Tag Archives: sebi

செப்டம்பர் மாதம் முதல் அமலில் வரக்கூடிய பங்குச்சந்தை ஒழுங்குமுறை மாற்றங்கள் – 2020

செப்டம்பர் மாதம் முதல் அமலில் வரக்கூடிய பங்குச்சந்தை ஒழுங்குமுறை மாற்றங்கள் – 2020

Stock Market Regulatory Changes effective from September 2020

நடப்பாண்டின் மார்ச் மாத வீழ்ச்சிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) சுமார் 13,000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றமடைந்துள்ளது. அதாவது சரிவிலிருந்து தற்போது வரை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், ஜனவரி 1 முதல் கணக்கிடும் போது, சென்செக்ஸ் 5 சதவீத இறக்கத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்த இரண்டு வருட காலத்தில் சென்செக்ஸ் 1.5 சதவீத ஏற்றம் மட்டுமே அடைந்துள்ளது. இருப்பினும் மூன்று வருட காலத்தில் 24 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது இந்த குறியீடு. பங்குச்சந்தை ஏற்ற-இறக்கம் இருந்து கொண்டிருந்தாலும், நாட்டில் ஏற்படும் பொருளாதார நிலை மாற்றங்கள், பங்குச்சந்தை அமைப்பு ஒழுங்குமுறையிலும் சில மாற்றங்களை கொண்டு வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் பங்குச்சந்தையில் சில ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலில் வர உள்ளது. அவற்றில் சில முக்கிய தகவல்களை இங்கு  காண்போம்.

பங்குச்சந்தையில் எந்த பங்கு பரிவர்த்தனையும் செய்யாதவரா நீங்கள் ?

  • பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக 12 மாதங்கள், பங்குகள் சார்ந்த எந்த பரிமாற்றத்தையும் செய்யாமல் இருக்கும் நிலையில், உங்கள் வர்த்தக கணக்கு செயலற்ற கணக்காக(Inactive) அறிவிக்கப்படும். இந்த நடைமுறை கடந்த மாதம் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • செயலற்ற கணக்கை(Dormant) மீண்டும் புதுப்பிக்க மறு கே.ஐ.சி.(Re-KYC) செய்வது அவசியமாகும். இதற்கு நீங்கள் கணக்கை துவங்கும் போது என்னென்ன ஆவணங்களை கொடுத்தீர்களா, அதே போல மீண்டும் ஒரு முறை சமர்ப்பிப்பது அவசியமாகும். வீட்டு முகவரி மாறியிருந்தால் அதற்கான தகுந்த ஆவணங்களை அளிக்க வேண்டும்.
  • பொதுவாக இந்த நடைமுறைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும், இது கால விரயம் ஏற்படுத்தும் செயலாக சொல்லப்படுகிறது.

இனி இங்கும் விளிம்பு பற்றாக்குறை அபராதம் உண்டு:

  • இதுவரை பணச்சந்தையில்(Cash Market) தரகு நிறுவனங்கள் அறிவிக்கும்  பண அளவு இருந்தாலே, நாள் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி(based on upfront margin) கொள்ளலாம். பங்குச்சந்தைக்கு தேவையான மீதி தொகையை தரகு நிறுவனங்கள் செலுத்தி விடும். பின்பு நாள் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் செலுத்த வேண்டிய பணத்தை பெற்று கொள்ளும் (பொதுவாக மூன்று நாட்களுக்குள்).
  • எனவே இனி பணச்சந்தையில் முழுத்தொகையும் இல்லாமல் மார்ஜின் அளவில் வர்த்தகம் புரிய முடியாது. ரொக்கமாக பணத்தை செலுத்தி விட்டு தான் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும். அதே போல, அன்றைய தினத்தில் விற்ற பங்குகளின் தொகையை கொண்டு புதிய பங்கு பரிவர்த்தனையை மேற்கொள்ள இயலாது. புதிய பரிவர்த்தனைக்கு தேவையான தொகையை சந்தைக்கு முன்னரே செலுத்த வேண்டும்.
  • இருப்பினும், ஏற்கனவே பங்குகளை டீமேட் கணக்கில் வைத்திருப்பவர்கள் அதனை அடமானமாக கணக்கில் கொண்டு, மார்ஜின் அளவுகளை பெறலாம். இதற்கு சந்தை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய உறுதிமொழி இணைப்பை(New Margin Pledge Mechanism) பயன்படுத்த வேண்டும். அடமானத்தை உறுதி செய்த பின்னர், மார்ஜின் அளவு நிர்ணயிக்கப்படும்.
  • புதிய அடமான திட்டத்தால் மார்ஜின் வழங்கப்பட்டாலும்,பின் சொல்லப்பட்ட நாளில் பணத்தை முழுவதுமாக செலுத்தாத நிலையில் பற்றாக்குறை அபராதம் உண்டு.
  • குறைந்த அளவில் வர்த்தகமாகும் பங்குகள் (illiquid Securities) மற்றும் அதிக ஏற்ற-இறக்கங்களை காணும் பங்குகளுக்கு (100 % VAR) மார்ஜின் அளவு அளிக்கப்படாது.

மார்ஜின் பற்றாக்குறை அபராதம்(Margin Shortage Penalty) எவ்வளவு ?

  • பற்றாக்குறை தொகை ரூ.1 லட்சம் மற்றும் சொல்லப்பட்ட மார்ஜின் அளவு 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் நிலையில், 0.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
  • பற்றாக்குறை தொகை ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக மற்றும் மார்ஜின் அளவும் 10 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
  • மார்ஜின் பற்றாக்குறை(Margin Shortfall) மூன்று நாட்களுக்கு மேலாக செல்லும் போது, நான்காவது நாளிலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். இதுவே ஒரு மாதத்தில் ஐந்து நாட்களுக்கு மேலாக (தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும்) மார்ஜின் பற்றாக்குறை இருக்கும் போதும் 5 சதவீத அபராதம் செலுத்த வேண்டும்.

சொல்லப்பட்ட ஒழுங்குமுறை மாற்றங்களில் சில விதிமுறைகள் நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க: சில பங்குகளுக்கு 20 சதவீத தொகை ரொக்கமாக இருந்தாலே, மார்ஜின் அளவு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. மார்ஜின் அளவு மற்றும் அபராதம் சார்ந்த தகவல்களை உங்களது தரகு நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நன்று. தரகு நிறுவனங்கள் சார்ந்து செபியிடம்(SEBI) பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

செபியின் புதிய கட்டுப்பாடுகள்: பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் பெறுமா ?

செபியின் புதிய கட்டுப்பாடுகள்: பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் பெறுமா ?

SEBI’s New Restrictions – will the Indian Stock Market rebound ?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று (20-03-2020) இந்திய பங்குச்சந்தை குறியீட்டில் நிப்டி(Nifty50) 482 புள்ளிகளும், சென்செக்ஸ்(Sensex) 1628 புள்ளிகளும் ஏற்றம் பெற்றது. இரண்டு சந்தைகளும் 5 சதவீதத்திற்கு மேல் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த ஒரு மாதத்தில் 8 பில்லியன் டாலர்கள் அளவில் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டு நாட்களுக்கு முன்பு 2.76 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்துள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 3.37 லட்சத்தை தாண்டி விட்டது. இறப்பு விகிதம் மூன்று நாட்களில் 10 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க சந்தையில் அரசு மற்றும் மத்திய வங்கியின் சார்பில் நாட்டின் பொருளாதார சரிவை தவிர்க்க பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தற்போது பலனளிக்கவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) அறிக்கையின் படி, இந்தியாவில் இதுவரை 17,237 பேருக்கு மட்டுமே கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் சார்பில் சொல்லப்பட்ட அறிக்கையில் இதுவரை விமான நிலையத்தில் 15.17 லட்சம் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை சரிவை தடுக்க செபி(SEBI) கடந்த சில நாட்களாக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிக ஏற்ற – இறக்கம் கொண்ட மற்றும் வலுவில்லாத சில பங்குகளில் மார்ஜின் அளவை குறைத்துள்ளது. அதே வேளையில் சில பங்குகளில் தினசரி வர்த்தகம் மற்றும் ஊக வணிகத்தை தடை செய்துள்ளது. மீறி வர்த்தகம் புரிபவர்களுக்கு அபராத கட்டணம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இருப்பினும், பங்குகளை டெலிவரி முறையில் வாங்குபவர்களுக்கு மார்ஜின் அளவை அதிகரித்து சொல்லியுள்ளது செபி. சந்தை அளவிலான வரம்பிலும்(Free Floating) ஒரு குறிப்பிட்ட பங்கின் சந்தை மூலதனத்தில் 10 சதவீதமாக குறைத்துள்ளது. இது முன்னர் 20 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சந்தை மூலதன வரம்பில் ஒவ்வொரு நாளின் வர்த்தக முடிவிலும் 10 சதவீத அளவில் அதிகரித்து சொல்லப்படும் என செபி தெரிவித்துள்ளது.

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அடுத்த சில காலங்களுக்கு நீடிக்கும் என்பதால், இந்திய சந்தையும் அதனை பின்பற்றியே செயல்படும். எனவே தற்போதைய நிலையில் சந்தையில் பங்குகளை வர்த்தகம் புரிவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. மேலும் இது சந்தை நகர்வுக்கு சாதகமாக இருக்காது. குறுகிய காலத்தில் சந்தை சில நாட்கள் ஏற்றம் பெற்றாலும், அடுத்த சில மாதங்களுக்கு கொரோனா வைரஸ் மற்றும் வணிக இணைப்பு பாதிப்பு ஆகியவை சந்தையை மந்தநிலையில் தான் வைத்திருக்கும். நீண்ட கால முதலீட்டாளர்கள் தற்போதைய சந்தையில் கொக்கு போல ஒற்றை காலில் நின்று சரியான மீன்களை (பங்குகள்) பிடிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி

பரஸ்பர நிதிக்கான மொத்த செலவு விகித மாற்றத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் – செபி  

Change and Disclosure of Total Expense Ratio to Mutual Investors – SEBI

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது நிதி திட்டங்களை நிர்வகிக்க வருடாந்திர கட்டணமாக, முதலீட்டாளரிடம் ஒரு தொகையை வசூலிக்கும். இதனை செலவின விகிதம் (Expense Ratio) என்பர். பரஸ்பர நிதியில் ஒரு முதலீட்டாளருடைய மொத்த செலவு விகிதம் TER (Total Expense Ratio) எனப்படும்.

 

மொத்த செலவு விகிதம் என்பது ஒரு முதலீட்டாளர்(Mutual Fund Investor) நிதியை வாங்கும் போது, விற்கும் போது மற்றும் தணிக்கை செலவுகள், மற்ற இதர செலவுகளை உட்படுத்தும். இதனை ஒரு வருடத்தின் மொத்த செலவுகளை அந்த வருடத்திற்குரிய சராசரி மொத்த வருவாயில் வகுத்தால் கிடைக்கும் விகிதமாகும்.

 

கடந்த மாதம், செபி அமைப்பு(SEBI) பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு(Mutual Fund Companies) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. முதலீட்டாளருக்கு விதிக்கப்படும் மொத்த செலவு விகிதத்தை (TER) பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளருக்கு அவ்வப்போது குறுஞ்செய்தி(SMS) அல்லது மின்னஞ்சல் (Email) மூலமோ தெரிவிக்க வேண்டுமென அறிவித்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பரஸ்பர நிதி நிறுவனங்கள் தனது இணைய தளத்திலும் இது சம்மந்தமான தகவல்களை பகிர வேண்டும் எனவும், TER விகிதத்தில் மாற்றம் ஏதேனும் இருந்தாலும் அதனை உடனடியாக, அதாவது கட்டணம் விதிக்கப்படும் மூன்று வேலை நாட்களுக்கு முன்னரே (At least three working days prior to effecting such change)  முதலீட்டாளருக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

 

மார்ச் 31, 2018 க்கு பின்னர் அறிவிக்கப்படும் எந்த ஒரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும், அதற்கு முன்னர் இருந்த திட்டத்திற்கும் TER விகிதத்தை முதலீட்டாளருக்கு தெரிவிப்பது அவசியம் என செபி தனது குறிப்பில் வெளியிட்டுள்ளது.

 

SEBI (Mutual Funds) Regulations, 1996 ன் படி, ஒவ்வொரு பரஸ்பர நிதியை நிர்வகிக்க (Sales & Advertising, Administrative Expenses, Transaction Cost, Management Fees, Custodian and Audit Fees) முதலீட்டாளரிடம் இருந்து ஒரு கட்டணம் பெறப்படும். ரூ. 100 கோடி வரையிலான வாராந்திர சராசரி நிகர சொத்துக்களை(Net Assets)  நிர்வகிக்கப்படும் சமபங்கு திட்டங்களுக்கு (Equity Schemes) மொத்த செலவு விகிதம் 2.5 % ஆகவும், அடுத்த 300 கோடிக்கு 2.25 % ஆகவும், அடுத்தடுத்த 300 கோடிக்கு 2 % ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு மேல் எந்த ஒரு பரஸ்பர நிதி நிறுவனமும் கட்டணங்களை விதிக்க கூடாது.

 

கடன் திட்டங்களுக்கு, பங்கு சார்ந்த(Equity) திட்டங்களை விட 0.25 % செலவின விகிதம் குறைவாக உள்ளது.  முதலீட்டாளரை பொறுத்தவரை தங்கள் பரஸ்பர நிதி திட்டத்தின் தேர்ந்தெடுத்தலில் Total Expense Ratio விகிதம் ஒரு முக்கியமானவை. நீண்ட காலத்தில், அதிக TER விகிதம் உள்ள திட்டத்தில் முதலீட்டாளரின் கணிசமான தொகை கட்டணத்திற்கு செல்லும். அதே நேரத்தில் ஒவ்வொரு நிதி திட்டத்தின் செயல்பாடுகளையும் மற்றும் அதன் பலன்களையும் பார்த்து விட்டு தான், ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

(Source:  Total Expense Ratio – Change and Disclosure )

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com