Tag Archives: tcs

டாட்டா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன ?

டாட்டா குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்ன ?

Market Capitalization of Tata Group of Companies 

புதிய தொழில்முனைவு புகுதலும், பழையன கழிதலுமாக இருந்தாலும், தொழில்களில் நெறிமுறைகளை ஏற்படுத்தி நீண்டகாலம் பின்பற்றுபவர்கள் சிலரே. அப்படிப்பட்டவர்கள் சிறந்த தொழிலதிபர்களாகவும், மாபெரும் பணக்காரர்களாகவும் உருவெடுக்கின்றனர். உலக பணக்காரர்கள் வரிசையில் உள்ளவர்களின் மதிப்பு என்னவோ முதலீட்டாளர்களை உள்ளடக்கிய (நம்மையும் சேர்த்து) சொத்து மதிப்பாக தான் சொல்லப்படுகிறது. உண்மையில் உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்த நபரிடம் உள்ள மதிப்பு அவருடைய சொந்த மதிப்பாக இருப்பதில்லை.

ஆம், அவருடைய நிறுவனத்தின் சந்தை மதிப்பாக தான் உள்ளது. நாம் நினைப்பது போல சந்தை மதிப்பை அவ்வளவு எளிதாக அடைந்து விட முடியாது. அப்படியே பெருமளவிலான சந்தை மதிப்பை பெற்றிருந்தாலும் அதனை பல வருடங்களுக்கு தக்க வைப்பது சவாலான விஷயம் தான். ஒவ்வொரு நாட்டின் அரசுக்கு மக்களின் வரி பணம் எப்படி தேவையோ, அது போல மக்களின் நம்பிக்கையும், முதலீடும் சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தேவை.

பாரம்பரிய தொழிலாக இருந்தாலும், நாணயமாக நீண்டகாலம் தொழில் செய்யும் நிறுவனங்களை தான் சந்தை வரவேற்கிறது. புதிய சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு எளிமையான ஸ்டார்ட் அப் நிறுவனமாக வலம் வந்தாலும், மக்களுக்கு அளிக்கப்படும் சேவை சிறப்பாக இருக்கும் நிலையில் சந்தை அதனை வரவேற்க தயங்குவதில்லை.

ஒவ்வொரு வருடமும் துவங்கப்படும் நிறுவனங்கள் பல, அதனை காட்டிலும் மூடப்படும் தொழில்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக தான் உள்ளது. இதற்கான காரணங்கள் பலவாக இருந்தாலும், நெறிமுறைகளை வகுத்து தொழில் புரிபவர்களை நுகர்வோர் சந்தை எப்போதும் எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் நீண்டகாலம் தொழில் புரியும் நிறுவனங்கள் என்றால், மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கை அதிகம். அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் டாட்டா குழுமம்(Tata Group).

1868ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் தான் டாட்டா எனும் தனியார் நிறுவனம். இன்று லட்சங்களில் பணியாளர்களையும், பில்லியன் டாலர்களில் வருவாயையும் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் கால்பதித்த இந்த குழுமத்தின் நிறுவனங்கள் டாட்டா என்ற பிராண்டுடன்(Brand) பெயரை குறிக்கும். உலகளவில் பல நிறுவனங்களை கையகப்படுத்தலும் டாட்டா குழுமத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்திய தொழிற்துறையில் டாட்டா என்ற பெயரை கொண்டிருக்காமல் பல நிறுவனங்கள் டாட்டா குழுமத்திற்கு சொந்தமாக உள்ளன.

பங்குச்சந்தையில் டாட்டா குழும நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தையின் முக்கிய குறியீடுகளில்(Index) தவிர்க்க முடியாத இடத்தை டாட்டா குழும நிறுவனங்கள் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சில டாட்டா குழும நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பை காண்போம்.

நவம்பர் 26ம் தேதியின் படி (ரூபாய் மதிப்பில்),

  • டி.சி.எஸ்.(Tata Consultancy Services) –  10.21 லட்சம் கோடி
  • டைட்டன் கம்பெனி – 1.18 லட்சம் கோடி
  • டாட்டா ஸ்டீல் – 65,000 கோடி
  • இன்டெர்குளோப் (இண்டிகோ) – 59,500 கோடி
  • டாட்டா மோட்டார்ஸ் – 58,000 கோடி 
  • டாட்டா கன்ஸ்யூமர் – 48,000 கோடி
  • டாடா கம்யூனிகேஷன்ஸ் – 30,500 கோடி
  • வோல்டாஸ் – 25,500 கோடி
  • ட்ரென்ட் லிமிடெட் – 25,200 கோடி
  • டாட்டா பவர் – 20,000 கோடி 
  • இந்தியன் ஹோட்டல்ஸ் – 13,400 கோடி
  • டாட்டா கெமிக்கல்ஸ் – 9,800 கோடி
  • டாட்டா எல்எக்ஸி – 9,400 கோடி
  • டாட்டா இன்வெஸ்ட்மென்ட் – 4,700 கோடி 
  • டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் – 3,800 கோடி 
  • டாட்டா ஸ்டீல் லாங் (Sponge Iron) – 2,000 கோடி 
  • டாட்டா காபி – 1,900 கோடி
  • டாட்டா மெட்டாலிக்ஸ் – 1,600 கோடி 
  • டின்பிளேட்(Tinplate) கம்பெனி – 1,500 கோடி
  • தாஜ் GVK – 900 கோடி
  • நெல்கோ – 425 கோடி

இன்னும் இங்கு சொல்லப்படாத நிறுவனங்களும் சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இந்திய பங்குச்சந்தையில், சந்தை மதிப்பு அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ரூ.12.83 லட்சம் கோடி) முதலிடத்தில் இருந்தாலும், ஒட்டுமொத்த சந்தை மதிப்பில் கணிசமான பங்களிப்பை டாட்டா குழுமம் மட்டுமே கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய்

டி.சி.எஸ். நிறுவன பங்குகளை திரும்பப்பெறும் விலை ரூ.3000, டிவிடெண்ட் 12 ரூபாய் 

Buyback Price of Rs.3000 and Rs.12 Dividend per Share – TCS Q2FY21 Results

இந்திய தொழில்நுட்ப துறையில் முதன்மையாக விளங்கும் நிறுவனம், டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ்.(TCS) நிறுவனம். இதன் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி. பில்லியன் டாலர் வருமானத்தை கொண்டிருக்கும் இந்நிறுவனம் சுமார் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 46 நாடுகளில் தனது சேவையை அளித்து வருகிறது.

சந்தை மதிப்பிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் மிகப்பெரிய இந்திய நிறுவனமாக டி.சி.எஸ். உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான டாட்டா சன்ஸ் 72 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.(LIC India) நான்கு சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 40,135 கோடி ரூபாயாகவும், செலவினம் 28,622 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,037 கோடியாகவும், இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ.7,475 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது.

முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் காலாண்டின் வருவாய் 5 சதவீதமும், நிகர லாபம் 6 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் முந்தைய செப்டம்பர் (2019-20) காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தாலும், நிகர லாப அடிப்படையில் 7 சதவீத வளர்ச்சி குறைந்துள்ளது.

நேற்றைய காலாண்டு முடிவு அறிவிப்பில் முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை திரும்பப்பெறும் முறையில்(Buyback of Shares) 16,000 கோடி ரூபாயை டி.சி.எஸ். நிறுவனம் செலவிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 5.33 கோடி பங்குகளை, பங்கு ஒன்றுக்கு ரூ.3000 என்ற விலையில் நிறுவனம் திரும்பப்பெற உள்ளது. இதன் மதிப்பு ரூ.16,000 கோடி எனவும், மொத்த பங்குகளில் இதன் பங்களிப்பு 1.42 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

டி.சி.எஸ். நிறுவன பங்களிப்பில், 72 சதவீத பங்குகள் நிறுவனர்களிடம் உள்ளது. 16 சதவீத பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும், 8 சதவீத பங்குகள் உள்நாட்டு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமும் உள்ளது. சிறு முதலீட்டாளர்களிடம்(Resident individual and others) வெறும் 3.3 சதவீத பங்குகள் தான் கையிருப்பாக உள்ளது. அதாவது 8.98 லட்சம் சிறு முதலீட்டாளர்களிடம் 12.5 கோடி பங்குகள் உள்ளது.

மேலும் இரண்டாம் காலாண்டுக்கான டிவிடெண்ட் தொகையையும் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்கு ஒன்றுக்கு ரூ.12 என ஈவுத்தொகையை சொல்லியுள்ளது. அதற்கான பதிவு நாள்: அக்டோபர் 15,2020.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

விப்ரோ & டி.சி.எஸ். நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் – மார்ச் 2020

விப்ரோ & டி.சி.எஸ். நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் – மார்ச் 2020

Quarterly Results of Wipro and TCS – Q4FY20

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு மற்றும் முழு ஆண்டுக்கான நிறுவனங்களின் நிதி அறிக்கை முடிவுகள் நடப்பு மாதம் முதல் வெளியிடப்படும். ஆரம்ப நிலையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் காலாண்டு முடிவுகளை வெளியிடும். விப்ரோ மற்றும் டி.சி.எஸ். நிறுவனங்கள் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வருவாயாக ரூ. 15,750 கோடியை கொண்டுள்ளது விப்ரோ நிறுவனம். செலவினம் ரூ. 12,631 கோடியாகவும், இதர வருமானமாக 591 கோடி ரூபாயாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 2,966 கோடி மற்றும் நிகர லாபம்(Net Profit) ரூ. 2,326 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் மார்ச் காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் அதிகமாகும். அதே வேளையில் நிகர லாபம் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 6.50 சதவீதமும், பத்து வருட கால அளவில் 9 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி(Profit Growth) ஐந்து வருடங்களில் 3 சதவீதமும், பத்து வருடங்களில் 9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது கவனிக்கத்தக்கது. பங்கு மீதான வருவாய்(ROE) 5 வருடங்களில் 18.75 சதவீதமும், 10 வருட கால அளவில் 21 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும், இதன் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 34 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் விப்ரோ நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 54,179 கோடியாக உள்ளது. பணவரத்தும், புதிய சொத்துக்களை வாங்குவதும் நடைபெற்று வந்துள்ளது. இந்த பங்கில் நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி.சி.எஸ். (TCS) Q4FY20:

டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான டி.சி.எஸ். நிறுவனம் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. மார்ச் 2020ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 39,946 கோடியாகவும், செலவினம் ரூ. 28,970 கோடியாகவும் உள்ளது. இதர வருமானமாக 738 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,512 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 8,049 கோடியாகும். காலாண்டின் முடிவில் ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) ரூ. 21.45 ஆக உள்ளது. விற்பனை வளர்ச்சி(Compounded Sales Growth) கடந்த ஐந்து வருடங்களில் 12.35 சதவீதமும், 10 வருட காலத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி ஐந்து வருட காலத்தில் 10.55 சதவீதம் மற்றும் 10 வருடங்களில் 20 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த 5 வருடங்களில் 35 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 37 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் கையிருப்பு மார்ச் 2020ம் நிதியாண்டின் முடிவில் ரூ. 83,751 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட இரு நிறுவனங்கள் அடுத்த காலாண்டுக்கான வருவாய் திட்டமிடலை(Guidance) பெரிதாக சொல்லவில்லை.

2019-20ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் ஓரளவு வருவாயை பெற்று தந்தாலும், வரவிருக்கும் காலாண்டுகள் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கக்கூடும். நடப்பு ஏப்ரல் மாத ஊரடங்கு அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சியை பாதிக்கும். பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் காலமாகவும் ஏப்ரல் – ஜூன் (FY21) காலாண்டு பார்க்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 8,042 கோடி

டி.சி.எஸ். நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 8,042 கோடி 

TCS Quarterly net profit to Rs. 8,042 Crore – Q2FY20

டாட்டா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை இன்று(10-10-2019) வெளியிட்டது. செப்டம்பர் மாத காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 38,977 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் 10,225 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ. 8,042 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018ம் வருட செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 7,901 கோடி ரூபாயாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது, நடப்பில் சொல்லப்பட்ட நிகர லாபம் 1.78 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனை அளவு ரூ. 36,854 கோடியாகவும், இயக்க லாபம் ரூ. 10,278 கோடியாகவும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. நடப்பு நிதி வருடத்தின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விற்பனை வருவாய் 2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

அதே வேளையில் ஜூன் மாத காலாண்டுடன் லாபத்தை ஒப்பிடும் போது, ஒரு சதவீத சரிவை சந்தித்துள்ளது. ஜூன் 2019 காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 8,131 கோடியாகும். நிறுவனத்தின் இயக்க லாப அளவு கடந்த 12 மாதங்களில் சராசரியாக 26 சதவீத  வளர்ச்சியை பெற்றுள்ளது.

டி.சி.எஸ். நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 45 ரூபாய் ஈவு தொகை(Dividend) வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போதைய தேதியில் இந்த நிறுவனத்தின் பங்கு 2005 ரூபாயில் வர்த்தகமாகி உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 4 சதவீத சரிவையும், ஒரு மாதத்தில் 8 சதவீத சரிவையும் சந்தித்துள்ளது.

ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் பங்கு விலை 50 சதவீதம் மற்றும் பத்து வருட காலத்தில் 614 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்.(Tata Consultancy Services) சந்தை மதிப்பு ரூ. 7.52 லட்சம் கோடியாக உள்ளது.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடந்த பத்து வருடங்களில் விற்பனை சராசரி அளவு 18 சதவீதமாக உள்ளது. லாப வளர்ச்சியும் பத்து வருடங்களில் சராசரியாக 20 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனம் – TCS

பங்குச்சந்தையில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனம் – TCS

India’s First 100 Billion Dollar Company on Market Cap – TCS

 

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான  டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) சமீபத்தில் தான் தனது  2017 ம் வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. காலாண்டு முடிவில் நிறுவனம் லாபமாக ஈட்டிய தொகை ரூ. 6904 கோடி.

 

இதனை தொடர்ந்து TCS நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு லாபத்தின் ஒரு பகுதியாக ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும் அறிவித்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் நேற்று ஒரு முக்கியமான நிகழ்வை ஏற்படுத்தியது.

 

பங்குச்சந்தையில் திரட்டப்படும் Market Capitalisation என்று சொல்லப்படும் சந்தை மூலதனத்தில் 1000 கோடி டாலரை(1000 Crore US Dollar) கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் படைத்தது. உலகளவில் முதல் இடத்தில் ஆப்பிள் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனம்  87,700 கோடி டாலர் மதிப்புடையதாகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்த நிறுவனம் 6 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தில் நிலைபெற்று, வார நாள் இறுதியில் 990 கோடி டாலருக்கு சற்று மேலாக முடிவடைந்தது. இந்நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனமாக மாறியது.

 

TCS நிறுவனம் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் மட்டுமல்லாமல், நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகவும், அதன் கிளைகள் 46 நாடுகளிலும் பரவியிருக்கிறது. நிறுவனத்தின் மரியாதைக்கு ஏற்ப பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 35 % பெண் ஊழியர்கள் இருப்பதும் இந்த நிறுவனத்திற்கு பெருமைக்குரியதாகும்.

 

டாடா குழுமத்தின் லாபத்தில் 85 % பங்கு TCS நிறுவனத்தின் மூலம் கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது. TCS நிறுவனம் உலகின் முதல் 100 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாகவும், தற்போது 97 வது இடத்திலும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை

TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை

1:1 Bonus issue for TCS Shareholders approved by Board

 

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) தனது 2017 ம் நிதி வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று (19-04-2018) வெளியிட்டது. கடந்த ஜனவரி-மார்ச் காலத்தில் நிறுவனம் லாபமாக ரூ. 6904 கோடியை சம்பாதித்துள்ளது.

 

TCS நிறுவனம் அதன் முந்தைய காலத்தில் (Oct-Dec’ 2017) ஈட்டிய லாபம் ரூ. 6620 கோடியாகும். இதனை ஒப்பிடும் போது, தற்போதைய முடிவுகளின் லாபம் 4.50 % வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த வருமானம் நான்காம் காலாண்டில் ரூ. 32,075 கோடியாகவும், இது ஆண்டுக்கு(கடந்த வருட காலாண்டு)  8.2 % வளர்ச்சியாகவும் உள்ளது.

 

அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 3.93 % இருந்ததாகவும், ஜூலை-செப்டம்பர் மாத காலத்தில் இது 4.29 % இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

 

லாபத்தின் பங்காக நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு: ஒரு பங்குக்கு ரூ. 29 /- (Final Dividend) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும்(Bonus Issue Ratio 1:1) சொல்லப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நிலவிய தேவைகள் மற்றும் நிறுவனத்தின் ஒப்பந்த பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெற்றிகள் போன்றவை நான்காவது காலாண்டு முடிவை ஒரு சிறப்பானதாக மாற்றியது எனவும் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

காலாண்டு முடிவுகள் நேர்மறையாக இருந்ததை தொடர்ந்து இன்றைய பங்கு சந்தையில் TCS நிறுவனத்தின் பங்கு 1 % ஏற்றத்தில் முடிவடைந்தது. TCS நிறுவனம் 1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிலான சொத்துக்களை நிர்வகிக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com