வரும் திங்கள் முதல் இந்த 9 நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்படுகின்றன

வரும் திங்கள் முதல் இந்த 9 நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலிருந்து  நீக்கப்படுகின்றன

These 9 Stocks are to be delisted from Monday – BSE India

 

சில மாதங்களுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை பட்டியலில் இருந்து, விதிமீறல் காரணமாக பல்வேறு நிறுவன பங்குகள் நீக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இப்போது பின்வரும் ஒன்பது நிறுவன பங்குகளும் வரும் திங்கள் கிழமை (05-11-2018) முதல் மும்பை பங்குச்சந்தையிலிருந்து (Bombay Stock Exchange – BSE) நீக்கப்படவுள்ளன.

 

அணில் லிமிடெட் (Anil Ltd), பிரேக்ஸ் ஆட்டோ (Brakes Auto India), இண்டஸ் பிளா (Indus Fila), ஐ.கியூ.இன்போடெக் (IQ Infotech), லோக் ஹவுசிங் (Lok Housing), மெட்ரோபோலி ஓவர்சீஸ் (Metropoli Overseas), பிதாம்பூர் ஸ்டீல் (Pithampur Steels), பிரகாஷ் சால்வெண்ட் (Prakash Solvent Extractions) மற்றும் சிபார் மென்பொருள் சேவை (Sibar Software Services) நிறுவனம் ஆகிய 9 நிறுவன பங்குகள் வரும் திங்கள் முதல் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்த நிறுவனங்களின் சந்தை செயல்பாடு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் மும்பை பங்குச்சந்தை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பங்குகள் ஏற்கனவே கடந்த 6 மாத காலமாக மும்பை சந்தையில் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்பது நிறுவனங்களின் இயக்குனர்கள், நிறுவனர்கள், மற்றும் அதனை சார்ந்த குழு நிறுவனங்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சந்தையில் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒன்பது நிறுவனங்களின் நிறுவனர்கள் சந்தையில் உள்ள பொது பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும், அதற்கான பங்கு விலை மதிப்பை வெளியிடுமாறும் மும்பை பங்குச்சந்தை அறிவுறுத்தியுள்ளது.

 

தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இனி சந்தையில் வர்த்தகமாகாது எனவும், பங்குகளை கொண்ட பங்குதாரர்கள் நிறுவனர்களிடம் ஒப்படைப்பதற்கான செயல்பாட்டை செய்யுமாறும் செபி சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் பங்குச்சந்தையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் பங்குகள் நீக்கப்பட்டுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

Mostly outflows of FII and the rise in Domestic Investments – Trading Activity for October 2018

கடந்த மாதம் (October 2018) முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியது இந்திய பங்குச்சந்தை. நமது நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஏற்ற-இறக்கம் அதிகமாக காணப்பட்டது. நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை மாற்றம், வங்கிகளின் செயல்பாடு போன்ற்வற்றால் பங்குச்சந்தை முதலீடு வெகுவாக பாதிக்கப்பட்டது.

 

அக்டோபர் மாதத்தில் மட்டும் நடந்த 21 வர்த்தக நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரும்பாலும் விற்பனையை மட்டும் கையாண்டிருந்தனர். அந்த மாதத்தின் மொத்த விற்பனையாக ரூ. 1,40,238 கோடியும், நிகர விற்பனையாக ரூ. 29,200 கோடியும் அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகமாக அமைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் மாத மொத்த கொள்முதல் ரூ.111,037 கோடியாகவும், மொத்த விற்பனை ரூ.1,40,238 கோடியாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.

 

இருப்பினும், உள்நாட்டு முதலீடு நல்ல ஏற்றம் பெற்றது. கடந்த மாதத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (Domestic Institutional Investors -DII) மொத்த கொள்முதலாக ரூ. 1,00,992 கோடியையும், மொத்த விற்பனையாக ரூ. 74, 958 கோடியையும் கொண்டிருந்தனர். அவர்களின் அக்டோபர் மாத நிகர கொள்முதல் ரூ. 26,033 கோடியாக முடிவடைந்தது.

 

அன்னிய நாட்டு முதலீட்டாளர்களை பொறுத்தவரை அக்டோபர் 15 மற்றும் 17 ம் தேதிகளில் மட்டும் நிகர கொள்முதலை பெற்றிருந்தனர். மற்ற நாட்கள் அனைத்தும் விற்பனையை மட்டுமே மேற்கொண்டிருந்தனர். அதே சமயத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் விற்பனையையும், மற்ற வர்த்தக நாட்களில் நிகர கொள்முதலையும் வர்த்தகமாக்கினர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தினை பார்க்கும் பொழுது, வெளிநாட்டு முதலீடு நிகர விற்பனையாக ரூ.9,468 கோடியாகவும், உள்நாட்டு முதலீடு நிகர கொள்முதலாக ரூ. 12,500 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதத்தில் 200 சதவீத விற்பனையையும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 108 சதவீத கொள்முதலையும் கொண்டிருந்தனர்.

 

உள்நாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் நிகர கொள்முதல் கடந்த பத்து வருடத்தில் இல்லாத அளவாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 2017 மாதத்தில் இருந்த ரூ. 21,025 கோடி நிகர கொள்முதல்  தான் அதிக அளவாக சொல்லப்பட்டது.  கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(Sensex) குறியீடு 2000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty50) 600 புள்ளிகளும் நிகரமாக இறங்கியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

Contradiction between the RBI and Central Government

 

மத்திய ரிசர்வ் வங்கிக்கும் (Reserve Bank of India), மத்திய அரசுக்குமான கொள்கைகள் எப்போதும் வேறுபட்டு கொண்டே உள்ளன. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும், அதற்கு பின்னரும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் அரசின் நிதி அமைச்சருக்கு இடையான இடைவெளி எப்போதும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

 

இந்நிலையில் இதன் தாக்கம் தற்போது சற்று அதிகமாக தான் உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கம், அன்னிய செலவாணி மற்றும் அதனை சார்ந்த நிதி முடிவுகளில் எப்போதும் கண்டிப்பான நடவடிக்கையை பின்பற்றும். அதே சமயத்தில் ஆட்சியில் அமரும் மத்திய அரசு, தனது சூழ்நிலைக்கேற்ற முடிவுகள் மற்றும் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும். இதனால் இருவருக்குமான இடைவெளி முரண்பாட்டில் தான் முடிவடைகிறது.

 

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜன் (Ex. Governor Raguram Rajan) இருக்கும் போதும், இது போன்ற முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையை மத்திய அரசு ஆதரித்து கொண்டிருந்த போது, பாரத ரிசர்வ் வங்கி அதன் மேல் அவ்வளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அதே போன்று, மத்திய அரசு வட்டி விகிதத்தை குறைக்க (Reducing Interest Rates) முயலும் போது, ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பதையும் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் சரிவிலும் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மீதான வாராக்கடன் பிரச்சனையில் (Bad Debt) பாரத ரிசர்வ் வங்கி எடுக்கும் கண்டிப்பான நடவடிக்கையின் மீது, மத்திய அரசுக்கும் பிணைப்பு ஏற்படவில்லை. வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அது போன்ற வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.

 

ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் இருந்தும் வங்கிகளின் வாராக்கடனை (Non performing asset – NPA) கட்டுப்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், தங்களுக்கான அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை என பாரத ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி துணைபுரிவதில்லை என மத்திய அரசு நேரிடையாகவே கூறியுள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்களுக்கென தனி டாலர் பரிமாற்ற வசதியை (Foreign Exchange) அரசு ஏற்படுத்த முயற்சிக்கையில், அதற்கான ஒதுக்கீட்டை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லீக்கும் இடையே வெடிப்பு ஏற்பட்டது போல், இப்போது உர்ஜித் பட்டேல் – அருண் ஜெட்லீ இடையே முரண்பாடு உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 4

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 4

Budget Planning for Middle Class Family – Part 4

 

இது நமது நடுத்தர பட்ஜெட் திட்டமிடலின் நான்காம் பகுதி…

 

மதுரை திருமங்கலத்தில் வசித்து வருபவர் திரு. பன்னீர் செல்வம், சொந்த தொழில் செய்துவரும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி திருமதி. பாண்டியம்மாள் அருகில் உள்ள கிராமத்தில் விவசாயத்தை பார்த்து வருகிறார். மூன்று மகள்களையும் மேற்படிப்பு வரை படிக்க வைத்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதையே லட்சியமாக கொண்டுள்ள பன்னீர் செல்வம் அதற்கான நிதி சார்ந்த நடவடிக்கைகளை எப்போதும் கவனத்துடன் கையாண்டு வருகிறார்.

 

இனி இவருடைய பட்ஜெட் திட்டமிடலை பார்ப்போம்…

Budget Financial Planning Part 4

 

தனது தொழில் மூலம் மாத வருவாயாக ரூ. 30,000 ஐ பெறும் பன்னீர் செல்வம், தனது மகள்களின் கல்விச்செலவுக்காக மாதம் 15000 ரூபாயை செலவிடுகிறார். முதல் மகள் பொறியியல் பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டிலும், இரண்டாவது மகள் பி.எஸ்.சி. கணிதம் முதல் ஆண்டிலும், மற்றும் கடைக்குட்டி தற்போது பனிரெண்டாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். முதல் மகளின் பொறியியல் படிப்பிற்கு கல்விக்கடன் வாங்கியிருந்தாலும், கல்விச்செலவுகளில் அதற்கான மற்ற செலவுகளுக்கு தேவையான பணத்தை ஒதுக்கி வைத்துள்ளார்.

 

 

தனது குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கு சேர்த்து மருத்துவம் மற்றும் காப்பீட்டு செலவுகளுக்காக மாதம் ரூ. 3500 ஐ செலவழித்து வருகிறார். இது போக தனது மகள்களின் வரப்போகும் திருமணச்செலவுகளுக்கு என 8000 ரூபாயை மாதாமாதம் சேமித்து வருகிறார். அதனை கொண்டு மூன்று மகள்களின் திருமண நிதி இலக்குகளை அணுகி வந்துள்ளார். திருமதி. பாண்டியம்மாள் அவர்களின் விவசாய வருமானமாக ரூ. 10,000 குடும்ப நிதிச்சுமையை சற்று குறைகிறது. மொத்தத்தில் மாத வருவாயாக ரூ. 40,000 /- யையும், அவற்றில் மாதச்செலவுகளாக ரூ. 37,000 செலவிடப்படுகிறது.

 

நாம் ஏற்கனவே பார்த்தது போல, சேமிப்பு மற்றும் முதலீடுகளும் ஒரு வகையான செலவே. பன்னீர் செல்வம் குடும்பத்தின் வரவு-செலவு போக, உபரித்தொகையாக ரூ. 3000 இருப்பதும் நிதி சார்ந்த விஷயத்தில் ஆரோக்கியமான விஷயமே.

நினைவில் கொள்க:

 

  • பன்னீர் செல்வத்தின் முதல் மகள் இறுதி ஆண்டு கல்வியை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் முனைப்பில் உள்ளார். இதன் மூலம் தனது குடும்பத்தின் நிதி ஆதாரத்தை அதிகப்படுத்தலாம். அதே நேரத்தில், இரண்டாவது மகள் பட்ட மேற்படிப்பையும் (Post Graduation) படிக்க விரும்புகிறார். மூன்றாவது மகளின் வரப்போகும் பட்டப்படிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

  • முதல் மகளின் புதிய வேலைவாய்ப்பால், நாம் மேலே சொன்ன எதிர்கால கல்விச்செலவுகளை கையாளலாம் அல்லது மூத்த மகளின் பொறியியல் படிப்பு முடிந்து விடும் நிலையில் இருப்பதால், அந்த தொகையை இனி மற்ற மகள்களின் கல்விச்செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • பன்னீர் செல்வம் மற்றும் அவரது துணைவி, இருவருக்குமான ஓய்வு கால நிதியை (Retirement Planning) அவர்கள் இதுவரை ஏற்படுத்தாதது ஒரு குறையாக உள்ளது. அவர்கள் மகள்களின் எதிர்கால வேலைவாய்ப்பை சார்ந்தே உள்ளனர். மகள்கள் உதவும் பட்சத்தில், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களின் ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்யலாம்.

 

  • தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் வருமானம் பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருக்கும். அதனால் நாம் வருமானம் பெறும் வேளையிலே சேமிக்கும் தன்மையை கொண்டிருக்க வேண்டும்.

 

 

போதுமான சேமிப்பும், தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதும் ஒரு குடும்பத்தின் நிதி நலனை பாதுகாக்கும்; குடும்பத்தில் அனைவருக்கும் அமைதியை பேணும்.

 

பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

திவால் நிலையிலிருந்து நீக்க எஸ்ஸார் ஸ்டீல் கோரிக்கை

திவால் நிலையிலிருந்து நீக்க எஸ்ஸார் ஸ்டீல் கோரிக்கை

ESSAR Steel seeking to withdraw from IBC

உலகின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான எஸ்ஸார் ஸ்டீல் (ESSAR Steel) பல  ஆண்டுகளாகவே இந்திய பிராந்தியத்தில் கடனில் தத்தளித்து கொண்டிருக்கிறது. சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் மத்திய அரசின் திவால் சட்டத்தின் கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தான் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் ருயா (Ruias) குழுமத்தினர் கடனை திரும்பி செலுத்துவதற்கான முறையை, தங்களது பங்குதாரர்களிடம் முன்மொழிந்துள்ளனர். இதனால் நிறுவனத்தை திவால் சட்டத்திலிருந்து (Insolvency and Bankruptcy Code -IBC) காப்பாற்றலாம். ருயா குழுமத்தினர் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவர். இந்த நிறுவனம் கடந்த 2017 ம் நிதியாண்டில் நிகர நஷ்டமாக ரூ.5,620 கோடியை வெளியிட்டுள்ளது.

 

பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாமல் இருக்கும் இந்த ஸ்டீல் நிறுவனம், தற்போது தனது நிறுவனத்தின் கடனை அடைக்க முன்வந்துள்ளது. ஒரு முறை செலுத்தும் வாயிலாக 54,389 கோடி ரூபாயை கொடுக்க ருயா குழுமத்தினர் (Ruias Group) தயாராகி வருகின்றனர். இதன் மூலம் அதன் கடன்தாரர்களுக்கு 100 சதவீத கடனை அடைக்கும் நடவடிக்கையை நிறுவனம் எடுத்து வருகிறது. இதற்கான நடவடிக்கைக்கு பங்குதாரர்கள் பச்சை கோடி காட்டியுள்ளனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏற்கனவே நிறுவனத்தின் கமிட்டி ஒன்று (Committee of Creditors -COC) அர்செல்லர் மிட்டல் நிறுவனம் வாங்குவதற்கான முயற்சியை கையாண்டு வந்தது. அர்செல்லர் நிறுவனம் 42,200 கோடி ரூபாய் அளவிலான கடனை அடைக்க முன்வந்தது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தான் ருயா குழுமத்தினர் தங்களது நிறுவனத்தின் கடனை தாமே அடைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

 

அர்செல்லர் மிட்டல் (ArcelorMittal), லட்சுமி மிட்டல் அவர்களின் நிறுவனமாகும். அர்செல்லர் மிட்டல் நிறுவனம் லக்சம்பர்க் நகரத்தை (Luxembourg City) தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாகும் (Steel Producing). எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய தொகை ரூ. 18 கோடியாகவும், வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் வழங்கிய கடன் 49,390 கோடியாகவும், மற்றவை நிறுவன செயல்பாட்டிற்கு கடன் வழங்கியவர்கள் (Operational Creditors) ஆவர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஏசியன் பெயிண்ட் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ. 506 கோடி

ஏசியன் பெயிண்ட் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ. 506 கோடி

Asian Paints net profit of Rs. 506 Crore in Q2FY19

 

முன்னணி பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் தனது இரண்டாம் காலாண்டில் (Q2FY19) நிகர லாபமாக 506 கோடி ரூபாயை பதிவு செய்துள்ளது. மொத்த வருமானம்  4639 கோடி ரூபாயாகவும், வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய (EBITDA) வருமானமாக 784 கோடி ரூபாயாகவும் உள்ளது.

 

இடைக்கால ஈவுத்தொகையாக (Dividend) ரூ. 2.85 /- ஐ ஒரு பங்குக்கு அறிவித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலத்தில் (2017-2018 ன் இரண்டாம் காலாண்டு) நிறுவனத்தின் நிகர லாபமாக ரூ. 593 கோடியையும், மொத்த வருமானமாக ரூ. 4265 கோடியையும் பெற்றுள்ளது. தற்போது வெளியான காலாண்டின்  நிகர லாபம் முந்தைய வருட காலத்துடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதம் சரிவடைந்துள்ளது.

 

அதே நேரத்தில் காலாண்டுக்கான மொத்த வருமானம் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இயக்க அளவும் (Operating margin) இரண்டு சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய வருடத்தில் இது 18.8 சதவீதமாகவும், தற்போது 16.9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.

 

மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், டாலருக்கு நிகரான மாற்றம்  ஆகியவை இரண்டாம் காலாண்டு லாபத்தை குறைத்துள்ளதாக நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வீடு சம்மந்தமான பெயிண்ட் பிரிவில் 20 சதவீத வருமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

கச்சா எண்ணெய் விலை மாற்றமும் பெயிண்ட் துறையில் (Paint Industry) சிறிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த இலக்கை ஏசியன் பெயிண்ட் நிறுவனம் எட்டவில்லை என சொல்லப்படுகிறது. திங்கள் அன்று (22-10-2018) வர்த்தக முடிவில் ஏசியன் பெயிண்ட் 2.83 சதவீதம் சரிவடைந்து ரூ. 1200.40  (தேசிய பங்குச்சந்தை) என்ற விலையில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 25ம் தேதி ஏசியன் பெயிண்ட் நிறுவனம் ரூ. 1488 என்ற விலையில் வர்த்தகமானது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 9516 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 9516 கோடி

Reliance Industries Q2 Net Profit rises to Rs. 9516 Crores

 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த காலாண்டு (ஜூலை-செப்டம்பர் 2018 RIL -Q2 Results )  முடிவுகளை இன்று வெளியிட்டது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு லாபமாக ரூ.9516 கோடியை பதிவு செய்தது. இதற்கு முந்தைய காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிகர லாபமாக 9,459 கோடி ரூபாயை ஈட்டியது.

 

கடந்த காலாண்டின் வருமானமாக ( FY19 Q2 Revenue) 1,56,291 கோடி ரூபாயை பெற்றுள்ளது. முந்தைய காலாண்டில் இது 1,41,699 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ஜூலை – செப்டம்பர் மாத காலத்தில் நிகர லாபம் 8,109 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில் அதன் வருமானம் 1,01,169 கோடி ரூபாயாகும்.

 

முந்தைய வருட இரண்டாவது காலாண்டு லாபத்தை ஒப்பிடுகையில், தற்போதைய நிகர லாபம் 17.35 சதவீதம் அதிகமாகும். 2019 ம் நிதி வருடத்தில் முதல் அரையாண்டு வருமானமாக 2,97,990 கோடி ரூபாயும், நிகர லாபமாக ரூ. 18,975 கோடியாகவும் உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடந்து முடிந்த காலாண்டில் ஒரு பங்குக்கான வருமானம் (EPS -Earning per share) ரூ. 16.10 /- ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வருமானம் 54 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தியின் அதிக விலை மதிப்பீடுகளின் மூலம் வருமானம் உயர்ந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. புதிய பெட்ரோ-கெமிக்கல் வசதிகளும், அதனை சார்ந்த கமிஷன் மற்றும் அதிகப்படியான அளவுகள் வருமானத்திற்கு துணைபுரிந்துள்ளன.

 

டிஜிட்டல் சேவையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் (R-Jio) காலாண்டு லாபம் 681 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற காலாண்டில்,  ARPU (Average Revenue Per User) என்று சொல்லக்கூடிய ஒரு பயனாளருக்கான சராசரி வருவாய் மாதத்திற்கு ரூ.131.7 ஆக உள்ளது.

 

ஹாத்வே கேபிள் (Hathway Cable and Datacom) நிறுவனத்தில் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2940 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்க உள்ளது. இதன் மூலம் ஹாத்வே நிறுவனத்தில் ஜியோவின் பங்கு 51 சதவீதமாக உயரும். அதே போல டென் நெட்ஒர்க் (Den Networks) நிறுவனத்திலும் ஜியோ 66 சதவீத பங்குகளை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக இந்த இரண்டு நிறுவனத்தையும் ஜியோ கையகப்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது

Insurance Companies do not refuse to provide insurance for HIV and AIDS Patients

நமது நாட்டில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் (கடந்த ஆண்டு வரை) ஆகும். உலகளவில் தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு அடுத்தாற் போல் எச்.ஐ.வி. நோய் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

 

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் காப்பீடு வழங்குவது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை கேட்டிருந்தது. அதன் சாரமாக, சமீபத்தில் இர்டா (Insurance Regulatory and Development Authority of India -IRDAI) ஆணையத்தின் தலைவர் பேசும் போது, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது போன்ற நோயாளிகளுக்கு சிறப்பான திட்டத்தையோ அல்லது ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தையோ அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்றார்.

 

காப்பீடு நிறுவனங்களும் இந்த வரைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்குவதில் எந்த பாரபட்சமும் கூடாது எனவும், காப்பீட்டை மறுக்கவும் கூடாது என காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதே நேரத்தில் காப்பீடு நிறுவனங்களுக்கும் இது ஒரு சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை மெடிகிளைம் (Mediclaim -Health Insurance) திட்டத்தில், ஒருவர் காப்பீடு திட்டத்தை வாங்கிய பிறகு அவர், இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கோரிக்கை (Claims) ஏற்கப்படும் என இருந்தது. இனி காப்பீடு நிறுவனங்கள் புதிய காப்பீடு திட்டத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

காப்பீடு நிறுவனங்கள் புதிய காப்பீடு பெறுபவர்களுக்கான தகவல்களையும், ஏற்கனவே காப்பீடை பெற்றவர்களின் தரவுகளையும் நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படலாம். சிலர் நோயின் தன்மையினை மறைத்து காப்பீட்டு திட்டத்தை பெற்று கொண்டு, பின்பு அறிவிக்கும் பழக்கமும் உள்ளது. ஏனென்றால், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் போன்ற கவரேஜ்களுக்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கலாம். அவர்களுக்கான சிகிச்சை சிறப்பம்சம் கொண்டதாக இருக்கும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தாமாக வந்து அறிவிக்கும் பயனாளர்களுக்கு அதற்கான சலுகைகள் மற்றும் பலன்கள் உறுதிப்படுத்தப்படும் என காப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நுகர்வோர் விலை பணவீக்கம் செப்டம்பரில் சற்றே உயர்வு – 3.77 %

நுகர்வோர் விலை பணவீக்கம் செப்டம்பரில் சற்றே உயர்வு – 3.77 %

CPI Inflation Slightly higher in September 2018 – 3.77 percent

 

உணவு பொருட்களின் விலை உயர்வால் கடந்த செப்டம்பர் மாதத்தின் சில்லரை பணவீக்கம் (CPI – Retail Inflation) 3.77 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.69 % அளவில் இருந்தது. சந்தையில் வல்லுநர்கள் எதிர்பார்த்த 4 % அளவை செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் எட்டவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

 

முன்னர், பாரத ரிசர்வ் வங்கி (Reserve Bank of India -RBI) கணித்த மதிப்பீட்டில் ஜூலை – செப்டம்பர் 2018 காலாண்டு முடிவில் சில்லரை விலை பணவீக்கம் 4.6 சதவீதமாக இருக்கும் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன் 4 சதவீதமாக மாற்றியமைத்தது. தற்போது இதன் மதிப்பீட்டில் சில்லரை பணவீக்கம் குறைவாகவும், அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது சற்றே உயர்ந்தும் காணப்படுகிறது.

 

உணவுப்பொருட்களின் (Food and Beverages) விலை 0.85 சதவீதத்திலிருந்து 1.08 சதவீதமாக உயர்ந்தது. பழங்கள் மற்றும் பால் பொருட்களின் விலை குறைந்தும், புகையிலை சார்ந்த பொருட்களின் விலை உயர்ந்தும் உள்ளது. பழங்களின் விலை 3.57 சதவீதத்திலிருந்து 1.12 % ஆக குறைந்தும், மீன் மற்றும் மாமிசத்தின் பணவீக்கம் 3.21 % லிருந்து 2.32 சதவீதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்தது.

 

பருப்பு வகைகளின் பணவீக்கம் (-8.58) சதவீதமாக காணப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதன் விலை (-7.76) இருந்தது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற பணவீக்கம் 3.34 சதவீதமும், நகர்புறத்தில் 4.31 சதவீதமும் உள்ளது. ஆகஸ்ட் மாத கிராமப்புற பணவீக்கம் 3.41 % ஆகவும், நகர்ப்புற விலைவாசி 3.99 சதவீதமாகவும் இருந்தது.

 

நுகர்வோர் விலை குறியீட்டு எண் 140.40 லிருந்து (ஆகஸ்ட் 2018) கடந்த மாதத்தில் 140.30 என்ற மதிப்பில் உள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கம் (Consumer Price Index) மதிப்பீடு கடந்த 2012 ம் ஆண்டை தொடக்க ஆண்டாகவும், அதன் அடிப்படை மதிப்பை 100 ஆகவும் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

முதலீட்டு முடிவுக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் ?

முதலீட்டு முடிவுக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் ?

How much time do you spend for an Investment Decision ?

 

சமீபத்தில் (07-10-2018) நமது மதுரையில் மியூச்சுவல் பண்டுக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சி, மடிட்சியா அரங்கில் நடைபெற்றது. நாணயம் விகடன் மற்றும் ஆம்பி (Association of Mutual Funds in India -AMFI) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புரையாளராக திரு. வி. கோபால கிருஷ்ணன் (Money Avenues) அவர்கள் கலந்து கொண்டார்.

 

அவர் பேசுகையில், ‘ நமது குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிமணிகளை நாம் வாங்க செல்லும் போது அதற்கான நேரம் பொதுவாக 4-5 மணி நேரம் வரை செலவழிக்கப்படுகிறது. அதே நேரத்தில், முதலீடு அல்லது சேமிப்பு என்று வரும் போது, நாம் அதற்கான கால அளவுகளை கொடுக்காமல் உடனே முடிவெடுக்கும் நிலைக்கு வருகிறோம்.

 

இந்த அவசர முடிவு தான், நம்முடைய முதலீட்டு சாதனங்களில் (Investment Products) நாம் தோல்விடைய வழி வகுக்கிறது. பங்குச்சந்தை அல்லது பரஸ்பர நிதி (Mutual Fund) என்னும் முதலீட்டு சாதனத்தை நாம் தேர்ந்தெடுக்கும் போது, அவசர கதியில் அல்லது நண்பர் சொன்னார் என்று முடிவெடுத்து விட்டு, பின்பு என் முதலீடுகள் நஷ்டத்தில் உள்ளனவே என தடுமாறுகிறோம்.

 

உங்களுக்கான முதலீட்டு முடிவை (Investment Decision) நீங்கள் தான் எடுக்க வேண்டும். உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் நீங்களே பொறுமையாக கையாள வேண்டும். இல்லையெனில், அதற்கு தகுந்த ஒரு நிதி ஆலோசகரை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலீட்டு முடிவுகளுக்கான நேரத்தை நாம் செலவிடும் போது தான், நமக்கான அக்கறை நிதியிலும் வரும்.

 

ஒருவர் தனது முதலீட்டு முடிவை எடுக்கும் முன், தனக்கான நிதி இலக்குகள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். நிதி இலக்குகள் (Financial Goals) என்பது மேற்படிப்பு, வீடு வாங்குவது, ஓய்வு காலத்திற்கு தேவையான தொகை என இருக்கலாம். நோக்கங்கள் (Objectives) என்பது நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை நாம் எந்த கால அளவில் பெற வேண்டும், எவ்வளவு வருமானம் (Better Returns) கிடைத்தால் நாம் இலக்கை அடையலாம் என்பது தான். இதன் பின்னரே அதற்கு பொருத்தமான முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

 

சில பேருக்கு மாதாமாதம் தொடர் வருமானம் வேண்டுமென இருக்கலாம்; சிலருக்கோ பத்து வருடங்களுக்கு பிறகு எனக்கு இன்ன தொகை தேவையென இருக்கலாம். இவையெல்லாம் தான் நமது முதலீட்டு நோக்கங்கள். நமது முதலீட்டு முதிர்வு பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் நமது இலக்குகளை அடைய முடியும். ‘ என்றார்.

 

இதற்கு அடுத்தாற் போல் திரு. பி. ராமசாமி (Easy Investments) அவர்கள் பேசிய போது, ‘ உலகளவில் நம் நாடு மட்டும் தான் தங்கத்தை அதிகமாக பயன்டுத்தி கொண்டிருக்கிறது. தங்கத்தின் அதிகப்படியான இறக்குமதி தான் நம் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதன் காரணமாகவும், பல சமயங்களில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் விலைவாசி அதிகரிக்க செய்கிறது.

 

மற்ற நாடுகளில் அதன் அரசாங்கம் தான் தங்கத்தை வைத்திருக்கிறது. அதுவும், தங்கள் நாட்டின் பொருளாதார கணக்கை சமப்படுத்துவதற்கான சாதனமாக தான் பயன்படுத்தி வருகிறது. அந்த நாடுகளில் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை ஏற்படுத்துதல், பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனத்தை செலுத்துகின்றன.

 

தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போது, தங்க பத்திரங்கள், சந்தையில் வர்த்தகமாகும் கோல்டு ETF (Gold Exchange Traded Fund) ஆகியவை ஓரளவு வருமானத்தை தரும். ஆனால் வெறுமனே ஆபரணமாக வாங்கும் பட்சத்தில், பின்வரும் நாளில் அதன் மதிப்பு குறைவு. எனவே தேவைக்கு மட்டும் சிறிது நகைகளாக வைத்து கொண்டு, தங்கம் சார்ந்த நிறுவனங்கள், பத்திரங்களில் முதலீடு செய்து வருமானத்தை ( Capital Appreciation) பெறலாம் ‘ என்று சொன்னார்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil