Market Correction Recession

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள் 

Foreign Institutional Investors(FII) Trading activity for the month – January 2020

 

சீனாவின் கொரோனா வைரஸ்(Corona Virus) தாக்குதலால் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று சீன பங்குச்சந்தை ஒரே நாளில் 7 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 அமெரிக்க டாலருக்கு குறைவாக வர்த்தகமாகி இருந்த நிலையில், இன்று சிறிது ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நாட்டின் பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் நீண்டகாலத்திற்கான இலக்குகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு சொல்லப்பட்டிருந்தது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், நீண்ட கால மூலதன ஆதாய வரியில்(LTCG) மாற்றம் எதுவும் இல்லாதது மற்றும் தனிநபர் வருமான வரி வரம்பில்(Personal Income Tax) சில சிக்கலான நடைமுறை சொல்லப்பட்டிருந்தது சந்தைக்கு சாதகமாக இல்லை. இதனால் அன்றைய நாளில் இந்திய பங்குச்சந்தை 2 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டிருந்தது. 

 

முக்கியமாக பட்ஜெட் தாக்கல் நாளன்று அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 2000 கோடி அளவிற்கு பங்குகளை விற்றும், இந்திய உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 37 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும் இருந்தனர். எதிர்பாராத விதமாக நேற்றைய(03-02-2020) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்திற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களே காரணமாக இருந்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1,286 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 1200 கோடிக்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

 

கடந்த 7 வர்த்தக தினங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(FII) இந்திய பங்குச்சந்தையில் ரூ. 10,350 கோடி அளவிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முழுவதுமாக பார்க்கையில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1073 கோடிக்கு பங்குகளை வாங்கியும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 5,360 கோடிக்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

FII DII trading activity january 2020

 

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற வர்த்தக தினங்களின் எண்ணிக்கை 23 நாட்கள். இவற்றில் 8 நாட்கள் மட்டுமே அந்நிய முதலீட்டாளர்கள் நிகர கொள்முதல் செய்துள்ளனர். மற்ற வர்த்தக நாட்களில் பங்குகளை விற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக பட்ஜெட் தினத்துக்கு(Budget India 2020) முந்தைய நாளான டிசம்பர் 31ம் தேதி ரூ. 4,179 கோடி அளவிலான பங்குகளை விற்று உள்ளனர். 

 

அதே வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மாதம் 11 நாட்கள் நிகர கொள்முதலும், 12 நாட்கள் நிகர விற்பனையும் மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 31ம் தேதியன்று உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 3,816 கோடி அளவிலான பங்குகளை வாங்கியுள்ளனர். தற்போதைய அளவில் இந்திய சந்தைக்கு சாதகமாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு இருப்பது கவனிக்கத்தக்கது. வரவிருக்கும் நாட்களில் மூன்றாம் காலாண்டு முடிவுகள் மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் சந்தையை நகர்த்தும். உலகளவில் காணப்படும் பொருளாதார காரணிகளும் இன்னும் ஓயவில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com






Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s