Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

எச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)

எச்சரிக்கை மணி – எகிறும் நாட்டின் விலைவாசி உயர்வு (பணவீக்கம்)

Quick Alert: India’s rising CPI – Retail Inflation in January 2020

நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்ல, விலைவாசியும் உச்சத்தில் தான் உள்ளது. சில்லரை விலை பணவீக்க வரைபடத்தை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். கடந்த 2019ம் வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை (சில்லரை விலை) பணவீக்கம் 2.57 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது நடப்பாண்டின் ஜனவரி மாத பணவீக்கம் 7.59 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த வருடம் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக இருந்த நிலையில், நவம்பர் 2019ல் 5.54 சதவீதமாகவும், டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாகவும் இருந்துள்ளது. விறுவிறு வேகத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) உயர்ந்து வருவது, நாட்டின் பொருளாதாரத்திற்கு தற்சமயத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், தற்போது நாட்டில் நிலவி கொண்டிருப்பது ஒருவித தேக்கநிலை(Stagflation) எனலாம்.

அதாவது விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பு(GDP Growth) குறைவாக உள்ளது. மறுபுறம் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது கவலையளிக்கும் நிகழ்வாக உள்ளது. ஜனவரி மாதத்தின் முடிவில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை(Unemployment rate) விகிதம் 7.16 சதவீதமாக உள்ளது. இதில் பெருத்த ஏமாற்றம் என்னவென்றால், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 9.70 சதவீதம் என்ற உச்சத்தில் உள்ளது. அதே வேளையில் கிராமப்புற விகிதம் 6 சதவீதத்திற்கு அருகில் காணப்படுகிறது.

தற்போது சொல்லப்பட்ட 7.59 சதவீத பணவீக்கம், சந்தை எதிர்பார்த்த 7.4 சதவீதம் என்ற அளவை காட்டிலும் அதிகமாக உள்ளது. ஜனவரி 2019 மாத நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாக உள்ளது. இதுவரை உயர்ந்து வந்த உணவுப்பொருட்களின் விலை தணிந்து இருந்தாலும், எதிர்பாராத வகையில் எரிபொருட்களின் விலை, துணிமணி மற்றும் காலணிகள், பருப்பு வகைகள், பால், பழங்கள் மற்றும் தானியங்களின் விலை உயர்ந்துள்ளது.

ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) பணவீக்க விலை 3.7 சதவீதமும், பருப்பு வகைகள் 16.7 சதவீதம், தானியங்கள் 5.3 சதவீதம், பால் பொருட்கள் 5.6 சதவீதம் மற்றும் பழங்கள் 5.8 சதவீதமாக உள்ளன. காய்கறி மற்றும் மற்ற உணவுப்பொருட்களின் விலை சற்று குறைந்துள்ளது.

பொதுவாக நம் நாடு எரிசக்தியில் இறக்குமதியை நம்பியிருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தாக்கம், மோசமான சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் தற்போது நிலவும் நிதி பற்றாக்குறை ஆகியவை காரணமாக உணவுப்பொருட்களை சந்தைக்கு சரியான நேரத்தில் சேர்க்க முடிவதில்லை. இதனால் உணவு சார்ந்த பொருட்களின் விலை உயர்வு நிலையற்றதாக காணப்படுகிறது. இவற்றில் தீர்வு காணப்படும் போது, அது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் மாற்றத்தை கொண்டு வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி

விரைவில் புதிய ஒரு ரூபாய் நோட்டு – பாரத ரிசர்வ் வங்கி 

A New One Rupee note coming soon – RBI

நடைமுறையில் நாட்டின் பணப்புழக்கத்தில் உள்ள மிகச்சிறிய ரூபாய் நோட்டு, ஒரு ரூபாய் நோட்டு தான். 9.7 X 6.3 செ.மீ செவ்வக அளவை கொண்டது இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டு. வரவிருக்கும் புதிய ஒரு ரூபாய் நோட்டு 110 மைக்ரான் தடிமனாகவும், 90 ஜி.எஸ்.எம். எடையுள்ளதாகவும் அமைந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரூபாய் நோட்டில் மேல்பக்க தலைப்பாக, ‘பாரத் சர்க்கார்’ என தேவநாகரி எழுத்துக்களிலும், அதன் கீழ், ‘GOVERNMENT OF INDIA’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு ரூபாய் நோட்டுக்கள் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் அச்சடிக்கப்படும்.

புதிய ஒரு ரூபாய் நோட்டுகளில் நிதி அமைச்சகத்தின் செயலாளர் இரு மொழிகளில் கையொப்பமிட்டுள்ளதாக அமைந்துள்ளது. ரூபாய் நோட்டின் ஒரு புறம் இளம்சிவப்பு பச்சை நிறத்தில் இருக்கும். மற்றொரு புறம், மற்ற நிறங்களின் கலவையாக இருக்கும். ஒரு ரூபாய் சின்னமும் அமைந்துள்ளது.

இந்த ரூபாய் சின்னம் விவசாயத்தை ஆதரிப்பதாக தானியங்களின் சின்னமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள வடிவமைப்பு, ‘சாகர் சாம்ராட்’ எண்ணெய் ஆய்வு தளத்தின் படத்தையும் உள்ளடக்கியுள்ளது.

ரூபாய் நோட்டின் ஒரு புறத்தில், ஒரு ரூபாய் மதிப்பை பிரதிபலிக்கும் விதமாக 15 இந்திய மொழிகளில் பதியப்பட்டுள்ளது. மேலும் ஒரு ரூபாய் நாணயத்தை பிரதிபலிப்பதாக 2020ம் ஆண்டின் சத்யமேவ் ஜெயதே குறியீடும் அடங்கியுள்ளது. நம் நாட்டில் ரூபாய் நோட்டுகள் பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும். நாணயத்தை நிர்வகிப்பதையும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதும் மற்றும் நாட்டில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதும் மத்திய ரிசர்வ் வங்கியின் வேலையாகும்.

இந்திய நாட்டின் ஒரு ரூபாய் குறியீட்டை(Rupee Symbol) வடிவமைத்தவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த திரு. உதயகுமார் ஆவார். தற்போது சில்லரை நாணயங்களில் அதிக புழக்கத்தில் உள்ளவை ரூ. 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள். ரூபாய் நோட்டுகளில் அதிக புழக்கம் கொண்டவை ரூ. 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2000 ஆகியவை.

பொதுவாக ரூபாய் நோட்டுக்களை அதிகாரபூர்வமாக பயன்படுத்தும் நாடுகள் இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான். அதிகாரபூர்வமற்ற வகையில் ஜிம்பாப்வே நாடும் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்துகின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரயில்வேயில் வேலை வேண்டுமா ? – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே

ரயில்வேயில் வேலை வேண்டுமா ? – நவீனமயமாகும் இந்தியன் ரயில்வே

Looking for a job in Indian Railways – Check before about the Modernization of Indian Railways

நாட்டின் மிகப்பெரிய மத்திய பொதுத்துறை நிறுவனமாகவும், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட சாம்ராஜ்யமாகவும் திகழ்வது இந்தியன் ரயில்வே(Indian Railways). நம் நாட்டில் இந்திய ரயில்வேயின் வரலாறு 166 வருடங்களாகும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் இந்திய ரயில்வேயின் பங்கும் முக்கியமானது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுகமான பயணமாக ரயில் இருந்து வந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளரும் நாடுகளில் ஒவ்வொரு நாடும் கேபிட்டலிசம் என்ற தன்மையை கொண்டு ஓடி கொண்டிருக்கிறது. அவற்றில் நம் நாட்டிற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல. சமூக சேவை கடமைகள் என்ற நிலை மாறி, அரசு துறையும் தனியார் நிறுவனங்களை போன்று வருவாயை வலுப்படுத்த வேண்டுமென்ற நிலைக்கு சென்று விட்டன. நடப்பு பட்ஜெட் 2020 தாக்கல் படி, ரயில்வே துறையின் உட்கட்டமைப்புக்கு 12,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டின் இரண்டாம் பாதியில் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை (தேஜஸ் – Tejas Express) துவங்கப்பட்டது. தனியார் ரயில் சேவையின் முதல் மாதத்தில் நல்ல லாபத்தை பார்த்ததாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்தது.

அடுத்த வாரம் நாட்டின் மூன்றாவது தனியார் ரயில் சேவை இந்தூர் – வாரணாசி இடையே தொடங்கப்பட உள்ளது. ரயில் பயண சீட்டு வழங்குவதிலும் ரயில்வே துறை ஏற்கனவே நவீனமாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மேற்கு ரயில்வேயில் ஒரே நாளில் 5.5 லட்சம் பயணச்சீட்டுகள் டிஜிட்டல் முறையில் விற்கப்பட்டுள்ளன. வெறும் கைபேசி செயலி மூலமே சொல்லப்பட்ட டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரயில்வே துறையின் அடுத்த இலக்கு நூறு வெவ்வேறு வழித்தடங்களில் நாடு முழுவதும் 150 தனியார் ரயில் சேவையை துவங்குவதாகும்.

வரும் 2025ம் ஆண்டுக்குள் தனியார் முதலீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டுடன் 500 ரயில்கள் மற்றும் 750 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதாகும். சுருக்கமாக சொன்னால் 750 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும். பயணிகள் ரயில்களின் வேகத்தை 160 கி.மீ. வரை அதிகப்படுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. அரசு துறையான ரயில்வே வேலை கிடைப்பதற்கும், சொல்லப்பட்ட விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் ?

இதுவரை மத்திய அரசின் ரயில்வே வேலை கிடைப்பதற்கு பெரும்பாலான இளைஞர்கள் எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். ஆனால், அது போன்ற நிலை இனி எதிர்காலத்தில் நடைபெறாது. பெரும்பாலான இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைக்கலாம். காரணம், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே உலகளவில் நவீனமயமாக்கப்படுவது தான். அதே வேளையில், அரசு துறை வேலை தானே என இனி யாரும் அலட்சியம் கொள்ள முடியாது. இது ஒரு தனியார் கார்பொரேட் நிறுவனம் போன்று தான். சேவை என்ற நிலையிலிருந்து மாறி வருவாய் மட்டுமே இலக்கு என்ற தன்மை நிகழும் போது, ஒவ்வொருவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். வேலையில் பிழை ஏற்பட்டால், ரயில் பயணிகளின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், அதனை சார்ந்த ஊழியர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை வலுப்படும். இனி லஞ்சம் என்ற நிலை இல்லாமல், உயர்ரக பயணங்களுக்கு செல்ல வேண்டும்.

ரயில்வே வேலைக்கு செல்லும்  முன், தேஜஸ் ரயில் சேவையில் பயணம் செய்து பாருங்கள். பிறகு உங்களுக்கு தெரியும், வேலைக்கு செல்ல வேண்டுமா அல்லது பங்குதாரராக வேண்டுமா என்று.

ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட், ஹூண்டாய், சீமென்ஸ், மெக்குவாரி ஆகிய பிரபலமான அந்நிய நிறுவனங்கள் தங்கள் ரயில் சேவையை நம் நாட்டில் துவங்க உள்ளன. டாட்டாவும், அதானியும் இந்த ரயில் களத்தில் இறங்க உள்ளன. முற்றிலும் தனியார் பங்களிப்புடன் இனி இந்திய ரயில்வே உலகத்தரத்திற்கு நவீனமயமாகும். கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில அரசு வேலைகளில் (ராணுவத்தை தவிர்த்து) ஓய்வூதியம் இல்லை என்பதை மறக்க வேண்டாம். இனியும் பழைய ஓய்வூதியம் என்ற நிலைக்கு அரசு முன்வராது.

எனவே நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான இந்த பொதுத்துறைக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பிராண்டட்(Branded) நிறுவனத்தில் வேலை செய்வது போன்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், ஏமாற்றமே மிஞ்சும். நல்ல சேவை, மிடுக்கான உடை, வேகமெடுக்கும் பயணம், கை நிறைய சம்பளம், ஊக்கத்தொகை மற்றும் ஐ.டி. நிறுவனத்தை போன்ற தோரணை ஆகியவை கிடைக்கப்பெறும். எந்த நிலையிலும் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அரசு வேலை என எண்ணிக்கொள்ள வேண்டாம்.

ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்தாண்டின் அக்டோபர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு வந்தது. சந்தைக்கு வரும் போது, இந்த பங்கின் விலை ரூ. 320. தற்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1,514. இதன் சந்தை மதிப்பு ரூ. 24,216 கோடி. நிறுவனர்களின் (மத்திய அரசு) பங்களிப்பு 87 சதவீதம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஐ.ஆர்.சி.டி.சி. பங்கின் விலை கடந்த நான்கு மாதங்களில் 450 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. அதாவது நீங்கள் வாங்கிய விலையிலிருந்து சுமார் 5 மடங்குக்கு அருகில். வருங்காலத்தில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனத்திற்கும் இது நடக்கலாம். ஆனால் நீண்டகாலத்தில் நல்ல நிதி அறிக்கையை கொண்ட நிறுவனங்களே சந்தையில் முதலீட்டாளர்களை கவரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அன்று 10,000 கோடி டாலர் சொத்து, இன்று சல்லி பைசா இல்லை

அன்று 10,000 கோடி டாலர் சொத்து, இன்று சல்லி பைசா இல்லை

The man who had $100 Billion USD, now turned Bankrupt and Nothing

இன்று வயது 60, தனது இளம்வயதில் முதுகலை மேலாண்மை(MBA) படிப்பை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்தவர். சிறுவயது முதலே தொழிலில் ஆர்வம் மிகுந்தவர். அவர் தொடாத தொழில் இல்லை என உட்கட்டமைப்பு, நிதித்துறை, ஆற்றல், தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, காப்பீடு ஆகியவற்றில் கால்பதித்தவர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1997ம் ஆண்டில் நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருதினை பெற்றவர். 2004-2006ம் ஆண்டு வாக்கில் உலகில் இவரை போல யாரும் தொழில் செய்ய முடியாது என ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர். ஒரு கட்டத்தில் உலகின் சிறந்த தொழிலதிபராகவும், உலக பணக்காரர்கள் வரிசையில் 6வது இடத்தை பிடித்தவர். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் அப்போதே அவருடைய சொத்து மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இன்றைய மதிப்பில் 7.15 லட்சம் கோடி ரூபாய் (7,15,160,00,000,00) !

உலகின் பிரபலமான ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் பொழுதுபோக்கு வணிகத்தை உலகளாவிய அளவில் இவரது நிறுவனம் கொண்டு சென்றது. அன்று 10,000 கோடி டாலர் சொத்து, இன்று சல்லி பைசா கூட இல்லை. வரலாறு திரும்பி போட்டது. தனது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கடன் மட்டும் இன்று ரூ. 30,000 கோடி. உட்கட்டமைப்பு தொழிலில் ரூ. 14,800 கோடி கடன். ஆற்றல் துறையில் ரூ. 25,200 கோடி கடன், பாதுகாப்பு துறையில் ரூ. 6000 கோடி, முதலீட்டு துறையில் ரூ. 16000 கோடி என கடன் நீண்ட வரிசையில் செல்கிறது.

யார் இவர், என்ன ஆயிற்று ?

அட் லேப்ஸ்(Adlabs), ஆர்.காம்(RCOM), ரிலையன்ஸ் இன்ப்ரா, ரிலையன்ஸ் நேவல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு, ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ். யாரென்று தெரிகிறதா ?

ஆம், தொழில் ஜாம்பவான் திருபாய் அம்பானி அவர்களின் இளைய மகன் திரு. அனில் அம்பானி தான்.

நிறைய துறையில் தொழில் செய்து வந்தாலும், பெரும்பங்கு தொலைத்தொடர்பு துறையான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் தான் உள்ளது. துறைசார் அழுத்தம், விலை சார்ந்த மாற்றங்கள் மற்றும் அதிக பல்வகைப்படுத்துதல் ஆகிய காரணங்களால் தொழிலில் மந்த நிலை கண்டார். தொழில் போட்டியை சமாளிக்க கடனை அதிகரித்தார். முடிவில் சொத்துக்கு பதில் கடனே அதிகமானது.

அகலக்கால் வைத்தால் என்னவாகுமோ, அது தான் அனில் அம்பானி அவர்களுக்கும் நடந்தது. இவர் கடன் வாங்கிய பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் நீதிமன்றத்தின் வாசலில் தான் நிற்கிறது. கடந்த வருடம் ஒரு நிறுவனத்திற்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாமல், சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. சகோதரர் முகேஷ் அம்பானியின் உதவியால் தப்பினார். சமீபத்தில் மூன்று சீன வங்கிகள் அனில் அம்பானியின் மீது கடன் சார்ந்த வழக்கு ஒன்றினை லண்டன் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.

இதற்கு லண்டன் நீதிமன்றத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ‘எனக்கு சொத்து என்று பெரிதாக எதுவுமில்லை. முன்பு நான் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரன், என்னுடைய முதலீடுகள் எல்லாம் சரிந்து விட்டன. நான் இப்போது திவாலாகி விட்டேன். என்னுடைய அடமான கடனை எல்லாம் கழித்தால், என்னிடம் மிஞ்சுவது ஒன்றுமில்லை ‘ என அனில் கூறியுள்ளார்.

இதனை எதிர் தரப்பு மறுத்துள்ளது. இனி என்னவாகுமென்று காத்திருப்போம். ஒருபுறம் தொழில் செய்ய முதலீடு இல்லை என்ற நிலை நீடித்து வருகிறது. மறுபுறம் பெற்ற முதலீடுகளை சரியாக நிர்வகிக்காததால், பெருமளவிலான பொது சொத்து வீணடிக்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

RBI keeps REPO Rate Unchanged – Monetary Policy Committee(MPC)

பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் நடப்பு நிதியாண்டின் ஆறாவது நிதிக்கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. நேற்று(06-02-2020) வெளியிடப்பட்ட இந்த கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறை இருந்த 5.15 சதவீதமே இம்முறையும் தொடரும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo) 4.90 சதவீதமாகவும், வங்கி விகிதம் 5.40 சதவீதமாகவும் உள்ளது. இந்த முடிவு குறுகிய கால பணவீக்க இலக்கை சார்ந்து தான் நிர்ணயிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. குறுகிய கால சில்லரை பணவீக்க அடிப்படை இலக்கு 4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அடிப்படை இலக்கிலிருந்து 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது 2 % குறைவாகவோ இருக்கலாம்.

சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 3.25 % – 3.50 % என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கான வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 6.10 % – 6.40 % என சொல்லப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக இடவசதி நிலைப்பாட்டை பாரத ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. இதன் காரணமாகவே தற்போதைய ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பணவீக்க விகிதம்(CPI Inflation) 6.5 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 5.1 – 4.7சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டிருந்தது. 2020-21ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) 6 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 7.35 சதவீதமாக இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது. இது போன்ற சூழ்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் அது பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகப்படுத்தும்.

ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருந்தால், அது வங்கி வட்டி விகிதத்தில் எதிர்மறையான நிலையை கொண்டிருக்கலாம். இருப்பினும், வருங்காலத்தில் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய வங்கி வட்டி விகித நிலை கடன் பெறும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் பயன்பட கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthamadurai.com

மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி

மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி

Bharti Airtel reported a Net loss of Rs. 1,035 Crore in Q3FY20 – Quarterly Results

இந்திய தொலைத்தொடர்பு துறையில் சமீபத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நிறுவனங்களுக்கான போட்டி வெகுவாக குறைந்துள்ளது. முன்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பரவலாக இருந்த நிலையில், இன்று பல நிறுவனங்கள் காணாமல் போயின. ரிலையன்ஸ் ஜியோ(Jio) மற்றும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனங்கள் மட்டுமே பெரு நிறுவனங்களாக உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனம் தனக்கான வாடிக்கையாளர்கள் சந்தையை கொண்டிருந்தாலும், நிறுவனம் கடந்த பத்து காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு கடனாக ரூ. 99,660 கோடி உள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 50,922 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

ஏர்டெல் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 21,947 கோடி எனவும், செலவினம் ரூ. 12,701 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம் இம்முறை ரூ. 1,035 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது.

கடந்த 14 வருடங்களில் முதன்முறையாக 2019-20ம் நிதியாண்டின் மூன்று காலாண்டுகளிலும் ஏர்டெல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத்தொகையை(AGR) செலுத்துமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக ஏர்டெல் நிறுவனம் சொல்லப்பட்ட நிலுவை தொகையை ஒதுக்கியதன் மூலம் காலாண்டு முடிவில் நஷ்டத்தை சமர்ப்பித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை 40 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்திருந்தது. 2018ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் உயர்ந்திருந்தாலும், நிகர வருமானத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.83 லட்சம் கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 1.84 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதமும் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. பொதுவாக தொலைத்தொடர்பு சேவையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையார்களிடம் இருந்து பெறப்படும் சந்தா கட்டணத்தை(Subscription Fee – Recharge) கொண்டு தான் தொழிலை நிர்வகித்து வருகிறது.

ஏர்டெல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.28 லட்சம் கோடி உள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 4 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 80,780 கோடியாகவும், நிகர லாபம் ரூ.410 கோடியாகவும் இருந்தது. ஆனால் இம்முறை நடப்பு நிதியாண்டில் மூன்று காலாண்டுகளில் நஷ்டம் ஏற்பட்டதால், ஆண்டு முடிவில் பெரும்பாலும் நிகர நஷ்டமாகவே சொல்லப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள் 

Foreign Institutional Investors(FII) Trading activity for the month – January 2020

 

சீனாவின் கொரோனா வைரஸ்(Corona Virus) தாக்குதலால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று சீன பங்குச்சந்தை ஒரே நாளில் 7 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 அமெரிக்க டாலருக்கு குறைவாக வர்த்தகமாகி இருந்த நிலையில், இன்று சிறிது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நாட்டின் பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் நீண்டகாலத்திற்கான இலக்குகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு சொல்லப்பட்டிருந்தது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், நீண்ட கால மூலதன ஆதாய வரியில்(LTCG) மாற்றம் எதுவும் இல்லாதது மற்றும் தனிநபர் வருமான வரி வரம்பில்(Personal Income Tax) சில சிக்கலான நடைமுறை சொல்லப்பட்டிருந்தது சந்தைக்கு சாதகமாக இல்லை. இதனால் அன்றைய நாளில் இந்திய பங்குச்சந்தை 2 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டிருந்தது. 

 

முக்கியமாக பட்ஜெட் தாக்கல் நாளன்று அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 2000 கோடி அளவிற்கு பங்குகளை விற்றும், இந்திய உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 37 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும் இருந்தனர். எதிர்பாராத விதமாக நேற்றைய(03-02-2020) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்திற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களே காரணமாக இருந்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1,286 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 1200 கோடிக்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

 

கடந்த 7 வர்த்தக தினங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FII) இந்திய பங்குச்சந்தையில் ரூ. 10,350 கோடி அளவிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முழுவதுமாக பார்க்கையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1073 கோடிக்கு பங்குகளை வாங்கியும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 5,360 கோடிக்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

FII DII trading activity january 2020

 

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற வர்த்தக தினங்களின் எண்ணிக்கை 23 நாட்கள். இவற்றில் 8 நாட்கள் மட்டுமே அந்நிய முதலீட்டாளர்கள் நிகர கொள்முதல் செய்துள்ளனர். மற்ற வர்த்தக நாட்களில் பங்குகளை விற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பட்ஜெட் தினத்துக்கு(Budget India 2020) முந்தைய நாளான டிசம்பர் 31ம் தேதி ரூ. 4,179 கோடி அளவிலான பங்குகளை விற்று உள்ளனர். 

 

அதே வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மாதம் 11 நாட்கள் நிகர கொள்முதலும், 12 நாட்கள் நிகர விற்பனையும் மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 31ம் தேதியன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 3,816 கோடி அளவிலான பங்குகளை வாங்கியுள்ளனர். தற்போதைய அளவில் இந்திய சந்தைக்கு சாதகமாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு இருப்பது கவனிக்கத்தக்கது. வரவிருக்கும் நாட்களில் மூன்றாம் காலாண்டு முடிவுகள் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் சந்தையை நகர்த்தும். உலகளவில் காணப்படும் பொருளாதார காரணிகளும் இன்னும் ஓயவில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com






எச்சரிக்கை: புதிய வருமான வரி விகிதங்கள் – விளக்கங்களுடன்

எச்சரிக்கை: புதிய வருமான வரி விகிதங்கள் – விளக்கங்களுடன் 

Be cautious with Choosing the Personal Income Tax Options – New Tax Slab

நேற்று மத்திய அரசு சார்பில் 2020-2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமான அவகாசத்தை எடுத்த நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி நிலைமை பற்றியும், மற்ற துறைகளில் செய்யப்படும் நிதி ஒதுக்கீடு பற்றியும் பேசினார். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை தெளிவாக கூறினார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனிநபர் வருமான விகிதத்தில்(Individual Income Tax) மாற்றங்களும் இந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டது. எளிமையான வரி விதிப்பு என சொல்லப்பட்டாலும், சிக்கலான சில விஷயங்களும் இருக்க தான் செய்கின்றன. இம்முறை தனிநபர் வரி விகிதங்களில் இரு முறை பின்பற்றப்பட உள்ளது. ஒன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தனிநபர் வரி விதிப்பு, மற்றொன்று பட்ஜெட் தாக்கலில்(Budget 2020) சொல்லப்பட்டது (As per New Section 115 BAC).

இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இந்த இரு முறை கையாளுதல் வரும் 2020-21ம் நிதியாண்டுக்கானது. இரு முறைகளையும் சில எளிமையான விளக்கங்களுடன் நாம் காணலாம்.

ரவியின் ஆண்டு வருமானம் (FY 2020-21) ரூ. 7,25,000 /-. வருமான வரி சட்டம் 80சி(Income Tax Act u/s 80C) பிரிவின் கீழ் ரூ. 1.50 லட்சம் வரை (பி.எப், ஆயுள் காப்பீடு, வரி சேமிப்பு முதலீடுகள்) சேமித்து வருகிறார். தனது குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடாக ரூ. 25,000 க்கு பிரீமியம் (80டி பிரிவு) எடுத்துள்ளார். இப்போது இவருக்கான வருமான வரி விதிப்பை பார்க்கலாம்.

ஆண்டு வருமானம் (2020-21)  – ரூ. 7.25 லட்சம்

அடிப்படை கழிவு (Standard Deduction)  – ரூ. 50,000

80சி பிரிவின் கீழ் வரி சலுகை – ரூ. 1,50,000

80D (Mediclaim) பிரிவின் கீழ் வரி சலுகை – ரூ.  25,000

மேற்சொன்ன அடிப்படை கழிவு மற்றும் வரி சலுகையை கழித்த பின்னர், இவரது நிகர வருமானம் ரூ. 5,00,000 ஆக இருக்கும். இந்த வருவாய்க்கு 5 சதவீத வரி வசூலிக்கப்படும். ரவியின் சம்பளத்தில் நிறுவனம் இந்த 5 சதவீத வரியை (ரூ. 12,500) டி.டி.எஸ். பிடித்தம் செய்யும். அதே வேளையில் இந்த தொகையை வருமான வரி தாக்கல் செய்து, பணத்தை திரும்ப பெறலாம்.

Income Tax slab 2020-21

( நினைவில் கொள்ளுங்கள்: ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி அமலில் உள்ளது. இவற்றில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே, பிரிவு 87ஏ ன் கீழ் பணத்தை திரும்ப பெறலாம். இல்லையெனில், அவை உங்களுக்கு கிடைக்கப்பெறாது. )

மேலே சொன்ன முறை, நடப்பில் உள்ளவை. புதிய முறையில் வருமான வரி விதிப்பை காண்போம்.

ரவியின் ஆண்டு வருமானம் (2020-21) – ரூ. 7.25 லட்சம்

புதிய முறைப்படி, நீங்கள் வரி சலுகை மற்றும் அடிப்படை கழிவுகளை பெற இயலாது. வீட்டு வாடகை படி, காப்பீடு, வீட்டுக்கடன் தவணையில் சலுகை, மருத்துவ காப்பீடு, கல்வி தொகை, பயண சலுகை, நன்கொடை அளித்தல் ஆகியவற்றின் கீழ் நீங்கள் வரி சலுகை பெற முடியாது.

சலுகையில்லா இந்த முறையில், ரவியின் ரூ. 7.25 லட்சம் வருமானத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, அவரது வரியாக ரூ. 36,400 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் அல்லது செலுத்த வேண்டும்.

ரூ. 2.5 லட்சம் வரை – வரி இல்லை

ரூ. 2,50,001 – ரூ. 5 லட்சம் வரி – 5 % – ரூ. 12,500/-

ரூ. 5,00,001 – ரூ. 7.25 லட்சம் வரை – 10 % – ரூ. 22500/-

மொத்த வரி – ரூ. 35,000 /-

கல்வி மற்றும் சுகாதார வரி – 4 %  X ரூ. 35,000 = ரூ. 36,400/-

பழைய மற்றும் புதிய முறை(New Income Tax Optional) இரண்டையும் ஒப்பிட்டால், சில மாற்றங்களை காணலாம். பழைய முறையில் நீங்கள் எந்த வரி சேமிப்பையும் செய்யாவிட்டால் ரூ. 7.25 லட்சம் வருமானத்தில் 50,000 ரூபாய் அடிப்படை கழிவு போக மீதம் உள்ள ரூ. 6.75 லட்சம் வருவாய்க்கு 20 சதவீத வரியாக ரூ. 49,400 செலுத்த வேண்டும்.

நீங்கள் வரி சலுகையை முழுமையாக பயன்படுத்தும் போது, நடைமுறையில் உள்ள பழைய முறை தான் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில், வரி சலுகையுடன் நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கான ரூ. 7.25 லட்சம் சம்பளத்திற்கு வரி எதுவும் இருக்காது (u/s 87a Tax Rebate பிரிவில் பணத்தை திரும்ப பெற்றதுடன்). ஆனால் புதிய முறையில் சொல்லப்பட்ட வருமானத்திற்கு 10 சதவீத வரி என்று சொல்லப்பட்டாலும், நீங்கள் வரி சலுகைகளை அனுபவிக்க முடியாது.

சுருக்கமாக சொன்னால், வரி சேமிப்பை பயன்படுத்துவோர் பழைய நடைமுறையை பின்பற்றுவது தான் சிறந்தது. நான் இதுவரை வரி சலுகையின் கீழ் சேமிக்கவில்லை அல்லது சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் புதிய முறையை தேர்ந்தெடுக்கலாம். குறைவான வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் (ரூ. 10 லட்சத்திற்கு கீழ்) பழைய நடைமுறையை பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது. ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சம் என்ற அளவில் உள்ளோர் புதிய முறையை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் அதிகபட்ச வருமான வரி வரம்பில் உள்ளோருக்கு வரி சலுகைகள் அவ்வளவாக உதவாது.

இரண்டு முறையில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்ற நிலை பலருக்கு சிக்கலாக இருக்கலாம். அதனால் கவனமாக கணக்கிட்டு முடிவெடுங்கள் அல்லது தகுந்த ஆலோசகரின் உதவியை பெறுங்கள். நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்வோர் ஒருபுறம் இருந்தாலும், அரசுக்கு சம்பளத்தில் வரியை கட்டியவர்கள் அதனை எப்படி வரி சலுகை மூலம் சேமித்து, திரும்ப பெறுவது என்பதனை அறியாமல் பெரும்பாலான பணத்தை இழக்கின்றனர்.

புதிய முறை அதிகபட்ச வரம்பில் உள்ளவர்களுக்கு உதவக்கூடும், சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், வீட்டுக்கடனில் வரி சலுகை பெறாதவர்களுக்கும் பயன்படும். அதே வேளையில், புதிய முறையால் பலர் சேமிக்கும் பழக்கத்தை கைவிடும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலோர் சேமிப்பதே, வரி சலுகைக்காக தான் என்றிருக்கும் போது அதனை அரசு புதிய முறையிலும் கொண்டு வந்திருக்கலாம்.

பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஏற்படுவது தான் அவசியம். ஆனால் அதனை விடுத்து பணப்புழக்கத்தை ஏற்படுத்துகிறேன் என சேமிக்கும் பழக்க நெறியை புறக்கணிக்க கூடாது. புதிய வரி முறையால், வரவிருக்கும் காலங்களில் காப்பீடு மற்றும் இதர வரி சலுகை முதலீடுகளில் வரவு நிலை ஆட்டம் காணும். ஆனால் அதே வேளையில் இனி யாரும் வரி சலுகை காப்பீடு என தவறான அணுகுமுறையில் காப்பீட்டை விற்க முடியாது. வெறும் வரிசலுகைக்காக மட்டுமே சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்பவர்களின் மனநிலையும் மாறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்று பட்ஜெட் T20 தாக்கல் : பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது ?

இன்று பட்ஜெட் T20 தாக்கல் : பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது ?

Budget India T20: Highlights of Economic Survey 2020

2019-20ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் அவர்களால் தயாரிக்கப்பட்டது. இதனை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நேற்று சமர்ப்பித்தார். பொதுவாக பட்ஜெட் தாக்கல் தேதிக்கு முன்பாக நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார ஆய்வறிக்கை(Economic Survey) என்பது நடந்து முடிந்த விவரங்களையும், அதனை சார்ந்து வரவிருக்கும் நாட்களுக்கான மதிப்பீடுகளையும் தெரிவிக்கும். இருப்பினும் இதனை சார்ந்து தான் பொருளாதார வளர்ச்சி வளரக்கூடும் என நாம் சொல்ல முடியாது. 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ளது.

முதன்முறையாக சனிக்கிழமையான இன்று(01-02-2020) நாட்டின் பட்ஜெட் தாக்கலும், பங்குச்சந்தையும் ஒரு சேர விடுமுறை நாளில் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது. நேற்றைய ஆய்வறிக்கையில் நடப்பு 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் எனவும், 2020-21ம் நிதியாண்டில் இது 6 – 6.5 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முறையான வேலைவாய்ப்பு பிரிவுகளில் 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை புதிய 2.6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு நிலையான வளர்ச்சியை வழங்கக்கூடிய வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், காலநிலை மாற்றத்தை நோக்கிய ஒரு அணுகுமுறையும் பின்பற்றப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் தொழிற்துறை வளர்ச்சி 2.9 சதவீதமாக இருக்கும் எனவும், வேளாண்மை வளர்ச்சி 2.8 சதவீதத்தில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நகர்ப்புற பகுதிகள் திறந்த வெளி மலம் கழிப்பில்லா இடமாக மாற்றமடைந்துள்ளதாகவும், கழிவு பதப்படுத்துதலின்(Waste Processing) அளவு 40 சதவீதத்திற்கு அதிகமாக வளர்ந்துள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டில் தொழில் செய்வதற்கான எளிமை, வரி முறைகள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களில் நேர்மறையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சீன மாதிரியை பிரதிபலிக்க வேண்டுமென ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

உட்கட்டமைப்பை மேம்படுத்த மற்றும் அதற்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க, உணவுக்கான மானியங்களை குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் தொழிலாளர் சந்தையில் சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் வணிக செலவுகளை குறைக்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமே ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு ($5 Trillion Economy) சாத்தியம் எனவும், இதன் காரணமாக அதற்கான நிதியை பெற வருங்காலங்களில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் எனவும் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இன்று நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கல் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரயில்வே துறை, மற்ற உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், பொது-தனியார் பங்களிப்பு, வருமான வரி விகிதங்கள் ஆகியவற்றில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும் நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் வர்த்தக பற்றாக்குறை காரணங்களால், வரி விகிதத்தில் அரசு கவனத்துடன் செயல்படக்கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

10 நாட்கள் தடை செய்யப்பட்ட சீன பங்குச்சந்தை வர்த்தகம் – கொரோனா வைரஸ்

10 நாட்கள் தடை செய்யப்பட்ட சீன பங்குச்சந்தை வர்த்தகம் – கொரோனா வைரஸ் 

China Stock Exchange Shuts down till February 3 – Novel Coronavirus 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை சீனாவில் மட்டும் 213 பேர் இறந்துள்ளனர். 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்நிலையில் சூழலியல் ஆர்வலர்கள் சீனாவில் உள்ள வனவிலங்கு சந்தையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். பல்லுயிர் மீது பாதிப்பை ஏற்படுத்துவது மற்றும் கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக செயல்பட்டதன் மூலமே கொரோனா வைரஸ் வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதார அமைப்பும் அவசர நிலையை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

சீனாவில் கடந்த 24ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வசந்தகால விழா விடுமுறையாகும். அங்கு இயங்கும் அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இருக்கும். அதே வேளையில் சீன பங்குச்சந்தைக்கு ஜனவரி 24,27, 28,29,30 தேதிகளுக்கு மட்டுமே விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன பங்குச்சந்தை வர்த்தகம் பத்து நாட்களுக்கு மூடும் சூழ்நிலையை மேற்கொண்டது. சீனாவின் ஷாங்காய் காம்போசிட்(SSE – Shanghai Stock Exchange) குறியீடு கடந்த 23ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. அன்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.75 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஷாங்காய் குறியீடு.

அதன் பின்னர் சீன பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கப்படவில்லை. மேலும் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை சீன பங்குச்சந்தைகள் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது. இது உலகளவில் ஒரு அசாதாரண சூழலை சந்தை அளவில் உருவாக்கியுள்ளது. சீனாவில் நடைபெறும் எதிர்மறையான நிகழ்வு மற்ற சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தாலும், இது நீண்டகாலம் நீடிப்பதற்கான விஷயமாக இல்லை.

சீன பங்குச்சந்தை இறங்கும் மற்றும் அதன் பொருளாதாரம் வலுவிழக்கும் என்ற காரணத்தால், அது அமெரிக்க சந்தைகளுக்கு சாதகமாக உள்ளது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையில், மற்றொரு வீழ்ச்சியை பற்றி பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக முன்னெச்சரிகைக்கு தயாராகி வருகிறது.

நடப்பு 2020ம் ஆண்டில் அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் அதன் பொருளாதாரம் வீழ்ச்சி பெற 26 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க்(Bloomberg) கூறியுள்ளது. அதே வேளையில் இம்முறை பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் அது ஆசியாவிலிருந்து நிகழக்கூடும் என மேற்கோள் காட்டப்படுகிறது. சீன பங்குச்சந்தை வரவிருக்கும் 4ம் தேதி சந்தை துவங்கும் நிலையில் அதன் தாக்கம் தெரியும். இந்திய பங்குச்சந்தை கடந்த ஒன்பது வர்த்தக தினங்களில் 1400 புள்ளிகள் வரை (சென்செக்ஸ்) இறக்கம் கண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கல்(Budget India T20) மட்டுமே, குறுகிய காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு ஊக்குவிப்பதாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com