Tag Archives: demonetisation

பணவீக்க மதிப்பை வெளியிட முடியாத நாடாக ஜிம்பாப்வே

பணவீக்க மதிப்பை வெளியிட முடியாத நாடாக ஜிம்பாப்வே 

The country withholding Inflation data – Zimbabwe

 

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு தான் ஜிம்பாப்வே. காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பெயர் போன இந்நாடு, கடந்த சில வருடங்களாக பொருளாதார உலகில் தனது பெயரை பதித்து வருகிறது.

 

பட்ஜெட் பற்றாக்குறையால் திண்டாடும் ஜிம்பாப்வே, முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்காவின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடாக விளங்கியது. தவறான நிதி நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் இந்நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளது. நாட்டின் வருவாய் நிக்கல்(Nickel), பிளாட்டினம், வைரம் மற்றும் புகையிலை ஏற்றுமதி மூலம் பெறப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நூறு ட்ரில்லியன் டாலர் நோட்டை(100 Trillion Dollar Currency Note) அடித்த பெருமை, ஜிம்பாப்வே நாட்டையே சேரும். தவறான பணமதிப்பிழப்பு கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்தது. இன்று அந்நாட்டில் நீர் ஆதாரம் மற்றும் பொருளாதரம் சார்ந்த விஷயங்கள் மோசமாக உள்ளன.

 

கடந்த 2018ம் வருடம் ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(சில்லரை விலை – CPI) 4.29 சதவீதமாக இருந்தது. அந்நாட்டில் விலைவாசி கிடு கிடுவென ஏறி, இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டின் பணவீக்க மதிப்பு 175.66 சதவீதமாக உள்ளது. 2009ம் ஆண்டில் இந்த நாட்டின் பணவீக்கம் (-7.50) சதவீதமாக இருந்துள்ளது. இதனை பணவாட்டம்(Deflation) என்று சொல்லலாம்.

 

உணவு பொருட்களின் அதிகபட்ச விலை உயர்வால் தான் நாட்டின் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் உணவு பொருட்களின் பணவீக்கம் 252 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் தவிர வீட்டு மனை, போக்குவரத்து மற்றும் இதர சேவைகளில் விலைவாசி அதிகரித்துள்ளது.

 

ஜிம்பாப்வே நாடு 2009ம் ஆண்டில் அமெரிக்க டாலரை தனது நாட்டின் மதிப்பாக ஏற்று கொண்டது. இதனை அடுத்து கடந்த 2015ம் வருடம் பணமதிப்பிழப்பு(Demonetization) நிகழ்வும் ஜிம்பாப்வே நாட்டில் ஏற்பட்டது. இந்த இரண்டு கொள்கைகளும் இந்நாட்டிற்கு சாதகமாக அமையவில்லை எனலாம்.

 

ஏறி கொண்டிருக்கும் விலைவாசியால், இந்நாடு தனது பணவீக்க மதிப்பு வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணவீக்க விவரங்கள் வெளியிடப்படாது எனவும், பொருளாதாரம் சார்ந்த சில தகவல்களை அரசு சேகரிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

Contradiction between the RBI and Central Government

 

மத்திய ரிசர்வ் வங்கிக்கும் (Reserve Bank of India), மத்திய அரசுக்குமான கொள்கைகள் எப்போதும் வேறுபட்டு கொண்டே உள்ளன. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும், அதற்கு பின்னரும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் அரசின் நிதி அமைச்சருக்கு இடையான இடைவெளி எப்போதும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

 

இந்நிலையில் இதன் தாக்கம் தற்போது சற்று அதிகமாக தான் உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கம், அன்னிய செலவாணி மற்றும் அதனை சார்ந்த நிதி முடிவுகளில் எப்போதும் கண்டிப்பான நடவடிக்கையை பின்பற்றும். அதே சமயத்தில் ஆட்சியில் அமரும் மத்திய அரசு, தனது சூழ்நிலைக்கேற்ற முடிவுகள் மற்றும் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும். இதனால் இருவருக்குமான இடைவெளி முரண்பாட்டில் தான் முடிவடைகிறது.

 

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜன் (Ex. Governor Raguram Rajan) இருக்கும் போதும், இது போன்ற முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையை மத்திய அரசு ஆதரித்து கொண்டிருந்த போது, பாரத ரிசர்வ் வங்கி அதன் மேல் அவ்வளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அதே போன்று, மத்திய அரசு வட்டி விகிதத்தை குறைக்க (Reducing Interest Rates) முயலும் போது, ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பதையும் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் சரிவிலும் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மீதான வாராக்கடன் பிரச்சனையில் (Bad Debt) பாரத ரிசர்வ் வங்கி எடுக்கும் கண்டிப்பான நடவடிக்கையின் மீது, மத்திய அரசுக்கும் பிணைப்பு ஏற்படவில்லை. வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அது போன்ற வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.

 

ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் இருந்தும் வங்கிகளின் வாராக்கடனை (Non performing asset – NPA) கட்டுப்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், தங்களுக்கான அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை என பாரத ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி துணைபுரிவதில்லை என மத்திய அரசு நேரிடையாகவே கூறியுள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்களுக்கென தனி டாலர் பரிமாற்ற வசதியை (Foreign Exchange) அரசு ஏற்படுத்த முயற்சிக்கையில், அதற்கான ஒதுக்கீட்டை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லீக்கும் இடையே வெடிப்பு ஏற்பட்டது போல், இப்போது உர்ஜித் பட்டேல் – அருண் ஜெட்லீ இடையே முரண்பாடு உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com