Tag Archives: financial crisis

கொரோனா வைரஸ் – பொருளாதார மந்தநிலை – பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் ?

கொரோனா வைரஸ் – பொருளாதார மந்தநிலை – பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் ?

Covid-19 – Financial Crisis – Global Stock Market Crash – When will it end ?

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளின் விலையும், அதன் அடிப்படை பகுப்பாய்வும்(Fundamental Analysis) ஒத்துப்போகவில்லை. நிறுவனங்களின் வருவாய் குறைந்து வந்ததும், அதற்கு நேரெதிராக பங்குகளின் விலை உச்சத்தில் இருந்ததையும் நாம் காண முடிந்தது. பல வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பங்குச்சந்தை குறியீடுகள் எங்கோ செல்ல போகிறது என்ற மாயை ஊடகத்தின் மூலம் செய்திகளை ஏற்படுத்தியது.

ஆனால், உண்மையில் அடிப்படை பகுப்பாய்வு கூறுகளை நிறைவு செய்யாத பங்கு வர்த்தகம் வெகுநாள் ஏற்றத்தில் நீடிப்பதில்லை. இதனை தான் நாம் சொல்லி கொண்டிருந்தோம். உச்சத்தில் பல பங்குகளை வாங்குமாறு தரகு நிறுவனங்களும், ஊடகங்களும் போட்டி போட்டு சொல்லி கொண்டிருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மந்தநிலையில் இருந்த பொருளாதாரம் ஒரேயடியாக நடப்பு 2020ம் வருடத்தில் தூக்கி போட்டது.

சந்தையில் உள்ள பண முதலைகளுக்கு சாக்கு போக்காக கொரோனா வைரஸ் செய்தியும் சேர்ந்து கொண்டன. பிறகென்ன, பங்குகளை அடித்து நொறுக்கி கீழே இறக்க செய்வது தான். முடிவில் சிறு முதலீட்டாளர்கள் உச்சத்தில் வாங்கி விட்டு, இப்போது மீண்டும் வாங்கலாமா அல்லது இருக்கிற பங்குகளை விற்கலாமா என யோசித்து கொண்டிருக்கின்றனர். நம்மில் பலரின் கேள்வி, இந்த நிலை எப்போது சரியாகும் என்பதே…  இதுவும் கடந்து போகும்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 14 வயது ஜோதிடர் அபிக்யா ஆனந்த்(Abhigya Anand). சிறு வயது முதலே வான சாஸ்திரத்தில் ஆர்வம் கொண்ட இவர், பிரபஞ்சத்தில் உள்ள சில கோள்களின் கணிதங்களை கொண்டு எதிர்கால கணிப்புகளை சொல்லி வருகிறார். என்னடா, கொரோனா வைரஸ் மற்றும் பங்குச்சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் என கேட்டால், வானவியல் கணிப்புகளுக்கு நம்மை கொண்டு செல்கிறாரே என கேட்க வேண்டாம். அடுத்த இரு பத்திகளை படியுங்கள்… சில விஷயங்கள் புரியும்.

ஏழு மாதங்களுக்கு முன்பு, இந்த உலகம் ஒரு பேராபத்தை சந்திக்க உள்ளது என ஒரு காணொளியை(Conscience) வெளியிட்டுள்ளார். அதாவது வானவியல் கணிதத்தின் படி, ராகு மற்றும் கேது ஆகிய இரண்டிற்கும் இடையே நடக்கும் ஒரு நிகழ்வும், இதனை சார்ந்த கால சர்ப்ப யோகத்தின் விளைவும் ஏற்பட போவதாக சொல்கிறார். இந்த காலம் நவம்பர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை இருக்கும் என கணித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் பங்குச்சந்தை சரிவை முன்னரே கணித்துள்ள அபிக்யா, இந்த வைரஸ் தாக்கம் மே மாதம் 29ம் தேதி முதல் மெல்ல மெல்ல குறையும் எனவும், மனிதர்கள் விலங்குகளை கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். பங்குச்சந்தை நடப்பு வருடம் முழுவதும் இறக்கத்தில் தான் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். இது ஒரு வானியல் கணிதத்தின் சுழற்சி முறையில் உள்ளதை தான் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்போது, நமது தலைப்புக்கு வருவோம். மேலே சொன்ன விஷயங்களை ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளட்டும். பங்குச்சந்தையை போல, இது ஒரு புள்ளியியல் சார்ந்த கணிதமே. கொரோனா வைரஸ்(Coronavirus) தாக்கம் நம் நாட்டை பொறுத்தவரை தற்போது 4வது நிலையில் உள்ளது. நாம் இன்னும் செல்ல வேண்டிய காலங்கள் அடுத்த 3-6 வாரங்களாக இருக்கலாம். அதற்குள் மருந்து கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், அனைத்து நாடுகளுக்கும் தற்போதைய நிலையில் மருந்து அவ்வளவு எளிதாக சென்றடையாது.

மருந்து அல்லது தடுப்பூசி கிடைக்கப்பெற்றாலும், ஆரம்ப நிலையில் அது சுகாதார துறையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மையாளர்களுக்கு மட்டுமே போய் சேரும் என வளர்ந்த நாடுகளின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, இப்போதைய நிலையில் நம்மை தனிமைப்படுத்தி கொள்வதே சிறந்தது. நடைமுறையில் உள்ள கோவிட்-19(Covid), கொரோனா குடும்பத்தின் ஏழாவது நிலை அல்லது தலைமுறையாகும். இதுவரை இந்த குடும்பத்தில் உள்ள வைரஸ்களுக்கு மருந்து அல்லது தடுப்பூசி மனித இனத்தால் கண்டுபிடிக்கப்பட வில்லை. கொரோனா குடும்பத்தின் வரலாறு சுமார் 60 வருடங்களுக்கு மேல் என்பதனை நினைவில் கொள்ளவும்.

ஒவ்வொரு நாடுகளும், சுகாதாரத்தை பேணி காத்து அடுத்து 2-3 மாதங்களில் இந்த நோய் தாக்கத்திலிருந்து விடுபடலாம். இதுவும் ஒரு ஊக கணிப்பாக தான் எடுத்து கொள்ள முடியும். கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும், உண்மையில் இங்கே பெரிய பிரச்சனை ஒன்று உள்ளது. அது தான் உலக பொருளாதார மந்தநிலை(Financial Crisis – Recession).

ஏற்கனவே மந்தநிலையில் காணப்பட்ட பொருளாதாரம் அடுத்த 2-3 காலாண்டுகளில் வருவாய் இழப்பை(Listed Companies) கொண்டிருக்கும். வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, அரசு கஜானாவில் பணம் இல்லாதது மற்றும் வணிக விநியோக சங்கிலி(Supply Chain) விலகியது ஆகியவற்றால், நாட்டின் பொருளாதாரம் அடுத்த இரண்டு காலாண்டுகளில் எதிர்மறையாக(Negative GDP) செல்லும். எப்படி பார்த்தாலும், நடப்பு 2020ம் வருடத்தில் உலக பொருளாதாரமும், பங்குச்சந்தையும் ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு தான்.

அதே சமயத்தில் தனிநபர் ஒருவரின் ரிஸ்க் தன்மைக்கு ஏற்றவாறு, முதலீட்டு முடிவுகளை எடுப்பது சிறந்தது. நல்ல நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு, சந்தை வீழ்ச்சியின் போது, மலிவான விலையில் பங்குகளை வாங்கலாம். பிராண்டு பங்குகளின் மீது பற்று கொள்ளாதீர்கள். ரிஸ்க் தன்மையை பரவலாக்க பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் இ.டி.எப். மற்றும் கோல்டு பண்டுகளில்(Gold ETF, Gold Funds) முதலீடு செய்யலாம். பங்குகளில் வெறும் லார்ஜ் கேப் பங்குகளை தேர்ந்தெடுக்காமல், சிறு மற்றும் நடுத்தர பங்குகளில் முதலீடு செய்யலாம். நல்ல நிறுவனங்களை அடையாளம் காண முடியாதவர்கள் பரஸ்பர நிதிகளில் காணப்படும் மல்டி கேப்(Multicap) மற்றும் மல்டி அஸெட்(Mutli asset) போன்ற பண்டுகளில் முதலீடு செய்யலாம். உங்கள் வங்கி டெபாசிட்டை வெறும் சேமிப்பாக மட்டுமே கையாளுங்கள். அவை ஒன்றும் பெரிய முதலீட்டு சாதனமாக கருதப்படாது. வரவிருக்கும் காலங்களில் வங்கிகளுக்கான வட்டி விகிதம் மேலும் குறைய கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

இந்திய வங்கிகள் நலம் தானா ?

இந்திய வங்கிகள் நலம் தானா ? 

Are Banks in India good ? Financial Crisis & Non Performing Assets

ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தில் பிரச்சனை ஆரம்பித்து தற்போது பி.எம்.சி. வங்கி (PMC Bank) வரை நிதி சிக்கலை மட்டுமே கொண்டு நாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வலுவிழந்து கொண்டிருக்கின்றன. இந்த சிக்கல் களையப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியுமா என்பது அனைவருடைய கேள்வியாக உள்ளது.

பொதுவாக ஒரு நாட்டில் வங்கித்துறை என்பது மக்களின் அசைய முடியாத நம்பிக்கையை கொண்டிருப்பதாகும். பொதுத்துறையை சேர்ந்த ஒரு உற்பத்தி அல்லது சேவை நிறுவனம் திவால் நிலைக்கு சென்றாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய சாமானியர்கள் வங்கிகள் மூடப்படும் நிலையை ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை.

அவ்வாறாக ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையும் வங்கியின் மீது உள்ளது. அதே வேளையில் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலையில், இந்த நிலைமை பலரின் நம்பிக்கையை குலைப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகள் (PSU Banks)  மட்டுமில்லாமல், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின்(NBFC) வாராக்கடன் விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ரூ. 4500 கோடி முறைகேடு என சொல்லப்பட்ட பி.எம்.சி. வங்கியில் பெரும்பாலும் அதன் வங்கி வாடிக்கையாளர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக பாரத ரிசர்வ் வங்கி, முறைகேடு உள்ள வங்கிகளின் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாய் மட்டுமே மாதந்தோறும் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. பின்பு இந்த விதி 10,000 மட்டுமே எனவும், அதற்கு பிறகு இதனை அதிகரித்து தற்போது மாதம் ரூ. 25,000 வரை தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையளவில் வங்கி சேவை என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. பண மதிப்பிழப்பு(Demonetization) நடவடிக்கைக்கு பிறகு, வங்கி கணக்கு மற்றும் அதன் சேவை என்பது மறைமுகமாக ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலானோர் வங்கி சேவையை நம்பியிருக்கும் சூழ்நிலையில் வங்கிகளில் நடைபெறும் முறைகேடுக்கு வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவது மறுப்பதற்கில்லை.

வங்கி டெபாசிட்தாரர்களுக்கு பாரத ரிசர்வ் வங்கி முன்னுரிமை அளித்து வருவதாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். வங்கி பண பரிவர்த்தனையில் செயலிழப்பு ஏற்படும் போது, அதற்கு வங்கி சேவை காரணமாக இருக்கும் நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதெல்லாம் செய்திகளாக இருப்பினும், உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு பயனை தருமா என்பது சந்தேகமே. டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு என சொல்லப்பட்டாலும், அதன் பாதுகாப்பு நம் நாட்டில் உறுதி செய்யப்படவில்லை.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி(SBI) சேவையில் இணைய பரிவர்த்தனையின் போது, வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலும் பரிவர்த்தனை முடியாமல் வங்கி கணக்கில் பணம் மட்டும் பற்று வைக்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர் ஒருவர் மீண்டும் அந்த பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நிலைக்கு நேரம் மற்றும் பணத்தை ஒதுக்க வேண்டும்.

பிடிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. அப்படியிருக்கும் நிலையில், வங்கிகளிடம் இருந்து இழப்பீட்டு தொகை அவ்வளவு விரைவாக கிடைத்திடுமா என்பது கருத்துரையை பொறுத்தே உள்ளது. வாராக்கடன்களை தனியார் வங்கிகள் சில, அந்த தொகை இனி கிடைக்கப்பெறாது என நஷ்டத்தில் கணக்கை முடித்து கொண்டன. இதே பாணியில் தற்போது பொதுத்துறை வங்கிகளிலும் பணம் வராது என கணக்கு எழுதி கொண்டிருக்கின்றன.

கடந்த நான்கு வருடங்களில் இந்திய வங்கிகள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாராக்கடன் தொகை இனி வராது என கணக்கை முடித்து கொண்டன. இவற்றில் அதிகமான தொகையை கணக்கில் முடித்து கொண்டது பாரத ஸ்டேட் வங்கி. எஸ்.பி.ஐ. வங்கி மட்டும் ரூ. 76,600 கோடி அளவில் வாராக்கடன் வராது என முடித்து கொண்டுள்ளன. 100 கோடி ரூபாய்க்கு மேலாக கடன் பெற்றவர்களில் 220 நபர்கள் திவாலாகி உள்ளனர்.

மோசமான கடன்களின்(Bad Loans) எண்ணிக்கையையும், அதற்கான தொகையும் வங்கிகள் குறைத்த வண்ணம் உள்ளன. வங்கிகள் இனி புதிய கடன்களுக்கு தயாராக உள்ளன. அரசும் அதற்கான தொகையை தயார் செய்த வண்ணம் உள்ளன. இனியாவது இது போன்ற பிரச்சனை அதிகப்படியாக நடைபெறாமல் இருக்க வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் வாடிக்கையாளர்களின் சேவை நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை 

The Indian Stock Market lost $ 200 Billion in 20 days – Economic Slowdown

 

தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிப்டி(Nifty50) கடந்த ஜூன் மாதத்தில் தனது வாழ்நாள் உச்சமாக 12,100 புள்ளிகளை அடைந்தது. நேற்று (01-08-2019) நிப்டி50 குறியீடு 138 புள்ளிகள் குறைந்து 10,980 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்து கொண்டது. இதே போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) குறியீடு, ஜூன் மாதத்தில் வாழ்நாள் உச்சமாக 40,310 புள்ளிகள் வரை சென்றது. நேற்று சென்செக்ஸ் குறியீடு 37,018 புள்ளிகள் என்ற அளவில் முடிந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த நான்கு வாரங்களில் நிப்டி50 சுமார் 1220 புள்ளிகளும், மும்பை சந்தையின் சென்செக்ஸ் 3,300 புள்ளிகளும் இறக்கத்தை கண்டுள்ளன. அதாவது வர்த்தகமான கடந்த 20 நாட்களில் இந்திய பங்குச்சந்தை சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிலான மதிப்பை இழந்துள்ளது எனலாம். இந்திய மதிப்பில் சுமார் 13.85 லட்சம் கோடி ரூபாய்.

 

நாட்டின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறாத நிலையில், அதனை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையும் இறக்கம் கண்டது. ஜூலை மாதத்தில் பெரும்பாலான பங்குகள் 20 சதவீதத்திற்கும் மேல் இறக்கத்தில் முடிந்தது கவனிக்கத்தக்கது.

 

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை(Economy Slowdown), நாட்டில் உள்ள தொழில், வேலை வாய்ப்பு மற்றும் வாகன துறைக்கு தேவையான மத்திய அரசின் முடிவுகள் எட்டப்படாதது ஆகியவை சந்தையை பாதித்துள்ளன. அரசு சார்பில் மின்சார வாகனத்திற்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே சந்தையில் இருக்கும் வாகனங்களுக்கு வரி சலுகை குறைப்பு ஏற்படாத நிலையில் இந்த துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

 

வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தொடர்ச்சியாக வருவாய் குறைந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணமாக மத்திய அரசு சரியான கொள்கைகளை வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. அதே வேளையில், அடுத்த ஓரிரு வருடங்களில் இந்த நிலை சரிசெய்யப்பட்டு, வாகன துறை மற்றும் நாட்டில் உள்ள மற்ற தொழில்கள் மேம்படும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பு சாதகமாக இல்லை. இதன் காரணமாக கடந்த மாதத்தில் சுமார் 16,870 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இருப்பினும் ஜூலை மாதத்தில் உள்நாட்டு முதலீடு 20,400 கோடி ரூபாய் சந்தைக்குள் வந்துள்ளது.

 

கடந்த ஒரு மாதத்தில் தேசிய பங்குச்சந்தை நிப்டி 7.5 சதவீதமும், சென்செக்ஸ் 6.7 சதவீதமும் இறக்கத்தை கண்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் சந்தை இறங்கும் பட்சத்தில், நிப்டி(Nifty) 10,600 மற்றும் 10,480 புள்ளிகளை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சந்தையில் தற்போது குறுகிய காலத்தில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து 10-20 சதவீத இறக்கத்தில் சிறுக சிறுக முதலீடு செய்து வரலாம். வாகன துறை கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதமும், ஒரு வருட காலத்தில் 38 சதவீதமும் இறக்கத்தில் உள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா ?

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா ?

Economy Slow down – Is the Indian Economy Falling 

 

கடந்த சில காலாண்டுகளாக இந்திய சந்தை நிறுவனங்களின் வருவாய் குறைந்து வருவதும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மந்தமடைந்து வருவதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதாக இல்லை. குறிப்பாக வாகன துறை விற்பனை வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

 

எளிமையாக சொன்னால், நாட்டில் உள்ள வங்கிகளின் நிதி நிலைமை மோசமாகி உள்ளது மற்றும் அதனை சார்ந்து மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளின் வாராக்கடன் மற்றும் நிர்வாக குறைபாட்டால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள்(PSU Banks Merger) இணைக்கப்பட்டு வந்தன. இருப்பினும் வங்கிகளில் ஏற்படும் நிதி மோசடிகள்(Scam), வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் நடைபெற்று கொண்டிருக்கும் பணப்புழக்க நெருக்கடி ஆகியவை வரும் நாட்களில் தொழில்களை ஊக்குவிப்பதற்கு சாதகமாக இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வங்கிகளில் ஏற்பட்டுள்ள நிதி பிரச்னைகள் தீடீரென்று ஏற்பட்ட விஷயமல்ல. கடந்த காலங்களில் நடந்த மோசடிகள், இடர் மேலாண்மை குறைபாடு ஆகியவையே இன்று வங்கிகளில் வாராக்கடனாக வந்துள்ளன. சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பும் இதனை வெளிப்படுத்தவே செய்கிறது.

 

வளர்ந்து வரும் சந்தையில் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருந்து வந்தாலும், கடந்த சில காலங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி சார்ந்த பிரச்னைகள் மற்றும் குழப்பங்கள் இந்திய பொருளாதாரத்தை வீழ்ச்சியை நோக்கி எடுத்து செல்கிறதா என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது. உலகளவில் வர்த்தக போர், எல்லை பதற்றம், அணு ஒப்பந்தம் போன்ற காரணிகள் பொருளாதாரத்தை பாதிக்க நேரிட்டாலும், தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நிலைமை(Financial Crisis) விரைவாக சரி செய்யப்படுமா என்பது சந்தேகமே.

 

பட்ஜெட் அறிவிப்பில் துறை வாரியாக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிதி துறையை மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 70,000 ரூபாய் கோடி அளவில் மறுமூலதனம் செய்யப்படுவது, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில்(NBFC) ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலை களைவது என அரசு பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.

 

நிதி பற்றாக்குறையை சரி செய்வதற்கான காரணியாக வங்கிகளின் நிதி நிலைமையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றம் செய்யப்படாதது, வாகனத்துறையில் உள்ள சிக்கலை சரி செய்யாமல் மின்சார வாகனங்களுக்கான சலுகை, பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பை குறைப்பது மற்றும் பங்கு விலக்கல் இலக்கு(Disinvestment) ரூ. 1.05 லட்சம் கோடியாக நிர்ணயம் ஆகியவை நிதி சார்ந்த சிக்கலை தான் சொல்கிறது.

 

இதனிடையே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்களிப்பை குறைப்பது மற்றும் பங்குகளை திரும்ப பெறுவதற்கான(Buyback of Shares) முறையில் 20 சதவீத வரி ஆகியவை இந்திய பங்குச்சந்தைக்கு பாதகமாக அமைந்துள்ளன. அந்நிய முதலீட்டாளர்களின்(FPI) வரி கொள்கையிலும் அரசு சலுகை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் பொருளாதாரத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தலாம்.

 

சாலை, உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் சுகாதாரத்திற்கு திட்டங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் இவை முழுமையாக வளர்ச்சி பெறும் நிலையில் மட்டுமே அவை பொருளாதாரத்திற்கு ஊக்குவிக்கும். இல்லையெனில், சொல்லப்பட்ட விஷயங்கள் நடுத்தர மக்கள் வாழ்வில் எதிர்மறை நிகழ்வை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.  கல்வித்திறனை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் அவை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை உறுதிப்படுத்த வேண்டும்.

 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதன் மூலமே, அவை தனிநபர் வருமானத்திலும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் உறுதுணையாக அமையும். வரும் நாட்களில் அரசின் கொள்கைகளும், அதனை சார்ந்த திட்டங்களும் மக்களுக்கு பயன் தருமா என்பதை கவனத்தில் கொள்ளலாம். அதே வேளையில் 5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு($5 Trillion Economy) என்பதை விட, அத்தியாவசிய  தேவைகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைமை மக்களுக்கு ஏற்படாமல் இருந்தால் நல்லது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com