இன்போசிஸ்(Infosys) நிகர லாபம் 38 % உயர்ந்தது

இன்போசிஸ் (Infosys)  நிகர லாபம் 38 % உயர்ந்தது 

Infosys Q3FY18  Result (2017-18) Net profits at 38 %

 

 

  • நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸின் (Infosys) 2017 – மூன்றாம் காலாண்டின் நிகர லாபம் 38 % ஆக உயர்ந்தது.

 

  • சமீபத்தில் தனது காலாண்டு (Oct – Dec’ 2017) அறிக்கையில் வெளியிட்டதாவது: நிகர லாபம் ரூ. 5129 கோடி. இந்த லாபம் கடந்த காலாண்டினை காட்டிலும் 38 சதவிகிதம் அதிகமாகும்.

 

  • நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி திரு. சலீல் பரேக் (Salil Parekh) கூறுகையில், நிறுவனம் ஒவ்வொரு ஆண்டிலும் 8 % வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், கடந்த மூன்றாவது காலாண்டு அறிக்கை மிகவும் ஆரோக்கியமாகவும்(Strength) உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

  • இதே காலகட்டத்தில் நிறுவன வருவாய் (Revenue) 1.3 சதவிகிதம் அதிகரித்து, ரூ. 17,794 கோடியாக உள்ளது.

 

  • வரி செலவுகளும் காலாண்டு – காலாண்டு (QoQ) ஒப்பிடுகையில் ரூ. 1,471 கோடியிலிருந்து குறைந்து, தற்போது  ரூ. 144 கோடியாக உள்ளது.

 

  • இந்த காலாண்டு வளர்ச்சி பெரும்பாலும் சில்லறை, தளவாடங்கள் (Logistics), ஆற்றல் (Energy), தகவல் தொடர்பு மற்றும் பிற சேவைகள் மூலமே பெற்றவை ஆகும். அதே சமயத்தில் நிதி சேவை மற்றும் காப்பீடு சம்மந்தமான துறையில் வளர்ச்சி விகிதம் 0.3 அளவு குறைந்துள்ளது.

 

infosys quarterly report Q3Fy18

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

 

LIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA

LIC tops in the list of Insurance – IRDA Claim Settlement Ratio 2017

 

LIC காப்பீடு நிறுவனம்  மீண்டும் முதலிடம்

 

  • IRDA (Insurance Regulatory and Development Authority of India) 2016-17 ஆண்டு அறிக்கையில் (Annual Report) வெளியிட்ட தகவலில், மற்ற காப்பீடு நிறுவனங்களை காட்டிலும் LIC (Life insurance corporation) புகார் நிலுவை விகிதத்தில் குறைவாய் இருப்பதாகவும், Claim Settlement விகிதத்தில் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

  • 2016-17 ஆண்டு அறிக்கையில், LIC Claim Settlement ratio – 98.31 % மற்றும் புகார் நிலுவை விகிதம் 0.97 ஆக உள்ளது.  தனி நபர் இறப்புக்கான உரிமை கோருதலில் 0.97 விகிதம் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.

 

irda annual report 2017

 

(Image courtesy:   www.richinvestingideas.com    Data Source: IRDA Official website )

 

 

irda annual report2017

 

  • தனியார் காப்பீடு நிறுவனங்களின் (கூட்டாக) Claim settlement ratio – 93.72 % ஆக உள்ளது. உரிமை நிராகரிக்கப்பட்ட விகிதம் 4.85 ஆக இருக்கிறது.

 

irda death claims report

 

  • LIC ல் க்ளைம் செய்யப்பட்ட காலத்தில் மொத்த காப்பீடுகளின் எண்ணிக்கை 7,65,472 மற்றும் கோரிய தொகை ரூ. 10,815 கோடி ஆகும்.

 

  • தனியார் மற்றும் பொது காப்பீடு நிறுவனங்கள் சேர்த்து, தனி நபர் இறப்புக்கான உரிமை கோராமல் இருக்கும் விகிதம் 2016-17 ல் 0.34 % ஆக இருக்கிறது.

 

  • பொதுவாக IRDA அறிக்கையின் படி, உரிமை கோருதல் விகித  (Claim Settlement Ratio ) அடிப்படையில் LIC நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஆனால் இது நிறுவனத்தின் அனைத்து வகையான பாலிசிகளுக்கும் பொருந்தாது. LIC காப்பீடு நிறுவனம் பொதுவாக Endowment Policy களை தான் அதிகம் விற்பனை செய்கிறது மற்றும் க்ளைம் விகிதமும் அதனை சார்ந்தே இருக்கும். இங்கு டேர்ம் பிளான்கள் (Term Insurance)  கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

 

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

 

 

கடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – SBI

 

SBI Loan Interest rate at 8.65 % – Cut rate by 30 basis points ( Jan 1, 2018) – State Bank of India

 

கடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – State Bank of India

 

  • பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதத்தை 0.30 % குறைத்து 8.65 % ஆக அறிவித்துள்ளது.

 

  • புத்தாண்டு தின பரிசாக வங்கி வாடிக்கையாளருக்கு இந்த செய்தி அமைந்துள்ளது.

 

  • ஏற்கனவே பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ளதால் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கான கடன் வழங்கும் வட்டி விகிதத்தை கடந்த சில காலாண்டுகளில் குறைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை சார்ந்து ரிசர்வ் வங்கியும், வங்கிகள் வாடிக்கையாளர் பலனை முழுமையாக தரும்படி கூறியுள்ளது.

 

  • ஸ்டேட் வங்கியின் இந்த 8.65 % கடனுக்கான வட்டி விகிதம் Jan 1, 2018 முதல் அமல்படுத்தப்படும். இந்த வட்டி குறைப்பு மூலம் கடன் பெற்ற  சுமார் 80 லட்சம் பேர்  பலனை அனுபவிப்பர் எனவும், கடன் பெறுகின்ற புதிய வாடிக்கையாளர்களுக்கு பரிசீலனை கட்டணத்திலும் சலுகை தர போவதாக அறிவித்துள்ளது.

 

  • இந்த வட்டி விகித தாக்கம், வங்கியில் வைப்பு தொகை வைத்திருப்போருக்கு சாதகமாக அமையாமல் போகலாம். பொதுவாக வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்கும் போது, வைப்பு தொகை மற்றும் இதர சேமிப்புக்கான வட்டியினை குறைக்கலாம்.

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

நன்றி, வர்த்தக மதுரை

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com                   

 

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017)

 

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017)

 

  • சிறு சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு இன்று (27/12/2017) குறைத்துள்ளது. வட்டி விகிதம் 0.2 % அளவிற்கு குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)  மற்றும் பொது வருங்கால வைப்பு (PPF) நிதிக்கும் பொருந்தும்.

 

  • கிசான் விகாஸ் பத்திரம் (KVP), செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டத்திற்கும் வட்டி விகித குறைப்பு பொருந்தும். மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை; ஏற்கனவே உள்ள 8.3 % ஆக தொடரும்.

 

  • சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகித மாற்றம் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும். தற்போதைய குறைப்பு Jan – Mar 2018 க்கானது.

 

Read more on:  வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

சிறு சேமிப்பு திட்டங்கள்

    (Small Savings Scheme )

வட்டி விகிதங்கள்  

    (Interest Rates – Jan to Mar’ 2018)

5 Years RD / Term Deposit

6.9 % | 7.4 %

Savings Deposit

4.0 %

PPF, NSC (5 Years)

7.6 %

Sukanya Samriddhi

8.1 %

Senior Citizen Savings(SCSS)

8.3 %

Kisan Vikas (KVP)

7.3 %

வர்த்தக மதுரை  | www.varthagamadurai.com

 

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

 

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com                   

 

அரவணையுங்கள், ஆனால் தனியாக முடிவெடுங்கள்

 

அரவணையுங்கள், ஆனால் தனியாக முடிவெடுங்கள்

 

INVESTMENT DECISION (S) KILLS

 

 

நாம் பள்ளிப்பருவத்திலே பத்தாம் வகுப்பு (அ)  பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது, அடுத்து என்ன படிக்கலாம் என்பதை ஒரு Ph.D  ஆராய்ச்சி போலவே எடுத்து கொள்வோம். யாரிடமெல்லாம் அதனை பற்றி கேட்கலாம், என்னென்ன படிப்புகள், அதற்கான விளம்பரங்கள் மற்றும் செய்திகள், நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்வது என நிறைய விஷயங்களை நமக்கான படிப்பினை தேர்ந்தெடுப்பதற்காக செய்திருப்போம். ஆனால் முடிவில் ஏதேனும் ஒரு படிப்பை (Specialisation) தேர்ந்தெடுத்து விட்டு, இடையில் எந்த சந்தேகமும் இல்லாமல் மேற்படிப்பையும் முழுதும் முடித்திருப்போம். வேலை (அ) தொழில் என வரும் போது, நான் ஏன் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன் என பல சமயங்களில் நமக்கு நாமே குறைப்பட்டு  கொள்வதுண்டு.

 

ஏன் இந்த முடிவு ?

 

நாம் நமது மேற்படிப்பை பற்றி பல பேரிடம் விளக்கம் கேட்டிருப்போம். நம் மூளையில் அதற்கான  தகவல்கள் பல சேகரிக்கப்பட்டுவிட்டன, கூடவே குழப்பமும். தேர்ந்தெடுப்பின் தொடக்கத்தில் யாரோ ஒருவர் சொன்ன அந்த கடைசி விளக்கம், நமக்கான படிப்பை தேர்ந்தெடுக்க வைத்திருக்கும். உண்மையில் நாம் அதனை தேர்ந்தெடுக்கவில்லை. அப்புறம் ஏன் நமக்கு நாமே குறைப்பட்டு கொள்ள வேண்டும். இது தான் முடிவெடுத்தலின் விளைவு (Effect of Decision making). நாம் Ph.D அளவுக்கு ஆராய்ச்சி செய்து விட்டு, முடிவில் செய்த தகவல் (Project) நமக்கானது இல்லையென்றால் ! முடிவின் விளைவு அப்படிதான் அமைகிறது. நமது தேவை மற்றும் இலக்கு சார்ந்து தேர்ந்தெடுத்திருந்தால், நாம் படித்த படிப்பு நமக்கு வேலையை தாமதப்படுத்தினாலும், நமக்கு கிடைத்த அறிவு நம் விருப்பப்படி செயல்பட ஆரம்பிக்கும். அதனால் தான் சிலர் பள்ளிப்படிப்பை முடிக்காவிட்டாலும், வாழ்க்கையிலும் தங்கள் தொழிலிலும் சிறந்து விளங்குகின்றனர்.

 

Decision Making (S)kills…

 

“ முடிவெடுத்தலும் ஒரு சிறந்த கலையே… நாமாக முடிவெடுத்திருந்தால் ! “

 

நம் பள்ளிப்பருவத்தில் நாம் செய்த தேர்ந்தெடுப்பதின் தவறே (விளைவு) நமது முதலீட்டிலும் தொடர்கிறது. நண்பர்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று ஏதேனும் ஒரு முதலீட்டு சாதனத்தை(Investment Product), நமக்கு தேவையில்லை என்றாலும் எடுப்பது. என் பெற்றோர் செய்தனர் என முதலீட்டை ஆராயாமல் பின்பற்றுவது, பொருளின்(Brand) மேல் உள்ள அன்பில் [ஆசையில்] 🙂 முடிவெடுப்பது. தரகரின் குறிப்பை (Tip) அப்படியே நமது முடிவாக எடுத்து கொண்டு, முதலீடு செய்வது என நமது முடிவெடுத்தலின் அளவு மாறுகிறது. முடிவில், நமக்கான பலனை நாம் அனுபவிக்காமல் போவதுண்டு.

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, முடிவெடுத்தலும் ஒரு கலையே !  ஆனால் அதனை நீங்களாக செய்ய வேண்டும். நம் எல்லோருக்கும் ஒரு அனுபவம் உண்டு. நெருக்கடியான (Traffic – Peak Hours) சாலை பயணத்தில், நாம் நமது இரு சக்கர வாகனத்தில் நமக்கு முன் செல்லும் மற்றொரு வாகனத்தை, மிக நெருக்கமாக பின் தொடர்ந்து செல்வோம். திடீரென்று ஒரு பள்ளம் தென்படும். முன் சென்ற வாகனம் அதனை சிரமமின்றி கடக்கும். நாம் பள்ளத்தில் தட்டுத்தடுமாறி செல்வோம்.         “ ஏன் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்றோம், சாலையை பார்த்து சென்றிருக்கலாமோ “ என நினைவில் கேட்டிருப்போம். இது தான் நாம் செய்யும் முடிவெடுத்தலின் விளைவு. நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை, உங்களுக்காக முதலீடு செய்ய போகிறீர்கள். அந்த முதலீட்டின் பலன் உங்களுக்கோ (அ) உங்கள் குடும்பத்திற்காகவோ இருக்கலாம். அப்படியிருக்க முடிவினை நீங்கள் தான் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

முடிவெடுப்பதின்  சரியான காரணிகள்:

 

  • தெளிவான தேவை (Needs)
  • திட்டமிடப்பட்ட இலக்கு (Goals)
  • உறுதியான காலவரையறை  (Time Period)
  • முதலீட்டு முடிவின் பலனை அனுபவித்தல்.  (Returns / Benefits)

 

உதாரணத்திற்கு:

 

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தங்குவதற்கு ஒரு நிரந்தர இடம் தேவை (Needs), அதனால் ஒரு புதிய வீட்டை வாங்க (Goals) முடிவெடுக்கிறீர்கள், அதற்காக சில வருடங்கள் பணத்தை சேமிக்க முயல்கிறீர்கள் (அ) வீட்டுக்கடனை பெறுகிறீர்கள் (Time Period). முடிவில் வீடு உங்களுக்கு சொந்தமாகிறது (Benefits). இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே !

 

நீங்கள் யாரிடமும் முதலீட்டு ஆலோசனைகளை கேளுங்கள்; ஆனால் அதற்காக உங்கள் நேரம் முழுவதையும் வீணடிக்க வேண்டாம். எனவே, சரியான ஆலோசகரை தேர்ந்தெடுப்பதும் அவசியம். மேலே சொன்ன முடிவெடுப்பதின் காரணிகளை, ஆலோசனையுடன் பொருத்தி  பாருங்கள்.  ஆலோசனைகளின் கடந்த கால விளைவுகளையும், இனி அதற்கான எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதனையும் கவனியுங்கள். முடிவில், நீங்களாகவே முடிவெடுங்கள்.

 

……… are subject to market risks. Please read the offer document carefully before investing.

 

Insurance is not an investment, it just protects your wealth

 

Insurance ஐ insurance ஆக பாருங்கள்; Investment ஐ investment ஆக பயன்படுத்துங்கள். Risk ஐ உணருங்கள். ஆனால் அதற்காக முதலீட்டை ஒதுக்க வேண்டாம்.

 

சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த கருத்து (ஆங்கிலத்தில்):

 

A crow was sitting on a tree doing nothing. A rabbit saw the crow and asked “Can I also sit like you and do nothing all day long?” The crow answered:”Sure why not.” So, the rabbit sat on the ground below the crow and rested. All of a sudden a fox appeared, jumped on the rabbit and ate it.

 

Moral:

To be sitting and doing nothing, you must be sitting very high up.

 

முடிவுகள் ஜாக்கிரதை !

 

தகவல்களையும், மனிதர்களையும் அரவணையுங்கள்; முடிவுகள் உங்களிடம் 🙂

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

செல்வத்தின் மதிப்பு செவித்திறனில்

 

செல்வத்தின் மதிப்பு செவித்திறனில்…   Investing is Listening

 

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்

செல்வத்து ளெல்லாந் தலை.   

 

குறளின் வடிவிலே நாம் புரிந்து கொள்ளலாம், ‘ செவிச்செல்வம் ‘ தான் ஒருவருக்கு தலையாய செல்வமென்று. ‘ LISTENING ‘ என்று சொல்லப்படும் செவிமடுத்தல் என்பது எந்த துறையிலும், எக்காலத்திற்கும் ஏற்றதொன்று. படம் பார்த்து கற்று கொள் என்பார்கள்; அதனை போல நமக்கு தேவையான விஷயங்களை நாம் கேட்டு புரிந்து கொண்டாலே நமக்கான வாய்ப்புகள் கிட்டும். பொதுவாக செல்வம் சேர்ப்பதிலும் அவ்வாறு தான்.

 

நீங்கள் செல்வந்தராக வெறும் பணத்தினை மட்டும் கொண்டால் போதாது; மாறாக, அதனை வளப்படுத்துவதற்கான, பாதுகாப்பான வழிமுறைகளை பிறரிடம் கற்று கொள்ளவும் வேண்டும். நாம் விமர்சனம் செய்வதை விட மற்றவர்களிடம், நேர்மறையான செல்வம் படைத்தவர்களிடம் செவிமடுக்கவும் வேண்டும். பெரும்பாலான வெற்றிகள் செவிமடுத்தலிலும், அதனை சார்ந்த உரையாடலிலுமே நிகழ்கிறது. இன்று நாம் வாழும் வாழ்க்கை 100 சதவிகிதம் நகலாக தான் உள்ளது. நாம் செய்யாததை, மற்றவர்கள் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். நமது வெற்றி, தோல்வியும் அப்படி தான். செல்வத்தை பெருக்க உதவும் மந்திரம், இந்த ‘ Listening ‘ என்ற ஆயுதம்.

 

நாம் நினைப்பது போல, ‘ பெரும் செல்வந்தர்கள் மற்றவர்கள் பேச்சை கேட்பதில்லை மற்றும் அவர்களாகவே தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனர் ‘ என்பது உண்மையல்ல… உண்மையில், அவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை மதித்து, அவற்றிலிருந்து தங்களுக்கு தேவையானதை, தங்களால் முடிந்ததை வாய்ப்பாக மாற்றுகிறார்கள். அந்த மாற்றம் தான் அவர்களை வித்தியாசப்படுத்துகிறது. Warren Buffet, Bill Gates போன்ற பெரும் பணக்காரர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் புத்தக வாசிப்புக்கென்று தனி இடம் வைத்துள்ளனர். அது தான் அவர்களை சிறந்த ஒரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இது செல்வத்திற்கு மட்டுமல்ல. பகுத்தறிவிலும், மற்ற சேவைகளிலும் தான். திரு. அப்துல் கலாம் (Dr. A.P.J. Adbul Kalam)  ஐயா அவர்களின் உயர்ந்த இடத்திற்கு காரணம், இந்த இரு குணங்கள் தான்.

 

  • மற்றவர்களிடம் செவிமடுப்பது (அ) கற்று கொள்வது (Listening and Learning)
  • கற்ற விஷயத்தை சரியாக மற்றவர்களிடம் சேர்ப்பது (Sharing  to others)

 

அதற்காக நாம் வெறுமெனே காது கொடுத்து கேட்பது என்பதும் சரியான வேலையாகாது; வெறுமெனே காது கொடுத்து கேட்பதற்கும், புரிந்து கொண்டு கற்பதற்கும் (Hearing vs Listening) வித்தியாசம் உள்ளது. அது போல தான், நமது முதலீட்டிற்கும். நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் முன், உங்கள் ஆலோசகர் (அ) தரகரின் பேச்சை உள்ளபடியே கேட்டு கொண்டு முதலீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக, நீங்கள் உங்களின் முதலீட்டு நோக்கத்தை தெரிவித்த பின், அதற்கு அவரின் சரியான அணுகுமுறையே நமக்கு தேவை. அதனை புரிந்து கொண்ட பின்னர் நாம் முதலீடு செய்தால் போதுமானது. செவிமடுத்தலிலும் நாம் நமக்கு தேவையான விஷயங்களை சரியாக தேர்ந்தெடுத்து கற்று கொண்டாலே, நமக்கான செல்வம் நம்மை வந்து சேரும்.

 

‘ Investing is like Listening ‘

 

‘ Listening is the secret to discover great stories ‘

 

இன்று  பங்குச்சந்தையில் நம்மில் பெரும்பாலானோரின் பணம் ஊகத்திலும், சரியான வழிமுறை இல்லாமலும் நஷ்டமடைகிறது. தரகர் சொன்னார், நண்பரிடம் கேட்டேன் என்று பணத்தை போட்டு விட்டு பின்பு தங்கள் தின வாழ்க்கையை சுமையாக பார்க்கிறார்கள். உங்கள் நோக்கத்தை சரியாக திட்டமிட்டு, அதற்கு பரிசலிக்கும் அணுகுமுறையை கடைபிடிக்க பழகுங்கள். பங்குச்சந்தையில் மட்டுமல்ல, மற்ற முதலீட்டிலும் நாம் அப்படிதான் செயல்பட வேண்டும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கஷ்டப்பட்டு இழப்பது என்பது அவசியமில்லையே ! அதனால் நிறைய வெற்றி, தோல்விகள் பற்றிய புத்தகங்களையும் வாசியுங்கள்; அதனை சார்ந்த மனிதர்களையும் சந்தியுங்கள். உங்கள் உரையாடல் நலம் பெறும்.

 

“ செவிமடுத்தல் செல்வத்தை சேர்க்கும் “

வாழ்க வளமுடன்,

வர்த்தக மதுரை – www.varthagamadurai.com

நீங்க நல்லவரா, கெட்டவரா – கடன் ?

 

நீங்க நல்லவரா, கெட்டவரா  – கடன் ?

Debt – is it good or bad ?

கடன் ” –  இந்த வார்த்தையை கேட்டாலே சிலருக்கு  அலர்ஜியாக (ஒவ்வாமை) இருக்கும். சிலர் சாமர்த்தியமாக கையாளுவர். (Debt /Loan)

 

கடன் அன்பை முறிக்கும் ‘ – அன்பு இருக்குமோ இல்லையோ, நமது தினசரி வாழ்க்கையை  கடன் பாதிக்காமல் இருந்தால் நல்லது. கடனில்லாமல் வாழ்வது ஒரு மோட்சம் தான்; ஆனால் ஏனோ எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. காரணம், கடனை பற்றிய நமது புரிதலை சரி செய்யாதது தான். பலர் கடனை வாங்கி விட்டு தங்கள் அற்புதமான வாழ்க்கையை மூழ்கடித்து விடுகின்றனர். சிலரோ வாங்கிய கடனை வாழ்நாள் முழுவதும் கட்டி விட்டு, ஏன் கடன் வாங்கினோம் என பெருமூச்சு விடுகின்றனர். வெகு சிலர் தான் அதனை சாமர்த்தியமாக பயன்படுத்துகின்றனர் (அ) கடனில்லாமல் வாழ பழகுகின்றனர். நாம் ஒவ்வொருவரும் நமது நிதி வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் கடன் வாங்கி விட்டு தான் செல்கிறோம்.

 

கடன்கள் எத்தனை (Loans ?

 

  • தனி நபர் கடன்
  • வாகன கடன்
  • வீட்டுக்கடன்
  • கல்வி கடன்
  • நகை கடன்
  • தொழில் கடன்
  • கடன் அட்டை கடன் (Credit Card )

 

பெரும்பாலும் நம்மில் பலர் மேலே உள்ள ஏதேனும் ஒரு கடனை (அ) அனைத்து கடனையும் வாங்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களை விட்டு விட்டு தவணை காலத்தின் பாதியில் தான் அதனை புரிந்து கொள்ள முயல்கிறோம். நிறுவனங்கள் கடன் வாங்கி கட்ட முடியாமல் திவாலாகி தத்தளிப்பதை விட தனிநபர்களின் கடன்கள் சில சமயங்களில் வாழ்க்கையை பணயம் வைக்கின்றன. கடன் தற்கொலைகளும் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

 

நமக்கு ஒரு வீடு தேவையெனும் போது, அதற்கான வீட்டுக்கடனை நாம் வங்கியிடமோ (அ) நிதி நிறுவனங்களிடமோ பெறுகிறோம். நமது வருமானத்தில் பாதிக்கும் மேலாக கடன் தொகை ஆக்கிரமித்து உள்ளன. உண்மையில் நமது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கு இடையில் தான் கடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இன்று தனிநபர் கடனும், EMI (Equated Monthly Installment)  மூலம் நுகர்வோர் கடனும் வாங்குவது எளிதாகவும், சர்வ சாதாரணமாகவும் ஆகி விட்டது. இவற்றில் தான் பெரும்பாலோர் தங்கள் வருமானத்தை செலவிடுகின்றனர்.

 

Zero Interest EMI / No cost EMI என்னும் மாயை:

 

வீட்டு சாதனம், ஆடம்பர பொருட்களை நமது விருப்பப்படி வாங்கும் போது, நாம் முன்னரே சேமித்து வாங்க பழகுவதில்லை. மாறாக EMI எனும் மாத தவணைகளை தான் தேர்ந்தெடுக்கிறோம். இது நகை வாங்குவதிலும் சரி. நம்மில் பலர், ‘ நான் வட்டியில்லா தவணையில் பொருட்களை வாங்கினேன்; அதனால் எனக்கு எந்த கூடுதல் செலவும் இல்லை ‘ என்று எண்ணுகிறோம். உண்மையென்ன ?  

 

நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்து எந்த லாபமும் இல்லாமல் மாத தவணையில் உங்கள் விற்பனையை தொடங்குவீர்களா ? எந்த நிதி நிறுவனம் உங்களுக்கு லாப நோக்கமில்லாமல் EMI கொடுக்க முன்வருகிறது. தவணை முடிவில் நாம் சரியாக பார்த்தால் Terms and Conditions apply – நிபந்தனைக்கு உட்பட்டது தான் வேலை செய்யும். Zero Interest EMI, ஆனால் பரிவர்த்தனை கட்டணம், பொருட்களின் விலையில் மறைமுகமாக சற்று அதிகம். எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரும் 🙂  முடிவில் நம்மை கடன் வாங்க தூண்டுவது, நமது Impulsive Buying எனும் ஆராய்வில்லாத விருப்பம் தான் !

 

கடன் வாங்க கூடாதா ?

 

அப்படியில்லை; நமது தேவைகளுக்கு நாம் கடன் வாங்கலாம், ஆனால் விருப்பங்களையும் சற்று தள்ளி வைத்து விட்டு பார்க்கவும். நமக்கு ஒரு சொந்த வீடு இல்லை எனும் போது முடிந்தவரை முன் பணத்தை சேமித்து / முதலீடு செய்து பழகி வீடு கட்டலாம் (அ) வாங்கலாம். நமக்கான சேமிக்கும் காலம் போதவில்லை என்றால் மட்டுமே நாம் வீட்டுக்கடனை எதிர்பார்க்கலாம். நமது மற்றுமொரு (இரண்டாவது வீடு) வீட்டுக்கு கடன் வாங்குவதை பற்றி சற்று யோசிக்க வேண்டும். அது உங்கள் சொத்தாக கருதினால், அதனால் வருமான வாய்ப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கணக்கிட வேண்டும்.

 

உதாரணத்திற்கு, உங்களிடம் 25 லட்சம் பணம் ரொக்கமாக உள்ளது (அ) அதன் மதிப்புள்ள வீடு(இரண்டாவது வீடு)  வாங்க வீட்டுக்கடனை எதிர்பார்க்கிறீர்கள் என வைத்து கொள்வோம். 25 லட்சம் மதிப்பிற்கு நீங்கள் வீடு வாங்கினால் அதன் முதலீட்டின் மீது நீங்கள் மாதாமாதம் எவ்வளவு வருமானம் பார்க்க முடியும் என்று கணக்கிட வேண்டும். அது போதிய வருமானம் தராத போது, அந்த  ரொக்க தொகையை நீங்கள் ஒரு வங்கியில் டெபாசிட் செய்து விட்டு வாடகையை விட சற்று அதிகமாக வட்டி வருமானம் பெறலாம். அதற்காக கடன் வாங்கி டெபாசிட் செய்வது நல்லதல்ல. எல்லாம் கணக்கு தான் – வருமானத்திற்கும், கடனுக்கும் ! சிலர் அவசியமில்லாமல் வாகன கடன் வாங்குகிறேன் என்ற பெயரில் வீட்டில் 4 (அ) 5 வாகனங்களை முடக்கி விடுகின்றனர். வாகன கடன் போக, அந்த வாகனத்திற்கு தேய்மான செலவு மற்றும் காப்பீடு செலவு உள்ளது என்பதை மறவாதீர்கள். இன்னும் சிலரோ EMI மூலம் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியாக தனி நபர் கடன், கடன் அட்டை கடன் என கடன் பட்டியல் நீள்கிறது.

 

கடனை தவிர்க்க, கடனில்லாமல் இருக்க…(Debt Free)

 

  • வீட்டுக்கடன் வாங்கும் முன், வீடு கட்ட (அ) வாங்க தேவையான தொகையை முன்கூட்டியே சேமிக்க முயலுங்கள்; வீட்டுக்கனவையும் முன்னரே திட்டமிடுங்கள், முடிந்தால் தள்ளி போட முயற்சியுங்கள். அவசர முடிவில் கடன் வாங்க வேண்டாம்.
  • வாகன கடன் வாங்குவதற்கு பதில், முன்னரே திட்டமிட்டு வாகனம் வாங்க தேவையான பணத்தை ஒரு அஞ்சலக / வாங்கி RD ல் சேமித்து முதிர்வு தொகை மூலம் வாங்குங்கள். வாகனத்தை தேவையான இடத்திலும், அவசர உதவிக்கும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் உங்களுக்காக Call Taxi யும், பொது போக்குவரத்தும் உள்ளன.
  • கடன் அட்டை (Credit Card) மூலம் பெறும் கடனை முடிந்தவரை தவிருங்கள் (அ) புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். கடன் அட்டைக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை மறந்திருக்க வேண்டாம்.
  • கல்வி கடன் கிடைக்கிறது, வரிசலுகையும் உண்டு என்பதற்காக வாங்க வேண்டாம். உங்கள் குழந்தையின் எதிர்கால கல்விக்கு இப்போதே நிதிதிட்டமிடல் செய்யுங்கள் (Financial Planning for Education).
  • சுற்றுலா செல்வதை திட்டமிடுங்கள், அதற்காக உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க பழகுங்கள்.
  • அவசர கால நிதியை எப்போதும் தயார் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கடன் இல்லாவிட்டாலும் தேவையான Term Insurance – ஆயுள் காப்பீடை எடுத்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் உங்கள் வருமானத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
  • நீங்கள் வாங்கும் கடன் எதிர்காலத்தில் வருமானம் ஏதேனும் தர வாய்ப்புள்ளதா, இருக்கும் செலவுகளை குறைக்குமா என்பதை சிந்தித்து முடிவெடுங்கள்.

உங்கள் கடன் (Debt to income Ratio) தன்மை விகிதத்தை கணக்கிட…

Total Debt / Total Income (or) Asset

* கிடைக்கும் மதிப்பை 1 க்கு கீழ் வைத்திருங்கள்.

 

கடனை ஆரோக்கியமாக பார்த்து கொள்ளுங்கள்; அது உங்களை கடனில்லாமல் பாதுகாக்கும்.

வாழ்க வளமுடன்,  வர்த்தக மதுரை

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Oct 2017

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை – RBI – Oct, 2017

RBI Policy Rates – Oct, 2017

 

  • ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அக்டோபர் 4 ம் தேதி அறிவித்துள்ள  நிதி கொள்கையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ (Repo Rate) வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என வெளியிட்டுள்ளது. முன்னர் இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6 % ஆக தொடரும். (Reverse Repo Rate – 5.75 %)

 

  • 2017-18 நிதிக்கொள்கை மதிப்பீடு அறிக்கையில் சொன்னது போல (7.3 %) அல்லாமல், பொருளாதார வளர்ச்சி 6.7 ஆக எனவும் தனது மதிப்பீட்டை குறைத்துள்ளது.

 

  • வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் (Cash Reserve Ratio -CRR) முன்னர் இருந்த 4 % ஆக இருக்கும்.

 

  • சில்லறை பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் இருக்குமாறு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018 ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்க மதிப்பு 4.2 – 4.6 % இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.

 

  • ஜி.எஸ்.டி அமல் – உற்பத்தி துறைக்கு சாதகமாக இல்லையென்றும், முதலீடுகளும் இந்த துறைக்கு வருவதில் தாமதமடையலாம் எனவும் அறிவித்துள்ளது.

 

  • வங்கிகளின் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பாதிப்புகளையும் களைய தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளது.

 

Recent RBI Policy rates: (Oct 4, 2017)

Policy Repo Rate : 6.00%
Reverse Repo Rate : 5.75%
Marginal Standing Facility Rate : 6.25%
Bank Rate : 6.25%

 

(Data Source: https://www.rbi.org.in/home.aspx )

 

வாழ்க வளமுடன்,

வாழ்த்துக்கள் வர்த்தக மதுரையுடன் !

 

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

What is Bank Repo Rate ?

 

வங்கிகள் அவ்வப்போது சேமிப்பு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வரும். தற்சமயம் பல வங்கிகளில் வட்டி விகித குறைப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை அறிவோமா…?

 

நமது நாட்டில் வங்கிகள் பெரும்பாலான தொழில்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஊன்றுகோலாக அமைகின்றன. இந்த வங்கிகளின் செயல்பாடுகளையும், அதன் பணத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தி நிர்வகிப்பது நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) ஆகும். RBI நாணயத்தின் மதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த ரிசர்வ் வங்கி தான் நாட்டின் தலைமை வங்கியாகவும் செயல்படுகிறது. வங்கிகளுக்கான கட்டுப்பாடுகள், கொள்கைகளில் இவை அதற்கான காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டின் பணவீக்கத்திற்கு ஏற்றாற் போல, வங்கியின் வட்டி விகிதத்திலும் ஏற்ற, இறக்கம் இருக்கும். நீங்கள் வங்கிகளில் பெறும் வீட்டுக்கடனுக்கு சில காலங்களில் வட்டி விகிதம் அதிகரிக்கும் (அ) குறைக்கப்படும். நீங்கள் வங்கியில் சேமிக்கும் பணத்திற்கும் தான் அது போல !  வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் நமக்கு நல்லது தான். ஆனால் நமது சேமிப்பு, வைப்பு நிதி தொகைக்கு வட்டி குறைந்தால்… ?

 

நாம் எதிர்பார்த்த பலன் (பணம்) முதிர்வில் கிடைக்காது. வட்டி குறைப்புக்கான காரணத்தை வங்கிகளிடம் கேட்டால், “ ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதத்தை (Repo Rate) குறைத்ததால் நாங்களும் வட்டி விகிதத்தை குறைத்தோம் “ என்பார்கள் 🙂 செய்திகளிலும் நாம் எப்போதாவது கேள்விப்படும் வார்த்தை, ‘ ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ விகிதத்தை குறைத்தது ‘. அது என்ன ரெபோ விகிதம் (Repo or Repurchase Rate) ?

 

ரெபோ விகிதம் (Repo or Repurchase Rate):

 

நமது தொழிலுக்கோ, தனி நபர் அவசரத்திற்கோ (அ) வீடு கட்டுவதற்கோ நாம் வங்கியில் கடன் கேட்டு சென்றால், அவர்கள் நாம் பெறும் கடனுக்கு ஒரு வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள். அதாவது வங்கிகள் நமக்கு இலவசமாக கடன் தர விரும்பவில்லை. மாறாக நாம் பெறும் தொகைக்கு ஒரு தொகையை கட்டணமாக வசூலிப்பார்கள், அது தான் அந்த வட்டி. அதனால் நமது கடன் தொகையுடன், வட்டியும் சேர்த்து நாம் கட்ட வேண்டும். இந்த  வட்டி தான் , “Cost of Credit” எனவும் சொல்லப்படும். அது போல வங்கிகளுக்கு பணத்தேவை ஏற்படும் போது ரிசர்வ் வங்கியை நாடுகிறது. ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு தேவையான கடன் தொகையை அதன் அரசாங்க பத்திரங்கள் விற்பனை மூலம் பணத்தை திரட்டி தரும். அதற்கு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு விதிக்கும் வட்டி விகிதமே, ரெபோ விகிதமாகும் (Repurchase Rate).

 

உதாரணமாக:

 

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ விகிதத்தை 4 % என அறிவிக்கிறது எனில், வங்கி ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் ரூ. 100 க்கு,  4 ரூபாய் வட்டியை செலுத்தும்.

 

அதனால் தான் ரெபோ விகிதம் அதிகமாகும் போது வங்கிகளும் கடன் மற்றும் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும்.

 

ரிவர்ஸ் ரெபோ விகிதம் (Reverse Repo Rate):

 

வங்கிகள் தங்களது உபரித்தொகையை (Surplus Funds) ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்தால் (குறுகிய காலத்திற்கு) அதற்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெபோ விகிதம் எனப்படும். ரிசர்வ் வங்கி இந்த Reverse Repo விகிதத்தின் அடிப்படையில் வங்கிகளுக்கு வட்டியை அளிக்கும்.

 

பண இருப்பு விகிதம் (Cash Reserve Ratio -CRR):

 

வங்கிகள் தங்களிடம் உள்ள எல்லா பணத்தையும் கடனாக அளிக்க முடியாது. ஒரு சிறு தொகையை ரிசர்வ் வங்கியில் இருப்பு (Reserve) தொகையாக கட்டாய டெபாசிட் செய்ய வேண்டும். அது தான் Cash Reserve Ratio. வங்கிகள் இந்த டெபாசிட் தொகையை வர்த்தக, தனி நபர் கடன்களுக்கு அளிக்க இயலாது.

 

உதாரணமாக:

 

நாம் ரூ. 100 ஐ வங்கியில் சேமிக்கிறோம் என்றால், அந்த முழு பணத்தையும் வங்கி மற்றொருவருக்கு கடனாக கொடுக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் CRR விகிதம் –  6 % எனில், நாம் டெபாசிட் செய்த ரூ. 100 ல், 6 ரூபாயை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யும்; மீதம் உள்ள ரூ. 94 ஐ கடன்களுக்கோ, மற்ற முதலீட்டு செலவுகளுக்கோ பயன்படுத்தும்.

 

அனுமதிக்கப்பட்ட பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio):

 

வங்கிகள் தாங்கள் பெறும் தொகையில் சிறு தொகையை அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். அந்த தொகை விகிதம் தான் Statutory Liquidity Ratio (SLR). இந்த தொகைக்கு அரசாங்கத்திடம் இருந்து வங்கி,  வட்டி வருமானத்தை பெறும். இந்த SLR விகிதத்தை நிர்ணயிப்பது RBI ஆகும்.

 

உதாரணமாக:

 

ரிசர்வ் வங்கியின் SLR விகிதம் – 10 %

 

வங்கி நம்மிடமிருந்து பெறும் ரூ. 100 ல்  10 ரூபாயை அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். ஏற்கனவே நாம் சொன்னது போல CRR விகிதத்திற்கும் டெபாசிட் செய்ய வேண்டும். ஆக, CRR மற்றும் SLR தொகை போக தான், வங்கிகள் கடன் மற்றும் முதலீடு, செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.

 

நாட்டின் பொருளாதார தன்மை மற்றும் பணவீக்கத்திற்கு தகுந்தாற் போல தான், ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித கொள்கைகளை மாற்றியமைக்கும். Repo  விகிதம்,SLR மற்றும் CRR விகிதம் குறைந்தால், பணப்புழக்கமும் நன்றாக ஏற்பட்டு மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனும் கிடைக்கும். தொழில்களும் மேம்பட்டு, நாட்டின் பொருளாதாரமும் உயரும். மாறாக ரெபோ விகிதங்கள் அதிகமிருந்தால், பொருளாதாரத்தில் மந்தநிலையை உருவாகும்.

 

சில சமயம் நமக்கு ஒரு சந்தேகம் இருக்கும். அதாவது ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் நமக்கான கடன் தொகைக்கு வட்டியை குறைக்கவில்லையே என்று ! அதற்கு காரணம், வங்கிகளுக்கென ஒரு அடிப்படை வட்டி விகிதம் (Base Rate) உள்ளது. Base Rate என்பது ஒரு குறைந்தபட்ச விகிதத்தை பராமரிப்பது, அதற்கும் கீழ் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்காது. இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இந்த அடிப்படை விகிதம் எப்போது மாறுபடுகிறதோ (குறைந்தால்), அப்போது ரிசர்வ் வங்கியின்  ரெபோ விகித தாக்கம், நமக்கான கடன் வட்டிக்கும் பலனை தரும்.

சில அண்மைய புள்ளி விவரங்கள்:

வாழ்க வளமுடன்,

 

வாழ்த்துக்கள் வர்த்தக மதுரையுடன் !

 

வாடகையா, ஒத்தியா (குத்தகை) ?

 

வாடகையா, ஒத்தியா (குத்தகை)   ?

SIP(Systematic Investment Planning)  vs Lumpsum Investment

 

இன்று நாம் அனைவரும் நம் வருமானத்தில் சேமிக்கிறோமோ இல்லையோ, ஆனால் நமக்கான கவுரவுமாக சில செலவுகளை கொண்டிருக்கிறோம். நாம் சம்பாதிப்பதை ஒரு கவுரவமாக நினைக்கிறமோ இல்லையோ, ஆனால் சில விஷயங்களை மதிப்புடன் வைத்துள்ளோம். நமது கவுரமாக (ஆடம்பரத்துடன்) கார் வாங்குவது, வீடு கட்டுவது (அ) வாங்குவது, அழகுக்கு, தொழில்நுட்ப சாதனங்களை வாங்கி சேர்ப்பது… இவற்றில் ஏழை – பணக்கார பாகுபாடின்றி எல்லாரும் மதிப்புடன் விரும்புவது ஒரு சொந்த வீடு வைத்திருப்பது தான். ஏனெனில் நமது நாட்டில் சொந்த வீடுகள் அதிகமாக இருப்பினும் ஒவ்வொரு தனி நபரும் தனக்காக சொந்த வீடு இருப்பதையே கவுரவ செலவாக கொண்டுள்ளோம் (அதனாலே சிலருக்கு தங்குவதற்கு கூட வீடும் இல்லை). நாம் வாடகை வீட்டில் இருப்பதாய் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கு நமது காரணங்களாக,

‘வாடகை வீடு சௌகரியமாக இல்லை, வீட்டுக்காரரின் கெடுபிடிகள்’ போன்றவை. சரி வாடகை வீடு தான் என்றாலும், அதிலும் மற்றொரு விவாதம் – வாடகைக்கு இருப்பதா, ஒத்திக்கு இருப்பதா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வாடகை என்றால் மாதா மாதம் நமது வருமானத்திலிருந்து ஒரு தொகையை இதற்காக செலவு செய்ய வேண்டும். ஒத்தி வீடு எனில், வீட்டு சொந்தக்காரருக்கு ஒரு முழுத்தொகையை கொடுத்து விட்டு, வீட்டை காலி செய்யும் பொது அந்த தொகையை பெற்று கொள்வது;  அதாவது வீட்டுக்காரரிடம் ஒரு தொகையை டெபாசிட் செய்து விட்டு சில வருடங்களுக்கு பிறகு அதே தொகையை எந்த வட்டியும் பெறாமல் பெற்று கொள்வது; வேண்டுமானால் வீட்டுக்காரர் தான் பெற்ற தொகையை அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்திருக்கலாம் (அ) தனது பிற செலவுகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம். இந்த இரண்டிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வசதி. சில மாதங்களுக்கு மட்டும் ஒரு பகுதியில் குடியிருக்க நினைப்போர் வாடகை கொடுத்து விட்டு போவோம், அது தான் நமக்கு வசதி என்பார்கள். சிலர், நாம் தான் இந்த பகுதியில் அடுத்த சில வருடங்களுக்கு இருந்தாக வேண்டுமே, அதனால் எதற்கு இந்த வாடகை செலவு, ஒத்திக்கு இருந்து விட்டு முடிவில் நமது முதல் தொகையை பெற்று செல்வோம் என்பார்கள். வாடகையா, ஓத்தியா ? இது ஒரு விவாதமாகவே எப்போதும் இருக்கிறது.

 

இது போல தான் முதலீட்டிலும், நான் மாதா மாதம் (Recurring Deposit -RD) சேமிப்பதா, (அ) ஒரு முறை மட்டும்(Fixed Deposit -FD) முதலீடு செய்து விட்டு செல்வதா… எது சிறந்தது என கேட்பதுண்டு.

 

மாதாந்திர முதலீடு (Systematic Investment Planninng -SIP)  vs  ஒரு முறை மட்டும் மொத்த முதலீடு (Lumpsum):

 

 

சுருக்கமாக நம் வீட்டில் இந்த நிகழ்வு எப்போதும் நடப்பதுண்டு; என் பெற்றோரை நான் எப்போதும் கவனித்து கொண்டிருக்கிறேன்; ஆனால் என் அண்ணன் எப்போதாவது என் பெற்றோருக்கு உதவி செய்து விட்டு நல்ல பெயர் வாங்கி செல்கிறான், இது என்ன நியாயம் என பலர் சொல்வதுண்டு. விநாயக – முருகப்பெருமான் பழக்கதை தான் 🙂 இந்த முதலீடு விஷயம் அவ்வாறு மட்டுமல்ல…

 

உதாரணத்திற்கு:

 

ராம்குமார் என்பவர் ஒரு தொழில் முனைவோர், தனது வங்கி வைப்பு கணக்கில் இன்று ஒரு முறை மட்டும் மொத்த முதலீடாக ரூ. 1,00,000 /- ஐ (வருடங்கள் – 5, ஆண்டு வட்டி விகிதம் – 7 %) வைத்துள்ளார். நமது ராம்குமாரின் அருமை தம்பி கோபி அவர்கள் தன் அண்ணனை போல தொழில் செய்யா விட்டாலும் மாத சம்பளக்காரராக உள்ளதால் அவர் தனது மாத சம்பளத்திலிருந்து சேமித்து மாதம் ரூ. 1667 /- (அதாவது வருடத்திற்கு ரூ. 20,000 /-) அஞ்சலக RD ல் போட்டு வருகிறார்(இவருக்கும் வருடங்கள் – 5, ஆண்டு வட்டி – 7 %) ஆக மொத்தம் இவரும் 5 வருடத்திற்கு மொத்தமாக ரூ. 1 லட்சம்.

 

5 வருட முடிவில் இருவர் பெறும் முதிர்வுத்தொகை:

                      

  • ராம் குமார் –    ரூ. 1,40,300 /-
  • கோபி           –    ரூ. 1,19,300 /-

 

என்னடா இருவரும் ஒரே தொகையை, ஒரே காலத்திற்கு தான் முதலீடு செய்தார்கள்; ஆனால் தம்பி கோபியை விட ராம்குமார் அப்படி என்ன செய்து விட்டார் ? இது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல; அது தான் கூட்டு வட்டியின் ரகசியம். இதனை புரிந்து கொள்ள நம் பள்ளியில் 6 ம் வகுப்பு கணக்கே போதும். எளிதாக புரிய வேண்டுமானால் ராம்குமாரின் ஒரு முறை முதலீடான ரூ. 1 லட்சம், 5 வருடத்திற்கு கூட்டு வட்டியில் தான் அந்த ரூ. 1,40,300 முதிர்வு தொகையை கொடுத்தது. அதாவது தான் முதலீடு செய்த முதல் நாளிலிருந்து ஐந்தாம் வருட முடிவு நாள் வரையில் முழுத்தொகைக்கும் கூட்டு வட்டி வேலை செய்தது. ஆனால் கோபி விஷயத்தில் அப்படியல்ல. கோபியின் முதல் மாத முதலீடாக ரூ. 1667 /- மட்டுமே கூட்டு வட்டி 5 வருடமாக வேலை செய்தது. முதலீட்டு மாதங்கள் அதிகமாக கூட்டு அதற்கான கூட்டு வட்டி காலமும் குறைந்தது. அது தான் கூட்டு வட்டியின் ரகசியம், நீண்ட காலத்தில் பிரமாதமாக செயல்படும்.

 

நமது பள்ளி வகுப்பின் கூட்டு வட்டி (Compound Interest) Formula:

 

                         FV = PV  X  (1+r) ^n   

 

  • FV = Future Value (எதிர்கால மதிப்பு /தொகை)
  • PV = Present Value (தற்போதைய மதிப்பு /தொகை)
  •  r  = Annual interest rate (ஆண்டு வட்டி விகிதம்)
  •  n = Number of periods (காலங்கள் / வருடங்கள் )

அப்படியெனில் ராம்குமார் செய்வது தான் சிறந்தது என முடிவுக்கு வருவதா ? அது தான் இல்லை. ஒரு நல்ல முதலீடு என்பது காலத்தை சார்ந்தே உள்ளது. அது வெறும் பணத்தை கொண்டு மட்டுமல்ல. சிறு துளி பெருவெள்ளம் போல… நீங்கள் எத்தனை துளிகள் சேர்வதற்காக காத்து கொண்டிருக்கிறீர்களோ, அது தான் பெருவெள்ளமாகும். காலத்தினூடே பொறுமையும் அவசியம் (Power of Compounding).

 

உதாரணமாக ராம்குமாரால் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யும்படியும், கோபியால் அடுத்த 10 வருடங்களுக்கு மாத முதலீடு செய்ய முடியுமானால்…  

 

  • 10 வருடங்களுக்கு பிறகு, ராம்குமார் பெறுவது – ரூ. 1,96,700 /-
  • 10 வருடங்களுக்கு பிறகு, கோபி பெறுவது – ரூ. 2,86,750 /-

 

இப்போது புரிகிறதா !

சமீபத்தில் நானும் என் நண்பர் ஒருவரும் பிரபல வார இதழின் (நிதி சார்ந்த) முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது ஒரு பரஸ்பர நிதியின் மேலாளர் அவர்கள் ஒரு வரைபடத்தை காண்பித்தார், ‘ நீங்கள் 2002 ல் ஒரு பிரபல கம்பெனியின் வாகனத்தை (Car) வாங்கியிருந்தால் அதன் மதிப்பு அன்று ரூ. 5 லட்சம் என்றும் அதன் இப்போதைய மதிப்பு குறைந்திருப்பதுடன், வாகனத்தின் தேய்மான செலவு, காப்பீடு செலவும் தான் அதிகமாயிருக்கும். ஆனால் அதே 2002 ல் நீங்கள் ஒரு பரஸ்பர நிதித்திட்டத்தில் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்திருந்தால் இன்று 2017 ல் அதே காரையும், உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு செலவு மற்றும் ஒரு ஆடம்பர திருமணத்தையும் செய்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் 2002 ல் செய்த ரூ. 5 லட்ச முதலீடு இப்போது (June, 2017) ரூ. 2.60 கோடியாக (பரஸ்பர நிதியில்) இருந்திருக்கும் ‘ என்றார். மற்றொரு படத்தில் நீங்கள் இளமையில் (25 வயது) முதலீடு செய்தால் உங்கள் ஓய்வு காலத்தில் (60 வயது) இவ்வளவு தொகை பெறுவீர்கள், அதனால் இளமையில் முதலீடு செய்யுங்கள் என காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த என் நண்பர் என்னிடம், ‘ நல்லா படத்தை காண்பித்து ஏமாற்றுகிறார்கள், ஏன் 35 வயதில் சேர்த்தாலும் 70 வயதில் இவ்வளவு கிடைக்கும் என சொல்லலாமே. எல்லாம் 35 வருட கணக்கு தானே ‘ என்றார். ஆனால் நாம் முதலீடு சார்ந்த விஷயத்தில் சற்று நடைமுறைகளுடன் சிந்திக்க பழக வேண்டும்.

25 வயதில் உங்களால் முதலீடு செய்து 60 வயதில் ஓய்வு பெறலாம். அதை தான் அரசாங்கமும் விரும்புகிறது. உங்களை அவர்கள் 70, 80 வயதில் வேலை செய்வதை விரும்பவில்லை. 35 வயதில் உங்களால் முதலீடு செய்ய முடியும், ஆனால் உங்களால் 70 வயது வரை தொடர முடியுமா ? அதற்கான வருமான வாய்ப்பு எளிதா ?

 

தற்போதெல்லாம் எல்லோரும்,  ‘இளமையில் ஓய்வு பெற போகிறேன் ‘ என்ற  சிந்தனை கொண்டவர்கள். நீங்கள் 70, 80 வயதுகளில் எப்படி நன்றாக சம்பாதித்து இருக்க முடியும். அந்த வயதில் நமது உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம் (பணத்தை விட). ஆதலால் நாம் நடைமுறைக்கு ஒத்து வரும் நம்மால் இயன்ற முதலீடை மேற்கொள்ளலாம். தேவை இருப்பின் முதலீட்டினை அதிகரித்தும் பயன் பெறலாம்.

 

வாடகையும், ஒத்தியும் நமக்கு அவ்வப்போது தேவை தான். குறுகிய கால மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு தகுந்தாற் போல் நாம் வாடகையையும் (SIP), ஒத்தியையும் (Lumpsum Investing) தேர்ந்தெடுக்கலாம். சொந்த வீடு தேவையுள்ளவர்கள் இப்போது தான் கடன் வாங்கி வீடு கட்ட வேண்டுமென்ற அவசியமில்லை; EMI கட்டுவதற்கு பதில் மாதாந்திர SIP ஐ தொடங்கியும் பிற்காலத்தில் ஒரு நல்ல வீட்டை வாங்கலாம் (அ) கட்டலாம்.

 

கடனில்லாமல் வாழ்வதும் ஒரு பெரும்பேறு தான் !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

http://www.varthagamadurai.com

(Slide Image Source: dreamstime.com)

Financial Blog in Tamil