Tag Archives: reliance industries

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

What’s going on Reliance JIO ? – RIL – The Next Generation Change

நாட்டின் மிகப்பெரிய குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய். எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலை முதன்மையாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் பல தொழில் முகங்களை கடந்து, இன்று ரிலையன்ஸ் ஜியோ என்ற மாபெரும் ஆயுதத்தை கொண்டு சந்தையை ஆக்கிரமித்து விட்டது. திருபாய் அம்பானியை போலவே சிந்திப்பதாக கூறப்படும் நிறுவனர் முகேஷ் அம்பானி, புதிய தொழில்முனைவுகளை சிந்திப்பதும், துணிந்து சில தொழில் முயற்சிகளை செயல்படுத்துவதும் அவருடைய இயல்பாக உள்ளது.

நிறுவனத்தின் கடன் மட்டும் சுமார் 2.90 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் விற்பனை ரூ. 1.36 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் ரூ. 6,348 கோடியாகவும் சொல்லப்பட்டிருந்தது. கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 14 சதவீதமும், லாபம் 10 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves in Balance sheet) ரூ. 4.47 லட்சம் கோடியாக இருந்தாலும், சமீப காலங்களில் அதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் பெரியளவில் வருவாயை ஈட்டவில்லை. அதிகமாக கடன் தொகையை கொண்டிருக்கும் நிலையில், வங்கியில் கடனை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. இதன் காரணமாக நிறுவனர், தனது நிறுவனத்தின் கடனை குறைக்கும் விதமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் உள்ள துணை நிறுவனங்களின் பங்குகளை விற்க முன்வந்தார். இது பொது சந்தையில் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.

ஆரம்ப நிலையில், சவுதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திற்கு தனது எண்ணெய் தொழிலின் சில பங்குகளை விற்கும் பொருட்டு ஒப்பந்தம் செய்திருந்தார். ஆரம்கோ நிறுவனமும் இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலம் முதலீட்டை துவங்க முடிவெடுத்தது. ஆனால் சமீப காலங்களில் அந்த நிறுவனத்திற்கு எண்ணெய் ரீதியான சில சிக்கல்கள் வந்தவுடன், முதலீட்டை துவங்குவதற்கான காலத்தை தள்ளி போட்டது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார தேக்கம் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான நிறுவனங்களை பாதித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய ஆயுதமாக பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஒரு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பாக கண்டார் முகேஷ் அம்பானி. உள்நாட்டு தொலைத்தொடர்பு துறையில் இருந்த நிறுவனங்கள் யாரும் பெரியளவில் முயற்சிக்காத, தகவல் மூலம் வாய்ஸ் கால்களை ஏற்படுத்துவதற்கான வேலையை மும்முரமாக செய்தார்.

ஏன், சந்தை தலைமையாக சொல்லப்பட்ட ஏர்டெல் நிறுவனம் கூட, பெரிதாக அதனை கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் இது போன்ற தொழில்நுட்பங்கள் வர சில நாட்கள் ஆகலாம் என பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நினைத்து கொண்டன. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனைக்கு பிறகான புரட்சியாக ரிலையன்ஸ் ஜியோ பார்க்கப்பட்டது. புதிய தொழில் கொள்கையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்து கொள்ள சிரமப்பட்டது. முடிவில், சில நிறுவனங்கள் காணாமல் போயின, பெரு நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன மற்றும் சில திவால் நிலைக்கு சென்றன.

இன்று ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என்ற மூன்று நிறுவனங்கள் மட்டும் தான் தொலைத்தொடர்பு துறையில்(Telecom) உள்ளது. பொதுத்துறை மினிரத்னா நிறுவனமான பி.எஸ்.என்.எல். அரசின் தவறான கொள்கையால் தனது பலத்தை இழந்து விட்டது. முன்னர், நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், 60 சதவீதத்திற்கு மேலான சந்தை பங்களிப்பை கொண்டிருந்த பி.எஸ்.என்.எல்.(BSNL) இன்று நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் நிறுவனமாக மாறியது.

வோடபோன் ஐடியா(Vodafone Idea) சந்தையில் தனக்கான கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டிருந்தாலும் கடந்த நான்கு வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கடன் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய். இன்று நாட்டின் மிகப்பெரிய சந்தாதாரர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ வந்து விட்டது. ஜியோவின் வருகைக்கு பின்னர், உள்நாட்டில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து விட்டது எனலாம்.

2015ம் ஆண்டுக்கு முன்னர், பெரியளவில் ஏற்றம் காணாத ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பின்னர் மளமளவென ஏறியது. 2017ம் ஆண்டில் பங்குதாரர்களுக்கு 1:1 போனஸ் பங்குகளும்(Bonus Issue) வழங்கப்பட்டது. நிறுவனத்தின் அதிகமான கடன் தொகையால், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இதன் பங்கு விலையை குறைத்து பரிந்துரைத்தது. கடன் தொகையை விரைவாக குறைக்கும் முடிவை எடுத்தார் முகேஷ். ஆரம்கோ ஒப்பந்தம் முடிவதற்கு முன்னர், தனது துணை நிறுவனமான ஜியோவின் ஆயுதத்தை பயன்படுத்தினார்.

நடப்பாண்டில் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்(Facebook) நிறுவனத்தை, ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய அழைத்தார் முகேஷ் அம்பானி. தொழில்நுட்பத்தை சாதகமாக கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்ய ஒரு அருமையான வாய்ப்பு என ஜியோவின் 10 சதவீத பங்குகளை வாங்கியது. இதற்கடுத்தாற் போல், அமெரிக்காவை சேர்ந்த சில்வர் லேக்(Silver Lake) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் சுமார் 5,600 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு நிறுவனமான விஸ்டா ஈக்விட்டி(Vista Equity Partners), ஜியோவின் 2.3 சதவீத பங்குகளை வாங்க சம்மதம் தெரிவித்தது. தற்போது ஜெனரல் அட்லாண்டிக்(General Atlantic) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 2 சதவீத பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. இது போக மற்றொரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலும் கசிகிறது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் முதலீடு செய்ய உள்ள மதிப்பு ரூ. 10,000 கோடி. இதுவும் ஒரு அமெரிக்க நிறுவனமாக முன்னெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்னர், ஆரம்கோ மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவங்களிடம் தனது 20 சதவீத பங்குகளை விற்று, கடனை குறைக்க முயற்சி எடுத்தது. ஆனால், தற்போது ரிலையன்ஸ் ஜியோ மூலம் 15 சதவீதத்திற்கு மேலான பங்குகளை கொடுத்துள்ளது. சமீபத்தில் சவுதி நிறுவனம் ஒன்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பை உயர்த்தி கூறியுள்ளனர். சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சரிவை தடுக்க சரியாக காய்களை நகர்த்தினார் நிறுவனர். பங்குதாரர்களுக்கு உரிமை பங்கு அறிவிப்பும் வெளிவந்தது.

தொழில் புரட்சியை ஏற்படுத்தும் திருபாய் அம்பானி போல, முகேஷ் அம்பானி செயல்படுகிறார் என சொல்லப்பட்டாலும், உண்மையில் கடனை குறைத்து கடனில்லா நிறுவனமாக இருப்பது தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நோக்கம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நுகர்வு சந்தையில் கிடைக்கப்போகும் லாபங்களை எதிர்பார்த்து, தற்போது ஜியோ முதலீட்டை ஒரு வாய்ப்பாக கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய நுகர்வு சந்தையில், இன்று பெரும்பாலான பெரு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக தான் உள்ளன. மேக் இன் இந்தியா, இந்திய நிறுவனங்களே முன்னெடுப்பு என விளம்பரங்கள் காணப்பட்டாலும் பங்குச்சந்தையிலும் அன்னிய முதலீடுகள் தான் அதிகரித்துள்ளது. இது நம்மை போன்ற வேகமாக வளரும் நாட்டிற்கு பின்னாளில், எப்படிப்பட்ட சவாலாக இருக்கும் என்பதனை அறிவதற்கில்லை.

இன்றையளவில், நாட்டில் உள்ள பிரபலமான பிராண்டுகளில்(Flipkart, Zomato, Swiggy, Paytm, Ola) சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தான் முதலீடு செய்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியாக சொல்லப்படும் சில தனியார் வங்கிகளிலும் அன்னிய முதலீட்டாளர்கள் தான் பெரும்பான்மையான பங்குகளை கொண்டிருக்கின்றனர். உண்மையில் இன்று அமெரிக்க – சீன வர்த்தக போர் என ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருந்தாலும், சீனாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் முதலீடு பெருமளவில் உள்ளது. சீனா இன்று மிகப்பெரிய பொருளாதார நாடாக வலம் வருவதற்கு அமெரிக்கா தான் காரணமாக இருந்துள்ளது. பின்னர், அதுவே இன்றைய சிக்கலாக மாறி விட்டது. இது நம் நாட்டிற்கும் பொருந்தும்.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்று செய்தியாக வந்தாலும் சரி, முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது என கூறினாலும் சரி, வரவிருக்கும் காலங்களில் அதற்கான மாற்றம் தெரிய வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement

2,330 கோடி ரூபாயை லாபமாக ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ – காலாண்டு முடிவுகள்

2,330 கோடி ரூபாயை லாபமாக ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ – காலாண்டு முடிவுகள் 

Net Profit of Rs. 2,330 Crore for Reliance JIO – Q4FY20 Results

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 9.30 லட்சம் கோடி ரூபாய். ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை தொழிலாக கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன.

துணை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio), தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான தனது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1.39 லட்சம் கோடியாகவும், இதர வருமானம் ரூ. 4,133 கோடியாகவும் இருந்துள்ளது.

செலவினமாக ரூ. 57,683 கோடியும், வரிக்கு முந்தைய லாபமாக 9,233 கோடி ரூபாயும் சொல்லப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 6,348 கோடி. கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது சொல்லப்பட்ட லாபம் 39 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய வருடத்தின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,362 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போல நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியும் இரண்டு சதவீதம்  குறைந்துள்ளது. இருப்பினும், துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விற்பனை(Revenue) நான்காம் காலாண்டில் ரூ. 14,385 கோடியாக இருந்துள்ளது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 6 சதவீத வளர்ச்சியாகும். ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த காலத்தை விட 73 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 2,331 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் கடனை குறைக்கும் பொருட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய உத்திகளை தனது தொழிலில் பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.70 ஆக உள்ளது.

கடந்த 10 வருடங்களில் இந்நிறுவனத்தின் லாபம் 10 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. விற்பனை வளர்ச்சி 10 வருட காலத்தில் 15 சதவீதமாக உள்ளது. இருப்பு நிலை அறிக்கையின் படி, நிறுவனத்தின் கையிருப்பு சுமார் 3.99 லட்சம் கோடி ரூபாய். பங்குதாரர்களிடம் இருந்து புதிய முதலீட்டை பெறுவதற்காக ரூ. 53,125 கோடி மதிப்பில் உரிமை பங்குகளை(Rights Issue) வெளியிட உள்ளது. ஆனால், அதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை.

15 பங்குகளுக்கு ஒரு உரிமை பங்கு என்ற விகிதத்தில் இந்த செயல்பாடு இருக்கும் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. உரிமை பங்கு ஒன்றின் விலை ரூ. 1,257 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பங்கு ரூ. 1,465 என்ற விலையில் வர்த்தகமாகி உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 3 லட்சம் கோடி – காலாண்டு முடிவுகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 3 லட்சம் கோடி – காலாண்டு முடிவுகள் 

RIL’s debt of Rs. 3 Lakh Crore – Quarterly Results – Q3FY20

இந்திய சந்தையில் 10 லட்சம் கோடி ரூபாயை சந்தை மதிப்பாக கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries) நிறுவனமாகும். 1973ம் ஆண்டு திருபாய் அம்பானி அவர்களால் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இன்று நாட்டின் மிகப்பெரிய குழும நிறுவனமாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோ கெமிக்கல், ஜவுளி, சில்லரை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம், இசை மற்றும் நிதி சேவை என பல தொழில் முகங்களை கொண்டிருக்கிறது. ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஆகியவை இதன் துணை நிறுவனங்களாகும்.

இந்த நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு 49 சதவீதமாக உள்ளது. புத்தக மதிப்பு 639 ரூபாய் விலையிலும், கடன்-பங்கு விகிதம் 0.62 ஆகவும் இருக்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) குறைந்த அளவாக 4 மடங்கில் உள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,52,939 கோடி மற்றும் செலவினமாக ரூ. 1.30 கோடி சொல்லப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 11,640 கோடி ரூபாய்.

இயக்க லாப வளர்ச்சி(OPM) தொடர்ச்சியாக 15 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது. ஆனால் அதே வேளையில் வட்டி பாதுகாப்பு விகிதம் போதுமான அளவில் இல்லை. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 28 சதவீதமும், ஐந்து வருடங்களில் 5.50 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 14 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.

லாப வளர்ச்சி எனும் போது, கடந்த மூன்று வருட காலத்தில் 10 சதவீதம், ஐந்து வருடங்களில் 14 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 10 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே ஐந்து வருடங்களில் 29 சதவீதமும், 10 வருட கால அளவில் 11.30 சதவீதமும் விலை ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு போனஸ் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் சேர்க்கப்படவில்லை. எப்படியிருப்பினும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு நல்ல வருவாயை அளித்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 3.99 லட்சம் கோடியாக உள்ளது. பணவரத்து சரியாக வந்து கொண்டிருக்கிறது, அதே வேளையில் நிலையான சொத்துக்களும் நிறுவனத்தால் வாங்கப்படுகின்றன. மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் கடன் 3.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் கடனை குறைக்கும் பொருட்டு, தனது எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் சிறு பங்குகளை ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்வு நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் எட்டப்படும்.

அடுத்து வரும் காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லரை வணிகம்(JIO Mart) மற்றும் ஜியோ சேவைக்கு(Reliance JIO) அதிக முக்கியத்துவம் கொடுக்கும். இதன் மூலம் அதன் வருவாயும் மேம்படும். கடன் அதிகம் இருந்தாலும், இதன் விற்பனை வளர்ச்சி அபரிதமாக உள்ளது. இருப்பினும், முதலீட்டாளர்களை பொறுத்தவரை நிறுவனம் தனது கடனை குறைப்பது தான் சாதகமான அம்சமாக அமையும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா நிறுவனமாக ஜியோ மாறும் – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடனில்லா நிறுவனமாக ஜியோ மாறும் – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 

Reliance JIO will become a Debt Free Company in 2020 – Reliance Industries

 

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 9 லட்சம் கோடி. இந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் அதனை சந்தைப்படுத்துதல், சில்லறை வணிகம் மற்றும் டிஜிட்டல் சேவை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இன்று 35 கோடிக்கும் மேலான சந்தாதாரர்களை கொண்டிருக்கும் ஜியோ(JIO), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். ஜியோவின் வருகைக்கு பின்னர், நாட்டின் தொலைத்தொடர்பு சேவையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஜியோவின் அதிரடியான இணைய சேவையே காரணமாக அமைந்துள்ளன.

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, இணைய வழி வைரல்களை ஏற்படுத்திய பெருமை ரிலையன்ஸ் ஜியோவை சாரும். துவக்க காலத்தில் ஜியோ நிறுவனம் வருமானத்தை பெறாவிட்டாலும், பின்பு வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டு, லாப பாதைக்கு செல்ல ஆரம்பித்தது.

 

தற்போது, டிஜிட்டல் சேவையை மேம்படுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றுமொரு துணை நிறுவனத்தை உருவாக்க முனைந்துள்ளது. இதற்கான கூட்டமும் நடைபெற்று, நேற்று (25-10-2019) நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் ஒப்புதலை பெற்றுள்ளது. 

 

அதன் படி, டிஜிட்டல் சேவைக்காக புதிய துணை நிறுவனம் துவங்க உள்ளதாகவும், ஆரம்ப நிலையில் ரூ. 1.08 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் எனவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த முதலீடு உரிமை பங்குகளாக திரட்டப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

 

அதே போல, நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடனில்லா நிறுவனமாக(Virtually Debt Free), அதாவது கடனை வெகுவாக குறைக்கும் உத்தியில் உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. 

 

சொல்லப்பட்ட புதிய நிறுவனம் மூலம் சிறந்த மற்றும் மாற்றத்தக்க டிஜிட்டல் சேவையை அளிக்க உள்ளதாக நிறுவனர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய கடன் 2.52 லட்சம் கோடி ரூபாய். 

 

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5.66 லட்சம் கோடியாகவும், இயக்க லாபம் 84,000 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் 39,588 கோடி ரூபாய் ஆகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்(Reliance Industries) தனது முதலீட்டாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் 39 சதவீத வருவாயை தந்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

லாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள்

லாபத்தை பெருக்கிய ஜியோ – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் 

Jio’s Net profit rises to 990 Crore – Reliance Industries Q2FY20 Results

இந்திய பங்குச்சந்தையில் ரூ. 8.97 லட்சம் கோடி சந்தை மதிப்பை கொண்டிருக்கும் முதல் நிறுவனம், திரு. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries). நேற்றைய (18-10-2019) வர்த்தகத்தில் முதன்முறையாக ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை கடந்த நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் உள்ள நிறுவனம் ரூ. 7.71 லட்சம் கோடி மதிப்பை கொண்டுள்ள டி.சி.எஸ்.(TCS) நிறுவனம்.

2019-20ம் நிதியாண்டுக்கான தனது இரண்டாம் காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) முடிவை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. செப்டம்பர் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் விற்பனை ரூ. 1,48,526 கோடியாக உள்ளது. செலவினங்கள் ரூ. 1,26,374 கோடியாகவும், இயக்க லாபம் 22,152 கோடி ரூபாயாகவும் உள்ளது.

இதர வருமானமாக செப்டம்பர் காலாண்டில் 3,668 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 15,055 கோடியாகவும், காலாண்டு நிகர லாபம் 11,262 கோடி ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) கடந்த ஐந்து வருடங்களில் 6 சதவீத அளவிலும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி, கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், பத்து வருட காலத்தில் 10 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 2.5 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸின் துணை நிறுவனமான ஜியோ(JIO) இரண்டாம் காலாண்டு முடிவில் ரூ. 990 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. 

கடந்த 2018ம் வருடத்தின்  இதே காலத்துடன் ஒப்பிடும் போது, ஜியோவின் லாபம் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 681 கோடி ரூபாயாக உள்ளது. லாபம் அதிகரித்து இருந்தாலும், ஒரு பயனருக்கான சராசரி வருவாய்(ARPU) சரிந்துள்ளது.

355 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கும் ஜியோ நிறுவனம், ஒரு பயனருக்கான சராசரி வருவாயை 120 ரூபாயாக கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் செப்டம்பர் காலாண்டில் சற்று குறைந்துள்ளது.

சில்லரை வணிகத்தின்(Retail Business) மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சேவையை பொறுத்தவரை இணைய பயன்பாடு அதன் வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் பேசக்கூடிய நிமிடங்களின்(Voice Calls) எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

வரும் வாரத்தில் பங்குச்சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள் – செப்டம்பர் 16 – 20

வரும் வாரத்தில் பங்குச்சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள் – செப்டம்பர் 16 – 20

Key Factors that affect the Indian Stock Market in the Upcoming Week (September 16 -20)

 

இந்திய பங்குச்சந்தை கடந்த வார வர்த்தகத்தின் முடிவில் நிப்டி50(Nifty50) 11,075 புள்ளிகள் என்ற அளவிலும், மும்பை சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex) 37,385 புள்ளிகள் என்ற அளவிலும் இருந்துள்ளது. வரவிருக்கும் வாரத்தில் சந்தையை பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகளாக சில அமைய உள்ளன.

 

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க விகிதம்(WPI Inflation) நாளை அறிவிக்கப்பட உள்ளது. நேற்று (14-09-2019) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வீட்டுமனை துறைக்கும், ஏற்றுமதி துறைக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை சொல்லியுள்ளார். இருப்பினும் இவை சந்தையில் செயல்பாட்டுக்கு வந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் களம் காண சிறிது காலமாகலாம். 

 

நேற்று அதிகாலை சவுதியில் ஆரம்கோ எண்ணெய்(Aramco) நிறுவனத்தின் மீது ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமெனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பேரல் அளவிலான உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது ஆரம்கோ நிறுவனம். ஈராக் நாட்டின் சதாம் ஹுசைன் காலத்திற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது தான் என சொல்லப்படுகிறது.  

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக வருமான வரி துறை நோட்டீஸ்(Income Tax Notice) அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வு நடப்பாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டதாகவும், தற்போது தான் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது சார்பாக ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. 

 

தாங்கள் இதுவரை வருமான வரித்துறையிடம் இருந்து எந்த நோட்டீஸையும் பெறவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. சவூதி ஆரம்கோ நிறுவனத்தின் மீதான தாக்குதல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்தின் கணக்கில் காட்டப்படாத வருவாய் ஆகிய இரு நிகழ்வுகளும் சந்தைக்கு பாதகமாக அமையலாம்.

 

 எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை விட, மிக குறைவான அளவே இந்திய நாடு வளர்ச்சி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. கார்ப்பொரேட் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பலவீனமடைந்து வருவதாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.

 

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மற்றும் அமெரிக்க வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு ஆகிய காரணிகளும் வரும் வாரத்தின் சந்தை போக்கை தீர்மானிக்கலாம். பங்குச்சந்தை அதிக ஏற்ற – இறக்க காலமாக தற்போது கருதப்படுவதால், நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கான வாய்ப்புகளை கண்டறியலாம். அதே வேளையில் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கிறேன் என்று கையை சுட்டு கொள்ள வேண்டாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 9516 கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 9516 கோடி

Reliance Industries Q2 Net Profit rises to Rs. 9516 Crores

 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த காலாண்டு (ஜூலை-செப்டம்பர் 2018 RIL -Q2 Results )  முடிவுகளை இன்று வெளியிட்டது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு லாபமாக ரூ.9516 கோடியை பதிவு செய்தது. இதற்கு முந்தைய காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிகர லாபமாக 9,459 கோடி ரூபாயை ஈட்டியது.

 

கடந்த காலாண்டின் வருமானமாக ( FY19 Q2 Revenue) 1,56,291 கோடி ரூபாயை பெற்றுள்ளது. முந்தைய காலாண்டில் இது 1,41,699 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ஜூலை – செப்டம்பர் மாத காலத்தில் நிகர லாபம் 8,109 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில் அதன் வருமானம் 1,01,169 கோடி ரூபாயாகும்.

 

முந்தைய வருட இரண்டாவது காலாண்டு லாபத்தை ஒப்பிடுகையில், தற்போதைய நிகர லாபம் 17.35 சதவீதம் அதிகமாகும். 2019 ம் நிதி வருடத்தில் முதல் அரையாண்டு வருமானமாக 2,97,990 கோடி ரூபாயும், நிகர லாபமாக ரூ. 18,975 கோடியாகவும் உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடந்து முடிந்த காலாண்டில் ஒரு பங்குக்கான வருமானம் (EPS -Earning per share) ரூ. 16.10 /- ஆக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வருமானம் 54 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் சுத்திகரிப்பு உற்பத்தியின் அதிக விலை மதிப்பீடுகளின் மூலம் வருமானம் உயர்ந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. புதிய பெட்ரோ-கெமிக்கல் வசதிகளும், அதனை சார்ந்த கமிஷன் மற்றும் அதிகப்படியான அளவுகள் வருமானத்திற்கு துணைபுரிந்துள்ளன.

 

டிஜிட்டல் சேவையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் (R-Jio) காலாண்டு லாபம் 681 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற காலாண்டில்,  ARPU (Average Revenue Per User) என்று சொல்லக்கூடிய ஒரு பயனாளருக்கான சராசரி வருவாய் மாதத்திற்கு ரூ.131.7 ஆக உள்ளது.

 

ஹாத்வே கேபிள் (Hathway Cable and Datacom) நிறுவனத்தில் ரிலையன்ஸ் ஜியோ ரூ. 2940 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்க உள்ளது. இதன் மூலம் ஹாத்வே நிறுவனத்தில் ஜியோவின் பங்கு 51 சதவீதமாக உயரும். அதே போல டென் நெட்ஒர்க் (Den Networks) நிறுவனத்திலும் ஜியோ 66 சதவீத பங்குகளை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக இந்த இரண்டு நிறுவனத்தையும் ஜியோ கையகப்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com