All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?

வங்கி சேமிப்புக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களை பயன்படுத்துவது எப்படி ?

How to use  Mutual Funds Schemes instead of Bank Savings or Deposits ?

கடந்த மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டது. நடப்பில் வங்கிகளுக்கான ரெப்போ விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. இந்த வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் ஐந்து முறை குறைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின் (Bonds) தேவை அதிகரித்து அவற்றின் வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதே போல வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் போது, கடன் பத்திரங்களின் தேவை குறைந்து அதனுடைய வட்டி குறையும். எனவே இந்த சூழ்நிலையை ஒருவர் கருத்தில் கொண்டு முதலீடு செய்தால், குறிப்பிடத்தக்க வட்டி வருவாயை பெறலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எஸ்.பி.ஐ. (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 3.5 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக குறைத்துள்ளது. வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதமும் ஒரு வருடத்திற்கு 7 சதவீதத்திற்கு குறைவாகவும், ஐந்து வருட காலத்திற்கு 9 சதவீதத்திற்கு கீழாகவும் உள்ளது.

இது போன்ற காலத்தில், இதற்கு மாற்றாக பரஸ்பர நிதி (Mutual Funds) திட்டங்களை பயன்படுத்தலாம். பண பரிவர்த்தனைகளுக்கு ஒருவர் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்திருந்தாலும், சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு வங்கிகளை காட்டிலும் சற்று கூடுதலான வட்டி வருவாயை கொடுக்கும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

லிக்விட் பண்டுகள் (Liquid Funds):

வங்கி சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் 4 சதவீதத்திற்கு குறைவான வட்டி விகிதத்திற்கு பதிலாக பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டுகளை(Liquid Funds) பயன்படுத்தலாம். இவற்றில் பணப்புழக்கமும் நன்றாக உள்ளது, ரிஸ்க் அதிகமில்லா முதலீடாக கருதப்படுகிறது. மேலும் வங்கி சேமிப்பு கணக்கை காட்டிலும், அதாவது ஆண்டுக்கு 6-7 சதவீத வருவாயை கொடுக்கும். லிக்விட் பண்டுகளை மிகவும் குறுகிய காலத்திற்கு(Alternative for Bank Savings Rate) பயன்படுத்தி கொள்ளலாம்.

எச்.டி.எப்.சி.(HDFC), நிப்பான் இந்தியா(Nippon India), ஆதித்ய பிர்லா, ஆக்ஸிஸ் போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களில் லிக்விட் பண்டுகளின் முதலீடு எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த பண்டுகளில் முதலீடு செய்த தொகையை வெறும் இரண்டு நிமிடத்தில் நமது வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யும் வசதியும் உள்ளது. சில லிக்விட் திட்டத்தில் இலவச ஏ.டி.எம்.(ATM) கார்டு சேவையும், வரம்பற்ற பரிவர்த்தனைகளையும்(Unlimited Withdrawal Transaction) கிடைக்கப்பெறுகிறது.

கடன் சார்ந்த பண்டுகள் (Debt Funds):

ஒரு வருடம் முதல் ஐந்து வருட காலத்திற்கான முதலீட்டுக்கு பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திர திட்டங்களை(Debt Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றில் தற்போது 7-10 சதவீதம் வரை வட்டி வருவாய் அமைகிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக முதலீடு செய்யும் பட்சத்தில், வரி சலுகையும்(Indexation Benefit) உள்ளது. இது போன்ற வசதி வங்கி டெபாசிட்களில் கிடைப்பதில்லை. கால அளவுகளை கொண்ட கடன் பத்திர திட்டங்களை(Duration Funds), நமது இலக்குகளுக்கு தகுந்தாற் போல் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.

கலப்பின பண்டுகள் (Hybrid Funds):

ஐந்து வருட கால இலக்குகளுக்கு ஒருவர் பரஸ்பர நிதிகளின் கலப்பு முதலீட்டு திட்டத்தினை (Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். இவற்றின் சராசரி வருமானம் 10-12 சதவீதமாக இருக்கும். கலப்பு முதலீடு என்பது பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் மூலம் ஒருவர் தனது பணத்தை முழுமையாக பங்குகளில் முதலீடு செய்யாமல், கடன் பத்திரங்களின் வாய்ப்பையும் பயன்படுத்தலாம்.

முதலீட்டு பரவலாக்க பண்டுகள் (Asset Allocation Funds):

நீண்டகால இலக்குகள் மற்றும் தேவைகளை கொண்டுள்ளோர் பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் பங்குகளில் முதலீடு செய்யும் போது, நல்ல வருமானத்தை ஈட்டலாம். குறுகிய காலத்தில் பங்குகள் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு இருப்பதால் பங்குகளை குறுகிய கால தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது. அதே வேளையில், பன்முக முதலீட்டையும் ஒருவர் பரிசீலிக்கலாம். பன்முக முதலீட்டின்(Asset Allocation) வாயிலாக ஒருவர் பங்கு, கடன் பத்திரங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்களில் முதலீட்டை பரவலாக்கலாம்.

வரி சேமிப்பு பண்டுகள் (Tax Savings – ELSS Mutual Funds):

வரி சேமிப்புக்கு மட்டுமே வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பை சார்ந்தவர்கள், ஒரு முறை பரஸ்பர நிதி வழங்கும் வரி சேமிப்பு பண்டுகளை(Tax Savings Mutual Funds) தேர்ந்தெடுக்கலாம். குறைந்த கால லாக்-இன்(Lock-in) வசதியை கொண்ட இது போன்ற பண்டுகளில் நீண்ட காலத்தில் வருமானமும் சற்று அதிகம்.

வங்கிகள் வழங்கும் சேமிப்பு  மற்றும் முதலீட்டு திட்டங்களை நாம் அறவே ஒதுக்க முடியாது. வங்கிகளை போல நிலையான அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம்(Fixed Returns) பரஸ்பர நிதிகளில் சொல்லப்படுவதில்லை. இருப்பினும், வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் சூழ்நிலையில் பரஸ்பர நிதி திட்டங்களை திறமையாக பயன்படுத்துவது  சாதகமான விஷயமே. எதிர்காலத்தில் வங்கி கணக்குக்கு மாற்றாக பரஸ்பர நிதிகளும் தினசரி பரிவர்த்தனைக்கான சேவையை வழங்க முன்வரலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக  மதுரை 

www.varthagamadurai.com

இந்திய வங்கிகள் நலம் தானா ?

இந்திய வங்கிகள் நலம் தானா ? 

Are Banks in India good ? Financial Crisis & Non Performing Assets

ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தில் பிரச்சனை ஆரம்பித்து தற்போது பி.எம்.சி. வங்கி (PMC Bank) வரை நிதி சிக்கலை மட்டுமே கொண்டு நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. இந்த சிக்கல் களையப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியுமா என்பது அனைவருடைய கேள்வியாக உள்ளது.

பொதுவாக ஒரு நாட்டில் வங்கித்துறை என்பது மக்களின் அசைய முடியாத நம்பிக்கையை கொண்டிருப்பதாகும். பொதுத்துறையை சேர்ந்த ஒரு உற்பத்தி அல்லது சேவை நிறுவனம் திவால் நிலைக்கு சென்றாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சாமானியர்கள் வங்கிகள் மூடப்படும் நிலையை ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை.

அவ்வாறாக ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையும் வங்கியின் மீது உள்ளது. அதே வேளையில் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலையில், இந்த நிலைமை பலரின் நம்பிக்கையை குலைப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகள் (PSU Banks)  மட்டுமில்லாமல், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின்(NBFC) வாராக்கடன் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ரூ. 4500 கோடி முறைகேடு என சொல்லப்பட்ட பி.எம்.சி. வங்கியில் பெரும்பாலும் அதன் வங்கி வாடிக்கையாளர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி, முறைகேடு உள்ள வங்கிகளின் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாய் மட்டுமே மாதந்தோறும் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. பின்பு இந்த விதி 10,000 மட்டுமே எனவும், அதற்கு பிறகு இதனை அதிகரித்து தற்போது மாதம் ரூ. 25,000 வரை தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையளவில் வங்கி சேவை என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. பண மதிப்பிழப்பு(Demonetization) நடவடிக்கைக்கு பிறகு, வங்கி கணக்கு மற்றும் அதன் சேவை என்பது மறைமுகமாக ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலானோர் வங்கி சேவையை நம்பியிருக்கும் சூழ்நிலையில் வங்கிகளில் நடைபெறும் முறைகேடுக்கு வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவது மறுப்பதற்கில்லை.

வங்கி டெபாசிட்தாரர்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி முன்னுரிமை அளித்து வருவதாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். வங்கி பண பரிவர்த்தனையில் செயலிழப்பு ஏற்படும் போது, அதற்கு வங்கி சேவை காரணமாக இருக்கும் நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதெல்லாம் செய்திகளாக இருப்பினும், உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயனை தருமா என்பது சந்தேகமே. டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு என சொல்லப்பட்டாலும், அதன் பாதுகாப்பு நம் நாட்டில் உறுதி செய்யப்படவில்லை.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி(SBI) சேவையில் இணைய பரிவர்த்தனையின் போது, வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலும் பரிவர்த்தனை முடியாமல் வங்கி கணக்கில் பணம் மட்டும் பற்று வைக்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர் ஒருவர் மீண்டும் அந்த பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நிலைக்கு நேரம் மற்றும் பணத்தை ஒதுக்க வேண்டும்.

பிடிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. அப்படியிருக்கும் நிலையில், வங்கிகளிடம் இருந்து இழப்பீட்டு தொகை அவ்வளவு விரைவாக கிடைத்திடுமா என்பது கருத்துரையை பொறுத்தே உள்ளது. வாராக்கடன்களை தனியார் வங்கிகள் சில, அந்த தொகை இனி கிடைக்கப்பெறாது என நஷ்டத்தில் கணக்கை முடித்து கொண்டன. இதே பாணியில் தற்போது பொதுத்துறை வங்கிகளிலும் பணம் வராது என கணக்கு எழுதி கொண்டிருக்கின்றன.

கடந்த நான்கு வருடங்களில் இந்திய வங்கிகள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாராக்கடன் தொகை இனி வராது என கணக்கை முடித்து கொண்டன. இவற்றில் அதிகமான தொகையை கணக்கில் முடித்து கொண்டது பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. வங்கி மட்டும் ரூ. 76,600 கோடி அளவில் வாராக்கடன் வராது என முடித்து கொண்டுள்ளன. 100 கோடி ரூபாய்க்கு மேலாக கடன் பெற்றவர்களில் 220 நபர்கள் திவாலாகி உள்ளனர்.

மோசமான கடன்களின்(Bad Loans) எண்ணிக்கையையும், அதற்கான தொகையும் வங்கிகள் குறைத்த வண்ணம் உள்ளன. வங்கிகள் இனி புதிய கடன்களுக்கு தயாராக உள்ளன. அரசும் அதற்கான தொகையை தயார் செய்த வண்ணம் உள்ளன. இனியாவது இது போன்ற பிரச்சனை அதிகப்படியாக நடைபெறாமல் இருக்க வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் சேவை நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ. 4,019 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ. 4,019 கோடி

Infosys Q2Fy20 Net profit to Rs. 4,019 Crore – Quarterly Results

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய பன்னாட்டு ஐ.டி. நிறுவனம் இன்போசிஸ்(Infosys). இந்த நிறுவனம் அதன் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெள்ளிக்கிழமை அன்று (11-10-2019) சந்தையில் வெளியிட்டது. 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 22,629 கோடி ரூபாயாக உள்ளது.

நிறுவனத்தின் செலவினங்கள் 16,990 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம்(Operating Profit) ரூ. 5,639 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 626 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. ஆக இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 4,019 கோடி. வரிக்கு முந்தைய லாபம் 5,496 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த 12 மாதங்கள் அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் 15,500 கோடி ரூபாயாகவும், வருவாய் ரூ. 87,371 கோடியாகவும் உள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 10.52 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 7.45 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையில் கையிருப்பு தொகை(Reserves) 58,400 கோடி ரூபாயாக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது நிறுவன வருவாய் 3.79 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதே வேளையில் கடந்த வருட செப்டம்பர் மாத காலாண்டுடன் பார்க்கும் போது, 9.80 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2.21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இயக்க லாப அளவு(Operating profit Margin) கடந்த ஒரு வருடத்தில் சராசரியாக 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.47 லட்சம் கோடியாக உள்ளது.

முதலீட்டு பங்கு மீதான வருவாய்(Return on Equity) கடந்த ஐந்து வருட கால அளவில் 24 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 25 சதவீதமும் உள்ளது. பங்கு முதலீட்டாளர்களுக்கு இது சாதகமான விஷயமும் கூட. நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. தற்போதைய கடன் பொறுப்புகளாக(Current Liabilities) ரூ. 19,211 கோடியும், சொத்துக்களாக 48,850 கோடி ரூபாயும் உள்ளது கவனிக்கத்தக்கது.

வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 258 மடங்குகளில் உள்ளது. அதாவது நிறுவனத்திற்கு ஏதேனும் கடன் இருந்தால், அந்த தொகையை போல 258 மடங்குகளில் சொத்து உள்ளதை குறிக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தண்ணீர்… தண்ணீர்… பஞ்சாயத்து

தண்ணீர்… தண்ணீர்… பஞ்சாயத்து 

The Story of Water Crisis – Chapter 1

இது ஒரு விருந்தினர் இடுகை. தண்ணீர் சார்ந்த மேலாண்மை, அதன் கடந்த வரலாறு மற்றும் அதனை ஒட்டி நடப்பில் உள்ள பிரச்சனைகளை பேசும் குறுந்தொடர் இதுவாகும். வர்த்தக மதுரை வாசகர்கள் தங்கள் தண்ணீர் மேலாண்மை சார்ந்த கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்.

 

தண்ணிப்பஞ்சாயத்து அத்தியாயம் – 1 

 

 ‘ நீரின்றி அமையாது உலகு ‘  – இது வள்ளுவனின் வாக்கு 

 

தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கம், தங்கள்  வீட்டிற்கு வரும் விருந்தினரை, முதலில் தண்ணீர் கொடுத்து வரவேற்பர். தண்ணீர் இல்லாத மனிதனின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என நினைத்து பார்த்தால், வள்ளுவரின் குரல் தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது, ‘ புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் ‘. 

 

ஆதலால் மனிதனின் புறத்தூய்மை தண்ணீரால் மட்டுமே தூய்மையடையும். அப்படியெனில், தண்ணீர் என்பது உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஜீவகாருண்யம். ஓ, மனிதனே ! தண்ணீரை உனக்கு மட்டும்  சொந்தம் கொண்டாடாதே. நீ அடிப்படையில் ஒரு விலங்கு என்பதை மறவாதே. தண்ணீரின் பயன்பாடு கடந்த நூற்றாண்டுகளில் தமிழரின் வாழ்வில் எவ்வாறு இருந்தது என்பதை சற்று பின் நோக்கி பார்ப்போம். 

 

ஆழ்துளை கிணறு இல்லாத முப்போக விளைச்சல், பூச்சிக்கொல்லிகள் இல்லாத இயற்கை விளைச்சல், கடைமடைக்கும் தண்ணீர் செல்ல வழிவகுத்த தொழில்நுட்பம் இல்லாத நீர் மேலாண்மை, காட்டு விலங்குகள் நீரை தேடி, நாட்டுக்குள் வராத வண்ணம் நீரின் தேவை விலங்குகளுக்கும் உண்டு என்று உணர்ந்த பண்பாடுள்ள சமூகம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்தது. 

 

ஒரு சிறு எடுத்துக்காட்டு: மன்னர் முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்ட பிறகு, மன்னர்களுக்கென்றே சமையல் செய்யக்கூடிய சமையல் கலைஞர்கள், அடுத்து யாருக்கு சமையல் செய்வது என்பது தெரியாமல் இருந்தனர். ஆதலால் அவர்கள் உணவகம் அமைத்து மன்னர்களுக்கு சமைத்த உணவை, சாமானியர்களுக்கு உணவகம் வைத்து விற்க ஆரம்பித்தனர். ஆகையினாலே மன்னர்களின் உணவு முறையும், சாதாரண மனிதனின் நாவை தொட்டது. இன்றும் பழைய டில்லியில் மொகலாய மன்னர்களுக்கு சமையல் செய்த சமையல் கலைஞர்களின் வாரிசுகள் பாரம்பரியமாக உணவாக விடுதி நடத்தி வருகின்றனர். இந்த கூற்றில் நாம் அறியப்பட வேண்டியது என்னவென்றால், சமையல் நுட்பங்களை பாரம்பரியமாக கடத்தி வந்தது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எல்லோருக்குள்ளும் இந்த கேள்வி உள்ளதா, இல்லை எனக்கும் மட்டும் தோன்றுகிறதா என தெரியவில்லை… 

 

அது என்ன கேள்வியென்றால், ‘ முன்னோர்கள் பின்பற்றிய நீர் மேலாண்மை நிர்வாகம் ஏன் இன்று உள்ள விவசாயிகள் வரை கடந்து வரவில்லை ? 

 

தஞ்சை கோயிலை கட்டிய கட்டிட கலைஞனின் தொழில்நுட்பம் ஏன் இன்று வரை கடத்தி வரப்படவில்லை. இப்படியாக தமிழர்களின் உயரிய மேலாண்மை நுட்பங்கள் எந்த தலைமுறையில் அறுந்து போனது என்பதே ‘ அது. 

 

தண்ணீரை பூமியில் தேடாதே, வானில் இருந்து வர வை ‘ என ஐயா நம்மாழ்வார் கூறுகிறார். நீர்நிலைகளே இல்லை, குளங்கள் எல்லாம் காலி மனைகளானது. நீராவி இல்லாமல் மழை எப்படி வானிலிருந்து வரும் ? விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை விட, வியாபாரத்திற்கு பயன்படும் தண்ணீரே அதிகம். 

 

தண்ணீர், எப்பொழுது வியாபாரமாக தொடங்கியது ?

 

தண்ணீருக்கு புனிதம் கற்பிக்கும் போது…

 

எனக்கு இப்போது வரையும் தெரியவில்லை, சுத்தமான தண்ணீர் என்பது எது ? 

 

 மழை நீரா…  நிலத்தடி நீரா… ?  இல்லையெனில், தாதுக்கள் மற்றும் சத்துக்கள் நீக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் நீரா ? 

 

வியாபார பொருளாக தண்ணீர் மாற்றப்பெற்ற பின்னணியின் சிறு ஆய்வு:

 

அந்த காலத்தில், மன்னர் என்பவருக்கு மட்டுமே அனைத்து வளங்களையும் அனுபவிக்கும் உரிமை உண்டு. அடுத்ததாக அமைச்சர்கள், படைத்தளபதிகள், பெரும் வியாபாரிகள் இருந்தனர். மக்கள் எந்த இடத்தில் இருந்தார்கள் என்றால் ?

 

அவர்களுக்கு இடம் ஏதும் வழங்கப்படவில்லை. மன்னர் முறை ஒழிக்கப்பட்ட பிறகு, யாவரும் இந்நாட்டு மன்னர்கள் என ஆன பிறகு, சாமானியனும் மன்னராக வாழ ஆசைப்பட்டதால் (பணக்காரனாக) சுயநலமாக, தேவைக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் பழக்கம் ஏற்பட்டது. மற்றவர்களிடம் இல்லாத பொருள் ஒன்று இருப்பின், அதனை தனிமனிதன் கவுரமாக நினைக்க ஆரம்பித்தான். சமூகமே இதற்கு ஒரு முக்கிய காரணம். ஏனென்றால் இந்த சமூகம், இருப்பவனுக்கு ஒரு மரியாதையும், இல்லாதவனுக்கு ஒரு மரியாதையும் நூற்றாண்டு காலமாக தந்து வந்துள்ளது, இப்பொழுதும் தருகிறது.

 

அம்பானிக்கும், சாதாரண குடிமகனுக்கும் ஒரே மரியாதையை இந்த சமூகம் தருமா ?

 

எனக்கு தெரிந்தவரை வாய்ப்பு என்பதே இல்லை. கும்பிடுகிறேன் சாமி என்ற கேள்விக்குறியிலிருந்து, வணக்கம் முதலாளி என்ற சொல்லை கேட்க நடுத்தர வர்க்கம் மிக அதிகமாக மெனக்கெடுகிறது. ஏனென்றால், நடுத்தர வர்த்தகத்தினரிடமே விரைவில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. இவர்களே அதிகமான குறுக்கு வழிகளை கையாளுகின்றனர். அதனால் தான் புது பணக்காரர்கள் நம் நாட்டில் அதிகம் உருவாகிறார்கள். இவர்களின் வந்த வழியை ஆராய்ந்து பார்த்தால், உண்மையற்றவர்களாக இருப்பார்கள். மேலும் உண்மையை பார்த்திராதவர்களாக கூட இருக்கக்கூடும். 

 

இவ்வளவு தூரம் நம் சமூகத்தை பற்றி கூற வேண்டிய காரணம் என்னவென்றால், இயற்கை எவ்வாறு அழிக்கப்படுகிறது, அதற்கு சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் எவ்வாறு முக்கிய காரணியாக விளக்குவதற்கே மேற்கொண்ட பத்திகள். 

 

நாட்டில் நிகழும் முக்கியமான கொள்ளைகளில் எது முதன்மை என்று நீங்கள் கருதுவீர்கள் ?

 

பண கொள்ளையா… நகை கொள்ளையா… ?  தகவல் தொழில்நுட்ப திருட்டா ? கற்பு கொள்ளையா 🙂   இதனை விட மேலானது, மனிதனின் வாழ்வில் இன்றியமையாததாக இருக்க கூடிய நீர் வளம் மற்றும் நில வள கொள்ளையே !

 

மண் எப்படி உருவாகிறது என்று உங்களுக்கு தெரியுமா ?  

 

அதற்கு மலை உருவானது எப்படி என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

 

பூமி உருவான சமயத்தில், பூமியின் ஆழத்தில் உள்ள எரிமலை குழம்புகள் அவ்வப்போது சிறிதும், பெரிதுமாக வெடித்து கிளம்பும். பூமியின் மேற்பரப்புக்கு மேலே வெடித்து வந்து, குளிர்ந்து நிலையானதே மலையானது. பூமியின் மேற்பரப்பு வரை வெடித்து வந்து, குளிர்ந்து நிலையானதே கல்குவாரியானது – இப்போது அது வியாபாரமானது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மலையின் மேலே பட்ட மழை நீர், அதனை சிறிது சிறிதாக உருக்கி, சிறு பாறைகளாக்கி, அருவி வழியாக கூலாங்கற்களாகி, ஆற்று வழியாக மணலானது. ஆக ஒரு கைப்பிடி மண் உருவாவதற்கு பல நூறு வருடங்கள் கூட ஆகலாம். இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தில் ஒரு கைப்பிடி மண்ணை உருவாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா ?

 

அதை உலக வல்லரசுகளால் உருவாக்க முடியுமா ?

 

மழை உருவாகும் விதம் பற்றி நாம் சிறுவயது முதலே அறிந்திருந்த காரணத்தினால், இங்கு மண் வளம் பற்றி பேசியிருக்கிறோம். 

 

இதனை மனித இனம் இனி மேலாவது காப்பாற்றாமல் விட்டால், என்னவாகும் ? 

 

சமீப காலமாக, அடிக்கடி நிலச்சரிவு, சுனாமி, பூகம்பங்கள், மற்ற இயற்கை சீற்றங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றி எப்போதாவது நாம் சிந்தித்தது உண்டா ?

பூமி தன் சமநிலையை எப்போதெல்லாம் இழக்கிறதா, அப்போதெல்லாம் தனது எதிர்ப்பை மேற்கொண்ட வழிகளில் பதிவு செய்கிறது. ஆனால் மனிதனோ, அந்த சமிக்கையை புரிந்து கொள்ளாமல், ஆறு அறிவிலிருந்து ஐந்து அறிவாக மாறி, மூர்க்கத்தனமாக மேலும் மேலும் பூமியின் சமநிலையை குலைக்கின்றான். 

 

இயற்கையின் பேரழிவிற்கு முன், மனித சக்தியால் ஒன்றும் செய்ய இயலாது என்பதனை மனிதா நீ என்று உணர்வாய் !

 

மனிதா, உன் மேலாதிக்கத்திலிருந்து கீழ் இறங்கு, தான் மட்டுமே உயர்ந்தவன் என்ற எண்ணத்தை கைவிடு. பூமி அனைத்து உயிரினங்களுக்கும் உரிமையானது என்பதை உணர்த்திடு, இயற்கை வளத்தை காத்திடு. 

 

இல்லையேல், பூமி என்றொரு கோளினை நீ மறந்திடு. 

இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, எனது சிறு வயதில் டிராக்டரில் பெரிய தொட்டி வைத்து தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு குடம் தண்ணீருக்கு ஒரு ரூபாய் என எங்கள் பகுதியில் விற்பனை செய்துள்ளது. நான் யோசித்து பார்த்ததுண்டு. மக்கள் ஏன் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது என்று. ஏனென்றால் நாங்கள் இருந்த பகுதி ஊரின் வெளியே வளரும் பகுதியாக இருந்தது. அதனால் அரசாங்கத்தால் ஊராட்சி குடிநீரை வழங்க இயலவில்லை.

 

இதன் மூலம் எனக்கு தெளிவானது, ‘ வளர்ச்சி என்ற பெயரில் நகர் விரிவாக்கம் செய்யும் போது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமென்று ‘. மேலும், சிறிது காலம் கழித்து அந்த தனியார் நிறுவன குடிநீர் சேவையை என்னால் காண முடியவில்லை. நான் மகிழ்ந்தேன், தண்ணீர் விற்பனை செய்வது நின்று விட்டதென்று. ஆனால் மீண்டும் தற்போது சுத்திகரிக்கப்பட்ட நீர் என்ற போர்வையில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரை நீராலை அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதை காண முடிகிறது. ஏன், அரசாங்கம் உட்பட…

 

ஆக, குடிநீர் விற்பனை என்பது சாகாவரம் பெற்றது போல. எங்கள் பகுதியில் ஒரு சொல்லடை உண்டு. ‘ ஒருவன் விரைவாக பணக்காரனாக வேண்டுமென்றால், மூன்று வழியே எளிய வழி என கூறுவார்கள். மண், பெண் மற்றும் பொன். மண் என்றால் பூமியிலிருந்து கிடைக்கக்கூடிய இயற்கை வளங்கள். நிலக்கரி, கல்குவாரி, தண்ணீர் வியாபாரம், தோப்புகள் மற்றும் இது போன்ற மற்ற மண் சார்ந்த வளங்கள். 

 

பெண் வழி என்றால் திருமணம் செய்து பெண் வீட்டாரிடம் இருந்து வரும் சொத்துக்கள் மூலமாக. கடைசியாக பொன் என்றால் தங்கம், வைரம், மற்றும் பூமிக்கு அடியில் கிடைக்கும் விலையுர்ந்த பொருட்கள் மூலமாக. 

 

பூமியின் உயிர்நாடியான தண்ணீரை விவசாயம், மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரமாக அல்லாமல் வணிக நோக்கில் விற்பது, விதை நெல்லை விற்று உண்பதற்கு ஈடானது. இப்பொழுது யார் யாரெல்லாம் இயற்கை வளங்களை அழித்து பொருள் ஈட்டுகிறார்களோ, அவர்களெல்லாம் பின்னாட்களில் இவற்றை பெறுவதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும். 

 

இயற்கை தனி மனிதனுக்கு என்று எதையும் கொடுத்தது இல்லை. இயற்கை வளங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.  

 

 

 இன்னும் பஞ்சாயத்தை கூட்டுவோம்…

 

திரு. பா. பாண்டித்தங்கம் (வர்த்தக மதுரை தளத்திற்காக)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 8,042 கோடி

டி.சி.எஸ். நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 8,042 கோடி 

TCS Quarterly net profit to Rs. 8,042 Crore – Q2FY20

டாட்டா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை இன்று(10-10-2019) வெளியிட்டது. செப்டம்பர் மாத காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 38,977 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் 10,225 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ. 8,042 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018ம் வருட செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 7,901 கோடி ரூபாயாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது, நடப்பில் சொல்லப்பட்ட நிகர லாபம் 1.78 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனை அளவு ரூ. 36,854 கோடியாகவும், இயக்க லாபம் ரூ. 10,278 கோடியாகவும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. நடப்பு நிதி வருடத்தின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விற்பனை வருவாய் 2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

அதே வேளையில் ஜூன் மாத காலாண்டுடன் லாபத்தை ஒப்பிடும் போது, ஒரு சதவீத சரிவை சந்தித்துள்ளது. ஜூன் 2019 காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 8,131 கோடியாகும். நிறுவனத்தின் இயக்க லாப அளவு கடந்த 12 மாதங்களில் சராசரியாக 26 சதவீத  வளர்ச்சியை பெற்றுள்ளது.

டி.சி.எஸ். நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 45 ரூபாய் ஈவு தொகை(Dividend) வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போதைய தேதியில் இந்த நிறுவனத்தின் பங்கு 2005 ரூபாயில் வர்த்தகமாகி உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 4 சதவீத சரிவையும், ஒரு மாதத்தில் 8 சதவீத சரிவையும் சந்தித்துள்ளது.

ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் பங்கு விலை 50 சதவீதம் மற்றும் பத்து வருட காலத்தில் 614 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்.(Tata Consultancy Services) சந்தை மதிப்பு ரூ. 7.52 லட்சம் கோடியாக உள்ளது.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடந்த பத்து வருடங்களில் விற்பனை சராசரி அளவு 18 சதவீதமாக உள்ளது. லாப வளர்ச்சியும் பத்து வருடங்களில் சராசரியாக 20 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது – சர்வதேச நாணய நிதியம்

உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது – சர்வதேச நாணய நிதியம் 

Worldwide Economy Slowdown seen – IMF

தற்போது உலகெங்கும் ஒருவித பொருளாதாரம் சார்ந்த மந்த நிலை தென்படுகிறது. இது திடீரென ஏற்பட்டதல்ல, கடந்த இரண்டு வருட காலமாகவே காணப்பட்டு வரும் மந்த நிலை தான். சீன-அமெரிக்க வர்த்தக போரில் துவங்கி, உள்நாட்டில் ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனம் நிதி சிக்கலில் வெளிப்பட, தற்போது ஒவ்வொரு நாட்டிலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

 

2008ம் ஆண்டுக்கு பிறகு, மற்றுமொரு பொருளாதார வீழ்ச்சி நடப்பில் ஏற்படுமா என்ற கேள்வி பலரிடம் எழும்பியுள்ளது. உலகமயமாக்கல் வந்த பிறகு, ஒவ்வொரு நாடும் வளர்ச்சி பாதையில் சென்றிருப்பினும், வெவ்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனை மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து வருவது இயல்பு.

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம்(International Monetary Fund) சார்பில் உலக பொருளாதாரம் சார்ந்த சில விஷயங்களும், அதற்கான ஆய்வுகளும் பேசப்பட்டன. நடப்பு 2019ம் ஆண்டில் உலகின் கிட்டத்தட்ட 90 சதவீத நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிகக்குறைவாகவே இருக்கும் என கூறியுள்ளது. இதன் தாக்கம் 2020ம் வருடத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

 

நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போரால், 2020ம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 700 பில்லியன் டாலர்கள் அளவு சரிவு ஏற்படும் எனவும் கூறியுள்ளது. இது உலக பொருளாதார வளர்ச்சியில் 0.8 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

 

இதன் விளைவாக ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு, கடந்த சில வருடங்களில் காணாத மிக குறைவான விகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சொல்லப்பட்டுள்ள உலக பொருளாதாரம், ஒரு ஒத்திசைக்கப்பட்ட பொருளாதார மந்த நிலையாக உள்ளது. இதனை சரி செய்ய ஒவ்வொரு நாடும் பரஸ்பர புரிந்துணர்வு மூலமே தீர்வை பெற முடியும். 

 

கடந்த முறை ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை விட, இம்முறை ஏற்பட்டுள்ள மந்த நிலை நீடித்த காலமாக சொல்லப்படுகிறது. உள்நாட்டில் நுகர்வு தேவையை(Consumption Demand) அதிகரித்தால் மட்டுமே, பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில் சரிக்கட்ட முடியும். 

 

நடப்பு காலாண்டு (அக்டோபர்-டிசம்பர்) நுகர்வு மற்றும் விற்பனை அளவு, உள்நாட்டை பொறுத்தவரை மிகவும் கவனிக்கக்கூடிய காரணிகளாகும். 2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாயை பெருக்க கூடிய காலண்டாகவும் இது பார்க்க முடிகிறது. இவற்றில் சரிவு ஏற்படும் நிலையில், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், நாட்டின் நிதி பற்றாக்குறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

யெஸ் பேங்க் – மீண்டும் ஏற்றம் பெறுமா ?

யெஸ் பேங்க் – மீண்டும் ஏற்றம் பெறுமா ?

Yes Bank – Getting the Boom Again ?

தனியார் வங்கியான, ‘யெஸ் பேங்க்(YES Bank)’ – பிரமிப்பான வளர்ச்சி முதல் பிரச்சனை வரை என யெஸ் வங்கியின் குறுகிய கால வரலாற்றை நமது தளத்தில் ஏற்கனவே சொல்லியிருந்தோம். யெஸ் வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கி(HDFC) போல வளர்ச்சியடையுமா என பல முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் வீழ்ச்சி பெரும்பாலும் வங்கி நிர்வாக சிக்கலில் தான் முடிந்தது.

அதன் நிறுவனர் திரு. ராணா கபூர் வங்கியை பற்றி கூறுகையில், ‘ இங்கே(Yes Bank) வைரங்கள் எப்போதும் உள்ளன. என்னுடைய ஒரு பங்கினை கூட நான் விற்க போவதில்லை ‘ என்று கூறியிருந்தார். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. தனது பங்குகளை விற்று விட்டார் ராணா கபூர். தான் அடமானம் வைத்த பங்குகளை, பரஸ்பர நிதி நிறுவனங்களும் விற்று விட்டன.

வங்கியை செயலாற்ற தேவையான முதலீட்டை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது யெஸ் வங்கி. வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் யெஸ் வங்கி முன்னிலை வகிக்க, அதன் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 80 சதவீத இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு சதவீதத்திற்கும் கீழான வாராக்கடனை(Gross NPA) கொண்டிருந்த இந்த வங்கி, நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டு முடிவில் மொத்த வாராக்கடன் அளவு 5 சதவீதத்தை தாண்டியுள்ளது. நிறுவனத்தின் லாப அளவிலும் கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீத இழப்பை கொண்டுள்ளது.

யெஸ் வங்கியின் பங்கு மலிவான விலையில் தற்போது கிடைக்கப்பெற்றாலும், நிதிச்சிக்கலில் இருந்து மீட்கப்பட்டு, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பினால் மட்டுமே, அது மலிவான விலையில் முதலீடாக கருதப்படும். இருப்பினும், தற்போதைய நிலையில் சிறு முதலீட்டாளர்கள் இந்த பங்கினை வாங்கி குவித்து வருகின்றனர்.

வங்கியில் நிறுவனர்களின் பங்களிப்பு குறைவு, நிறுவனர்களின் பங்கு அடமானம்(Pledging), குறைவான வட்டி பாதுகாப்பு விகிதம்(Low ICR) மற்றும் வாராக்கடன் அளவு அதிகரித்து வருவது ஆகியவை யெஸ் வங்கியின் செயல்பாட்டை பாதித்துள்ளது. வங்கியின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 12.50 ஆக உள்ளது. நிப்டி50(Nifty50) ல் இருக்கும் இந்த பங்கு, ஒரு ஸ்மால் கேப்(Small Cap) பங்குகளை போன்று தற்போது விலையில் காணப்படுகிறது.

சமீபத்தில் இந்த பங்கின் விலை குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது, நிறுவனர்கள் தங்கள் பங்குகளை விற்றதால் எனவும், இடைப்பட்ட நாட்களில் சில ஏற்றத்தை பெற்றதற்கு, மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த வங்கியில் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், யெஸ் வங்கியின் குறிப்பிட்ட பங்குகளை வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது.

எப்படி இருப்பினும் யெஸ் வங்கிக்கு தற்போதைய தேவை, கணிசமான முதலீடு மட்டுமே, ஊடக செய்திகள் அல்ல. முதலீடு இருக்கும் பட்சத்தில், இது தனது பழைய வளர்ச்சி பாதையை நோக்கி பயணம் செய்ய பல காலாண்டுகள் பிடிக்கலாம். சத்யம் நிறுவனம் மீட்டெடுக்கப்பட்டதை போல, யெஸ் வங்கி மீட்டெடுக்கப்படுமா மற்றும் முதலீட்டாளர்களுக்கு பயனை கொடுக்குமா என்பதனை பொறுத்திருந்து ஆராய்வோம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அப்போ ‘பேர்ல் வைன்’, இப்போ ‘கோல்டு வைன்’ – அடுத்த சதுரங்க வேட்டை

அப்போ ‘பேர்ல் வைன்’, இப்போ ‘கோல்டு வைன்’ – அடுத்த சதுரங்க வேட்டை  

MLM Scam Alert – Goldvine World

திட்டம் இது தான் – நீங்கள் இந்த திட்டத்தில் 20 டாலர்கள் மட்டும் முதலீடு செய்தால் போதும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1440/- மட்டுமே முதலீடு செய்த மூன்று மாதங்களில் 23 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதை விட பெரிய வாய்ப்பு, நீங்கள் மூன்று வருடங்களில் 37 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். மேலும் 744 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படுகின்றன. உங்களுடைய முதலீடு வெறும் 20 டாலர்கள்.

நீங்கள் எந்தவொரு பொருட்களையும் இங்கே விற்க தேவையில்லை. மற்றவர்களுக்கு நீங்கள் இந்த வாய்ப்பை (ஆள் சேர்ப்பது) அளித்தால் போதும். உங்களுக்கான வருவாய் எளிதாகி நீங்கள் விரைவில் கோடீஸ்வரராகலாம். என்ன ரெடியா ?

முன்னர் ‘பிட்காயின்(Bitcoin)’ என்று சொல்லப்படும் கிரிப்டோ நாணயத்தை அடிப்படையாக கொண்டு ‘பேர்ல் வைன் (Pearlvine)’ என்ற திட்டம் வந்தது. தற்போது இதனை போலவே, ‘கோல்டுவைன்(Goldvine)’ என்றொரு புதிய திட்டம் வந்துள்ளது. கோல்டுவைன் என்பது ஒரு நிறுவனம் அல்ல எனவும், அது ஒரு தானியங்கியாக செயல்படும் மென்பொருள் எனவும் குறிப்பிட்ட இணையதளம் சொல்கிறது. இந்த தானியங்கி மென்பொருளில் முதலீடு செய்யும் அனைவரும் கோல்டுவைனின் முதலாளிகள் எனவும் விவரிக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கோல்டுவைன் மென்பொருள் மூலம் முதலீடு செய்யும் ஒருவருக்கு, ‘OneMato’ எனப்படும் டிவிடெண்ட் (ஈவுத்தொகை) யூனிட்கள் ஒதுக்கப்படும் எனவும், அந்த யூனிட்களை அவர் எப்போது வேண்டுமானாலும் விற்று விடலாம் எனவும் சொல்லப்படுகிறது. கோல்டுவைனில் ஒருவர் எந்தவொரு பொருட்களையும் விற்க தேவையில்லை என அத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூறுகின்றனர். முதலீடுகள் அனைத்தும் இணைய வழியே, அதற்கான ஆவணங்கள் மற்றும் கிளைகள் என்று எதுவுமில்லை.

‘பல்லேடியம்(Palladium)’ என்ற தரவரிசையில் 20 டாலர்களை மட்டும் முதலீடு செய்து, ‘கோல்டு’ என்று சொல்லப்படும் வரிசை மூலம் குறுகிய காலத்தில் 744 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என சொல்கின்றனர். இந்த திட்டத்தில் மற்றவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களையும் 20 டாலர்கள் முதலீட்டை மேற்கொள்ள செய்தால் போதும், வருவாய் ஈட்ட முடியும் என்கின்றனர். சொல்லப்பட்ட இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்ட நபர்களுக்கும், அவர்களின் புகைப்படங்களுக்கும்(Fake Team – Stealing People’s Identity) சம்மந்தமில்லை என்று மற்றொரு தளம் எச்சரிக்கிறது.

வருங்காலத்தில் மெய்நிகர் நாணயங்கள்(Cryptocurrency) உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொன்னாலும், நம் நாட்டில் தற்போதைய நிலையில் அது தடை செய்யப்பட்டதே. நிதி நிர்வாகத்தில் இருக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தால் இன்னும், மெய்நிகர் நாணயம் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியாத நிலையில், இதனை சார்ந்த சதுரங்க வேட்டை தளங்கள் இந்தியாவில் வளம் வந்த வண்ணம் உள்ளன. எந்தவொரு தொழிலும் விற்பனையை சார்ந்தே உள்ளன. அப்படியென்றால் விற்பனைக்கு ஒரு பொருளோ அல்லது சேவையோ இருக்க வேண்டும். வெறும் ஆட்களை சேர்ப்பதை கொண்டு ஒரு தொழில் வளர்ச்சி பெற்று விடாது. மல்டி லெவல் மார்க்கெட்டிங்(MLM) என சொல்லிக்கொண்டு, நம்மை போன்ற வளரும் நாடுகளில் பல ஏமாற்று மோசடி திட்டங்கள் வந்தும், காணாமல் போய்விட்டன. அந்த திட்டத்தை செயல்படுத்தியவரும், முதலீடு செய்தவர்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடுவதும் சாதாரணமான விஷயமாகி மாறி விட்டது.

அரசு நிர்வகிக்கும் பங்குச்சந்தை, பொருட்சந்தை(Commodity Exchange) மற்றும் நாணய சந்தையை(Currency Exchange) பற்றி நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டிருப்பதாக சொல்லப்படும் கோல்டுவைன் போன்ற செயல்முறையை நம்மால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். பணம் மட்டுமே ஒருவருக்கு தேவையெனினும் பணம் சார்ந்த பேராசை மட்டுமே இருப்பது ஆரோக்கியமானதல்ல.

அமெரிக்காவில் மேலே சொல்லப்பட்ட மூன்று சந்தைகளிலும் அவர்களது பங்கு மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் மேல். அதுவே நம் நாட்டில் 10 சதவீதத்திற்கும் கீழாக உள்ளது. நிதி சார்ந்த திட்டத்திலும், அதனை சார்ந்த முதலீடுகளையும் நாம் சரியாக புரிந்து கொள்வதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது. வங்கி, காப்பீடு, பரஸ்பர நிதிகள், நிதிச்சந்தைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்றவற்றில் உள்ள நிறை குறைகளை நாம் புரிந்து கொள்வதே சற்று சிக்கலான விஷயமாக உள்ளன. அப்படியிருக்கும் போது, வெறும் ஆட்களை சேர்க்கும் திட்டமாக சொல்லப்படும் இது போன்ற விஷயங்களில் ஒருவர் கவனமாக இருப்பது அவசியம்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் அல்லது நெட்ஒர்க் மார்க்கெட்டிங்(Network Marketing) துறைக்கு ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறான விதிமுறைகள் உள்ளன. இந்த துறை பொதுவாக பொருட்களை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களிடம் நேரிடையாக விற்க முடிவெடுக்கிறது. இதற்கு தேவையான நபர்களை, விற்பனையாளராக தேர்ந்தெடுத்து நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்கிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல், ஒரு பொருள் அல்லது சேவையை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

ஆனால், பொருளோ அல்லது சேவையோ இல்லாமல் ஆட்களை சேர்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம், கோடீஸ்வரர் ஆகலாம் எனில், அது ஒரு மோசடியே. ஒருவரால் குறைந்த பணத்தில், எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளாமல், விற்பனை வளர்ச்சி இல்லாமல் உடனடியாக பணம் சம்பாதிக்க முடியுமா ? அப்படி ஒரு திட்டம் உண்மையென்றால், ஏன் அம்பானியும், அதானியும் மாபெரும் கட்டிடங்களை எழுப்பி, வேலையாட்களை கொண்டு பேரம் பேசி தொழில் செய்ய வேண்டும்.  

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இன்னும் பி.ஏ.சி.எல்.(PACL) நிறுவன பிரச்சனை தீர்வு காணப்படவில்லை. இது போன்ற மோசடிகள் ஏராளம். சதுரங்க வேட்டை முதலாளிகளுக்கும், கோடீஸ்வரர்களுக்குமானதல்ல… அதன் இலக்கு குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்களுக்கு !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?

Repo Rate cut to 5.15 Percent – RBI Policy – Does the bank cut the rates for its Customers ?

2019-20ம் நிதியாண்டின் மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee) சார்பிலான நான்காவது கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. மூன்று நாட்களாக நடந்த கூட்டத்தில், வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) நேற்று 5.15 சதவீதமாக சொல்லப்பட்டது.

மத்திய நிதிக்கொள்கை குழுவில் பங்கேற்ற ஆறு உறுப்பினர்களும் வட்டி விகித குறைப்புக்கு ஆதரித்து வாக்களித்தனர். நாட்டின் பணவீக்கம் மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதம் என்ற அளவிற்குள் உள்ளதால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் 4.90 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது. வங்கி வட்டி விகிதம்(Bank Rate) 5.40 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவும் மற்றும் எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

வங்கி கடன் மற்றும் வைப்புக்கான அடிப்படை விகிதம் 8.95 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 6.25 % – 7.00 % என்ற அளவில் உள்ளது. சேமிப்புக்கணக்குக்கான வட்டி 3.25 % – 3.50 % இருக்கிறது.

பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) முன்னர் சொல்லப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகும். ஆனால் தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 6.1 சதவீதமாக குறைத்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாகவும், இரண்டாம் அரையாண்டில் இது 6.6 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதத்திற்குள் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைந்திருப்பினும், இதனை வங்கிகள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு அளித்தால் மட்டுமே, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிய வளர்ச்சியை பெறாவிட்டாலும், மூன்றாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க கூடும். நிறுவனங்களுக்கான வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் லாபம் மற்றும் தொழில் விரிவாக்கமும் நடைபெறும். தற்போது சொல்லப்பட்ட ரெப்போ வட்டி விகித குறைப்பு, வாடிக்கையாளர்களிடம் சரியாக செல்லும் போது நுகர்வு தன்மையும்(Consumption) அதிகரிக்கும். நிறுவனம் கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி விகிதமும் குறையும் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானது.

டெக் மஹிந்திரா(Tech Mahindra) நிறுவன தலைவர் குர்னானி கூறும் போது, ‘ பல நாடுகளில் மிகக்குறைந்த வட்டி விகிதம் அல்லது வட்டியில்லா கடன் எனும் இலக்கை நோக்கி செல்லும் நிலையில், தற்போது சொல்லப்பட்ட ரெப்போ விகித குறைப்பு போதுமானதாக தெரியவில்லை ‘ என கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகித பலனை அளிப்பதில்லை. சமீபத்தில் ரெப்போ விகித இணைப்பிலான வங்கி வட்டி(Repo Rate Linked Loans) விகிதத்தை அளிக்கும் படி, பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை அனைத்து வங்கிகளும் நடைமுறையில் கொண்டு வரும் பட்சத்தில், அது வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019

Small Savings Scheme Interest rates for the Period – October to December 2019

அஞ்சலக மற்றும் வங்கிகளின் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலத்திற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்திருப்பினும், குறைந்த பணவீக்கம் காணப்படும் நிலையில், பி.எப்.(Provident Fund) போன்ற சேமிப்புக்கு வட்டி விகிதம் நன்றாக உள்ளன.

கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கு சொல்லப்பட்ட வட்டி விகிதம் தான் தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அக்டோபர் – டிசம்பர் காலாண்டிற்கு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், தற்போதைய பொருளாதார மந்த நிலையில் இது ஒரு நல்ல வட்டி விகிதமே.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond Yield) வட்டி விகிதம் அதிகரிக்கும். இதே போல, வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமாகும் போது கடன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். இப்போதைய சூழ்நிலையில், வங்கி வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Debt Funds) மூலம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதன் வாயிலாக பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாயை பெறலாம்.

வங்கிகள் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் சற்று சாதகமாக உள்ளன. அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு 5 வருட டேர்ம் டெபாசிட் திட்டத்திற்கு 7.70 சதவீதமும், 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.60 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

Small Savings Interest rate October 2019

தேசிய சேமிப்பு பத்திரம்(National Savings Certificate) ஐந்து வருட கால அளவிற்கு 7.90 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.90 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பி.எப். பிடித்தம் உள்ளது. இதனை போன்ற சேமிப்பு வாய்ப்பு இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

பி.பி.எப்.(Public Provident Fund) திட்டத்தில் முதலீடு செய்யும் போது, வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வருமான வரி சலுகையும் உண்டு. அதே போல், இதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டி வருவாய் மற்றும் முதிர்வு தொகைக்கும் வரி இல்லை என்பது சாதகமான விஷயம். 

செல்வமகள் சேமிப்பு(Sukanya Samriddhi) திட்டத்தில் 8.40 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.60 சதவீத வட்டியும் கூறப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு தேவையான ஒரு வருட டெபாசிட் செய்யும் பட்சத்தில், அதற்கான வட்டி விகிதம் 6.90 சதவீதமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com