை நோயை கொண்டிருக்கும் தங்கத்துரையும் (62 வயது), அவர்களின் மனைவி (58 வயது) தைராய்டு பிரச்னையால் மருந்து மாத்திரைகளை எடுத்து கொண்டு வருகின்றனர். இதற்கான செலவே மாத ஓய்வூதியத்தில் பெரும்பங்கை வகிக்கிறது. இவர்கள் இருவருக்கான ஒரு வருட மருத்துவ காப்பீடு செலவு என எடுத்து கொள்ளும் போது, 40,000 /- லிருந்து 45,000 /- ரூபாய்க்குள் (மாதம் ரூ. 3400 – 3750) இருக்கும். மருத்துவ காப்பீடு கவரேஜும் ரூ. 10 லட்சம் வரை அமையும். இதன் மூலம் அவர்களுக்கான உடல் நல பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.

 

  • பங்குச்சந்தை என்பது அபாயத்தை கொண்டது (Risk), அதே வேளையில் நீண்ட கால நோக்கத்துடன் முதலீடு செய்யும் பட்சத்தில் நல்ல வருமானத்தை தரும். திரு. தங்கத்துரை பங்கு வர்த்தகத்தின் மூலம் மாதம் ரூ. 5000 ஐ சம்பாதிக்கிறார் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் ஓய்வு காலத்தில் இருக்கும் அவருக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு, ஓய்வூதியம் தான். சந்தை  இறங்கும் போது, அதனால் ஏற்படும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் அளவு தான் ரிஸ்க் எடுக்க வேண்டும். கூடுதல் ரிஸ்க், அதிகப்படியான நஷ்டத்தை தரும்.

 

  • பொதுவாக பங்குச்சந்தையை பொறுத்தவரையில் இளைஞர்கள் ரிஸ்க் எடுத்து சம்பாதிக்கலாம், வயதானவர்கள் அல்லது வருமானத்திற்கு இனி வாய்ப்பில்லாதவர்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இளைஞர்கள் சந்தையில் பணத்தை இழந்தாலும், எதிர்காலத்தில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அவர்களுக்கான ஊதியம் ஈட்டும் வயதும் அதிகமாக உள்ள காரணத்தால் தான். அதனால் தங்கத்துரை அவர்கள் தின வர்த்தகத்தை (Intraday) விலக்கி விட்டு, நீண்ட காலத்தில் நல்ல நிறுவன பங்கினையோ (அ) பரஸ்பர நிதிகளில் மூலதனத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் திட்டங்களை (Debt Mutual Funds) தேர்ந்தெடுக்கலாம்.

 

( முற்றும்)

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 4

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 4

Budget Planning for Middle Class Family – Part 4

 

இது நமது நடுத்தர பட்ஜெட் திட்டமிடலின் நான்காம் பகுதி…

 

மதுரை திருமங்கலத்தில் வசித்து வருபவர் திரு. பன்னீர் செல்வம், சொந்த தொழில் செய்துவரும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி திருமதி. பாண்டியம்மாள் அருகில் உள்ள கிராமத்தில் விவசாயத்தை பார்த்து வருகிறார். மூன்று மகள்களையும் மேற்படிப்பு வரை படிக்க வைத்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதையே லட்சியமாக கொண்டுள்ள பன்னீர் செல்வம் அதற்கான நிதி சார்ந்த நடவடிக்கைகளை எப்போதும் கவனத்துடன் கையாண்டு வருகிறார்.

 

இனி இவருடைய பட்ஜெட் திட்டமிடலை பார்ப்போம்…

Budget Financial Planning Part 4

 

தனது தொழில் மூலம் மாத வருவாயாக ரூ. 30,000 ஐ பெறும் பன்னீர் செல்வம், தனது மகள்களின் கல்விச்செலவுக்காக மாதம் 15000 ரூபாயை செலவிடுகிறார். முதல் மகள் பொறியியல் பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டிலும், இரண்டாவது மகள் பி.எஸ்.சி. கணிதம் முதல் ஆண்டிலும், மற்றும் கடைக்குட்டி தற்போது பனிரெண்டாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். முதல் மகளின் பொறியியல் படிப்பிற்கு கல்விக்கடன் வாங்கியிருந்தாலும், கல்விச்செலவுகளில் அதற்கான மற்ற செலவுகளுக்கு தேவையான பணத்தை ஒதுக்கி வைத்துள்ளார்.

 

 

தனது குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கு சேர்த்து மருத்துவம் மற்றும் காப்பீட்டு செலவுகளுக்காக மாதம் ரூ. 3500 ஐ செலவழித்து வருகிறார். இது போக தனது மகள்களின் வரப்போகும் திருமணச்செலவுகளுக்கு என 8000 ரூபாயை மாதாமாதம் சேமித்து வருகிறார். அதனை கொண்டு மூன்று மகள்களின் திருமண நிதி இலக்குகளை அணுகி வந்துள்ளார். திருமதி. பாண்டியம்மாள் அவர்களின் விவசாய வருமானமாக ரூ. 10,000 குடும்ப நிதிச்சுமையை சற்று குறைகிறது. மொத்தத்தில் மாத வருவாயாக ரூ. 40,000 /- யையும், அவற்றில் மாதச்செலவுகளாக ரூ. 37,000 செலவிடப்படுகிறது.

 

நாம் ஏற்கனவே பார்த்தது போல, சேமிப்பு மற்றும் முதலீடுகளும் ஒரு வகையான செலவே. பன்னீர் செல்வம் குடும்பத்தின் வரவு-செலவு போக, உபரித்தொகையாக ரூ. 3000 இருப்பதும் நிதி சார்ந்த விஷயத்தில் ஆரோக்கியமான விஷயமே.

நினைவில் கொள்க:

 

  • பன்னீர் செல்வத்தின் முதல் மகள் இறுதி ஆண்டு கல்வியை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் முனைப்பில் உள்ளார். இதன் மூலம் தனது குடும்பத்தின் நிதி ஆதாரத்தை அதிகப்படுத்தலாம். அதே நேரத்தில், இரண்டாவது மகள் பட்ட மேற்படிப்பையும் (Post Graduation) படிக்க விரும்புகிறார். மூன்றாவது மகளின் வரப்போகும் பட்டப்படிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

  • முதல் மகளின் புதிய வேலைவாய்ப்பால், நாம் மேலே சொன்ன எதிர்கால கல்விச்செலவுகளை கையாளலாம் அல்லது மூத்த மகளின் பொறியியல் படிப்பு முடிந்து விடும் நிலையில் இருப்பதால், அந்த தொகையை இனி மற்ற மகள்களின் கல்விச்செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • பன்னீர் செல்வம் மற்றும் அவரது துணைவி, இருவருக்குமான ஓய்வு கால நிதியை (Retirement Planning) அவர்கள் இதுவரை ஏற்படுத்தாதது ஒரு குறையாக உள்ளது. அவர்கள் மகள்களின் எதிர்கால வேலைவாய்ப்பை சார்ந்தே உள்ளனர். மகள்கள் உதவும் பட்சத்தில், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களின் ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்யலாம்.

 

  • தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் வருமானம் பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருக்கும். அதனால் நாம் வருமானம் பெறும் வேளையிலே சேமிக்கும் தன்மையை கொண்டிருக்க வேண்டும்.

 

 

போதுமான சேமிப்பும், தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதும் ஒரு குடும்பத்தின் நிதி நலனை பாதுகாக்கும்; குடும்பத்தில் அனைவருக்கும் அமைதியை பேணும்.

 

பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3

Budget Planning for Middle Class Family – Part 3

 

பட்ஜெட் திட்டமிடலின் மூன்றாவது பகுதிக்கு வரவேற்கிறோம்…

 

கடந்த பகுதிகளின் மூலம் நடுத்தர பட்ஜெட் குடும்பத்திற்கு தேவையான சில யோசனைகள் மற்றும் திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் வந்திருக்கலாம். அதனை நீங்கள் உடனே செயல்படுத்துவதற்கான ஆயுத்தங்களை செய்தால் போதும். அப்போது தான் பட்ஜெட் திட்டமிடலின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். சரி வாருங்கள், இந்த பகுதிக்கான திட்டமிடலை பார்ப்போம்.

 

திரு. பாண்டி மத்திய அரசுத்துறையில் வேலை பார்த்து வரும் 28 வயது இளைஞர். சாத்தூரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தனது வேலை நிமித்தமாக மதுரை மாநகரில் வசித்து வருகிறார். இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர் தனது இலக்கான அரசு பணியினை கைப்பற்றிய பாண்டி, தனக்கான மணப்பெண்ணையும் தேடி வருகிறார் 🙂

 

பட்ஜெட் திட்டமிடல்:

 

சம்பளத்தில் பிடித்தம் போக தனது கையில் (வங்கியில்) மாதம் ரூ. 35,000 ஐ வருமானமாக பெறுகிறார். அதாவது ஆண்டுக்கு ரூ. 4.20 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார். தற்போதைய அடிப்படை செலவாக (Fixed Expenses)  அவர் மாதம் ரூ. 12,000 மும், இன்சூரன்ஸ் செலவாக மாதம் 2000 ரூபாயும் ஒதுக்குகிறார். முதலீட்டு செலவாக (Investing Expenses) மாதம் ரூ. 17,000 ஐ கொண்டுள்ளார். மீதம் அவரிடம் 4000 ரூபாய் உள்ளது, இதனை தனது எதிர்பாராத செலவுகளுக்கு பயன்படுத்தி வருகிறார்.

 

Budget Financial Planning 3

 

அடிப்படை செலவு என்பது பொதுவாக அத்தியாவசிய செலவுகளாக கருதப்படும். இருப்பிடம், உணவு, உடை, போக்குவரத்து, மின்சாரம், இணைய கட்டணம், காப்பீடு போன்றவை அடிப்படை செலவுகளாகும். முதலீட்டு செலவு எனும் போது, நமது எதிர்கால தேவைக்காக நாம் இன்று சேமிக்கும், முதலீடு மேற்கொள்ளும் தொகையாகும். முதலீட்டை நாம் ஒரு செலவாக தான் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் பின்னாளில் கிடைக்கும் முதிர்வு தொகையை செலவழிக்க தான் போகிறோம்.

 

உடன்பிறந்தோர் தனது பெற்றோரை பார்த்து கொண்டிருந்தாலும், பாண்டி தனது பெற்றோருக்காக ஒரு கார்பஸ் (Corpus) தொகையை பெற முதலீட்டை மேற்கொண்டு வருகிறார். அவரது முதலீட்டு செலவில் இதுவும் (மாதம் ரூ. 5000/-) அடங்கும். இன்னும் 5 வருடத்தில் முதிர்வு பெறும் நிலையில் கிடைக்கும் ரூ. 8,70,000 /- தொகையை தனது பெற்றோருக்கு கொடுக்க உள்ளார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மேலே உள்ள அட்டவணையின் மூலம் நாம் பாண்டி அவர்களின் வரவு மற்றும் செலவை அறியலாம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட (NPS) தொகையை அவர் தனது ஓய்வு காலத்திற்கு பயன்படுத்தி கொள்வார். தனி நபராக இருக்கும் போது அவருக்கு செலவுகள் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், தனது எதிர்காலத்தை (திருமணம் மற்றும் அதனை அடுத்த பொறுப்புகள்) கவனத்தில் கொண்டு சேமிப்பு மற்றும் முதலீட்டை முன்னரே செய்துள்ளார். பணிபுரியும் மணப்பெண்ணை அவர் எதிர்பார்ப்பதால், வரக்கூடிய எதிர்கால செலவுகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

நினைவில் கொள்க:

 

  • பாண்டி தனது நிதி இலக்குகளாக (Financial Goals) 5 வருடத்திற்கு பிறகு புதிய வீட்டு மனை ஒன்றை வாங்க விரும்புவதாகவும், 3 வருடத்தின் முடிவில் ஒரு காரை வாங்க வேண்டுமென முடிவு செய்துள்ளார்.

 

  • இவரின் திருமண செலவு மற்றும் பிற நிதி இலக்குகளுக்கு தேவைப்படும் தொகையை, தான் ஏற்கனவே மேற்கொண்ட முதலீட்டில் பயன்படுத்தி கொள்ளலாம். மீதத்தொகைக்கு வங்கியில் கடன் பெறலாம். நான்கு சக்கர வாகனம் தற்போது அவசியமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் அல்லது அதற்கான காலத்தை தள்ளி போடலாம்.
  • தனது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை முன்னரே கணக்கிட்டு அதற்கான முதலீட்டை நாம் மேற்கொள்ளும் போது, எந்த நிதி சிக்கலும் இல்லை.

 

  • பொதுவான எண்டோவ்மென்ட் பாலிசியை எடுத்திருக்கும் இவர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நலம். ஏற்கனவே தான் எடுத்திருக்கும் மெடிக்ளைம் (Mediclaim) பாலிசியில் திருமணத்திற்கு பிறகு, தனது மனைவியை சேர்த்து கொள்ளலாம். இது போக பாலிசிக்கான கவரேஜ் தொகையையும் அதிகரித்து கொள்வது நிதி செலவை பாதுகாக்கும்.

 

  • நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் பிடிக்கப்படும் NPS ஐ மட்டும் சாராமல், பிற முதலீட்டு சாதனங்களையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும். நிறுவனம் உங்கள் சம்பளத்தில் தான் குறிப்பிட்ட சதவிகிதத்தை பிடித்தம் செய்ய முடியும். ஓய்வு காலத்திற்கு தேவையான சரியான தொகையை நாம் மட்டுமே கணக்கிட முடியும்.

 

பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2

Budget Planning for Middle Class Family – Part 2

 

பட்ஜெட் திட்டமிடல் குறுந்தொடருக்கு வரவேற்கிறோம்…

 

திரு. ராஜாக்கண்ணன் மதுரை – ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாதச்சம்பளமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது விவசாய நிலத்திலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இரு மகன்கள் மற்றும் வயதான தன் பெற்றோர்களை கவனித்து கொள்ளும் பொறுப்பை, ராஜாக்கண்ணனின் மனைவி பார்த்து வருகிறார்.

 

மூத்த மகன் ஆறாவது வகுப்பும், இளைய மகன் மூன்றாவதும் படித்து கொண்டிருக்கிறார்கள். அழகான விவசாய தோட்டம், சொந்தமாக வீடு என்றிருக்கும் போது வேறென்ன வேண்டும் நமக்கு. இனி இவரது மாதாந்திர பட்ஜெட் திட்டமிடலை (Budget – Financial Planning) பார்ப்போம்.

 

Budget Financial Planning Part2

 

மாதம் ரூ. 22,000 சம்பளமாக பெறும் ராஜாக்கண்ணன் தனது ஓய்வு கால நிதியாக, சம்பளத்தில் பிடிக்கப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தை (National Pension System -NPS) மட்டுமே கொண்டுள்ளார். வீட்டு வாடகை செலவு ஏதும் இல்லாததால் அவரின் பட்ஜெட்டில் துண்டு விழவில்லை. மாநகருக்கு வெளியே வீடு அமைந்திருப்பதால் காற்றோட்டமான சூழ்நிலையும், விவசாய வாய்ப்பும் தனக்கு கிடைத்துள்ளதாக கூறுகிறார். வயதான தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட்ட இவரது குடும்பத்திற்கான மாத உணவுச்செலவு ரூ. 10,000 /- ஆகும்.

 

மருத்துவம் மற்றும் காப்பீட்டிற்காக இவர் மாதாமாதம் ரூ. 3500 ஒதுக்குகிறார். உடை, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து செலவுகளை மேலே உள்ள அட்டவணையில் காணலாம். பிற செலவுகளுக்காக ரூ. 1500 வரை மாதத்திற்கு வைத்துள்ளார். இரு மகன்களின் கல்விச்செலவுகளுக்கு மாதம் ரூ. 11,000 வரை செலவிடுகிறார். இவரது செலவு பட்டியலில் கல்விச்செலவே முக்கிய பங்கு வகிக்கிறது 🙂

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, ராஜாவின் மனதுக்கு பிடித்த விவசாய தொழில் மூலம் மாதம் ரூ. 5000 ஐ பிற வருமானமாக ஈட்டி வருகிறார். பருவ நிலை மாற்றங்களால் தான் எதிர்பார்த்த வருமானத்தை விவசாயத்தில் ஈட்ட முடியவில்லை என்றாலும், தனது நம்பிக்கையை கைவிடாமல் தோட்டத்தில் புதுமையான முறைகளை புகுத்தி வருகிறார். விரைவில் அவர் தனது விவசாயம் மூலம் நல்ல வருமானத்தை பெறுவார் என நம்பலாம். இவரின் வரவு-செலவை ஒப்பிடும் போது, மீதம் உபரித்தொகையாக ரூ. 1500 உள்ளது. இன்றைய நாட்களில், ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினை நிர்வகிப்பதில் இவரை போன்றவரை நாம் பாராட்டலாம்.

 

பரிந்துரைகள் / நினைவில் கொள்க:

 

  • ராஜாக்கண்ணன் தனது மாத உபரித்தொகையை இரு மகன்களின் எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எதிர்கால இலக்குகளுக்கு பயன்படுத்த உள்ள தொகையை ஆர்.டி. யாகவோ (Bank / Post office RD) அல்லது பரஸ்பர நிதியின் எஸ்.ஐ.பி. முறையை (Mutual Fund -SIP) தேர்ந்தெடுப்பது நலம்.

 

  • குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறு நபர்கள் எனும் போது, அவரின் உணவில் பெரும்பாலும் இல்லை எனலாம். பிள்ளைகளுக்கு மற்றும் பெற்றோர்களுக்கான ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் பெரிய குடும்பங்களுக்கு உணவு சார்ந்த மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கும் போதே உணவுச்செலவினை ஓரளவு குறைக்க முடியும். இதனை கொண்டும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் இலக்குகளை நிர்ணயம் செய்யலாம்.

 

  • மருத்துவம் மற்றும் காப்பீடு என பார்க்கும் போது, அவர் பொதுவான எண்டோவ்மென்ட் (Endowment) பாலிசியை தான் எடுத்துள்ளார். மேலும் வயதான பெற்றோர்களுக்கான எதிர்பாராத மருத்துவ செலவுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 

  • தான் ஒதுக்கும் ரூ. 3500 /- ல் (மருத்துவம் மற்றும் காப்பீடு) தனக்கான டேர்ம் இன்சூரன்ஸை எடுத்து கொள்வது நல்லது. இவருக்கான டேர்ம் பாலிசி கவரேஜ் ரூ. 45 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை இருந்தால் போதும் (ஆண்டு வருமானத்தை போல 15-20 மடங்கு). இந்த கவரேஜிற்கு ஆண்டு பிரீமியம் ரூ. 7000 – 7500 வரை இருக்கும்.

 

  • எதிர்பாரா மருத்துவ செலவுகளை தவிர்க்க இவருடன் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என ஒரு மருத்துவ பாலிசி, வயதான பெற்றோர்களுக்கென மற்றொரு பாலிசியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். மூத்த குடிமக்கள் அல்லாமல் நான்கு பேருக்கான குடும்ப மருத்துவ காப்பீட்டு பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 15000-18000 /- ஆகும் ( 5 லட்சம் வரையிலான கவரேஜ்). மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு பிரீமியம் அதிகமாக இருக்கும் ( 2 Senior Citizens – Rs. 35,000 /- yearly for Upto 5 Lakh Sum Insured).

 

  • ஓய்வு கால நிதிக்கு தேசிய பென்ஷன் திட்டத்தை மட்டும் நம்பியிருக்காமல் அவ்வப்போது தனது சேமிப்பிலும் ஒரு தொகையை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால கல்விச்செலவுகளை கருத்தில் கொண்டு, முன்கூட்டிய சேமிக்க பழகினால் சிரமப்பட தேவையில்லை. வெறும் சேமிப்பு என்று மட்டும் பாராமல், பிற வருமானத்தை ஏற்படுத்துவதும் ஒரு குடும்பத்திற்கு நிதி சார்ந்த அக்கறை உதவும்.

 

வருவாயில் துண்டு விழாமல் பார்த்து கொள்வதே சாலச்சிறந்தது.

வந்த பின் வருந்துவது அர்த்தமில்லையே 🙂

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1

Budget Planning for Middle Class Family – Part 1

 

வர்த்தக மதுரை தளத்தில் நாம் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த பல விஷயங்களை பதிவிட்டு வந்தாலும், நமது வாசகர்கள் சிலர், நிகழ்கால அடிப்படையில் வாழ்க்கைக்கு தேவையான ஒரு பட்ஜெட் திட்டமிடலை (Budget Planning) கேட்டிருந்தனர். இதன் காரணமாக நமது நகரின் தற்போதைய விலைவாசியை அடிப்படையாக கொண்டு, பட்ஜெட் திட்டமிடல்  என்ற குறுந்தொடரை (Miniseries) ஆரம்பித்துள்ளோம்.

 

திரு. ராம்குமார்  மதுரையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 29 வயதாகும் ராம்குமார் தனது தாய்  மற்றும் மனைவியுடன் மதுரை மாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கும், அலுவலகத்திற்குமான தூரம் சுமார் 10 கி.மீ. ஒரு நபர் வருமானம் மட்டுமே கொண்டுள்ள ராம்குமார் தனது மனைவி மற்றும் இன்னும் ஆறு மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தை நலனையும், தனது தாயின் முதுமை காலத்தையும் பாதுகாக்க வேண்டும். இனி அவருக்கான, மாதாந்திர பட்ஜெட் திட்டமிடலை பார்ப்போம்.

 

Budget Planning

 

மாதம் ரூ. 25,000 /- ஐ சம்பளமாக (பிடித்தம் போக) பெறும் ராம்குமாரின் மாத செலவுகளை நாம் மேலே உள்ள அட்டவணையில் காணலாம். மாத வீட்டு வாடகை ரூ. 5000 /- என்பது மதுரை நகருக்குள் நடுத்தர மக்களுக்கு எளிமையாக (1 BHK) கிடைப்பதாகும். நகருக்கு சற்று தொலைவில் (10 கி.மீ.) வசிக்கும் பட்சத்தில் 5000 ரூபாய்க்கு வசதியான வாடகை வீடு அமையலாம்.

 

பெரியவர்கள் மூன்று பேர் மற்றும் ஒரு மழலை இருக்கும் குடும்பத்திற்கான சராசரி உணவுச்செலவு மாதம் ரூ. 7250 /- ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு நடுத்தர குடும்பத்திற்கான திட்டமிடல் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

 

மருத்துவம் மற்றும் காப்பீடு செலவுகள் மாதத்திற்கு ரூ. 4500 /- என  ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தான் நம்மில் பெரும்பாலோர் அலட்சியம் காட்டி வருகிறோம். ஒரு சரியான பட்ஜெட் திட்டமிடல் என்பது வருவாய்க்குள் செலவு மட்டுமல்ல; உங்கள் எதிர்பாராத செலவுகளையும் குறைப்பதாக இருக்க வேண்டும். இன்றையளவில் மருத்துவம் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் என்பது யாராலும் எளிதாக கணக்கிட முடியாத நிலையாக உள்ளது. இருப்பினும் நாம் காப்பீடு எடுப்பதன் மூலம், நமது எதிர்பாராத மருத்துவ செலவுகளை குறைக்கலாம்.

 

ராம்குமாருடைய தாய் மற்றும் பிறக்க போகும் குழந்தைக்கான மருத்துவ செலவுகள் பெரும்பான்மையாக அமையும். அதனால் இவருடைய தாய்க்கு மருத்துவ காப்பீடு (Health Insurance) ரூ. 3 லட்சத்திற்கும், ராம்குமார், மனைவி மற்றும் பிறக்கும் குழந்தை மூவருக்கும் சேர்த்து ரூ. 5 லட்சத்திற்கும் கவரேஜ் எடுக்கப்பட்டுள்ளது. ராம் குமார் தனக்கான தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 10 லட்சத்திற்கு பதிவு செய்துள்ளார். மேலும் ராம் குமார் மட்டுமே தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் நபராக இருப்பதால், அவருக்கான டேர்ம் இன்சூரன்ஸ் ரூ. 50 லட்சத்திற்கு (Term Insurance) பாலிசி கவரேஜ் எடுத்துள்ளார்.

 

10 கி.மீ தூரமுள்ள தனது அலுவலகத்திற்கு ராம்குமார் இரு சக்கர வாகனத்தில் செல்கிறார். மாத போக்குவரத்து செலவிற்காக ரூ. 1000 /- ஒதுக்கப்பட்டுள்ளது. உடை மற்றும் பொழுதுபோக்கிற்கு மாதம் ரூ. 1250 ம், இதர செலவுகளுக்கு ரூ. 1500 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர செலவுகளில் கைபேசி – இணைய கட்டணம், கேபிள் டிவி, மின்சாரம் போன்றவையும் உள்ளடக்கம்.

 

ராம்குமாருக்கு பிற வருமானம் எதுவுமில்லை. அவருடைய மாத செலவுகள் மொத்தம் ரூ. 20,500 /- ஆக உள்ளது. இப்போது அவரிடம் உபரியாக ரூ. 4,500 /- உள்ளது. இந்த தொகையை கொண்டு அவரது குடும்பத்தின் எதிர்கால நிதி இலக்குகளை பூர்த்தி செய்யலாம். நிதி இலக்குகள் பொதுவாக குழந்தைக்கான மேற்படிப்பு, திருமணம், ஓய்வு கால நிதி, சுற்றுலா, வீடு வாங்குவது  போன்றவையாக இருக்கலாம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நினைவில் கொள்க:

 

  • ராம்குமார்  தனது மொத்த சம்பளத்தில், பி.எப். காக (Provident Fund) 12 % பங்களிப்பு அளித்து வருகிறார். நிறுவன காப்பீடு மற்றும் பி.எப். பிடித்தம் போக தான் மாதம் ரூ. 25,000 /- ஐ சம்பளமாக பெறுகிறார்.

 

  • ராம்குமாருக்கு தற்சமயம் எந்த கடனும் இல்லை. அதனால் அவர் கடனில்லா நபராக (Debt free) உள்ளார். இதுவரை அவருக்கு சொந்தமாக வீடு இல்லை, ஆனால் தனது பூர்வீகத்தில் சொந்தமான நிலம் உள்ளது.

 

  • தனது குடும்ப உணவிற்கான மளிகை பொருட்களை மாதத்திற்கு ஒரு முறை தேர்முட்டி, கீழ மாரட் வீதிகளில் வாங்குவார். காய்கறி மற்றும் பழ வகைகளை அருகில் இருக்கும் சந்தையில் வாரத்திற்கு ஒரு முறை தனது மனைவி வாங்கி வருகிறார்.
  • அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் மட்டுமில்லாமல், சில சமயங்களில் பொது போக்குவரத்தையும் (Bus, Share Auto) ராம்குமார் பயன்படுத்தி கொள்வார்.
  • தனக்கும், தனது குடும்பத்திற்கு தேவையான துணிமணிகளை பண்டிகை மற்றும் சலுகை காலங்களில் மொத்தமாக வாங்கும் பழக்கமுண்டு.
  • ராம்குமாரின் மனைவி எம்.எஸ்சி (M.Sc) வரை  படித்திருந்தாலும் தனது மாமியார் மற்றும் வருங்கால மழலைச்செல்வத்திற்காக வேலைக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் தனது படிப்பை கொண்டு, குடும்பத்திற்கான  கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கு (Additional / Secondary Income) திட்டமிட்டு வருகிறார்.
  • ராம்குமாரும் தனது  மாத உபரி தொகையை கொண்டு நிதி இலக்குகளை நிர்ணயித்துள்ளார். இரண்டாம் வருமானத்திற்கும் (Passive Income) வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார்.
  • அட்டவணையில் சொல்லப்பட்ட எண்கள் (Expenses) அனைத்தும் தற்போதைய விலைவாசியை கொண்டு கணக்கிடப்பட்டவை.

 

கடனில்லாமல் இருப்பதும் சுகமே…

கடனிருந்து அதனை குறைப்பதும், பெருஞ்சுகமே…

 

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018

5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018

5 Large Cap Funds to Invest in 2018

 

இன்றையளவில் பணவீக்கத்தை தாண்டிய  வருமானம் ஈட்டுதலும், பணத்தை பெருக்குவதிலும் பங்குச்சந்தை முக்கிய பங்காற்றுகிறது. தங்கம், நிலம், வங்கி முதலீடுகளை  காட்டிலும் நல்லதொரு வருமானத்தை நீண்ட கால நோக்கில் பங்குச்சந்தையே தந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் நம்மில் பலருக்கு பங்குச்சந்தை பற்றிய அச்சம் (Risk) பொதுவாக இருப்பதுண்டு.

 

பங்குச்சந்தை இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்ய…

 

https://varthagamadurai.com/share-market-course-registration/

 

 

பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்யாமல், அதே நேரத்தில் பங்குச்சந்தையின் பலனை அடைய விளைந்தது தான் பரஸ்பர நிதி (Mutual Funds) திட்டங்கள். இன்று பெரும்பாலானோர் மியூச்சுவல் பண்டில் எதற்காக முதலீடு செய்கிறோம் என்று அறியாமல் பல பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது.

 

ஒருவரின் நிதி இலக்கை (Financial Goal) சார்ந்து பரஸ்பர நிதி முதலீடுகள் இருக்கும் பட்சத்தில் அவர் தனது இலக்கினை எளிமையாக அடையலாம். பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்கள் பல வகைகள் உள்ளன. முதலீட்டாளர் தனது ரிஸ்க் தன்மை பொருத்து பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.

 

இங்கே நாம் அதனை போன்று, பெருமூலதன பரஸ்பர நிதி திட்டங்கள் (Large Cap Funds) சிலவற்றை தேர்ந்தெடுத்து உங்களுக்காக கொடுத்துள்ளோம். இந்த திட்டங்கள் கடந்த 5-10 வருட காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை கொடுத்துள்ளன.

 

அவைகளில் சில (5 Best Large Cap Funds),

 

  • Axis Blue Chip Fund
  • ICICI Pru Blue Chip Fund
  • Reliance Large Cap Fund – Retail Plan
  • Aditya Birla Sun life Frontline Equity Fund (ABSL)
  • HDFC Top 100 Fund

 

 

5 Best Large Cap Funds 2018

 

 

அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகள் CRISIL நிறுவனத்தினுடையது (Crisil Rating). கொடுக்கப்பட்டுள்ள ஐந்து திட்டங்களுக்கும் நுழைவு கட்டணம் (No Entry Load) எதுவுமில்லை. வெளியேறும் கட்டணம் (Exit Load) திட்டங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும், ஆனால் பொதுவாக ஒரு சதவீதத்தில் இருக்கும்.

 

ஒவ்வொரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும் செலவு விகிதம் (Expense Ratio) மாறுபடும். அதே நேரத்தில் மொத்த செலவு விகிதம் (TER – Total Expense Ratio) செபி விதிமுறை படி, 2.5 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

இந்த 5 பெருமூலதன பரஸ்பர நிதி திட்டங்களும் 500 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை (AUM) நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டங்கள் கடந்த 8-10 வருட காலமாக செயல்பட்டு வருகின்றன.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குறைந்த பட்ச முதலீடு:

 

ICICI Pru Blue Chip Fund ல் குறைந்த பட்ச முதலீட்டு தொகை ரூ. 100/- ஆகவும், ஆதித்யா பிர்லா (Aditya Birla Sun life Frontline Equity) திட்டத்தில் ரூ. 1000/- ஆகவும் உள்ளது. Reliance Large Cap, HDFC Top 100 மற்றும் Axis Blue Chip திட்டங்களில் குறைந்த முதலீடாக ரூ. 5000/- ஐ மேற்கொள்ளலாம்.  இந்த திட்டங்கள் பெரும்பாலும் வங்கிகள், நிதி சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் வாகன துறையில் முதலீடு செய்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி  

Change and Disclosure of Total Expense Ratio to Mutual Investors – SEBI

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது நிதி திட்டங்களை நிர்வகிக்க வருடாந்திர கட்டணமாக, முதலீட்டாளரிடம் ஒரு தொகையை வசூலிக்கும். இதனை செலவின விகிதம் (Expense Ratio) என்பர். பரஸ்பர நிதியில் ஒரு முதலீட்டாளருடைய மொத்த செலவு விகிதம் TER (Total Expense Ratio) எனப்படும்.

 

மொத்த செலவு விகிதம் என்பது ஒரு முதலீட்டாளர்(Mutual Fund Investor) நிதியை வாங்கும் போது, விற்கும் போது மற்றும் தணிக்கை செலவுகள், மற்ற இதர செலவுகளை உட்படுத்தும். இதனை ஒரு வருடத்தின் மொத்த செலவுகளை அந்த வருடத்திற்குரிய சராசரி மொத்த வருவாயில் வகுத்தால் கிடைக்கும் விகிதமாகும்.

 

கடந்த மாதம், செபி அமைப்பு(SEBI) பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு(Mutual Fund Companies) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முதலீட்டாளருக்கு விதிக்கப்படும் மொத்த செலவு விகிதத்தை (TER) பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளருக்கு அவ்வப்போது குறுஞ்செய்தி(SMS) அல்லது மின்னஞ்சல் (Email) மூலமோ தெரிவிக்க வேண்டுமென அறிவித்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது இணைய தளத்திலும் இது சம்மந்தமான தகவல்களை பகிர வேண்டும் எனவும், TER விகிதத்தில் மாற்றம் ஏதேனும் இருந்தாலும் அதனை உடனடியாக, அதாவது கட்டணம் விதிக்கப்படும் மூன்று வேலை நாட்களுக்கு முன்னரே (At least three working days prior to effecting such change)  முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

 

மார்ச் 31, 2018 க்கு பின்னர் அறிவிக்கப்படும் எந்த ஒரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும், அதற்கு முன்னர் இருந்த திட்டத்திற்கும் TER விகிதத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் என செபி தனது குறிப்பில் வெளியிட்டுள்ளது.

 

SEBI (Mutual Funds) Regulations, 1996 ன் படி, ஒவ்வொரு பரஸ்பர நிதியை நிர்வகிக்க (Sales & Advertising, Administrative Expenses, Transaction Cost, Management Fees, Custodian and Audit Fees) முதலீட்டாளரிடம் இருந்து ஒரு கட்டணம் பெறப்படும். ரூ. 100 கோடி வரையிலான வாராந்திர சராசரி நிகர சொத்துக்களை(Net Assets)  நிர்வகிக்கப்படும் சமபங்கு திட்டங்களுக்கு (Equity Schemes) மொத்த செலவு விகிதம் 2.5 % ஆகவும், அடுத்த 300 கோடிக்கு 2.25 % ஆகவும், அடுத்தடுத்த 300 கோடிக்கு 2 % ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு மேல் எந்த ஒரு பரஸ்பர நிதி நிறுவனமும் கட்டணங்களை விதிக்க கூடாது.

 

கடன் திட்டங்களுக்கு, பங்கு சார்ந்த(Equity) திட்டங்களை விட 0.25 % செலவின விகிதம் குறைவாக உள்ளது.  முதலீட்டாளரை பொறுத்தவரை தங்கள் பரஸ்பர நிதி திட்டத்தின் தேர்ந்தெடுத்தலில் Total Expense Ratio விகிதம் ஒரு முக்கியமானவை. நீண்ட காலத்தில், அதிக TER விகிதம் உள்ள திட்டத்தில் முதலீட்டாளரின் கணிசமான தொகை கட்டணத்திற்கு செல்லும். அதே நேரத்தில் ஒவ்வொரு நிதி திட்டத்தின் செயல்பாடுகளையும் மற்றும் அதன் பலன்களையும் பார்த்து விட்டு தான், ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

(Source:  Total Expense Ratio – Change and Disclosure )

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

How to update Aadhaar online for Mutual Funds ? (Aadhaar Linking)

 

பயோமெட்ரிக் (Biometric) மற்றும் மக்கள் தொகை தரவை அடிப்படையாக கொண்டு 12 இலக்க தனியுரிமை அடையாள எண்ணாக(12 Digit) உருவாக்கப்பட்டுள்ள ஆதார் (Aadhaar) இன்று ஒவ்வொரு தகவல் நடைமுறைக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் உரிமை எண்ணாகவும் உள்ளது. நீங்கள் வங்கி கணக்கு, பான் அட்டை, பங்குச்சந்தை, பரஸ்பர நிதி என ஒவ்வொரு செயல்முறைக்கும் கணக்கு துவங்கும் போது ஆதார் என்பது கட்டாயம்.

 

வங்கிக்கணக்கு, கைபேசி எண்களுக்கான ஆதார் இணைப்பை நாம் பெரும்பாலும் நேரிடையாகவே பதிவு செய்திருப்போம். ஆனால் பெரும்பாலும் நாம் தவற விடுவது மற்றும் மறப்பது நமது பரஸ்பர நிதிக்கான இணைப்பை தான். நாம் பரஸ்பர நிதியில்(Mutual Funds) பொதுவாக மாதாந்திர முதலீடு என்று சொல்லப்படும் SIP (Systematic Investment plan) திட்டத்தை தான் தேர்ந்தெடுத்திருப்போம். இதன் மூலம் நமது வங்கிக்கணக்கில் இருந்து பரஸ்பர நிதிக்கு தானியங்கி சேவையாக பண பரிமாற்றம் நடைபெறும். இதன் காரணமாக நாம் பெரும்பாலும் பரஸ்பர நிதி சார்ந்த குறுஞ்செய்தி, மின்னஞ்சலை பார்க்க தவறி விடுவோம்.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

ஏற்கனவே பணமோசடி தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act -PMLA) Rules 2017 ன் படி பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனத்தை (முதலீடு செய்த நிறுவனம்) அணுகலாம் அல்லது இணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்(Communicate with Nearest branch or update online). இங்கே நாம் ஆன்லைனில் பதிவு செய்வது பற்றி பார்ப்போம்.

 

நினைவில் இருக்கட்டும், பரஸ்பர நிதியுடன் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி –  வரும் மார்ச் மாதம் 31,2018 (31st march, 2018).

 

பொதுவாக பரஸ்பர நிதி சார்ந்த உங்களின் தகவல்கள் பரஸ்பர நிதி வசம் பராமரிக்கப்படாது. அதனை RTA (Registrar and Transfer Agent) போன்ற அமைப்புகள் தான் பராமரித்து தகவல்களை சேமித்து வைக்கும். இணையத்திலும் அது போன்ற அமைப்புகள் தான் உங்களுடைய ஆதார் தகவல்களை பெறுகிறது. RTA ஆக தற்போது CAMS, UTI, Karvy, Franklin பரஸ்பர நிதிக்கு உள்ளன. அவற்றின் இணைய தளத்தில் நாம் நமக்கான ஆதார் தகவலை பதிவு செய்யலாம்.

 

CAMS Online

 

கீழே  கொடுக்கப்பட்ட இணைய  தளத்தில் நீங்கள் உங்களுக்கான  பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைக்கலாம். CAMS அமைப்பு பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனத்துக்கான தகவல்களை பராமரிக்கிறது. ( SBI Mutual Fund, ICICI Prudential, Birla Sunlife, HDFC, DSP blackrock, IDFC, IIFL, PPFAS, Tata mutual fund, Kotak, HSBC, L and T, Shriram, Mahindra)

 

CAMS – Aadhaar Linking

CAMS Aadhaar linking

 

 

CAMS இணைய தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது – உங்கள் பான் எண் (PAN), பரஸ்பர நிதி கணக்கு (Folio Account number), மற்றும் ஆதார் எண்ணை (Aadhaar) உள்ளீடு செய்யவும். உங்களுக்கான சந்தேகங்களையும் நீங்கள் அதே பக்கத்தில் அறியலாம்.

 

FAQ on Aadhaar Linking process – CAMS

 

Karvy Computershare:

 

கார்வி நிறுவனமும் பரஸ்பர நிதிக்கான தகவல்களை பராமரிக்கிறது. கார்வி நிறுவனம் கையாளும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் – Axis mutual fund, UTI, Canara robeco, Mirae asset, Motilal oswal, Reliance, Quantum, BOI Axa, Invesco, DHFL மற்றும் இன்னும் பிற நிறுவனங்கள். அதற்கான பதிவை செய்ய கீழ்கண்ட இணைய தளத்தை பாருங்கள்.

 

Karvy – Link your Aadhaar with mutual fund

 

Karvy Aadhaar linking

 

மேலே நாம் சொன்ன இரு தளத்திலும் உங்கள் பரஸ்பர நிதிக்கான ஆதாரை பதிவு செய்வதுடன், உங்கள் நடப்பு நிலையையும் (Aadhaar linking status for mutual fund) அதே தளத்தில் அறிந்து கொள்ளும் வசதி உண்டு. நாம் சொன்ன இரு தளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள் அல்லது உங்கள் பரஸ்பர நிதிக்கான நிறுவன பெயர் இல்லையென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பதிவின் போது உங்களுக்கான OTP கைபேசியில் வரலாம். அதனால், பரஸ்பர நிதியில் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியம்.

 

ஆதார் இணைப்பு – பரஸ்பர நிதி சம்மந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு, வர்த்தக மதுரைக்கு நீங்கள் மின்னஞ்சல் (contact at varthagamadurai.com) அனுப்பலாம்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி,  வர்த்தக மதுரை.

 

www.varthagamadurai.com

 

  

 

இளம் தொழில்முனைவோராக கற்று கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்

இளம்  தொழில்முனைவோராக கற்று  கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்

10 Smart Ideas to learn as Young Entrepreneurs

நேற்று (25.02.2018)  மதுரை  மடீட்சியா அரங்கில், Youngs Indians (YI) – Confederation of Indian Industry(CII)  மற்றும்  Native Lead Foundation சார்பாக ஆரம்பம் (Aarambam – Startup Contest) 4 வது பதிப்பு (4th Edition) நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியில் Native Lead Foundation நிறுவனர்  திரு. சிவராஜா  ராமநாதன் (Sivarajah Ramanathan), Thyrocare Technologies நிறுவனத்தின் நிர்வாக  இயக்குனர்  மற்றும்  நிறுவனர்  Dr. வேலுமணி (Dr. Velumani) அவர்கள், மற்றும்  YI – CII சார்பானவர்களும்  கலந்து  கொண்டனர்.

 

புதிய  தொழில்முனைவோருக்கான  தேடலும், அவர்களுக்கான  முதலீட்டு  வாய்ப்புகள்  பற்றி  பேசப்பட்டது. புதிய  சிந்தனைகள்  கொண்ட இளம்  தலைமுறையினர்  எவ்வாறு  அவற்றை  தொழிலாகவும், சமுதாயத்திற்கு  பயன்படும்படியும்  மாற்றுவதற்கான  ஆலோசனைகள்  கூறப்பட்டன.

 

இளம் தொழில்முனைவோராக  கடைபிடிக்க மற்றும்  கற்று  கொள்ள  வேண்டிய  அடிப்படை  சிந்தனைகள்  பற்றி  Thyrocare நிறுவனத்தின்  நிறுவனர்  டாக்டர்  வேலுமணி அவர்கள்  பேசும்  போது ,

( Read this post after the advertisement… )

 

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

  • ஒரு தொழிலை ஆரம்பிக்கும் போது, அதனை பூஜ்யத்திலிருந்து தொடங்குங்கள் (Start from Zero). தொழிலை பற்றிய அறிவு, தொழிலில் ஈடுபட்டால் மட்டுமே கிடைக்கும்.

 

  • எப்போதும் எளிமையாக (Be Frugality)  இருக்க பழகுங்கள். அது தான் உங்களை ஒரு சிறந்த தொழில்முனைவோராக காட்டும்.

 

  • ரிஸ்க் (Risk – Reward) எடுக்க தயாராகுங்கள்; உங்கள் திடமான ரிஸ்க் உங்களுக்கு தித்திப்பான பலனை கொடுக்கும்.

 

  • விவாதம், ஆலோசனை மற்றும் முடிவெடுத்தல் (Discuss vs Decision Making) என வரும்பொழுது, எப்போதும் முடிவெடுக்க முயலுங்கள். விவாதம் ஒரு நல்ல முடிவை தராது. முடிவெடுங்கள், அந்த முடிவை நல்ல பயனாக மாற்றுங்கள் (No one decision is better).

 

  • தொழிலில் தவறு (Mistakes) என்பது ஒரு பெரிய குற்றமில்லை. தவறு செய்தால் தான் நீங்கள் தொழிலை சரியாக அணுகுகிறீர்கள் என அர்த்தம். தவறு செய்தால் மட்டுமே நீங்கள் தொழிலில் வெற்றியடைய முடியும்.

 

  • சொந்த ஊரில் தொழில் செய்வதை விட, தொழில் வாய்ப்பு அதிகமுள்ள சூழ்நிலையை தேர்வு செய்யுங்கள் . வீட்டை விட்டு வெளியே வர உங்கள் மனதுக்கு சொல்லுங்கள். மிகப்பெரிய வெற்றியடைய நீங்கள் மாற்றத்திற்கும் தயாராக வேண்டும் (Be out of Comfort Zone).

 

  • உங்கள் தொழில் மற்றும் சிந்தனைகளுக்கேற்ற நண்பர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் பால்ய நண்பர்கள் என்பதற்காக நீங்கள் எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை( Choose Good contacts and friends).

 

  • உங்கள் நேரத்தை வீணடிக்கும் நபர்களிடமிருந்து விலகி செல்லுங்கள் (Avoid not related to you).

 

  • நீங்கள் ஆரம்பிக்கும்  தொழிலில் ஏழை மற்றும் அனுபவம் ஏதும்  இல்லாதவருக்கு  வாய்ப்பு  கொடுங்கள். அவர்களால் தான்  உங்களுக்காக  உண்மையாக  உழைக்க முடியும் (Employment for Poor and Freshers). நீங்கள்  ஒரு தொழிலில்  வெற்றி வேண்டுமென  நினைத்தால், ஒரு முதலாளியிடம் எந்த  சம்பளமும் வாங்காமல், கற்றலுக்கு  மட்டுமே  முக்கியத்துவம்  கொடுங்கள். அது  உங்களை  பெரும் முதலாளியாக்கும்(Learn to earn).

 

  • ஏற்கனவே  இருக்கும்  வேலையை விட்டு  விட்டு நீங்கள்  தொழில் செய்ய விரும்பினால், தொழிலுக்கு  தேவையான முதலீட்டை முன்னரே  சேமியுங்கள் (Create Emergency fund).

 

  • தொழில் ஆரம்பத்தில்  கடன்  எதுவும்  அதிகம் பெற  வேண்டாம். ஏற்கனவே  உங்களுக்கு  கடன்  இருந்தால், அதனை அடைத்து  விட்டு தொழில் தொடங்குவது  நல்லது (No Debt – No EMI).

 

இரண்டாம் தொழில்முனைவோர்களுக்கு (Second Generation Entrepreneurs) பெற்றோர் கற்று கொடுக்க  வேண்டியது…

 

  • உங்கள்  பிள்ளைகளுக்கு  எளிமையாக  வாழ (Frugality)  கற்று  கொடுங்கள். ஆடம்பரம்  வேண்டாம்.

 

  • ரிஸ்க் எடுக்க சொல்லி  கொடுங்கள். தவறுகளிலிருந்து பாடம்  கற்று கொடுங்கள்(Risk taking ability).

 

  • அவர்களுக்கு  உங்களின் தொழில் ஆலோசனை எதுவும்  தேவையில்லை (Don’t advise). உங்கள்  பிள்ளைகளை அவர்களாகவே  சிந்திக்க  கூறுங்கள்.

 

  • பிள்ளைகளுக்கு  சேமிப்பதின் அவசியத்தை சொல்லுங்கள் (Ask them to save).

 

  • உறவினர்கள் என்ன  நினைப்பார்கள்  என்ற  கவலை  வேண்டாம்(Avoid Neighborhoods words). உங்கள் குழந்தைகளை வெளி உலகுக்கு செல்ல அனுமதியுங்கள். வாய்ப்புகள் வெளியே  காத்திருக்கிறது (Don’t being Homesick).

 

மேலும் டாக்டர் வேலுமணி கூறும் போது, “ பொதுவாக ஏழையாக பிறந்தவர்கள் தான் பின்னாளில் பணக்காரராக மாறுகிறார்; ஒரு பணக்காரர் தான் பின்னாளில் ஏழையாக உள்ளார். இரவும், பகலும் போல இதுவும் நடக்கும். அதனால் ஏழையாக உள்ளோருக்கு வாய்ப்புகள் எப்போதும் காத்திருக்கிறது. விடா முயற்சியே வெற்றியின் கல்” எனவும் கூறினார்.

 

“ If you are born as poor, you have a 100 % chance of being  Rich “

 

தொழில் செய்வதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. ஆனால் நாம் நம் தொழில் சார்ந்த நபர்களுடன் தோழமை கொள்கிறோமா என்பதே இங்கு வெற்றிக்கான விடை. நாம் மேலே சொன்ன பத்து சிந்தனைகளை உங்கள் வாழ்விலும் பொருத்தி பாருங்கள். உங்கள் தொழிலிலும் வெற்றி நிச்சயம்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com