அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்
Mostly outflows of FII and the rise in Domestic Investments – Trading Activity for October 2018
கடந்த மாதம் (October 2018) முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியது இந்திய பங்குச்சந்தை. நமது நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஏற்ற-இறக்கம் அதிகமாக காணப்பட்டது. நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை மாற்றம், வங்கிகளின் செயல்பாடு போன்ற்வற்றால் பங்குச்சந்தை முதலீடு வெகுவாக பாதிக்கப்பட்டது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் நடந்த 21 வர்த்தக நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரும்பாலும் விற்பனையை மட்டும் கையாண்டிருந்தனர். அந்த மாதத்தின் மொத்த விற்பனையாக ரூ. 1,40,238 கோடியும், நிகர விற்பனையாக ரூ. 29,200 கோடியும் அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகமாக அமைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் மாத மொத்த கொள்முதல் ரூ.111,037 கோடியாகவும், மொத்த விற்பனை ரூ.1,40,238 கோடியாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.
இருப்பினும், உள்நாட்டு முதலீடு நல்ல ஏற்றம் பெற்றது. கடந்த மாதத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (Domestic Institutional Investors -DII) மொத்த கொள்முதலாக ரூ. 1,00,992 கோடியையும், மொத்த விற்பனையாக ரூ. 74, 958 கோடியையும் கொண்டிருந்தனர். அவர்களின் அக்டோபர் மாத நிகர கொள்முதல் ரூ. 26,033 கோடியாக முடிவடைந்தது.
அன்னிய நாட்டு முதலீட்டாளர்களை பொறுத்தவரை அக்டோபர் 15 மற்றும் 17 ம் தேதிகளில் மட்டும் நிகர கொள்முதலை பெற்றிருந்தனர். மற்ற நாட்கள் அனைத்தும் விற்பனையை மட்டுமே மேற்கொண்டிருந்தனர். அதே சமயத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் விற்பனையையும், மற்ற வர்த்தக நாட்களில் நிகர கொள்முதலையும் வர்த்தகமாக்கினர்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த செப்டம்பர் மாதத்தினை பார்க்கும் பொழுது, வெளிநாட்டு முதலீடு நிகர விற்பனையாக ரூ.9,468 கோடியாகவும், உள்நாட்டு முதலீடு நிகர கொள்முதலாக ரூ. 12,500 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதத்தில் 200 சதவீத விற்பனையையும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 108 சதவீத கொள்முதலையும் கொண்டிருந்தனர்.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் நிகர கொள்முதல் கடந்த பத்து வருடத்தில் இல்லாத அளவாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 2017 மாதத்தில் இருந்த ரூ. 21,025 கோடி நிகர கொள்முதல் தான் அதிக அளவாக சொல்லப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(Sensex) குறியீடு 2000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty50) 600 புள்ளிகளும் நிகரமாக இறங்கியுள்ளன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை