Category Archives: Think Invest

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

Can I invest in Initial Public Offering ?

பொதுவெளியில் ஒரு நிறுவனம் தனக்கு தேவையான முதலீட்டை பெறுவதற்கு இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றி கொள்வது, மற்றொன்று பங்குச்சந்தையில் பட்டியலிட தேவையான விவரங்களை வெளியிடுவது.

முதலீட்டை பெற விரும்பும் நிறுவனம் பங்குச்சந்தை அமைப்பிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் தனது நிறுவன பங்குகளை பட்டியலிடும். துவக்கத்தில் முதன்மை சந்தையில்(Primary Market) மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த பங்குகள் விண்ணப்பம் செய்யும் பங்குதாரர்களுக்கு, கணினி வரிசையில் மட்டுமே கிடைக்கப்பெறும். பின்னர் அவை இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) வாங்க மற்றும் விற்பதற்கு வெளியிடப்படும்.

முதன்மை சந்தையை தான் நாம் ஐ.பி.ஓ(IPO) என்கிறோம். இங்கே ஒரு நிறுவன பங்குகளுக்கான தேவையை உறுதி செய்யும். முதலீட்டாளர்களிடையே இந்த பங்கு வரவேற்பை பெறுகிறதா, எத்தனை மடங்கில் இந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்ற விவரங்களை காணலாம். இதற்கான காலம் ஓரிரு நாட்கள் இருக்கலாம். பின்னர் எப்படியும் இந்த பங்குகள் வர்த்தகமாக இரண்டாம் நிலை சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

முதன்மை சந்தையில் நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலை சந்தையில் தான் வாங்கும் மற்றும் விற்கும் என முழு வர்த்தகம் நடைபெறும். பொதுவாக ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்வது நல்லதா என சிலர் கேட்கிறார்கள். குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கலாமே  என கேட்பதுண்டு. உண்மையில் ஐ.பி.ஓ என்பது ஒரு நிறுவனம் தன்னை சந்தையில் அறிமுகப்படுத்தி கொள்ளும் காலம் தானே தவிர, வேறொன்றும் இல்லை.

  • ஐ.பி.ஓ வெளியீட்டில் கிடைக்கப்பெறும் பங்கு விலை தான் உண்மையான விலை என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் தன்னை நிலைநிறுத்த மற்றும் தனது முதலீட்டை பெற குறிப்பிட்ட பங்குதாரர்களிடம் பங்குகளை விற்றுவிட்டு செல்கிறது. இதற்கு பங்குச்சந்தை அமைப்புகள் ஒரு தளத்தை(Platform) ஏற்படுத்தி கொடுக்கிறது. இங்கே ஏற்ற-இறக்கம் காணப்படாததால், நிறுவனத்திற்கு தேவையான நிதியை சுலபமாக பெற்று விடும். அதே வேளையில் இது முதலீட்டாளர் பார்வையில் லாபமா ?
  • உலகின் மிகப்பெரிய ஐ.பி.ஓ. முதலீடு, கடந்த 2019ம் ஆண்டில் சவூதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்தில் நடந்தது. இதன் மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவதாக அலிபாபா குழுமத்தின் 25 பில்லியன் டாலர்களும்,மூன்றாவது இடத்தில் சாப்ட்பேங்க் குழுமத்தின் 24 பில்லியன் டாலர்களும் உள்ளன.
  • ஐ.பி.ஓ. வில் வெளியிடப்படும் நிறுவனங்கள் சில சமயங்களில் மக்களிடம் பெயர்போன நிறுவனமாக இருக்கக்கூடும். உண்மையில் சந்தைக்கு வரும் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை முழுமையாக கிடைக்க பெறாது. ஐந்து வருடங்களுக்கான நிதி நிலை அறிக்கை மட்டுமே, முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும்.
  • முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை நம்மால் அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. ஐந்து வருட நிதி அறிக்கையை கொண்டு, ஒரு நிறுவனம் நன்றாக செயல்படும் என எதிர்பார்ப்பது நம்மை ஏமாற்ற செய்யும். தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் ஒரு நிறுவனத்தின் ஜாதகத்தை நம்மால் முழுமையாக காண முடியாது. அப்படியிருக்க நிதிநிலை அறிக்கைகளில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
  • ஆட்டுமந்தை கூட்டம் போல எல்லோரும் பங்கு வாங்குகிறார்கள் என நாமும் வாங்கி லாபம் பார்த்து விடலாம் என நீங்கள் ஐ.பி.ஓ முறையில் சென்றால், உண்மையில் அதன் பெயர் சூதாட்டமே, அவை முதலீடு அல்ல. நிறுவனத்தை பொறுத்தவரை தனது முதலீட்டை முதன்மை சந்தையில் தான் திரட்ட முடியும். அவ்வளவே. அவர்களுக்காக தான் அந்த தளம் உருவாக்கப்பட்டதே தவிர நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்களுக்காக அல்ல.

புகையிலையை சிறிது நேரம் நுகர்ந்து கொள்கிறேன், நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், வாழ்நாள் முழுவதும் அது உங்களை தொற்றி கொள்ளும். அது போல தான் ஐ.பி.ஓ. குறுகிய கால லாப ஆசையும்.

  • ஒரு நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறுமா, அவை வெளிப்படையாக தகவலை சந்தைக்கு அளிக்குமா, முதலீட்டாளர்களான நமக்கு நீண்டகாலத்தில் என்ன பயனை அளிக்கப்போகிறது என்பதனை நாம் நீண்டகாலத்தில் தான் காண முடியும். வெறும், முதன்மை சந்தையில் பங்குகளை வாங்குவதால் அல்ல.
  • துவக்கத்தில் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மட்டுமே முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கலாம் என்ற நிலை இன்று மாறி, சிறு முதலீட்டாளர்களும் களம் இறங்குகின்றனர். நினைவில் கொள்ளவும், முதலீட்டு நிறுவனங்கள் வாங்கும் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை எப்போது விற்க கூடும் என உங்களுக்கு உடனடியாக தெரிவதில்லை. அவர்கள் வாங்கும் மற்றும் விற்பதற்கான காரணமும், காலமும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வாங்குவது, விற்பது  என அனைத்தும் மற்றவர்களின் பண முதலீடு தான். ஆனால், சிறு முதலீட்டாளரான நமக்கு ?

ஆசியாவின் மிகப்பெரிய நகை தொழிலை கொண்ட நிறுவனம் என கீதாஞ்சலி ஜெம்ஸ்(Gitanjali Gems) முதன்மை சந்தையில் பட்டியலிடப்பட்டது. தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, இந்தியாவில் உள்ள நகை தொழிலில் 50 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது என சொல்லப்பட்டது. பங்குகளுக்கான முதலீடும் அமோகமாக வந்தது.

இந்த பங்கின் விலை 600 ரூபாய்க்கு மேல் சென்ற காலமும் உண்டு. ஒரு ரூபாய்க்கு வந்து, பின்னர் பங்குச்சந்தையிலிருந்து தூக்கி வீசப்பட்டதும் மற்றொரு கதை. சொல்லப்பட்ட நிதி அறிக்கைகள் அத்தனையும் பொய் எனவும், அந்த நிறுவனம் எந்த தொழிலையும் மேற்கொள்ளாமல், பல போலி நிறுவனங்களை உருவாக்கியதும் மிகவும் தாமதமாக தான் வெளிவந்தது. ஐ.பி.ஒ. வில் முதலீடு செய்து விட்டு இந்த நிறுவனத்தில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. கடந்த 2008ம் ஆண்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இந்த நிறுவன பங்கின் விலை மிகவும் மலிவாக கிடைத்தது என முதலீடு செய்தவர்களும் இன்று முழு முதலீட்டை இழந்துள்ளனர்.

உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களில் ஒருவர் என போற்றப்பட்டவர், 1996-2006 காலங்களில் நாட்டின் மிக சிறந்த தொழில்முனைவோர், தொழிலதிபர் என பல விருதுகளை வாங்கியுள்ளார் இவர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், பங்கு ஒன்றுக்கு 800 ரூபாய்  விலையிலிருந்து 80 பைசா வரை சென்றுள்ளதை பார்த்திருக்கலாம். குழும நிறுவனங்கள் அனைத்தும் கடனில் தத்தளித்து திவால் நிலைக்கு சென்று விட்டது. ஆம், அனில் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் குழும நிறுவனங்கள் தான். இது போல எண்ணற்ற நிறுவனங்களை சொல்லலாம்.

வெறும் பிராண்டுகளை மட்டுமே கொண்டு முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் சாதித்து விட முடியாது. பின்னர் போலி நிறுவனங்களை பற்றியும், மோசடி பேர்வழிகளை பற்றியும் நாம் கவலைப்பட கூடாது. சந்தையில் நாம் முதலீடு செய்ய வந்திருக்கிறோம். லாபம் மட்டுமே நமது குறிக்கோளாக இருந்தாலும், நஷ்டத்தை தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும். நீங்கள் சந்தையில் நீண்டகாலத்தில் சம்பாதிக்க, முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடு மிகவும் முக்கியமாகும்.

குறைந்தது பத்து ஆண்டு கால நிதிநிலை அறிக்கைகள் தேவை. அதனை விட தேவையான ஒன்று, நிறுவனத்திற்கு கடன் எதுவும் உள்ளதா, நிறுவனர்களின் மதிப்பு மற்றும் செயல்பாடு எவ்வாறு உள்ளது, நிர்வாக திறன் எப்படி மற்றும் இந்த நிறுவனம் அதன் துறையில் உள்ள எதிர்கால சவாலை எப்படி கையாள போகிறது என்பதனை அறிவது அவசியமாகும்.

ஐ.பி.ஓ முறையில் வெளிவந்துள்ள நிறுவனங்களில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள், இரண்டாம் நிலை சந்தைக்கு வந்த அடுத்த ஐந்து வருடங்களில் தங்கள் மதிப்பை இழக்கின்றன என்று தரவுகள் சொல்கிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பங்கு விலைக்கு தகுந்தாற் போல நிறுவனத்தின் வளர்ச்சி இல்லாமை, கடனில் சிக்கி தவிப்பது மற்றும் நிர்வாக திறன் குறைபாடு என மூன்று காரணிகளை முன்னிலைப்படுத்துகிறது.

கடந்த 20 வருடங்களில் பொதுவெளியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள், தங்கள் முதன்மை சந்தை விலையை காட்டிலும் குறைவாக தான் தற்போது உள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஐ.பி.ஓ முறையில் வெளிவரும் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப்(Startup) நிறுவனங்களும் பெரும்பாலும் தங்கள் இரண்டாவது முதலீட்டை பெறுவதில் தோல்வியடைகின்றன. இதன் காரணமாக அதன் மதிப்பும் பின்னாளில் விலை போவதில்லை.

நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது, கடனில்லா நிறுவனங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நிர்வாகம் மற்றும் சீரான வருவாய் வளர்ச்சி இருக்கும்பட்சத்தில் அது சிறு முதலீட்டாளர்களின் நலனையும் பாதுகாக்கும்.

இன்று நிர்வாக குறைபாடு காரணமாக இரண்டாம் கட்ட முதலீட்டையும் பெறுவதில் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது யெஸ் வங்கி(Yes Bank). பங்கு விலையும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய லாபம் என சொல்லப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் இன்று தின வர்த்தகர்களால் பந்தாடப்பட்டு, பங்குச்சந்தையிலிருந்து வெளியேறி வருகின்றன. அவற்றின் ஐ.பி.ஓ. வரலாற்றை பார்த்தால் நமக்கு தெரியும், அது ஏன் சோபிக்க தவறி விட்டனவென்று !

ஐ.பி.ஓ, இரண்டாம் கட்ட முதலீடு, மூலதனத்தை உயர்த்துவது, கடன்களை மறுசீராய்வு செய்ய முதலீட்டை பெறுவது, உரிமை பங்குகள், நிறுவனங்களை பிரித்தல் மற்றும் புதிய நிறுவனங்களை உருவாக்குதல் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். இதெல்லாம் உங்களுக்கு புரியவில்லையா ? காலங்காலமாக தொழில் செய்து வரும் நல்ல மற்றும் சுமாரான நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு நிம்மதியாக அமருங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள் 

6 Things to Learn on Personal Finance – Escape from the Economic Crisis

தனிநபர் நிதி சார்ந்த கற்றல் என்பது நம் நாட்டை பொறுத்தவரை தற்போதைய நிலையில் குறைவு தான். அதே வேளையில் சேமிப்பு என்ற ஒற்றை வார்த்தை நமக்கு பல காலமாக நம்முடைய குடும்பத்தில் இருந்துள்ளது. நுகர்வோர் சந்தையில் வெறுமென சம்பாதித்த பணத்தை செலவழிப்பது, எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவது, தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி குவிப்பது, எதிர்காலத்தில் இது தேவைப்படும் என உபயோகமில்லாத விஷயங்களை செய்வது என நாம் பொதுவாக நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி வருகிறோம்.

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் – உணவு, உடை மற்றும் உறைவிடம். நவீன யுகத்தில் அடிப்படை கல்வியும், பொருளாதாரம் சார்ந்த சில நிதி பாதுகாப்புகளும் மட்டுமே கூடுதல் தேவையாக இருக்கும். ஆனால் நாம் நிதி பாதுகாப்புகளை செய்வதை விட்டு விட்டு எண்ணிலடங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி குவித்து வருகிறோம். என் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்த சாமான்கள் இன்றும் என் வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ளது என சொல்வதை கேட்டிருப்போம்.

நம்மை சுற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றும் கண்காட்சி பொருட்கள் அல்ல. அது பெருமையாக பேசக்கூடிய விஷயமும் அல்ல. தனிநபர் ஒருவர் தனக்கு தேவையில்லாத ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது , தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் செய்கிறது அல்லது அதன் விலை அதிகமாக கூடும்.

எனவே தேவையறிந்து, வாங்க கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயன்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும். அப்படி சொல்லும் போது, தனிநபர் நிதி விஷயத்தில் ஆறு விஷயங்களை அடிப்படை நிகழ்வாக கற்று கொள்ளலாம்.

  • சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் இடையேயான புரிதல் 
  • பணவீக்கம்
  • நிதி இலக்குகளை திட்டமிடுதல்
  • காத்திருக்கும் ரகசியம்
  • கூட்டு வட்டியின் மகிமை – பள்ளிக்கால பணக்கார பாடம்
  • எந்தவொரு முதலீட்டையும் தொழில் போல அணுக கற்று கொள்ளுங்கள் 

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுவர். எல்.ஐ.சி. நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தை வாங்கி கொண்டு நான் சேமிக்கிறேன் அல்லது முதலீடு செய்கிறேன் என நினைத்து கொள்வர். சேமிப்பு என்பது பெரிதாக வளரும் வாய்ப்பு இல்லாதது. அது பணவீக்கத்தை விட குறைவான வட்டி வருவாயை தான் கொண்டிருக்கும். உதாரணமாக, அஞ்சலகம், வங்கி, சீட்டு, தங்கம், ரொக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அஞ்சலகத்தில் கிடைப்பதை சிறு சேமிப்பு திட்டம் என்று தான் சொல்வர். அதனை முதலீடு என சொல்லப்படவில்லை.

முதலீடு(Investing) என்பது இரண்டு விஷயங்களை நிறைவு செய்பவை. ஒன்று தொடர் வருமானத்தை(Regular income or Cash Flow) ஏற்படுத்துவது, மற்றொன்று நீண்டகாலத்தில் அதனை வைத்து கொண்டு பின்னர் ஒரு நல்ல விலைக்கு விற்பதன் மூலம் லாபம்(Capital Appreciation) ஏற்படுத்துவது. ரியல் எஸ்டேட், பங்குகள், தொழில்கள் ஆகியவை முதலீடு என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அவை இரு வகையான வருமானங்களை தர கூடியவை. வெறுமென வீட்டு மனைகளை மட்டும் விற்காமல், வீட்டு வாடகை, வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க பெறும் தொடர் வருமானம், பங்குகளில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை, தொழில்களில் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றை சொல்லலாம். எதிர்காலத்தில் இந்த மூன்றையும் விற்றால் அதற்கும் லாபம் கிடைக்கும். எனவே சேமிப்பும், முதலீடும் ஒன்று அல்ல.

நினைவில் கொள்ளுங்கள், தங்கம் என்பது பணவீக்கத்தை ஒட்டியும், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சி காலங்களில் மட்டுமே அதன் செயல்பாடுகள். அது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு என சொல்லமுடியாது. நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்கள் வாழ்நாளில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படும். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு அது அடிக்கடி பயன்படக்கூடியது என நீங்கள் நினைத்தால், உண்மையில் உங்கள் நிதி நலனில் சில பிரச்சனைகள் உள்ளது என அர்த்தம்.

தங்கத்தின் மூலம் தொடர் வருமானத்தை ஏற்படுத்த முடியாது என்பதனால் தான் அது சேமிப்பு பிரிவில் உள்ளது. தங்கம் கடந்த 20 வருடங்களில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி வருவாயை ஒட்டி தான் உள்ளது. டாலர் மதிப்பில் அது வர்த்தகமாவதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பது போல தோன்றுகிறது. நாணயம் என்ற தொட்டுணரக்கூடிய விஷயம் இல்லையென்றால், தங்கத்திற்கும் மதிப்பு கிடையாது. இது தான் கடந்த வரலாற்றில் அலுமினியத்தில் நடந்தது.

மாத முதலீட்டிற்கும், மாத தவணைக்கும்(SIP vs EMI) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். மாதாமாதம் சேமித்து அல்லது முதலீடு செய்து, முதிர்வில் ஒரு பொருளை வாங்க வேண்டுமா அல்லது இ.எம்.ஐ.(EMI) என கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா ? நீங்கள் கடன் மூலம் ஒரு பொருளை உடனே வாங்கி விட்டாலும், அந்த கடனை அடைக்கும் வரை அதற்கு நீங்கள் உரிமையாளர் கிடையாது. இது கடன் மூலம் பெற்ற வீடு, வாகனம், கைபேசி, குளிர்சாதனம் என அனைத்துக்கும் பொருந்தும். சேமித்த பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு முழு உரிமையாளர் நீங்களே.

கிரெடிட் கார்டுகளில் கவனம் தேவை. உண்மையில் தொழில் செய்பவர்களுக்காக  அறிமுகப்படுத்தபட்ட கடன் அட்டைகள் தான் அவை. ஆனால் இன்று தொழில் புரிபவர்கள் அதனை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள் கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது, கடனில்லா வாழ்வும் ஒரு சுகமே. வல்லரசான அமெரிக்காவில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் அட்டையிலும், கடனிலும் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதத்திற்கு மேல். அமெரிக்காவில் தனிநபர் ஒருவரின் கடன் மட்டும் சராசரியாக 90,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாய்) !

பணவீக்கத்தை பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை. தேவையில்லாத பதுக்கல், எதிர்பாராத கூடுதல் தேவைகள் தான் ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை நிர்ணயிக்கின்றன. அதிகமான உற்பத்தி இருக்கும் நிலையில், தேவை குறைவாக இருப்பின் அதன் விலை அதிகமாக இருக்காது. நீண்டகாலத்தில் பணவீக்கம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடிய ஒன்று.

நிதி இலக்குகளை திட்டமிடுதலின்(Financial Goals) அவசியம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அவை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளாக இருக்கலாம். குடும்பத்திற்கான தேவையான அளவு காப்பீடு, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு, அவசரகால நிதி போன்றவற்றை ஏற்படுத்தி விட்டு தான் நிதி இலக்குகளை திட்டமிட வேண்டும்.

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலை காத்திருத்தல்(Delayed Gratification) மூலமே கிடைக்கும். உலகின் பெரும்பாலான பணக்காரர்கள் எளிமையான வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் தான். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, நீண்டகாலத்தில் முதலீடு செய்து அதனை அறுவடை செய்வது தான் அவர்களின் வேலை. நீண்டகால முதலீட்டிற்கு மட்டுமே அரசு சார்பில் வரி சலுகையும் கிடைக்கப்பெறுகிறது, குறுகிய கால லாபத்திற்கு அல்ல.

கூட்டு வட்டியின் மகிமை நமது பள்ளிக்கால பாடத்தில் இருந்த ஒரு பக்கம் தான். ஆனால், உண்மையில் நாம் கல்வியை முடித்து விட்டு வேலைக்கு சென்றவுடன் அதனை மறந்து விட்டோம். அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஒருவரை உயர்த்தி விடாது. கடனில்லாமல், அளவாக சம்பாதித்தாலும் நல்ல ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டு எளிமையாக வாழ பழகினால் அதுவே உயர்வாகும். இதனை தான் பெரும் பணக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இளமை காலம் முதல் செய்யப்படும் தொடர் முதலீடு தான் ஒருவரின் செல்வத்தை உயர்த்துகிறது.

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

முதலீட்டை மேற்கொள்ளும் முன்னர், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் அதற்கான முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். வெறுமென போன்சி  (மோசடி திட்டம் – வட்டிக்கு பெரும் வட்டி) பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு எனக்கு மாதாமாதம் பணம் வருகிறது என சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். உண்மையில் நம் முதலீட்டை கொண்டு ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிவது அவசியமாகும். உங்கள் பணத்தை கொண்டு ஒருவர் நேர்மையாக தொழில் செய்தால் மட்டும் தான், உங்களுக்கான வருவாய் நிச்சயம். இல்லையென்றால், அது திவால் தான்.

சொல்லப்பட்ட கற்றலின் மூலம் நமது நிதி சிந்தனை மேம்படும். அளவான வாழ்க்கையை வாழ இயலும், அளவில்லா மகிழ்ச்சியை பெற முடியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை

ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும்  பங்குச்சந்தையின் கதை 

A Short Story. Key Points. Wealth Destroyer – Stocks

பொதுவாக பங்குச்சந்தையில் சில நிறுவன பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால் கோடீஸ்வரராக மாறலாம் என சொல்வதை கேட்டிருப்போம். 20 வருடங்களுக்கு முன்பு நீங்கள் இந்த பங்கில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால் இன்று அது 5 கோடி ரூபாய் பெறுமானம் பெறும் என்பதனையும் சிலர் சொல்வதுண்டு.

நடைமுறையில் உள்ள முதலீட்டு சாதனங்களில் தொழில்களை கொண்டு நல்ல  வருவாயை ஈட்ட முடியும் எனில், அது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதனால் மட்டுமே. அதே வேளையில் உங்கள் பணம் மற்றும் செல்வத்தை பதம் பார்க்கும் ஒரு முதலீட்டு சாதனமும் உண்டு. அதுவும் பங்குச்சந்தை தான்.

அப்படிப்பட்ட முதலீட்டு இழப்புகளை ஏற்படுத்திய நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் பல உண்டு. அவற்றின் சிறுகதைகளை இங்கே பார்ப்போம். சிறுகதைகளுக்கு இருக்கும் அழகே தனி தான். பங்குகளை அலசி ஆராய்வதில் சிறிய கதைகளாக சொல்லும் போது அதன் தன்மை ஆழமான வாசிப்பை ஏற்படுத்தும்.

சொல்லப்பட உள்ள பங்கின் நிறுவன பெயரை கதையின் முடிவில் நீங்களே அறிந்து கொள்ளலாம். பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டு முதலீட்டாளர்களின் பணத்தை பதம் பார்க்கும் பங்கு ஒன்று இதோ…

தற்போது இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்த பங்கு 60 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. நல்ல பங்கு தானே, வாருங்கள் கதைக்கு.

  • சொல்லப்பட்ட உள்ள நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் இந்திய பணக்காரர்களில் ஒருவராவார். முதலீடுகளை பெறுவதில் அவர் வல்லவரும் கூட.
  • தொலைத்தொடர்பு சேவையில் மேம்பட்ட CDMA தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. சிறிது வருடங்கள் கழிந்ததும், நிறுவனம் மற்றொருவரிடம் கைமாறியது. அவரும் இந்த நிறுவனத்தை தொடங்கியவருக்கு உறவுக்காரர் தான்.
  • நான்கு முறை சிறந்த விருதுகளை பெற்றவர் நமது புதிய ஓனர். ஆம், நாட்டின் மிக சிறந்த தொழிலதிபருக்கான விருதுகளை அவர் பெற்றார்.
  • 2008ம் ஆண்டில் மற்றொரு தொழில்நுட்ப சேவையில் அவர் நுழைந்தார். 3ஜி தொழில்நுட்பத்தை 2011ம் ஆண்டு கொண்டு வந்தார். 58,640 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலத்தில் எடுத்தார்.
  • எம்.டி.எஸ். கேபிள்(MTS Cable) என்ற நிறுவனத்தையும், டிஜி கேபிள்(Digicable) என்ற மற்றொரு நிறுவனத்தையும் கையகப்படுத்தினார். சில காரணங்களால் அவரால் 4ஜி தொழில்நுட்பத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
  • தொழில் போட்டி மற்றும் அதிக கடனால் தள்ளாடினார். ஏர்செல்(Aircel) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் தனது நிறுவனத்தை இணைக்க முயற்சி செய்தார். ஆனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
  • எரிக்சன்(Ericsson) என்ற நிறுவனத்துடன் இவருக்கு முதலீடு சார்ந்த மோதல் ஏற்பட்டது. எரிக்சன் இவருடைய நிறுவனத்தின் மீது வழக்கும் தொடுத்தது.
  • 12 வருடங்களுக்கு முன்பு உலகின் 6வது பணக்காரராக இருந்தவர் இப்போது அதிக கடனை மட்டும் கொண்டு நிறுவனத்தை திவால் நிலைக்கு அறிவித்து விட்டார். 42 பில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பில் 3.15 லட்சம் கோடி ரூபாய்) சாம்ராஜ்யத்தை கொண்டிருந்தவர் இன்று தன்னிடம் எதுவுமில்லை என கூறியுள்ளார்.
  • 2008ம் ஆண்டில் 800 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருந்த அவருடைய நிறுவனத்தின் பங்கு விலை 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 80 பைசாவுக்கு வந்தடைந்தது. போனஸ் பங்குகள் எதுவும் தரப்படவில்லை என்பதனை கவனிக்கவும்.

எந்த நிறுவனம் என்று உங்களால் அறிய முடிகிறதா ?

பங்குச்சந்தையில் வெறும் விலைகளை மட்டுமே பார்க்காமல், நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு உள்ளது, நிர்வாகம் நன்றாக செயல்பட்டு வருகிறதா மற்றும் வருவாய் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதனையும் ஆராய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? – உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள்

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? –  உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள் 

Best 3 Global Funds to Invest – Mutual Funds in 2020

நான் எப்போதும் சொல்லும் வாசகம் இது தான், ‘ நேரிடையாக பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு தங்கள் உபரி பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஊக வணிகம் மற்றும் சூதாடுவதை தவிர்க்க வேண்டும். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்கப்பெறும் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீட்டின் மூலம் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் நிதி இலக்கை நிறைவு செய்யலாம். உங்கள் நிதி இலக்குகளுக்காக நேரிடையாக பங்குச்சந்தைக்கு வராதீர்கள்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது உங்களது உபரி பணத்தில் தான். செல்வ வளத்தை சேர்க்கவும், சமூகத்தில் தொண்டு செய்வதற்கான நிதியை பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் பெறுங்கள். ஆனால் உங்கள் நிதி இலக்குகளில் அதனை பரிசோதனை செய்ய வேண்டாம். பங்குகள் மூலம் சில வருடங்களில் நீங்கள் குட்டி அம்பானியாகி விட முடியாது. அதற்கு இரண்டு தலைமுறைகள் கஷ்டப்பட வேண்டும். நீண்டகால தன்மையும், பொறுமையும் அவசியம்.‘

வங்கிகளில் வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. இதற்கு இரண்டு விஷயங்களை காரணமாக எடுத்து கொள்ளலாம். ஒன்று பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இல்லையெனில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இது போல வேகமாக வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொதுவாக வட்டி விகிதம் குறைவாக தான் காணப்படும். அப்படியிருக்கும் போது வருங்காலங்களில் வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் அதிகமாக இருக்காது (அதிக பணவீக்க காலத்தை தவிர்த்து). எனவே அவற்றுக்கு மாற்றாக பார்க்கும் போது, இன்று பரஸ்பர நிதிகள்(Mutual Funds) பிரபலமடைந்து வருகிறது.

அதே வேளையில் பரஸ்பர நிதிகள் என்றாலே பங்குச்சந்தை தான் எனவும் எடுத்து கொள்ளக்கூடாது மற்றும் வருவாய் நன்றாக உள்ளது என அலட்சியத்துடனும் இருந்து விட கூடாது. பரஸ்பர நிதிகள் பல கலவை திட்டங்களை கொண்டவை. நீங்கள் பார்க்கும் சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், பத்திரங்களில் முதலீடு, வீட்டுமனை, தங்கம், பங்குகள் என பல பரிணாமங்களை பரஸ்பர நிதிகளில் ஒரு சேர காணலாம்.

இருப்பினும் ஒருவருடைய தேவை மற்றும் காலத்திற்கு ஏற்ப தான் பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ரிஸ்க் என்பது எந்த முதலீட்டிலும் உண்டு. குறைந்த ரிஸ்க்(No Risk or Low Risk) கொண்ட லிக்விட் பண்டுகள் முதல் அதிக ரிஸ்க் கொண்ட பங்கு சார்ந்த பண்டுகள்(High Risk) வரை இங்கு கிடைக்கப்பெறுகிறது. திட்ட ஆவணங்களை சரியாக படிப்பதும், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

உலக பங்குச்சந்தை முதலீட்டில் நமது நாட்டின் சந்தை மதிப்பு மூன்று சதவீதமே. நம் நாட்டில் பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் மூன்று சதவீதத்திற்கு குறைவே. சமீபத்தில் பங்குச்சந்தையில் புதிய கணக்குகள் அதிகமாக துவங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவை கொரோனா காலத்தில் பங்குச்சந்தை மூலம் ஊக வணிகம் மற்றும் தினசரி வர்த்தகத்தில் பகுதி நேரமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தினால் தான். உண்மை புள்ளிவிவரம் என்னவெனில் நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சுமார் 4 கோடி டீமேட் கணக்குகள் உள்ளதாகவும், இவற்றில் ஒரு கோடிக்கும் குறைவாகவே செயல்பாட்டில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது தொடங்கப்பட்ட பங்குச்சந்தை கணக்குகளில் 75 சதவீதம் செயல்படாமல் இருந்துள்ளன. மீதம் சொல்லப்பட்ட ஒரு கோடிக்கும் குறைவான கணக்குகளில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை பாதியை கூட பெறாது. இவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம், யார் உண்மையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று… ஆம், பங்கு தரகர்களும், நீண்டகால முதலீட்டாளர்களும்.

வெளிநாட்டு நிறுவன பங்குகளில் நாம் நேரிடையாக முதலீடு செய்வதற்கான சாதனம் நமது பங்குச்சந்தை அமைப்புகளில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். அப்படி காணும் போது, நாம் சிறந்த மூன்று திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

  • பிராங்க்ளின் பீடர் அமெரிக்க முதலீட்டு வாய்ப்பு (Franklin India Feeder US Opportunities)
  • டி.எஸ்.பி. ப்ளாக்ராக் அமெரிக்க முதலீடு (DSP Blackrock US Flexible Equity)

மேலே சொல்லப்பட்ட மூன்று பரஸ்பர நிதிகளில் பராக் பரிக் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மதிப்புமிக்க முதலீட்டாளர்களில் ஒருவராவார். இன்றும் மூன்று திட்டங்களை மட்டுமே கொண்டு செயல்படும் இந்த பரஸ்பர நிதி நிறுவனம் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.

வெறுமென உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், முதலீட்டாளர்களுக்கு உலக நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை பராக் பரிக் தருகிறது. இந்த பண்டுகளில் குறைந்தபட்ச முதலீடாக மாதாமாதம் ரூ. 1000 ஐ முதலீடு செய்யலாம். பராக் பரிக் நீண்டகால பங்கு திட்டம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகும். இதுவரை 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ. 3,200 கோடி.

கூகுள் (Alphabet), அமேசான், முகநூல்(Facebook), சுசூகி, மைக்ரோசாப்ட், எச்.டி.எப்.சி., ஐ.டி.சி., ஆரக்கிள், கேடிலா ஹெல்த்கேர் என பல முக்கிய நிறுவனங்களில் இந்த திட்டம் முதலீடு செய்யும். முதலீடு பரவலாக்கத்தில் 55 சதவீதம் பெரு நிறுவனங்களிலும்(Giant), லார்ஜ் கேப் 13 சதவீதம், மிட் கேப் 12 சதவீதம் மற்றும் மீதம் உள்ளவை சிறு நிறுவனங்களில்(Small cap) முதலீடு செய்யப்படும். அதிக ரிஸ்க் கொண்ட இந்த திட்டம் மல்டி கேப் முதலீட்டு பிரிவில் வருகிறது. நீண்டகால முதலீட்டிற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

மற்ற பண்டுகளை பற்றி வரவிருக்கும் பதிவுகளில் காணலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

Don’t invest without doing these Five Commitments – Financial Planning

‘ நீங்கள் பங்குச்சந்தையில் நித்தமும் பணம் சம்பாதிக்கலாம், வாருங்கள் ‘ 

‘ பங்குச்சந்தையின் மூலம் ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாறலாம் ‘

‘ எங்களிடம் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மாதாமாதம் வட்டி தருகிறோம்,உங்கள் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது ‘

‘ பங்குச்சந்தையில் பகுதி நேரமாக வர்த்தகம் செய்து சம்பாதியுங்கள் ‘

‘ பிட்காயின் முதலீடு, உங்களை கோடீஸ்வரராக்கும் பொன்னான முதலீடு ‘

  • இவ்வாறான வாசகங்கள் உங்களுக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறதா ?

நான் எப்போதும் சொல்வது தான், பொருளாதார உலகில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதற்கும், செல்வ வளத்தை குவிப்பதற்கும் ஒரு குறுக்கு வழி கிடைக்கப்பெற்றால், அதனை முதலில் அடைய போவது நீங்கள் அல்ல. இவ்வுலகின் முதல் 100 பணக்காரர்கள் தான். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டை கொண்டு சில மாதங்களில் கோடிகளை அள்ளலாம் என்றால் ஏன் அமேசான் நிறுவனரும், அம்பானியும் தொழில் செய்ய வேண்டும் ? ஏன் பல கிளைகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் ?  பல தலைமுறை கோடீஸ்வரர்களுக்கும் இங்கே குறுக்கு வழி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக முதலீடு செய்யும் காலமும், முதலீட்டு சாதனமும் தான் அவர்களை அந்த நிலையில் வைத்துள்ளது. ஒரு முதலீட்டு சாதனத்தை பற்றிய முறையான கல்வி வேண்டும், இல்லையெனில் கற்றவரை நாம் வேலைக்கு வைத்திருக்க வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் மட்டுமே, எந்தவொரு பண முதலீடும் உங்களுக்காக உழைக்கும்.

பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், பிட் காயின் சார்ந்த புத்தகங்கள் சந்தையில் ஏராளம். ஆனால், எந்த புத்தகத்திலும் உங்களுக்கு குறுக்கு வழியை பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை. மாறாக அடிப்படை கற்றலை தான் உங்களுக்கு அந்த புத்தகத்தின்  ஆசிரியர் சொல்ல வருகிறார். பணம் சம்பாதிக்க, அந்த அடிப்படை கற்றலை கொண்டு நீங்கள் தான் சிந்திக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் மற்றும் செல்வத்தை ஏற்படுத்த காத்திருக்க வேண்டும்.

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் ஐந்து:

  • ஆயுள் காப்பீடு (Term Insurance)
  • மருத்துவ காப்பீடு
  • அவசர கால நிதி திட்டமிடல்
  • கடன்களை குறைத்தல்
  • ஓய்வுக்கால நிதி திட்டமிடல்

மேலே சொன்னவற்றை நீங்கள் செய்து விட்டு தான், உங்கள் முதலீட்டை தொடங்க வேண்டும். ஐந்து முன்னெடுப்புகளும் உங்களை பாதுகாக்கும் நிதி காப்பு ஆகும். உங்களுடைய நிதி ஆலோசகர் இதனை பற்றி உங்களிடம் சொல்லவில்லை என்றால் அவர் உங்கள் நிதி நலனில் அக்கறை கொள்பவரா என்பது சந்தேகமே. நிதி ஆலோசகர்(Personal Financial Advisor) என்பவர் பங்கு தரகர் அல்ல. இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவரும் முழுமையான நிதி ஆலோசகர் அல்ல. உங்களிடம் பரஸ்பர நிதிகளை மட்டும் விற்கும் விநியோகஸ்தரா, அவரும் நிதி ஆலோசகர் என்ற முழு நிலைக்கு வர மாட்டார்.

நிதி ஆலோசகர் என்பவர் உங்களது குடும்ப மருத்துவர் போன்று. மேலே சொன்ன ஐந்தையும் உங்களுக்காக அவர் திட்டமிட வேண்டும். உங்கள் குடும்ப நிதி நிலைமைகளை சரியாக புரிந்து கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் குடும்ப உறவுகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை நபர்களுக்கும் நிதி திட்டமிடலை செய்பவராக இருக்க வேண்டும். உயில், நாமினியை நியமிப்பது, உங்களுக்கான சொத்துக்களை வாரிசு தாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது போன்றவற்றிலும் அவருடைய உண்மையான அக்கறை இருக்க வேண்டும்.

ஆம், அவர் உங்களிடம் ஒரு கணிசமான கட்டணத்தை பெறுபவராக இருக்க வேண்டும். இலவசமாக அவர் செய்திட முடியாது. ஒருவர் உங்களிடம் நிதி சார்ந்த ஒரு பொருளை அல்லது சேவையை விற்கும் போது இலவசமாக (பொருளுக்கான விலை தவிர்த்து) விற்பவராக இருந்தால், அவர் உங்களிடம் தவறான பொருளை அல்லது உங்களுக்கு தேவையில்லாத ஒரு சேவையை விற்று விட்டு செல்கிறார் என அர்த்தம். இது தான் காப்பீடுகளில் பெரும்பாலும் நடைபெறுகிறது. நீங்கள் தவறான சேவையை தேர்ந்தெடுத்து, அதற்காக ஒரு ஏஜென்ட் கமிஷன் பெறுவதற்கு பதிலாக, அவரிடம் சேவை சார்ந்த ஆலோசனை கேளுங்கள். வெளிப்படைத்தன்மையை அறியுங்கள். பின்பு நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்கு அவருக்கு ஒரு கட்டணத்தையும் அளியுங்கள்.

நீண்ட காலத்திற்கான நிதி ஆலோசகரை கொண்டிருங்கள். அவரது ஆலோசனைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால், பலமுறை கேட்பதற்கு தயங்காதீர்கள். ஆலோசனை பலனளிக்கவில்லை என்றால், வேறு ஒரு ஆலோசகரை பெறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதே வேளையில் அடிக்கடி குடும்ப நிதி ஆலோசகரை மாற்றுவதும் ஆரோக்கியமாக இருக்காது.

உங்கள் குடும்ப நிதி நிலையை பாதுகாக்க டேர்ம் பாலிசி(Term Plan) மற்றும் மருத்துவ காப்பீடு(Health Insurance) பெறுவது அவசியம். இன்றைய காலத்தில் எதிர்பாராது நிகழும் பாதிப்புகளால் தான் நமது சேமிப்பு குறைகிறது. சில சமயங்களில் அது நம்மை கடனாளியாக்கி விடும். அதனால் நமது வருவாய்க்கு தகுந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு மேலே சொன்ன காப்பீடுகளை பெற வேண்டும்.

அவசர கால நிதியை(Emergency Fund) திட்டமிடுவது உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பஞ்ச காலங்களில் நமது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கோயில் கோபுரங்களில் கலசங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். கலசத்தில் சில உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அதனை போல தான் நமது அவசர கால நிதியும் இருக்க வேண்டும்.

கடனை அதிகமாக வைத்து கொண்டு, பங்குச்சந்தையில் சம்பாதித்து கடனை அடைத்து விடுவேன் என ஆர்வமாக செயல்பட கூடாது. பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க் கொண்ட, அதே வேளையில் செல்வ வளத்தை ஏற்படுத்தும் ஒரு முதலீட்டு சாதனமாகும். கடன் வாங்கி பங்குகளை வாங்குவது, கடனை குறைக்க பங்குகளில் முதலீடு செய்வதால் நமக்கு சுமையே அதிகம்.

‘ உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு கல்வியை விட, உங்களது ஓய்வுக்காலம் மிக முக்கியம் ‘ என நிதி திட்டமிடலில் சொல்வது உண்டு. குழந்தைகளுக்கான வாழும் காலமும், அவர்கள் கற்க வேண்டிய கல்வியும் எப்போதும் இங்கு உள்ளது. ஆனால் உங்கள் ஓய்வுக்காலத்திற்கு அவர்களை நம்பி நீங்கள் இருத்தல் சரி வராது. அந்த ரிஸ்க்கை தான் நம்மில் பெரும்பாலோர் எடுத்து வருகின்றனர். உங்களது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பை(Retirement Savings) நீங்கள் தான் உருவாக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு கைமாறாக அவர்கள் உங்களை பார்க்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களுக்கான நிதி இலக்கை நீங்கள் தான் திட்டமிட வேண்டும். வயதான காலத்தில் அவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது உறவுகளாக(அன்பு) மட்டுமே இருக்க வேண்டும், நிதி அல்ல. உங்கள் குழந்தைகளுக்கான இலக்கு அடுத்த தலைமுறையில் தான் உள்ளது, நீங்கள் மட்டுமே அல்ல.

மேலே சொன்ன ஐந்து முன்னெடுப்புகளை திறம்பட செய்து விட்டு, பின்னர் பங்குச்சந்தைக்கு வாருங்கள்… உங்களுக்காக காத்திருக்கிறது செல்வ வளம்.

குறிப்பு:

என்னிடம், எனது ஆண்டு வருவாயினை போல 50-80 மடங்கு பணம் ரொக்கமாக உள்ளது என சொல்பவரா நீங்கள் ? உங்களுக்கு இந்த ஐந்து வேலைகளும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamdurai.com

பொருளாதார மந்தநிலை 2020 – அதன் வடிவங்கள் எப்படி இருக்கும் ?

பொருளாதார மந்தநிலை 2020 – அதன் வடிவங்கள் எப்படி இருக்கும் ?

Pandemic and Economic Recession 2020 – Shapes of Recession

நாம் தற்போது கோவிட்-19 மற்றும் உலக பொருளாதார மந்தநிலையில் இருந்து வருகிறோம். இதன் தாக்கம் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என யாராலும் உறுதியிட்டு சொல்ல முடியாது. இருப்பினும் சில பொருளாதார கணிப்புகள் இருக்கலாம். அடுத்த ஒரு வருடம் என சொல்லலாம், இரண்டு வருடங்கள் பிடிக்கலாம் அல்லது அடுத்த 18 மாதங்கள் என கணிக்கலாம்.

பொருளாதார மந்தநிலை(Economic Recession) என்பது வணிக ரீதியாக ஏற்படும் ஒரு சுழற்சி தான். இது ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறக்கூடியதாக அமையும். அதே வேளையில், இந்த காலத்தில் தான் நடைபெறும் என ஒரு குறிப்பிட்ட வருடத்தை முன்னரே எடுத்து கொள்ள முடியாது. இந்த சுழற்சிக்கான காரணம் பலவாக இருக்கும். இருப்பினும், பொதுவாக தேவைக்கும், உற்பத்திக்குமான(Demand & Supply) இடைவெளி தான் இதனை தீர்மானிக்கிறது.

அதிகப்படியான உற்பத்தி ஏற்பட்டு, தேவை இல்லாவிடில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இது போல தேவையை பூர்த்தி செய்யாத உற்பத்தியும் பொருளாதார மந்தநிலை தான். “ஆசைப்படாமல் இருக்க வேண்டாம். ஆனால் அந்த ஆசைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம். கட்டற்ற ஆசைகளும், அதன் நிர்வாக கோளாறுகளும் தான் நம்மை சிரமப்பட செய்கிறது. இது தான் பொருளாதாரத்திலும் “.

பொருளாதார மந்தநிலை அல்லது பொருளாதார வீழ்ச்சி என்பது சில மாதங்களிலிருந்து பல வருடங்கள் வரை ஏற்படலாம் என சொல்லிவிட்டோம். வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீண்டு வந்தடைய வேண்டுமல்லவா ? எந்தவொரு இறக்கத்தை சந்தித்த பொருளாதாரம் ஏற்றமடைந்து தான் ஆக வேண்டும். பொருளாதாரம் மந்தநிலை ஏற்பட்ட காலம் முதல் அது மீண்டது வரை உள்ள காலத்தை, பொருளாதார வல்லுநர்கள் ஒரு வடிவமாக(Shapes) மாற்றுகின்றனர்.

இதற்கான சரியான பொருளாதார கல்வி என்று எதனையும் அவர்கள் குறிப்பிடவில்லை. ஆனால் பொருளாதார மந்தநிலை காலங்களை நான்கு வடிவங்களாக பிரித்துள்ளனர். பொருளாதார வீழ்ச்சி வரலாற்றில் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 1930ம் ஆண்டு, ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom) மற்றும் அமெரிக்காவில் 2000ம் வருடம், கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சி என சில நினைவுகளை சொல்லலாம். வல்லரசு நாடுகளில் இது பொதுவாக ஏற்படுவதுண்டு. பின்பு உலக தாராளமயமாக்கலின் துணை கொண்டு, மற்ற நாடுகளிலும் இந்த பொருளாதார மந்தநிலை பரவி இருக்கும்.

பொருளாதார மந்தநிலை காலங்களில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகமாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல் செல்வது, நிறுவனங்கள் திவால் நிலைக்கு செல்வது என சில விளைவுகள் தென்படும்.

வடிவங்கள் என்ன ?

பொருளாதார மந்தநிலை வடிவங்கள் நான்கு.

  • V – Shaped
  • U – Shaped
  • W – Shaped
  • L – Shaped

முதல் வடிவில் (V-Shaped) பொருளாதார மந்தநிலை குறுகிய காலத்தில் மட்டுமே இருக்கும். வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு அல்லது வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இது போன்ற மந்தநிலை ஏற்படும். இதனை அரசு பொருளாதார ஊக்குவிப்பு மூலம் உடனடியாக சரிசெய்யும் நிலையில், பொருளாதாரம் விரைவாக ஏற்றம் பெறும். இதற்கான காலம் பொதுவாக சில மாதங்களாக இருக்கலாம்.

வேகமாக இறங்கிய பொருளாதாரம், அதே வேகத்தில் மேலே எழும்பும் – (V-Shaped)

இரண்டாம் வடிவில் (U-Shaped) பொருளாதார மந்தநிலை முதல்நிலை வடிவத்தை விட சற்று கூடுதல் காலங்கள் பிடிக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக சில காலாண்டுகள் மந்தநிலை செல்வதும், அதனை தொடர்ந்து ஏற்படும் வேலைவாய்ப்பின்மை, வட்டி விகிதம் மற்றும் பணவீக்க மாற்றங்கள் பல மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கலாம்.

Economic Stagnation என்று சொல்லக்கூடிய நீண்டகால பொருளாதார மந்தநிலை தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது எனலாம். கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் தான் உள்ளது. ஆம், தொடர்ச்சியாக ஏழு காலாண்டுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) சரிவு. மீண்டெழுவதற்கான காலமும் இதன் அளவாக கருதப்படலாம். எனவே தான் இரண்டாம் வடிவம் U-Shaped ஆக குறிக்கப்பட்டுள்ளது.

ஒரு குளியலறைக்குள் சென்று விட்டு நீண்ட நேரம் வராவிட்டால் எப்படி இருக்கும் ? இந்த வடிவத்திற்கு பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடும் வரிகள் இவை. சோம்பலாக நீண்ட நேரம் பொருளாதாரம் படுத்து கொள்ளும். பின்பு, விழித்தெழுந்து அதே வேகத்தில் மெதுவாக மீண்டு வரும்.

Recession shapes

W-Shaped வடிவம்:

இந்த வடிவத்தை இரட்டை மந்தநிலை என கூறுவதுண்டு. அமெரிக்காவில் 1980ம் கால கட்டங்களில் இது போன்ற நிலை இருந்துள்ளது. அதாவது முதல்நிலை வடிவத்தை போல பொருளாதாரம் விரைவாக ஏற்றம் பெற்றாலும், மறுபடியும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும். பிறகு, அதனிலிருந்து மீண்டு எழும். இந்த வடிவம் அதிக ஏற்ற-இறக்கத்தை கொண்டிருக்கும் காலமாக கணக்கிடப்படுகிறது. பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற-இறக்கத்தை போல.

ஆனால், அடிக்கடி நிகழும் ஒரு முறையாக இந்த வடிவம் வரலாற்றில் சொல்லப்படவில்லை. விரைவாக விழுந்து மீண்டு எழுதல் மற்றும் மறுமுறையும் விழுந்து எழுதல் என்பது துணிச்சலான பொருளாதாரத்தை கொண்டிருக்கும்.

L – Shaped வடிவம்:

சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை வடிவங்களில் மோசமான வடிவம் இது தான். ஒரு பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து, பின்பு மீண்டு வராமல் பல வருடங்கள் தட்டையான வளர்ச்சியை மட்டுமே கொண்டிருப்பது. ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் இது போன்று அமைந்துள்ளது. கடந்த 1950ம் வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சுமார் 30 வருடங்கள் எந்தவித பெரிய வளர்ச்சியையும் பெறாமல், தட்டை வடிவத்தில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் இது போன்ற ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது. அதாவது Dot com குமிழி 2000ம் ஆண்டு வாக்கில் உடைந்த பிறகு, 2013ம் ஆண்டு வரை அதன் பொருளாதாரம் பெரிய அளவில் ஏற்றம் பெறவில்லை. இந்த காலத்திற்கு இடையில் 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. கடுமையான மந்தநிலையை கொண்டிருக்கும் இந்த வடிவம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பெருத்த பயத்தை ஏற்படுத்தும்.

மேலே சொன்ன நான்கு வடிவங்கள் போக சந்தையில் சில வடிவங்கள் சொல்லப்பட்டாலும், அவை இந்த நான்கு வடிவங்களை ஒத்து தான் இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் உலக பொருளாதார மந்தநிலை எந்த வடிவத்தை பெறுகிறது என சொல்லுங்கள் ?

கவனிக்க:

  • V-Shaped வடிவ மந்தநிலை 8-10 மாதங்கள் இருந்துள்ளது.
  • U-Shaped மந்தநிலை 18-24 மாதங்கள் எடுத்து கொண்டுள்ளது.
  • W-Shaped ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை வரலாற்றில் பதிந்துள்ளது.
  • L – Shaped – மூன்று வருடங்கள் முதல் பல வருடங்கள் நீடிக்கும் கடுமையான பொருளாதார மந்தநிலை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – வோல்டாஸ் பங்குகளை வாங்கலாமா ?

பங்குச்சந்தை அலசல் – வோல்டாஸ் பங்குகளை வாங்கலாமா ?

Voltas – A Tata Product – Fundamental Analysis

டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான வோல்டாஸ்(Voltas) நிறுவனம் கடந்த 1954ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இந்நிறுவனம் திட்டங்கள் மற்றும் தயாரிப்புகள் வணிகத்தில் பரவலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏர் கண்டிஷனர், ஏர் கூலர்கள், நீர் குளிரூட்டிகள், நீர் விநியோகிப்பான் ஆகிய பிரிவுகளில் உற்பத்தி மற்றும் விற்பனை சேவையை செய்து வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் முதல் இன்வெர்ட்டருடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை தயாரித்த நிறுவனம் வோல்டாஸ். இந்தியாவின் மிகப்பெரிய ஏர் கண்டிஷனிங் நிறுவனமாகவும் வோல்டாஸ் வலம் வருகிறது. உலகின் மிகப்பெரிய கோபுரமான துபாயின் பர்ஜ் கலிஃபா(Burj Khalifa) மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் மிகப்பெரிய கப்பலான குயின் மேரியிலும்(RMS Queen Mary 2) வோல்டாஸ் நிறுவனத்தின் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.

வீட்டு உபகரணங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க சேவைகளை கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 23,210 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 123 விலையில் உள்ளது. இதன் சந்தை பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 6 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்திற்கு கடன்கள் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 30 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் ஏதும் வைக்கவில்லை.

கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 32 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த பத்து வருட காலத்தில் 17 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருட காலத்தில் 8 சதவீதமும், 5 வருட காலத்தில் 6 சதவீதமும் மற்றும் பத்து வருட காலங்களில் 5 சதவீதமும் வளர்ந்துள்ளது.

பங்குச்சந்தை இலவச வகுப்புகள்(Stock Market Course) – பதிவு செய்ய

நிறுவனத்தின் லாபம் கடந்த மூன்று வருடங்களில் 16 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமும் மற்றும் 10 வருடங்களில் 8 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. வோல்டாஸ் பங்கின் விலை கடந்த ஐந்து வருடங்களில் 23 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. செப்டம்பர் 2019ம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 4,060 கோடி.

சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் 2019ம் காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,493 கோடியாகவும், நிகர லாபம் 87 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த டிசம்பர் 2018 காலாண்டுடன் ஒப்பிடும் போது, வருவாய் மற்றும் லாபத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,124 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 508 கோடி.

Voltas Balance sheet 2019

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.08 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 30 மடங்காகவும் உள்ளது. தற்போது இந்த பங்கின் விலை ரூ. 700க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அதே வேளையில் தள்ளுபடி செய்யப்பட்ட பணப்பாய்வின்(DCF) படி, பங்கு ஒன்றின் விலை 250 ரூபாய் மதிப்பை பெறும். நிறுவனத்தின் நிதி அறிக்கை திருப்திகரமாக உள்ளது. பிராண்டு(Value Brand) காரணத்தால் பங்கு விலை அதிகமாக காணப்படுகிறது. இந்த துறை பருவகால மற்றும் சுழற்சி முறையில் காணப்படுவதால், வருவாய் பெரும்பாலும் சொல்லப்பட்ட காலத்தில் தான் மீண்டெழும்.

பொதுவாக சில்லரை வணிகத்தில் குளிர் சாதனங்களின் சேவை கோடை காலத்தில் தான் தேவைப்படும். இந்த நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதங்கள் ஜூன் காலாண்டுகளில் (ஏப்ரல் – ஜூன்) தான் அதிகமாக இருக்கும். அதே போல மார்ச் காலாண்டுகளும் (ஜனவரி-மார்ச்) ஓரளவு வருமானத்தை ஈட்டும். எனவே வருவாய் மற்றும் பங்கு விலை குறைந்திருக்கும் காலங்களில் இந்த பங்கினை கவனிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டுகள் – வரி சேமிப்பு – கவனிக்க வேண்டியவை

இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டுகள் – வரி சேமிப்பு – கவனிக்க வேண்டியவை 

Things to know about ELSS Mutual Funds – Tax Saving Avenues

சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்ஜெட் தாக்கல் 2020ல் பெரும்பாலானோரின் குழப்பம் வருமான வரி வரம்பு முறையில் தான். இரு வகையான வரி முறை உள்ளதே, நான் எந்த முறையை தேர்ந்தெடுக்க வேண்டும், இந்த முறையை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு பலன் என பல செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உண்மையில் நடப்பு பட்ஜெட் தாக்கலில் வருமான வரி வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தான். மாறாக, வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு ஒன்று அமல்படுத்தப்பட்டுள்ளது – 115 BAC. இந்த புதிய பிரிவின் படி தனிநபர் மற்றும் இந்து கூட்டு குடும்பம் ஆகியோர் தங்கள் வரியை செலுத்தும் நிலையில் இரு வகையான தேர்வு அளிக்கப்பட உள்ளது. இந்த தேர்வில் முதலாவதாக நடப்பில் இருக்கும் வருமான வரி வரம்பு மற்றும் அதற்கான அடிப்படை கழிவுகள், வரி சலுகைகள் அமையும். இரண்டாவதாக வருமான வரி குறைந்த விகிதத்தில்(New Tax Regime) வசூலிக்கப்படும். ஆனால் இந்த தேர்வுக்கு நீங்கள் அடிப்படை கழிவு(Standard Deduction) மற்றும் சொல்லப்பட்ட 70 வகையான வரி சலுகைகளை விட்டு கொடுக்க வேண்டும். அதாவது வரி தாக்கல் செய்யும் போது அதனை வரி விலக்காக பயன்படுத்த இயலாது – அவ்வளவே.

பிரிவு 115BACன் படி இரண்டாம் முறையில் நீங்கள் பயன்படுத்த முடியாத சில முக்கிய வரி சலுகைகள் – பி.எப்., பி.பி.எப்., செல்வ மகள், வரி சேமிப்பு மியூச்சுவல் பண்டுகள், வீட்டு வாடகை படி, குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை, வீட்டு கடனுக்கான அசல் மற்றும் வட்டி, ஓய்வூதிய தொகையில் ஒரு பகுதி, மருத்துவ காப்பீடு, அஞ்சலக வரி சேமிப்பு திட்டங்கள், வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு, தேசிய பென்ஷன் திட்டம், ஆயுள் காப்பீடு, மாற்று திறனாளிகளுக்கான சலுகை, நன்கொடை ஆகியவை.

முக்கியமாக இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமான படை – இவற்றில் ஏதேனும் ஒன்றில் பணிபுரிந்தவர் தனது பணிக்காலத்தில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டும், முழுமையான பணிக்காலத்தை நிறைவு செய்திருந்தால் அவருக்கு கிடைக்கப்பெறும் ஓய்வூதியத்தில் வரி சலுகை உண்டு. தற்போது சொல்லப்பட்ட இரண்டாம் வரி வரம்பில், இதற்கான சலுகையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக 80C வரிசை, 80D வரிசை, 80E வரிசை, 80G வரிசைகளில் இனி இரண்டாம் வரி வரம்பின் படி, வரி சலுகை கிடைக்கப்பெறாது.

இருப்பினும் 2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலில் வரி சேமிப்பை அதிகமாக கொண்டிருப்போர் முதலாவது வரி முறையை (பழைய  முறை) தேர்ந்தெடுப்பது சாதகமாக இருக்கும். குறைவான வருமான வரி வரம்பில் உள்ளோருக்கும் முதல் பிரிவு நன்மையாக அமையும். ஏனெனில் அங்கு அடிப்படை கழிவு மற்றும் பி.எப்.(PF), என்.பி.எஸ்.(NPS) வரி சலுகைகள் உண்டு.

நம்மில் பெரும்பாலோர் காப்பீடை மட்டுமே வரி சலுகையாக கொண்டிருந்தாலும், இ.எல்.எஸ்.எஸ். எனப்படும் பரஸ்பர நிதிகளின் வரி சலுகை முதலீடுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இனி இந்த பண்டின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

ELSS (Equity Linked Saving Scheme) – Tax Saving Mutual Funds:

ELSS Funds என்பது பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் வரி சலுகை திட்டமாகும். வருமான வரி சட்டம் 1961, பிரிவு 80Cன் கீழ் இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி சலுகை உண்டு. அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். இந்த பிரிவில் தான் பி.எப்., தேசிய பென்ஷன் திட்டம், ஆயுள் காப்பீடு, வீட்டுக்கடனுக்கான  அசல் தொகை ஆகியவற்றுக்கு வரி சலுகை கிடைக்கப்பெறும். எனவே மற்ற வரி சேமிப்புகளையும் கணக்கில் கொண்டு, இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பொதுவாக வரி சலுகை பெறும் அனைத்து திட்டங்களுக்கும் லாக்-இன்(Lock-in Period) காலம் உண்டு. அதாவது திட்டத்தில் சொல்லப்பட்ட காலம் வரை அந்த முதலீட்டை வெளியே எடுக்க முடியாது. ELSS பண்டு திட்டத்தில் அதிகபட்சமாக மூன்று ஆண்டு காலம் மட்டுமே. வேறு எந்த வரி சலுகை திட்டத்திலும் இல்லாத குறைந்த கால லாக்-இன் வசதி இந்த பண்டில் மட்டுமே உள்ளது சாதகமான விஷயமாகும்.

இ.எல்.எஸ்.எஸ். பண்டுகளில் பெறப்படும் முதலீடு பெருவாரியாக பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும். சிறிய அளவிலான தொகை கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படலாம். நீண்டகாலத்தில் இந்த பண்டுகள் மற்ற வரி சலுகை திட்டங்களை காட்டிலும் (PPF, Insurance, Postal Savings, Tax Saving Bonds) அதிக வருவாயை கொடுக்க கூடியவை. அதே வேளையில் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் தன்மை கொண்டவை.

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு தொகை என எதுவும் கிடையாது. முதலீட்டின் முடிவில் கிடைக்கக்கூடிய தொகை மூலதன ஆதாயம்(Capital Gains) எனப்படும். எனவே இவற்றில் முதிர்வு தொகை என எதுவும் கிடையாது. நாம் எப்போது இந்த திட்டத்தில் இருந்து பணத்தை வெளியே பெறுகிறோமோ, அப்போது அந்த தொகை மூலதன ஆதாயம் எனப்படும்.

லாக்-இன் ரகசியங்கள்:
  • ELSS பண்டுகளில் குறைந்தபட்ச லாக்-இன் காலமாக மூன்று வருடங்களை சொல்லியிருந்தோம். இங்கே கவனிக்க வேண்டியவை, இந்த வசதி மற்ற வரி சலுகை திட்டங்களின் லாக்-இன் வசதியை போல அல்ல.
  • அதாவது, நீங்கள் ஒரு முறை மட்டுமே இந்த பண்டில் முதலீடு செய்திருந்தால், முதலீடு செய்த தேதியிலிருந்து மூன்று வருட காலம் கணக்கிடப்படும். மூன்று வருட காலம் முடிந்தவுடன் நீங்கள் முதலீட்டு தொகையை பெறலாம் அல்லது முதலீட்டை உங்கள் இலக்கு காலம் வரை தொடரலாம்.
  • இதுவே, மாதாமாதம் எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்திருந்தால், ஒவ்வொரு மாத முதலீடும் மூன்று வருட கால லாக்-இன் வசதியை பூர்த்தி செய்ய வேண்டும். எனவே இந்த ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது நலம்.
  • மற்ற மியூச்சுவல் பண்டுகளில் வெளியேறும் கட்டணம் இருந்தாலும், இந்த வரி சேமிப்பு பண்டுகளில் அவ்வாறான கட்டாயம் எதுவுமில்லை. எதிர்பாராத விதமாக முதலீடு செய்துள்ள நபர் இறக்க நேரிடுகையில், லாக்-இன் காலத்திற்கு முன்னரே, நாமினி பணத்தை பெற்று கொள்ளலாம். பெறக்கூடிய தொகை, அன்றைய நாளின் NAV மதிப்பை பொறுத்தது.
ELSS Funds வரி விகிதங்கள்:
  • மியூச்சுவல் பண்டுகளை பொறுத்தவரை திறந்த வெளி பண்டுகளுக்கு முதிர்வு தொகை எனவும் எதுவுமில்லை. பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நாம் வெளியேற முடிவெடுக்கும் போது, அன்றைய நாளில் உள்ள மதிப்பு அதன் லாப – நட்டத்தை நிர்ணயிக்கும்.
  • நமது முதலீடு லாபமாக இருந்தால், அதனை வெளியே எடுக்கும் போது மூலதன ஆதாயம் என கூறப்படும். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் லாபத்தை, உங்களது வங்கி கணக்கில் பெற்றால் மட்டுமே, அது மூலதன ஆதாயமாக கணக்கிடப்படும். நட்டமாக இருந்தால் அது மூலதன இழப்பாக(Capital Loss) எடுத்து கொள்ளப்படும்.
  • உங்கள் முதலீடு லாபமாக இருந்து, அதனை முதலீடு செய்த ஒரு வருடத்திற்குள் வெளியேற்றினால் குறுகிய கால மூலதன ஆதாயமாக(Short term capital gains -STCG) எடுத்து கொள்ளப்பட்டு அதற்கான வரி விகிதம் 15 சதவீதமாக உள்ளது.
  • ஒரு வருடத்திற்கு மேலாக எடுக்கப்படும் தொகை, நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்படும். நீண்ட கால மூலதன ஆதாய(Long term capital gains -LTCG) தொகை ஒரு நிதியாண்டில் ரூ. 1 லட்சத்திற்கு மேலாக இருந்தால், அந்த தொகைக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும். எனவே ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை.
  • டிவிடெண்ட் தொகைக்கு(Dividend Plan), நடப்பில் 10 சதவீத வரி செலுத்தி விட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும். எனவே முதலீட்டாளர்கள் இதற்கு வரி செலுத்த தேவையில்லை. அதே வேளையில், ஒரு நிதியாண்டில் பெறப்படும் டிவிடெண்ட் தொகை ரூ. 10 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் போது, முதலீட்டாளர் 10 சதவீத வரியை செலுத்த வேண்டும்.
  • சொல்லப்பட்ட டிவிடெண்ட் நடைமுறையில், நடப்பு பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 10 சதவீத வரியை செலுத்த தேவையில்லை எனவும், முதலீட்டாளர்கள் தாங்கள் பெறக்கூடிய டிவிடெண்ட் தொகைக்கு, தங்களது வருமான வரி வரம்பின் அடிப்படையில் வரி செலுத்த வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. புதிய நடைமுறை 2020-21ம் நிதியாண்டுக்கானது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் வங்கி வட்டி விகிதம் – ஒரு சிறு பார்வை

நாட்டின் வங்கி வட்டி விகிதம் – ஒரு சிறு பார்வை 

Bank Interest Rate in India – A Short look

கடந்த டிசம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம்(Retail Inflation) 7.35 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது போல கடந்த 2019 செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 4.5 சதவீதமாக இருந்தது. டிசம்பர் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.60 சதவீதமாக உள்ளது. பொதுவாக நாட்டின் பணவீக்கம் உயர்ந்தும், பொருளாதார வளர்ச்சி மந்த நிலை காண்பதும் மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பது – இந்த மூன்று நிலையும் ஒரு சேர நிகழ்வதை தேக்கநிலை(Stagflation) என்பர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிலை தொடர்ந்து நிகழ்ந்து வந்தால், அது பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே அதனை மீட்டெடுப்பதே ஒரு நாட்டின் அரசுக்கான கடமையாக சொல்லப்படுகிறது. பொருளாதார மந்த நிலையில், ஒரு நாட்டின் வட்டி விகிதம் முக்கியத்துவம் வாய்ந்தது. வட்டி விகித மாற்றங்கள் பொருளாதார கதையில் முக்கிய கதாபாத்திரமாக அமையும் என்பதில் மாற்றமில்லை.

மத்திய ரிசர்வ் வங்கியின் நடப்பு ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 5.15 சதவீதமாக உள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாகவும், வங்கி விகிதம் 5.40 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 3.25 – 3.50 % என்ற அளவில் உள்ளது. இது முன்னர் 4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு வருடத்திற்கான டெபாசிட் விகிதம் 6.10 – 6.40 சதவீதம் என்ற அளவில் பாரத ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்டுள்ளது. கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் 8.45 – 9.40 சதவீத அளவில் காணப்படுகிறது. மேலே சொன்னவை மத்திய ரிசர்வ் வங்கியால் கடந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தகவல். ஆனால் வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தும்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது மத்திய ரிசர்வ் வங்கி(RBI), நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

நாட்டின் பொருளாதாரத்தை பொறுத்தவரை வங்கி வட்டி விகிதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என சொல்லியிருந்தோம். உதாரணமாக பொருளாதார மந்த நிலையில், ஒரு நிறுவனத்திற்கு கடன் அதிகமாக இருக்கும் போது அதன் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனை களைய அரசு மற்றும் மத்திய வங்கியின் சார்பில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். வங்கியின் வட்டி விகிதம் குறைவாக இருந்தால், நிறுவனங்களும் குறைவாக வட்டியை கட்டி விட்டு, உற்பத்தியை மேம்படுத்தலாம். இதன் மூலம் விற்பனை மற்றும் தொழிலாளர்களின் வருவாயில் மாற்றம் ஏற்படலாம். இது அரசுக்கான வரி வருவாயை பெறக்கூடும்.

மாறாக, பணவீக்கம் அதிகரித்து அதன் மூலம் வங்கி வட்டி விகிதங்கள் கூட்டப்பட்டால், நிறுவனத்தின் நிதி அறிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். தனிநபர் வருவாய் மற்றும் கடன் நிலையிலும் பாதகமாக அமையும். எனவே மத்திய ரிசர்வ் வங்கி கவனமாக பணவீக்கம் மற்றும் வட்டி விகித நிலையை கையாளும். அரசை பொறுத்தவரை மக்களிடையே பணப்புழக்கத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை ஊக்குவிப்பதே முதல் கடமையாகும். இதன் காரணமாக அரசின் வரி வருவாய் அதிகரிக்கும். வரி வருவாய் நாட்டின் மானிய தேவைக்கு உதவக்கூடும்.

பொதுவாக பணவீக்கம் அதிகரிக்கும் போது, வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இது வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். அதே வேளையில் கடன் பெறுபவர்களுக்கு பாதகமாக செல்லும். நாட்டின் வட்டி விகிதம்(Interest Rate) கடந்த 20 வருடங்களில் சராசரியாக 7 சதவீத அளவில் காணப்படுகிறது. அதிகபட்சமாக 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 14.50 சதவீதமும், குறைந்த அளவாக கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டுக்கான கடைபிடிக்கக்கூடிய எளிய முதலீட்டு சிந்தனைகள்

2020ம் ஆண்டுக்கான கடைபிடிக்கக்கூடிய எளிய முதலீட்டு சிந்தனைகள் 

Simple Investment Thoughts for the year T20 – 2020

 

2019ம் வருடத்தின் கடைசி நாளை இன்று அடைந்தாயிற்று. 2020ம் ஆண்டினை வரவேற்கத்தக்க வகையில் பல கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெறும். தமிழர்களின் புத்தாண்டு தைத்திருநாள் தான் எனினும், புதிய கொள்கைகளையும், பழக்கங்களையும் கடைபிடிக்க ஆங்கில ஆண்டு ஒரு உந்துதல் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாம் ஜனவரி 1ம் தேதி நினைத்த ஒரு விஷயத்தை பழக்கமாக மாற்றுகிறோமோ, இல்லையோ – ஆனால் அதற்கான முயற்சியை எடுத்தாலே பாதி வெற்றி பெற்றது போல் தான். அது போல சில எளிய முதலீட்டு சிந்தனைகளை இங்கே கொடுத்துள்ளோம். அவை அனைவரும் கடைபிடிக்க கூடிய வகையில் அமையும்.

 

T20 ஆண்டுக்கான முதலீட்டு சிந்தனைகள்…

 

  • மரம் நடுங்கள். அவை அடுத்த 20 வருடங்களுக்குரியது, பணத்தின் மீது எவ்வாறு கூட்டு வட்டி செயல்படுகிறதோ, அதனை போல மரத்தின் மீதும் இயற்கை உந்துதல் எப்போதும் இருக்கும். நாம் செய்ய வேண்டியது, மரம் நட்டு அதனை பராமரிப்பது தான். (SIP Investment போல !)

 

  • வங்கியில் சொல்லப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகையை எப்போதும் சரியான அளவில் பராமரிக்க பழகுங்கள். இந்த பழக்கம் பின்னாளில் நமது குடும்பத்தின் நிதி நிலையிலும்(Asset to Liability) பிரதிபலிக்கும். அதிக பணத்தையும், ஆடம்பரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் சிறு தொகையை பராமரித்தாலே போதும்.

 

  • உங்களின் வருமானம் மாத சம்பளமாக இருக்கலாம். இல்லையெனில் தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதனை ஒரு மணிநேர கணக்கில்(Earnings per Hour) பார்க்க பழகுங்கள். உதாரணத்திற்கு, தனிநபர் ஒருவரின் மாத சம்பளம் ரூ. 30,000 எனில், அவருடைய ஒரு நாள் சம்பளம் ரூ. 1000 மற்றும் ஒரு மணிநேர சம்பளம் ரூ. 125 /- (8 மணிநேர வேலை எனும் போது). அதற்காக குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய நண்பர்களிடம் செலவிடக்கூடிய நேரங்களை தவறவிடாதீர்கள். அதற்கும் ஒரு நன்மதிப்பு உண்டு.

 

  • சாலையில் யாராவது உங்களிடம் உதவி கேட்டு நின்றால், அவர்களுக்கு பணம் கொடுக்க முதலில் முன்வராதீர்கள். அதற்கு மாற்றாக அவர்களுடைய கதையை (பிரச்சனைகள்) சில நிமிடங்கள் கேட்க துவங்குங்கள். உண்மையில் அவருடைய பிரச்சனை பணம் மட்டுமில்லாமல், வேறு ஏதாவது விஷயமாக இருக்கலாம். அது அடிப்படை கல்வியோ, மருத்துவமோ, ஆதரவோ அல்லது நல்ல உணவாக இருக்கலாம்.

 

  • நிதி சார்ந்த விஷயங்களில் நண்பர்கள் குழுவை (Build a Financial Relationship) ஏற்படுத்துங்கள். வெறும் மால்களிலும், திரையரங்குகளிலும் செலவழிப்பது மட்டுமே நம் நோக்கமாக இருக்க கூடாது. மாறாக மால்களிலும், அரங்கத்தின் பின் உள்ள தொழில் தன்மையையும் நாம் கற்று கொள்ள வேண்டும். நான்கு நண்பர்கள் சேர்ந்தால், ஆரோக்கியமான நிதி விஷயங்களை கலந்துரையாட வேண்டும். பணம் சார்ந்த விஷயத்தை பேச பழக வேண்டும். அதனை சார்ந்த தகவல்களையும் பரிமாறி கொள்ள வேண்டும். (உதாரணமாக நாளிதழ்களில் வரும் வணிக செய்திகள் மற்றும் குடும்ப பட்ஜெட் சார்ந்து)

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • பெரிய இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். ஆனால் சிறு சிறு இலக்குகளுக்கு (Goals) முக்கியத்துவம் கொடுங்கள். சிறு இலக்குகளில் வெற்றி பெறுவதற்கு, உங்களுக்கு நீங்களே ஒரு சிறிய அளவிலான பரிசை கொடுத்து பழகுங்கள். (உதாரணமாக, நான் இன்று இந்த ஐந்து வேலைகளை முடிக்க கற்று கொள்வேன். அதனை அடைந்து பரிசையும் பெறுவேன்)

 

  • தோல்வி அடைய தயங்காதீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதில் பெரிய பாடங்களை கற்று கொள்ள வாய்ப்பில்லை. வெறும் பாராட்டுகளை மட்டுமே பெறுவீர்கள். தோல்வியில் மட்டுமே விமர்சனங்கள் மூலம் புதிய வாய்ப்புகளை (New Opportunities) கண்டறிய முடியும். உங்களுக்கு தேவை, புதிய வாய்ப்புகளே – கவலை அல்ல…

அனைவருக்கும் 2020 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… T20 Year Wishes

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com