ரியல் எஸ்டேட் தெரியும், எஸ்டேட் பிளானிங் தெரியுமா ?

 

ரியல் எஸ்டேட் தெரியும், எஸ்டேட் பிளானிங் தெரியுமா ?

Estate Planning

 

நமது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் நாம் சம்பாதித்த பணத்தை கொண்டு பணம் சேர்ப்பது என முடிவாயிற்று. அதாவது நம் செலவுகளுக்கான பணம் சேர்ப்பது.

 

பணம் கொண்டு பணம் சேர்ப்பது என்றால் என்ன ?  நமது வருமானத்தில் ஒரு சிறு பகுதியை சேமித்து அதனை முதலீடு செய்து கிடைக்கும் பலனை பெறுவதாகும். முதலீடு எப்படி செய்வது மற்றும் பல்வேறு முதலீட்டு கருவிகளை (Bank Deposits, Bonds, PPF, Mutual Funds, Stocks, Real Estate, Gold, etc) எப்படி பயன்படுத்துவது என  நாம் அறிவோம். முதலீடு என்பது இலக்குகளை நிர்ணயித்து செய்யப்பட வேண்டும்; நமது இலக்குகளுக்கான ஒரு திட்டமும் நம்மிடம் இருக்க வேண்டும். பின்பு அந்த திட்டத்தினை செயல்படுத்த நாம் நமது வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி (அ) சேமித்து பல முதலீட்டு கருவிகளில் (Investment Products) முதலீடு செய்ய வேண்டும். சரி நம்மிடம் இலக்குகள், திட்டமும் மற்றும் முதலீடும் உண்டு. முதலீடும் செய்தாயிற்று; அப்புறம் என்ன என்கிறீர்களா ?

 

அப்புறம் தான் முக்கியம் ! நாம் எந்த நோக்கத்திற்காக (அ) யாருக்காக இலக்குகளை நிர்ணயித்து திட்டம் தீட்டி முதலீடு செய்தோமோ, அந்த பயன் அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்கோ (அ) நபருக்கோ போய் சேர வேண்டுமல்லவா ? அதற்கு தான் இந்த ‘Estate Planning’ என்ற தோட்ட திட்டமிடல். நாம் ஒரு விவசாயத் தோட்டத்தினை கொண்டுள்ளது போன்று.

 

எஸ்டேட் பிளானிங் பற்றி திரு. ரால்ப் W. சாக்மேன் சொல்வது போல…

 

“What makes greatness is starting something that lives after you.”

 

 

Estate Planning… refers to the Organized approach to managing the accumulated assets of a person in the interest of the intended beneficiaries.

 

செல்வம் சேர்க்கப்படலாம் ஒரு திட்டமிடப்பட்ட இலக்குகளுடன். ஆனால் நாம் சேர்த்த செல்வம் / சேர்க்கப்படும் செல்வம் உங்கள் வாரிசுகளையோ, அமைப்பையோ (அ) எவருக்கோ அது சரியான முறையில் அடையாளம் காட்டப்பட்டு, சேர வேண்டும். அதற்கு தான் பண மற்றும் சொத்து விஷயத்தில் வாரிசுகளை (Nomination, Heirs) இணைப்பது பெரும்பாலும் கட்டமாயிற்று; இந்த ஒருங்கிணைக்கப்பட்டும், ‘Estate Planning’ பின்னாளில் வரும் நடைமுறை சிக்கல்களை எளிதாக்குகிறது; இன்று பெரும்பாலான நிலம் மற்றும் மற்ற சொத்து சம்மந்தமான வழக்குகள் வாரிசுகள் சார்ந்த பிரச்சனையாகவே உள்ளது. ஆதலால் பணம் சேர்ப்பதை விட தனக்கு பின் அது யாருக்கு, எங்கு போய் சேர வேண்டுமென்பது அவசியம். சொத்து சார்ந்த வரிகளுக்கும் இது பொருந்தும், கடன்களுக்கு தான் !

 

 

 

எஸ்டேட் பிளானிங் எப்படி செய்வது ? (Tools for Estate Planning)

 

“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பதற்கிணங்க நாம் நலமுடன் இருக்கும் போதே நமக்கு பின்னால் நாமினியை, வாரிசை நியமிப்பது நமது கடமை.

 

  1. உயிருடன் இருக்கையில் (During the Lifetime) :

 

  • Joint Holding
  • Family Settlement
  • Trust
  • Gift
  • Power of Attorney
  • Mutation

 

(B) நமக்கு (இறப்பிற்கு) பின் (After Death):

 

  • Will
  • Nomination

 

 

  • உயில் (Will):

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

“ Legal declaration of the intention of the testator with respect to his property, which he desires to be carried into effect after his death”

 

உயில் என்பது ஒருவரின் இறப்பிற்கு பின் செயல்படுத்தப்படுவது; உயில் எழுதுபவர்(Testator) தான் உயிருடன் இருக்கையில் தனது உரிமைகளை (சட்டபூர்வமாக, மாற்றக்கூடிய) தனக்கு பிறகு யாருக்கு போய் சேர வேண்டும் என பதிவு செய்வது. பதிவு செய்தல் என்பது வெறும் எழுத்து பூர்வமாகவோ (அ) சட்டப்படியான பதிவாகவோ இருக்கலாம்; சட்டபூர்வமாக பதிவு செய்தல் ஒரு பாதுகாப்பான முறையாகும். இல்லையென்றால் பெவிகால் (Fevicol) விளம்பரத்தில் வருவது போல ஆகி விடக்கூடாதல்லவா 🙂

உயில் எழுதுவதற்கு, இந்த வயதில் தான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் உயில் எழுதுபவர் பொதுவாக 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் அவர் உயில் உருவாக்கும் போது சுய நினைவோடு இருத்தல் (Of Sound mind) வேண்டும்.

 

சட்டபூர்வமாக உயில் பதிவு செய்தல் பாதுகாப்பு மட்டுமன்றி, யாரும் அதனை அழித்து விடவோ, திருடவோ, துஷ்ப்ரயோகம் செய்யவோ முடியாது. உயில் எழுதுபவர் தான் சுய சிந்தனையில் இருக்கும் போது  மட்டுமே அதனை பதிவு செய்ய முடியும். உயில் எழுதுபவரின் சுய கையொப்பம் மற்றும் இருவரின் சாட்சியும் அமைய வேண்டும்.

 

 

பரிந்துரை (Nomination):

 

ஒருவர் தனக்கான சொத்திற்கோ (அ) முதலீட்டிற்கோ தனது இறப்பிற்கு பிறகு யார் அதனை உரிமை கோருவது (Nominee) என்பதை Nomination மூலம் நியமிக்கலாம். தனி நபர் மட்டுமே நாமினியை தேர்வு செய்ய முடியும். நாமினிகள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். நாமினிகளின் தேர்வை ஒரு முதலீட்டாளர் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறையும் மாற்றி கொள்ளலாம்.  வங்கி கணக்கு, பரஸ்பர நிதி, பங்குகளுக்கு நாமினியை நியமிப்பதுண்டு. பொதுவாக ஒரு உயில் பதிவு நாமினியை விட மேலாக கருதப்படும்.

 

கூட்டு (Joint Holding) :

 

Joint Holding என்பது ஒரு குடும்பத்திலுள்ள யாரேனும் ஒரு நபரை தனது கூட்டாக நியமிப்பது; உதாரணமாக தங்கள் வங்கி கணக்குகளுக்கு, Demat கணக்கிற்கு, சொத்து மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு நியமிப்பதாகும். முதலாமவரின்  (Registered / First Holder) இறப்பிற்கு பின் Joint Holder ஆக நியமிக்கப்பட்டவர் இறந்தவருக்கு அடுத்து அவரது சொத்தினையோ, முதலீட்டையோ பயன்படுத்தலாம். Joint Holder குடும்பத்தாரராக அல்லாமல் இருந்து, இறந்தவரின் வாரிசுகள் முறையிட்டால் அது சட்டத்திற்கு உட்பட்டது.

 

 

குடும்ப தீர்வு (Family Settlement):

 

சொத்து தகராறு இல்லாத குடும்பம் எங்கண்ணே, என்கிறீர்களா ?

 

சொத்து சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க தான் நாம் பரஸ்பரமாக, சட்டபூர்வமாகவும் குடும்பத்தாருக்கு Settlement பங்கை பகிர்ந்தளித்தல்  குடும்பத்தில் அமைதியும், நம்பிக்கையும் ஓங்க செய்யும். Family Settlement ஒப்பந்தம் வாய்மொழியாகவோ (அ) எழுத்துபூர்வமாகவோ இருக்கலாம்; தேவைப்படின் பதிவு செய்தல் நலம்.

 

அதிகாரம் / அங்கீகாரம் பெற்ற நபர் (Power of Attorney -POA):

 

உங்கள் தொழில், சொத்து (அ) முதலீட்டிற்கான பரிமாற்றத்திற்கு ஒருவரை POA ஆக நியமிப்பது. அதாவது தனக்கு பதிலாக மற்றொருவர் தனது முதலீட்டை, சொத்தை இயக்குவதற்கு அதிகாரம் அளித்தல். இது பொதுவாக பங்குகளில் செயல்படுத்தப்படும்.

 

மாற்றமடைதல் (Mutation):

 

நாம் மற்றொருவரிடம் இருந்து ஒரு சொத்தினை பெறும் போது (அ) குடும்பத்திலுள்ள நபருக்கு சொத்து மாறும் பொழுது, பெறுபவரின் பெயருக்கு தேவையான உரிமைகள், தகவல்கள் சரியாக மாற்றப்பட்டு விட்டனவா என அறிவது. இது பிற்காலத்தில் நமது வருமானம் சார்ந்த வரி சுமையை எளிதாகும். வருவாய் அலுவலகத்தில் தகவல்கள் அனைத்தும் சரியாக மாற்றப்பட்டுள்ளதா என பார்த்து கொள்ள வேண்டும்.

 

 

 

GST, Aadhaar மற்றும் PAN என நம்மையும், நமது வருமானத்தையும்  சார்ந்த தகவல்கள் ஒருங்கிணைக்கும் நேரத்தில், நாம் ‘எஸ்டேட் பிளானிங் ‘ செய்வதை தவிர்க்க முடியாது. தற்போது சில விஷயங்களுக்கு இந்த எஸ்டேட் பிளானிங் கட்டாயமில்லை என்றாலும், பிற்காலத்தில் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆக, நமக்கு ஒரு ஒருங்கிணைந்த நிதி சார்ந்த, சட்டபூர்வமான அணுகுமுறையை இந்த திட்டமிடல் ஏற்படுத்தி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. நமது வாரிசுகளும் வளமாக வாழ வழிவகை செய்கிறது இந்த தோட்டத் திட்டமிடல் என்னும் ‘Estate Planning’.

 

நமது குடும்பம் நம்பிக்கையில் (நம் கையில்) !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

(image source: pennmutual.com)

 

முதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா ? Investment Insulation

முதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா ?

Have you made Investment Insulation ?

 

கடந்த சில அத்தியாயங்களில் நாம் முதலீடு பற்றியும், முதலீட்டுக்கான வாய்ப்புகளையும், ரிஸ்க் தன்மை பற்றியும் மற்றும் அதனை எவ்வாறு பரவலாக்குவது என்பதனையும் பார்த்தோம். ‘Investing’ என்ற முதலீட்டு சிந்தனையை நாம் பெற்று விட்டோம்; சரி, இப்போது உடனே முதலீட்டில் இறங்க வேண்டியது தானே ! கையில் ரூ. 10,000 (அ) 1,00,000 /- உள்ளதே, அப்புறம் என்ன ஒரு கை பார்த்து விடலாம் என்கிறீர்களா ? அது தான் இங்கு சிக்கலே. மழை வெள்ளம் வரும் முன்னேரே பாதுகாத்திருக்கலாம் என தோன்றுகிறது, அதை தான் நாம் இங்கும் யோசிக்க வருகிறோம்; கையில் பணம் இருப்பதெல்லாம் சரி, முதலீடு செய்வதெல்லாம் சரி தான், முதலீடு ரிஸ்க்கையும் சமாளித்து விடலாம்; அதனை பற்றி நமக்கு சிறிது தெரியும். ஆனால் இயற்கையாக வரும் சில ரிஸ்க் இருக்கிறதல்லவா ? அதிலிருந்து நாம் நம் முதலீட்டை காக்க வேண்டுமல்லவா ? பணம் போனால் சம்பாதித்து விடலாம், பணம் சம்பாதிப்பவரே சிரமத்திற்கு உள்ளானால் (எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு, அதிக கடன், உடல் நலம் சரியில்லாமை) ! அதற்கு தேவை தான் ‘முதலீட்டு காப்பு’ என்ற ‘Investment Insulation’. பயிர்க்காப்பீட்டை போல…

 

 

முதலீட்டு காப்பு எப்படி ?

 

முதலீட்டு காப்பை, ‘Networth’ என்று சொல்லப்படும் நிகரச்சொத்து மதிப்புடனும் ஒப்பிட்டு கூறலாம்.

 

முதலீட்டு காப்பு என்பது உங்கள் முதலீட்டின் மீதான விளைவுகளிலிருந்து உங்கள் அன்றாட (நிதி) வாழ்க்கையை பாதுகாக்க உதவுவது; நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு வருமானம் ஏதும் தராமலோ  (அ) நஷ்டத்தையோ ஏற்படுத்தலாம்; அந்த சமயத்தில் உங்களது தினசரி பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் காப்பது அவசியம். இதை தான் நாம் முதலீட்டு காப்பு என்கிறோம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முக்காப்பு அவசியம் (Three Insulators):

 

நீங்கள் பங்குச்சந்தை / மனை விற்பனை / ஏதேனும் ஒரு தொழிலில் முதலீடு செய்ய உள்ளீர்களா  ?

அதற்கு முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது முக்காப்பு.

 

 

முதலீட்டு காப்புகள்  தேவைகள்/ பயன்கள்   
1 உங்களிடம் போதுமான இன்சூரன்ஸ் உள்ளதா ? Term Policy, Health Insurance, Accident Cover – எதிர்பாராத விபத்து / உயிரிழப்பு, மருத்துவ செலவுகள்
2 அவசர கால நிதியை தயார் செய்து விட்டீர்களா ? Savings of 6-10 Months Income – வேலையிழப்பு, மருத்துவ செலவு, பிற அவசர தேவைகள்
3 மாதச்சேமிப்பு எப்படி ? RD, PPF, Mutual Fund SIP – நிதி இலக்குகளுக்கு – கல்வி மற்றும் திருமண செலவுகள், ஓய்வு கால நிதி ஒதுக்கீடு.

 

 

முதலீட்டு காப்புகள்:

 

  • காப்பீடு (Insurance – Term, Health, Accident Cover)
  • அவசர கால நிதி (Emergency Fund – Savings of 6 – 10 Months)
  • மாத சேமிப்பு / முதலீடு (Monthly Investing – RD, PPF, Mutual Funds SIP)
  • தண்ணீரை சேமியுங்கள் (Save Water – Avoid wastage)
  • மின்சாரத்தை சிக்கனமாக்குங்கள் (Consume Less – Electricity Power)
  • மரம் நடுங்கள் (Save Nature – Planting Tree)

 

முதலில் மேலே நாம் சொன்ன காப்பை செய்து விட்டு தான், மற்ற அத்தியாயங்களில் நாம் சொன்ன வாய்ப்புகளை ஆரம்பிப்பது நன்று; நீங்கள் செய்யும் முதலீடு நஷ்டமடைந்தாலும், வருமானம் தர வாய்ப்பு இல்லையென்றாலும் மற்றும் ஏதேனும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டாலும்  உங்கள் முதலீட்டு காப்பு உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாக்கும்.

 

முதலீட்டு காப்பு என்பது தனிநபர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது சமுதாயத்திற்கான பலனும் தான்.

 

காப்புக்கு தயாராகுங்கள் கருத்துடன் 🙂

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

உங்கள் சொந்த பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்

 

உங்கள் சொந்த பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்

Set your Own Budget Planning

 

பட்ஜெட்டை(வரவு-செலவு திட்டம்)   சுருக்கமாக, A Sum of money allocated for a particular purpose ‘  என கூறுவதுண்டு.

 

ஒரு குறிப்பிட்ட தேவை (அ) நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் என்பது பட்ஜெட் ஆகும்.

 

அரசின் பட்ஜெட்(Union Budget) என்றால் பட்ஜெட்டில் நமக்கு என்ன சலுகை வழங்கப்படும், என்ன நிதி கொள்கைகள் வகுக்கப்படும் என ஆர்வமாக பார்ப்பதுண்டு. ஆனால், நம் பட்ஜெட்டை பற்றி யாரேனும் நம்மிடம் கேட்டால், வருத்தப்பட்டு சொல்வோம். ஏன் நம்மை நாமே கேட்டு கொண்டாலும், உண்மையில் நாம் நமக்கான பட்ஜெட்டை தயார் செய்கிறோமா ?   🙂

 

தனி நபர் பட்ஜெட் (Personal Budget Planning)  என்பது நமது தேவைக்கான செலவினங்களை முன்கூட்டியே திட்டமிடுவது மற்றும் நமது ஒவ்வொரு தேவைக்கும் எவ்வளவு தொகை தேவைப்படும் என முன்கூட்டியே அறிவது; தனி நபர் பட்ஜெட் நமக்கான ஒரு திட்டத்தை வரையறுத்து நமது தினசரி செலவுகள், சேமிப்புகள் மற்றும் கடன்களை நிர்வகிக்க உதவும்.
ஏன் நமக்கான பட்ஜெட் அவசியம் ? (Reasons for Budget Planning)

 

  • நமது தினசரி வரவு – செலவுகளை அறிய உதவும்.
  • எது தேவையான செலவுகள், தேவையற்றவை என பிரித்துணர முடியும்.
  • அவசர காலத்திற்கு தேவையான தொகையை சேமிக்க திட்டமிடலாம்.
  • நமது எதிர்கால இலக்குகள் மற்றும் ஓய்வு காலத்திற்கு தேவையான தொகையை ஒதுக்கிட உதவும்.
  • பொருளாதார ரீதியாக நம்மை மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

நமக்கான பட்ஜெட் திட்டத்தை தயார் செய்வது எப்படி ?

How to set your Own Budget Planning ?

 

  • ஒரு புதிய நோட்டு புத்தகம் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள் (அ) உங்கள் ஆண்ட்ராய்டு(Android) போனில், Expense Manager (Playstore App)  செயலியை பதிவிறக்கி, இயக்குங்கள்; இப்போது உங்கள் புதிய நோட்டு புத்தகத்தில் (அ) Expense Manager செயலியில் உங்கள் தினசரி செலவுகள், வரவுகள் மற்றும் சேமிப்புகளை தேதியிட்டு குறித்து கொள்ளுங்கள்.    
  • மாத முடிவில், உங்கள் அந்த மாதத்திற்கான செலவுகள், வரவுகள் மற்றும் சேமிப்புகளை தனித்தனியாக கணக்கிடுங்கள்.
  • மேலுள்ள இந்த முறையை அடுத்த 3 (மூன்று) மாதத்திற்கு தொடருங்கள்.
  • இப்போது உங்களுடைய 3 (மூன்று) மாத – அதாவது காலாண்டு நிதி முடிவுகள் தயாராகி விட்டது. உங்களிடம் உள்ளது Personal Quarterly Financial Report (PQFR).
  • உங்களின் PQFR தகவலில் இருந்து ஒவ்வொரு தேவைக்கான செலவுகளை தனித்தனியாக மூன்று மாதத்திற்கு எடுத்து கொள்ளுங்கள்; அதாவது, உங்களின் கடந்த மூன்று மாத போக்குவரத்து செலவுகள், 3 மாத பலசரக்கு மளிகை செலவுகள், 3 மாத வீட்டு கடன் தவணை, 3 மாத சிறு சேமிப்புகள் என அனைத்தையும் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

 

இப்பொழுது  உங்களுக்கென்று உள்ள PQFR மூலம் நீங்கள் உங்கள் கடந்த காலாண்டு செலவுகள் மற்றும் சேமிப்புகளை அறிந்தாயிற்று; இது தான்  உங்கள் காலாண்டு பட்ஜெட். இது போல அரையாண்டு, ஒரு வருடத்திற்கு என கணக்கிடலாம்; இதன் மூலம், எதற்கு எவ்வளவு செலவு செய்தோம், எவற்றுக்கெல்லாம் நாம் செலவுகளை குறைக்கலாம், எந்த சேமிப்பை / முதலீட்டை அதிகரிக்கலாம் என உத்தேசமாக, சராசரியாக அறியலாம்.

இனி உங்கள் எதிர்கால பட்ஜெட் திட்டம்…

 

சூப்பர் பட்ஜெட் 50: 30: 20

 

சூப்பர் பட்ஜெட் (50:30:20) துணை கொண்டு நாம் நமது கடந்த கால (3 மாதம்) திட்டத்துடன் ஒப்பிட்டு, புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

 

  • உங்கள் மாதாந்திர வரவு / வருமானத்தை எடுத்து கொள்ளுங்கள்

             ( வரிகள், ஓய்வு கால நிதி ஒதுக்கீடு கழித்து போக )

 

  • உங்கள் தேவைகளை மாத வருமானத்தில் 50 % க்குள்  வைத்து கொள்ளுங்கள். ( அத்தியாவசிய தேவைகளுக்கு)

 

  • உங்கள் விருப்பங்களை மாத வருமானத்தில் 30 % க்குள் வைத்து கொள்ளுங்கள். ( தினசரி மாறுபட்ட செலவுகள், பொழுதுபோக்கு, கனவு இலக்குகள்)

 

  • உங்கள் மாத வருமானத்தில் 20 % வரை சேமியுங்கள். ( கடன்களை அடைக்க, எதிர்கால நிதி தேவைகளுக்கு) .

உதாரணம்:

தனியார் துறையில் பணிபுரியும்  திரு. சுந்தர் அவர்களின் ஆண்டு மொத்த வருமானம்:  ரூ. 3,00,000 /- (3 லட்சம்). அவரின் ஆண்டு வருமானத்தில் வரிகள் மற்றும் தொழிலாளர் வைப்பு / ஓய்வு நிதி போக (20 %) கையில் பெறும் ஆண்டு வருமானம்:  ரூ. 2,40,000 /- அதாவது மாதத்திற்கு ரூ. 20,000 /-

 

ஆண்டு மொத்த வருமானம்:    ரூ. 3 லட்சம்

வரிகள், ஓய்வு நிதி – 20% :                ரூ. 60,000 /- (ஆண்டுக்கு)

நிகர ஆண்டு வருமானம்:             ரூ. 2,40, 000 /- (மாதம் – ரூ. 20,000 /-)

 

அவரின் சூப்பர் பட்ஜெட் இதோ…

 

மாத வருமானம்:                         ரூ. 20,000 /-

 

  • அத்தியாவசிய தேவை:        ரூ. 10, 200 /- (மாதம்)   –    மாத வருமானத்தில்   51 %

             (  வீட்டு வாடகை, போக்குவரத்து,  உணவு, மின்சாரம்)

 

  • தினசரி மாறுபட்ட செலவுகள்:    ரூ. 6000 /-(மாதம்)   – மாத வருமானத்தில் 30 %

(பொழுதுபோக்கு, விருப்ப உணவு, கடைக்கு செல்வது [Shopping], உடற்பயிற்சி  )

 

  • சேமிப்புகள் / முதலீடுகள் / கடன் தவணைகள்: ரூ.  3800 / – (மாதம்)

                                                                                      – மாத வருமானத்தில் 19 %

(வீடு, வாகன கடன், அவசரகால நிதி, ஓய்வு கால சேமிப்பு, எதிர்கால இலக்குகள்)

 

பட்ஜெட் மதிப்பீடு:

 

நம்மிடம் கடந்த 3 மாத கால பட்ஜெட் உள்ளது; அதன் அடிப்படையில் ஒவ்வொரு தேவைக்குமான சராசரி செலவுகள், சேமிப்புகள், கடன்களை எடுத்து கொள்ளுங்கள். அந்தந்த மாதத்திற்கான ஒவ்வொரு தேவைகளையும் (செலவுகள், சேமிப்பு, கடன்) மாத வருமானத்திலிருந்து வகுத்து கொள்ளுங்கள்.  கிடைக்கும் மதிப்பினை குறித்து வைத்து கொள்ளுங்கள்.

 

(உதாரணம்:    அத்தியாவசிய தேவை + மாறுபட்ட செலவுகள் / மாத வருமானம்)

 

சில மதிப்பீடுகள்…

 

  • அத்தியாவசிய தேவை + மாறுபட்ட செலவுகள் / மாத வருமானம்

கிடைக்கும் மதிப்பு   <   0.75               – நன்று !

  •         >  0.75  <  0.85  – செலவுகளை குறையுங்கள்
  •         >  0.85  <  1.00  – எச்சரிக்கை
  •         >  1.00               – நீங்கள் திவாலாகலாம்  😦

 

 

  • சேமிப்பு + முதலீடு / மாத வருமானம்

 

 

         கிடைக்கும் மதிப்பு   > = 0.25         – மிகவும் நன்று  !

  •   < 0.25 > 0.10  – சேமிப்பை அதிகரியுங்கள்
  •   < 0.10             – உங்கள் குழந்தை உங்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது / நீங்கள் ஓய்வு காலத்திற்கு உங்கள் பிள்ளைகளை நம்பி காத்திருக்கிறீர்கள்.

 

இது போன்று சில மதிப்பீடுகளை கொண்டு உங்கள் சொந்த பட்ஜெட்டை அலசி ஆராயுங்கள். இப்போதே ஒரு நோட்டு புத்தகத்தை வாங்க தயாராகுங்கள்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

www.varthagamadurai.com

 

 

 

 

ஜென் போல முதலீடு செய்யுங்கள்-The Passive Income Giant

ஜென் போல முதலீடு செய்யுங்கள் – The Passive Income Giant

 

பணத்திற்கும், மனதிற்கும் சம்மந்தம் உண்டா ?  

 

உண்டா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்; மனதின் தேவையே இன்று பணத்தின் தேவையாக உள்ளது; சிலர் சொல்லலாம் பணத்தை பார்த்து வருவதில்லை மனசு என்று ! ஆனால் நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், நம் ஆழ்மனது தன்மனதின் தேவையை பணத்தின் தேவையாக மாற்றும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல இன்று அத்தியாவசிய தேவைக்கு பணமில்லா வாழ்க்கை தெருவில் விட்டது. பணம் தான் வாழ்க்கை, எனினும் அதற்காக அந்த பணத்தை பெருக்க தவறான அணுகுமுறையை கையாள்வது சரியாகி விடாது;

 

பணத்திற்கு வேறு சில புனைப்பெயர்களும் உண்டு – அறிவு, ஆளுமை, தற்சிந்தனை, அன்பு என பெயரும்…

பணம் வெறும் காகிதமாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை; எனக்கு பணத்தின் மீது எல்லாம் ஆசை இல்லை, உலகம் ஒரு மாயை (நவீன யுகம்) என்று வேதாந்தமும் பேசலாம்; ஆனால் நம் சிந்தனை எவ்வாறு இருந்தாலும் அதற்கு ஒரு வடிவம் வேண்டுமல்லவா, அதற்கு தான் இந்த பணம் என்னும் செல்வம். இயற்கையும் ஒரு பணக்கார செல்வம் தான், இல்லையென்றால் அது இன்னும் நம்மை பாதுகாத்து அரவணைத்திருக்காது;

 

புத்தரானாலும் சரி, பில்கேட்ஸ் ஆனாலும் சரி அவர்களால் எப்படி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது; புத்தருக்கும், பில்கேட்ஸ்க்கும் கொள்கை வேண்டுமானால் மாறலாம், ஆனால் அவர்கள் ஒரே படகில் செல்லும் ஜென் (Zen) தத்துவம் சார்ந்தவர்கள்.

 

ஆம், ஜென் (Zen) தத்துவம் சார்ந்தவர்கள் தான் ! நீங்கள் இந்த உலகம் காணும் ஒரு மாபெரும் தலைவனாக, எல்லோரும் அறிந்து புகழப்படுபவராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை; ஆனால் புத்தரை போல, பில்கேட்ஸை போல ஒரு ஜென் சார்ந்த சிந்தனை இருந்தால் போதும். என்னடா, பணம் பற்றி பேசி விட்டு ஜென் சார்ந்த விஷயம் என்கிறாரே என எண்ண வேண்டாம் 🙂 உண்மையில் முதலீட்டு சிந்தனை என்பது ஒரு ஜென் சார்ந்த தத்துவமே. ஜென் சிந்தனை என்பது சீன மற்றும் ஜப்பானுக்கு மட்டுமல்ல, அது பொதுவாக தான்; அது ஆழ்மனதின் உணர்வு; எல்லோராலும் ஏற்கப்பட்டவை.

 

ஜென் போல பயிற்சி (முதலீடு) செய்யுங்கள் :

 

  • ஜென்’ சிந்தனையின் அடிப்படையே எந்த பற்றும், இணைப்புமின்றி தினமும் சில நிமிடங்களுக்கு எதாவது ஒரு வேலையை தொடர்ச்சியாக செய்வது – அது நீங்கள் தினமும் 10 நிமிடங்கள் நடப்பதாக இருக்கலாம், ஒரு மொழியினை தினமும் 5 நிமிடங்கள் கற்பது, ஒருவருக்கு சிறு உதவி செய்வது, உங்கள் குழந்தைக்காக  தினசரி 10 ரூ. முதலீடு செய்வது, சில நிமிடங்கள் சும்மா உட்காருவது.  இந்த அடிப்படை தத்துவமே புத்தரை(Buddha) ஞானியாக்கியதும், பில்கேட்ஸை(Billgates) பணக்காரானாகியதும் ! (Invest Regularly – தொடர் முதலீடு அவசியம் )

 

  • கிடைத்ததை ருசித்தும், ரசித்தும் உண்ண பழகுங்கள்; முயற்சித்து பாருங்கள். உணவு உண்மையிலே உடல் பலத்தை மெருகேற்றும் – எந்த செயற்கையும் இல்லாமல் ! பல் துலக்குவதும் அழகு தான், வலது கையில் பல் துலக்குபவர் ஒரு முறை இடது கையில் முயற்சி செய்து பாருங்கள் (Love the Investing, Financially Free – கடனை குறையுங்கள், நிதி சுதந்திரம் அடையுங்கள்)

 

  • உங்கள் மனதுக்கு பிடித்ததை அல்லது நீங்கள் அடைய போகும் இலக்கிற்கான செயலை தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் செலவழியுங்கள்; நீங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லையா ? நீங்கள் இருக்கும் சூழ்நிலை உங்களுக்கு இணக்கமாக இல்லையா ? சரி, நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்களோ அதனை நீங்களே தினமும் செய்யுங்கள்; பிடிக்காததை பற்றிய கவலை வேண்டாம், பிடித்ததை மட்டும் செய்யுங்கள். (Financial Goals – What would you need and desire ? சரியான மற்றும் உறுதியான நிதி இலக்குகள் )

 

  • வாழ்க்கை நிரந்தரமல்ல, ஆனாலும் வாழ தான் ஆசைப்படுகிறோம். நீண்ட கால முதலீட்டிற்கு தயாராகுங்கள். இடையில் தடைகள் ஏதேனும் இருப்பின் அதனை தற்சிந்தனை கொண்டு கலையுங்கள். கவலை கொள்ள வேண்டாம் – வாழ்க்கை தான் நிரந்தமில்லையே; முடிந்தவரை அன்றன்று செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள். அன்று நடந்து முடிந்தவைகளை பற்றி ஆராய (கவலை) வேண்டாம். இணைப்பின்றி வாழ கற்று கொள்ளுங்கள். பிரச்சனைகள் வரும் சமயங்களில் உங்கள் மூச்சு சுவாசத்தினை உற்று நோக்குங்கள், மூச்சுக்காற்று உள்ளும் புறமும் செல்வதை கவனியுங்கள். (Long Term Investment to protect from short term Volatile – நீண்ட கால முதலீட்டில் தவறை திருத்தி கொள்ளலாம், பணப்பெருக்கமும் அடையலாம்)

 

  • ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் கவனத்துடன் செய்ய பழகுங்கள். Dual, Multi Tasking வேலைகள் வேண்டாம். ஒரே ஒரு வேலையை அதே சிந்தனையோடு 20-30 நிமிடங்கள் வரை செய்யுங்கள். முயற்சித்து பாருங்கள், பலன் அறிவீர்கள். நீங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா ? அதனை மட்டும் செய்யுங்கள்; T.V ஐ பார்த்து கொண்டே செய்ய வேண்டாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமா ? பங்குச்சந்தையை மட்டும் இப்போது கற்று கொண்டு முதலீடு செய்யுங்கள். தங்கம், ரியல் எஸ்டேட் பற்றிய கவலை இப்போது வேண்டாம். அதனை பிறகு பார்த்து கொள்ளலாம். இந்த பயிற்சி உங்கள் மனதை பலமாகும். (Concentrated Investing & Delayed Gratification)

 

  • உங்களை நீங்களே எப்போதும் பாராட்டி கொள்ளுங்கள்; இந்த இயற்கையும் அதனை சார்ந்த உயிரும் நமக்கு எத்தகைய வாய்ப்பை தந்து கொண்டிருக்கின்றன என்பதை சிந்தியுங்கள். முடிந்தவரை எதற்கும் பாதிப்பின்றி வாழ (உணவுச்சங்கிலியை தவிர்த்து) முயற்சியுங்கள். செய்யும் வேலையை பொறுமையாக செய்தல் மற்றும் எடுத்து கொண்ட செயலை முழுவதும் முடிக்க பழகுங்கள். (Achievable Financial Goals – Determine it)

 

  • சோம்பேறியாக இருக்க முயலுங்கள். அதிக வேலைகளையும், பொறுப்புகளையும் எடுத்து கொள்ளாதீர்கள்; உங்களால் முடியாததை முடியாது, இல்லை என சொல்ல தயாராகுங்கள்; உங்களுக்கு தெரியாததை கற்று கொண்ட பின்னர் செய்யுங்கள். ஆனால் காலையில் வேகமாக விழிப்பதற்கு தயாராகுங்கள். தேவையற்ற விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களுக்கு என ஒரு இலக்கை நிர்ணயுங்கள் – ஒரு வாரமாக, ஒரு வருடமாக, வாழ்நாள் முழுவதுமாக இருக்கலாம். (Invest in what you know – தெரிந்ததை தேர்ந்தெடுங்கள்)

 

Zen is not some kind of excitement, but concentration on our usual everyday routine.

– Shunryu Suzuki

 

ஜென் சிந்தனை போல சும்மா உட்கார்ந்து செல்வம் சேர்க்கலாம்(The Passive Income Giant).

“You should study not only that you become a mother when your child is born, but also that you become a child.”

– Dogen Zenji

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் ? Personal Cash Flow

நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் ?  Personal Cash Flow

 

பணம், பணம், பணம் – எங்கும் பணம், எல்லாம் பணம்…

இந்த மாயை (நவீன யுகம்) உலகில் எங்கும் நிறைந்திருக்கிறது பணம் ! ஆனால் உண்மையில் நீங்கள் பணம் வைத்திருக்கிறீர்கள்; எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என  தெரியுமா ?

ஏன் சிலருக்கு பணம் பண்ணுவது  மிக எளிமையானதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் உள்ளது ?

பணம் படைத்தவர்கள் ஏன் பணத்தை பெருக்கி கொண்டே போகிறார்கள்; மற்றவர்களால் ஏன் முடியவில்லை ? பணக்காரர்கள் எப்படி அவ்வளவு அபரிதமான சொத்துக்களை கொண்டு வருமானம் சேர்க்க முடிகிறது (ஊழல்வாதிகள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல ) ? இதற்கான ரகசியம் தான், ‘நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்  ? ’ என்பது. நான் நீங்கள் வேலைக்கு செல்வதையோ, தொழில் புரிவதையோ சொல்லவில்லை; மாறாக உங்களின் பணம் உங்களுக்கு எவ்வளவு சம்பாதித்து கொடுக்கிறது என்பதை தான் கேட்கிறேன்; உங்கள் சொத்து / முதலீடு உங்களுக்கு எவ்வளவு சம்பாதித்து கொடுக்கலாம் என்று தான் வினவுகிறேன்.

நீங்கள் சம்பாதித்தது…

ஒரு தனிநபர் மாதம் ரூ. 1,00,000 /- சம்பாதிக்கிறார் என வைத்துக்கொள்வோம்; அவரது மாதச்செலவு ரூ. 99,000 /- என்றால், உண்மையில் அவர் சம்பாதித்தது (1,00,000 -99,000)  ரூ. 1000 /- மட்டுமே;  1,00,000 /- சம்பளத்தை அல்ல ! இவ்வாறு நிலைமை இருக்கும் போது, எதிர்பாராவிதமாக ரூ. 1,00,000 வருமானம் உள்ளவரை நாம் பணக்காரர் என சொல்லிவிட்டு, மாதச்சம்பளம் ரூ. 20,000 /- பெறும் ஒருவர் மாத இறுதியில் ரூ. 5,000 /- மிச்சம் வைப்பவரை நடுத்தர / ஏழை என சாலையோரமாக சொல்லிவிட்டு செல்கிறோம்;

உண்மையில் நீங்கள் சம்பாதித்தது என்பது உங்கள் தேவை, விருப்பம் போக உள்ளது தான்;  உங்களிடம் ஒருவர் பணஉதவி நாடி வருகிறார்; நீங்கள் வாங்கும் ரூ. 1 லட்சம் சம்பளத்தில் 99,000 ரூ. செலவு என்று அவரிடம் சொன்னால், அவர் உங்களை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டு சென்றாலே நீங்கள் தப்பித்தீர்கள் தான் 🙂   

பகவத்கீதையில் சொல்வது போன்று, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு ? ‘ – நிதி சார்ந்த விஷயத்திலும் சரியான கூற்று தான். இது தான் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருப்பதற்கும், ஏழைகள் ஏழைகளாக தொடர்வதற்குமான காரணம் ! கோடீஸ்வரர் பில் கேட்ஸ் சொல்வது  போல, ‘If you born poor, it’s not your fault. But if you die poor, it’s your mistake’  இதற்கும் பொருந்தும்; சரி விஷயத்திற்கு வருவோம்; தலைப்பை வைத்து விட்டு சீக்கிரம் விஷயத்தை சொல்ல வேண்டுமல்லவா !

உங்கள் சம்பாத்தியம் என்பது, ‘ உங்கள் வரவுக்குள் அடங்கும் செலவும், முதலீடு  மற்றும் சொத்து மீதான தொடர் வருமானமும் தான் ’.

 

உங்களிடம் ஒரு  சொந்த வீடு அன்றாட தேவைக்கு உள்ளது; இன்னொரு வீடு வாங்க (அ) கட்ட ஆசைப்படுகிறீர்கள்; ஆசைப்படுவது சரி தான், கடன் வாங்கி வீடு வாங்கியாச்சு, இதனை நாம் ஒரு சொத்தாக கருதுகிறோம்(கவுரவ சொத்து );  உங்களின் முதலாவது வீடு போல சும்மா வைத்திருந்தால் யாருக்கு என்ன லாபம் ?  –  வீட்டு வரிவசூல் செய்யும் நிர்வாகத்திற்கும், வீட்டு தேய்மானத்தை சரி பார்ப்பவருக்குமே 🙂  கண்டிப்பாக உங்களுக்கு இல்லை !  எந்த வருமானத்தையும் தராமல்  செலவை மட்டும் கொண்டது, எப்படி ஒரு சொத்தாகும் ? மாறாக அது ஒரு கடனே; அது உங்களை சுமக்க வைக்கும் வரிகள், தேய்மான செலவுகள், காப்பீடுகளால். அதற்கு பதிலாக நாம் அந்த வீட்டை கொண்டு மற்றவருக்கு உதவி செய்தால்(வாடகை) ஒரு சேவையும் செய்ததாகி விடும், ஒரு மாத தொடர் வருமானமும் கிடைக்கும்; வீட்டு வாடகை வருமானத்திலும் நாம் கவனம் கொள்ளவும்; அதாவது வீட்டு வாடகை மூலம் சராசரியாக மாத வருமானம் நமக்கு (முதலீட்டின் மீது-ஆண்டு வட்டி) 4 % கிடைத்தால் சரி, அதற்கு குறைவாக இருந்தால் வீடு வாங்குவதற்கு பதில் அந்த பணத்தை வங்கியிலோ (அ) வேறு முதலீட்டையோ அறியலாம்; முதலீட்டு பெருக்கத்தையும் சிந்திக்க வேண்டும். (வீட்டு வாடகை அதிகரிப்பு என கொள்ளை அடிக்காமல் இருந்தால் சரி )

 

உங்களிடம் தங்கம் ஆபரணமாக உள்ளது. வெறும் ஆபரணமாக பல வருடங்கள் வைத்திருப்பதால் பயனேதும் இல்லை; அது ஒரு செலவே. மாறாக, அது உங்களுக்கு ஒரு அவசர தேவையாக பணமாக மாறினால், முதலீட்டு பெருக்கமடைந்தால் பயனாக இருக்கும்; தங்கப்பத்திரமாக இருந்தாலும் வட்டி வருமானம் கிடைக்கலாம்; நீங்கள் பங்குச்சந்தையில் மற்றும் அதன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தாலும் தொடர் மாத வருமானமும் பெறலாம், நீண்ட காலத்தில் முதலீடும் லாபமடையலாம்; ஆக, உங்களின் வேலை / தொழில் மூலம் கிடைத்த வருமானம், முதலீடு மற்றும் சொத்து மூலமாக உங்களுக்கு ஒரு தொடர் வருமானம் பெறுவது தான், சம்பாத்தியம்(Personal Cash Flow) ஆகும்.

 

உதாரணமாக, நீங்கள் ஒரு தொழிலை ரூ. 5,00,000 /- முதலீட்டில் தொடங்குகிறீர்கள். அந்த தொழிலுக்கான மாதச்செலவு ரூ.2,000 /- ஆகவும், மாத வருமானம் ரூ. 10,000/- ம் கிடைக்கிறது. இப்போது உங்கள் மாத லாபம்(10000 – 2000)  ரூ. 8,000/-. தொழிலில் ஏற்ற இறக்கமும் இருக்கலாம், வருமானத்திற்கும் கூட… அப்படி சில நேரங்களில் உங்களுக்கான வாடிக்கையாளர் தாங்கள் பெற்ற பொருள் (அ) சேவைக்கு தாமதமாக பணம் செலுத்துகிறார் என்றால், நீங்கள் நிர்ணயித்த காலத்திற்கான லாபமும் குறையலாம்; இதனால் உங்கள் மாதச்செலவுகளில் வித்தியாசம் ஏற்படலாம். நீங்கள் உண்மையில் கையில் பெற்ற தொகையை (தொடர் வருமானம்) சம்பாத்தியம் என்றேன். அப்படி என்றால் இந்த தொழிலிலும் தொடர் வருமானம் என்பது சில நேரங்களில் தாமதமாகிறது. – வேலைக்கும் இது தான் !

 

வேலைக்கு செல்பவருக்கு போனஸ் / சம்பள உயர்வு அறிவிப்பு வந்தவுடன், அவர் அப்போதே தனது கனவு கோட்டையை கட்டி விட்டு செலவுகளை செய்து விடுவார்; ஆனால் போனஸ் / சம்பள உயர்வு என்னவோ சில மாதங்களுக்கு பிறகு தான் கையில் வந்து சேரும். சம்பளம் அதிகமாக வரும் என முன்கூட்டியே கடன் வாங்கி செலவழிப்பவரும் உண்டு; கடனுக்கு வட்டியும் கட்ட வேண்டும்; ஆனால் அவருக்கு தாமதமாக கிடைத்த போனஸ் / சம்பளத்துக்கான வட்டியை யாரிடம் கேட்பது ? !

 

RichDad PoorDad இணைய தளத்தில் Robert Kiyosaki அவர்களின் “CASH FLOW CLASSIC” விளையாட்டை ஒரு முறை விளையாடி பாருங்கள்; உங்களது வரவு-செலவுகளை பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும்; நீங்கள் எவ்வளவு தான், ‘ எனக்கு இவ்வளவு  மதிப்பில் சொத்து உள்ளது (அ) என் தகுதிக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கும் ‘ என சொன்னாலும் அனுபவித்தால் (கையில் ரொக்கமாக பெறுதல்) மட்டுமே அது சம்பாத்தியம். இதை தான் பெரும் பணக்காரர்கள் தங்கள் தொழில், முதலீடு மற்றும் கட்டிடங்களின் மூலம் ஒவ்வொரு நாளும் தொடர் வருமானம் பெறுகின்றனர்; Cash Flow என்பது பணக்காரருக்கு மட்டுமானதல்ல… மாத வருமானம், சிறு தொழில் செய்பவருக்கும் தான். உங்கள் அஞ்சலக சேமிப்பில், சீட்டு சேமிப்பில், வங்கி வட்டி வருமானத்தில் பெறுங்கள். உங்கள் சொத்துக்களை சும்மா இருக்க விட வேண்டாம்.

 

அனுபவியுங்கள் உங்கள் சம்பாத்தியத்தை !

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !  

(Feature image courtesy: startupbros.com)

உங்கள் முதலீடு பன்முகத்தன்மை வாய்ந்ததா ? Diversification and Asset Allocation

உங்கள் முதலீடு பன்முகத்தன்மை வாய்ந்ததா ?

Diversification and Asset Allocation

 

  • கடந்த சில அத்தியாயங்களில் பணம் பண்ணும் ரகசியத்தை (வாய்ப்புகள்) பற்றி தெரிந்தாயிற்று;  ‘ரிஸ்க்’ (Risk) ன் தன்மை பற்றியும் அறிந்தாயிற்று; ரிஸ்க் பரவலாக்கம் என்ன என்பதையும் இப்போது பார்த்து விடுவோம்; நாம் எந்தளவுக்கு ‘ரிஸ்க்’ எடுக்கிறோமோ அந்தளவுக்கு ‘முதலீட்டு ரிஸ்க்’ பரவலாக்கம் என்பதும் அவசியம். பரவலாக்கத்தை, ‘Diversification’ என்று சொல்லலாம். அதாவது ஹோட்டலில் பல உணவு பட்டியல் (Menu) உள்ளது போல…

 

  • நாம் செய்யும் முதலீடுக்கும் இந்த பரவலாக்கம்(Diversification) தேவையானது தான்;  நாம் கல்லூரியில் சென்று படிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறோம்; அங்கே ஒரே ஒரு துறை மட்டும் தான் உள்ளது என்கிறார்கள்; என்ன செய்யலாம் நாம் ?

 

  • அந்த ஒரு துறைக்கு எப்போதும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கிறது, நல்ல சம்பளம் மற்றும் தொழில் செய்தால் வருமானம் நன்றாக கிடைக்கும் என்றால் பரவாயில்லை  – தேர்ந்தெடுக்கலாம். அதற்கு மாறாக போட்டி சூழல் நிலவுகிறது, வேலை வாய்ப்பின்மை மற்றும் வருமான வாய்ப்பு குறைவு என்றால், நாம் அந்த துறையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கொஞ்சம் ‘ரிஸ்க்’ அதிகம் தான்; பல்வேறு துறைகள் படிப்பதற்கு இருந்தால் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்; நாம் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்; இதே போன்று தான் முதலீட்டிலும்…

 

  • Diversification’  என்பது ஒருவருடைய முதலீட்டு ரிஸ்க் தன்மையை குறைத்து, முதலீட்டை  பரவலாக்குவது; அதாவது பலதரப்பட்ட முதலீட்டு வகைகளில் பிரித்து முதலீடு செய்வது. இதனால் முதலீட்டாளருக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது மற்றும் தனது ரிஸ்க் தன்மையை குறைத்து கொள்ளலாம்.

பொதுவாக நாம் பண்ணுவதற்கான சில வாய்ப்புகள் இதோ…

  • வங்கி சேமிப்பு / வைப்பு  (Bank Deposits)
  • பத்திரங்கள் (Bonds)
  • பங்குச்சந்தை (Stock Market)
  • பரஸ்பர நிதி (Mutual Fund)
  • வாடகை வருமானம் (Real Estate)
  • தொழில் வருமானம் (Business)
  • தங்கம் (Gold and other Commodities)
  • அறிவு சார்ந்த வருமானம் (Earn Through Knowledge)

 

Diversification எப்படி செய்யலாம் ?

 

நம்மிடம் ரூ. 1 லட்சம் பணம் முதலீடு செய்வதற்கு இருப்பதாக வைத்து கொள்வோம்; நாம் இந்த ஒரு லட்சத்தை மேலே சொன்ன எதாவது ஒரு வாய்ப்புகளில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கலாம்; நமக்கிருக்கும் வாய்ப்புகளும் ஏராளம்; ஆனாலும் அதற்கேற்ற ரிஸ்கும் உள்ளது. உதாரணத்திற்கு நாம் முதலீடு பாதுகாப்பு கருதி வங்கியில் முதலீடு செய்கிறோம் எனில், RBI(Reserve Bank of India) ன் அறிவுறுத்தலின் படி நமது வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் நமது முதலீட்டுக்கான வருமானம் குறைய வாய்ப்புள்ளது, பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தையும் ஈட்ட  முடியாது. சரி, அரசு மற்றும் தனியார் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் எனில், பத்திரங்களின் விலையும், வங்கி வட்டி விகிதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. (Interest Rate Risk) பங்குசந்தையில் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் அதிக வருமானம் ஈட்டலாம்; ஆனால் இன்று நாம் முதலீடு செய்யும் பங்கு (அ) துறை 10, 20 வருடங்களுக்கு பிறகு எவ்வாறு செயல்படுகிறது என கணிக்க முடியாது; பரஸ்பர நிதி திட்டங்கள் பெரும்பாலும் பங்குகளிலும், பத்திரங்களிலும் தான் முதலீடு  செய்கிறது; அதனால் பங்குச்சந்தை மற்றும் வங்கிகளின் ரிஸ்க் பரஸ்பர நிதிக்கும் உள்ளது. Real Estate, Commodities, Art இன்னும் பிற வாய்ப்புகள் உள்ளன.

 

மாற்றம் தான் இவ்வுலகத்தில் மாறாததாக இருக்க முடியும்; மற்றவையெல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டவை தானே !

 

  • சரி, ஒவ்வொரு வாய்ப்புகளிலும் ரிஸ்க் உள்ளது என்பதால், அதற்காக  நமது வருமானம் பார்க்கும் வாய்ப்பை விட்டு விட முடியாதே. காரணம், பணம் பண்ணும் சூட்சுமமே இந்த ரிஸ்க் தான்.  கொடிக்காய்க்கு ஆசை பட்டாச்சு, பறிப்பது சிரமமாக உள்ளதே என சொல்ல முடியாது. நமது சிரமத்தையும் பரவலாக்க வேண்டும்.  அது தான் ‘Diversification’.

 

  • நாம் ஏற்கனவே சொன்னது போல நமது முதலீடு பல்வேறு ரிஸ்க் தன்மையை அடக்கியது (Types of Risk); Diversification செய்வதால் நமது லாபத்தை அதிகரிக்கலாம். ஆனால் நாம் நஷ்டமடையாமல் இருக்கலாம் என உறுதியளிக்க முடியாது. வேண்டுமென்றால் பரவாலாக்குவதின் மூலம் நஷ்ட விகித்தை குறைக்கலாம்.

 

  • Diversification என்ற விஷயத்தில் நம்மில் பலர் சில குழப்பங்களையும் செய்து கொண்டிருக்கிறோம்; பல பரஸ்பர நிதி திட்டங்களை வாங்குவது மற்றும் பல துறைகளின் பங்குகளை சந்தையில் வாங்குவது Diversification என முடிவு செய்து கொள்வது – இது ஆரோக்கியமான Diversification அல்ல ! ஏனெனில் பொருளாதாரம் மற்றும் சந்தையில் ஏதேனும் காரணத்தால் இறக்கமடைந்தாலும் உங்கள் (Mutual Funds, Stocks) முதலீடும் இறக்கத்தில் செல்லும். உங்கள் முதலீடு அனைத்தும் பங்குசந்தையில் இருக்கும் போது ஏது Diversification ? இதனை ஒரே ஒரு Asset Class ல் முதலீடு உள்ளது என சொல்லலாம். பல தரப்பட்ட வருமான வாய்ப்புகள் (அ) Asset Class என்று  பங்குகள் கொஞ்சம்(Stocks or Mutual Fund), வங்கி சேமிப்பு கொஞ்சம், பத்திரங்கள் சிறிது, தங்கம் மற்றும் வாடகை வருமானம் கொஞ்சம், பிடித்த தொழில் வருமானம் என இருந்தால் Diversification நன்று.

 

Diversification Benefits:

 

  • ‘Risk’ தன்மையை குறைத்து முதலீட்டு பெருக்கத்தை அதிகரித்தல்.
  • முதலீட்டு தொகையை பாதுகாத்தல்.
  • பல்வேறு முதலீட்டு வகைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு.
  • பொருளாதார ஏற்ற இறக்கத்திலும் தேவையான வருமானத்தை கொடுப்பது.

 

Asset Allocation:

 

முதலீட்டாளரின் முதலீட்டு தொகுப்பை (Portfolio) பரவலாக்குவதன் நோக்கம் தான் Asset Class. Asset Class ல் பல வகைகள் உள்ளன; அவற்றில் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பயனடையலாம்.

 

Asset Class வகைகள்  (Categories) :

 

  • பங்கு சார்ந்த முதலீடு (Equity – Growth Oriented)
  • கடன் சார்ந்த முதலீடு (Debt – Income Oriented)
  • ரொக்க பணம் (Cash and its equivalents)
  • மனை சார்ந்த முதலீடு (Real Estate – Income/Growth Oriented)
  • கலை சார்ந்த முதலீடு (Art Work, Stamp, Currency)
  • பொருள் வணிகம் (Commodities)

 

Asset Class வகைகள் நோக்கம்
பத்திரங்கள்(Bonds) குறுகிய கால வருமானம்(Income)
வங்கி சேமிப்பு (Bank Deposits) குறுகிய கால வருமானம்
தங்கம் (Gold) நீண்ட கால வளர்ச்சி(Growth)
பங்குகள் (Equity) நீண்ட கால வளர்ச்சி
மனை (Real Estate) நீண்ட கால வளர்ச்சி
தொழில் (Business) நீண்ட கால வளர்ச்சி

 

உங்களுக்கு எது தேவை, குறுகிய கால வருமானமா (அ) நீண்ட கால வளர்ச்சியா  என்பதை முடிவு செய்து அவற்றில் முதலீடு செய்யுங்கள்.

 

Asset Allocation Benefits:

 

ஒவ்வொரு வயதினருக்கும் தங்களது ரிஸ்க் எடுக்கும் தன்மை மற்றும் எதிர்பார்க்கும் வருமானத்தை பொறுத்து Asset Allocation மாறுபடும்.

 

  • உங்களது நிதி சார்ந்த இலக்குகளுக்கு Asset Allocation செய்யலாம். (Linked to Financial Goals)
  • உங்களது வாழ்க்கை சுழற்சி படிகளுக்கு தகுந்தாற்போல் Asset Allocation செய்யலாம். (Linked to Life Cycle Stages)

 

குழந்தை பருவம், இளம் தலைமுறையினர், நடுத்தர வயது, வளரிளம் பருவத்திலுள்ள பெற்றோர்களுக்கு, வயதானவர்கள் மற்றும் ஓய்வுதாரர்களுக்கென அவர்களின் ரிஸ்குக்கு தகுந்த படி Asset Allocation செயல்படுத்தலாம்.

 

  • இளம் தலைமுறையினர் எனில், அவர்கள் பங்குச்சந்தை போன்ற ரிஸ்க் முதலீட்டில் நீண்ட காலத்தில் பயன் பெறலாம்.
  • வயதானவர்கள் மற்றும் ஓய்வுதாரர்கள் எனில், ரிஸ்க் எடுக்காமல் வங்கி, அலுவலக சேமிப்பில் மாதாந்திர வருமானம் பெற Allocation செய்யலாம்.

 

பொதுவாக Asset Allocation செய்வதில் ஒரு மனக்கணக்கும் உண்டு. எண். 100 லிருந்து உங்கள் வயதை கழித்தால் வரும் எண் தான், நீங்கள் பங்குச்சந்தை (அ) ரிஸ்க் எடுக்கும் முதலீட்டின் சதவிகிதம். மீதம் கடன் சார்ந்த (அ) பாதுகாப்பான முதலீட்டிற்கு என்று.

 

உதாரணத்திற்கு, உங்கள் வயது 35  என்றால், நீங்கள் 65 % பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டிலும், 35 % கடன் சார்ந்த சந்தையிலும் Asset Allocation செய்யலாம்.

உங்கள் வயது 65 என்றால், நீங்கள் பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டில் 35 % மும், கடன் சார்ந்த முதலீட்டில் 65 % மும் Asset Allocation செய்யலாம். ஆனால் மேலே உள்ள கணக்கு செல்வந்தர்களுக்கு உதவாது; அவர்கள் ரிஸ்க் தன்மை மாறுபடலாம். இது ஒரு கணக்கே. சரியான முறை என சொல்ல முடியாது. ஒரு நிதி ஆலோசகரின் அறிவுரைகளை அணுகுவது நன்று. [ Insurance அல்லது Mutual Fund ஏஜென்டை அல்ல 🙂 ]

 

பன்முகத்தன்மைக்கு மாற தயாராகுங்கள்…

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

தேவைகளும், விருப்பங்களும் – Need vs Want Behaviour

தேவைகளும், விருப்பங்களும்…

Need vs Want Behaviour

 

உங்களது லட்சியங்கள் (அ) விருப்பங்கள்(Desire / Want) என்ன ?

 

  • பிடித்த படிப்பு / துறையில் பணிபுரிவது (அ) தொழில் முனைவது
  • அழகான வீடு
  • நான்கு சக்கர வாகனம் (Car)
  • வெளிநாட்டு சுற்றுலா
  • ஆடம்பர திருமணம்
  • நண்பர்களுக்கு விருந்து வைப்பது (Treat)
  • கை நிறைய சம்பாதிப்பது
  • அப்படி ஒன்றுமில்லைங்க  🙂

 

உங்களது தேவைகள்(Need ) என்ன ?

 

  • சத்தான உணவு, தட்பவெப்ப நிலைக்கேற்ற உடை, பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச இருப்பிடம்
  • மருத்துவம் மற்றும் சுகாதாரம்
  • சுவாசிக்க சுத்தமான காற்று
  • அறிவு மேம்பட தேவைப்படும் கல்வி
  • எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி / வருமானம் (குழந்தை பராமரிப்பு, கல்வி, திருமணம், ஓய்வு காலம் )

 

நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்(How you decide) ?

 

  • ஆரோக்கியமான உணவு / அழகு மெருகூட்டப்பட்ட துரித உணவு  ?
  • மனதுக்கு பிடித்தவாறு துணைவருடன் வாழ்வது / ஆடம்பர திருமணம் செய்வது  ?
  • உங்கள் குழந்தைகளுடன் விளையாடி நேரத்தை செலவழிப்பது / அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு, உங்களுக்கு நேரமில்லாமல் போல் இருப்பது  ?
  • உங்கள் அறிவு மேம்பட, வாழ்வில் முன்னேற கல்வி / மற்றவர்களுக்காக விளம்பர நோக்கில் கல்வி பயில்வது ?
  • ஓய்வு காலத்திற்கான சேமிப்பு / ஓய்வு காலத்தில் வேலை பார்த்து கொள்ளலாம், அப்போது பார்க்கலாம் என்பது  ?
  • பொது போக்குவரத்து சேவை மற்றும் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துதல் / மற்றவர்களின் பார்வைக்காக நான்கு (Car) சக்கர வாகனம் வாங்கி, பயணம் செய்வது ?
  • திட்டமிட்ட சுற்றுலா பயணம் / அவசியமில்லாமல், நினைத்த மாத்திரத்தில் கடன் வாங்கியாவது சுற்றுலா செல்வது  ?

தேவைகளும், விருப்பங்களும் (Need vs Want) :

 

மூச்சுக்காற்றை (Breathing) அப்புறம் வாங்கி கொள்கிறேன், நான் இப்போது சினிமா பார்க்க(See Movie) போகிறேன் என்றால்…. ! ! !

 

தேவையான மூச்சுக்காற்றை வாங்கினால் (சுவாசித்தல்) தானே உங்களுக்கு விருப்பமான சினிமா பார்க்க முடியும். ஆகையால் தேவைக்கு எப்போதும் முன்னுரிமை (Priority) கொடுங்கள். அது உங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான விருப்பங்களை நிறைவேற்றும்.

 

தேவைகளிடம் விட்டு விடுங்கள் 🙂

 

விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்:

(Rising Price due to Wants)

 

ஊரின் ஒரு பகுதியில் தினசரி சராசரியாக தேவைப்படும் 100 கிலோ வெங்காயம், திடீரென்று 10,000 கிலோ என  அதிகரித்தாலும், உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே வெங்காயத்தின் விலையும்  அதிகரிக்கலாம்;  இது வெங்காயத்துக்கு மட்டுமல்ல…

 

வாகன விற்பனைக்கு, எரிபொருளுக்கு, கல்வி கட்டணங்களுக்கும் தான் 🙂

 

அதனால் நமக்கு அவசியமான, தேவையான விருப்பங்களை தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவார்கள்; பொருளாதாரமும் நிலை பெறும்.

 

இன்று நமது தெருவிலே பல வாகனங்கள் இடமில்லாமல் நிற்கின்றன; எந்த தேவையும் இல்லாமல் வாங்கப்பட்டன – நமது அவசியமற்ற விருப்பங்களால்  !

 

அதற்கு, நாம் ஒரு பார்க்கிங் (Car Parking Station) தொழிலை ஆரம்பித்து இருந்தால் கூட, காசு நிறைய பார்த்து இருக்கலாம் போல 🙂  

 

Impulsive Buying:

 

எந்த தேவையும் இல்லாமல், திட்டமிடப்படாத முடிவால் ஒரு பொருளை (அ) சேவையை விலை கொடுத்து வாங்குவது, ‘Impulsive Buying’ or ‘Impulsive Purchase’.

 

நாம் ஒரு ஷாப்பிங் மால்(Shopping Mall) செல்கிறோம்; ஷாப்பிங் செல்லும் முன், நமது இலக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவதோ (அ) பொழுதுபோக்கிற்கோ இருக்கலாம்; ஆனால் திரும்பி வரும் போது, நமக்கு தேவையில்லாத பொருளும், சேவையும் நமது பையிலே(Bag) இருக்கும்; நமது பர்ஸும்(Cash), கார்டும்(Debit /Credit Card) பதம் பார்க்கப்படும் 🙂 இது தான் Impulsive Purchase ன் ஆயுதம் !

 

எப்படி Impulsive Purchase ஐ தடுப்பது (How to Avoid Impulsive Buying) ?

 

  • நீங்கள் கடையில் ஒரு பொருளை, சேவையை வாங்க செல்லும் முன்னர் அந்த பொருள் (அ) சேவை நமக்கு அத்தியாவசியமானதா, இன்றே அது நமக்கு தேவைப்படுகிறதா என அறிந்து முடிவு செய்யுங்கள்.
  • வாங்கக்கூடிய  பொருள் (அ) சேவையை எழுதுங்கள், பட்டியலிடுங்கள் – அதற்கு தேவையான பணத்தை மட்டுமே வைத்திருந்து உங்கள் கொள்முதலை(Purchase) தொடங்குங்கள்.
  • பொழுதுபோக்கிற்காக, விலை விசாரிப்பதற்காக கடைக்கு செல்கிறீர்கள் என்றால், மிகக்குறைந்த அளவு பணத்தை மட்டுமே(தேவைப்பட்டால்) கையில் எடுத்து செல்லுங்கள்; EMI வசதி கிடைத்தாலும் அந்த சமயத்தில் வாங்குவதை தவிருங்கள் – இன்று பெரும்பாலான பொருட்கள், சேவைகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பொழுதுபோக்கிற்காக செல்லும் போதே வாங்கப்படுகின்றன – எந்த அவசியமும் இல்லாமல் – முடிவில் நமது வீட்டு அலமாரியில் (அ)  குப்பைத்தொட்டியில் 🙂
  • விலை குறைவாக கிடைக்கிறதே, சந்தையில் புதிதாக வந்த பொருள் என்று பார்த்து வாங்க வேண்டுமென்று அவசியமில்லை; விலை மலிவு, பொருள் புதிது என்ற சொற்கள் எல்லாம் வியாபாரிகளுக்கு உண்டானது – நீங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் பெறுங்கள்.
  • முடிந்தவரை நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முயலுங்கள்; உங்களுக்கு தேவையான விருப்பங்களை இலக்குகள் நிர்ணயித்து அடையுங்கள் – இலக்குகள் திட்டமிடப்படும் போது, பொருட்களை வாங்க உங்களுக்கு எந்த அவசரமும் இருக்காது 🙂

If you buy things you do not need, you will soon sell things you need – Warren Buffet

 

 

வாழ்த்துக்கள், தேவைகளுடன்…

வாழ்க வளமுடன் 🙂

(Feature image courtesy: theatrefolk.com )

ரிஸ்க் எடு தலைவா – Risk and Margin of Safety

 

ரிஸ்க் எடு தலைவா !  (Risk and Margin of Safety)

 

‘ரிஸ்க்’ (Risk) எடுப்பது எனக்கு ‘ரஸ்க்’ (Rusk) சாப்பிடுற மாதிரி !  எத்தனை பேருக்கு, ‘Rusk’ சாப்பிட  பிடிக்கும். இது சாப்பாடு விஷயம் இல்லைங்க, அதாவது நம்மில் எத்தனை பேருக்கு ‘Risk’ எடுப்பது பிடிக்கும் ?

 

‘Risk’ – Exposure to Danger or Hazard

 

நிதி சார்ந்த விஷயத்தில், ‘Risk’ என்பது நமது உண்மையான வருமானத்திற்கும், நாம் எதிர்பார்க்கும் வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் தான்.

 

A Deviation between Actual and Expected Returns is the Risk.

 

  • ரிஸ்குக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று ‘Positive’, மற்றொன்று ‘Negative’.

 

  • நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாமல், முதல் பாதுகாப்பாக இருந்தாலே அது வெற்று அல்லது நேர்மறையாக(Positive) இருக்கும். துணிந்து செயல்பட்டால் முதலுக்கு நல்ல லாபமும் பெறலாம், நஷ்டமும் தான் பல சமயங்களில் ! இதனாலயே நாம் பெரும்பாலும், ‘ரிஸ்க்’ எடுக்க தயங்குகிறோம்; இல்லையெனில் ரிஸ்க் தன்மை மற்றும் விளைவு அறியாமல் அதள பாதாளத்தில் விழுகிறோம் (நஷ்டமடைகிறோம்); சரி, ரிஸ்க் எடுத்தால் நஷ்டமடைய வாய்ப்புள்ளது, ரிஸ்க் எடுக்கா விட்டால் சிறிதளவாது லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது (அ) முதலுக்கு பாதுகாப்பு.

 

உண்மையிலேயே ரிஸ்க் எடுக்காமல் இருப்பது ஆரோக்கியமானதா, ரிஸ்க் எடுக்காத முதலீடு உண்மையிலேயே நமது முதலை (முதல்)  பாதுகாக்கிறதா ?

 

இல்லை என்றே சொல்லலாம்…

 

நமது ரிஸ்க் எவ்வாறு உள்ளது ?

 

  • நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது, நீச்சல் தெரிந்தும் ஆழம் அறியாமல் இருப்பது.
  • சாலையில் விபத்துக்கான வாய்ப்பு இருந்தும் அதி வேகமாக செல்வது, விதிகளை மதித்தும் எதிர் வருபவரை சரியாக அணுகாமல் போவது.
  • விளையாட்டு மைதானத்தில், பள்ளி-கல்லூரிகளில், காதலில், அலுவலகங்களில், புகை மற்றும் மது பழக்கங்களில் என எல்லாவற்றிலும் நாம் தினமும் ஓரளவு ரிஸ்க் எடுக்க தான் செய்கிறோம். ஆனால் பண முதலீடு விஷயத்தில் ? ? ?

 

அதனை மறந்து விடுகிறோம், செயல்படுகிறோம்.

 

முதலீடு ரிஸ்க் என்னென்ன ?

 

நீங்கள் பாதுகாப்பான முதலீடை (Bank Deposits, Postal Savings,Low Return Investments) தேர்ந்தெடுத்தால் ரிஸ்க் இல்லை என்று நினைக்கிறீர்களா ? அது தான் தவறு; நீங்கள் போட்ட பணம் பாதுகாப்பாக உள்ளது என்று உங்களுக்கு நினைவில் இருக்கலாம்; ஆனாலும் இங்கே சில ரிஸ்குகள் தான் உள்ளன, உங்கள் பண முதலீடை பதம் பார்க்க… உங்கள் எதிர்கால இலக்கினை கேள்விக்குறியாக்க !

 

ரிஸ்க் வகைகள் (Risk Types):

 

  • Inflation Risk
  • Liquidity Risk
  • Business Risk
  • Interest Rate Risk
  • Market Risk

 

Inflation Risk (பணவீக்க அபாயம்) – இது ஒரு  தவிர்க்க முடியாத ரிஸ்க். தேவைக்கும், உற்பத்திக்கும்(Demand vs Supply) இடையே உள்ள தன்மையை பொறுத்து மாறுபடும். பொருட்களை வாங்கும் திறனை(Purchasing Power) பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் இன்று வாங்க போகும் ரூ. 100 விலையுள்ள பொருள், நாளை (அ) அடுத்த மாதம்,அடுத்த  வருடம் அதே விலையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் நீங்கள் உங்கள் எதிர்கால இலக்கிற்காக வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணம், முதிர்வில் பணவீக்கத்தை சரிக்கட்டுமா என்பது தான் ஐயம். எனவே தான் உங்கள் கனவுகள் பெரும்பாலும் நிறைவேறுவதில்லை – பணவீக்க ரிஸ்க்கினால் !

 

Liquidity Risk (நீர்மை நிறை அபாயம்) – உங்கள் முதலீடு வங்கி சேமிப்பாகவோ, நிலத்திலோ, அல்லது தங்கத்திலோ அல்லது அரசாங்க பத்திரத்திலோ, பங்கு சந்தையில் இருக்கலாம். ஆனால் உங்கள் அவசர தேவைக்கு அல்லது நீங்கள் உங்கள் இலக்கினை பூர்த்தி செய்யும் போது எளிதாக மற்றும் விரைவாக அதனை பணமாக (ரொக்கம்) மாற்றுவது மிகவும் அவசியம். சில முதலீடுகள் முதிர்வு முடியும் வரை பணமாக மாற்ற முடியாததும், நிலம் போன்ற முதலீடுகளுக்கு சில  கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்பதும் நீர்மை நிறை ரிஸ்க்கினால் !

 

Business Risk (வணிக/ தொழில் அபாயம்) – ஒரு நிறுவனம் (அ) தொழிலை பாதிக்க கூடிய காரணிகள்  என்று ஆராய்ந்தால் உற்பத்தி மூலப்பொருட்கள், கூலி செலவு, விற்பனை மற்றும் விநியோகம், போட்டி நிறுவனங்களின் சந்தையிடல் இருக்கும். இதனால் அந்த நிறுவனத்தின் / தொழிலின் இயக்க செலவுகள்(Operating Cost) அதிகரித்து விற்பனை மற்றும் லாபம் பாதிக்க கூடும்; வாடிக்கையாளர்களையும் இழக்கலாம் – நாம் அந்த தொழிலில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் – நமக்கும் Business Risk உள்ளது.

 

Interest Rate Risk (வட்டி விகிதம்) – நாம் ஒரு வங்கியில் (அ) அரசாங்க பத்திரத்தில் முதலீடு செய்திருக்கிறோம்.  நாம் முதலீடு செய்யும் போது, வட்டி விகிதம் 9 % கிடைக்கும்  என்கிறார்கள்; ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு பாரத ரிசர்வ் வங்கி(RBI) வட்டி விகிதத்தை 8 % ஆக குறைக்கும் முடிவில் உள்ளது. இந்த வட்டி குறைப்பு நமது முதிர்வு கால பணத்தையும் பாதிக்கும். நாம் எதிர்பார்த்த தொகை கிடைக்காது.

 

பொதுவாக வங்கி வட்டி விகிதம்(Interest Rate) குறையும் போது பத்திரங்களின் மதிப்பு(Bond Rate) கூடுவதும், வட்டி விகிதம் அதிகரிக்கும் போது பத்திரங்களின் மதிப்பு குறைவதும் வழக்கம்.

 

Market Risk (சந்தை அபாயம்) – சந்தை விலை ஏற்ற-இறக்கத்தினால் முதலீட்டினை இழக்கும் அபாயம்; பங்கு சந்தை, பத்திரங்கள், நிலங்கள் மற்றும் தங்கம் போன்றவை சந்தையின் அபாயத்துக்கு உட்பட்டது. உலகளாவிய காரணிகள் ஏதேனும் பாதிக்கப்பட்டாலும், இவைகள் பாதிப்படைய கூடும். முதலீட்டாளர் தனது பணத்தையும் இழக்க கூடும்.

 

ரிஸ்க் எவ்வாறெல்லாம் நமது முதலீட்டிற்கு வருகிறது என்பதை பார்த்து விட்டோம்; சரி விடுங்கள், அதனை எவ்வாறு நாம் கையாள்வது ?

 

சாலையில் சாமர்த்தியமாக வாகனம் ஓட்டுவதை போல (முடிந்தவரையில்) !

 

Risk Tolerance:

 

நாம் ஒரு ரிஸ்க்கை எடுக்கும் முன், அதனை எவ்வாறு சகித்து கொள்வது என்பது ‘Risk Tolerance’. இது இரு வகையாக  கையாளப்படும்.

 

  1. Risk Capacity – அபாயத்தை எதிர்கொள்ளும் திறன்
  2. Risk Attitude – அபாயத்தை நாம் அணுகும் முறை

 

அதாவது, நீங்கள் ஒரு ரிஸ்க்கை (முதலீடு) எடுக்க போகிறீர்கள், அதன் விளைவை உங்களால் எவ்வளவு தூரம் தாங்கி கொள்ள முடியும் – உங்களின் எதிர்கொள்ளும் திறன் / வலிமை (Ability to take Risk) எப்படி உள்ளது. இரண்டாவது நீங்கள் அதனை எவ்வாறு அணுகுகிறீர்கள் – இது உங்கள் மனம் சம்மந்தப்பட்ட விஷயம் (Willingness to take Risk), நீங்கள் எந்த அளவு ரிஸ்க் எடுக்க விரும்புகிறீர்கள்.

 

Margin of Safety:

 

நீங்கள்  ஒரு முதலீட்டை மேற்கொள்ளும் முன் (அ) ரிஸ்க் எடுக்கும் முன், உங்கள் பாதுகாப்பு விளிம்பை(Margin of Safety) உருவாக்கி விட்டீர்களா என பார்க்க வேண்டும்.

 

ரிஸ்க்கினால் வரும் இழப்பினை சரி செய்ய,

 

  • காப்பீடு(Insurance against any loss)  செய்ததுண்டா ?

 

  • போதிய பணம்(Extra / Enough Cash to Survive)  கைவசம் உண்டா ?

 

  • வருமுன் காக்கும் பழக்கம்(Prevention) உங்களுக்கு உண்டா ?

 

இது தாங்க, பாதுகாப்பு விளிம்பு (Margin of Safety).  

 

நீங்கள் உங்கள் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை சந்தையில் வாங்க போகிறீர்கள். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை உள்ளது; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை உள்ளது – நீங்கள் என்ன செய்யலாம் ?

 

நமக்கு தேவைப்படும் போது, நமக்கு தேவையான விலையில் வாங்கினால் தான் லாபமடைய முடியும். நஷ்டத்தையும் தவிர்க்கலாம்.

 

தலைவா, ரிஸ்க் எடுக்கலாம் வாங்க 🙂

 

வாழ்த்துக்கள்,  வாழ்க வளமுடன்  !

 

2017-18 பட்ஜெட்டும் , வருமான வரியும் -Budget 2017 Highlights

2017-18  பட்ஜெட்டும் , வருமான வரியும்…

Union Budget 2017 Highlights…

 

2017-18(Financial Year) ம் நிதியாண்டுக்கான  பட்ஜெட் தாக்கலை கடந்த பிப். 1 ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ அறிவித்தார். அறிக்கைகளில் சில…

 

  • விவசாய துறை 4.6 சதவீத அளவில் வளர்ச்சி அடையும். விவசாயத்துக்கான கடன்  ரூ.10 லட்சம் கோடி  வழங்கப்படும்.

 

  • கிராமப்புற, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 24% அதிகம்.

 

  • பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின்(Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY))  கீழ் ஒரு நாளைக்கு 133 கி.மீ  சாலை அமைக்கப்படும்.

 

  • 2019 ம் ஆண்டுக்குள் ஒரு கோடி ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • வரும் நிதி ஆண்டில்(2017-18)  உரமானியத்துக்கு ரூ.70,000 கோடி மற்றும் சுகாதார துறைக்கு ரூ.48,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • உள் கட்டமைப்புத் துறைக்காக ரூ.3,96,135 கோடி மற்றும் பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • மூத்த குடிமக்களுக்கான ஆதார் அட்டையில், அவர்களின் உடல் நலம் சம்மந்தமான விவரங்கள் (அறிக்கை) இடம்பெறும் வசதி.

 

  • ரயில் பாதுகாப்பு நிதிக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

 

  • IRCTC இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து மற்றும் 3,500 கி.மீ  தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

 

  • பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நீக்கப்படுகிறது மற்றும் அந்நிய நேரடி முதலீடு 36% உயர்ந்துள்ளது;  தற்போதைய அந்நிய செலவாணி கையிருப்பு – 36,100 கோடி டாலர்.

 

  • டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ‘BHIM APP’ செயலியை 1 கோடி மக்கள் பயன்படுத்துவதாகவும், வணிகர்களுக்கான ‘AADHAR PAYMENT’ செயலி விரைவில் அறிமுகமாகும்.

 

  • வரும் நிதியாண்டுக்கான(FY 2017-18) நிதி பற்றாக்குறை இலக்கு – 3.2 %  அதற்கு அடுத்த அடுத்த ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு – 3 %

 

  • ரொக்க பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 3,00,000 /-(Cash Transaction Limit)

 

  • அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நன்கொடைகளை பெறலாம்.

 

  • அரசியல் கட்சிகள் ரொக்கமாக ரூ.2,000/- மட்டுமே நன்கொடையாக  வாங்க முடியும் மற்றும் கட்சிகள் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு  ரிசர்வ் வங்கி சட்டம்  கொண்டு வர உள்ளது.

 

  • ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 % வரி செலுத்தினால் போதும்; தற்போது இது 10 % வரியாக உள்ளது.

 

  • ரூ.50 லட்சம் முதல் ரூ.1  கோடி வரையிலான வருமானத்துக்கு 10 % சர்சார்ஜ்(Surcharge) செலுத்த வேண்டும்.

 

  • ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்கள் 15 % சர்சார்ஜ்(Surcharge) செலுத்த வேண்டும்.

 

2017-18 நிதி ஆண்டுக்கான வருமான வரிகள்(Income Tax Slabs):

நன்றி,

 

contact@varthagamadurai.com

www.varthagamadurai.com

 

பங்கு வாங்கலியா பங்கு (பங்காளி)-Share Market Extravaganza

பங்கு வாங்கலியா பங்கு (பங்காளி)

Share Market Extravaganza

 

பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் !

 

பங்குச்சந்தை ஒரு தொழில் வாய்ப்பு மற்றும் பணம் பண்ணுவதற்கான கடல் !

 

மேலே உள்ள வாக்கியத்தில், எவை ‘உங்களை அதிகமாக அச்சுறுத்தும்; எவை உங்களை புத்துணர்வூட்டும் ? ‘

 

நான் சொல்கிறேன், கல்வி நிலையங்கள் ஒரு ஏமாற்று வேலையாளி என்று ! (உதாரணத்திற்கு மட்டுமே) 🙂

 

  • கல்வி நிலையங்கள் அதிகமான கட்டணங்களை வசூல் செய்கிறது;

 

  • கல்வி நிலையங்களில் அடிப்படை வசதியை கூட செய்து தருவதில்லை;

 

  • கல்வி நிலையங்களில் தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படவில்லை;

 

  • கல்வி கொள்கைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை;

 

  • எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை;

 

இன்னும் பல…

 

மேலே உள்ள எல்லா வாக்கியங்களுக்கும் ஒரு கல்வி நிலையத்தை சுட்டிக்காட்டி ‘ஆம்’ என்று நீங்கள் பதில் சொல்ல முடியுமா ?

 

ஏதேனும் ஒன்றுக்கொன்று நிறை, குறைகள் இருக்கலாம்; பரவாயில்லை நாம் நமது பிள்ளைகளை கல்வி நிலையங்களில் படிக்கத்தான் வைக்கிறோம்; நாமும் அங்கே தான் படித்தோம் !

 

தேர்ந்தெடுப்பது நாம் தான்; தேவைகளும் நமக்கு தான் !

 

வாருங்கள், மற்றொரு உதாரணம் பார்ப்போம்…

 

வங்கிகள் எப்படி செயல்படுகின்றன(How the bank works) என்பதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன்;

வங்கிகளில்  நீங்கள் செய்யும் டெபாசிட் (வைப்பு தொகை) பணத்தை அவர்கள் யாருக்கு கடனாக கொடுக்கிறார்கள் என்று உங்களிடம் சொல்லப்படுவதில்லை; நீங்கள் கடனாக பெற்ற தொகை யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதும் சொல்லப்படுவதில்லை !

 

அது வங்கிகளின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் !

 

ஆனால், பங்குச்சந்தையில்…      அது தான் நமக்கு பிரச்சனையே 🙂

 

நீங்கள் ஒரு வங்கியில் ரூ. 1,00,000 /- தொகையை டெபாசிட் செய்கிறீர்கள்;  5 வருட வைப்புத்தொகையாக உங்களுக்கு 8 % வட்டி வருமானம் தரப்படுகிறது.  இந்த 5 வருட காலத்தில் உங்கள் எத்தனை வங்கி வாடிக்கையாளருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது, எத்தனை கடனை சரியாக கட்டினார்கள், அதாவது உங்கள் ரூ. 1,00,000/- தொகையின் ஏற்ற, இறக்கத்தை நீங்கள் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்க வாய்ப்புமில்லை; ஆனால் வங்கிகளுக்கு தெரிந்திருக்கலாம், எத்தனை பேர் கடனை கட்டி முடித்தார்கள் மற்றும் எவ்வளவு பேர் திவாலானார்கள் என்று 🙂

பங்குச்சந்தையில் பங்கின் விலை ஏறுவதும், இறங்குவதும் அதன் இயல்பே; அவ்வாறு நடைபெறுவதால் தான் நாம் வருமானம் ஈட்ட முடியும்; தற்போதெல்லாம் நாம் தக்காளி விலையேற்ற – இறக்கத்தை பற்றி கவலைப்படுவதில்லை; பங்குச்சந்தையை பற்றியது தான் நமது கவலை எல்லாம் !

 

உங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் கேட்டு பாருங்கள் (காய்கறி சந்தைக்கு போகும் பெண்களிடம் ), அன்றைக்கு சமையலுக்கு எந்த காய்கறி விலை மலிவாக கிடைக்கிறதோ அதை தான் அவர்கள் சமைப்பார்கள்; போட்டி போட்டு கொண்டு அதிக விலைக்கு வாங்கமாட்டார்கள்; காய்கறி சந்தையில் பேரம் பேசுவதற்கும் தயங்கமாட்டார்கள்; ஆனால் இங்கு பங்குச்சந்தையில் அதுவே தலைகீழ் – பெறுவதோ பெரும் நஷ்டம், பிறகு அது சூதாட்டம் 🙂

 

பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது என்பதை பற்றி நான் இந்த கட்டுரையில் சொல்ல வரவில்லை; மாறாக, பங்குச்சந்தை பற்றிய அறியாமையையும், பணம் பண்ணுவதற்கான வாய்ப்புகளையே நான் சொல்ல வருகிறேன்.

 

கல்வி நிலையங்களும், வங்கிகளும்  எப்படி உங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளதோ, அது போன்று தான் பங்குச்சந்தையும் !

 

பங்குச்சந்தைக்கும் கட்டுப்பாட்டாளர் (Regulators) உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது; விதிமுறைகளும், தண்டனைகளும் கடுமையாக தான் உள்ளன.

 

நாம் ஏன் பங்குச்சந்தையில் ஈடுபட (முதலீடு செய்ய) வேண்டும் ?

 

  • செயலற்ற வருமான வாய்ப்பு (Passive Income – Financial Asset)
  • அதிக லாபம் / வருமானம் -நீண்ட காலத்தில் (Higher Returns in Longterm)
  • பணவீக்கத்தை சரிக்கட்டும் வாய்ப்பு (Beat Inflation)
  • வரிச்சலுகைகள் (Tax Benefits – Longterm Capital Gains)
  • உரிமை / பங்குதாரராக வாய்ப்பு / தொழிலில் ஒரு சிறு பகுதியாக இருக்க (Ownership Rights / Be a part of a business)
  • நிதி மற்றும் பொருளாதாரம் பற்றிய அறிவு கிடைக்க (Knowledge about Finance and Economics)

இவையனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டுமா….

 

பங்குச்சந்தையில் ஈடுபடுங்கள்…

 

Investing vs Trading:

 

பங்குச்சந்தையில்  ஈடுபடுவதற்கு முன்னர், பங்குச்சந்தைக்கு நீங்கள் யார் என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

 

நீங்கள் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, முதல் போட்டு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என வைத்து கொள்வோம்; உங்களுடைய நோக்கம் தொழிலில் நீண்ட கால வளர்ச்சியும், அதனை சார்ந்த வருமானம் பெருக வேண்டும் என்பதே. நீங்கள் உங்கள் தொழிலில் மிகவும் கவனமுடன் செயல்படுவீர்கள்; உங்களுக்கு, ‘தொழில்முனைவோர்’, ‘முதலீட்டாளர்’ (Entrepreneur /Investor)  என பெயர் சூட்டலாம். உங்களது உற்பத்தி, பொருட்கள், விற்பனை, வாடிக்கையாளர்கள், அரசாங்க தொழில் கொள்கைகள், காலநிலை ஆகியவை கவனிக்கப்பட வேண்டியவை.

 

எனக்கு நீண்ட கால நோக்கம் என்று எதுவும் கிடையாது; எனக்கு தினமும் நான் செய்யும் வேலை / தொழிலில் இருந்து எதாவது ஒரு சிறு தொகை கிடைத்தால் போதும்; ஆனால் தினமும் வருமானம் வேண்டும், நான் ரிஸ்க் எடுக்கவும் தயார் – முதலுக்கு லாபம் வரலாம்; நஷ்டமும் கூட ! உங்களுக்கு தின ‘வர்த்தகர் / வணிகர்’ (Day Trader) என பெயர் சூட்டலாம்; உங்களுக்கென்று எந்த பொருளும் சொந்தமில்லை, உங்களுக்கு எதை பற்றிய கவலையுமில்லை – பெரும்பாலான சமயங்களில் 🙂

 

Speculating / Speculator (ஊக வணிகம்) என்ற ஒருவரும் உண்டு; இவர் சந்தையில் எந்த காரணத்திற்காக வந்தார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவருக்கே தெரியாது; அனைத்தும் ஊக வணிகத்தில் தான் – மிக்க அபாயத்துடன்  !

கவனத்தில் கொள்ளுங்கள்:  நீங்கள் பங்குச்சந்தையில் ஒரு பங்கினை வாங்கி, அதனை ஒரு வருடத்திற்குள் விற்றால் கிடைக்கும் லாபத்திற்கு குறுகிய கால ஆதாய வரி; ஒரு வருடத்திற்கு மேல் விற்றால் எந்த வரியும் கிடையாது !   

 

Fundamentals(Business)  vs Technicals (Charts):

 

Fundamental Analysis:

 

உங்கள் தொழிலை நீங்கள் மாதத்திற்கு ஒரு முறையோ (அ) மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ கணக்கு சரிபார்த்தால் நன்றாக இருக்குமா, இல்லையா ?  அதை தான் இங்கு பார்க்கிறீர்கள். உங்கள் தொழிலின் வரவு-செலவு கடந்த காலத்தில் எவ்வாறு உள்ளது, அதன் அடிப்படையில் இனி என்னவாறு திருத்தம் மற்றும் மேம்படலாம் . உங்களுக்கு உதவும் காரணிகள் Balance Sheet, Income Statement, Industrial and Economy, Price to Earning, Intrinsic value, etc.

 

Technical Analysis:

 

கடந்த கால விலை மற்றும் அளவுகளை கொண்டு மதிப்பிடுவது; விலை இயக்கம் சார்ந்த சந்தை நடவடிக்கைகளை கண்காணிப்பது – A Mathematical Calculation based on Price Movements.

 

பங்குச்சந்தை ஒரு ரிஸ்க் ?

 

ஆம், பங்குச்சந்தை ஒரு ரிஸ்க்கான தளம் தான். வருமானம் பார்க்கலாம், நீங்கள் கற்று கொள்வதற்கு தயாரானால் !

 

நஷ்டமும் அடையலாம், புரியாமல் செய்தால் ; மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் 🙂

 

  • வங்கி தொகையிலும் ரிஸ்க் உண்டு, பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் – நீங்கள் எதிர்பார்த்த தொகை வராமல் போகலாம்.

 

  • தங்கத்திலும் ஏற்ற இறக்கங்கள் இயல்பு; உங்கள் அவசர தேவைக்கு அதன் சந்தை மதிப்பை விட குறைவாகவே பணம் பெற முடியும்.

 

  • நிலத்திலும் சிக்கல்கள் உண்டு, நீங்கள் நினைத்த மாத்திரத்தில் விற்று பணம் பெற முடியாது; சட்டங்கள் அப்படி சொல்லுகிறது 🙂

 

Risk Tolerance’ என்று சொல்லப்படும் இடர் சகிப்பு தன்மை என்பது அவசியம்; அதாவது உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன்(Risk Capacity) மற்றும் விருப்பம்(Risk Attitude) பற்றி சொல்லுவது; எந்த முதலீடானாலும் இது பொருந்தும்.

 

இதனை புரிந்து நீங்கள் பங்குச்சந்தையில் நீங்கள் செயல்பட்டால், உங்களுக்கு கிடைப்பது…  Capital Appreciation, Beat Inflation, Dividend Yield, Higher Returns, Liquidity, Ownership Style இன்னும் பல !

 

இறுதியாக…

 

இன்று நம்மில் எண்ணற்றவர்களுக்கு இருக்கும் வேலையை / தொழிலை நிறுத்தி விட்டு புதிய தொழிலை ஆரம்பிக்கலாம் என எண்ணங்கள் இருக்கலாம்; அப்படிப்பட்டவர்களுக்கு பங்குச்சந்தை ஒரு வரப்பிரசாதம் !

 

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலையை கற்க விரும்புபவர்கள் பங்குச்சந்தையை கற்கலாம்; கலக்கவும் செய்யலாம் 🙂

 

நீண்ட கால இலக்குகள் உள்ளவர்கள் பங்குச்சந்தையின் வாயிலாக வெற்றி பெறலாம்.

 

கடலில் நீந்தினாலும் சரி, படகோட்டினாலும் சரி நீங்கள் கடலில் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்;

 

கரையில் இருந்தாலும் பரவாயில்லை, கடலில் கால்களை வைக்க மறுக்க வேண்டாம்;

 

பங்குச்சந்தை ஒரு கடல் !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

Financial Blog in Tamil