Tag Archives: economy slowdown

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

How is the Inflation and Interest rate playing in the Real Economy ? 

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளவிலான ஊரடங்கிற்கு பின்பு, உலக பொருளாதாரம் இந்த சுழற்சி முறையில்(Life Cycle) தான் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்க, அதனை அப்படியே பின்பற்றி வருகிறது உலக பொருளாதாரமும். கூடுதலாக உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீன-தைவான் எல்லை பதற்றமும் அடங்கும். 

கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு(Economic Stimulus) அன்றைய நிலையை களைய பெரிதும் உதவியது. இருப்பினும் அதன் காரணமாக பணவீக்க விகிதமும் கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் விளைவு தேவை-உற்பத்திக்குமான இடைவெளியில் தான் உள்ளது. இந்த இடைவெளியே பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லும். 

உலக பங்குச்சந்தைகளும், அரசு கடன் பத்திர சந்தைகளும் வரவிருக்கும் காலத்தில் ஆட்டம்(High Volatility) காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் நவீன பொருளாதாரத்தில் இது ஒரு சுழற்சி முறையே(Life Cycle). பணவீக்கம் உயர்ந்தால் அதனை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியின் வேலை தான். அதிகரித்து வரும் பொருட்களின் சந்தை விலையை மட்டுப்படுத்த, போடப்படுகிற கடிவாளம் தான் இந்த வட்டி விகித உயர்வு. 

வட்டி விகித உயர்வால் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்து சந்தையில் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதன் தாக்கம் தொழில் நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், பங்கு விலையும் சரியும்(அனைத்து நிறுவங்களுக்கும் பொருந்தாது). கடனில்லா நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஒரு பிரச்சனையில்லை, ஆனால் கடனை அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு தான் இந்த சிக்கலே !

வங்கி வட்டி விகித உயர்வு, டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்பவருக்கு வேண்டுமானால் வாய்ப்பாக அமையலாம். ஆனால் வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தான் செலுத்த வேண்டிய வட்டி செலவு அதிகரித்து விடும். சொல்லப்போனால், டெபாசிட்தாரரருக்கும் இந்த வட்டி உயர்வு நீண்டகாலத்தில் பயன் தராது. 

பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பிறகு வங்கிகளின் வட்டி வருவாய் விகிதத்தையும் மத்திய வங்கி குறைத்து விடுமே. இதனை தான் நாம் தொழிலாளர்களின் பி.எப்.(Provident Fund), அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்பு நிதிகளில் காணலாம். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் அதிகமாகவும், மாறாக பணவீக்கம் குறையும் போது, சேமிப்புக்கான வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்படும். இதனை நாம் பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கு பிறகான காலங்களில்(Economic Recession & Growth) காணலாம். 

இது ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாய், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு என்று சொல்லப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பணவீக்க விகிதம் 7 சதவீதம் என எடுத்து கொண்டால், சேமிப்புக்கான வட்டி  விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதுவே வங்கி சேமிப்புக்கணக்குக்கான வட்டி விகிதத்தை சொல்லவே வேண்டாம்.  அதே வேளையில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து காணப்படும். 

 பொதுவாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, பெரும்பாலான வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை உடனே அதிகரித்து விடுவதுண்டு. மாறாக, நமது சேமிப்புக்கான வட்டி பெரும்பாலும் பணவீக்கத்திற்கு குறைவாக இருக்கும். இது போக கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால், முடிவில் நிகர இழப்பு தான் !

எனவே வட்டி விகித உயர்வு காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய மற்றும் நீண்ட காலத்தில் குறைந்த வரி விகிதத்தில் அதிக வருவாயை ஏற்படுத்தும் முதலீட்டை கண்டறிவது அவசியம். அது போன்ற முதலீட்டு வாய்ப்புகள் தான் பரஸ்பர நிதிகளும்(Mutual Funds), பங்குச்சந்தைகளும். பங்குச்சந்தைக்கும், பரஸ்பர நிதிக்குமான ரிஸ்க் தன்மை என்பது வெவ்வேறு. சரியான நிதி இலக்கை ஏற்படுத்தி  விட்டு, அதற்கான முதலீட்டை துவக்கினால் போதுமானது. நீண்டகாலத்தில் உங்களது முதலீடு உங்களுக்காக உழைக்க தயாராகும்…!

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார மந்த நிலையிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் இருப்பது ஏன் ?

பொருளாதார மந்த நிலையிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் இருப்பது ஏன் ?

Why are Indian Stock Markets soaring despite the Economy Slowdown ?

பொருளாதார மந்தநிலையிலும், இந்திய பங்குச்சந்தை உச்சத்தில் உள்ளதே என்பது பலரது கேள்வி. நாட்டில் கடந்த சில காலங்களாக வாகனத்துறை விற்பனை குறைந்து வருவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது, உலக பொருளாதார காரணிகளின் தன்மை மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் வரை, நாட்டின் வளர்ச்சி பெருமளவு பாதித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இது போன்ற எதிர்மறையான சூழ்நிலையிலும் இந்திய பங்குச்சந்தைகள் உச்சத்தில் இருந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை நிப்டி(Nifty50) குறியீடும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) குறியீடும் போட்டி போட்டு கொண்டு ஏறியுள்ளன. சமீபத்திய போர் பதற்ற சூழல் தான், சந்தையின் அடுத்தகட்ட ஏற்றத்தை சற்று நிறுத்தி வைத்துள்ளது. இவையும் எதிர்காலத்தில் கலையப்படலாம்.

கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் போது, சந்தை பெருவாரியான இறக்கத்தை கண்டிருந்தது. அதனை மீட்டெடுக்க பல மாதங்கள் தேவைப்பட்டது. அப்போதைய காலத்தில் நாம் இன்று காணும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. 2008 பங்குச்சந்தை வீழ்ச்சியில் அதிகம் அடிபட்டவர்கள் பெரும்பாலானோர் இன்று சந்தைக்கு திரும்பவும் இல்லை.

புதிய இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்தையை பற்றிய விழிப்புணர்வும் தற்போதைய நிலையில் மேம்பட்டுள்ளது. ஆனால் சந்தையை பற்றிய கற்றல்(Stock Market Analysis) தான் இன்னும் அதிகம் தேவையாக உள்ளது. முக்கியமாக அன்றைய காலத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களின்(Mutual Funds) மூலம் அதிக முதலீடுகள் பெறப்படவில்லை. ஆனால் இன்று நிலைமையோ வேறு.

இன்று யாரும் சந்தையில் முதலீடு செய்வது வெறும் பணம் பண்ணுவதற்காக மட்டுமல்ல, மாறாக அவர்களின் நிதி இலக்குகளை சார்ந்தும் முதலீடு செய்கின்றனர். தனிநபர் ஒருவருக்கு 15 வருட நிதி இலக்கு உள்ளதென்றால், அவர் குறுகிய காலத்தில் ஏற்படும் சந்தை ஏற்ற – இறக்கத்தை பற்றி கவலை கொள்ள மாட்டார். அவருக்கு தேவையான காலம் 15 வருடங்கள் தான். எனவே எந்தவொரு ரிஸ்க்(Risk) தன்மை உள்ள முதலீடும் நீண்ட காலத்தில் நல்ல வருவாயை அளிக்கும்.

கடந்த டிசம்பர் மாதத்தில் பெறப்பட்ட எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீடு சுமார் 8,500 கோடி ரூபாய். சந்தையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்ததற்கு இந்த எஸ்.ஐ.பி. முதலீடும் ஒரு காரணம். அந்நிய முதலீட்டாளர் மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களின் சந்தை பங்களிப்பு போன்று, இன்று பரஸ்பர நிதி முதலீடுகளும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சந்தையில் ஏதேனும் பாதகமான செய்திகள் தென்பட்டால், குறுகிய கால மற்றும் தின வர்த்தகர்கள் பயத்தில் பணத்தை வெளியே எடுக்கலாம். ஆனால் மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் பெறப்பட்ட முதலீடுகள் பெரும்பாலும் முழுவதுமாக வெளியேறுவதில்லை.

இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் வேண்டுமானால் பயத்தில் பணத்தை வெளியே எடுக்கலாம். ஆனால் நீண்ட காலத்தில் தங்கள் இலக்குகளுக்காக(Financial Goals) முதலீடு செய்பவர்கள், தங்கள் தேவைக்கு மட்டுமே அதனை பயன்படுத்துகின்றனர். டிசம்பர் 2019 காலத்தில் பெறப்பட்ட பங்கு சார்ந்த முதலீடுகளின்(Equity Funds) மதிப்பு சுமார் ரூ. 4,595 கோடி மற்றும் வெளியே எடுக்கப்பட்ட தொகை(Outflow) ரூ. 15,440 கோடி. இதில் பெரும்பாலானவர்கள் சிறு முதலீட்டாளர்களே.

கடந்த டிசம்பர் மாதத்தில் மியூச்சுவல் பண்டு திட்டங்களின் சார்பாக லார்ஜ் கேப்(Large Cap) பண்டுகளில் செய்யப்பட்ட முதலீடு 1,134 கோடி ரூபாய். இவற்றில் எஸ்.ஐ.பி. அல்லது மறுமுதலீடு என்பது சேர்க்கப்படவில்லை என்பதனை நினைவில் கொள்ளவும். லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) வெளியே எடுக்கப்பட்ட தொகை சுமார் 71,158 கோடி ரூபாய். மல்டி கேப்(Multicap) பண்டுகளில் புதிய முதலீடாக டிசம்பர் மாதத்தில் 511 கோடி ரூபாயும், மிட் கேப்பில் 796 கோடி ரூபாய் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகள் ரூ. 421 கோடி முதலீடும் பெறப்பட்டுள்ளன. போகஸ்ட்(Focused Funds) என சொல்லப்படும் குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களில் சுமார் ரூ. 1,830 கோடி டிசம்பர் மாதத்தில் பெறப்பட்டுள்ளன.

டிசம்பர் 31, 2019 தேதியின் படி, பரஸ்பர நிதி முதலீடுகளின் சொத்து மதிப்பு(AUM) ரூ. 26.54 லட்சம் கோடி. ஆகையால், சந்தை இறக்கம் கண்டாலும் அவற்றை தக்க வைப்பதில் பரஸ்பர நிதி முதலீடுகளும் தற்போது துணைபுரிகின்றன. எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்யும் போது, சந்தையின் ஏற்ற – இறக்கத்தில் நல்ல வருமானத்தை பெறுவது நிச்சயம். நாம் திட்டமிட வேண்டியது நமக்கான இலக்கு மற்றும் அதற்கான காலம்(Goals & Period) தான். இதன் அடிப்படையில் தான் நாம் மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது – சர்வதேச நாணய நிதியம்

உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது – சர்வதேச நாணய நிதியம் 

Worldwide Economy Slowdown seen – IMF

தற்போது உலகெங்கும் ஒருவித பொருளாதாரம் சார்ந்த மந்த நிலை தென்படுகிறது. இது திடீரென ஏற்பட்டதல்ல, கடந்த இரண்டு வருட காலமாகவே காணப்பட்டு வரும் மந்த நிலை தான். சீன-அமெரிக்க வர்த்தக போரில் துவங்கி, உள்நாட்டில் ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனம் நிதி சிக்கலில் வெளிப்பட, தற்போது ஒவ்வொரு நாட்டிலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

 

2008ம் ஆண்டுக்கு பிறகு, மற்றுமொரு பொருளாதார வீழ்ச்சி நடப்பில் ஏற்படுமா என்ற கேள்வி பலரிடம் எழும்பியுள்ளது. உலகமயமாக்கல் வந்த பிறகு, ஒவ்வொரு நாடும் வளர்ச்சி பாதையில் சென்றிருப்பினும், வெவ்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனை மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து வருவது இயல்பு.

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம்(International Monetary Fund) சார்பில் உலக பொருளாதாரம் சார்ந்த சில விஷயங்களும், அதற்கான ஆய்வுகளும் பேசப்பட்டன. நடப்பு 2019ம் ஆண்டில் உலகின் கிட்டத்தட்ட 90 சதவீத நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிகக்குறைவாகவே இருக்கும் என கூறியுள்ளது. இதன் தாக்கம் 2020ம் வருடத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

 

நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போரால், 2020ம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 700 பில்லியன் டாலர்கள் அளவு சரிவு ஏற்படும் எனவும் கூறியுள்ளது. இது உலக பொருளாதார வளர்ச்சியில் 0.8 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

 

இதன் விளைவாக ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு, கடந்த சில வருடங்களில் காணாத மிக குறைவான விகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சொல்லப்பட்டுள்ள உலக பொருளாதாரம், ஒரு ஒத்திசைக்கப்பட்ட பொருளாதார மந்த நிலையாக உள்ளது. இதனை சரி செய்ய ஒவ்வொரு நாடும் பரஸ்பர புரிந்துணர்வு மூலமே தீர்வை பெற முடியும். 

 

கடந்த முறை ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை விட, இம்முறை ஏற்பட்டுள்ள மந்த நிலை நீடித்த காலமாக சொல்லப்படுகிறது. உள்நாட்டில் நுகர்வு தேவையை(Consumption Demand) அதிகரித்தால் மட்டுமே, பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில் சரிக்கட்ட முடியும். 

 

நடப்பு காலாண்டு (அக்டோபர்-டிசம்பர்) நுகர்வு மற்றும் விற்பனை அளவு, உள்நாட்டை பொறுத்தவரை மிகவும் கவனிக்கக்கூடிய காரணிகளாகும். 2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாயை பெருக்க கூடிய காலண்டாகவும் இது பார்க்க முடிகிறது. இவற்றில் சரிவு ஏற்படும் நிலையில், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், நாட்டின் நிதி பற்றாக்குறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com