Tag Archives: rbi

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

No change in Repo Rate for the Eleventh Time – RBI Monetary Policy 

நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டமாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அறிக்கை இன்று பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்பட்டது. 

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் இம்முறை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம், எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு கடந்த 2020ம்  ஆண்டு முதல் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் பெரியளவில் மாற்றமில்லை.

தற்போது சொல்லப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, பதினொன்றாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரக்கூடிய மாதங்களில் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம். 

நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதுவே கடந்த முறை, பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகவும், பணவீக்கம் 5.3 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கப்பட வேண்டியவை.

பணவீக்க மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2022-23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில்(April – June 2022) 6.3 சதவீதமாக பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் விலைவாசி உயர்வை(Inflation) கட்டுப்படுத்துவதே தற்போதைய நோக்கம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Repo rate cut 40 basis points to 4 Percent – RBI

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் கூறிய அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. முன்னர் 4.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இப்போது 4 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

இது போல ரிவர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo) 3.75 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதமும்(Bank Rate) 4.65 சதவீதத்திலிருந்து 4.25 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பது சம்மந்தமாக இம்முறை நிதி கொள்கை குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களும் குறைக்க வேண்டுமென தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 2020 முதல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள்  சுணக்கம் அடைந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. பணவீக்க விகிதத்தை அறிய முறையான தகவல்களை தற்போது சேகரிக்க முடியவில்லை எனவும், வரும் மாதங்களில் பணவீக்க விகிதங்களில் எதிர்பாராத மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மத்திய வங்கியின் இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவை ஒட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கக்கூடும். ஜனவரி – மார்ச் காலாண்டில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சீனாவின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளில் தங்கள் முதலீட்டை பரவலாக்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள் ஓரளவு ஏற்றம் பெற்றிருந்தாலும், நடப்பாண்டில் முதல் இரு காலாண்டுகளில் வளர்ச்சி எதுவும் பெரும்பாலும் இருக்காது என சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக(Negative GDP) இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், எந்த மதிப்பை கொண்டிருக்கும் என சொல்லப்படவில்லை.

வங்கிகளில் கடன் பெறுபவர்களை ஊக்குவிக்கவும், நிதி சந்தைகளை வலுப்படுத்தவும் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வட்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு இது சாதகமாக இருக்கும். அதே வேளையில், இது வங்கிகளின் வருவாய்க்கு நன்மையாக அமையாது. கடனுக்கான மாத தவணையை செலுத்துவதில் மீண்டும் மூன்று மாத கால அவகாசம்(Moratorium) வழங்கப்பட்டுள்ளது.

இது அடுத்த மாதம் ஜூன் முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலத்திற்கு பொருந்தும். இருப்பினும், இது வட்டிக்கு வட்டி என்ற விகிதத்தின் அடிப்படையிலும், மூன்று மாதங்களுக்கான தவணையை அதிக தொகையுடன் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். வங்கி வட்டி தள்ளுபடி அல்லது கடன்களை மறுசீராய்வு செய்வதால் மட்டுமே அது வங்கிகளுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் பலன் அளிக்கும்.

இன்று வங்கி துறையில் உள்ள பங்குகள் அதிக சரிவையும், நிப்டி வங்கி குறியீடு 2.57 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சி கண்டது. நடப்பில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் பணப்புழக்கம் சார்ந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.

வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் சூழ்நிலையில், முதலீட்டாளர்களின் பார்வையில் கடன் பத்திரங்கள்(Bonds) மீதான ஆர்வம் ஏற்படும். வட்டி விகிதம் குறையும் போது, கடன் பண்டுகளின் வருவாய் அதிகரிக்கும். எனவே இது போன்ற நிலையில், முதலீடு செய்வோர் சற்று ரிஸ்க் குறைந்த கடன் பத்திர பரஸ்பர நிதிகளில்(Debt Mutual Funds) முதலீடு செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மூன்று மாத தவணைத்தொகை (EMI) சலுகை – யார் யாருக்கு ?

மூன்று மாத தவணைத்தொகை (EMI) சலுகை – யார் யாருக்கு ?

Moratorium of 3 Months EMI – Who will get this benefit ?

2019-20ம் நிதியாண்டுக்கான ஏழாவது மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம், பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே மந்தநிலையில் சென்று கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரம், கொரோனா வைரஸ்(Covid-19) பாதிப்பால் மேலும் மந்தமடைந்தது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை போன்றவற்றால் கொரோனா பாதிப்பை தடுக்கும் நிலையில், சொல்லப்பட்ட காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் மேலும் அதிகரிக்க கூடும்.

நேற்றைய கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ(REPO Rate) வட்டி விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 75 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதனால் வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதம் குறையும். அதே வேளையில் வங்கி டெபாசிட் முதலீட்டிற்கு வட்டி வருவாய் குறையும்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின், உலகளாவிய வளர்ச்சியும் பெரிதும் மந்தமடைந்துள்ளது. தொற்று நோய் மற்றும் அதன் பரவலை தொடர்ந்து அதிக காலம் எடுத்து கொள்ளும் நிலையில் இந்த நிலை பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

பொருளாதார வீழ்ச்சி சார்ந்த பதற்றத்தால் நிதி சந்தையில் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க பல பொருளாதார ஊக்குவிப்புகள் சொல்லப்பட்டு வருகிறது. இது போன்ற காலங்களில் ஊக்குவிப்புகள் நடைபெறுவது இயல்பான ஒன்று தான்.

நேற்றைய கூட்டத்தில் முக்கிய அம்சமாக வங்கி வாடிக்கையாளர்களின் கடன் தவணை தொகை(EMI) அடுத்த மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அமல் மார்ச் 1,2020 முதல் நிலுவையில் உள்ள தவணை தொகைக்கு என சொல்லப்பட்டுள்ளது. அனைத்து வணிக வங்கிகளுக்கும் (கிராமப்புற வங்கிகள், நிதி வங்கிகள், உள்ளூர் பகுதி வங்கிகள்), கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (வீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் உட்பட) மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் என அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

சொல்லப்பட்ட தவணை சலுகை அனைத்து வங்கிகளிலும் உள்ள  வாடிக்கையாளர்களுக்கு அளிக்க பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த வங்கிகள் தான் வாடிக்கையாளர்களுக்கு அதன் பலனை அளிக்க வேண்டும். தவணை காலம் மார்ச் 1 முதல் மே 31ம் தேதி வரை உள்ள காலமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. தாமதமாக துவங்கும் தவணை தொகையால் (EMI) வாடிக்கையாளர்களின் சிபில்(CIBIL Score) மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது எனவும், வங்கிகளின் வாராக்கடன்(NPA) அளவிலும் எந்த மாற்றமுமில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

யார் யாருக்கு தவணை தொகை சலுகை ?

பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்து வங்கிகளும்  மூன்று மாத தவணை சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் படி, ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது. இது  ஒரு அனுமதி கடிதம் தான் தவிர, வங்கிகள் தான் இதனை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகித குறைப்பை அறிவித்தால், சில வங்கிகள் மட்டுமே அந்த பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும். இதுவும் அது போன்று நடந்து விட கூடாது.

வரவிருக்கும் வாரங்களில் வங்கி வாடிக்கையாளர்களும் தொலைபேசியில் தொடர்பு  கொண்டு, வங்கிகளிடம் செயல்முறையை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் சில வாடிக்கையாளர்கள் தவணைத்தொகையை செலுத்த இருக்கும் பட்சத்தில், அதற்கான வங்கிகளின் முடிவும் மாறுபடலாம். வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணை தொகைக்கான(Loan EMI) காலம் தான் தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தவணை தொகை கழித்து கொள்ளப்படுகிறது என சொல்லப்படவில்லை. எனவே இது ஒரு கடன் தள்ளுபடி என நினைத்து கொள்ள வேண்டாம்.

தவணை தொகைக்கான காலம் மார்ச் 1, 2020 முதல் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அப்படி இருக்கையில் பெரும்பாலானோர் தங்கள் மார்ச் மாத தவணை தொகையை கட்டியிருக்கலாம். இது சம்மந்தமான சந்தேகங்களை உங்கள் வங்கி மேலாளரிடம் அல்லது அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். தவணைத்தொகை எனும் போது, அசலுடன் வட்டியும் சேர்த்து தான் சொல்லப்பட்டுள்ளது.

வீட்டு கடன், கல்வி கடன், தனிநபர் கடன், விவசாய கடன், வாகன கடன், வீட்டு பொருட்களை தவணை முறையில் பெற்றதற்கான கடன் மற்றும் இதர சில்லறை வகையிலான கடன்களுக்கு சொல்லப்பட்ட மூன்று மாத தவணை தொகை சலுகை பொருந்தும். கிரெடிட் கார்டுகள் என்பது ஒரு சுழலக்கூடிய கடன்(Revolving Credit) என சொல்லப்படுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி கிரெடிட் கார்டுக்கான நிலுவை தொகைக்கு இந்த சலுகை பொருந்தும்.

பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ள சலுகை அனைத்தும் சில்லறை கடன்களுக்கானது. இவற்றில் வணிக கடன் பற்றி சொல்லப்படவில்லை. எனினும், வணிக நிறுவனங்களால் வாங்கப்பட்ட அனைத்து மூலதன கடன்களுக்கும் வட்டி தொகையை செலுத்துவதற்கு காலத்தை நீட்டித்துள்ளது. இவற்றை செலுத்துவதற்கான காலம் (மார்ச் 1 முதல்) மூன்று மாதம் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்பு வட்டித்தொகை அனைத்தும் சேர்க்கப்பட்டு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாமதமாக செலுத்தப்படும் தவணைத்தொகையால் வாடிக்கையாளர்களின் சிபில் மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இதன் காரணமாக வருங்காலங்களில் புதிய கடன் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நினைவில் கொள்க: உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொண்டு, முறையான தகவலை பெறுவது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

உலக சந்தைகளுக்கு செல்லும் அரசாங்க பத்திரங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Government Bonds (G-Secs) in Global Indices Soon – RBI

பொதுவாக அரசாங்க பத்திரங்கள் என்பது மத்திய அரசினால் நமது நாட்டின் நாணயத்தில்(ரூபாய் மதிப்பு) வழங்கப்படும். இந்த பத்திரங்களை வெளிநாட்டு நாணயத்தின் மதிப்பில் வெளியிட்டால், அது சவரின் பத்திரங்கள்(Sovereign Bonds) எனப்படும். மத்திய அரசு தனக்கு தேவையான நிதியை (கடன்) முதலீட்டாளர்களிடம் இது போன்ற பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் பெறும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பத்திரங்களை பெறும் முதலீட்டாளர்கள் அதற்கான வட்டி வருமானத்தை அரசாங்கத்திடம் இருந்து பெறுவர். அரசு பத்திரங்களை பெறுவதில் நாட்டில் உள்ள வங்கிகள் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. இது போக வெளிநாட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் நிதி சார்ந்த பெரு நிறுவனங்கள் அரசாங்க பத்திரங்களை வாங்கும். அரசாங்க பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் ரிஸ்க் தன்மை மிக குறைவாக உள்ளவை.

பாரத ரிசர்வ் வங்கியின் மூலம் தான் அரசாங்க பத்திரங்கள்(Government Bonds) வெளியிடப்படும். ஆரம்ப நிலையில், மத்திய அரசின் நிதி தேவைக்காக வெளியிடப்படும் பத்திரங்கள் முதன்மை சந்தைக்கு வரும். பின்னாளில் அதனை இரண்டாம் சந்தையிலும் நாம் வாங்கி கொள்ளலாம். பொதுவாக அரசு பத்திரங்கள் 5, 10,15, 20, 30 வருடங்கள் என முதிர்வு காலத்தை கொண்டிருக்கும். அரசு பத்திரங்களில் கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் ரிஸ்க் இல்லா விகிதமாக(Risk Free Rate – Bond yield) சொல்லப்படும். ஏனெனில், அரசாங்கம் கடன் வாங்கியிருந்தாலும் அந்த கடனை உறுதியாக அடைத்து விடும் என்ற நம்பிக்கை உலகளவில் உள்ளது. மேலும் கடனை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில், அரசாங்கம் பணத்தை அச்சடிப்பதற்கு உரிமை உள்ளது.

அரசு பத்திரங்களுக்கும், வங்கி வட்டி விகிதங்களுக்கும் நேரெதிர் உறவு உண்டு. அதாவது எப்போதெல்லாம், வங்கியில் வட்டி விகிதம் குறைவாக உள்ளதோ, அப்போது பத்திரங்களுக்கான வட்டி விகிதம்(Bond Prices) அதிகரிக்கும். அதே போன்று வங்கி வட்டி விகிதம் அதிகமாக காணப்படும் போது, அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் குறைய கூடும். இது முதலீட்டாளர்களின் வருவாய் தேவையை சார்ந்து தான் மாறுபடுகிறது.

அதனால் தான் பாரத ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் போது பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் அதிகரிக்கும். இரண்டையும் சாதகமாக பயன்படுத்துவது தான் ஒரு முதலீட்டாளரின் சாமர்த்தியம். தற்போது பத்து வருட அரசு பத்திரங்களின் விலை 6.42 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதுவும் பங்குச்சந்தை போன்றது தான், வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

சில தகவல்கள்: GS2029 – 10 வருட பத்திரங்கள் – 6.45 %, GS2026 – 7.27 %, GS2024 – 7.32 %, GS2024 – 6.18 %, GS2021 – 6.17 %, 91 Day T-bills – 5.05 % (Data: RBI)

கடந்த பட்ஜெட் தாக்கலிலும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சலுகை சம்மந்தமாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். மேலும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுடன் இணைந்து அந்நிய முதலீட்டாளர்களும் நம் நாட்டின் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வசதி செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்களும் அரசு பத்திரங்களை வாங்கி வைக்கலாம். இதற்கு டீமேட் கணக்கு(Demat Account) துவங்குவது அவசியம். அரசு பத்திரங்களை விற்கும் போது வரி விகிதங்கள் உள்ளது என்பதை மறக்க கூடாது.

வங்கியில் உள்ள நிதி நிலைமையை சரி செய்யவும், அரசுக்கு தேவையான நிதி முதலீடுகளை பெறுவதற்கும் உலக சந்தையில் அரசு பத்திரங்களை வெளியிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அமெரிக்க சந்தையில் அதன் பத்திரங்களின் வட்டி விகிதம் 2 சதவீதத்திற்கு குறைவாக உள்ளது. இங்கிலாந்தில் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், சீனாவில் 2.97 சதவீதம் என்ற வட்டி விகிதத்திலும் அரசு பத்திரங்கள் உள்ளது. ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் பூஜ்யத்திற்கு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில், நம் நாட்டின் அரசு பத்திரங்களின் வருவாய் வளர்ந்த நாடுகளிடையே கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே வேளையில் அரசு கடன் பெறுவதற்காக உலக சந்தைகளில் பத்திரங்களை விற்பது சரியான நடவடிக்கையாக இருக்காது எனவும் சில பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.எது எப்படியோ, வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை, இந்தியா ஒரு முதலீட்டு வாய்ப்பாக தெரிகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி 

A New One Rupee note coming soon – RBI

நடைமுறையில் நாட்டின் பணப்புழக்கத்தில் உள்ள மிகச்சிறிய ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நோட்டு தான். 9.7 X 6.3 செ.மீ செவ்வக அளவை கொண்டது இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டு. வரவிருக்கும் புதிய ஒரு ரூபாய் நோட்டு 110 மைக்ரான் தடிமனாகவும், 90 ஜி.எஸ்.எம். எடையுள்ளதாகவும் அமைந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரூபாய் நோட்டில் மேல்பக்க தலைப்பாக, ‘பாரத் சர்க்கார்’ என தேவநாகரி எழுத்துக்களிலும், அதன் கீழ், ‘GOVERNMENT OF INDIA’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு ரூபாய் நோட்டுக்கள் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் அச்சடிக்கப்படும்.

புதிய ஒரு ரூபாய் நோட்டுகளில் நிதி அமைச்சகத்தின் செயலாளர் இரு மொழிகளில் கையொப்பமிட்டுள்ளதாக அமைந்துள்ளது. ரூபாய் நோட்டின் ஒரு புறம் இளம்சிவப்பு பச்சை நிறத்தில் இருக்கும். மற்றொரு புறம், மற்ற நிறங்களின் கலவையாக இருக்கும். ஒரு ரூபாய் சின்னமும் அமைந்துள்ளது.

இந்த ரூபாய் சின்னம் விவசாயத்தை ஆதரிப்பதாக தானியங்களின் சின்னமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள வடிவமைப்பு, ‘சாகர் சாம்ராட்’ எண்ணெய் ஆய்வு தளத்தின் படத்தையும் உள்ளடக்கியுள்ளது.

ரூபாய் நோட்டின் ஒரு புறத்தில், ஒரு ரூபாய் மதிப்பை பிரதிபலிக்கும் விதமாக 15 இந்திய மொழிகளில் பதியப்பட்டுள்ளது. மேலும் ஒரு ரூபாய் நாணயத்தை பிரதிபலிப்பதாக 2020ம் ஆண்டின் சத்யமேவ் ஜெயதே குறியீடும் அடங்கியுள்ளது. நம் நாட்டில் ரூபாய் நோட்டுகள் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும். நாணயத்தை நிர்வகிப்பதையும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதும் மற்றும் நாட்டில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதும் மத்திய ரிசர்வ் வங்கியின் வேலையாகும்.

இந்திய நாட்டின் ஒரு ரூபாய் குறியீட்டை(Rupee Symbol) வடிவமைத்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த திரு. உதயகுமார் ஆவார். தற்போது சில்லரை நாணயங்களில் அதிக புழக்கத்தில் உள்ளவை ரூ. 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள். ரூபாய் நோட்டுகளில் அதிக புழக்கம் கொண்டவை ரூ. 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000 ஆகியவை.

பொதுவாக ரூபாய் நோட்டுக்களை அதிகாரபூர்வமாக பயன்படுத்தும் நாடுகள் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான். அதிகாரபூர்வமற்ற வகையில் ஜிம்பாப்வே நாடும் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு – முனைப்பில் பாரத ரிசர்வ் வங்கி

மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு – முனைப்பில் பாரத ரிசர்வ் வங்கி 

Repo rate cut may again – RBI Monetary Policy

 

தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி பாரத ரிசர்வ் வங்கி(RBI) 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7 சதவீதமாக குறைத்தது. வாகன துறை வீழ்ச்சி, நுகர்வு தேவை குறைந்து வருவது (Weak Consumption Demand) மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் இப்போது வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை போன்றவை மொத்த உள்நாட்டு வளர்ச்சி மதிப்பீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், மத்திய அரசு சார்பில் 5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கும், அதனை சார்ந்து பொதுத்துறை பங்கு விலக்கல்(Disinvestment), வங்கிகள் மற்றும் நிதி சேவையில் உள்ள சிக்கல்களை களையவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் Ernst & Young India(EY) குழு சார்பில் சொல்லப்பட்ட மதிப்பீடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வருடத்திலும் 9 சதவீத வளர்ச்சியை கொண்டிருந்தால் மட்டுமே 5 டிரில்லியன் பொருளாதார இலக்கு சாத்தியம் என சொல்லப்பட்டுள்ளது.

 

பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு செயல்பாடுகள் சென்று கொண்டிருந்தாலும், மத்திய ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மத்திய நிதி கொள்கை குழு கூட்டம்(Monetary Policy Committee) கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

 

கூட்டத்தின் கடைசி நாளான இன்று, ரெப்போ வட்டி(Repo Rate) விகிதத்தில் மாற்றம் இருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படலாம். பணவீக்க விகிதத்தை 4 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையிலும் ரிசர்வ் வங்கி முக்கியத்துவம் பெறுகிறது. 

 

கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation CPI) 3.18 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 4.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாகவும் இருக்கிறது. இன்று ரெப்போ விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 3.25 % – 3.50 % என்ற அளவில் உள்ளது. ரொக்க கையிருப்பு விகிதம்(CRR) 4 சதவீதமாகும். நடப்பு வருட மழைப்பொழிவு பரவலாக இல்லை என்பதும், உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை ஆகியவை இந்திய சந்தைக்கு சாதகமாக இல்லை. அமெரிக்க-சீன வர்த்தக போரும் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்காக வட்டி குறைப்பை அறிவிக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வங்கிகளுக்கு சுமை, வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் – புதிய வட்டி விகித வரையறை

வங்கிகளுக்கு சுமை, வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் – புதிய வட்டி விகித வரையறை

Burden to banks, Boost to customers – New Interest rate Benchmark – RBI

 

நேற்று நடைபெற்ற (05-12-2018) மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் (RBI) வட்டி விகிதம் சம்மந்தமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. அதன் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த 6.5 சதவீத வட்டி என்ற அளவிலே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

ஆறு நபர்கள் கொண்ட நிதி கொள்கை குழு (Monetary Policy Committee) கூட்டத்தில் 5 பேர் வட்டி விகிதத்தில் இம்முறை மாற்றம் தேவையில்லை எனவும், ஒருவர் நடுநிலையாகவும் கூறியிருந்தனர். வங்கிகளின் வாராக்கடன் மற்றும் நிதி நிலை அறிக்கையில் ஏற்படும் வேறுபாட்டை கலைந்து, அதனை சீரமைக்கும் பணியில் உள்ளதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்கும் வேளையில், நாட்டின் பணவீக்க மதிப்பீடை குறைத்துள்ளது பாரத ரிசர்வ் வங்கி. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 3.8 – 4.5 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணவீக்கம் (Inflation) 2.7 – 3.2 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீட்டை குறைத்துள்ளது.

 

கச்சா எண்ணெய் விலையின் சரிவு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஆதாயம் ஆகியவை பணவீக்க மதிப்பீட்டை குறைக்க துணைபுரிந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் வங்கிகளின் கடன் கொள்கைகளில் தனது இறுக்கத்தை தொடர்கிறது மத்திய வங்கி.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த காலாண்டு முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 7.1 சதவீதமாக குறைந்தது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் இன்னும் தேக்கநிலையே காணப்படுகிறது. நாட்டின் குறைவான உற்பத்தி மற்றும் விவசாய பொருட்களுக்கான சரியான விலை கிடைக்காதது பணவீக்க மதிப்பீட்டை குறைக்க காரணமாகவும் அமைந்துள்ளது. இதன் தாக்கம் தான் நாட்டின் GDP மதிப்பில் தெரிய வந்துள்ளது.

 

நடப்பு வருடத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.4 சதவீத அளவில் இருக்கும் என நிதி கொள்கை குழு கூறியுள்ளது. வங்கிகளின் பத்திரங்கள் வைத்திருக்கும் விகிதத்தை (Bond Holding) காலாண்டிற்கு ஒரு முறை 25 புள்ளிகள் என்ற அளவில் குறைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள நீர்மை நிறையையும் (Liquidity) அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு பெரும்சுமையாக இருந்த வட்டி விகித மாற்ற அமலில், இப்போது புதிய முறை சொல்லப்பட்டுள்ளது. முன்னர் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது, உடனே வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கடன் அளவில் வட்டி விகிதத்தை உயர்த்தும். அதே சமயம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், அது விரைவாக வாடிக்கையாளர்களுக்கு சேராது. வட்டி விகித உயர்வில் மட்டும் விரைவான நடைமுறையை கையாளும் வங்கிகளால் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சுமையாக காணப்பட்டது. மிதவை விகிதத்தில் (Floating Rate) கடனை பெறுவோருக்கு இது ஒரு சிக்கலாகவே இருந்தது. ஆனால் இவற்றில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய முறையை புகுத்த உள்ளது.

 

இதுவரை வங்கிகளுக்கு உள்ளே மட்டும் சொல்லப்பட்ட வட்டி விகித மாற்றம், இனி வெளிப்படையாக வட்டி விகித வரையரைகளுடன் (Benchmark) வரவிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிதவை வட்டி விகிதத்தை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். வங்கிகளும் அதனை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த புதிய முறை வாடிக்கையாளர்களுக்கு நலனை கொடுக்கும். அதே வேளையில், வங்கிகளில் இதற்கான கொள்கைகளும் மாற்றப்படும். வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் இது தொடக்கத்தில் பாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வட்டி விகித வரையறை வரும் ஏப்ரல் 1, 2019 முதல் அமலாகலாம் என தெரிகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

Contradiction between the RBI and Central Government

 

மத்திய ரிசர்வ் வங்கிக்கும் (Reserve Bank of India), மத்திய அரசுக்குமான கொள்கைகள் எப்போதும் வேறுபட்டு கொண்டே உள்ளன. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும், அதற்கு பின்னரும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் அரசின் நிதி அமைச்சருக்கு இடையான இடைவெளி எப்போதும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

 

இந்நிலையில் இதன் தாக்கம் தற்போது சற்று அதிகமாக தான் உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கம், அன்னிய செலவாணி மற்றும் அதனை சார்ந்த நிதி முடிவுகளில் எப்போதும் கண்டிப்பான நடவடிக்கையை பின்பற்றும். அதே சமயத்தில் ஆட்சியில் அமரும் மத்திய அரசு, தனது சூழ்நிலைக்கேற்ற முடிவுகள் மற்றும் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும். இதனால் இருவருக்குமான இடைவெளி முரண்பாட்டில் தான் முடிவடைகிறது.

 

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜன் (Ex. Governor Raguram Rajan) இருக்கும் போதும், இது போன்ற முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையை மத்திய அரசு ஆதரித்து கொண்டிருந்த போது, பாரத ரிசர்வ் வங்கி அதன் மேல் அவ்வளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அதே போன்று, மத்திய அரசு வட்டி விகிதத்தை குறைக்க (Reducing Interest Rates) முயலும் போது, ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பதையும் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் சரிவிலும் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மீதான வாராக்கடன் பிரச்சனையில் (Bad Debt) பாரத ரிசர்வ் வங்கி எடுக்கும் கண்டிப்பான நடவடிக்கையின் மீது, மத்திய அரசுக்கும் பிணைப்பு ஏற்படவில்லை. வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அது போன்ற வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.

 

ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் இருந்தும் வங்கிகளின் வாராக்கடனை (Non performing asset – NPA) கட்டுப்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், தங்களுக்கான அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை என பாரத ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி துணைபுரிவதில்லை என மத்திய அரசு நேரிடையாகவே கூறியுள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்களுக்கென தனி டாலர் பரிமாற்ற வசதியை (Foreign Exchange) அரசு ஏற்படுத்த முயற்சிக்கையில், அதற்கான ஒதுக்கீட்டை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லீக்கும் இடையே வெடிப்பு ஏற்பட்டது போல், இப்போது உர்ஜித் பட்டேல் – அருண் ஜெட்லீ இடையே முரண்பாடு உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

No change on Repo rate – Reserve Bank of India

 

நேற்று நடைபெற்ற (05-10-2018) நிதி கொள்கை குழு கூட்டத்தில் (Monetary Policy Committee), ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், முன்னர் இருந்த 6.5 சதவீத வட்டி தொடரும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் சார்ந்த நிறுவனங்களுக்கு நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உலக பொருளாதாரத்தில் காணப்படும் மந்தமான நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க – மற்ற நாடுகளுக்கிடையேயான வர்த்தக போர், நாட்டில் உள்ள வங்கிகளின் நிதி நிலை ஆகியவை சந்தையை வெகுவாக பாதித்துள்ளன. இந்த வாரத்தில் (திங்கள் – வெள்ளி) மட்டும் இந்திய பங்குச்சந்தை 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. இந்த சரிவு கடந்த இரண்டு வருடங்களில் முதன்முறையாக நிகழ்வதாகும்.

 

கடந்த இரு கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Rate) உயர்த்திய ரிசர்வ் வங்கி இந்த முறை மாற்றம் எதுவுமில்லை என அறிவித்தது, பங்குச்சந்தையில் பாதகமான சூழ்நிலையில் அமைந்தது. ஏற்கனவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்திருப்பதால் அதனை சரிகட்ட வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

 

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் (அக்டோபர்-மார்ச்) சில்லரை பணவீக்கம் 3.8 சதவீத்திலிருந்து 4.5 சதவீதத்திற்குள் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என குழுவில் உள்ள 6 பேரில் 5 பேர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 % ஆகவும், பண இருப்பு விகிதம் (CRR) 4 சதவீதத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதத்திலும் மாற்றம் இல்லாமல் அதே  6.75 சதவீதத்தில் இருக்கும்.

 

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFC) சொத்துக்கள் மற்றும் கடன்கள் பொருத்தமற்றவையாக உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிறுவனத்தின்  கடன் பிரச்னையால், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மெய்நிகர் நாணய தடையில் எந்த மாற்றமுமில்லை – ரிசர்வ் வங்கி

மெய்நிகர் நாணய தடையில் எந்த மாற்றமுமில்லை – ரிசர்வ் வங்கி

No Change or Research on Cryptocurrency Ban – RBI

‘கிரிப்டோ கரன்சி’ (Cryptocurrency) எனப்படும் மெய்நிகர் நாணய வர்த்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. மெய்நிகர் நாணயங்கள்  Bitcoin, Ethereum, Litecoin, Ripple, Stellar என பல்வேறு வகைகளில் இணையத்தில் வர்த்தகமாகின்றன.

 

ஏறத்தாழ 1500 க்கும் மேற்பட்ட மெய்நிகர் நாணய வகைகள் மற்றும் அதன் வர்த்தக மதிப்பு 27,320 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாகவும் மெய்நிகர் நாணய தளங்கள் சொல்கின்றன.

 

இணையதள வாயிலாக செயல்படும் இந்த பரிமாற்றத்தில் தொழில்நுட்ப ரீதியாக நம்பகத்தன்மை இல்லை என்று பல நாடுகள் மெய்நிகர் பரிமாற்றத்தை தடை செய்துள்ளன. இவற்றில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளது. இருப்பினும், சில வெளிநாட்டு மெய்நிகர் இணையதள தரகர்கள் மூலம் இந்தியாவில் இந்த கிரிப்டோ கரன்சி வர்த்தகம் சட்டவிரோதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

இன்னும் இதற்கான சட்டங்களும், ஒழுங்குமுறை கொள்கைகளும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் வருண் சேதி என்ற தொழில் ஆலோசகர், மெய்நிகர் நாணயம் சம்மந்தமாக பாரத ரிசர்வ் வங்கியிடம் தகவல் கேட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ‘ மெய்நிகர் நாணயம் சம்மந்தமாக இதுவரை  எந்த குழுவும் அமைக்கப்படவில்லை, இது சார்ந்து எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாது. மேலும் மற்ற நாடுகளுடன் கலந்து ஆலோசிக்கும் எண்ணம் இதுவரை இல்லை’ எனவும் கூறியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த ஏப்ரல் 6 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில் (Prohibition on dealing in Virtual Currencies) மெய்நிகர் நாணய வர்த்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று எனவும்(Ban in India), இதனை கையாள்வதில் வங்கிகள், இ-வாலட் தளங்கள், பணப்பரிமாற்ற சேவை வழங்குவோர் மற்றும் வேறு ஏதேனும் தொழில் முனைவோர்களும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com