Tag Archives: inflation

இந்தியாவில் பணவீக்கம்(விலைவாசி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

இந்தியாவில் பணவீக்கம்(விலைவாசி) எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

How is the Inflation measured in India – WPI / CPI ?

நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாத முடிவில் 5.10 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு டிசம்பர் மாத முடிவில் 5.69 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பணவீக்க விகிதத்தை அடிப்படையாக கொண்டு தான் ஒரு நாட்டின் வங்கிகளின் வட்டி விகிதமும்(Bank Interest Rate), அரசின் பஞ்சப்படி(Dearness Allowance -DA) அறிவிப்பும் உள்ளது. 

பங்குச்சந்தை முதலீட்டை மற்ற சொத்து முதலீட்டுடன் ஒப்பிடுகையில், பங்குச்சந்தை முதலீடு(பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டும் தான்)  நீண்டகாலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை கொடுக்கும் என சொல்கிறோம். தங்கத்தின் மீதான வருவாயை பணவீக்கத்திற்கு எதிரான இழப்புக்காப்பு(Hedging) என சொல்வதுண்டு. இவ்வாறு பணவீக்கம் என்பது பொருளாதார உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

பணவீக்கத்தை கணக்கிடும் முறை ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும், அதே வேளையில் அவற்றை சார்ந்த பொருளாதார கொள்கைகள் மற்றும் நிதிநிலை முடிவுகள் பெரும்பாலும் ஒத்த கருத்தையே கொண்டிருக்கும். அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரப்போகிறது என்றால், உள்நாட்டில் மத்திய ரிசர்வ் வங்கி அதனை கருத்தில் கொண்டு தான் இங்கு முடிவெடுக்கும்.

பணவீக்கத்தை பொறுத்தவரை நம் நாட்டில் இரு வகையான முறை தற்போது உள்ளது. ஒன்று மொத்தவிலை பணவீக்க விகிதம்(Wholesale Price Index – WPI), மற்றொன்று சில்லறை விலை அல்லது நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) என்றழைக்கப்படும் பணவீக்க விகிதம்.

மொத்தவிலை பணவீக்க விகிதம்: இது நாட்டில் உள்ள பல்வேறு உற்பத்திப் பொருட்களின் மொத்த விலை மாற்றங்களை கொண்டு அளவிடப்படுகிறது. அதாவது பிற நிறுவனங்களிடமிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது வணிகங்களால் ஏற்படும் செலவுகளை குறிப்பிடுகிறது. 

மொத்த விலையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள், நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர்களை சென்றடையும் முன் கண்காணிக்கப்படும் குறியீடாக மொத்தவிலை பணவீக்க விகிதம் உள்ளது. 

சில்லறை அல்லது நுகர்வோர் விலை பணவீக்க விகிதம்: இது பொதுவாக நுகர்வோரிடம் காணப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை மாற்றங்களை கொண்டு அளவிடப்படுகிறது. மக்களிடம் பெரும்பாலும் நாள்தோறும் தேவைப்படும் பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு சில்லறை விலை பணவீக்கம் கணக்கிடப்படுகிறது.

இந்தியாவில் சில்லறை விலை பணவீக்க விகிதம் 2012ம் ஆண்டினை அடிப்படை வருடமாக(Base year: 2012) கொண்டு அளவிடப்படுகிறது. நடப்பில் மொத்தவிலை பணவீக்க விகிதத்தை காட்டிலும், சில்லறை விலை பணவீக்க விகிதமே முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் மொத்தவிலை பணவீக்கத்தை பொறுத்தவரை உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் உள்ள நிலையில், நுகர்வோருக்கு அவர்களின் மாத வரவு-செலவினை ஒப்பிடும் வகையில் சில்லறை விலை பணவீக்க விகிதமே தெளிவுபடுத்துகிறது.

பணவீக்கம் சார்ந்த அறிக்கைகளை மத்திய புள்ளியியல் அமைச்சகமும்(சில்லறை விலை பணவீக்கம்), வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகமும்(மொத்தவிலை பணவீக்கம்) பொதுவெளியில் அறிவிக்கும். சில்லறை விலை பணவீக்கம் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்திலும்(மாதத்தின் 14ம் தேதி), மொத்த விலை பணவீக்கம் ஒவ்வொரு வார மற்றும் மாத அடிப்படையிலும் வெளியிடப்படும்.

மொத்த விலை பணவீக்க விகிதத்தை பொறுத்தவரை சுமார் 697 பொருட்களை உற்பத்தி, முதன்மைப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் விலை மாற்றங்களை எடுத்து கொண்டு கணக்கிடப்படும். முதன்மைப் பொருட்கள் பிரிவில் உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெறும். சில்லறை விலை பணவீக்கத்தை பொறுத்தவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேசிய புள்ளியியல் அமைச்சகத்தால் ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய மாவட்டங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களில்(1181 கிராமங்கள் மற்றும் 1114 சந்தைகள்) கள ஊழியர்களை கொண்டு ஒவ்வொரு நாளின் சில்லறைப்  பொருட்களின் விலை மாற்றத்தை கணினியின் மூலம் பதிவு செய்யப்படுகிறது. சில்லறை விலை பணவீக்கம் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், புகையிலைப்பொருட்கள், துணிமணி மற்றும் காலணிகள், வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், ஏனையப் பொருட்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் கணக்கிடப்படுகிறது.

சில்லறை விலை பணவீக்க விகிதத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாகும். இவற்றில் அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள், பால் பொருட்கள், காய்கறிகள், திண்பண்டங்கள் மற்றும் இனிப்புகள், மீன் வகைகள், மாமிசம், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகளும் அடங்கும். போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு 8.59 சதவீதமும், சுகாதாரம் 5.90 சதவீதமும் மற்றும் கல்வி 4.46 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

வீட்டுமனைப் பிரிவு 10 சதவீதமும், ஒளி மற்றும் எரிபொருட்கள் 6.84 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 6.53 சதவீதமும் மற்றும் புகையிலைப்பொருட்கள் 2.38 சதவீத பங்களிப்பையும் சில்லறை விலை பணவீக்க கணக்கீட்டில் கொண்டுள்ளது. 

மொத்தவிலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு 24 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றில் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த பொருட்கள் மற்றும் மொத்த விலையில்(Wholesale Price) வாங்கக் கூடிய விலை விவரங்களே இடம்பெறும். இரு வகையிலான பணவீக்க முறையை பொறுத்தவரையில், பொதுவாக அனைத்து பொருட்களின் கணக்கீட்டில் அதன் பிரிவில் சராசரி விலையே முடிவில் எடுத்து கொள்ளப்படும். உதாரணமாக ஒரு சாக்குப்பை அரிசியின் விலை ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1,000 என எடுத்துக் கொள்வோம். தற்போது இதன் விலை ரூ.1,400 ஆக இருந்தால் அரிசியின் பணவீக்க விகிதம் 40% ஆகும். இருப்பினும் இந்த பிரிவில் உள்ள மற்ற பொருட்களின் விலை மாற்றங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, முடிவில் சராசரி விலையின் குறியீடு தான் வெளிப்படும்.

CPI(Consumer Price Index) Formula: (Cost of the Market Basket in the given year / Cost of the Market Basket in the Base year) X 100

WPI(Wholesale Price Index) Formula: (Current Price / Base Period price) X100

சுருக்கமாக மொத்தவிலை பணவீக்க விகிதம் உற்பத்தி மற்றும் மொத்தவிலை சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சில்லறை விலை(Retail Inflation) பணவீக்க விகிதம் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர் தங்களுக்கு அருகில் உள்ள சந்தை அல்லது கடையில் வாங்கும் சில்லறை விலை அடிப்படையில் மாற்றத்தை கொண்டு வரும்.

பணவீக்க விகித மாற்றத்தை கொண்டு தான் ஒரு அரசாங்கத்தின் நிதிநிலை செயல்பாடுகளும் இருக்கும். அரசாங்கத்தின் கொள்கைகளும் பணவீக்க விகித ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக அமையும். இது போல தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களும் விலைவாசியை(பணவீக்கம்) கருத்தில் கொண்டு தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் முடிவை திட்டமிடலாம். பணவீக்க விகித மாற்றம் முதலீட்டிலும் அவசியமாகிறது. பணவீக்கம்(Inflation) பொருளாதாரத்தில் ஒரு எதிரியாக பார்க்கப்பட்டாலும், இதனை சிறப்பாக கையாளும் போது நமது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

இந்தியாவின் பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் – சிறு பார்வை

இந்தியாவின் பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் – சிறு பார்வை 

GDP and Inflation in India – A Short and Thumbnail View

 

ஒவ்வொரு நாட்டின் பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வெவ்வேறு காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டவை. இந்த இரண்டும் ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார காரணிகளாக செயல்பட்டு வருகிறது. பணவீக்கம்(Inflation) என்பது பொதுவாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பது மற்றும் பணத்தை வாங்கும் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுவது எனலாம்.

 

சுருக்கமாக நாம் வாங்கப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வந்தால், விலைவாசி உயர்ந்து வருகிறது என சொல்வோம். இதனை தான் பொருளாதார வார்த்தையில், பணவீக்கம்(Inflation) என்கிறோம். பணவீக்கம் உள்ளது போல, பணவாட்டம் மற்றும் தேக்கநிலை என்ற மற்றொரு தன்மையும் விலையை குறிப்பிடுகிறது. பொருட்களின் விலை எதிர்மறையாக செல்லும் போது, அதாவது மிகவும் மலிவான விலைக்கு செல்லும் நிலையில் இதனை பணவாட்டம்(Deflation) என்கிறோம். பணவாட்டத்தின் மதிப்பு சுழிக்கு (பூஜ்யம்) கீழ் இருக்கும். இது தொடர்ச்சியாக இருக்கும் சமயத்தில், சரியான ஊதியம் கிடைக்காமல் போகலாம். வேலைவாய்ப்பின்மையை ஏற்பட கூடும். காரணம், பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் போவதால்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தேக்கநிலை (Stagflation) என்பது பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது, நாட்டில் காணப்படும் அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் தேவையில் உள்ள தேக்கம் ஆகியவற்றால் ஒருங்கிணைந்து காணப்படுவது. இது பொதுவாக பொருளாதார மந்த நிலை அல்லது வீழ்ச்சியின் போது நிகழும். 

 

மறுபுறம் செல்வோம், மொத்த உள்நாட்டு உற்பத்தி(Gross Domestic Product – GDP) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். இதனை பொதுவாக அந்நாட்டின் நுகர்வு, முதலீடு, அரசு செலவினங்கள் மற்றும் நிகர ஏற்றுமதி வர்த்தகத்தை(ஏற்றுமதி – இறக்குமதி) கொண்டு கணக்கிடுவார்கள். இதனை தான் நாம் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) என பெயரிடுகிறோம்.

 

மேலே சொன்ன இரண்டும் (பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி) ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களாகும். இந்த இரண்டையும் ஒப்பிடும் போது, குறுகிய காலத்தில் பலன் தரும் எனவும், நீண்ட காலத்தில் துல்லியமான முடிவுக்கு வர இயலாது எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். குறுகிய காலத்தில் இவை இரண்டும் நேர்-எதிராகவும், நீண்ட காலத்தில் மாறுபட்டும் காணப்படுகிறது. 

 

நம் நாட்டின் புள்ளிவிவரங்களை கடந்த சில வருடங்களுடன் மதிப்பிடும் போது பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் எவ்வாறு நடந்துள்ளது என பார்ப்போம். கடந்த ஒரு வருட காலத்தை பார்க்கும் போது, நாட்டின் பணவீக்கம் மெதுவாக உயர்ந்தும், பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக இறங்குமுகத்திலும் காணப்படுகிறது. எனவே, இவை இரண்டும் கடந்த ஒரு வருடகாலமாக நேர்-எதிர் திசையில் பயணித்துள்ளது. 

 

ஐந்து வருட காலத்தில் மதிப்பிடும் போது, பணவீக்கம் சராசரியாக 4 – 6 சதவீதம் என்ற நிலையில் இருந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் 9 சதவீதத்திற்கு மேல் இருந்த வளர்ச்சி, தற்போது 4.5 சதவீதத்தில் நிலை கொண்டுள்ளது.

 

பத்து வருட காலத்தில் பார்க்கும் போது, இரண்டும் ஒரே சேர பயணித்தது போல் அமைகிறது. பணவீக்கமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இறங்குமுகத்தில் உள்ளது போன்ற நிலை காணப்படுகிறது. 25 வருட காலத்தில் ஆராயும் போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தும், பணவீக்கம் குறைந்தும் காணப்பட்டுள்ளது. 

 

கடந்த 50 வருட காலத்தில் இந்திய பொருளாதாரம் மேம்பட்டும், பணவீக்க விகிதம் ஒரு சில வருடங்கள் தவிர, மற்ற காலத்தில் சராசரியாக விலையை கொண்டுள்ளது. பொருளாதாரத்தை பொறுத்தவரை ஒரு ரூபாயை, இரண்டு ரூபாயாக மாற்றுவது எளிதான செயல். அதே வேளையில், ஒரு லட்சத்தை உடனடியாக இரண்டு லட்சமாக மாற்றுவது சற்று கடினம். இது போன்று தான் பொருளாதார வளர்ச்சியும். நாம் 4-5 சதவீத வளர்ச்சி எனும் போது இரு மடங்கு வளர்ச்சியை ஓரிரு வருடங்களில் அடையலாம். ஆனால் 8 சதவீத வளர்ச்சியை 16 சதவீதமாக மாற்றுவது சவாலான விஷயம்.

 

சமீபத்திய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் என அமையும் போது, கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவாக சொல்லப்பட்டது. இதுவே சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் என குறிப்பிடும் போது, 27 வருடங்களில் காணப்படாத அளவாக சென்று விட்டது. நம் நாட்டின் பொருளாதாரம் 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் சீனாவின் பொருளாதாரம் 13.60 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள். நினைவில் கொள்ளுங்கள். 

 

பொருளாதாரம் மந்தம் அடையும் போது, வங்கிகளின் வட்டி விகிதம் குறைவதும் இதனால் தான். நிறுவனங்கள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் குறைய கூடும். அதே வேளையில், நுகர்வை அதிகப்படுத்த செலவு செய்வதை ஊக்கப்படுத்தும். இதற்கு மாறாக விலையேற்ற காலங்களில், அதாவது அதிகமாக செலவு செய்யும் நிலையில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் கூடும். இது பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

 

எனவே பணவீக்கமும், பொருளாதார வளர்ச்சியும் குறுகிய காலத்தில் எதிரியாக இருந்தால் கூட, நீண்ட காலத்தில் ஒரு நாட்டின் உற்ற நண்பர்களாக இருப்பார்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

    

வங்கிகளுக்கு சுமை, வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் – புதிய வட்டி விகித வரையறை

வங்கிகளுக்கு சுமை, வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம் – புதிய வட்டி விகித வரையறை

Burden to banks, Boost to customers – New Interest rate Benchmark – RBI

 

நேற்று நடைபெற்ற (05-12-2018) மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் (RBI) வட்டி விகிதம் சம்மந்தமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. அதன் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த 6.5 சதவீத வட்டி என்ற அளவிலே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

ஆறு நபர்கள் கொண்ட நிதி கொள்கை குழு (Monetary Policy Committee) கூட்டத்தில் 5 பேர் வட்டி விகிதத்தில் இம்முறை மாற்றம் தேவையில்லை எனவும், ஒருவர் நடுநிலையாகவும் கூறியிருந்தனர். வங்கிகளின் வாராக்கடன் மற்றும் நிதி நிலை அறிக்கையில் ஏற்படும் வேறுபாட்டை கலைந்து, அதனை சீரமைக்கும் பணியில் உள்ளதாக  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருக்கும் வேளையில், நாட்டின் பணவீக்க மதிப்பீடை குறைத்துள்ளது பாரத ரிசர்வ் வங்கி. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 3.8 – 4.5 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணவீக்கம் (Inflation) 2.7 – 3.2 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீட்டை குறைத்துள்ளது.

 

கச்சா எண்ணெய் விலையின் சரிவு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஆதாயம் ஆகியவை பணவீக்க மதிப்பீட்டை குறைக்க துணைபுரிந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் வங்கிகளின் கடன் கொள்கைகளில் தனது இறுக்கத்தை தொடர்கிறது மத்திய வங்கி.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த காலாண்டு முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 7.1 சதவீதமாக குறைந்தது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் இன்னும் தேக்கநிலையே காணப்படுகிறது. நாட்டின் குறைவான உற்பத்தி மற்றும் விவசாய பொருட்களுக்கான சரியான விலை கிடைக்காதது பணவீக்க மதிப்பீட்டை குறைக்க காரணமாகவும் அமைந்துள்ளது. இதன் தாக்கம் தான் நாட்டின் GDP மதிப்பில் தெரிய வந்துள்ளது.

 

நடப்பு வருடத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.4 சதவீத அளவில் இருக்கும் என நிதி கொள்கை குழு கூறியுள்ளது. வங்கிகளின் பத்திரங்கள் வைத்திருக்கும் விகிதத்தை (Bond Holding) காலாண்டிற்கு ஒரு முறை 25 புள்ளிகள் என்ற அளவில் குறைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் உள்ள நீர்மை நிறையையும் (Liquidity) அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு பெரும்சுமையாக இருந்த வட்டி விகித மாற்ற அமலில், இப்போது புதிய முறை சொல்லப்பட்டுள்ளது. முன்னர் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது, உடனே வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கடன் அளவில் வட்டி விகிதத்தை உயர்த்தும். அதே சமயம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், அது விரைவாக வாடிக்கையாளர்களுக்கு சேராது. வட்டி விகித உயர்வில் மட்டும் விரைவான நடைமுறையை கையாளும் வங்கிகளால் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சுமையாக காணப்பட்டது. மிதவை விகிதத்தில் (Floating Rate) கடனை பெறுவோருக்கு இது ஒரு சிக்கலாகவே இருந்தது. ஆனால் இவற்றில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய முறையை புகுத்த உள்ளது.

 

இதுவரை வங்கிகளுக்கு உள்ளே மட்டும் சொல்லப்பட்ட வட்டி விகித மாற்றம், இனி வெளிப்படையாக வட்டி விகித வரையரைகளுடன் (Benchmark) வரவிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிதவை வட்டி விகிதத்தை உடனடியாக தெரிந்து கொள்ளலாம். வங்கிகளும் அதனை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த புதிய முறை வாடிக்கையாளர்களுக்கு நலனை கொடுக்கும். அதே வேளையில், வங்கிகளில் இதற்கான கொள்கைகளும் மாற்றப்படும். வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் இது தொடக்கத்தில் பாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வட்டி விகித வரையறை வரும் ஏப்ரல் 1, 2019 முதல் அமலாகலாம் என தெரிகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Stock Market – Fundamental Analysis – Course – 1.0

Stock Market –  Fundamental Analysis – Learning Course

 

பங்குச்சந்தை  –  அடிப்படை  பகுப்பாய்வு கற்றல் வகுப்புக்கு  வரவேற்கிறோம்.

 

இது ஒரு இணைய வழி கற்றல் முறை(Online Learning Course). அனைத்து வகுப்புகளும் மற்றும் அதன் தகவல்கள் நேரிடையாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே(Subscribed Email Address) அனுப்பப்படும். வகுப்புகள் தினசரி என்றில்லாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது  வாரத்திற்கு மூன்று நாட்களாகவோ இருக்கலாம். இந்த கற்றல் வகுப்பு உங்களுக்கு பங்குச்சந்தை பற்றிய உள்ளார்ந்த அறிவு மற்றும் செயல்முறை விளக்கமாகவும் அமையும். அதனால் நீங்கள் பெறும் ஒவ்வொரு தகவலையும் பரிசோதித்து பார்க்கலாம்.

 

நீங்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் ?

 

நம் ஒவ்வொருக்கும் வாழ்க்கையில் தேவைகள் மற்றும் விருப்பங்கள் இருக்கும். தேவைகள் பொதுவானவை; ஆனால் விருப்பங்கள் மாறுபடலாம். முதலில் நாம் நம் தேவைகளை பட்டியலிடுவோம்:

 

  • உணவு (Food)
  • உடை  (Clothing)
  • இருப்பிடம் (Shelter)
  • மருத்துவம் (Medical)
  • கல்வி  (Education for Future and Growth)
  • ஓய்வு காலம் (Retirement Stage)

 

விருப்பங்கள் சில…

 

  • விரும்பிய வாகனம் வாங்குவது (Buying a Car)
  • சுற்றுலா செல்வது (Vacation and  Foreign Tour)
  • குழந்தைகளுக்கு நல்ல கல்வி முறையை கொடுப்பது (Education for Children)
  • வீடு பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்(House Repair and Maintenance)
  • புதிய தொழில் தொடங்குவது (Starting a Business)
  • மற்றவர்களுக்கு உதவி செய்ய (Helping others)

 

நீங்களும் உங்களுக்கான பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். தேவையோ, விருப்பங்களோ எதுவாயினும் அவற்றிற்கு நிதி அல்லது பணம் தேவை. நாம் பட்டியலிட்ட அனைத்து தேவைகள் மற்றும் விருப்பங்கள் நமக்கானவை. இவற்றை நாம் பெரும்பாலும் எப்படி பெறுகிறோம் ?

 

நாம் அதற்காக உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், பின்பு நமக்கான தேவை, விருப்பங்களை நிறைவேற்றுகிறோம். நமது விருப்பங்களை காலத்திற்கு ஏற்றவாறு நாம் மாற்றியமைக்கலாம் அல்லது தள்ளி போடலாம், ஆனால் நமது தேவைகள் அவ்வாறில்லை. எனவே நமது தேவையை முதலில் நிறைவேற்றுவது அவசியம். ஆனால் நம்மில் பலருக்கு தேவைகளை பூர்த்தி செய்வதிலே காலம் முழுவதும் கடந்து விடுகிறது. அப்புறம் எங்கே நமது விருப்பங்கள், கனவுகள் ! சில நேரங்களில் நம்மால் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க முடிகிறது, அதனை கொண்டு நமது தேவை மற்றும் விருப்பங்களை அணுகுகிறோம். பல சமயங்களில் வருமானம் பற்றாக்குறையாகவே உள்ளது. ஏன் சிலருக்கு மட்டும் பணம் எப்போதும் கையில் இருக்கிறது, பலருக்கு இது சாத்தியமாக இல்லை ?

 

அதனை தான் நமது பள்ளி மற்றும் கல்லூரி கால படிப்பு நமக்கு கற்று தர தவறி விட்டது. Rich Dad, Poor Dad ன் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி சொல்வது போன்று, நமக்கான அடிப்படை கல்வியில் பணத்தை பற்றியும், அதனை எப்படி கையாள வேண்டும் என்பதனை பற்றியும் சொல்லி தரவில்லை. மாறாக, நமக்கு அறிவியலும், புவியியலும் சொல்லி கொடுக்கப்பட்டது. அவற்றை கூட நாம் நம் தினசரி வாழ்க்கை மற்றும் வேலையிடத்தில் பயன்படுத்த முழுமையாக சொல்லவில்லை. நீங்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் மற்றும் ஒரு நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டுமென்பதே நம் கல்வி முறை கொடுத்தது.

 

நம் நாட்டில் பணத்தை பற்றிய அடிக்கடி பழக்கப்பட்ட ஒரு விஷயமென்றால், அது சேமிப்பு  (Savings) தான். நாம் எவ்வாறு சேமிக்க வேண்டுமென்று காலங்காலமாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும், எப்படி தொழில் செய்யலாம் என சொல்லித்தந்தது மிக குறைவு தான். பங்குச்சந்தையிலும் இது தான் நமக்கு சிக்கலே. சேமிப்பிற்கும், முதலீடிற்கும் உள்ள இடைவெளி தெரியாமல் முடிவில், ஊக வணிகம் (Speculation) செய்து விடுகிறோம். நமக்கு கிடைப்பது பணமுதல் இழப்பு. பங்குச்சந்தைக்கும், தரகருக்கும் கிடைக்கிறது சேவை மற்றும் தரகு கட்டணம்.

 

சரி, நாம் காலங்காலமாக சில சேமிப்பு முறைகளை பின்பற்றி வந்திருக்கிறோம். நமக்காக அல்ல, நம் பெற்றோர்கள் சொன்னார்கள் என்று. அவற்றின் கடந்த கால வருமான தாக்கம் மற்றும் ஏற்ற-இறக்கத்தை பார்த்து விடுவோம்.

 

January 2000 ல் 100 ரூ. விலையுள்ள ஒரு பொருள் அல்லது சேவை, கடந்த October 2017 ல் ரூ. 308 /- ஆக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தின் மடங்குகளை இதன் மூலம் நாம் அறியலாம். அதே ஜனவரி 2000 ல் நம் கையிலிருந்த ரூ. 100 ன் மதிப்பு, அக்டோபர் 2017 ல் ரூ. 33 /- மட்டுமே. இதனை நாம் பணத்தை கொண்டு வாங்கும் திறன்(Purchasing Power) என்போம். இதன்  விளைவாக  தான்  நாம் சேமிக்க  பழகுகிறோம்.

 

Gold Prices (Last 5 Years):

Gold price 5 years

Bank Interest Rate (Since 2000):

 

interest rate 2017 india

 

Returns of Equity, Gold, Money market mutual fund, FD:

 

returns of equity and gold

 

மேலே உள்ள தகவல்களை கொண்டு நமக்கு சில சிந்தனைகள் கிடைத்திருக்கும்.

 

Financial Goal(s):

 

நிதி இலக்குகளை பற்றி நாம் ஏற்கனவே நமது அறிமுக வகுப்பில் மற்றும் காணொளியில் (See the video) அறிந்திருப்போம். நமது நிதி இலக்குகள் வங்கி வைப்பு தொகை, தங்கம் மற்றும் மனையில் வெற்றி பெறுவதில்லை, ஆனால் பரவலாக்கப்படலாம். நிதி இலக்குகளில் வெற்றி அடைய இரண்டே வழி: பங்குச்சந்தை மற்றும் தொழில் தொடங்குவது.  நமது இலக்குகள் வெற்றியடையாமல் போவதற்கான முதற்காரணம் – பணவீக்கம். நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை வேண்டுமானால் கூட்டி கொள்ளலாம். பணவீக்கத்தை தடுக்க முடியாது. ஆனால் புத்தியால் கையாளலாம். அது தான் பணவீக்கத்தை தாண்டிய வருமானம். விலைவாசியை தாண்டிய வருமானம் வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் தொழிலில் அதை விட லாபம் அதிகமாக தான் பெற வேண்டும்.

 

சேமிப்பும், பணவீக்கமும் ஒன்றையொன்று சார்ந்தது

 

மேலே உள்ள வாக்கியத்தை மறவாதீர்கள்; விலைவாசி (பணவீக்கம்) உயர்ந்தால் உங்களால் அதிமாக சேமிக்க  முடியாது. விலைவாசி உயர்ந்தால் மட்டுமே வங்கிகள் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். விலை குறையும் போது அல்ல… உங்களால் எப்போது  அதிகமாக சேமிக்க முடியும் ? அப்போது வங்கிகள் மற்றும்  அரசாங்கம் உங்களுக்கு குறைந்த வட்டியே கொடுக்க முன்வருகிறது. வருமான  வரி கட்டுபவராக நீங்கள் இருந்தால், உங்கள் வங்கி வைப்பு தொகைக்கும் வரி உள்ளதை மறக்க வேண்டாம்.

 

Post Tax Returns(CAGR):

Post tax returns

 

ஏன்  வங்கிகள் அவ்வப்போது வட்டி விகிதத்தை குறைக்கின்றன ?

 

வங்கி சேமிப்பில் உள்ள ரிஸ்குகள் – ஆபத்தானவை

 

பணவீக்கம் ஒரு சாதாரண சேமிப்பு விஷயத்திற்கே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், உங்கள் நீண்ட கால இலக்குகளை யோசித்து பாருங்கள். 10 அல்லது 20 வருடத்திற்கு முன் நீங்கள் வாங்கிய பொருளின் விலை இன்று இல்லை. அதன் இன்றைய மதிப்பு பணவீக்க மதிப்பு  தான். இப்போது நினைத்து பாருங்கள்  உங்கள் எதிர்கால கல்வி செலவுகள், வீடு, ஓய்வு, மருத்துவம் – பணவீக்கத்தில் !

 

Inflation India chart since 2004

 

நினைவில்  கொள்ளுங்கள் நிதி இலக்குகள் பொதுவாக நீண்ட கால இலக்குகள் ஆகும்.

பங்குச்சந்தை ஆபத்தானதா, சூதாட்டமா  ?

 

முதலீடு  பற்றி பேசும் போது, நான் அடிக்கடி ஒரு வாசகத்தை  சொல்வதுண்டு…

 

“ Drive the Car without knowing the Basic, is Ridiculous and Dangerous “

 

 

நீங்கள்  கல்வியை தொடங்குவதற்கு முன்னரே கல்வி நிலையங்களில் கட்டணத்தை வசூலிக்கின்றனர். அவர்கள் உங்களை ஏமாற்றி விட்டால் (கற்று தரவில்லை)  ?   🙂

 

இது தான்  பங்குச்சந்தையும்; அடிப்படை விஷயங்களை அறியாமல், அனுபவம் பெறாமல் நாம் எதையும் சொல்ல விட முடியாது. ஒதுக்கி விடவும் இயலாது. நீங்கள் வேண்டுமானால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் போகலாம். ஆனால் அரசாங்கமும், நீங்கள் உழைக்கும் நிறுவனமும் பங்குச்சந்தையில்  தான்  லாபம் பார்த்து கொண்டு இருக்கின்றனர் – உங்கள் முதலீட்டை (பணம்) கொண்டு  தான் 🙂

 

Stock market historical chart

 

Data reference:   

 

Inflation Calculation and Forecasting

Inflation India

Gold Price History

Fixed Deposit Rates Historical data

Stock Market Performance

 

 

Disclaimer:

This content is an information for the purpose of learning. It’s not recommending any stock or listed company or make any investment in a certain financial products. All content as a text here are reserved by the part of website(www.varthagamadurai) and the images shown for the reference has attributed (image courtesy).

 

பங்கு சந்தை பகுப்பாய்வு – அறிமுகம் (Share Market Fundamental Analysis

பங்கு சந்தை பகுப்பாய்வு – அறிமுகம் (Share Market Fundamental Analysis

 

இந்தியா 2020, இந்தியா 2025, இந்தியா 2030 என்னும் பொருளாதார லட்சியத்தினை நாமும், நமது அரசாங்கமும் அடைய முயற்சிக்கும் இவ்வேளையில் “பணவீக்கம்” (Inflation)  என்ற ஒன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. “பணவீக்கம்” என்ற நிகழ்வு நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த பணவீக்கத்தினை கையாளும் போது, சேமிப்பு மற்றும் முதலீடு (Savings and Investing) மூலம் நாம் நமது வாழ்க்கையை திறம்பட மேம்படுத்துகிறோம். இவற்றில் நாம் முதலீடு என்று சொல்லும் போது, நமக்கு தெரிந்தது நிலம், வீடு, பொருள் , தொழில் முனைவு மற்றும் பங்கு சந்தை. அப்படிப்பட்ட முதலீட்டில் நம்மில் பெரும்பாலானோர் பொறுமை இழப்பது பங்கு சந்தையில் மட்டும் தான். வங்கி சேமிப்பு, நிலம், வீடு, தங்கம் முதலியவற்றில் இருக்கும் நமது காத்திருக்கும் தன்மை, பங்கு சந்தையில் இல்லை. காரணம், நாம் அவற்றை அணுக வேண்டிய முறையை விட்டு விட்டு , “Speculation”   என்னும் ஊகங்களையே ஒரு காரணியாக பயன்படுத்துகிறோம். பங்கு சந்தையில் நாம் பணம் பண்ணுவதற்கும், பணவீக்கத்தினை சமாளிப்பதற்கும் இரண்டு காரணிகள் உள்ளன. அவை தான், அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு (Fundamental and Technical Analysis). இவற்றில் உங்களை நீண்ட கால முதலீட்டாளராக, தொழில் முனைவோராக ஏற்படுத்துவது, Stock Market – Fundamental Analysis என்னும் அடிப்படை பகுப்பாய்வு தான். முதலில் நாம் அடிப்படை பகுப்பாய்வுக்கான காரணிகள் சிலவற்றை இங்கு ஆராய்வோம்.