Tag Archives: interest rates

நாட்டின் வங்கி வட்டி விகிதம் 2021 – சிறு பார்வை

நாட்டின் வங்கி வட்டி விகிதம் 2021 – சிறு பார்வை 

India’s Interest Rate 2021 – Little Insights

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் நடைபெற்ற நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என சொல்லப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக எட்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் 4 சதவீதம் என்ற அளவு மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகவும், கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் முயற்சியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

வங்கிகளில் கடன் மற்றும் டெபாசிட்டுக்கான அடிப்படை வட்டி விகிதம் 7.30 % முதல் 8.80 % வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேற்பட்ட டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 4.90 % – 5.50 % என்ற அளவில் உள்ளது. இருப்பினும் நடைமுறை வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் இருப்பதும் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது எனலாம்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வங்கி வட்டி விகிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நிலையில், தனிநபர் மற்றும் தொழில் புரியும் நிறுவனம் குறைவான வட்டி விகிதத்தில் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இதற்கு மாறாக பணவீக்கம் அதிகரிக்கும் போது, அதனை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்களும் அதிகரிக்கக்கூடும். இது பொருளாதாரத்திற்கும், பங்குச்சந்தை முதலீட்டிற்கும் சாதகமாக இருக்காது.

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருந்து தொழிலுக்கு சாதகமாக அமையும் போது வேலைவாய்ப்புகளும், நாட்டின் பொருளாதாரமும் வேகமெடுக்கும். இது முதலீட்டு சந்தைக்கு நேர்மறையாக அமையும். அதே வேளையில் தங்கம், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட் மற்றும் இதர சேமிப்பு திட்டத்தில் வருவாய் குறைவாக காணப்படும். நடப்பில் காணப்படும் உலக பங்குச்சந்தை ஏற்றத்திற்கு வட்டி விகித குறைவும் ஒரு காரணம்.

பொருளாதார வீழ்ச்சி காலங்களில் பங்குச்சந்தை முதலீடு இறக்கத்தையும், தங்கம் போன்ற முதலீடு ஏற்றத்தையும் பெறும். நடப்பாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கான சிறு சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதத்திலும் மாற்றம் ஏதுமில்லை. மூத்த குடிமக்களுக்கான ஐந்து வருட டெபாசிட்(Senior Citizen Savings Scheme) திட்டத்தில் 7.4 சதவீதமும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் என்ற வட்டி விகிதமும் தொடரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் வங்கி வட்டி விகிதம், சேமிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு சாதகமான நிலையில் இல்லை. பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பொதுவாக வங்கிகள் அளிப்பதில்லை. தற்போதைய வட்டி விகித குறைவு நிலையில் தங்கம், ரியல் எஸ்டேட், பரஸ்பர நிதிகள், பங்குகள், துணிகர முதலீடு என முதலீட்டாளர்கள் தங்களது தேர்வை மாற்றும் நிலை அதிகரித்துள்ளது. புரிந்து கொள்ள முடியாத முதலீடு மற்றும் மோசடி திட்டங்களில் ஏமாற்றப்படும் நிலையும் தற்போது அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், இதற்கு மாற்றாக பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின் வருவாய் சற்று ஆறுதல் அளிக்கும். வரும் மாதங்களில் பணவீக்கம் அதிகரித்தால் மட்டுமே, அதனை சார்ந்து வட்டி விகிதமும் உயர்த்தப்படும். அதுவரை பங்குச்சந்தை போன்ற முதலீட்டு சந்தைக்கு பணவரவில் தடை ஏதும் இருக்காது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை

மத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை 

Recent Bank Interest rates – RBI Policy review

நாட்டின் ஜனவரி மாத சில்லரை விலை பணவீக்கம் 4.06 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதமாக பணவீக்க விகிதம் இருந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற அளவில் சில்லரை விலை பணவீக்கம் சொல்லப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றமும் அறிவிக்கப்படுகிறது. சமீபத்திய மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம்(RBI Monetary Policy) இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை எனவும், அதற்கு முந்தைய காலத்தில்  சொல்லப்பட்ட வட்டி விகிதங்கள் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டிருந்தது.

வங்கிகளுக்கான ரெப்போ(REPO) வட்டி விகிதம் தற்போது 4 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து, நாட்டில் உள்ள வணிக வங்கிகள் கடன் பெறும் விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதமாக சொல்லப்படுகிறது. பொதுவாக நாட்டில் நிலவும் பணவீக்கத்தை(விலைவாசி) கட்டுப்படுத்த, ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய வங்கி ஒரு கருவியாக பயன்படுத்தும்.

ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதமாக உள்ளது. நாட்டில் உள்ள வங்கிகளிடம்  இருந்து மத்திய வங்கி கடன் வாங்கும் விகிதத்தை, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்கிறோம். விளிம்பு நிலை விகிதம்(Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும், வங்கி விகிதம் 4.25 சதவீதமாகவும் உள்ளது.

வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம்(Cash Reserve Ratio – CRR) 3 சதவீதமாகவும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18 சதவீதமாகவும் உள்ளது. ரொக்கம், தங்கம், பத்திரங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வடிவில் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புத்தொகை விகிதம் தான் எஸ்.எல்.ஆர். விகிதம்.

இது வங்கிகளின் செயல்பாட்டை மட்டுமில்லாமல், நாட்டின் கடன் வளர்ச்சியை ஒழுங்குபடுத்த உதவும். வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதம்(Base Rate – Lending / Deposit) 7.30% – 8.80% என்ற அளவில் சொல்லப்பட்டுள்ளது. வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 2.70% – 3.00% என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 4.90 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதம் வரை சொல்லப்பட்டிருக்கிறது.

2030ம் ஆண்டுடன் முடிவடையும் அரசு கடன் பத்திரங்களின் வருவாய்(5.85% GS 2030) ஆறு சதவீதத்திற்கு அருகாமையில் வர்த்தகமாகி வருகிறது. பணவீக்கம் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு முடிவின் அடிப்படையில் தான் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும், வங்கிகளின் வட்டி விகிதமும் மாறுபடும். பணவீக்கம் உயர்ந்தால் வங்கிகளின் வட்டி விகிதமும் உயர்த்தப்படும். எனவே, மத்திய வங்கி இதனை எச்சரிக்கையாக கையாளும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

20 வருடங்களுக்கு வட்டியில்லா வங்கிக்கடன் – எங்கே ?

20 வருடங்களுக்கு வட்டியில்லா வங்கிக்கடன் – எங்கே ?

Zero Percent Fixed Interest rate loan for 20 Years – Homeowners

வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைவாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கான வட்டி விகிதமும் மிக குறைவாக தான் உள்ளது. ஒரு வருட டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்திற்கு கீழாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள்(Bank rates) குறையும் போது, கடன் பத்திரங்களுக்கான(Bonds) தேவை அதிகரிக்கும். இதன் மூலம் பத்திரங்களுக்கான வட்டி விகிதம், வங்கிகளை காட்டிலும் அதிகரிக்க செய்யும். இது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும். தற்போதைய நிலையில், வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதால், பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்களின்(Debt Mutual Funds) வட்டி விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 8-9 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, முதலீட்டாளர்களுக்கு வங்கியில் வாய்ப்பு இல்லையென்றாலும், வங்கிக்கடன் பெறுவோருக்கு இது அரிய வாய்ப்பாக தான் அமையும். நடப்பில் வீட்டுக்கடனுக்கான(Home loans) வட்டி விகிதம் சராசரியாக 7.5 சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. விலைவாசியை தவிர்த்து பார்க்கும் போது, இது மேலும் நீடிக்கும் நிலை தான் தற்போது உள்ளது.

உலகளவில் காணப்படும் வட்டி விகிதங்களில் பெரும்பாலும் ஆசிய, ஆப்பிரிக்க  நாடுகளில் தான் சற்று அதிகமாக காணப்படுகிறது. வளர்ந்த நாடுகளின் வட்டி விகிதங்கள் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. அமெரிக்கா, ஆத்திரேலியா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் உள்ள வட்டி விகிதம் 0.5 சதவீதத்திற்கு குறைவே.

ஜப்பானில் சொல்லவே வேண்டாம். வங்கியில் உங்கள் பணத்தை வைத்திருக்க நீங்கள் தான் வங்கிக்கு பணம் கட்ட வேண்டும். அந்த அளவுக்கு அந்நாட்டின் விலைவாசியும்(பணவாட்டம்), வட்டி விகிதமும் உள்ளது. ஜப்பானின் 10 வருட அரசு பத்திரங்களின் வருவாய்(Bond yield) 0% ஆக உள்ளது.

இது போல டென்மார்க்கிலும் அதன் பணவீக்கம் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த எட்டு வருடங்களாக அந்நாட்டின் வட்டி விகிதம் 0% க்கு குறைவாகவே உள்ளது கவனிக்கத்தக்கது. 2013-2017 காலகட்டங்களில் டென்மார்க் நாட்டின் மத்திய வங்கியினுடைய வட்டி விகிதத்தை, அதன் சராசரி பணவீக்கத்தில் கழிக்கும் போது, கிடைக்கப்பெறும் நிகர விகிதம் (-1.40) சதவீதமாக உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு, 20 வருட கடன் பத்திரங்களின் வருவாய், டென்மார்க்கில் 0% ஆக சொல்லப்பட்டிருந்தது. இதனை ஒட்டி தற்போது டென்மார்க்கின் டோட்டல் கிரெடிட்(Totalkredit) என்ற வங்கி, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை 0% ஆக கூறியுள்ளது. அதாவது 20 வருட வீட்டுக்கடனுக்கு, வட்டியில்லா அசலை மட்டும் செலுத்துவதை அந்த வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே இதனை போல சில நிறுவனங்கள் கடந்த காலங்களில் மிக குறைந்த வட்டி விகிதத்தை டென்மார்க் நாட்டில் வெளியிட்டுள்ளது.

வரக்கூடிய நாட்களில் மேலும் சில வங்கிகள் இது போன்ற செயல்பாடுகளை கடைபிடிக்கும் என சொல்லப்படுகிறது. பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் எதிர்மறை நிலையில்(Negative Rates) செல்லும் போது, நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு வட்டி வருவாய் அளிக்கப்படாமல், அபராத கட்டணம் செலுத்த நேரிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதங்கள் எப்படி ?

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதங்கள்  எப்படி ?

No Change in REPO Rate, Deposit Interest Rates in State Bank of India

கடந்த வாரம் நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(MPC)  வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், முந்தைய 4 சதவீத ரெப்போ வட்டி விகிதமே தொடரும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், விளிம்பு நிலை விகிதம் (Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

எதிர்பாராத நிலையில் செல்லும் சில்லரை விலை பணவீக்கம், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக (-9.5) இருக்கும் எனவும் மத்திய வங்கி சுட்டி காட்டியுள்ளது. அதே நேரத்தில் 2021-22ம் நிதியாண்டில் நல்லதொரு வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக சொல்லியுள்ளது.

ரெப்போ விகிதத்தில்(REPO rate) மாற்றம் எதுவுமில்லை என சொல்லப்பட்ட நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிலவும் வட்டி விகிதங்களை பார்ப்போம். ஏற்கனவே சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக (ஆண்டுக்கு) உள்ளது.

சிறு சேமிப்பு கணக்கின் கீழ் 4 வழங்கப்படும் வட்டி 4 சதவீதமாகவும், பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் லிக்விட் பண்டுகளின் வட்டி விகிதம் 4 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில், வங்கி சேமிப்பு கணக்கில் சொல்லப்பட்ட விகிதம் மிக குறைவே. இருப்பினும், பண பரிமாற்றத்திற்கு பெரும்பாலும் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்து தான் இருக்க வேண்டியுள்ளது.

டெபாசிட் முறையில் 45 நாட்களுக்கு (7 Days to 45 Days) குறைவான காலத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 2.90 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்களாக இருப்பின், 3.40 சதவீதமாக இருக்கிறது. 46 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு குறைவான காலத்திற்கு 3.90 சதவீதமும், மூத்த குடிமக்கள் எனில் 4.40 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான டெபாசிட் காலத்திற்கு 4.40 சதவீதமாக உள்ளது. இது மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான, அதே வேளையில் இரண்டு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு 4.90 சதவீதமும், 2-3 வருடங்களுக்கு 5.10 சதவீதமும் மற்றும் 3 முதல் 5 வருடங்களுக்கான வட்டி விகிதம் 5.30 சதவீதமாகவும் உள்ளது.

ஸ்டேட் வங்கியில்(SBI) ஐந்து வருடம் முதல் 10 வருடங்கள்  வரையிலான காலத்திற்கு 5.40 சதவீதம் டெபாசிட் வட்டி விகிதமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு இது 6.20 சதவீதமாக உள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், டெபாசிட் தாரர்களுக்கு கிடைக்கப்பெறும் வட்டி போதுமானதாக இருப்பதில்லை. நடப்பில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் சாதகமான அம்சமாக இல்லை. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்களுக்கு, ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு மியூச்சுவல் பண்டுகளில் காணப்படும் கடன் சார்ந்து பண்டுகளில் முதலீடு செய்யும் போது, கணிசமான வட்டி வருவாயை பெறலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019

Small Savings Scheme Interest rates for the Period – October to December 2019

அஞ்சலக மற்றும் வங்கிகளின் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலத்திற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்திருப்பினும், குறைந்த பணவீக்கம் காணப்படும் நிலையில், பி.எப்.(Provident Fund) போன்ற சேமிப்புக்கு வட்டி விகிதம் நன்றாக உள்ளன.

கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கு சொல்லப்பட்ட வட்டி விகிதம் தான் தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அக்டோபர் – டிசம்பர் காலாண்டிற்கு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், தற்போதைய பொருளாதார மந்த நிலையில் இது ஒரு நல்ல வட்டி விகிதமே.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond Yield) வட்டி விகிதம் அதிகரிக்கும். இதே போல, வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமாகும் போது கடன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். இப்போதைய சூழ்நிலையில், வங்கி வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Debt Funds) மூலம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதன் வாயிலாக பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாயை பெறலாம்.

வங்கிகள் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் சற்று சாதகமாக உள்ளன. அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு 5 வருட டேர்ம் டெபாசிட் திட்டத்திற்கு 7.70 சதவீதமும், 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.60 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

Small Savings Interest rate October 2019

தேசிய சேமிப்பு பத்திரம்(National Savings Certificate) ஐந்து வருட கால அளவிற்கு 7.90 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.90 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பி.எப். பிடித்தம் உள்ளது. இதனை போன்ற சேமிப்பு வாய்ப்பு இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

பி.பி.எப்.(Public Provident Fund) திட்டத்தில் முதலீடு செய்யும் போது, வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வருமான வரி சலுகையும் உண்டு. அதே போல், இதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டி வருவாய் மற்றும் முதிர்வு தொகைக்கும் வரி இல்லை என்பது சாதகமான விஷயம். 

செல்வமகள் சேமிப்பு(Sukanya Samriddhi) திட்டத்தில் 8.40 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.60 சதவீத வட்டியும் கூறப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு தேவையான ஒரு வருட டெபாசிட் செய்யும் பட்சத்தில், அதற்கான வட்டி விகிதம் 6.90 சதவீதமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் – 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் – 2019

Interest Rates for Small Savings Scheme – Effect from Jan 2019

 

கடந்த சில காலங்களாக அஞ்சலக சேமிப்பு(Postal Savings) மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் குறைவாகவே காணப்படுகிறது. அதே நேரத்தில் நிதி நிறுவனங்களுக்கான கடன் பத்திரங்களின் (Debentures) வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதம் வரை தரப்படுகிறது. இருப்பினும், சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை பொறுத்தவரை அஞ்சலக மற்றும் வங்கிகளின் பாதுகாப்பு போன்று மற்ற நிறுவனங்களின் கடன் பத்திர வெளியீட்டில் கிடைப்பதில்லை.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் இல்லாதவர்கள், ஆனால் சிறிது ரிஸ்க் எடுக்க நினைப்பவர்களுக்கு கடன் பத்திரங்கள் உதவலாம். நடுத்தர வருமானம் கொண்டவர்கள் மற்றும் பாதுகாப்பான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறு சேமிப்பு திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமே.

 

சமீபத்தில் நிதி அமைச்சகத்தால் (Ministry of Finance) வெளியிடப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் நடப்பு மாதம் ஜனவரி முதல் வரும் மார்ச் மாதம் வரையிலான (Jan-Mar 2019) காலத்திற்கு பொருந்தும். சிறு சேமிப்புக்கான வட்டி விகித முறையை அரசு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைத்து வெளியீட்டு வருகிறது நினைவிருக்கலாம்.

 

புதிய வட்டி விகிதங்கள் – ஜனவரி 1, 2019 முதல்,

 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund -PPF) திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதம் 8 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர்-டிசம்பர் காலத்திலும் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் திட்டத்திற்கான கூட்டு வட்டி வருட காலத்தில் (Annually) செயல்படும்.

 

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு (Sukanya Samriddhi) திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லாமல் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச முதலீட்டு தொகை (Minimum Investment) ரூ. 1000 ஆகும். வட்டி விகிதம் வருட காலத்தில் செயல்பட ஆரம்பிக்கும்.

Small Savings Scheme Interest 2019

 

மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen) 5 வருட சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 8.7 சதவீதமாக தொடரும். வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக செலுத்த வேண்டும். அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ. 15 லட்சம் வரை இருக்கலாம்.

 

அடிப்படை சேமிப்பு திட்டத்திற்கான (Basic Savings Account) வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. ஏற்கனவே இருந்த 4 சதவீத வட்டியே இம்முறையும் தொடரும். அஞ்சலகத்தில் ரூ. 20 ம், வங்கிகளில் அதற்கு சொல்லப்பட்ட குறைந்தபட்ச பராமரிப்பு தொகையும், அடிப்படை சேமிப்பு திட்டத்தின் குறைந்த முதலீடு ஆகும். இத்திட்டத்தில் அதிகபட்ச தொகைக்கு வரம்பு ஏதும் கிடையாது.

 

ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட காலத்திற்கான வைப்பு (Term Deposit) திட்டத்தில் 7 சதவீதமும், ஐந்து வருட காலத்திற்கு (5 Years Term Deposit)  7.8 சதவீதமும் வழங்கப்படுகிறது. கடந்த முறை ஒரு வருட காலத்திற்கு 6.9 சதவீத வட்டி விகிதமும், மூன்று வருடத்திற்கு 7.2 சதவீதமும் இருந்தது கவனிக்கத்தக்கது.

 

ஐந்து வருட தொடர் வைப்பு (Recurring Deposit -RD) திட்டத்தில் கடந்த முறை சொல்லப்பட்ட 7.3 சதவீத வட்டி விகிதம் இம்முறையும் தொடரும். அதே போல மாதாந்திர வருமான திட்டத்தில் (MIS) பழைய 7.7 சதவீத வட்டி விகிதம் தொடரும். மாதாந்திர வருமான திட்டம் 5 வருட காலத்திற்குரியது. இவற்றுக்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 1500 ம், அதிகபட்சமாக தனிநபர் கணக்கிற்கு (Single Account) ரூ. 4.5 லட்சமும், கூட்டு கணக்கிற்கு (Jointly Account) ரூ. 9 லட்சமும் ஆகும்.

 

ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான (NSC) வட்டி விகிதம் 8 சதவீதம். இவற்றில் குறைந்தபட்சம் ரூ. 100 மற்றும் அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. கிசான் விகாஸ் பத்திரத்தின் (KVP) வட்டி 7.7 சதவீதமாக (Interest Rate) தொடரும் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பத்திரத்தில் குறைந்த தொகையாக ரூ. 1000 முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 9 வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் (9.4 Years) முடிவடையும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

Contradiction between the RBI and Central Government

 

மத்திய ரிசர்வ் வங்கிக்கும் (Reserve Bank of India), மத்திய அரசுக்குமான கொள்கைகள் எப்போதும் வேறுபட்டு கொண்டே உள்ளன. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும், அதற்கு பின்னரும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் அரசின் நிதி அமைச்சருக்கு இடையான இடைவெளி எப்போதும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

 

இந்நிலையில் இதன் தாக்கம் தற்போது சற்று அதிகமாக தான் உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கம், அன்னிய செலவாணி மற்றும் அதனை சார்ந்த நிதி முடிவுகளில் எப்போதும் கண்டிப்பான நடவடிக்கையை பின்பற்றும். அதே சமயத்தில் ஆட்சியில் அமரும் மத்திய அரசு, தனது சூழ்நிலைக்கேற்ற முடிவுகள் மற்றும் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும். இதனால் இருவருக்குமான இடைவெளி முரண்பாட்டில் தான் முடிவடைகிறது.

 

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜன் (Ex. Governor Raguram Rajan) இருக்கும் போதும், இது போன்ற முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையை மத்திய அரசு ஆதரித்து கொண்டிருந்த போது, பாரத ரிசர்வ் வங்கி அதன் மேல் அவ்வளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அதே போன்று, மத்திய அரசு வட்டி விகிதத்தை குறைக்க (Reducing Interest Rates) முயலும் போது, ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பதையும் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் சரிவிலும் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மீதான வாராக்கடன் பிரச்சனையில் (Bad Debt) பாரத ரிசர்வ் வங்கி எடுக்கும் கண்டிப்பான நடவடிக்கையின் மீது, மத்திய அரசுக்கும் பிணைப்பு ஏற்படவில்லை. வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அது போன்ற வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.

 

ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் இருந்தும் வங்கிகளின் வாராக்கடனை (Non performing asset – NPA) கட்டுப்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், தங்களுக்கான அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை என பாரத ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி துணைபுரிவதில்லை என மத்திய அரசு நேரிடையாகவே கூறியுள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்களுக்கென தனி டாலர் பரிமாற்ற வசதியை (Foreign Exchange) அரசு ஏற்படுத்த முயற்சிக்கையில், அதற்கான ஒதுக்கீட்டை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லீக்கும் இடையே வெடிப்பு ஏற்பட்டது போல், இப்போது உர்ஜித் பட்டேல் – அருண் ஜெட்லீ இடையே முரண்பாடு உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com