5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

5 சிறந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதித்திட்டங்கள் – ELSS – 2019

Best 5 Tax Saving Mutual Funds – ELSS – 2019

 

நடப்பு நிதி வருடத்திற்கான(2018-19) காலம் முடிவடைவதற்கு இன்னும் ஏழு வாரங்களே உள்ளன. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் பட்ஜெட் வாயிலாக தனி நபர் வருமான வரியில் தள்ளுபடிகள் மற்றும் இதர சலுகைகள் கொடுக்கப்பட்டன. இந்த வரி தள்ளுபடிகளும், மற்ற சலுகைகளும் அடுத்து வரும் 2019-20ம் நிதியாண்டுக்கானது. இருப்பினும் நமக்கு நடப்பு வருடத்திற்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை கொண்டு நாம் வருமான வரி தாக்கல்(Income Tax filing) செய்ய போகிறோம். நடப்பு வருடத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை, வரி தள்ளுபடியாக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நம்மில் பெரும்பாலோர் வருமான வரியில் விலக்கு பெற(Income Tax exemption), கடைசி நேரத்தில் வரி சலுகை திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். வரி சலுகையை பெற ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்தில் முதலீட்டை துவங்குவதே நல்லது. நீங்கள் செய்யப்போகும் முதலீடு வரி சலுகைக்காக மட்டுமில்லாமல், உங்களின் நிதி இலக்குகளை(Financial Goals) சார்ந்து இருக்க வேண்டும். இன்னும் சிலரோ வருமான வரி சலுகைக்கு வெறும் காப்பீட்டு திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளனர் என்பது வருந்தத்தக்க விஷயம். வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் உள்ள ஒரு தனி நபர், தனக்கு போதுமான காப்பீட்டு தொகையை எடுத்து விட்டு பின்னர் மற்ற வரி சலுகை திட்டங்களை பற்றி யோசிக்கலாம். போதுமான காப்பீடு என்பது இன்று டேர்ம் பாலிசியில்(Term Insurance Policy) மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கிறது. காப்பீடு போக மீதமுள்ள தொகைக்கு நாம் வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ் மற்ற வரி சலுகை திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். Income Tax Act – 80 சி பிரிவின் கீழ் தனி நபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம்.

 

வரி சலுகைக்கான திட்டங்கள் எனும் போது, பொதுவாக அஞ்சலக மற்றும் வங்கிகளில் வழங்கப்படும் திட்டங்கள் ஞாபகம் வரலாம். பொது வருங்கால வைப்பு நிதி(PPF), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), செல்வமகள் திட்டம்(Sukanya Samriddhi), காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் அளிக்கும் வரிச்சலுகை முதலீடுகள்(Tax Saving Mutual Funds) ஆகியவை நமக்கான வாய்ப்புகளாக உள்ளன.

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களும் வருமான வரி சட்டம் பிரிவு 80சி ன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை (அனைத்துக்கும் சேர்த்து) வரி சலுகை பெறக்கூடியவை. வரி சலுகை திட்டங்களை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு(Lock-in Period) பிறகு தான் நாம் அந்த திட்டங்களில் இருந்து பணத்தை பெற வேண்டும். இதன் காரணமாக தான் நமக்கு வரிச்சலுகை கிடைக்க பெறுகிறது. அவ்வாறு பார்க்கும் போது, குறைந்த காலத்தில் முதலீட்டை எடுக்கக்கூடியதாகவும், ரிஸ்க்குடன் கூடிய நல்ல வருமானத்தை தருவதாக பரஸ்பர நிதி வரிச்சலுகை  திட்டங்கள்(ELSS -Equity linked Savings Scheme) உள்ளன. இவை மற்ற வரி சலுகை திட்டங்களை காட்டிலும் நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை கொடுப்பவை.

 

நடப்பு நிதியாண்டு 2019ல் சிறந்த மற்றும் வரி சலுகை அளிக்கக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்கள்(Tax Saving Mutual Funds),

 

  • Canara Robeco Equity Tax Saver
  • Axis Long Term Equity Fund
  • Mirae Asset Tax Saver Fund
  • Taurus Tax Shield Fund
  • Kotak Tax Saver Fund

 

இந்த ஐந்து திட்டங்களும் வருவாய் மற்றும் ரிஸ்க் விகிதத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. Value Research Online மற்றும் Morningstar தளங்கள், சொல்லப்பட்டுள்ள ஐந்து பரஸ்பர நிதி திட்டங்களுக்கும் ஒன்று முதல் ஐந்து வரை தரவரிசை பட்டியலில் இடம் கொடுத்துள்ளது. ஒரு பரஸ்பர நிதி திட்டத்தினை தேர்ந்தெடுக்கும் போது, அதன் நிர்வாகம்(Fund Manager), வருவாய் மதிப்பீடு, துறை சார்ந்த மற்றும் பென்ச்மார்க் வருமானம்(Benchmark Returns), ரிஸ்க் விகிதங்கள்(Risk ratios) போன்றவற்றை ஆய்வு செய்வது அவசியம்.

 

மேலே சொல்லப்பட்டுள்ளன வரி சலுகை அளிக்கும் பரஸ்பர நிதி திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடு ரூ.500/- மட்டுமே. செலவின விகிதம்(Expense ratio) 2.0 – 2.75 % என்ற அளவிலும், பணத்தை திரும்ப பெறும் போது வெளியேறும் கட்டணம்(No exit load) எதுவுமில்லை. பண்டுகளின் ரிஸ்க் அளவு குறைந்தது முதல் மிதமானதாக(Low to Average) உள்ளது. நியமச்சாய்வு(Standard Deviation) 14லிருந்து 15 புள்ளிகள் வரை கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட கால வருவாய் என பார்க்கும் போது, சராசரியாக மூன்றிலிருந்து ஏழு சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த வருடத்தில் சந்தை மந்தமாக இருந்ததும், இந்த வருவாய் குறைவுக்கான காரணமாக சொல்லப்படுகிறது. எனினும் ஐந்து வருட காலத்தில் அனைத்து பண்டுகளும் 15 சதவீதத்திற்கும் மேல் வருமானத்தை தந்துள்ளது.

 

5 சிறந்த பரஸ்பர நிதி திட்டங்களில் ஒவ்வொரு பண்டின் சந்தை மூலதனமும் ரூ.50,000 கோடிக்கும் மேல் உள்ளது. நட்சத்திர மதிப்பீடை(Star Rating) மட்டுமே கருத்தில் கொள்ளாமல், மற்ற விஷயங்களையும் நாம் ஆராயும் போது சிறந்த பரஸ்பர நிதி திட்டங்கள் நமக்கு கிடைக்கும். சொல்லப்பட்ட வருமான விகிதங்கள் மற்றும் இதர விஷயங்கள் அனைத்தும் கடந்த கால செய்தியே. இனிவரும் காலத்தில் அவை நன்றாக செயல்படுமா என்பது சந்தை மற்றும் நிர்வாகத்தை சார்ந்தது.

 

மறவாதீர்கள், கடைசி நேர வரிச்சலுகை திட்டங்களை தவிருங்கள். உங்களுக்கான நிதி இலக்குகளை அல்லது தேவைகளை முதலில் தீர்மானியுங்கள். அதனை சார்ந்து வரி சலுகை திட்டங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். செய்யப்படும் வரி சலுகை முதலீடு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் நிதியாண்டின் (ஏப்ரல் மாதம்) தொடக்கத்தில் இருக்கட்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

Unemployment or Entrepreneurship – Unemployment Rate

 

சமீபத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து கொண்டு வருவதாக ஆய்வுகளும், அதனை தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வருவதுமாக உள்ளது. சி.எம்.ஐ.இ.(Centre for Monitoring Indian Economy -CMIE)  தரவுகளின் படி கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.13 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.80 சதவீதமாகவும் மற்றும் கிராமப்புறங்களில் 6.24 சதவீதமாகவும் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதிகபட்ச வேலைவாய்ப்பின்மையாக திரிபுராவில் 30.9 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 1.50 % என்ற அளவிலும் தரவு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.5 சதவீதமும் மற்றும் புதுச்சேரியில் 1.7 என்ற விகிதமும் இருந்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக(Unemployment Rate) காணப்பட்ட வருடமாக 2016-17ம் வருடங்களை குறிப்பிட்டுள்ளது. அதாவது தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம்(Labour Participation Rate -LPR %) மிக குறைவாக இருப்பதாக கணிப்பில் உள்ளது.

 

அரசு சார்பாக நடத்தப்படும் வேலைவாய்ப்பின்மை சார்ந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் இப்போதைய காலத்தில் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கல்வியில் வளர்ச்சி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறை மத்திய அரசின் ஆட்சி மாறும் போது, வேலைவாய்ப்பின்மை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உண்மையில் இங்கு வேலை வாய்ப்பு இல்லையா அல்லது பயன்படுத்தப்படுவது இல்லையா என்பதே ஒவ்வொருவரின் கேள்வியாக இருக்கிறது.

Unemployment rate CMIE

நுகர்வோர் பயன்பாடு(Consumerism) அதிகரித்து வரும் நம் நாட்டில், பொருளாதாரமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டு தான் உள்ளது. அப்படியிருக்கும் போது, இந்த புள்ளி விவரங்கள் எதனை குறிப்பிடுகிறது என்பதே ஒரு ஐயம். பொதுவாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் கருத்துக்கணிப்புகள் செயல்படாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். ஏனெனில் அதன் வளர்ச்சி ஒவ்வொரு காலத்திலும் மிகவும் வேறுபடும். தூங்கா நகரத்தில் இன்று விடிய விடிய வணிக கடைகள் செயல்படாவிட்டாலும், ஸ்விக்கி(Swiggy), உபேர் ஈட்ஸ்(Uber Eats), ஜொமாடோ(Zomato) போன்ற உணவு சார்ந்த நிறுவனங்கள் வந்திருக்க முடியாது.

 

ஒரு புறம் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் மற்றொரு வேலைக்கு செல்வதும், அயல்நாட்டு வாய்ப்பை(Overseas Job Opportunity) அறிவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை என்ற ஒற்றை கருத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கும் இந்த வேளையில், தொழில்முனைவுகளை(Entrepreneurship) தேடி செல்வதையும் நாம் மறுக்க முடியாது. இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களின் மேற்படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு செல்ல விரும்புவதை காட்டிலும் தொழில்முனைவு புரிவதில் ஆர்வமாக உள்ளனர்.

 

தொழில்முனைவதின் அவசியமும் இன்றைய காலகட்டத்தில் தேவையே. தொழில்முனைதலின் ரகசியமே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான(Creating Jobs -Employment) சூழல் தான். எனினும், இன்று பெரும்பாலான தொழில்கள் தோல்வியடைய காரணம் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாததே என சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் தனக்கென விவசாய நிலம் கொண்டு, தொழில்முனைதல் புரிந்தவர்கள் தான் நாம். ஆனால் விவசாய நிலங்களில் நமது பங்களிப்பு தற்போது அதிகம் இல்லையென்றாலும், புதுமையான விஷயங்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அரசாங்கம் மட்டுமே ஒரு நாட்டில் உள்ள அனைவருக்குமான வேலைவாய்ப்பை உறுதி செய்து விட முடியாது. இருப்பினும் இதனை அலட்சியப்படுத்துவதற்கும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புதிய தொழில்களை உருவாக்குவதும்(Creating new and more business), நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுவடைய செய்யும். ஆங்கிலத்தில், ‘Sharing is Caring ‘ என சொல்வதுண்டு. வெறும் நுகர்வோர் கலாச்சாரம் மட்டுமே நம்மை மேம்படுத்தி விட முடியாது. வெகுவாக வளர்ந்து வரும் நுகர்வோர் விகிதத்தை சார்ந்து நமது வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் நமக்கு நாம் செய்யும் கடமை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

வட்டி விகித குறைப்பு, மழுங்கும் வங்கி முதலீடுகள் – இனி எங்கு முதலீடு செய்ய போகிறீர்கள் ?

வட்டி விகித குறைப்பு, மழுங்கும் வங்கி முதலீடுகள் – இனி எங்கு முதலீடு செய்ய போகிறீர்கள் ?

Interest rate falling and Diminishing Bank Deposits – Where are you going to invest ?

 

இன்று (07-02-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee -MPC) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து பாரத ரிசர்வ் வங்கி(RBI). ரெப்போ விகிதம்(REPO Rate) என்பது நாட்டில் உள்ள வங்கிகளுக்கு பாரத ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமாகும். பொதுவாக ரெப்போ விகிதம் குறையும் போது, வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் இனி 6.25 சதவீதத்தில் இருக்கும். இதனால் ரிவெர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse REPO) 6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. வங்கிகளின் வட்டி விகிதம் 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரொக்க இருப்பு விகிதத்தில்(CRR) மாற்றமில்லாமல் அதே 4 சதவீதத்தில் தொடரும் என கூறப்பட்டுள்ளது. நடப்பு காலாண்டில் பணவீக்கம்(Inflation) 2.8 சதவீதமாக இருக்கும் எனவும், 2019-20ம் நிதியாண்டில் முதல் பாதியில் இது 3.4 சதவீதமாகவும், அடுத்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 3.9 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 7.4 சதவீதத்தில் இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கணித்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற விவசாய கடன் தொகையை ரூ. 1 லட்சத்திலிருந்து 1.6 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த நிதி கொள்கை குழு கூட்டம் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும்.

 

ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது, வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தில்(Interest rate) சலுகை பெறுவர். அப்படியிருக்கும் போது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகித குறைப்பு வீட்டுக்கடன் பெறுவோருக்கும், தொழிலுக்கான கடன் பெறும் வாடிக்கையாளருக்கும் நலன் பயக்கும். அதே வேளையில், கடந்த சில வருடங்களாக வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருவது, வங்கியில் சேமிக்கும் மற்றும் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான வட்டி வருமானத்தை தருவதில்லை.

 

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, அது கடன் சந்தைக்கு(Debt Market) சாதகமாக அமையும். வங்கிகளில் வட்டி குறையும் காலத்தில், கடன் சந்தையில் வட்டி விகிதம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கடன் சந்தையை நோக்கி செல்வதுண்டு. அதே நேரத்தில், வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் காலத்தில், கடன் சந்தையில் மதிப்பு குறைவாக அமையும். அப்போது முதலீட்டாளர்கள் வங்கிகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் முதலீட்டு சாதனத்தையோ தேடுவதுண்டு.

 

தற்போது குறைக்கப்பட்ட வங்கிகளின் வட்டி விகிதம் கடன் பெறுவோருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும், தொடர் வைப்பு(Recurring) மற்றும் வைப்பு நிதிகளில்(Fixed Deposits) முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டி வருமானமும் கிடைக்க கூடியதாக இருக்கும். இது போன்ற காலங்களில் கடன் சந்தையில் முதலீடு செய்வதும், கடன் சந்தை சார்ந்த பரஸ்பர நிதித்திட்டங்களிலும்(Debt Mutual Funds) முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும். இன்று பரஸ்பர நிதிகள் வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி வருமானத்தையே கொடுத்து வருகிறது. நடப்பு காலத்தில் அரசாங்கத்தின் பத்து வருட பத்திர வருவாய்(10 Year Bond Yield) 7.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே பரஸ்பர நிதித்திட்டங்களில் பத்திர வருவாயாக ஆண்டுக்கு 8.5 % லிருந்து 10 சதவீதம் வரை கிடைக்க பெறுகிறது. கடன் சார்ந்த மற்ற பரஸ்பர நிதி திட்டங்களிலும் சராசரி வருமானமாக 9 சதவீதம் வரை உள்ளது.

Best Ultra Short Duration Funds

 

வங்கி வைப்பு நிதி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் இக்காலத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் ஒருவர் முதலீடு செய்து நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். குறுகிய கால திட்டங்களில்(Ultra Short Duration Funds) பிராங்க்ளின் பண்டு(Franklin India) ஒரு வருட காலத்தில் 9 சதவீதமும், 2 வருட காலத்தில் 8.5 சதவீதமும், 5 வருட காலத்தில் 9.3 சதவீத வருமானத்தை தந்துள்ளது. இதே போன்று ரிலையன்ஸ் அல்ட்ரா ஷார்ட் கால பண்டு(Reliance Ultra Short Duration) 7.5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதம் வரை வருமானத்தை தந்து கொண்டிருக்கிறது. ஆதித்யா பிர்லா(ABSL), ஐ.சி.ஐ.சி.ஐ.(ICICI) மற்றும் எஸ்.பி.ஐ. பண்டுகளும்(SBI Mutual Funds) வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி வருமானத்தை கொடுத்துள்ளது.

 

மிகவும் குறுகிய கால பண்டுகளான லிக்விட் பண்டுகளும்(Liquid Funds) 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை வருமானத்தை தருகிறது. லிக்விட் பண்டுகள் பொதுவாக கருவூல மசோதா மற்றும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் முதிர்வடையும் காலம் 91 நாட்கள். தற்போதைய காலத்தில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

PPF(Public Provident Fund) Interest rate over the past 20 years

 

நமது நாட்டின் பலம் மிகுந்த தன்மையே பண்பாடும், அதனை சார்ந்த ஒருமைப்பாடும் தான். கூட்டு குடும்பத்தின் இலக்கணமாக திகழ்ந்த நம் நாட்டில் இன்று தனிக்குடும்பம் என்ற நிலை இருந்தாலும், விழா காலங்களிலும், ஒவ்வொரு குடும்பத்தில் நிகழும் சுக-துக்க நிகழ்ச்சிகளில் நமது ஒற்றுமை எப்போதும் வெளிப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பண்பாடும், ஒருமையும் மட்டுமே நமது வலிமை என்று கூறினால் அது மட்டுமே இல்லை. நமது மற்றொரு பலம் ஒவ்வொருவரின் சேமிப்பிலும் உள்ளது. மற்ற நாடுகளை போல் இல்லாமல், நம்மிடம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது. நமது பாரம்பரியத்தில் ரிஸ்க்(Risk reward) எடுக்கும் திறன் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அதனால் தான் நம்மில் பெரும்பாலோர் பாதுகாப்பாக இருக்கும் முதலீட்டு சாதனத்தில் நம்முடைய பணத்தை அதிகளவில் கொண்டிருக்கிறோம்.

 

பாதுகாப்பான சேமிப்பு(Safe Investments) என்று சொல்லும் போது, வங்கி மற்றும் அஞ்சலகத்தின் மீது நம்முடைய பற்று அதிகமாகவே .காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன வேலையில் இன்று ஓய்வூதியம் என்ற விஷயம் இல்லையென்றாலும், வருங்கால வைப்பு நிதி(PPF) என்ற சாதனம் இன்றும் கவர்ச்சிகரமாகவே உள்ளது. பணவீக்க விகிதம் குறைவாக இருக்கும் இக்காலத்தில், வருங்கால வைப்பு முதலீட்டில் சேமிக்கப்படும் தொகை அதிகமாக தான் இருந்துள்ளது. கடந்த சில வருடங்களாக பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்(Interest rate) 7-8 சதவீதம் என்ற நிலையிலே உள்ளது. இது கடந்த 20 வருட காலத்தில்(PPF Interest rate History) எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

 

கடந்த 2001ம் வருடத்திற்கு முன்பு, பி.பி.எப். வட்டி விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது. அப்போதைய பணவீக்கமும்(Inflation) சற்று அதிகம் தான். 1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, பொது வருங்கால வைப்பு நிதியில் வழங்கப்பட்ட வட்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இன்று பரஸ்பர நிதித்திட்டங்கள்(Mutual Funds) சராசரியாக கொடுக்கும் வட்டி இதுவாகும். பின்னர் 2001 மற்றும் 2002ம் வருடங்களில் இதன் வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரைக்குள்ளாக அமைந்துள்ளது.

PPF Interest Rates History

2003ம் ஆண்டுக்கு பிறகு பி.பி.எப். சாதனத்திற்கான வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைந்துள்ளது எனலாம். சொல்லப்பட்ட இந்த காலத்தில் தொடர் வைப்பு நிதியில்(Recurring Deposit -RD) வட்டி விகிதம் 10-14 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் 9 சதவீதமாக இருந்த பி.பி.எப். வட்டி விகிதம் 2016-17ம் நிதியாண்டில் 8 சதவீதமாக முடிவடைந்துள்ளது. 2018ம் ஆண்டின் துவக்கத்தில் 20 வருட கால குறைவாக 7.60 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இருந்தது.

 

கடந்த ஆண்டின் இறுதியில், அதாவது சென்ற காலாண்டில் 7.60 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு வருடத்தின் ஜனவரி-மார்ச் காலத்திற்கு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அதே 8 சதவீத வட்டியில் தொடரும் நிதி அமைச்சகம்(Ministry of Finance) கூறியுள்ளது. சிறு சேமிப்புக்கான வட்டி(Small Savings Scheme) விகித மாற்றத்தை அரசு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடும். இன்று பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தருகிற போதிலும், ஓய்வு காலத்திற்கான(Retirement Fund) பாதுகாப்பான முதலீடாக பி.பி.எப். கருதப்படுகிறது.

 

தற்போது கொடுக்கப்படும் வட்டி விகிதம் குறைவு தான் எனினும், அனைவருக்குமான ஓய்வூதிய முதலீட்டு சாதனம் இதுவே. பொது வருங்கால வைப்பு நிதியில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ. 500/- உள்ளது. இத்திட்டத்தில் கூட்டு வட்டியின் பலன் வருட காலத்தில்(Annually Compounding) செயல்படும். பிரிவு 80C (Income Tax act) ன் கீழ் வருமான வரிச்சலுகையும் பி.பி.எப். முதலீட்டுக்கு உண்டு. பி.பி.எப். கணக்கை ஒருவர் வங்கியிலோ அல்லது அருகில் இருக்கும் அஞ்சலகத்திலோ தொடங்கலாம். புதிய பி.பி.எப். கணக்கை ஆன்லைன்(PPF Online) மூலமும் ஆரம்பித்து முதலீடு செய்யலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்

பட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்

Budget 2019 Highlights (FY 2019-20)

 

பிப்ரவரி ஒன்றாம் தேதி நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். வருமான வரி சார்ந்த தள்ளுபடிகளும், பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 /- வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட்டை ஒரு ரூபாய்(One Rupee Budget) வரவு-செலவில் கணக்கிடும் போது, வரவு தொகையில் 21 பைசா ஜி.எஸ்.டி.(GST) வரி மூலமும், 21 பைசா நிறுவனங்களின் வரி மூலமும், வருமான வரியில்(Income Tax) 17 பைசாவும் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டது. செலவு தொகையில் 23 பைசா வரி வருவாயில் மாநிலங்களுடன் பங்கு பிரித்தது(Shares of Taxes), அரசு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ஒரு ரூபாயில் 18 பைசாவும், மானியங்களுக்கு 9 பைசாவும் செலவிடப்பட்டுள்ளது.

 

மத்திய நிதியுதவி திட்டத்தில் 9 பைசாவும், மத்திய துறையின்(Central Sector) திட்டங்களுக்கு 12 பைசாவும், ஓய்வூதியத்திற்கு(Pension) 5 பைசாவும், ராணுவத்திற்கு 8 பைசாவும் செலவில் உள்ளது. 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு வருடத்தில் ரூ. 6.34 லட்சம் கோடியில் முடிவடையலாம் என மறுமதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

 

இடைக்கால பட்ஜெட் 2019ல் அறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் சில துளிகள் இங்கே,

 

  • அமைப்புசாரா துறையில்(Unorganized) பணிபுரியும் தொழிலாளிகளுக்கு பிரதம மந்திரியின் யோகி மாந்தன்(Yogi Maandhan) திட்டத்தின் மூலம் மாதாமாதம் ரூ. 3000/- பென்ஷன் வழங்கப்படும். இந்த துறையில் மாதம் ரூ. 15,000 வரை சம்பளம் பெறும் தொழிலாளிகள் வரை பயனடைவர். இது ஒரு ஓய்வூதிய திட்டம், தொழிலாளிகளின் சார்பாக ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும், அதே குறிப்பிட்ட தொகையை அரசும் பங்களிக்கும். 60 வயதின் முடிவில் அவர்களுக்கான ஓய்வூதியம், சேமிப்பிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் அளிக்கப்படும்.

 

  • கிசான்(Kisan) திட்டத்தின் மூலம் 2 ஹெக்டருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.6000 /-(ஆண்டுக்கு) நேரடியாக ஆதரவளிக்கும் தொகை.

 

  • டிஜிட்டல் இணைப்பின் வாயிலாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் திட்டம்.

 

  • ஒரு நிதி வருடத்தில் ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் முழுமையான வரி தள்ளுபடி(Full Tax Rebate).

 

  • வருமான வரியில் நிலைக்கழிவு(Standard Deduction) ரூ. 40,000/- லிருந்து 50,000/- ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • வங்கி மற்றும் அஞ்சலக வைப்பு தொகைக்கான வட்டி வருமான(Interest income) வரம்பு ரூ.10,000 லிருந்து 40,000 /- ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

  • நேரடி வரி நடைமுறை(Direct Taxes) எளிமையாக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர் அறிக்கை தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் வரவு பெறும் வசதி(Refund).

 

  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாங்கும் கடனில் (ஒரு கோடி ரூபாய்) 2 சதவீத வட்டி சலுகை.

 

  • பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை முதன்முறையாக ரூ. 3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

 

  • சுங்கத்துறையில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்கும் முடிவு.

 

  • மீன்பிடிப்புக்கு(Fisheries) தனி துறை அமைக்கப்படும். இந்திய திரைப்படங்களுக்கு ஒற்றை சாளர முறையை நடைமுறைப்படுத்தல் மற்றும் திரைப்படங்களை திருடுவதை தடுக்க புதிய ஒளிப்பதிவு சட்டம் கொண்டுவரப்படும்.

 

நாட்டின் பொருளாதாரம் அடுத்த ஐந்து வருடங்களில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், அடுத்த பத்து வருடங்களில் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை(10 Trillion Dollar Indian Economy) கொண்ட நாடாகவும் இருக்கும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘ இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு உண்டானது ‘.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

புதிய வருமான வரி விகிதங்கள் 2019-20 – எளிய விளக்கங்களுடன்

புதிய வருமான வரி விகிதங்கள் 2019-20  – எளிய விளக்கங்களுடன்

Income Tax Slab FY 2019-20 – Simple Explanations

நேற்று (01-02-2019) மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்(Interim Budget) 2019 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. பட்ஜெட் அறிக்கையில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை கவரும் வண்ணம் பல விஷயங்கள் கூறப்பட்டிருந்தது. விவசாய மானியம் மற்றும் பயிர் கடன் சார்ந்த சலுகைகளையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் மற்றும் வருமான வரியில் சலுகை(Income Tax) கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டிருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இடைக்கால பட்ஜெட் அறிக்கை தேர்தல் வியூகமாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. சலுகைகள் என்று சொல்லப்பட்ட பல விஷயங்கள் வரும் நாட்களில் நடைமுறைக்கு வரும் போது தான், அதன் நிலை அறியப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) நிதி பற்றாக்குறையை 3.3 சதவீதமாக குறைப்பது சவாலான விஷயம் என ஏற்கனவே பொருளாதார வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய இடைக்கால பட்ஜெட் தாக்கலில் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) இலக்கினை 3.4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட் (FY 2019-20) மதிப்பு, 27.84 லட்சம் கோடி ரூபாயை கொண்டிருந்தது. கடந்த 2018 ம் ஆண்டு பட்ஜெட்டோடு ஒப்பிடும் போது, இப்போது செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த முறை பட்ஜெட் 2018ன் மதிப்பு 24.42 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பட்ஜெட் அறிக்கையில் சொல்லப்பட்ட வருமான வரி சலுகைகள் குறித்து எளிய விளக்கத்துடன் இங்கு பார்ப்போம்.

 

நேற்று பட்ஜெட் 2019ல் சொல்லப்பட்டதாவது ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வரி ஏதும் இல்லை என கூறப்பட்டிருந்தது. வரும் நிதியாண்டில்(2019-20) வருமான வரி விகிதங்கள்,

Income Tax Slab rates FY 2019-20

நடப்பு 2018-19ம் நிதியாண்டுக்கான அதே வருமான வரி அடுக்கு விகிதங்கள் தான் வரும் நிதி வருடத்திலும் தொடரும் எனலாம். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களால் சொல்லப்பட்ட விஷயம், வருமான வரியில் உள்ள வரி தள்ளுபடியே ஒரு சலுகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி தள்ளுபடியாக(Tax Rebate) ரூ. 12,500 /- என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இந்த வரி தள்ளுபடி சலுகை இல்லை. இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காணலாம்.

 

35 வயதான ராம் என்பவர் நடப்பு நிதியாண்டில் பெற்ற வருமானம் ரூ. 5 லட்சம் எனில், வருமான வரி விகிதங்களின் படி அவர் வரி செலுத்துபவராக உள்ளார். அவரது வருமானம் ஆண்டுக்கு ரூ. 2,50,000 க்கு மேல் உள்ளதால் ரூ. 2,50,001 லிருந்து ரூ. 5,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி எனும் போது செலுத்த வேண்டிய வரித்தொகை ரூ. 12,500. நடப்பு ஆண்டில் கணக்கிட்டால் ரூ. 3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி தள்ளுபடியாக(Tax Rebate) ரூ. 2500 கொடுக்கப்பட்டு வருகிறது. இனி வரும் நிதியாண்டில் வரி தள்ளுபடி தொகை ரூ. 2500 லிருந்து 12,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி தள்ளுபடிக்கான வருமான வரம்பும் ரூ. 3 லட்சத்திலிருந்து 5 லட்ச ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. அவ்வாறு பார்க்கும் போது, நடப்பு நிதி வருடத்தில் ரூ. 12,500 ஐ வரியாக செலுத்தும் ராம், அடுத்த வருடத்தில் இதே 5 லட்ச ரூபாய் வருமானத்தை கொண்டிருக்கும் போது, அவருக்கு வரி தள்ளுபடியாக ரூ. 12,500 /- பிரிவு 87(A) ன் கீழ் கிடைக்கிறது. அதனால் இனி அவர் வரி செலுத்துபவராக இருக்க மாட்டார்.

 

வருமான வரி வரம்பில் மாற்றம் ஏதும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரம்பில், அவருக்கு வரி தள்ளுபடியே தவிர வரம்பில் அல்ல (Benefits only on Tax Rebate, not in Tax Slab rates). ராம் வேலை பார்க்கும் நிறுவனம் அவரது வருமானத்திற்கான (ரூ. 5 லட்சம்) TDS பிடித்ததை மேற்கொள்ளும். பின்னர் ராம் தனது வருமானத்தை தாக்கல் செய்வதன் மூலம் ரூ. 12,500 ஐ வரி தள்ளுபடியாக பெறலாம்.

 

40 வயதுடைய சோமு என்பவரின் ஆண்டு வருமானம் ரூ. 5,01,000 /-. இவர் ராமை விட 1000 ரூபாயை மட்டுமே கூடுதல் வருமானமாக பெறுகிறார். ஆனால், சோமுவின் வருமானம் ரூ. 5 லட்சம் வரம்பை கடந்துள்ளது. அதனால் இவருக்கு ரூ. 12,500 /- வரி தள்ளுபடி என்பது கிடைக்காது. இவருடைய வருமான வரி என கணக்கிட்டால், ரூ. 2,50,001 – ரூ. 5,00,000 வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதமும், ரூ. 5,00,001 – ரூ. 5,01,000 வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்படும். ஆக, சோமு வருமான வரியாக ரூ. 12,700 (12500 + 200) ஐ செலுத்த வேண்டும்.  செலுத்த வேண்டிய வரி தொகைக்கு செஸ் மற்றும் சர்சார்ஜ் கட்டணங்கள்(Cess & Surcharge) தனி.

 

சோமு தனது வருமான வரி தொகையை குறைக்க வருமான வரிச்சட்டம் பிரிவு 80 (80C,D,E,etc) ன் கீழ் வரிச்சலுகையை பெறலாம். வருமான வரி வரம்பில் ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வருமானம் கொண்டவர்கள் அல்லது 20 % மற்றும் 30% அடுக்கில் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி கிடையாது. இருப்பினும் அவர்கள் மற்ற வரி விலக்குகள்(Tax exemption) மூலம் தங்களின் வரி செலுத்தும் தொகையை குறைக்கலாம். நடப்பு நிதியாண்டில் நிலைக்கழிவு தொகை(Standard Deduction) ரூ. 40,000 ஆக உள்ளது. இனி அடுத்த ஆண்டு முதல் இதன் வரம்பு ரூ. 50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பில் இருக்கும் வைப்பு தொகைக்கான வட்டி வருமானம்(Interest Income) ஆண்டுக்கு ரூ.10,000 க்கு மேல் இருந்தால், குறிப்பிட்ட வங்கியில் அல்லது அஞ்சலக அலுவலகத்தில் டி.டி.எஸ்.(Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்பட்டும். இனி வரும் 2019-20 நிதியாண்டு முதல் இந்த வரம்பு ரூ. 10,000 லிருந்து ரூ. 40,000 /- ஆக மாற்றப்பட்டுள்ளது.

 

பட்ஜெட் சம்மந்தமான இன்னும் பிற தகவல்கள் அடுத்த பதிவில் ஏற்றப்படும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

இன்று நாட்டின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2019

இன்று நாட்டின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2019

India’s interim budget today for the year 2019.

 

மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 2019ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும் என தெரிகிறது. நடப்பு ஆட்சியில் இதுவரை நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ(Arun Jaitley) தலைமையில் வெளியிடப்பட்டு வந்த பட்ஜெட் தாக்கல், இம்முறை தற்காலிக நிதி அமைச்சர் பியூஸ் கோயல்(Piyush Goyal) தலைமையில் அமைய உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக பட்ஜெட் தாக்கல் நிகழும் நாளன்று அனைவரிடமும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படத்தான் செய்யும். வரிச்சலுகைகள்(Income Tax Slabs), சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கொள்கைகள், விவசாயம் சார்ந்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிற விஷயங்களை நாம் கவனிக்க தொடங்குவோம். இன்று நடைபெறும் பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்(Interim Budget) தான் எனினும், வரி சார்ந்த அறிவிப்புகள், நிதி பற்றாக்குறை எண்கள்(Fiscal Deficit), வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் ஆகியன விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

 

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் நாம் மேற்கொள்ளும் வரவு-செலவுகளை(Budget Planning) போன்றே, ஒரு நாட்டினுடைய பட்ஜெட்டும் அவசியமாகும். இது நமக்கான பட்ஜெட் அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது. நமது நாட்டிற்கான பட்ஜெட்டை திட்டமிட நாம் மற்றொருவரை பொறுப்பில் அமர செய்துள்ளோம் என்பதை நாம் நினைவில் கொள்வது முக்கியம். நடப்பு 2019ம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 3.3 சதவீதமாக இருக்கலாம் என முன்னர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது அவற்றில் 20 புள்ளிகள் வரை மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது. 2019-20ம் நிதியாண்டின் நிதி பற்றாக்குறை இலக்கு 3.2 – 3.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

பட்ஜெட் தாக்கலில் அரசு தனது நிதியை (வரவு-செலவு) எவ்வாறு கையாண்டது என்பதை நாம் இன்று அறியலாம். மேலும், வரப்போகும் நாட்களில் அரசாங்கத்தின் நிதி சார்ந்த திட்டங்கள் என்ன என்பதை அறிய முடியும். பண மதிப்பிழப்பு(Demonetization), ஜி.எஸ்.டி.(GST) வரி போன்றவை சிறு மற்றும் குறுந்தொழில்களை வெகுவாக பாதித்துள்ளதாக சொல்லப்படுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்பு(Unemployment Rate) சார்ந்த எண்களும் முக்கியத்துவம் பெறுகிறது. வங்கிகளின் வாராக்கடன் நிலையும் கவலை அளிக்கிறது.

 

இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இன்று வெளியிடப்படும் இடைக்கால பட்ஜெட் நிதி நலன் சார்ந்து இருக்குமா அல்லது தேர்தல் வியூகத்தில் அமையப்போகுமா என்பது தெரிய வரும். இன்றைய பட்ஜெட்டில், மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயமாக வரிச்சலுகைகள்(Tax Concessions) மற்றும் விவசாயம் சார்ந்த கொள்கைகளாக இருக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்

உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்

A Fifth of the World’s Richest people are over 80 years old

 

ப்ளூம்பெர்க்(Bloomberg) பத்திரிகை வெளியீட்டின் படி, உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ள முதல் 500 நபர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 80 வயதை கடந்தவர்கள். முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பேஜோஸ்(Jeff Bezos) உள்ளார். இரண்டாம் இடத்தில் பில்கேட்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் பழுத்த முதலீட்டாளர் வாரன் பப்பெட் உள்ளனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸ் 132 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளார்.  இந்தியாவின் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) உலகத்தர வரிசையில் 12ம் இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள். முதல் 500 இடங்களில் பெரும்பாலானோர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த பட்டியலில் 19 இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலக பணக்காரர்கள்(Billionaire) வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இவற்றில் 21 பணக்காரர்கள் 90 வயதிலிருந்து 100 வயதுக்கு உட்பட்டவர்கள், இதில் 8 நபர்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மலேசிய நாட்டை சேர்ந்த ராபர்ட் கோக் அவரின் வயது 90. இவருடைய சொத்துக்களின் மதிப்பு 17.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வாரன் பப்பெட்(Warren Buffet) தற்போது தன்னுடைய 88வது வயதில் உள்ளார்.

 

90 வயதை கடந்த எட்டு ஆசிய பணக்கார்களின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. இந்தியாவின் 90 வயதான பலோன்ஜி மிஸ்ட்ரியின்(Palonji Mistry) சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது நமது நாட்டின் மதிப்பில் சுமார் 1,42,710 கோடி ரூபாயாகும். 90 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ளவர் ஹாங்காங் நாட்டை சேர்ந்த லை காசிங்(Li Ka-Ching), 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிர்வகித்து வருகிறார்.

 

உலகின் பணக்காரர்கள் வரிசையில் மூத்த வயதுடைய இருவர்(Oldest and Richest), நடப்பு வருடத்தின் துவக்கத்தில் காலமாகி உள்ளனர். இந்தோனேசிய நாட்டினை சேர்ந்த எக்கா(Eka) தனது 15 வயதில் தேங்காய் மற்றும் பாமாயில் எண்ணெய் வர்த்தகத்தை தொடங்கியவர் பின்னர் உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுத்தார். இவர் தனது 98வது வயதில், இம்மாதத்தின் ஆரம்பத்தில் காலமானார்.

 

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹென்றி தனது இளமை காலத்தில் காலணிகள்(Shoe) விற்பனையாளராக ஆரம்பித்த இவர், பின்னாளில் அந்நாட்டின் முக்கியமான நபர்களில் ஒருவரானார். ஹென்றி கடந்த வாரம் தனது 94 வயதில் காலமானார். மூத்த வயதுடைய இந்த இருவரின் சொத்துக்கள் மட்டும் 1700 கோடி அமெரிக்க டாலர்கள் – இந்திய ரூபாயில் 1,21,300 கோடி.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

முதலீட்டை தாமதப்படுத்துவதால் நிகழும் பாதகங்கள்

முதலீட்டை தாமதப்படுத்துவதால் நிகழும் பாதகங்கள்

The Cost of Delayed Investing – Disadvantages of invest later

 

கடந்த சனிக்கிழமை (26-01-2019) அன்று விருதுநகரில் நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா மியூச்சுவல் பண்ட் (Aditya Birla Mutual Fund – ABSL) நிறுவனத்தின் சார்பாக பரஸ்பர நிதிக்கான விழிப்புணர்வு(Mutual Fund Awareness) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதலீட்டு ஆலோசகரும், செபி(SEBI) ஆலோசனை குழுவின் உறுப்பினருமான திரு. வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா மியூச்சுவல் பண்டின் பிராந்திய தலைவருமான திரு.சுவாமிநாதன் கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிதி சார்ந்த அடிப்படை அறிவை(Financial Education) பெறுவது பற்றி திரு. சுவாமிநாதன் கருணாநிதி அவர்கள் பேசும் போது, ‘ நமது குடும்பத்தின் நலனை காக்கும் அனைத்து விஷயங்களிலும் நாம் கூடி பொதுவாக செயல்படும் நிலையில், முதலீட்டு விஷயங்களிலும் குடும்பத்துடன் ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்றார். நாம் சம்பாதித்த பணம் நமக்கான வேலையை செய்ய நாம் கட்டளையிட வேண்டும். அதற்கு வெறும் சேமிப்பு மட்டும் போதாது, முதலீட்டையும் கற்று கொண்டு அதனை செயல்படுத்த வேண்டும்.

 

சரியான நிதி திட்டமிடல்(Financial Planning) மற்றும் இளமையில் முதலீடு(Invest Early) என்ற இரு காரணிகள் மட்டுமே நம்மையும், நம் குடும்பத்தையும் நிதி சிக்கலில் இருந்து பாதுகாக்கும். நாம் பெறும் வருமானத்தை கொண்டு மட்டும் நாம் எதையும் சாதித்து விட முடியாது. நமக்கான நிதி இலக்கை(Goals) அடைய நாம் சிறிதளவு பணத்தையும், அதற்கான காலத்தையும் கொடுக்க வேண்டும். பணக்காரர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து அதற்கான நேரத்தையும் கொடுக்க அனுமதிக்கின்றனர். ஆனால் நடுத்தர மக்களும், ஏழைகளும் பணத்தை குறுகிய காலத்தில் செலவழிக்க பழகுவது ஆரோக்கியமான விஷயமல்ல.

 

இளமையில் முதலீடு செய்வதால் நாம் பெறும் பயனையும், முதலீட்டில் தாமதத்தை ஏற்படுத்துவதால் நிகழும் பண இழப்புகளையும் நாம் அறிந்து கொள்வது நன்று. ராம்(Ram) என்ற இளைஞர் தனது 25 வயது முதல் மாதம் ரூ. 1000/- ஐ ஒரு முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்கிறார் என வைத்து கொள்வோம். தனது ஓய்வு காலமான 60 வயது வரை, அதாவது சுமார் 35 வருடங்களுக்கு அவர் மாதாமாதம் முதலீடு செய்து வருகிறார். ராமுக்கு கிடைக்கும் வருமான வட்டி விகிதம் 12 சதவீதம் எனில், முதிர்வில் அவருக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ. 64 லட்சம்.

 

ராமின் நண்பரான குமார்(Kumar) தனது 25 வயதில் முதலீடு செய்ய விருப்பமில்லாமல், முதலீட்டை 30வது வயதில் தொடங்குகிறார். இவரும் மாதாமாதம் 1000 ரூபாயை 12 % வட்டியில் முதலீடு செய்து வருகிறார். குமாரின் ஓய்வு காலமான 60 வயதில் அவர் பெறும் முதிர்வு தொகை 35 லட்ச ரூபாயாக உள்ளது. இவரின் மொத்த முதலீட்டு காலம் 30 வருடங்கள். அதாவது ராமை விட 5 வருடங்கள் மட்டுமே குறைவு. இருவருக்குமிடையே முதிர்வு தொகையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி ?

 

கூட்டு வட்டியின்(Power of Compounding) மகிமை தான்.

 

ராம் தனது 55 வயதில் (30 வருடங்கள்) மாதாமாதம் முதலீடு செய்யும் ரூ. 1000/- ஐ நிறுத்தினாலும், 35 வருட முடிவில் அவருக்கு கிடைக்கும் தொகை 64 லட்ச ரூபாயாகும். இது தான் இளமையின் முதலீட்டு ரகசியமும்(Secret of Young Investing), கூட்டுவட்டி பலனும்(Compound Interest). இருவருக்கும் இடையே முதிர்வு தொகை மட்டுமே வித்தியாசம் அல்ல, மாறாக குமாருக்கு ரூ. 29 லட்சம் பண இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக ராம் தனது முதலீட்டின் முதிர்வு தொகையை கொண்டு, தனக்கான நிதி இலக்கினை பூர்த்தி செய்யலாம். அதே நேரத்தில் குமாருக்கு அது போதுமான தொகையாக இருந்திராது.

 

இளமையில் நீங்கள் முதலீடு செய்யவில்லை என்றால், உங்களுக்கான பின்வரும் பாதகங்கள் (Disadvantages of Investing Later):

 

  • நிதி இலக்கை அடைவதில் சிக்கல் (அ) தாமதம்.
  • தாமதமாக முதலீட்டை துவங்கும் போது, அதிகப்படியான தொகையை மாதாமாதம் முதலீட்டிற்கு ஒதுக்கும் நிலை.
  • முதுமையில் தொடர் முதலீட்டிற்கான வாய்ப்பு குறைவு.
  • கூட்டு வட்டியின் நீண்டகால பலனை தவற விடுதல்
  • நிதி சுதந்திரத்தை(Financial Independence) பெறாமை
  • முதலீட்டின் மீதான வட்டி வருமானம் குறையும் வாய்ப்பு.

 

பின்னர் அவர் பேசும் போது, ‘ ஒவ்வொரு முதலீட்டு சாதனத்திலும் நாம் பார்க்க வேண்டிய முக்கிய காரணிகளாக முதலீட்டு பாதுகாப்பு(Safety), நீர்மை நிறை (பணத்தை எளிதாக பெறுதல் -Liquidity), சிறந்த வருமானம்(Good returns), வரி(Tax Efficiency) ஆகியவை ‘ என்கிறார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதன் பின் பேசிய திரு. நாகப்பன் அவர்கள், ‘ ஒரு முதலீட்டை தேர்ந்தெடுக்கும் முன், அதற்கான கல்வியை நாம் தான் பெற வேண்டும். திருமணம், கல்வியில் நமக்கு இருக்கும் அக்கறை முதலீட்டு திட்டத்தை(Investment Products) தேர்ந்தெடுப்பதிலும் இருக்க வேண்டும். நாம் சம்பாதிக்கும் மாத வருமானம் போக, இரண்டாம் வருமான வாய்ப்பை(Secondary Income) நாம் எப்போதும் தேடுவதற்கு கற்று கொள்ள வேண்டும்.

 

ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதன் ரிஸ்க்கை(Risk) அறிவதோடு, நமக்கான ரிஸ்க்கை குறைக்க டேர்ம் இன்சூரன்ஸ்(Term Insurance), மெடிகிளைம் பாலிசி(Mediclaim) போன்றவற்றை முன்னரே எடுத்து கொள்வது அவசியம். பணம் சம்பாதிப்பது மட்டுமே நம்மை பணக்காரர்களாக உருவாக்காது, மாறாக நமது நிதி தேவைகளை சரியாக திட்டமிட்டு அதன் சார்ந்து நாம் பழக்கப்படும் போதே, நிதி சுதந்திரம் அடையலாம். ‘ என்றார்.

 

தேவைக்கு மேல் ஒரு ரூபாய் சம்பாதிப்பவனே உண்மையில் பணக்காரன் – வ. நாகப்பன்

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

பங்குச்சந்தையில் தின வர்த்தகர்களுக்கான எளிய மூன்று உத்திகள்

பங்குச்சந்தையில் தின வர்த்தகர்களுக்கான எளிய மூன்று உத்திகள்

Three Simple Strategies to follow – Day Traders

 

பங்குச்சந்தையில் மூன்று விதமான நபர்கள் அமைய பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். தின வர்த்தகர்கள்(Day Traders), குறுகிய கால முதலீட்டாளர்கள் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள்(Investor) என காலங்களுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி, விற்பவர்கள் உள்ளனர். தினசரி வர்த்தகர்களை பொறுத்தவரை அவர்கள் வர்த்தகம் செய்யும் காலம் சில மணிகளிலிருந்து அன்றைய நாள் முழுவதுமாக இருக்கும்.

 

தின வர்த்தகர்கள் அனைவரும் தங்களின் நேர மேலாண்மை(Time Management) மற்றும் பங்குகளின் மீதான சரியான அணுகுமுறையை(Trend) கொண்டிருக்க வேண்டும். இதனை வர்த்தக ஒழுக்கம்(Trading Discipline) என்றும் குறிப்பிடலாம். பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொரு தின வர்த்தகர்களுக்கும் ஒவ்வொரு விதமான கொள்கைகள் இருக்கலாம். அந்த கொள்கைகள் மற்றவர்களிடம் இருந்து வேறுபடவும் செய்யலாம்.

 

பங்குச்சந்தை தின வர்த்தகத்தில் நாம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என எண்ணப்பட்டாலும், உண்மை என்னவோ இழப்பு அல்லது ஆபத்திற்கான வாய்ப்பு தான் அதிகம் எனலாம். அதனால் தான் தினசரி வர்த்தகம்(Intra Day) மேற்கொள்ளும் நபர்கள் தங்கள் லாபங்களை பதிவு செய்வதை விட, நஷ்டத்தினை முடிந்த அளவு தவிர்த்தாலே வெற்றியடையலாம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பங்குச்சந்தை என்பது ரிஸ்க் அதிகம் நிறைந்த ஒரு வாய்ப்பு சந்தை ஆகும். அதனால் நமது மனம் போன போக்கில் வர்த்தகம் செய்யாமல் சில அடிப்படை விஷயங்களை கற்று கொண்டு, அதற்கான வியூகம்(Strategy) அமைப்பதே சிறந்தது. திட்டமிடப்பட்ட வியூகத்தை நாம் தவறாமல் எப்போதும் பயன்படுத்த வேண்டியதும் அவசியம். அது போன்ற வியூகங்களை கையாள இங்கு சில எளிமையான உத்திகளை கொடுத்துள்ளோம்.

 

பங்குச்சந்தையில் நாம் தின வர்த்தகம் மேற்கொள்ளும் நாள் அன்று, உலகளாவிய சந்தை புள்ளிவிவரங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார செய்திகளை தெரிந்து வைத்திருப்பது நன்று. நாம் வர்த்தகம் செய்யும் நாளன்று பங்குச்சந்தை காளையாக உள்ளதா அல்லது கரடியாக உள்ளதா, இல்லையெனில் பக்கவாட்டில் நகர்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Best Intra Day Strategies

சந்தை இன்று நேர்மறையாக அல்லது ஏற்றமாக(Bullish) தொடங்குகிறது எனில், விலை ஆதரவு(Support level) உள்ள நிலையில் பங்குகளை கண்டறியுங்கள். பின்பு, அதன் விலை ஆதரவு நிலையில் உள்ள போது பங்குகளை வாங்க தயாராகுங்கள். அப்படியில்லாமல் இருப்பதற்கான நிலை தெரிந்தால் அன்றைய நாளில் வர்த்தகம் செய்வதை முடிந்தவரை தவிருங்கள்.

 

சந்தை கரடியின் பிடியில் அல்லது இறக்கத்தில்(Bearish) அமைந்தால், அதிகபட்ச விலையில்(Resistance level) உள்ள நிலையை அல்லது பங்குகளை கண்டறியுங்கள். பின்பு அதே விலையில் பங்குகளை முதலில் விற்க(Short – Selling) தொடங்குங்கள். பங்குகள் அதிகபட்ச விலையில் கிடைக்கவில்லை எனில், அதன் நிலை வரும் வரை காத்திருக்கவும் அல்லது அன்றைய நாளில் வர்த்தகம் செய்வதை தவிர்க்கலாம்.

 

நீங்கள் வர்த்தகம் செய்யும் நாளில், பங்குச்சந்தை பக்கவாட்டில்(Sideways) நகர்கிறது என்றால், பிரேக் அவுட் (Breakout) உத்தியை பயன்படுத்துங்கள். பிரேக் அவுட் ஆன பிறகு வர்த்தகம் செய்வதை தொடங்குங்கள். இவை மூன்றும் ஒவ்வொரு தின வர்த்தகரும்(Day Trading) பின்பற்றக்கூடிய எளிய உத்திகள். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உங்களை நீங்களே ஒழுங்குபடுத்தி கொண்டு வர்த்தகம் செய்கையில், அதற்கான பலன் கிடைக்கும்.

 

( இந்த பதிவிற்கான ஆங்கில பதிவை பார்க்க: Simple Strategies for the Day Trading )

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil