வரும் திங்கள் முதல் இந்த 9 நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்படுகின்றன
These 9 Stocks are to be delisted from Monday – BSE India
சில மாதங்களுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை பட்டியலில் இருந்து, விதிமீறல் காரணமாக பல்வேறு நிறுவன பங்குகள் நீக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இப்போது பின்வரும் ஒன்பது நிறுவன பங்குகளும் வரும் திங்கள் கிழமை (05-11-2018) முதல் மும்பை பங்குச்சந்தையிலிருந்து (Bombay Stock Exchange – BSE) நீக்கப்படவுள்ளன.
அணில் லிமிடெட் (Anil Ltd), பிரேக்ஸ் ஆட்டோ (Brakes Auto India), இண்டஸ் பிளா (Indus Fila), ஐ.கியூ.இன்போடெக் (IQ Infotech), லோக் ஹவுசிங் (Lok Housing), மெட்ரோபோலி ஓவர்சீஸ் (Metropoli Overseas), பிதாம்பூர் ஸ்டீல் (Pithampur Steels), பிரகாஷ் சால்வெண்ட் (Prakash Solvent Extractions) மற்றும் சிபார் மென்பொருள் சேவை (Sibar Software Services) நிறுவனம் ஆகிய 9 நிறுவன பங்குகள் வரும் திங்கள் முதல் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்த நிறுவனங்களின் சந்தை செயல்பாடு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் மும்பை பங்குச்சந்தை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்குகள் ஏற்கனவே கடந்த 6 மாத காலமாக மும்பை சந்தையில் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்பது நிறுவனங்களின் இயக்குனர்கள், நிறுவனர்கள், மற்றும் அதனை சார்ந்த குழு நிறுவனங்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சந்தையில் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஒன்பது நிறுவனங்களின் நிறுவனர்கள் சந்தையில் உள்ள பொது பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும், அதற்கான பங்கு விலை மதிப்பை வெளியிடுமாறும் மும்பை பங்குச்சந்தை அறிவுறுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இனி சந்தையில் வர்த்தகமாகாது எனவும், பங்குகளை கொண்ட பங்குதாரர்கள் நிறுவனர்களிடம் ஒப்படைப்பதற்கான செயல்பாட்டை செய்யுமாறும் செபி சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் பங்குச்சந்தையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் பங்குகள் நீக்கப்பட்டுள்ளன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை