Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ?

2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ?

How was the Global Stock Indices in the year 2019 ?

நடப்பு 2019ம் வருடம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக உலகளவில் பல பொருளாதார நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றில் முக்கியமாக சீன-அமெரிக்க வர்த்தக போர், ஐரோப்பில் காணப்பட்ட பிரெக்ஸிட்(Brexit) ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை மற்றும் பருவநிலை மாற்றங்கள்(Climate Change) ஆகியவை பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக உலக பொருளாதாரமும் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்பட வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினால், அது 2020ம் ஆண்டின் பிற்பாதியில் தெரிய வரலாம். சீன-அமெரிக்க வர்த்தக போர் முடிவுக்கு வரலாம் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல் காலமே மற்றவற்றை தீர்மானிக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளர்ந்து வரும் நாடுகளில் பலவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறைந்து வருகிறது. இதனால் அதன் வளர்ச்சி வேகத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் உலகளவில் காணப்படும் பங்குச்சந்தைகளும், மற்ற முதலீட்டு சாதனங்களும் எவ்வாறு இந்த வருடம் வருவாயை தந்துள்ளது என காணலாம்.

கடந்த ஒரு வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் 20 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. இது போல வெள்ளியும் சுமார் 16 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ரெப்போ வட்டி விகித குறைவால், வங்கிகளின் வட்டி விகிதம் 7 சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. பங்குச்சந்தையை பொறுத்தவரை அமெரிக்காவின் நாஷ்டாக் 100(NASDAQ 100) குறியீடு 32 சதவீத வருவாயை தந்துள்ளது.

Stock Global Indices 2019

டவ் ஜோன்ஸ்(Dow Jones) குறியீடு 19 சதவீதமும், எஸ் & பி 500 25 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளன. பிரேசில் நாட்டின் முக்கிய குறியீடான iBovespa 29 சதவீதமும், அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா முறையே 26 சதவீதம் மற்றும் 22 சதவீத வருவாயை நடப்பு வருடத்தில் அளித்துள்ளது.

ஐரோப்பாவை காணும் போது, புட்சி 100(FTSE 100) 12 சதவீத வருவாயும், ஜெர்மனி டாக்ஸ்(DAX) 24 சதவீதமும் மற்றும் பிரான்ஸின் சி.ஏ.சி. 40 (CAC 40) குறியீடு 25 சதவீத வருவாயும் அளித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகளாக நிப்டி50(Nifty50) 11 சதவீதமும், சென்செக்ஸ் 13 சதவீத ஏற்றத்தையும் கண்டுள்ளது

சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் குறியீடுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து குறியீடுகள் 20 சதவீதத்திற்கு அதிகமான வருவாயை நடப்பு 2019ம் வருடத்தில் கொடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் குறியீடுகளும் வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி50 மற்றும் சென்செக்ஸ்(Sensex) குறியீடுகளில் உள்ள சில லார்ஜ் கேப் பங்குகளின் ஏற்றமே, சந்தையின் புதிய உச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. பொருளாதாரத்தில் தேக்க நிலை காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் காரணமாக தற்போது உச்சத்தில் காணப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதே வேளையில் ஸ்மால் கேப்(Small Cap) மற்றும் மிட் கேப்(Mid Cap) பிரிவில் பெரும்பாலான பங்குகளின் விலை 40-50 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பரஸ்பர நிதி முதலீட்டிலும் பங்கு சார்ந்த பண்டுகள்(Equity Oriented Mutual Funds) பிரிவில் 40 சதவீத பண்டுகள் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் முதலீட்டு இழப்பை ஏற்படுத்திய பெரும்பாலான பண்டுகள் ஸ்மால் கேப் மற்றும் துறை சார்ந்த(Sector Funds) பிரிவுகளாகும். முக்கியமாக உள்கட்டமைப்பு துறை சார்ந்த பண்டுகள் நடப்பு வருடத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இது போல பொதுத்துறை நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பண்டுகளும் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

வரும் நாட்களில் சந்தையை பாதிக்கும் காரணிகள் சற்று தென்படுவதால், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்த பின்னரே, முதலீடு செய்வது சிறந்தது. விலையை மட்டும் கருத்தில் கொண்டு பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டில் இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா ?

2020ம் ஆண்டில் இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா ?  

Will the Indian Automotive Industry recover in 2020 ?

கடந்த ஒரு ஒன்றரை வருடமாக இந்திய வாகனத்துறை மட்டுமில்லாமல் உலகளவிலும் வாகனத்துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது. சீன-அமெரிக்க வர்த்தக போர், கச்சா எண்ணெய் உற்பத்தியில் நிலவும் மாற்றம், பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மற்றும் உள்நாட்டில் நிலவும் பலவீனமான தேவை நுகர்வு என பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்கான காரணிகள் சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் வாகனத்துறையின் வளர்ச்சி சில காலாண்டுகளாக இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. மத்திய அரசு சார்பில் சில கொள்கைகள் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பயன்பட்டாலும், வரும் 2020ம் ஆண்டு இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா என்பதே பெரும்பாலானோரின் கேள்வி.

சமீப காலமாக வாகனத்துறையில் ஏற்பட்ட பலவீனமான நுகர்வு தன்மை(Weak Demand Consumption) மற்றும் அதனை சார்ந்த தேக்க நிலை ஆகியவை இந்த துறை மாற்றமடைந்து வருவதையும் சுட்டி காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாகனத்துறை எதிர்பாராத அபரிதமான வளர்ச்சியை கொண்டிருந்தது. இதுவே தற்போது சந்தைக்கு மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலத்தில், ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய மாற்றம், மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். அதே சமயத்தில், அவை அதிக வேலை வாய்ப்புகளை கொண்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை. மாற்றம் நடைபெற்று வருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளா  விட்டாலும், உலகளவில் அனைத்து துறைகளிலும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.

2020ம் ஆண்டில் உலகளவிலான வாகனத்துறையில் பல மாற்றங்கள் ஏற்படலாம். வாகனத்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் நிறுவனங்கள் பல சவாலான நிகழ்வுகளை சந்திக்க நேரிடலாம் என மூடிஸ்(Moodys) நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் கார் வாகன விற்பனை(Car Sales) மற்றும் வணிக ரீதியிலான வாகன விற்பனை வளர்ச்சி  குறையக்கூடும் எனவும், இதன் காரணமாக பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.

பருவநிலை மாற்றங்களும், அதன் சார்ந்து எடுக்கப்படும் புதிய கொள்கைகளும்  தற்போதைய வாகன சந்தையை பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது. விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இதன் காரணமாக அவற்றின் வருவாயில் துண்டு விழலாம்.

நாட்டின் உற்பத்தி துறையில்(Manufacturing in GDP) வாகனத்துறையின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வணிக வாகன உற்பத்தியில் உலகளவில் 7வது மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்தது கவனிக்கத்தக்கது. வாகனத்துறை விரைவாக மீண்டு எழுந்தால் மட்டுமே, நாட்டின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும். இருப்பினும், இலக்கின் மீது நம்பிக்கை கொண்டிருப்போம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொப்பளித்த விலைவாசி உயர்வு – நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம்

கொப்பளித்த விலைவாசி உயர்வு – நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 

Rising Prices on Essential Needs – CPI Retail Inflation to 5.54 Percent in November 2019

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத பணவீக்கம் 5.54 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் சொல்லப்பட்ட இதே காலத்தில் பணவீக்கம்(Inflation) 2.33 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வால் கடந்த மாத சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக காய்கறிகளின் விலை நவம்பர் மாதத்தில் 36 சதவீதமாக இருந்துள்ளது. இது அக்டோபர் மாத இறுதியில் 26 சதவீதமாக இருந்துள்ளது.

பருப்பு வகைகளின் விலை 14 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் ஆகியவற்றின் விலை 9.38 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இது போல முட்டையின் விலையும் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆக, அக்டோபர் மாதத்தில் 7.89 சதவீதமாக காணப்பட்ட உணவுப்பொருட்களின் சில்லரை விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 10 சதவீதமாக இருக்கிறது.

வீட்டுமனை விலையும் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. புகையிலை பொருட்களின் விலை 3.26 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 1.30 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் எரிபொருட்களின் விலை இரண்டு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் நகர்ப்புற சில்லரை விலை பணவீக்கம்(Urban Retail Inflation) 5.76 சதவீதமாகவும், கிராமப்புறங்களில்(Rural) 5.27 சதவீதம் என்ற அளவிலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் இரு சார்பிலும் விலை உயர்ந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த குறுகிய கால இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற நிலையை கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் மீறியது. தற்போது அதனை விட சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை(REPO Rate) குறைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

India Interest Rate – REPO Rate – A look at the past one year 

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் உள்ளது. 2018ம் ஆண்டு ஜூலை காலாண்டில் 8 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்(GDP Growth), அக்டோபர் 2019 முடிவில் 4.5 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

2018ம் ஆண்டு ஜூலை காலத்தில் 4.17 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம்(Inflation), பின்னர் நடப்பு 2019ம் ஆண்டின் ஜனவரி காலத்தில் 1.97 சதவீதம் என்ற நிலையிலிருந்து, தற்போது 4.62 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

நாட்டின் வங்கி வட்டி விகிதத்தை (ரெப்போ) பொறுத்தவரை, கடந்த ஒரு வருட காலமாக குறைந்த வண்ணம் உள்ளது. இது கடன் பெறுபவர்களுக்கு சாதகமாகவும், அதே வேளையில் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.

கடந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் 6.5 சதவீதமாக இருந்த வங்கி ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate), தற்போது 5.15 சதவீதமாக உள்ளது. ஆக, ஒரு வருட காலத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் 135 புள்ளிகளாகும்.

2019ம் ஆண்டின் பிப்ரவரி காலத்தில் 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக சொல்லப்பட்டது. நடப்பு ஜூன் காலத்தில் மேலும் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2019 காலாண்டில் வங்கி ரெப்போ விகிதம் அதிகபட்சமாக 35 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committe), வங்கிக்கான வட்டி விகிதத்தை 5.15 சதவீதமாக குறைத்தது.

நடப்பு டிசம்பர் காலத்திற்கான மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த ஆண்டில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது, இதுவே முதன்முறை.

2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் காய்கறிகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை அதிகரிக்க கூடும் எனவும், இதன் காரணமாக பணவீக்கம் 4.7 – 5.1 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களில் நாட்டின் வங்கி வட்டி விகிதம் சராசரியாக 6.65 சதவீதத்தில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2000ம் வருடத்தின் ஆகஸ்ட் காலத்தில் இது 14.50 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. குறைந்தபட்சமாக 2009ம் வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக வங்கி ரெப்போ விகிதம் இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் வருமான வரி குறைப்பு எப்போது ? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தனிநபர் வருமான வரி குறைப்பு எப்போது ? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

Cut in Personal Income Tax – Expected to be soon

 

நாட்டின் பொருளாதார மந்தநிலையை சரி செய்யவும், நிறுவனங்களின் வருவாயை தக்க வைக்கவும், மத்திய நிதி அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு சலுகையை அறிவித்தது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை நஷ்டத்தில் செல்லாமல், லாபத்தில் தக்க வைத்து கொண்டன.

 

வரி குறைப்பு நடவடிக்கை இல்லாத நிலையில், அவை நஷ்டத்தில் இயங்க கூடும். விற்பனையும் குறைவாக இருப்பதால், நஷ்டத்தில் செல்லக்கூடிய நிறுவனங்கள் தாங்கள் பெற்ற வங்கி கடனை செலுத்த முடியாமல் போகலாம் அல்லது தொழில் செய்ய மேலும் கடனை வாங்க நேரிடலாம். இது வங்கிகளின் நிதிநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு, அரசு வரி குறைப்பை ஏற்படுத்தியிருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதனிடையே ஜி.எஸ்.டி.(GST) என சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரி குறைப்பும், ஜி.எஸ்.டி. வருவாயும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. ஒரு புறம் ஜி.எஸ்.டி. மூலம் பெறப்பட வேண்டிய தொகை(GST Refund) இன்னும் கிடைக்கவில்லை என நிறுவனங்கள் சார்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் உயர்த்தப்படும் பட்சத்தில், அவை வரும் நிதியாண்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். கடந்த செப்டம்பர் மாதத்தில் குறைக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வரி காரணமாக, அரசுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் சுமையாக சொல்லப்பட்டிருந்தது. இது நாட்டின் நிதி பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

ஏற்கனவே நாட்டின் பட்ஜெட் வருவாய்க்கு அதிகமான செலவினங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், தனிநபர் சார்ந்த வருமான வரி வரம்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா என நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ‘ நாட்டில் வரிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விலக்கு இல்லாத வரி திட்டங்களை அமல்படுத்தவும் அரசு தயாராக உள்ளது ‘ என்றார். 

 

தனிநபர் வருமான வரி குறைப்பு வரவிருக்கும் நிதியாண்டில் இருக்கலாம் என்பதையும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனிநபர் வருவாய் அதிகரிக்கலாம். மேலும் சந்தையில் வாங்கும் தன்மை மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இது துணைபுரியும் என சொல்லப்படுகிறது. தனிநபர் வருமான வரி விகிதங்கள் தற்போது 5,20 மற்றும் 30 சதவீதம் என்ற முறைகளை கொண்டுள்ளது. எப்படியிருந்தாலும், இதனால் ஏற்படப்போகும் நிதி சுமையை அரசு எவ்வாறு கையாள போகிறது என்பதே அனைவருடைய கேள்வி.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை 

Unchanged in REPO rate, Cut in GDP growth  – RBI Policy – Economy Slowdown 

வியாழக்கிழமை (05-12-2019) அன்று நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து காலாண்டுகளாக குறைக்கப்பட்டு வந்த ரெப்போ வட்டி விகிதம் இம்முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நடப்பில் இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதம்(REPO Rate) குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதத்தை தாண்டி 4.62 சதவீதமாக இருந்தது.

தற்போது காணப்படும் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், டிசம்பர் காலத்திற்கு 5 சதவீத பணவீக்கத்தை கடக்கலாம். இவ்வாறான நிலையில், பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தால் பணவீக்கத்திற்கு குறைவான வட்டி விகிதம் காணப்படலாம்.

ஆனால் ரெப்போ வட்டி விகிதத்தில் சந்தை எதிர்பார்த்த 25 புள்ளிகள் குறைப்பு இம்முறை நடக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த 5.15 சதவீத ரெப்போ விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு இருக்கலாம் எனவும் பாரத ரிசர்வ் வங்கி சுட்டி காட்டியுள்ளது.

நிதி கொள்கை குழு கூட்டத்தில் சொல்லப்பட்ட தகவல் : ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாகவும் தொடரும். 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation) 4.70 % – 5.10 % என்ற நிலையில் இருக்கலாம். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னர் 6.10 சதவீதமாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த சில காலாண்டுகளாக குறைந்து வருவதும், அதே வேளையில் சமீப கால விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் பொருளாதார மந்தநிலையை அதிகப்படுத்துகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் – சிறந்த ஐந்து பண்டுகள்

குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் – சிறந்த ஐந்து பண்டுகள் 

Best 5 Funds to invest in 2020 – Children’s Gift Mutual Funds

எந்தவொரு முதலீட்டுக்கும் நிதி இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். நமக்கான இலக்குகள்  குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்குகளாக இருக்கலாம். இருப்பினும், அவற்றுக்கான பெயரை கொண்டிருக்கும் போது, அதன் முதலீட்டு தன்மை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கும்.

உதாரணமாக ஓய்வு கால நிதி(Retirement Plan), குழந்தைக்கான கல்வி(Child Education), வீடு வாங்குதல், அவசர கால நிதி(Emergency Fund) என பல நிதி இலக்குகளுக்கு நாம் பெயரிடுவது சிறந்தது. இன்றைய காலத்தில் கல்வி மற்றும் மருத்துவ செலவிற்கான மதிப்பை நம்மால் சரியான நிலையில் கணிக்க முடியாது. எனவே தான் மருத்துவ செலவுகளை சமாளிக்க, குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டை(Health Insurance) பெறும் போது, அது குடும்பத்தில்  உள்ள அனைவருக்கும் பயன் தரும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குழந்தைக்கான கல்வி எனும் போது, நம்மில் பெரும்பாலானவர்கள் அதனை திட்டமிட தவறுகிறோம். குழந்தைகளின் பள்ளிக்கால படிப்பிற்கு அதிக செலவு செய்யும் நாம் மேற்படிப்பிற்காக செலவுகளை முன்னரே திட்டமிட வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நமது வருவாய்க்கான பட்ஜெட்டில் சிரமம் இருக்காது. குழந்தைகளின் மேற்படிப்புக்காக திட்டமிடும் போது, அது ஒரு நீண்ட கால இலக்கு என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். உதாரணமாக குழந்தையின் வயது ஒன்று என்றால், 16 வருடங்களுக்கு பின்பு தான் குழந்தைக்கான மேற்படிப்பு செலவு தேவைப்படுகிறது. எனவே அதனை மனதில் கொண்டு, பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறுவது நல்லது.

வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு பாதுகாப்பானது என நாம் சொன்னாலும், நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை நம்மால் பெற முடியாது. கல்வி செலவை பொறுத்தவரை பணவீக்கம் ஒவ்வொரு வருடமும் ஏறிக்கொண்டு தான் செல்கிறது. எனவே அதற்கேற்றாற் போல், பரஸ்பர நிதிகள் வழங்கும் திட்டங்களை குழந்தைகளின் கல்வி சேமிப்புக்காக முயற்சிக்கலாம்.

இன்று நம் நாட்டில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களும், அவற்றில் காலத்திற்கு தகுந்தாற் போல பல திட்டங்களும் உள்ளது. பொதுவாக 5 வருடங்களுக்கு மேற்பட்ட நிதி இலக்குகளுக்கு பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில்(Equity Mutual Funds) முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள் தங்களின் ரிஸ்க் தன்மையை கொண்டு, கடன் பண்டுகள்(Debt Funds) மற்றும் கலப்பின பண்டுகளை(Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகளின் மேற்படிப்பு செலவுக்கான திட்டத்தை அவர்களின் 5 வயதுக்குள் முதலீடு செய்ய துவங்குவது சிறப்பு. அதற்கு மேலான வயதுள்ள குழந்தைகளை கொண்டிருப்பவர்களும், காலத்திற்கு ஏற்றாற் போல் முதலீடு செய்யலாம்.

குழந்தைகளுக்கான மேற்படிப்பு திட்டமிடலுக்கு சிறந்த 5 பண்டுகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம். அவை,

  • HDFC Children’s Gift Fund
  • ICICI Prudential Child Care Fund
  • UTI Children’s Career Fund
  • Axis Children’s Gift Fund
  • Aditya Birla Sun Life Bal Bhavisya Yojna 

மேலே சொன்ன திட்டங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பண்டுகளாகும். இது ஒரு கலப்பின பரஸ்பர நிதி திட்டமாகும்(Hyrbrid Funds). பங்கு மற்றும் கடன் சார்ந்த இரு வகை தன்மையிலும் முதலீடு செய்யப்படுகிறது. இது போன்ற திட்டங்களில் பொதுவாக பங்கு முதலீட்டின் பங்களிப்பு 60 – 70 சதவீதமாக இருக்கும். மீதமிருக்கும் தொகை கடன் பண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

childrens gift fund

குழந்தைகளுக்கான பண்டுகள் 5 வருட லாக்-இன்(Lock-in Period) வசதியை கொண்டது. அதாவது இந்த பண்டுகளில் முதலீடு செய்பவர்கள், முதலீடு செய்த நாளிலிருந்து 5 வருடம் முடியும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது. இது தான் திட்டத்தின் சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், குழந்தை 18 வயது அடைந்தவுடன் பணத்தை பெறும் வசதியும் உண்டு. பொதுவாக செல்வ மகள் திட்டத்தில் 21 வருட முடிவில் தான் பணத்தை பெற முடியும். அப்படியிருக்கையில், இதன் லாக்-இன் காலம் குறைவே. ஐந்து வருட காலத்திற்குள் திட்டத்தை முடித்து கொள்ள வேண்டுமானால், வெளியேறும் கட்டணம் வசூலிக்கப்படும். இது போன்ற வசதியால் குழந்தைக்கான இலக்குகளில் தவறாமல் முதலீடு செய்வதும், பெற்றோருக்கு முதலீட்டு ஒழுக்கத்தையும் ஏற்படுத்தும்.

திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, குழந்தையின் பெயரில் மட்டுமே(Name of Minor Child) முதலீடு செய்யப்படும். முதலீடு செய்யும் நபர் கொடையாளி(Donor), பாதுகாவலர் அல்லது பெற்றோராக இருக்கலாம். இந்த திட்டத்தில் மட்டுமே குழந்தையின் பெயரில் யார் வேண்டுமானாலும் முதலீட்டை மேற்கொள்ளலாம். குழந்தையின் தாத்தா, பாட்டி, மாமா, பெற்றோரின் நண்பர்கள், மற்ற உறவினர்கள் என முதலீடு செய்யும் நபர்கள் இருக்கலாம்.

திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக மாதாமாதம் 500 ரூபாயை முதலீடு செய்யலாம். எனினும், குழந்தையின் மேற்படிப்பு செலவுகளை(எதிர்கால செலவுகள்) கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் முதலீட்டு தொகையை அதிகரித்து முதலீடு செய்வது நல்லது. இது ஒரு நீண்ட கால திட்டம் என்பதால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். இந்த திட்டத்தை குழந்தைகளின் கல்விக்காக மட்டுமில்லாமல், அவர்களின் எதிர்கால திருமண திட்டமிடலுக்கும், தொழில் செய்ய தேவையான முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம்.

பரஸ்பர நிதி நிறுவனங்களில் காணப்படும் மற்ற பண்டுகளை தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருப்பவர்கள், இந்த பண்டுகளை தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தேர்ந்தெடுக்கலாம். நீண்ட காலத்தில் நல்ல வருவாயை பெறுவது மட்டுமில்லாமல், பெற்றோருக்கான மகிழ்ச்சியும் கிட்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?

ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?

23 Percent hike in a year – Gold Price in INR

நமது நாட்டில் கூட்டு குடும்பத்தின் மீது நம்பிக்கை உள்ளதோ இல்லையோ, ஆனால் தங்கத்தின் மீதான நம்பிக்கை பெரும்பாலானவர்களிடம் அதிகமாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு சாதனத்தையும் விட, தங்கம் பாதுகாப்பானதாகவும் மற்றும் அதிக வருவாய் தரக்கூடிய முதலீடாகவும் நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. மேலும், அது குடும்பத்தின் கவரமாகவும் காணப்படுகிறது எனலாம்.

10 கிராம் அளவை கொண்ட 24 காரட் சுத்த தங்கம் (99.9 சதவீதம்), சென்னை விலை அடிப்படையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 31,970 (10 கிராம்) என்ற விலையில் வர்த்தகமானது. தற்போது 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 39,500 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 23 சதவீத வருவாய் வளர்ச்சி எனலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இதன் விலை அதிகபட்சமாக 40,450 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. நடப்பில் தங்கத்தின் விலை(Gold Price) ஒரு கிராம் 3,416 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அவுன்ஸ் அடிப்படையில் 1,06,268 ரூபாய் என்ற விலையில் காணப்படுகிறது.

பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் காணும் போது, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். இது போல, உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, போர் வரும் சூழல் மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும் போது தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலையில் மாற்றம் அமையும்.

உலகளவில் வர்த்தகமாகும் தங்கம் ஒரு நல்ல முதலீட்டு சாதனம் என்றாலும், நாம் நினைப்பது போல, அது பாதுகாப்பான சாதனம் என நாம் சொல்ல முடியாது. காரணம், தங்கம் என்பது பங்குச்சந்தையை ஒட்டிய ரிஸ்க் தன்மையை எப்போதும் கொண்டிருக்கும். பங்குச்சந்தை போல அதிக ஏற்ற-இறக்கங்கள் இல்லையெனினும், மிதமான ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது தான் தங்கத்தின் முதலீடு. இதன் காரணமாக தான் அதன் விலை கடந்த 50 வருடங்களில் அதிகரித்துள்ளது எனலாம்.

இன்று அதிகளவிலான தங்கத்தினை கையிருப்பாக வைத்திருக்கும் நாடு, அமெரிக்கா. இதற்கான காரணமும் உண்டு, உலகளவில் தேவைப்படும் தங்கத்தின் வர்த்தகத்தை நிர்வகிக்கவும், டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும் அதனை சரிப்படுத்தவே தங்கம் உதவிகரமாக உள்ளது. எப்போதெல்லாம் டாலர் மதிப்பு உயர்கிறதோ, அப்போது தங்கத்தின் தேவை குறையும். ஏனெனில், பெரும்பாலான நாடுகள் அந்நிய செலவாணியை (டாலர்) அதிகளவில் கையிருப்பாக கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை இறங்கும்.

இதற்கு மாற்றாக, எப்போதெல்லாம் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைகிறதோ, தங்கத்தின் மீதான தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும். சீன-அமெரிக்க வர்த்தக போர் என்றால், டாலரின் மீதான நம்பிக்கை குறைந்து, தங்கத்தின் மீது ஈடுபாடு இருக்கும். ஆக, பெரும்பாலான நாடுகள் தங்கத்தை ஒரு இழப்பு காப்பு வணிகமாக பயன்படுத்தி வருகிறது.

நம் நாட்டில் தங்கத்தின் விலை ஏறுவதற்கான காரணம் பொதுவாக நாம் டாலர் மதிப்பின் அடிப்படையில் இறக்குமதி செய்வதால் தான். எப்படியிருந்தாலும், நமக்கு கிடைக்கப்பெறும் தங்கம் சற்று விலை அதிகமானதே. டாலர் மதிப்பு அதிகரித்தாலும், இல்லையெனில் டாலர் மதிப்பு வீழ்ச்சி பெற்றாலும் நாம் தங்கத்தை அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.

தங்கத்தின் விலை அதிகரித்து வருவது சரி தான். நாம் அதனை நல்ல ஒரு முதலீடாக மாற்றுவது எப்படி ?

  • தங்க ஆபரணத்தை வாங்கி கொண்டு, அதனை முதலீடு என்று நாம் சொல்ல கூடாது. தங்கத்தின் விலையை காட்டிலும், நாம் கூடுதலாக சில செலவுகளை(செய்கூலி, சேதாரம், வரி மற்றும் இதர செலவுகள்) ஏற்க வேண்டியிருக்கும். நாம் அதனை விற்கும் போது, நமக்கு சந்தையில் வர்த்தகமாகும் விலை முழுவதுமாக கிடைக்கும் என சொல்ல முடியாது. நகை அடமான கடைகள் வருங்காலத்தில் அரசு மூலம் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிலை உள்ளது. இதனால், நாம் அடமானம் வைத்தாலும் நமக்கு சரியான விலையில் கடன் கிடைக்குமா என்பது சந்தேகமே.
  • தங்கத்தை ஆபரணமாக கொண்டிருப்பதில் பாதுகாப்பு இல்லை. தங்கத்தை முதலீடாக கொண்டிருக்க தங்க பத்திர திட்டங்கள்(Gold Bond Scheme), கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு(Gold Funds) போன்றவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதற்கான செலவினங்களும் மிக குறைவு. பின்னாளில் வர்த்தகத்தின் விலையில் பணமாக அல்லது நகையாக பெறலாம்.
  • பொருளாதார மந்தநிலை காலங்களில் தங்கத்தில் சிறிய அளவில் முதலீடு செய்யலாம். ஆபரணங்களை வாங்கி வைத்து கொண்டு முதலீடு என சொல்லாதீர்கள். உங்களுக்கு நகைகளாக வேண்டுமானால், விருப்பத்திற்கு ஏற்றாற் போல் வாங்கி கொள்ளுங்கள். அதே வேளையில் அதனை ஒரு செலவாக மதிப்பிடுங்கள். (உங்கள் சொந்த வீட்டை போல !)
  • முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) செய்யும் போது, தங்கத்திலும் முதலீடு செய்யுங்கள். உங்கள் முதலீட்டில் வங்கி டெபாசிட்டுகள், பங்குகள், பரஸ்பர நிதிகள், நிலம் மற்றும் தங்கத்திற்கும் பங்களிப்பு இருக்கட்டும். ஒரே முதலீட்டு சாதனத்தில் முழு பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம்.
  • தங்கத்தை ஒரு இழப்பு காப்பாகவும்(Hedge), பணவீக்கத்தை சரிக்கட்டவும் பயன்படுத்துங்கள்.

கடந்த மாதத்தில் நாட்டின் தங்க இறக்குமதி அளவு 5 மாத உச்சத்தில் உள்ளது. இருப்பினும், கடந்த வருடத்தை இதே காலத்துடன் ஒப்பிடும் போது, சொல்லப்பட்ட இறக்குமதி அளவு குறைவே. மத்திய அரசு கடந்த சில வருடங்களாக தங்கத்தின் இறக்குமதி அளவை குறைத்து வருகிறது. வர்த்தக சுமையை குறைப்பதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ப்ரீபெய்ட் கட்டணத்தை அதிகப்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் – நாளை முதல் அமல்

ப்ரீபெய்ட் கட்டணத்தை அதிகப்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  – நாளை முதல் அமல்

Increased Prepaid Tariffs – Airtel, Vodafone Idea and JIO

இந்திய தொலைத்தொடர்பு துறையில் கடந்த சில காலங்களாக பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. பல நிறுவனங்கள் இந்த துறையில் காணாமல் போய் விட்டன. பொதுத்துறையான பி.எஸ்.என்.எல். நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. இணைய வழி தகவல் பரிமாற்றம் வந்த பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக அழைப்புகளிலும், இணைய பயன்பாட்டுக்கும் பல சலுகைகளை அளித்து வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது கடனில் தத்தளித்து வருகின்றன. பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனத்தின் கடன் ரூ. 1,28,530 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் கடைசி இரு காலாண்டுகளில் நஷ்டத்தை மட்டுமே கொண்டுள்ளன.

இது போல வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனத்தின் கடன் 99,660 கோடி ரூபாய். நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் 50,920 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோ(JIO) நிறுவனம் குறிப்பிடத்தக்க சந்தாதாரர்களை கைப்பற்றியிருந்தாலும், தனது கடன் தன்மையை குறைக்கும் பொருட்டு சந்தாதாரர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்த தயாராக உள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் பெரும் விவாதத்தில் இருந்தது. ஒரு சூழ்நிலையில் வோடபோன் நிறுவனம் தன்னை திவால் நிலைக்கு அறிவிப்பதற்கு தயாராகவும் இருந்தது. இது சார்ந்து மத்திய அரசிடமும் கோரிக்கையை வைத்திருந்தது. இந்நிலையில் நாளை(03-12-2019) முதல் வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கட்டணத்தை(Tariff) உயர்த்தும் நோக்கில் நிறுவனங்கள் சென்றுள்ளன.

சந்தாதாரர்களின் ப்ரீபெய்ட் கட்டணம் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்க கூடும் என சொல்லப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் முன்னர் இருந்த 129 ரூபாய் திட்டம், தற்போது 148 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான 28 நாட்கள் காலவரையில் மாற்றமில்லை. இது போல 249 ரூபாயாக இருந்த திட்டம் 298 ரூபாயாகவும், 499 ரூபாய் திட்டம் 698 ரூபாயாகவும், 199 ரூபாய் திட்டம் 248 ரூபாயாகவும் மாற்றப்பட உள்ளது.

வோடபோன் ஐடியாவில் குறைந்தபட்ச திட்டமான 35 ரூபாய் பேக்(Pack), இனி 49 ரூபாயாக மாற உள்ளது. இது போல 199 ரூபாய் திட்டம் 249 ரூபாயாகவும், ரூ. 459 திட்டம் இனி 599 ரூபாயாகவும் அதிகரிக்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவும் தனது சந்தாதாரர்களின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளது. இருப்பினும், அதற்கான விலை பட்டியலை வெளியிட வில்லை.

வரும் நாட்களில் இலவச அழைப்புகளின்(Voice Calls) எண்ணிக்கை குறைய கூடும். அதே வேளையில் இணைய வழி பரிமாற்றத்திற்கான(Data) சேவை கட்டணம் அதிகரிக்கலாம். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டை மறு ஆய்வு செய்வதற்கான காலம் வந்து விட்டது எனலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவின் பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் – சிறு பார்வை

இந்தியாவின் பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் – சிறு பார்வை 

GDP and Inflation in India – A Short and Thumbnail View

 

ஒவ்வொரு நாட்டின் பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வெவ்வேறு காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டவை. இந்த இரண்டும் ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார காரணிகளாக செயல்பட்டு வருகிறது. பணவீக்கம்(Inflation) என்பது பொதுவாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பது மற்றும் பணத்தை வாங்கும் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுவது எனலாம்.

 

சுருக்கமாக நாம் வாங்கப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வந்தால், விலைவாசி உயர்ந்து வருகிறது என சொல்வோம். இதனை தான் பொருளாதார வார்த்தையில், பணவீக்கம்(Inflation) என்கிறோம். பணவீக்கம் உள்ளது போல, பணவாட்டம் மற்றும் தேக்கநிலை என்ற மற்றொரு தன்மையும் விலையை குறிப்பிடுகிறது. பொருட்களின் விலை எதிர்மறையாக செல்லும் போது, அதாவது மிகவும் மலிவான விலைக்கு செல்லும் நிலையில் இதனை பணவாட்டம்(Deflation) என்கிறோம். பணவாட்டத்தின் மதிப்பு சுழிக்கு (பூஜ்யம்) கீழ் இருக்கும். இது தொடர்ச்சியாக இருக்கும் சமயத்தில், சரியான ஊதியம் கிடைக்காமல் போகலாம். வேலைவாய்ப்பின்மையை ஏற்பட கூடும். காரணம், பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் போவதால்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேக்கநிலை (Stagflation) என்பது பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது, நாட்டில் காணப்படும் அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் தேவையில் உள்ள தேக்கம் ஆகியவற்றால் ஒருங்கிணைந்து காணப்படுவது. இது பொதுவாக பொருளாதார மந்த நிலை அல்லது வீழ்ச்சியின் போது நிகழும். 

 

மறுபுறம் செல்வோம், மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross Domestic Product – GDP) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். இதனை பொதுவாக அந்நாட்டின் நுகர்வு, முதலீடு, அரசு செலவினங்கள் மற்றும் நிகர ஏற்றுமதி வர்த்தகத்தை(ஏற்றுமதி – இறக்குமதி) கொண்டு கணக்கிடுவார்கள். இதனை தான் நாம் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) என பெயரிடுகிறோம்.

 

மேலே சொன்ன இரண்டும் (பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி) ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களாகும். இந்த இரண்டையும் ஒப்பிடும் போது, குறுகிய காலத்தில் பலன் தரும் எனவும், நீண்ட காலத்தில் துல்லியமான முடிவுக்கு வர இயலாது எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குறுகிய காலத்தில் இவை இரண்டும் நேர்-எதிராகவும், நீண்ட காலத்தில் மாறுபட்டும் காணப்படுகிறது. 

 

நம் நாட்டின் புள்ளிவிவரங்களை கடந்த சில வருடங்களுடன் மதிப்பிடும் போது பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் எவ்வாறு நடந்துள்ளது என பார்ப்போம். கடந்த ஒரு வருட காலத்தை பார்க்கும் போது, நாட்டின் பணவீக்கம் மெதுவாக உயர்ந்தும், பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக இறங்குமுகத்திலும் காணப்படுகிறது. எனவே, இவை இரண்டும் கடந்த ஒரு வருடகாலமாக நேர்-எதிர் திசையில் பயணித்துள்ளது. 

 

ஐந்து வருட காலத்தில் மதிப்பிடும் போது, பணவீக்கம் சராசரியாக 4 – 6 சதவீதம் என்ற நிலையில் இருந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் 9 சதவீதத்திற்கு மேல் இருந்த வளர்ச்சி, தற்போது 4.5 சதவீதத்தில் நிலை கொண்டுள்ளது.

 

பத்து வருட காலத்தில் பார்க்கும் போது, இரண்டும் ஒரே சேர பயணித்தது போல் அமைகிறது. பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இறங்குமுகத்தில் உள்ளது போன்ற நிலை காணப்படுகிறது. 25 வருட காலத்தில் ஆராயும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தும், பணவீக்கம் குறைந்தும் காணப்பட்டுள்ளது. 

 

கடந்த 50 வருட காலத்தில் இந்திய பொருளாதாரம் மேம்பட்டும், பணவீக்க விகிதம் ஒரு சில வருடங்கள் தவிர, மற்ற காலத்தில் சராசரியாக விலையை கொண்டுள்ளது. பொருளாதாரத்தை பொறுத்தவரை ஒரு ரூபாயை, இரண்டு ரூபாயாக மாற்றுவது எளிதான செயல். அதே வேளையில், ஒரு லட்சத்தை உடனடியாக இரண்டு லட்சமாக மாற்றுவது சற்று கடினம். இது போன்று தான் பொருளாதார வளர்ச்சியும். நாம் 4-5 சதவீத வளர்ச்சி எனும் போது இரு மடங்கு வளர்ச்சியை ஓரிரு வருடங்களில் அடையலாம். ஆனால் 8 சதவீத வளர்ச்சியை 16 சதவீதமாக மாற்றுவது சவாலான விஷயம்.

 

சமீபத்திய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் என அமையும் போது, கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவாக சொல்லப்பட்டது. இதுவே சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் என குறிப்பிடும் போது, 27 வருடங்களில் காணப்படாத அளவாக சென்று விட்டது. நம் நாட்டின் பொருளாதாரம் 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் சீனாவின் பொருளாதாரம் 13.60 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். நினைவில் கொள்ளுங்கள். 

 

பொருளாதாரம் மந்தம் அடையும் போது, வங்கிகளின் வட்டி விகிதம் குறைவதும் இதனால் தான். நிறுவனங்கள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய கூடும். அதே வேளையில், நுகர்வை அதிகப்படுத்த செலவு செய்வதை ஊக்கப்படுத்தும். இதற்கு மாறாக விலையேற்ற காலங்களில், அதாவது அதிகமாக செலவு செய்யும் நிலையில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் கூடும். இது பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 

எனவே பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் குறுகிய காலத்தில் எதிரியாக இருந்தால் கூட, நீண்ட காலத்தில் ஒரு நாட்டின் உற்ற நண்பர்களாக இருப்பார்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com