எச்சரிக்கை: புதிய வருமான வரி விகிதங்கள் – விளக்கங்களுடன்
Be cautious with Choosing the Personal Income Tax Options – New Tax Slab
நேற்று மத்திய அரசு சார்பில் 2020-2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமான அவகாசத்தை எடுத்த நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி நிலைமை பற்றியும், மற்ற துறைகளில் செய்யப்படும் நிதி ஒதுக்கீடு பற்றியும் பேசினார். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை தெளிவாக கூறினார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனிநபர் வருமான விகிதத்தில்(Individual Income Tax) மாற்றங்களும் இந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டது. எளிமையான வரி விதிப்பு என சொல்லப்பட்டாலும், சிக்கலான சில விஷயங்களும் இருக்க தான் செய்கின்றன. இம்முறை தனிநபர் வரி விகிதங்களில் இரு முறை பின்பற்றப்பட உள்ளது. ஒன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தனிநபர் வரி விதிப்பு, மற்றொன்று பட்ஜெட் தாக்கலில்(Budget 2020) சொல்லப்பட்டது (As per New Section 115 BAC).
இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இந்த இரு முறை கையாளுதல் வரும் 2020-21ம் நிதியாண்டுக்கானது. இரு முறைகளையும் சில எளிமையான விளக்கங்களுடன் நாம் காணலாம்.
ரவியின் ஆண்டு வருமானம் (FY 2020-21) ரூ. 7,25,000 /-. வருமான வரி சட்டம் 80சி(Income Tax Act u/s 80C) பிரிவின் கீழ் ரூ. 1.50 லட்சம் வரை (பி.எப், ஆயுள் காப்பீடு, வரி சேமிப்பு முதலீடுகள்) சேமித்து வருகிறார். தனது குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடாக ரூ. 25,000 க்கு பிரீமியம் (80டி பிரிவு) எடுத்துள்ளார். இப்போது இவருக்கான வருமான வரி விதிப்பை பார்க்கலாம்.
ஆண்டு வருமானம் (2020-21) – ரூ. 7.25 லட்சம்
அடிப்படை கழிவு (Standard Deduction) – ரூ. 50,000
80சி பிரிவின் கீழ் வரி சலுகை – ரூ. 1,50,000
80D (Mediclaim) பிரிவின் கீழ் வரி சலுகை – ரூ. 25,000
மேற்சொன்ன அடிப்படை கழிவு மற்றும் வரி சலுகையை கழித்த பின்னர், இவரது நிகர வருமானம் ரூ. 5,00,000 ஆக இருக்கும். இந்த வருவாய்க்கு 5 சதவீத வரி வசூலிக்கப்படும். ரவியின் சம்பளத்தில் நிறுவனம் இந்த 5 சதவீத வரியை (ரூ. 12,500) டி.டி.எஸ். பிடித்தம் செய்யும். அதே வேளையில் இந்த தொகையை வருமான வரி தாக்கல் செய்து, பணத்தை திரும்ப பெறலாம்.
( நினைவில் கொள்ளுங்கள்: ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி அமலில் உள்ளது. இவற்றில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே, பிரிவு 87ஏ ன் கீழ் பணத்தை திரும்ப பெறலாம். இல்லையெனில், அவை உங்களுக்கு கிடைக்கப்பெறாது. )
மேலே சொன்ன முறை, நடப்பில் உள்ளவை. புதிய முறையில் வருமான வரி விதிப்பை காண்போம்.
ரவியின் ஆண்டு வருமானம் (2020-21) – ரூ. 7.25 லட்சம்
புதிய முறைப்படி, நீங்கள் வரி சலுகை மற்றும் அடிப்படை கழிவுகளை பெற இயலாது. வீட்டு வாடகை படி, காப்பீடு, வீட்டுக்கடன் தவணையில் சலுகை, மருத்துவ காப்பீடு, கல்வி தொகை, பயண சலுகை, நன்கொடை அளித்தல் ஆகியவற்றின் கீழ் நீங்கள் வரி சலுகை பெற முடியாது.
சலுகையில்லா இந்த முறையில், ரவியின் ரூ. 7.25 லட்சம் வருமானத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, அவரது வரியாக ரூ. 36,400 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் அல்லது செலுத்த வேண்டும்.
ரூ. 2.5 லட்சம் வரை – வரி இல்லை
ரூ. 2,50,001 – ரூ. 5 லட்சம் வரி – 5 % – ரூ. 12,500/-
ரூ. 5,00,001 – ரூ. 7.25 லட்சம் வரை – 10 % – ரூ. 22500/-
மொத்த வரி – ரூ. 35,000 /-
கல்வி மற்றும் சுகாதார வரி – 4 % X ரூ. 35,000 = ரூ. 36,400/-
பழைய மற்றும் புதிய முறை(New Income Tax Optional) இரண்டையும் ஒப்பிட்டால், சில மாற்றங்களை காணலாம். பழைய முறையில் நீங்கள் எந்த வரி சேமிப்பையும் செய்யாவிட்டால் ரூ. 7.25 லட்சம் வருமானத்தில் 50,000 ரூபாய் அடிப்படை கழிவு போக மீதம் உள்ள ரூ. 6.75 லட்சம் வருவாய்க்கு 20 சதவீத வரியாக ரூ. 49,400 செலுத்த வேண்டும்.
நீங்கள் வரி சலுகையை முழுமையாக பயன்படுத்தும் போது, நடைமுறையில் உள்ள பழைய முறை தான் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில், வரி சலுகையுடன் நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கான ரூ. 7.25 லட்சம் சம்பளத்திற்கு வரி எதுவும் இருக்காது (u/s 87a Tax Rebate பிரிவில் பணத்தை திரும்ப பெற்றதுடன்). ஆனால் புதிய முறையில் சொல்லப்பட்ட வருமானத்திற்கு 10 சதவீத வரி என்று சொல்லப்பட்டாலும், நீங்கள் வரி சலுகைகளை அனுபவிக்க முடியாது.
சுருக்கமாக சொன்னால், வரி சேமிப்பை பயன்படுத்துவோர் பழைய நடைமுறையை பின்பற்றுவது தான் சிறந்தது. நான் இதுவரை வரி சலுகையின் கீழ் சேமிக்கவில்லை அல்லது சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் புதிய முறையை தேர்ந்தெடுக்கலாம். குறைவான வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் (ரூ. 10 லட்சத்திற்கு கீழ்) பழைய நடைமுறையை பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது. ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சம் என்ற அளவில் உள்ளோர் புதிய முறையை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் அதிகபட்ச வருமான வரி வரம்பில் உள்ளோருக்கு வரி சலுகைகள் அவ்வளவாக உதவாது.
இரண்டு முறையில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்ற நிலை பலருக்கு சிக்கலாக இருக்கலாம். அதனால் கவனமாக கணக்கிட்டு முடிவெடுங்கள் அல்லது தகுந்த ஆலோசகரின் உதவியை பெறுங்கள். நம் நாட்டில் வரி ஏய்ப்பு செய்வோர் ஒருபுறம் இருந்தாலும், அரசுக்கு சம்பளத்தில் வரியை கட்டியவர்கள் அதனை எப்படி வரி சலுகை மூலம் சேமித்து, திரும்ப பெறுவது என்பதனை அறியாமல் பெரும்பாலான பணத்தை இழக்கின்றனர்.
புதிய முறை அதிகபட்ச வரம்பில் உள்ளவர்களுக்கு உதவக்கூடும், சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், வீட்டுக்கடனில் வரி சலுகை பெறாதவர்களுக்கும் பயன்படும். அதே வேளையில், புதிய முறையால் பலர் சேமிக்கும் பழக்கத்தை கைவிடும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். நடுத்தர குடும்பத்தில் பெரும்பாலோர் சேமிப்பதே, வரி சலுகைக்காக தான் என்றிருக்கும் போது அதனை அரசு புதிய முறையிலும் கொண்டு வந்திருக்கலாம்.
பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை ஏற்படுவது தான் அவசியம். ஆனால் அதனை விடுத்து பணப்புழக்கத்தை ஏற்படுத்துகிறேன் என சேமிக்கும் பழக்க நெறியை புறக்கணிக்க கூடாது. புதிய வரி முறையால், வரவிருக்கும் காலங்களில் காப்பீடு மற்றும் இதர வரி சலுகை முதலீடுகளில் வரவு நிலை ஆட்டம் காணும். ஆனால் அதே வேளையில் இனி யாரும் வரி சலுகை காப்பீடு என தவறான அணுகுமுறையில் காப்பீட்டை விற்க முடியாது. வெறும் வரிசலுகைக்காக மட்டுமே சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்பவர்களின் மனநிலையும் மாறும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை