Tag Archives: global indices

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

Global Market Indices in the year 2023 – Returns %

2023ம் ஆண்டை பொறுத்தவரை உலக பங்குச்சந்தையில் காணும் முக்கிய சந்தை குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேலாக வருவாயை கொடுத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை S&P 500 குறியீடு 24 சதவீதமும், ஜப்பானின் Nikkei 225 குறியீடு 30 சதவீதமும், ஐரோப்பாவின் Stoxx 50 குறியீடு 17.3 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான தேசிய பங்குச்சந்தையின்  நிப்டி50 குறியீடு 22.60 சதவீதமும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பங்குச்சந்தை 7.8 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி(Kospi) 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனாவின் S&P China 500 குறியீடு 12.50 சதவீதம் மற்றும் ஹாங்காங் நாட்டின் Hang Seng 14 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

2023ம் ஆண்டில் காணப்பட்ட உலகளாவிய போர் பதற்ற சூழ்நிலை, பொருளாதார மந்தநிலை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால் தங்கத்தின் தேவை அதிகரித்து சொல்லப்பட்ட வருடத்தில் தங்கம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் வீட்டுமனைத் துறை(Real Estate – REITs) குறியீடும் 11.50 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வீட்டுமனை விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் Dow Jones Real Estate குறியீடு 7.8 சதவீதம் வளர்ந்துள்ளது. அதே வேளையில் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.    

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் 2023ம் ஆண்டில் 5.8 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடந்த சில காலாண்டுகளாக பணவீக்க விகிதம் ஏற்ற-இறக்கமாக காணப்பட்ட நிலையில் வங்கி வட்டி விகிதமும் கணிசமான வருவாயை கடந்த ஆண்டு தந்துள்ளது. பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் கடன் பண்டுகள்(Debt Mutual Funds) சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை வருவாயை அளித்துள்ளது.

நாணயச்சந்தையில் மெக்ஸிகோ நாட்டின் பெசோ(Peso) 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போல சுவிட்சர்லாந்து நாட்டின் பிரான்க் 10 சதவீதமும், பிரிட்டிஷ் பவுண்டு 5.30 சதவீதமும் மற்றும் யூரோ 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்க டாலர் 2 சதவீதமும், சீன யுவான் 2.80 சதவீதமும் மற்றும் ரசியாவின் ரூபெல் 17.50 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாயும் 0.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டுள்ளது.   

வரக்கூடிய காலம் உலக பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான கால நிலையாக இருப்பதால், தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்து வரும் பங்குச்சந்தையில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். எந்தவொரு முதலீட்டுத் திட்டமும்(Shares, Gold, Bonds, Real Estate) நீண்டகாலம் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு ஏற்றத்தை மட்டுமே சந்திக்கும் என்பது பொருளாதார வரலாற்றில் இல்லை. இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும்.

நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாளத் தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ?

2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ?

How was the Global Stock Indices in the year 2019 ?

நடப்பு 2019ம் வருடம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக உலகளவில் பல பொருளாதார நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றில் முக்கியமாக சீன-அமெரிக்க வர்த்தக போர், ஐரோப்பில் காணப்பட்ட பிரெக்ஸிட்(Brexit) ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை மற்றும் பருவநிலை மாற்றங்கள்(Climate Change) ஆகியவை பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக உலக பொருளாதாரமும் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்பட வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினால், அது 2020ம் ஆண்டின் பிற்பாதியில் தெரிய வரலாம். சீன-அமெரிக்க வர்த்தக போர் முடிவுக்கு வரலாம் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல் காலமே மற்றவற்றை தீர்மானிக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளர்ந்து வரும் நாடுகளில் பலவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறைந்து வருகிறது. இதனால் அதன் வளர்ச்சி வேகத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் உலகளவில் காணப்படும் பங்குச்சந்தைகளும், மற்ற முதலீட்டு சாதனங்களும் எவ்வாறு இந்த வருடம் வருவாயை தந்துள்ளது என காணலாம்.

கடந்த ஒரு வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் 20 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. இது போல வெள்ளியும் சுமார் 16 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ரெப்போ வட்டி விகித குறைவால், வங்கிகளின் வட்டி விகிதம் 7 சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. பங்குச்சந்தையை பொறுத்தவரை அமெரிக்காவின் நாஷ்டாக் 100(NASDAQ 100) குறியீடு 32 சதவீத வருவாயை தந்துள்ளது.

Stock Global Indices 2019

டவ் ஜோன்ஸ்(Dow Jones) குறியீடு 19 சதவீதமும், எஸ் & பி 500 25 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளன. பிரேசில் நாட்டின் முக்கிய குறியீடான iBovespa 29 சதவீதமும், அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா முறையே 26 சதவீதம் மற்றும் 22 சதவீத வருவாயை நடப்பு வருடத்தில் அளித்துள்ளது.

ஐரோப்பாவை காணும் போது, புட்சி 100(FTSE 100) 12 சதவீத வருவாயும், ஜெர்மனி டாக்ஸ்(DAX) 24 சதவீதமும் மற்றும் பிரான்ஸின் சி.ஏ.சி. 40 (CAC 40) குறியீடு 25 சதவீத வருவாயும் அளித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகளாக நிப்டி50(Nifty50) 11 சதவீதமும், சென்செக்ஸ் 13 சதவீத ஏற்றத்தையும் கண்டுள்ளது

சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் குறியீடுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து குறியீடுகள் 20 சதவீதத்திற்கு அதிகமான வருவாயை நடப்பு 2019ம் வருடத்தில் கொடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் குறியீடுகளும் வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி50 மற்றும் சென்செக்ஸ்(Sensex) குறியீடுகளில் உள்ள சில லார்ஜ் கேப் பங்குகளின் ஏற்றமே, சந்தையின் புதிய உச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. பொருளாதாரத்தில் தேக்க நிலை காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் காரணமாக தற்போது உச்சத்தில் காணப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதே வேளையில் ஸ்மால் கேப்(Small Cap) மற்றும் மிட் கேப்(Mid Cap) பிரிவில் பெரும்பாலான பங்குகளின் விலை 40-50 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பரஸ்பர நிதி முதலீட்டிலும் பங்கு சார்ந்த பண்டுகள்(Equity Oriented Mutual Funds) பிரிவில் 40 சதவீத பண்டுகள் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் முதலீட்டு இழப்பை ஏற்படுத்திய பெரும்பாலான பண்டுகள் ஸ்மால் கேப் மற்றும் துறை சார்ந்த(Sector Funds) பிரிவுகளாகும். முக்கியமாக உள்கட்டமைப்பு துறை சார்ந்த பண்டுகள் நடப்பு வருடத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இது போல பொதுத்துறை நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பண்டுகளும் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

வரும் நாட்களில் சந்தையை பாதிக்கும் காரணிகள் சற்று தென்படுவதால், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்த பின்னரே, முதலீடு செய்வது சிறந்தது. விலையை மட்டும் கருத்தில் கொண்டு பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com