HIV AIDS Health Insurance

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது

Insurance Companies do not refuse to provide insurance for HIV and AIDS Patients

நமது நாட்டில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் (கடந்த ஆண்டு வரை) ஆகும். உலகளவில் தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு அடுத்தாற் போல் எச்.ஐ.வி. நோய் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

 

எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் காப்பீடு வழங்குவது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை கேட்டிருந்தது. அதன் சாரமாக, சமீபத்தில் இர்டா (Insurance Regulatory and Development Authority of India -IRDAI) ஆணையத்தின் தலைவர் பேசும் போது, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது போன்ற நோயாளிகளுக்கு சிறப்பான திட்டத்தையோ அல்லது ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தையோ அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்றார்.

 

காப்பீடு நிறுவனங்களும் இந்த வரைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்குவதில் எந்த பாரபட்சமும் கூடாது எனவும், காப்பீட்டை மறுக்கவும் கூடாது என காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதே நேரத்தில் காப்பீடு நிறுவனங்களுக்கும் இது ஒரு சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை மெடிகிளைம் (Mediclaim -Health Insurance) திட்டத்தில், ஒருவர் காப்பீடு திட்டத்தை வாங்கிய பிறகு அவர், இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கோரிக்கை (Claims) ஏற்கப்படும் என இருந்தது. இனி காப்பீடு நிறுவனங்கள் புதிய காப்பீடு திட்டத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

காப்பீடு நிறுவனங்கள் புதிய காப்பீடு பெறுபவர்களுக்கான தகவல்களையும், ஏற்கனவே காப்பீடை பெற்றவர்களின் தரவுகளையும் நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படலாம். சிலர் நோயின் தன்மையினை மறைத்து காப்பீட்டு திட்டத்தை பெற்று கொண்டு, பின்பு அறிவிக்கும் பழக்கமும் உள்ளது. ஏனென்றால், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் போன்ற கவரேஜ்களுக்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கலாம். அவர்களுக்கான சிகிச்சை சிறப்பம்சம் கொண்டதாக இருக்கும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தாமாக வந்து அறிவிக்கும் பயனாளர்களுக்கு அதற்கான சலுகைகள் மற்றும் பலன்கள் உறுதிப்படுத்தப்படும் என காப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s