Tag Archives: Insurance

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

நாட்டில் காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வரும் நிலை

Increasing Demand for Insurance in the Current Scenario – Covid-19 impact

சேமிப்பும், முதலீடும் ஒரு குடும்பத்திற்கு எந்தளவு முக்கியமோ, அதே போன்று நிதி பாதுகாப்பும்(Financial Protection) அவசியம். நிதி பாதுகாப்பு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை சொல்லலாம். நமது சேமிப்பை எதிர்பாராத வேலையிழப்பு, தொழில் மந்தம் மற்றும் விபத்து காலங்களில் விரயம் செய்ய விடாமல் தடுக்க இந்த நிதி பாதுகாப்பு உதவும்.

டேர்ம் காப்பீடு எனில் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபருக்கு தான்(Breadwinner) எடுக்க வேண்டும். அதுவும் அவரது வருவாயை சார்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் போது, ஏதோவொரு சூழ்நிலையில் வருவாய் ஈட்டும் நபர் மறைந்து விட்டால் குடும்ப உறுப்பினர்களின் நிதி நலனை பாதுகாக்க டேர்ம் காப்பீடு பலனளிக்கும். பொதுவாக டேர்ம் காப்பீடு(Term Insurance) ஒருவரது ஆண்டு வருமானத்தை போல குறைந்தபட்சம் 10-15 மடங்கில் இருப்பது நல்லது.

மருத்துவ காப்பீடு எனும் போது நடைமுறையில் காணப்படும் கொரோனா பெருந்தொற்றினால் ஏற்படும் மருத்துவ செலவுகளை நாம் கேட்டிருப்போம் அல்லது கண்டிருப்போம், மருத்துவ காப்பீடு எவ்வளவு அவசியமென்று. ஆனால், உண்மையில் கொரோனா பெருந்தொற்றை காட்டிலும் மற்ற நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவ செலவுகள் தான் அதிகம். கொரோனா பெருந்தொற்று மூலம் உடல்நலம் பேணுவது, இயற்கையை பாதுகாப்பது மற்றும் மருத்துவ காப்பீட்டின்(Health Insurance) தேவையை நாம் உணர்ந்துள்ளோம்.

நகரமயமாக்கல் துவங்கிய பின்பு, வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. இன்று கிராமப்புறங்களிலும் நாம் குறிப்பிடத்தக்க வாகன போக்குவரத்தை காணலாம். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்திற்கு செல்லலாம் என்றாலும், இன்று வாகன விபத்துகளை தவிர்ப்பது எளிதான காரியமல்ல. விபத்தினால் ஏற்படும் மரணங்கள் நம்மை போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் சற்று அதிகமே. எனவே, விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் மூலம் பல குடும்பங்கள் நிதி சிக்கலில் மாட்டி கொள்கின்றன. இதனை தவிர்க்க விபத்து காப்பீடும்(Standalone Accidental Policy) அவசியம். விபத்து காப்பீட்டை பொறுத்தவரை ரைடர் பாலிசியாக(Rider) எடுத்து கொள்ளாமல், தனிநபர் விபத்து காப்பீடு திட்டமாக எடுத்து கொள்வது சிறந்தது.

வேலையிழப்பு, வேலையிலிருந்து தொழில் முனைவுக்கு செல்லுதல், நிதி நெருக்கடி காலங்கள் என அவசர காலத்திற்கு தேவையான நிதியை உருவாக்கி வைத்து கொள்வது இன்று அவசியமாக உள்ளது. உங்களது மாத வருமானத்தை போல குறைந்தபட்சம் ஆறு முதல் 12 மாதங்களுக்கான தொகையை இருப்பாக வைத்து கொள்வது நல்லது. இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட வங்கி சேமிப்பு கணக்கு அல்லது பரஸ்பர நிதிகளின் லிக்விட் பண்டு(Liquid Funds) திட்டங்களில் சேமித்து வரலாம். உண்மையில் அவசர கால தேவை மற்றும் நிதி நெருக்கடி என்றால் மட்டுமே இந்த தொகையை எடுக்க வேண்டும். திருவிழா, திருமணம், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க அல்லது சுற்றுலா என செலவுகளுக்கு அவசர கால நிதியை பயன்படுத்த கூடாது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, காப்பீட்டின் அவசியத்தை அதிகமாகவே உணர்த்தியுள்ளது எனலாம். கடந்த சில மாதங்களாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக 35 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் டேர்ம் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை வாங்குவதில் ஆர்வமாக இருந்துள்ளனர்.

முதலாம் அலைக்கு பின்னர் சில காப்பீட்டு திட்டங்களின் பிரீமிய தொகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கப்படலாம். டேர்ம் காப்பீட்டு திட்டங்களை பெறுவதற்கு கொரோனா தடுப்பூசி(Vaccine) போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் சில காப்பீட்டு நிறுவனங்கள் விதித்துள்ளது.

நடப்பாண்டில் காப்பீட்டு திட்டங்களை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் உரிமை கோரல் தீர்வும்(Claim Settlement) அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்களின் லாபமும் குறைந்துள்ளது.

சமீபத்தில் கோடக் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இரண்டாம் அலை காரணமாக ஏற்பட்ட அதிகப்படியான இறப்பு விகிதத்தால்  ஜூன் 2021 காலாண்டில் நிறுவனம் சுமார் 275 கோடி ரூபாய் வரை நஷ்டமாக கொண்டிருக்கும் என கூறியுள்ளது.

இந்தியாவில் மக்களிடையே காணப்படும் ஆயுள் காப்பீட்டின் பங்களிப்பு 2.82 சதவீதம் மட்டுமே. மருத்துவம் மற்றும் சுகாதாரத்திலும் அரசின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டு சதவீதத்திற்கு குறைவாக தான் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

தனிநபர் காப்பீடு, ஒரு நாட்டின் பாதுகாப்பு !

தனிநபர் காப்பீடு, ஒரு நாட்டின் பாதுகாப்பு !

Insurance is the fundamental of the Country’s economy

கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலைவாய்ப்பு இல்லாதது, தொழில்களில் காணப்படும் மந்தநிலை ஒரு புறம் இருந்தாலும், மீண்டும் அடுத்த அலை நம் நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற ஐயமும் அனைவரிடத்திலும் உள்ளது. மாற்று இயல்பு(New normal) என சொல்லக்கூடிய புதியதொரு வாழ்வை கொரோனா பாதிப்பின் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு விகிதம் குறைந்திருந்தாலும் சுய தொழில்களின் வரவு அதிகரித்துள்ளது. அதே வேளையில் பெரும்பாலானோரின் செலவுகள் குறைந்து சேமிப்பும் அதிகரித்து வருகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால் பொதுவாக நுகர்வோர் செலவு அதிகரிக்கக்கூடும். இருப்பினும் எதிர்காலத்தில் இது போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட கூடும் என்ற எச்சரிக்கை உணர்வால், சேமிப்பின் அளவும் அதிகரித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2020 காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதம் சேமிப்புக்காக இருந்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் 8 சதவீதமாக இருந்துள்ளது. நம்மில் பெரும்பாலோருக்கு சேமிப்புக்கும், முதலீடுக்குமான வேறுபாடு தெரியவில்லை என்றாலும் பாரம்பரியமாக சேமிப்பது நமது அடிப்படை கடமையாக உள்ளது.

சேமிக்கிறேன் என காப்பீடு திட்டங்களை தேர்ந்தெடுப்பது, குழந்தைகளின் பெயரில் காப்பீடு என தவறான அணுகுமுறையை நாம் செய்து வருகிறோம். அப்படி இருந்தாலும், காப்பீடு தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கு அவசியமான ஒன்று. தனிநபர் ஒருவரின் வருவாயை சார்ந்திருக்கும் குடும்பம், அந்த குறிப்பிட்ட நபருக்கான காப்பீட்டை உறுதி செய்து கொள்வது அவசியம். எதிர்பாராத சூழ்நிலையில் அந்த தனிநபர் ஏதேனும் ஒரு நிகழ்வால் இறந்து விட்டால், அதனால் பொருளாதார ரீதியாக சிரமப்படும் குடும்பத்தினருக்கு காப்பீட்டின் மூலம் கிடைக்கப்பெறும் தொகை உதவும்.

சேமிப்பது ஒரு நாட்டிற்கு எந்தளவு நன்மை அளிக்குமோ, அது போன்று காப்பீடும் ஒரு நாட்டிற்கான முழுமையான பாதுகாப்பு எனலாம். தனிநபர் காப்பீட்டின் மூலம் தன்னை சார்ந்து வாழும் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல், அது நாட்டிற்கான கடமையாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் நிதி சுமை குறையும். குடும்பமும் பொருளாதார தன்னிறைவை நோக்கி நகரும்.

நாகரீக மாற்றத்தினால், இயற்கை வளங்கள் அழிந்து வரும் நிலையில் மனிதனுக்கு உள்ள ஒரே பாதுகாப்பான பலம் நிதி சார்ந்த தன்மைகள் மட்டுமே. வெறுமென வேலை மற்றும் அதனை சார்ந்த சம்பளம் என்று இல்லாமல், வருவாயில் சேமிப்பு மற்றும் எதிர்பாராத நிகழ்வை சரி செய்யும் காப்பீடு போன்ற நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமான ஒன்று. காப்பீட்டின் மூலம் ஒரு நாடு தன்னிறைவை அடைவதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் கிடைக்கப்பெறும் பயன்கள் சில,

  • போதுமான சேமிப்பு
  • சேமிப்பின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்
  • தனிநபர் மற்றும் வணிகங்களுக்கான பாதுகாப்பு
  • அவசர காலம் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவையை நிறைவு செய்தல்
  • நீண்ட கால நிதி ஆதாரங்களை உருவாக்குதல்
  • தொழிற்துறைக்கு சாதகமான அம்சம்
  • அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
  • காப்பீட்டின் மூலம் ரிஸ்க் தன்மையை பரவலாக்குதல் அல்லது குறைத்தல்
  • வரி செலுத்துதல் மற்றும் வரி சேமிப்பு மூலம் அரசாங்கத்திற்கு தேவையான பணப்புழக்கத்தை ஏற்படுத்துதல்.

சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் குடிமக்கள் மற்றும் அதனை சார்ந்த அரசுக்கும் நிதி சுதந்திரத்தை அளிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்சூரன்ஸ் பிரீமியத்தை கட்டுவதற்கு சிரமப்படுகிறீர்களா, இது உங்களுக்கான மாத்தி யோசி வழி !

இன்சூரன்ஸ் பிரீமியத்தை கட்டுவதற்கு சிரமப்படுகிறீர்களா, இது உங்களுக்கான மாத்தி யோசி வழி !

Smart way to pay your annual premium – Financial Burden

நம்மில் பலருக்கு மாதச்சம்பளம் சரியான தேதியில் வந்து கொண்டிருந்தாலும், மாத நடுவில் இரண்டாம் சம்பளம் தேவைப்படுகிறது என்ற நிலைமை ஏற்பட தான் செய்கிறது. குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தி விட வேண்டும் என நாம் யோசித்தால், அந்த மாதம் தான் எதிர்பாராத செலவுகள் எகிறி கொண்டிருக்கும். மாதம் ஆரம்பித்தவுடன் 5ம் தேதி வாகன இ.எம்.ஐ.(EMI) கட்டணம், 10ம் தேதி வீட்டு கடன் தவணை, அதே பத்தாம் தேதி கைபேசிக்கு போஸ்ட் பெய்டு கட்டணம், 15ம் தேதி மாத காப்பீடு பிரீமியம்(Insurance Premium). இதற்கு நடுவில் பால், கேபிள் டிவி, மின் கட்டணம், பலசரக்கு கடைக்கு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் ஷாப்பிங். அப்பப்பா, என்ன ஒரு மாதாந்திர செலவுகள் !

நடுத்தர குடும்பத்திற்கு மட்டுமே என இல்லாமல் ஏழை முதல் பணக்காரர்கள் வரை மாத செலவு பட்ஜெட் போடுவதற்கு என தனி வருமானம் வேண்டுமென எல்லோரையும் நினைக்க வைக்கிறது. சரிவிகித பட்ஜெட் திட்டமிடலை நாம் பராமரிக்காமல் விட்டால் வரவுக்கு மேல் கடன் வாங்க நேரிடும். கடன் அதிகமானால் கத்தி மேல் நடப்பது போல தினசரி வாழ்க்கை மாறி விடும். அப்புறம் எங்கே நாம் நிதி இலக்குகளை பற்றி திட்டமிடுவது, போதிய காப்பீட்டை பெறுவது.

முன்னொரு காலத்தில் இருந்த நமது பாரம்பரிய சேமிப்பு பழக்கவழக்கம் இன்று வழக்கொழிந்து எதற்கெடுத்தாலும் பொருட்களை வாங்கி குவிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது போன்ற நவீன வாழ்வியல் சூழ்நிலையில், நாம் திறம்பட பட்ஜெட் திட்டமிடலை செய்தால் மட்டுமே, நமக்கு அடுத்த சந்ததியினருக்கு ஏதாவது நன்மை செய்திட முடியும். இன்றைய காலத்தில் பெரும்பாலோனோரின் பிரச்சனை நிதி சார்ந்த இலக்குகள் மற்றும் தேவையான காப்பீட்டு தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாத நிலை தான்.

நிதி இலக்குகளுக்கு தேவையான மாத தொகையும், முறையான காப்பீட்டு தொகையையும் குறிப்பிட்ட தேதியில் செலுத்தாமல் விட்டால், பின்னால் அது சார்ந்து ஏற்படும் பிரச்சனை மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். இவற்றில் முக்கியமானது காப்பீட்டு தொகையை உரிய நேரத்தில் செலுத்துவது. சரியான காப்பீடு எனும் போது டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு ஆகியவற்றை சொல்லலாம். இது போக வாகன காப்பீடு தனிநபர் சார்ந்தது.

நம்மில் பெரும்பாலோர் ஆண்டு காப்பீட்டை(Annual Premium) செலுத்த முடியாமல், அதனை மாதாந்திர தொகையாக மாற்றி கொள்கின்றனர். இருப்பினும், பலர் மாதாந்திர தொகையை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் உள்ளனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலர் காப்பீட்டு பிரீமியம் அதிகமாக இருப்பதாக எண்ணி, போதிய காப்பீட்டு பாதுகாப்பை பெறாமல் உள்ளனர். நம் நாட்டை பொறுத்தவரை காப்பீட்டை முழுவதுமாக பெறாமல் இருப்பவர்களின்(Not Sufficient Coverage) எண்ணிக்கையும், காப்பீட்டில் உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பும்(Unclaimed amount) அதிகம் எனலாம். காலம் தவறிய பிரீமிய தொகை, அபராத கட்டணமாக மட்டுமில்லாமல், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு தொகை உரிமை கோருவதை நிராகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே சரியான வேளையில் அதற்கான தொகையை செலுத்தி விடுவது நல்லது. பொதுவாக மாதாந்திர காப்பீட்டு தொகையை காட்டிலும், ஆண்டு பிரீமியத்தில் சலுகை உண்டு. மேலும் அதனை எளிதாக செலுத்துவதற்கான யோசனையும் உள்ளது.

  • முதலில் உங்களது மாதாந்திர காப்பீட்டு தொகையை, ஆண்டு பிரிமியமாக மாற்றி கொள்ளுங்கள். (உங்களுக்கு மாதாந்திர தொகை செலுத்துவது சிரமமாக இருந்தால்)
  • ஆண்டு பிரீமியமாக செலுத்தும் போது, கட்டணத்தில் சிறிய அளவில் சலுகை பெற வாய்ப்புண்டு. ( ஏற்கனவே ஆண்டு பிரிமியம் செலுத்துபவர்களுக்கும் இது உதவும்)
  • ஒரு வருடத்திற்கு செலுத்த வேண்டிய காப்பீட்டு பிரீமியத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். பின்பு அதனை 12 மாதங்களாக கணக்கில் எடுத்து கொள்ளுங்கள். சொல்லப்பட்ட 12 மாத தொகையை, மியூச்சுவல் பண்டில் கிடைக்கப்பெறும் குறைந்த ரிஸ்க் கொண்ட திட்டத்தில்(Monthly SIP – Liquid or Debt Funds) மாத எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யுங்கள்.
  • உங்களது பிரீமியம் செலுத்தும் காலம் வருவதற்கு ஒரு வாரம் முன்னர், மியூச்சுவல் பண்டு திட்டத்தில் உள்ள தொகையை எடுத்து அதற்கான பிரீமியத்தை செலுத்துங்கள். பிரீமிய தேதியை மறந்து விடலாம் என நினைப்பவர்கள், செலுத்த வேண்டிய தொகையை வங்கிக்கணக்கில் போட்டு விட்டு, இன்சூரன்ஸ் திட்டத்தில் தானியங்கி(Auto Debit – ECS) முறையை தேர்ந்தெடுக்கலாம்.
  • அஞ்சலக மற்றும் வங்கி ஆர்.டி.(Recurring Deposit) திட்டங்களை இதற்கு பயன்படுத்தலாம். எனினும் மியூச்சுவல் பண்டுகளில் ஆர்.டி. ஐ போன்று முதிர்வு காலம் என்ற வரம்பும், அபராதமும் கிடையாது. எனவே, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து பின்னர் உங்களுக்கு தேவையான ஆண்டு பிரிமியத்துக்கு எடுத்து கொள்ளலாம்.
  • ஒரு வருட டேர்ம் பிளான்(Term Plan), மருத்துவ காப்பீடு(Health Insurance), விபத்து காப்பீடு(Accident Policy) மற்றும் வாகன காப்பீடு போன்றவற்றை செலுத்த சிரமப்படுபவர்கள் இது போன்ற மாதாந்திர எஸ்.ஐ.பி. முறையை தேர்ந்தெடுத்து தங்கள் தேவைக்கேற்ப அதனை மாற்றி கொள்ளலாம்.

இதனை ஒரு உதாரணம் மூலம் நாம் பார்க்கலாம். ராஜன் தனது குடும்பத்தை நிதி சார்ந்த இழப்புகளிலிருந்து பாதுகாக்க 1 கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்சூரன்ஸ் (பிரீமிய தொகை – ஆண்டுக்கு ரூ.12,500), 5 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு (பிரிமியம் ஆண்டுக்கு – ரூ. 15,400) மற்றும் விபத்து காப்பீடு ரூ.40 லட்சத்திற்கு (பிரீமியம் ஆண்டுக்கு ரூ. 9,600) எடுத்துள்ளார். இவற்றில் டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமிய தொகை ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் வருகிறது. விபத்து காப்பீட்டுக்கான பிரீமியத்தை அவர் ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் செலுத்தி வருகிறார்.

ராஜனுக்கு ஒவ்வொரு ஆண்டின் ஜூன் மாதத்தில் மட்டும் காப்பீடு கட்டணத்திற்காக செலுத்த வேண்டிய தொகை ரூ.28,000. டேர்ம் காப்பீடுக்கான பிரீமியம் பொதுவாக மாறாது, எனினும் மருத்துவ காப்பீடுக்கான பிரீமியம் வயது அதிகரிக்கும் நிலையில் அதற்கான பிரீமியமும் அதிகமாக செல்லும். ராஜனின் மாத வருவாய் ரூ.50,000 ஆக இருக்கும் நிலையில், ஜூன் மாதத்தில் வேறு ஏதேனும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுமாயின், அவர் சிரமப்பட நேரிடும். இதனை தவிர்க்கும் பொருட்டு, அவர் மியூச்சுவல் பண்டு திட்டத்தில்(Mutual Funds) மாத எஸ்.ஐ.பி. முறையில் ரூ.2500 ஐ முதலீடு செய்து வருகிறார். இதனை கொண்டு ஜூன் மாதத்திற்கான டேர்ம் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியத்தை செலுத்தி விடுவார். இது போக மற்றொரு திட்டத்தினை(Low Risk Debt or Liquid Funds) துவங்கி மாதம் ரூ.1500 ஐ எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார். இந்த திட்டத்தில் கிடைக்கப்பெறும் தொகையை கொண்டு விபத்து காப்பீட்டு பிரீமியம் மற்றும் தனது மகளின் பிறந்தநாள் செலவுகளை சமாளித்து விடுகிறார்.

மாதாந்திர எஸ்.ஐ.பி. முறையில் 12 மாதங்களுக்கு ரூ. 2500 ஐ முதலீடு செய்யும் நிலையில், எதிர்பார்க்கும் வட்டி விகிதம் 7 சதவீதம் எனும் போது, ஒரு வருடத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகை ரூ.31,150. நாம் காப்பீடுக்கு கட்ட வேண்டிய தொகையோ ரூ.28,000. மீதத்தொகையை மற்ற செலவுகளுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.

மாதாமாதம் ரூ.1500 ஐ எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தால், ஒரு வருடத்திற்கு பிறகு(எதிர்பார்க்கும் வட்டி – 7 %)  18,700 ரூபாயை பெறலாம். ஆண்டு பிரீமிய தேவைகளுக்கு எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும் போது, பாலிசி காலம் முடியும் வரை முதலீட்டை தொடரும் படி வைத்து கொள்ளுங்கள். மற்ற எதிர்பாராத செலவுகளுக்கும் இந்த மாத்தி யோசி முறை பயன்தரும். மியூச்சுவல் பண்டு திட்டத்தில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்பவர்கள்(Lumpsum Invest in Debt Funds) அல்லது வங்கி ஒரு வருட டெபாசிட் திட்டத்தில்(Fixed Deposit) சேமிப்பவர்கள், அவற்றிலிருந்து கிடைக்கபெறும் ஆண்டு வட்டி வருவாய் உடனடியாக தேவைப்படாத நிலையில், அதனை  கொண்டு உங்களது ஆண்டு பிரீமியத்தை செலுத்தி கொள்வது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கும். 

இந்த மாத்தி யோசி திட்டம் வெறும் காப்பீட்டுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தை பிறந்தநாள் செலவுகள், திருவிழா காலங்கள், ஆண்டு கல்வி கட்டணம் என எந்தவொரு இலக்கிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் எதிர்பாராத நிதி சிக்கல்களை சமாளிக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

முதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா ? Investment Insulation

முதலீட்டு காப்பு செய்து விட்டீர்களா ?

Have you made Investment Insulation ?

 

கடந்த சில அத்தியாயங்களில் நாம் முதலீடு பற்றியும், முதலீட்டுக்கான வாய்ப்புகளையும், ரிஸ்க் தன்மை பற்றியும் மற்றும் அதனை எவ்வாறு பரவலாக்குவது என்பதனையும் பார்த்தோம். ‘Investing’ என்ற முதலீட்டு சிந்தனையை நாம் பெற்று விட்டோம்; சரி, இப்போது உடனே முதலீட்டில் இறங்க வேண்டியது தானே ! கையில் ரூ. 10,000 (அ) 1,00,000 /- உள்ளதே, அப்புறம் என்ன ஒரு கை பார்த்து விடலாம் என்கிறீர்களா ? அது தான் இங்கு சிக்கலே. மழை வெள்ளம் வரும் முன்னேரே பாதுகாத்திருக்கலாம் என தோன்றுகிறது, அதை தான் நாம் இங்கும் யோசிக்க வருகிறோம்; கையில் பணம் இருப்பதெல்லாம் சரி, முதலீடு செய்வதெல்லாம் சரி தான், முதலீடு ரிஸ்க்கையும் சமாளித்து விடலாம்; அதனை பற்றி நமக்கு சிறிது தெரியும். ஆனால் இயற்கையாக வரும் சில ரிஸ்க் இருக்கிறதல்லவா ? அதிலிருந்து நாம் நம் முதலீட்டை காக்க வேண்டுமல்லவா ? பணம் போனால் சம்பாதித்து விடலாம், பணம் சம்பாதிப்பவரே சிரமத்திற்கு உள்ளானால் (எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு, அதிக கடன், உடல் நலம் சரியில்லாமை) ! அதற்கு தேவை தான் ‘முதலீட்டு காப்பு’ என்ற ‘Investment Insulation’. பயிர்க்காப்பீட்டை போல…

 

 

முதலீட்டு காப்பு எப்படி ?

 

முதலீட்டு காப்பை, ‘Networth’ என்று சொல்லப்படும் நிகரச்சொத்து மதிப்புடனும் ஒப்பிட்டு கூறலாம்.

 

முதலீட்டு காப்பு என்பது உங்கள் முதலீட்டின் மீதான விளைவுகளிலிருந்து உங்கள் அன்றாட (நிதி) வாழ்க்கையை பாதுகாக்க உதவுவது; நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு வருமானம் ஏதும் தராமலோ  (அ) நஷ்டத்தையோ ஏற்படுத்தலாம்; அந்த சமயத்தில் உங்களது தினசரி பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் காப்பது அவசியம். இதை தான் நாம் முதலீட்டு காப்பு என்கிறோம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முக்காப்பு அவசியம் (Three Insulators):

 

நீங்கள் பங்குச்சந்தை / மனை விற்பனை / ஏதேனும் ஒரு தொழிலில் முதலீடு செய்ய உள்ளீர்களா  ?

அதற்கு முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது முக்காப்பு.

 

 

முதலீட்டு காப்புகள்  தேவைகள்/ பயன்கள்   
1 உங்களிடம் போதுமான இன்சூரன்ஸ் உள்ளதா ? Term Policy, Health Insurance, Accident Cover – எதிர்பாராத விபத்து / உயிரிழப்பு, மருத்துவ செலவுகள்
2 அவசர கால நிதியை தயார் செய்து விட்டீர்களா ? Savings of 6-10 Months Income – வேலையிழப்பு, மருத்துவ செலவு, பிற அவசர தேவைகள்
3 மாதச்சேமிப்பு எப்படி ? RD, PPF, Mutual Fund SIP – நிதி இலக்குகளுக்கு – கல்வி மற்றும் திருமண செலவுகள், ஓய்வு கால நிதி ஒதுக்கீடு.

 

 

முதலீட்டு காப்புகள்:

 

  • காப்பீடு (Insurance – Term, Health, Accident Cover)
  • அவசர கால நிதி (Emergency Fund – Savings of 6 – 10 Months)
  • மாத சேமிப்பு / முதலீடு (Monthly Investing – RD, PPF, Mutual Funds SIP)
  • தண்ணீரை சேமியுங்கள் (Save Water – Avoid wastage)
  • மின்சாரத்தை சிக்கனமாக்குங்கள் (Consume Less – Electricity Power)
  • மரம் நடுங்கள் (Save Nature – Planting Tree)

 

முதலில் மேலே நாம் சொன்ன காப்பை செய்து விட்டு தான், மற்ற அத்தியாயங்களில் நாம் சொன்ன வாய்ப்புகளை ஆரம்பிப்பது நன்று; நீங்கள் செய்யும் முதலீடு நஷ்டமடைந்தாலும், வருமானம் தர வாய்ப்பு இல்லையென்றாலும் மற்றும் ஏதேனும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டாலும்  உங்கள் முதலீட்டு காப்பு உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் பாதுகாக்கும்.

 

முதலீட்டு காப்பு என்பது தனிநபர் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது சமுதாயத்திற்கான பலனும் தான்.

 

காப்புக்கு தயாராகுங்கள் கருத்துடன் 🙂

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

நீங்கள் உண்மையிலேயே பாதுகாக்கப்படுகிறீர்களா? Term Insurance Vs Endowment Insurance

நீங்கள் உண்மையிலேயே  பாதுகாக்கப்படுகிறீர்களா ?

Is Insurance really protect you ?

பாதுகாப்பு நம் பயணத்தின் காப்பு !

 

Protection – “A person or thing that protects somone or something”

 

இந்த பிரபஞ்சத்தில் இயற்கையாகவே எல்லா உயிர்களுக்கும் தற்காப்பு என்ற தன்மை இறைநிலையில் உள்ளது; புல் தாவரம் முதல் மனிதன் வரை இயற்கை சீற்றங்கள் மற்றும் பிற உயிர்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தன்னை காக்க எப்போதும் தயாராக உள்ளது; இது இயற்கையின் நியதி !

 

மனிதனும் தனது வாழ்க்கை பயணத்தில், இலக்குகளில் சறுக்காமல் இருக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறான்; குறிப்பாக தனது பொருள் சேதம், உற்றுயிர்கள் பாதிப்படையும் போது, மனம் மற்றும் உடல் அளவில் தயாராகிறான்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முன்னொரு காலத்தில், ஒரு வீட்டில் உள்ள ஒருவர் மட்டுமே பொருளீட்டி தனது உறவுகளை பேணுவார், பாதுகாக்கவும் செய்வார்; பெரும்பாலும் அவர் குடும்ப தலைவராக இருப்பார்; அந்த தலைவர் ஏதேனும் காரணத்தால் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டால், அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் எப்போதும் ஆயத்தமாக  இருப்பார்; அப்போது குடும்ப உறவுகளின் எண்ணிக்கை பல;

 

தியாகம் மற்றும் சகிப்புத்தன்மையும் நிறைவு !

 

ஆனால் இப்போது அவ்வாறு இல்லை; சிலர் மனம் விரும்பாமல் உறவுகளிலிருந்து வெளியேறுகின்றனர். பொறுப்பெடுத்து கொள்ள தயாராகவும் இல்லை. இன்னும் சிலரோ பொறுப்பெடுத்து கொள்ள தயாராக இருந்தாலும் அவர்களது உடல் மற்றும் நிதி உழைப்பு ஒத்துழைப்பதில்லை; இன்று காலம் கடந்தும் விட்டோம். இருந்தும் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறையாக தான் இருக்கிறோம்; தகவல் சேமிப்பில் Big Data, Cloud Computing, Hadoop  என்று வளர்ந்து கொண்டே செல்கிறது;

நிதி சார்ந்த விஷயத்திலும் Insurance, Investing, Invention, Assets… இன்னும் பல !

 

நாம் சொன்னோமே ஒரு குடும்ப தலைவர், அவருக்கு அடுத்து ஆயத்தமாக இருந்த மற்றொருவரை சொன்னோமே, அந்த மற்றொருவர் தான் நமது பாதுகாப்பு தன்மைக்கு மிகவும் அவசியமானவர்; அவர் வலிமையாக, விவேகமாக இருப்பது முக்கியம்; அவரை நம்பி தான் மாத வருமானம் பெறும் / தொழில் புரியும் நாம் இருக்கிறோம்.

 

அவர் உண்மையிலேயே நம்மையும், நமது உறவுகளையும் இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பாரா ?

 

பாதுகாப்பை  பாப்போம் !

 

Insurance  –  Protection against future loss / Protection from financial loss

 

நீங்கள் எடுத்தது உண்மையிலேயே மேலே சொன்ன இன்சூரன்ஸ் தானா ?
எதிர்க்குரல்கள்: (Conflict thoughts about Insurance)

 

பொதுவாக நாம் பார்க்கும் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஏறக்குறைய பெரும்பாலானோர் ‘Endowment Plan’ என்று சொல்லப்படும் காப்பீட்டு திட்டத்தையே வாங்குகிறோம்; ‘Term Plan’ என்று சொல்லக்கூடிய முழுமையான காப்பீட்டை கொடுக்கும் திட்டத்தை நம்மில் பலர் அறிவதில்லை, சிலருக்கு தெரிந்தாலும் எடுக்க மறுப்பது.

 

ஏன் பலரும் Term Insurance  ஐ ஆதரிக்காமல் குறைந்த பயனை  தரும் மற்ற காப்பீட்டை தேர்ந்தெடுக்கின்றனர் ?

 

காரணங்கள் பெரும்பாலோரிடம், Term Insurance ல் கட்டிய பணம் தருவதில்லை; இழப்பு ஏற்பட்டால் மட்டுமே கிடைக்குமாம் என்பது. யாரவது நாம் சிந்தித்து உண்டா ?

 

உங்கள் வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு செய்யும் காப்பீடு என்றாவது உங்களுக்கு முதிர்வு தொகை என கொடுத்ததுண்டா ? இல்லை ! ஏனென்றால், காப்பீடு என்பது நாம் சொன்னது போல உங்களுடைய எதிர்கால வாழ்க்கையோ, பொருளாதார இழப்பையோ சரிக்கட்டுவது என்பதே.

 

உங்கள் வாகனம் தொலைந்து விட்டால் (அ) சேதம் அடைந்து விட்டால், நீங்கள் காப்பீட்டு தொகை பெற முயற்சிக்கலாம்; மாறாக நான் எனது வாகனத்திற்கு ஒவ்வொரு வருடமும் இவ்வளவு தொகை கட்டினேன், எனக்கு தாருங்கள் என்று காப்பீடு நிறுவனத்திடம் நாம் முறையிட முடியாது.

நீங்கள் உங்கள் வாகனத்தை கொண்டு ஒருவரை சேதப்படுத்தி விட்டீர்கள் என கொள்வோம்; இழப்பு ஏற்பட்ட அவருக்கு யார் இலவசமாக பணம் தருவார்கள் ?   நீங்கள் செய்த காப்பீட்டு தொகையே அவருக்கான இழப்பையும், உங்களை அந்த பிரச்சனையிலிருந்து விடுவித்து கொள்ளவும் உதவும் 🙂

 

Term Insurance vs Endowment Insurance:

Term Insurance:

  • Term Insurance என்பது நீங்கள் உங்கள் வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு காப்பீடு எடுப்பது போல தான்.
  • Term Insurance ஒரு முழுமையான காப்பீடு திட்டம்.
  • Term Insurance ல் ஏதேனும் அசம்பாவிதம் / உயிரிழப்பு ஏற்பட்டால் முழு காப்பீட்டு தொகையும் கிடைக்கும்; முதிர்வு தொகை என்று ஏதும் கிடையாது, எனவே இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தொகை கிடைக்கும்.
  • காப்பீடு காலத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
  • இளம் வயதில் காப்பீடு எடுக்கும் போது ப்ரீமிய தொகை மிக குறைவாக இருக்கும்; முதிர்வு காலம் வரை ப்ரீமிய தொகையில் மாற்றம் இருக்காது.
  • Term Insurance உங்களது தற்போதைய செல்வ வாழ்க்கையை எதிர்காலத்தில் பாதுகாக்கும். (Protect your Wealth)

 

Endowment Insurance:

  • Endowment Insurance என்பது காப்பீடு மற்றும் சேமிப்பு/முதலீட்டை கொண்ட ஒரு திட்டம்.
  • Endowment Insurance ல் நீங்கள் செலுத்திய ப்ரீமியத்தில் ஒரு பகுதி காப்பீடுக்கும், மற்றொரு பகுதி சேமிப்பு / முதலீட்டிற்கு பயன்படுத்தபடும்.
  • Endowment Plan ல் முதிர்வு தொகை உண்டு; ஏதேனும் அசம்பாவிதம் / உயிரிழப்பு ஏற்பட்டால் முழு காப்பீடு தொகை கிடைக்கும்.
  • காப்பீட்டிற்கான ப்ரீமிய தொகை அதிகம்; Term Insurance ஐ ஒப்பிடும் போது Endowment ல் காப்பீடு தொகைக்கேற்ற ப்ரீமிய தொகை மிக அதிகமே. (Low Coverage at High Cost)
  • பணவீக்கத்தை மற்றும் உங்கள் வாழ்க்கை தரம், எதிர்கால செல்வ வாழ்க்கையை சரி கட்டாது.

 

(Image Courtesy: Nanayam Vikatan)
இரண்டையும் ஒப்பிட்டு நீங்கள் முடிவு செய்வது, உங்கள் சிந்தனையில்…

 

ஏன் உங்கள் குழந்தையை 5 ம் வகுப்பு படிப்போடு நிறுத்தவில்லை, கல்லூரி படிப்பு வரை தொடர செய்கிறோம் என்று ?

 

நீங்கள் ஏன் ஒரு தரமான வீடு மற்றும்  கல்வியை விரும்புகிறீர்கள் ?

 

காப்பீடு ஒரு முதலீட்டு திட்டம் அல்ல ! (Insurance is not a Investing)

 

  • காப்பீடையும், முதலீட்டையும் எப்போதும் குழப்பி கொள்ள வேண்டாம்; காப்பீடும், முதலீடும் செய்கிறோம் என்று ஒரு தவறான மற்றும் நமக்கு பொருந்தாத திட்டத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

 

  • நமக்கு என்ன தேவை, நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது என்று ஆராய்ந்த பின்னரே நிதி விஷயத்தில் முடிவு எடுக்கவும்.

 

  • காப்பீடு Term and Conditions ஐ எப்போதும் கவனமாக படியுங்கள்

 

  • வரிச்சலுகை பெறுகிறேன் என்று அதிகமான பணத்தை காப்பீடு எடுக்க பயன்படுத்துவதும் புத்திசாலித்தனமல்ல !

 

நமக்கான காப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுவது ?

(Calculating Insurance Coverage Required )

 

  • உங்களுடைய மாத வருமானத்தை ஆண்டு கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (A).
  • உங்கள் தற்போதைய கடன்கள் மற்றும் உங்களின் எதிர்கால குழந்தைகளின் கல்வி செலவுகள், திருமணம் கணக்கில் கொள்ளுங்கள். (B)
  • உங்களுடைய தற்போதைய சேமிப்பு / முதலீட்டை குறித்து கொள்ளவும்.(C)

 

Insurance Coverage = A + B – C   X   15

 

உங்களுக்கு கணக்கிடுவது பிடிக்கவில்லை (அ) புரியவில்லையா ?

 

எளிது, உங்கள் ஆண்டு வருமானத்தை 15 ஆல் பெருக்கி கொள்ளுங்கள்; கிடைக்கும் தொகை தான் உங்களுக்கான காப்பீடு செய்ய வேண்டிய தொகை !

 

காப்பீடு தொகை சராசரியாக ஆண்டு வருமானத்தை போல, 15 – 20 மடங்குகள் இருப்பது சிறந்தது.

 

காப்பீட்டு திட்டத்தை யார் தவிர்க்கலாம் ? (Who can avoid Insurance ?)

 

  • நீங்கள் ஒரு செல்வந்தர், உங்களுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் வருமானங்கள்; கடன்களும் இல்லை;  நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் எதிர்கால சந்ததியினரை உங்கள் சொத்துக்கள் அவர்களை பாதுகாக்கும் என்றால் – உங்களுக்கு காப்பீடு வேண்டியதில்லை; நீங்கள் மற்றவர்களுக்கு உதவலாம் !

 

  • எனக்கு யாருமில்லை, என்னை நம்பி யாருமில்லை. நான் ஒரு இளங்கலை / துறவி (Bachelor / Monk). நான் யாருக்கும் தொண்டு செய்யப்போவதில்லை என்றால் – நீங்கள் தனித்து இருக்கலாம்.

 

நம் உடல் ஆரோக்கியத்தை நாம் நோய் வருமுன் காப்பது போல, ஒரு சிறந்த நிதி பாதுகாப்பையும் (Insure) செய்வோம் !
வாழ்த்துக்கள்;

வாழ்க வளமுடன் !