தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி- 8.55 % ஆக குறைப்பு

தொழிலாளர்  வருங்கால  வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் – 8.55 % ஆக குறைப்பு

 

EPF Interest rate cuts to 8.55 % for 2017-18

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ provident fund organisation) தனது 220 வது மத்திய குழு கூட்டத்தை கடந்த புதன் கிழமை (21.02.2018) நடத்தியது. இந்த கூட்டத்தில் தொழிலாளருக்கான அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்கவார் கலந்து கொண்டார். கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் விஷயங்கள் அறிவிக்கப்பட்டது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 2017-2018 நிதியாண்டுக்கு 8.55 % ஆக நிர்ணயித்தது. இந்த நிதியாண்டு அடுத்த மாதம் மார்ச்சில் முடிவடைகிறது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றம் 0.10 % (10 basis points) குறைவு.

 

கடந்த 2016-17 நிதியாண்டின் வட்டி விகிதம் 8.65 % ஆகவும், 2015-16 ல் இது 8.8 % வட்டியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விகித குறைப்பு சுமார் 6 கோடி பி.எப். சந்தாதாரர்களை பாதிக்கும் எனவும், கடந்த 8.65 % (2016-17) வட்டி மூலம் 695 கோடி ரூபாய் உபரியாகவும்(Surplus) இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியாண்டின் 8.55 % வட்டி தாக்கத்தால் 586 கோடி ரூபாய்  எதிர்பார்க்கப்படும் உபரியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

மேலும் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் கூறும் போது, “ இந்த அமைப்பு (EPFO) கடந்த இரு மாதங்களில் (January and February) பங்குச்சந்தையில் ரூ. 3700 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதாகவும், அதன் மூலம் ரூ.1010 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் “ கூறினார்.

 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Providend Fund -PPF)  வட்டியை காட்டிலும் தொழிலாளருக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகம் இருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளது. தற்போதைய PPF வட்டி விகிதம் –  7.6 %  ஆகும்.

 

நிறுவனங்கள்  செலுத்தும் நிர்வாக செலவினங்களை (Administrative Expenses by Employers)  0.65 % லிருந்து 0.5 % ஆக குறைக்க முடிவு செய்துள்ளது. EPFO அமைப்பு ஏற்கனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் நிதி வரம்பையும் அதிகரித்துள்ளது. முன்பு 20 பேர் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே வருங்கால வைப்பு நிதிக்கு விண்ணப்பிக்கும் நிலை மாறி, தற்போது 10 பேர் கொண்ட நிறுவனமாக இருந்தால் போதும் என்ற விலக்கும் EPFO ல் உள்ளது.

 

பட்ஜெட் 2018 லும் வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் (Women’s Contribution) தாங்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 3 வருடங்கள், தங்களது வருமானத்தில் 8 சதவிகிதம் மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனைத்து தரப்பினருக்கும் இருந்த 12 % பங்களிப்பு (PF Contribution) பெண்களுக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Earning per share (EPS) and Book Value – வகுப்பு 6.0

Earning per share (EPS)  and Book Value – வகுப்பு  6.0

Fundamental Analysis – Factors – EPS & Book value

 

 

நாம் தொழிலின் முதற்கணக்கை இங்கே ஆரம்பிக்க இருக்கிறோம். நமக்கான பங்கினை தேர்வு செய்வதற்கு, நாம் வாங்கும் ஒரு நிறுவனத்தின் பங்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதனை கவனமாக கொள்ள வேண்டும். நாம் பங்குச்சந்தையில் தொழில் செய்ய தான் வந்துள்ளோம். அதனால் நீண்ட கால நோக்கில் நாம் லாபமடைய வேண்டும் மற்றும் நஷ்டத்தினையும் முடிந்தளவு குறைக்க வேண்டும். ஆனால் நஷ்டத்தை தவிர்த்தல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நாம் ஏற்கனவே சொன்னது போல, நாம் தொழிலில் தான் ஈடுபட்டுளோம். நஷ்டமடையாமல் தொழிலில் எப்போதும் லாபம் மட்டுமே பார்க்க முடியுமா என்ன !  வாருங்கள் முதலில் EPS என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம்.

 

 

Earning Per Share (EPS):

 

EPS ன் விரிவாக்கத்திலேயே நாம் எளிமையாக புரிந்து கொள்ளலாம்; ஒரு பங்கு மீதான வருமானம் அல்லது நாம் வாங்கும் ஒரு பங்குக்கான வருமானம் என கொள்ளலாம். நம் தேநீர் நண்பர் தொழிலை போல தான். நாம் அவர் தொழிலில் பங்குதாரர் என கொள்வோம்.

 

நமது முதலீடு  (அ) பங்கு:   

 

நண்பரின் முதலீடு –  ரூ. 2,00,000 /-

 

நாம் செய்த முதலீடு  – ரூ. 1,00,000 /-         ( மொத்த முதலீடு –  ரூ. 3,00,000 /- )

 

நண்பரின் தொழிலில் ரூ. 3,00,000 /- முதலீட்டை ரூ. 10 முகமதிப்பு (Face value)  கொண்ட 30,000 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ( 10 X 30,000 )

 

நண்பருக்கான பங்குகள் – 20,000  ( 10 X 20000 = 2,00,000 /-)

 

நமக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் –  10,000  ( 10 X  10000 = 1,00,000 /-).

 

ஆக, ஒவ்வொரு முதலீட்டிற்கும் ஏற்ப பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல தான் பங்குச்சந்தையில், நமக்கு ஒரு நிறுவனத்தில் நாம் கேட்ட பங்குகள் கிடைக்கும் அல்லது விற்பனையில் இருக்கும் பங்குகள் அதன் விலையில் கிடைக்கும்.

 

உதாரணத்திற்கு, நமது நண்பரின் முதல் மாத வருமானம் (செலவுகள் போக) – ரூ. 60,000 /- என எடுத்துக்கொண்டால்,  மொத்த முதலீட்டின் மீதான வருமானம்:

 

Rs. 60,000 /-  ( For Total Investment of Rs. 3 lakhs) – Net Profit

 

EPS = Net Profit / No., of shares

 

60,000 / 30,000 = Rs. 2 /- (EPS)

 

எனவே, ஒரு பங்கிற்கு கிடைத்த முதல் மாத வருமானம் – ரூ. 2 /- ஆகும். நல்லது தானே 🙂   10 ரூ. முகமதிப்பு கொண்ட ஒரு பங்கு சம்பாதித்த தொகை – ரூ. 2 ஆகும். இதனை தான் நாம் EPS என்கிறோம். தொழில் லாபத்தில் தான் உள்ளது. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் EPS  காலாண்டிற்கு ஒரு முறை (அ) வருடத்திற்கு ஒரு முறை என தகவல் வெளியிடப்படும். நாம் அதனை பார்த்து நாம் வைத்திருக்கும் பங்குகளுக்கான தொழில் சம்பாதித்த வருமானத்தை பார்த்து கொள்ளலாம்.

 

இங்கே நமது நண்பரின் தொழிலில் நமக்கான பங்குகள் – 10,000 மற்றும் நம்முடைய முதலீடு ரூ. 1,00,000 /-  ஆகும். பங்கின் மீதான வருமானம் என்பது தொழிலின் மொத்த முதலீடு (அ) எல்லா பங்குகளை சேர்த்தே கணக்கிடப்படும். நமது நண்பரின் தொழிலின் அடுத்த மூன்று மாதங்களுக்கான EPS (ஒவ்வொரு மாதம்) – Rs. 2, 5, 6 என எடுத்து கொண்டால் அதன் பங்கின் மீதான வருமானம் வளர்ந்து கொண்டே செல்கிறது என அர்த்தம். இது நமக்கும் நல்லது தான்.

 

எளிமையாக,  EPS  = Net Profit / Total No. of Shares.   EPS வளர்ச்சி உள்ள பங்குகளை வாங்குவது நல்லது. அந்த நிறுவனம் தான் பெற்ற முதலீட்டிற்கு வருமானம் தந்து கொண்டிருக்கிறது.  பொதுவாக ஒரு பங்கு மீதான வருமானம் என்பது அதன் முகமதிப்பு அடிப்படையில் தான். சந்தையின் விலையில் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

XYZ நிறுவனம் 2016 – 17 (Financial Year) க்கான நிதி ஆண்டில் நிகர லாபமாக (Net Profit) ரூ. 5 கோடியை சம்பாதித்துள்ளது. அதன் மொத்த பங்கு முதலீடு (Equity) – ரூ. 2 கோடி. ஒரு பங்கிற்கான முகமதிப்பு (Face Value) –  10, சந்தை விலை – ரூ. 50 /- எனில்,

 

அதன் மொத்த பங்குகள் (Total No., of shares)  எத்தனை  ?

ஒரு பங்குக்கான வருமானம் (EPS) எவ்வளவு ?

 

கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

 

P/E (Price to Earnings):

 

நாம் ஒரு பங்கு மீதான வருமானத்தை EPS என்கிறோம்; இங்கே P/E  என்பது அந்த பங்குக்கான வருமானத்தை போல, அதன் சந்தை விலை எவ்வளவு மடங்கு உள்ளது என அறிவது.

 

உதாரணத்திற்கு,

 

நாம் வாங்க போகும் XYZ  நிறுவனத்தின் 2016 – 17  நிதியாண்டுக்கான EPS – ரூ. 15 மற்றும் அதன் சந்தை(Current Market Price) விலை – ரூ. 90.  இப்போது அதன் சந்தை விலை EPS ல் எத்தனை மடங்கு என கணக்கிட்டால்,

 

P/E = Current Market Price (P) / Earning per share (E) =   90 / 15 = 6 Times.

 

சந்தை விலையானது EPS ஐ போல, 6 மடங்கு உள்ளது. பொதுவாக சந்தையில் குறைவான P/E மடங்கு உள்ளது நல்லது.

 

ஆனால், அதற்காக குறைவான மடங்கு உள்ள பங்குகளையே பார்த்து விட்டு வாங்க கூடாது. அதன் காரணங்களை பின்னர் அறியலாம்.

 

இந்த P/E விகிதத்தையே இன்னொரு முறை மூலம் வித்தியாசப்படுத்தலாம். அதாவது P/E விகிதத்தை தலை கீழாக பயன்படுத்தினால்,

 

1 / (P/E)   =  1 / 6 = 0.1666  X 100 = 16.66 %

 

இதனை நமது பங்குக்கான முதலீடு எவ்வளவு லாபம் (அ) நஷ்டத்தினை தரலாம் என்பதை கண்டறியலாம். இங்கே 16.66 % லாபம் கிடைத்துள்ளது.

 

நாம் மேலே EPS ல் கேட்ட கேள்விகளில், P/E கண்டறிவதையும் சேர்த்து கொள்ளுங்கள். அதற்கான P/E ஐ கண்டுபிடுயுங்கள்.

 

( Read this post after the advertisement… )

 

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

PEG (Price to Earnings Growth):

 

நாம் P/E எவ்வாறு கண்டறிவது என்பதை இதற்கு முன் பார்த்தோம். அந்த P/E வளர்ச்சியினையும் பார்த்து விடுவோம்.

 

சுருக்கமாக, கடந்த சில வருடங்களாக பங்கு மீதான வருமானம் ஈட்டும் ஒரு நிறுவனத்தை பார்ப்போம். XYZ நிறுவனம் கடந்த 5 வருடங்களாக, தொடர்ச்சியாக 10 % EPS வளர்ச்சி மற்றும் P/E விகிதம் – 16  ஐ கொடுக்கும் பட்சத்தில் அவற்றின் P/E வளர்ச்சி (PEG),

 

PEG Ratio = (P/E) / EPS Growth  = 16 / 10 =  1.06

 

நாம் கணக்கிட்ட இந்த P/E வளர்ச்சியானது, கடந்த கால மதிப்புகளை (EPS, P/E) கொண்டு தான் செயல்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இதே வளர்ச்சியை கொண்டிருக்கலாம் என்றால், இதே PEG வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம். மாறாக வருமானத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருந்தால் இதன் வளர்ச்சி விகிதமும் மாறும். இது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என சொல்லவில்லை. அதனால் இது ஒரு கணக்கீடாக மட்டும் தான் எடுத்து கொள்ளவேண்டும். இதனையே காரணமாக எடுத்து கொண்டு பங்கு வாங்குவது கூடாது. பங்குச்சந்தை காரணிகள் அனைத்தையும் ஆராய்ந்து விட்டு தான் பங்கு முதலீடு செய்வது, முதல் மீதான ஆபத்தை (Risk) குறைக்கும்.

 

புத்தக மதிப்பு (Book Value):

 

புத்தக மதிப்பை பற்றி நாம் ஏற்கனவே பங்குச்சந்தை அடிப்படை வரையறை – வகுப்பு 4.0 ல் பார்த்தோம்.

 

ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு தான் அதன் புத்தக மதிப்பு. பொதுவாக நிறுவனத்தின் சொத்துகளிலிருந்து, கடன்களை கழித்தால் கிடைப்பது தான் புத்தக மதிப்பு எனப்படும்.

 

உதாரணத்திற்கு,  

 

XYZ நிறுவனத்திற்கு உள்ள சொத்துக்கள் – ரூ. 5 கோடி மற்றும் கடன்கள் – ரூ. 2 கோடி என்றால், அதன் புத்தக மதிப்பு,

 

Book Value  = Total Assets – Total Liabilities = ( 5 – 2) =   ரூ. 3 கோடி.

 

நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகள் – 3 லட்சம் எனில்,  ஒவ்வொரு பங்குக்கும் கிடைக்கும் புத்தக மதிப்பு – ரூ. 100 ( 3 கோடி / 3 லட்சம் பங்குகள்)

 

ஒரு நிறுவனம் ஏதேனும் காரணத்தால் விற்கப்படுமாயின், முதலீட்டாளருக்கு கிடைக்கும் மதிப்பு அல்லது தொகை – புத்தக மதிப்பு.

 

Price to Book Value (P/Bv):

 

ஒரு பங்கின் சந்தை விலை அதன் புத்தக மதிப்பில் எத்தனை மடங்கு உள்ளது என்பதை அறிவது.

 

உதாரணத்திற்கு,

 

XYZ நிறுவனத்தின் புத்தக மதிப்பு – ரூ. 100 மற்றும் அதன் சந்தை விலை – ரூ. 300 எனில், அதன் P/Bv:

 

Price to Book value =  300 / 100 = 3.33 Times (Trading at 3 times on its book value)

 

தற்போது இருக்கும் சந்தை விலை, அதன் புத்தக மதிப்பை விட 3 மடங்கு விலையில் வர்த்தகமாகிறது. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கும் போது அதன் சந்தை விலை கூடும். அதன் காரணமாக புத்தக மதிப்பின் மடங்கிலும் மாற்றம் ஏற்படும். நல்ல நிறுவனத்திற்கு சில நேரங்களில் நல்ல மற்றும் அதிக விலை கொடுத்தாலும் வாங்கலாம்.

 

நினைவில் கொள்ளுங்கள்:

 

  • EPS வளர்ச்சி  விகிதம் (High EPS)  ஒவ்வொரு  காலாண்டும்  மற்றும் ஒவ்வொரு வருடமும்  அதிகமாக  இருக்கும்  நிறுவனத்தை  உற்று  நோக்குங்கள். சில  நிறுவனங்கள்  அதன்  இதர  சொத்து  விற்பனை  (Other income) மூலம்  வருமானத்தை  காட்டும். சொத்து  விற்பனை  அதன்  உண்மையான  செயல்பாடுகளின் மீதான வருமானத்தை காட்டாது. அதனால் நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவைகள் விற்பனை மூலம் கிடைத்த செயல்பாட்டு லாபங்களை (Operating profit) கொண்டு பாருங்கள்.

 

  • ஒரு நிறுவனத்தின் P/E விகிதத்தை, அந்த துறையின் சராசரி P/E (Industry) மற்றும் துறை சார்ந்த போட்டி நிறுவனங்களின் P/E (Peers) உடன் ஒப்பிட்டு பாருங்கள். P/E விகிதம் குறைவாக (Low P/E) இருக்கும் நிறுவனங்களை பாருங்கள். அதே நேரத்தில் ஒரு நிறுவனம் அந்த துறையில் தலைமையாக (Market Leader) இருக்கும் போது அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனால் அதன் தேவை அதிகமாக இருக்கும் மற்றும் P/E விகிதமும் அதிகமாக காணப்படும். இதனை போன்றும் பாருங்கள். ( E.g:  TCS, Infosys, Pidilite, Asian Paints, HUL, ITC, MRF )

 

  • P/E ன் தலைகீழ் தான் உங்கள் முதலீட்டுக்கான வருமானம். அதனால் 1 / (P/E) விகிதம் மற்ற முதலீடு சாதனங்களை விட (Bank Deposits, Postal Savings, Bonds) அதிக வருமானம் தருகிறதா என பாருங்கள்.

 

  • PEG விகிதம் 1 க்கு கீழ் (Below 1.0) இருந்தால் ஒரு நிறுவனத்தின் பங்குக்கு நல்லது. அதற்காக மிக குறைந்த PEG ஐ பார்க்க வேண்டாம். ஏனென்றால், கடன் அதிகம் உள்ள நிறுவனத்திற்கும் இந்த விகிதம் சில சமயங்களில் குறைவாக காட்டப்படும். எல்லாம் கணக்கு செய்யும் வேலை தான் 🙂

 

  • ஒரு பங்கின் புத்தக மதிப்பு (High Book value) அதிகமாக இருப்பது நல்லது. அதே சமயத்தில் அதன் P/Bv மடங்கு அதிகமாக இருக்காமல் பார்த்து கொள்வதும் அவசியம். நன்றாக செயல்படும் நிறுவனத்தின் சந்தை விலை அதிகமாக இருக்கும் போது P/Bv விகிதமும் அதிகமாக இருக்கும். சந்தை விலை குறையும் போது, அந்த பங்கை வாங்கலாம்.  ஆனால் புத்தக மதிப்பு அதிகம் இருப்பது முக்கியம்.

 

  • P/Bv விகிதத்தை அந்த துறையில் உள்ள மற்ற போட்டி நிறுவனத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.

 

  • EPS, P/E, P/Bv – எதுவாக இருந்தாலும் அதன் விகிதத்தை கடந்த 5 – 10 வருடத்திற்கான நிதி அறிக்கையின் மூலம் பாருங்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மட்டுமே பார்ப்பது சரியாக வராது. ஒரு பங்கு வாங்குவதற்கு இந்த காரணிகள் மட்டும் போதாது. மற்ற காரணிகளையும் நாம் பார்த்து விடுவது சிறந்தது.

 

 

அடுத்த வகுப்பில், நாம் இந்த காரணிகளை நடைமுறை பயிற்சியின் (Practical Way) மூலம் பார்ப்போம்.  இந்த வகுப்பின் உங்களுக்கான சந்தேகங்களை பகிர மற்றும் கருத்து தெரிவிக்க,

 

https://varthagamadurai.com/contact/

 

(or)

 

mailto:  contact@varthagamadurai.com

 

பதிவு  செய்யுங்கள்.

 

மொத்த விலை பணவீக்கம் (WPI) – 2.84 % – ஜனவரி 2018

மொத்த விலை  பணவீக்கம் (WPI) – 2.84 % – ஜனவரி 2018

Wholesale Price Index (WPI) Inflation eases at 2.84 % – January 2018

 

  • நாட்டின் மொத்த விலை  பணவீக்கம் ஜனவரி (Jan, 2018) மாதத்தில் 2.84 % ஆக குறைந்துள்ளது.

 

  • இந்த  குறைவு  கடந்த  ஆறு மாதங்களில்  இல்லாத  சரிவாகும். உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைவால் இந்த 2.84 % அளவு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2017 ல் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 3.58 %  ஆக  இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

  • சமீபத்திய குறைவாக, கடந்த ஜூலை 2017 ல் 1.88 % ஆக இருந்தது. கடந்த டிசம்பர் 2017 –  ஜனவரி 2018 ஒப்பிடுகையில், ஜனவரி மாதத்தில் காய்கறிகளின் விலை குறைந்தும், வெங்காயத்தின் விலை சற்று அதிகரித்தும் காணப்பட்டது. கோதுமை, முட்டை, மீன் மற்றும் மாமிசத்தின் விலை குறைவாகவும், பழங்களின் விலை அதிகமாகவும் இருந்திருக்கிறது.

 

  • ஜனவரி 2018 மாதத்துக்கான சில்லரை பணவீக்கம் (Consumer Price Index – CPI) – 5.07 % ஆகும். இதன் அடிப்படையில் தான் பாரத ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கான  ரெப்போ (REPO) விகிதத்தை அறிவிக்கிறது. நமது நாட்டில் பணவீக்க அளவீடை கண்டறிய, WPI மற்றும் CPI என இரு வகையான முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

  • இதனிடையே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP), மற்றும் சில்லரை பணவீக்கம் (CPI) ஆகியவற்றின் அடிப்படை காலத்தை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

  • இதன் படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீடு இந்த நிதி ஆண்டு ( 2017-18) அடிப்படையிலும், சில்லரை பணவீக்கம் முன்னிருந்த 2012 லிருந்து இந்த ஆண்டு 2018 முதல் அடிப்படை ஆண்டு என கணக்கிடவும் திட்டமிட்டுள்ளது.

 

  • தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (TOP) ஆகியவற்றின் விலை ஏற்ற – இறக்கத்தை சரி செய்ய, ஒரு நிலையான மாதிரியை உருவாக்க திட்டமிட்டுள்ளது என கடந்த பட்ஜெட் 2018 ல் தெரிவிக்கப்பட்டது.

WPI India Jan 2018

(Data courtesy: Trading Economics)

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

அடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0

அடிப்படை  பகுப்பாய்வு  – காரணிகள்  – வகுப்பு  5.0

Fundamental Analysis Factors or  Financial Ratios

 

நினைவில்  கொள்ளுங்கள்  – “ பங்குச்சந்தை  ஒரு  தொழில்; நீங்கள்  அந்த  தொழிலில் ஒரு நிறுவனத்தின்  பங்குதாரர். “

 

இந்த  வகுப்பின்  அவசியமே  தொழில்  தான்.

 

நமது  தேநீர்  நண்பர்  தொழிலை  போல… நண்பர்  என்பதற்காக  நாம்  நம்  பணத்தை  கொடுத்து  விட  முடியாது. நமக்கு  அவரின்  தொழில்  மிகவும் முக்கியம். அதை  விட  அவரின்  தொழில்  கணக்குகள் ( நிதி  அறிக்கைகள்) மிகவும்  அவசியமான  ஒன்று. நாம்  சில வகுப்பிற்கு முன் பார்த்த  ஒரு  தொழிலின்  வரவு – செலவு, லாப – நட்ட கணக்குகள் தான் இங்கே பயன்பட போகிறது. அதாவது  ஒரு நிறுவனம்  அல்லது தொழிலின்  நிதி  அறிக்கையை  மிக  எளிமையான முறையில் நாம் கண்டறிந்து கொள்ள இந்த விகிதங்கள்  உதவுகிறது. இதனை காரணிகள் (Financial Ratios or Factors) எனவும் பெயரிடலாம்.

 

நிதி  அறிக்கைகள்  சம்மந்தமான விகிதங்கள்  அல்லது  காரணிகள்  பல  இருப்பினும், நமக்கு  ஒரு  நிறுவனத்தின்  பங்கினை  தேர்ந்தெடுப்பதற்கு  தேவையான முக்கிய காரணிகளை  பார்ப்போம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

காரணிகள் 10 (Factors – 10):

 

 

நாம் மேலே சொன்ன 10 முக்கிய காரணிகள் தான் அடிப்படை பகுப்பாய்வுக்கான அவசியம். ஒரு தொழிலின் மதிப்பை இதன் மூலம் கண்டறியலாம். அடுத்து வரும் ஒவ்வொரு வகுப்பிலும் இந்த காரணிகளை பற்றி நடைமுறையோடு (Practical Way) ஆராய்வோம்.

 

உங்களுக்கான நடைமுறை பயிற்சிக்காக ஒரு மாதிரி – இருப்பு நிலை அறிக்கை மற்றும் வருமான அறிக்கையை பாருங்கள்.

Sample of Balance sheet and Income Statement:

 

(Image and Data Courtesy:  http://www.accounting-basics-for-students.com/ )

 

Sample Balance Sheet:

Balance sheet sample

 

 

 

 

 

 

 

 

 

 

Sample Income Statement:   

 

Income Statement sample

 

 

உங்கள்  பங்கு  மீதான  வருமானத்திற்கு (EPS)  தயாராகுங்கள். அடுத்த  வகுப்பில்  சந்திப்போம்.

 

 

 

 

 

பட்ஜெட் 2018 க்கு பிறகு பங்குச்சந்தை முதலீடு எப்படி ?

பட்ஜெட் 2018 க்கு பிறகு  பங்குச்சந்தை  முதலீடு  எப்படி ?

 

Share Market after impact of Budget 2018 ?

 

சமீபத்தில் (09.02.2018)  மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில்(Fortune Pandiyan Hotel)  நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான கூட்டம் – தேசிய பங்குச்சந்தையின் கூட்டுடன் கோயம்புத்தூர் கேப்பிடல் நிறுவனம் (Coimbatore Capital) சார்பில் நடைபெற்றது.

 

 

முதலீட்டாளர் கூட்டத்தில் பட்ஜெட் 2018 க்கு பிறகான பங்குச்சந்தை தாக்கம் குறித்து  அலசப்பட்ட சில விஷயங்கள்:

 

 

நிறுவனர்  திரு. D. பாலசுந்தரம் (Coimbatore Capital, Founder and Director of Coimbatore Stock Exchange Limited ) பேசுகையில்…

 

  • பொதுவாக  பட்ஜெட்டின்  தாக்கம் 10 வருடங்களுக்கு  பிறகு தான்  ஏற்படும், உடனடியாக  அதன்  தாக்கம்  நடைபெறாது. உதாரணத்திற்கு மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டமும் பல வருடங்களுக்கு பிறகு தான் வெற்றியடைந்துள்ளது. அது போல, பட்ஜெட்டில் அரசு அறிவிக்கும் விஷயங்கள் மெதுவாக வளரலாம் என்றார்.

 

  • நடப்பு கணக்கு பற்றாக்குறை (Fiscal Deficit) – வங்கி வட்டி விகிதத்திலும், பணவீக்கத்திலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

 

  • வட்டி விகிதம் உயர்ந்தால், முதலீட்டாளர்கள் பத்திர சந்தை (Bond Market) நோக்கி செல்வார்கள். அதே நேரத்தில் வட்டி விகித உயர்ந்தால், நிறுவனத்தின் லாபம் குறையலாம்; அதன் பாதிப்பு பங்குச்சந்தையில் வெளிப்படும். எனவே குறைந்த வட்டி விகிதம் கடன் பெறுபவர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும்.

 

  • கொள்முதல் மேலாளர் குறியீடு (Purchasing Manager’ Index – PMI) என்பது ஒரு உற்பத்தி துறையின் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியம் மற்றும் அவசியமான அடையாளம். இந்த குறியீடு தற்போது நன்றாக உள்ளது. இது சந்தைக்கும் நல்ல விஷயம்.

 

  • பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாத துறைகள் – பாதுகாப்பு (Defence), அரசு ஊழியர்களின் சம்பள விகிதம்.

 

  • வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், வங்கி முதலீட்டை கடன் சந்தையில் (Bond / Debt Market) செய்யலாம்.

 

  • பொருள் சந்தையும் (Commodity Market), பங்குச்சந்தையும் இணைக்கப்படலாம். இதன் நிகழ்வு இந்த வருடத்தின் கடைசியில் நடைபெறலாம்.

 

  • வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வரி விகிதங்கள் குறைக்கப்படலாம் என கூறினார் (If Tax Payers will increase, tax rate may decrease).

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

 

தேசிய பங்குச்சந்தை சார்பில் துணை மேலாளர் திரு. சங்கமேஸ்வரன் பேசுகையில்,

 

  • கடன்  வாங்கி, பங்குச்சந்தையில்  ஈடுபட  வேண்டாம் (Don’t borrow and invest).

 

  • பங்குச்சந்தையை பற்றி  புரியாதவர்கள் பங்குச்சந்தையில்  முதலீடு  செய்ய  வேண்டாம். அவர்களுக்காக  வங்கி  மற்றும் அஞ்சலக  திட்டங்கள்  உள்ளன. பரஸ்பர  நிதியிலும் (Mutual Funds) முதலீடு  செய்யலாம் (Don’t invest, if you are not aware of Share market).

 

  • உங்களுக்கான  தேவைகள்  மற்றும்  நிதி  இலக்குகளை  சார்ந்து  சந்தையில்  முதலீடு  செய்யுங்கள் (Stick to Financial goals).

 

  • Asset Allocation  ஐ புரிந்து சரியாக முதலீடு செய்யுங்கள்.

 

  • பங்குச்சந்தையில் உங்கள் பரிவர்த்தனையை சரி பாருங்கள் மற்றும் உங்களுக்கான ஒப்பந்த சீட்டு (Digital Contract Note) தகவல்களை முழுவதுமாய் படித்து பாருங்கள்.

 

  • பங்குச்சந்தை தரகரிடம் நீங்கள் செலுத்திய பணம் மற்றும் பண பாக்கி சரியாக உள்ளதா என பார்த்து கொள்ளுங்கள் என்றார்(Verify settlement of funds and securities).

 

இறுதியாக, SEBI பதிவு பெற்ற ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர்  கார்த்திகேயன் ( SEBI Regd. Research Analyst) அவர்கள் பேசும் போது,

 

  • ஒரு  முதலீட்டாளரின்  ரிஸ்க்  என்பது  பணம்  மற்றும்  வாய்ப்பில் (Money and Opportunity)  தான்  உள்ளது. அதனால்  பணத்தை  கொண்டு  சரியான  வாய்ப்பை  நோக்குங்கள். இரண்டையும்  இழந்து  விட  கூடாது.

 

  • ஒரு  நீண்ட  கால  முதலீட்டாளர் மூன்று  நிலைகளை (Low Return, Zero Return, Negative Return)  கடந்து  தான்  செல்வத்தை  பெருக்க  முடியும். அதனால் சந்தையில்  பொறுமை  அவசியம்.

 

  • LTCG Tax  இருந்தாலும், சந்தையில்  கிடைக்கும்  வருமானம்  பணவீக்கத்தை விட  அதிகம்  தான்.

 

  • பட்ஜெட்  2018 க்கு  பின், சந்தை  இறக்கம் ஒரு  தற்காலிகமே; தொழில்துறை  முன்னேறுவதற்கான  காலங்கள்  அடுத்த  5 – 10 வருடங்கள். அதனால்  சந்தை நன்றாக  தான்  இருக்கும்.

 

  • வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்  தங்கள்  முதலீட்டை சந்தையிலிருந்து  முதன்மை சந்தைக்கு எடுத்து போயுள்ளனர். அதே போல அவர்கள் கடன் சந்தையிலும் முதலீடு செய்கின்றனர். அதன் தாக்கமே கடந்த சில நாட்களாக உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க வட்டி விகித மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் சந்தையை இறக்கின.

 

  • மொத்தத்தில், சந்தை நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும் எனவும், பட்ஜெட் 2018 ல் கூறியுள்ள அம்சங்கள் அமலாகும் போது சந்தை மற்றும் தொழில் முன்னேறும் எனவும் அவர் கூறினார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0

Stock Market Fundamentals – Definitions

பங்குச்சந்தை அடிப்படை  வரையறை – வகுப்பு 4.0 :

பங்கு  என்பது  என்ன  ?  (What is a Share or Stock  ? )

 

பங்கு (Share or Stock) என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிலில் உள்ள ஒரு பகுதி (அ) பகுதிகளுக்கான உரிமை. ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் தனது நிதி சார்ந்த முதலீட்டை பல பகுதிகளாக பிரித்து வைத்திருக்கும். உரிமை கோரும் ஒவ்வொருவருக்கும் தேவையான பகுதிகள் ஒதுக்கப்படும். அவையே பங்குகள் எனப்படும். பங்குகள் வாங்குவதினால் அந்நிறுவனத்தின் ஒரு பகுதி உரிமையாளாராகலாம். அந்த நிறுவனத்தின் லாபங்களில் நமக்கான பங்கும் உண்டு.

 

XYZ நிறுவனம் தனக்கான முதலீடு ரூ. 1,00,000 /- ஐ பங்கு ஒன்றுக்கு ரூ.10  வீதம் பிரித்தால் 10,000 பங்குகள் பிரிக்கப்படும். இந்த  10,000 பங்குகளில் உரிமை கோருபவருக்கு தேவையான பங்குகள் ஒதுக்கப்படும்.

 

பங்கு ஒன்றுக்கு ரூ. 10 என்பது முக மதிப்பு (Face value) எனப்படும். எனவே 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 10,000 பங்குகள் சேர்ந்தால் ரூ. 1,00,000 /- முதலீடு ஆகும்.

 

பங்குச்சந்தை என்பது என்ன ? (What is a Share Market ?)

 

பங்குச்சந்தை (Stock Market) என்பது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழில்  முதலீட்டை பொதுவெளியில் (Publicly) திரட்டிக்கொள்ளும் ஒரு சந்தை ஆகும். நிறுவனங்கள் என்பது தனியாராகவோ (அ) அரசு சார்ந்த நிறுவனம் (அ) அரசாங்கமே இருக்கலாம். பங்குச்சந்தையில் பங்கு வாங்குவது மற்றும் விற்பது நடக்கும். பங்குச்சந்தையில் நிறுவனங்கள் முதலீடு திரட்டுவதற்கு பொதுவுடைமை  நிறுவனமாக (Public Limited Company) பதிவு செய்திருக்க வேண்டும்.

 

பங்குச்சந்தையில் இரு வகை சந்தைகள் உள்ளன. ஒன்று முதன்மை சந்தை (Primary Market), மற்றொன்று இரண்டாம் நிலை சந்தை (Secondary Market). பங்குச்சந்தையில் புதிதாக ஒரு நிறுவனம் பொதுவுடைமை நிறுவனமாக்கப்பட்டு, முதலீடு திரட்டுவதற்கு விண்ணப்பிக்கும் போது, அவை முதலில் முதன்மை சந்தையில்(Primary Market) தான் பட்டியலிடப்படும். இந்த முறையை Initial Public Offer (IPO) எனப்படும். IPO வில் நிறுவனங்கள் தங்கள் தொழிலின் அறிக்கைகள், முதலீடு திரட்டுவதற்கான அறிவிப்புகள் மற்றும் காரணங்கள், முதலீட்டின் மதிப்பு, ஒரு பங்குக்கான விலை வரம்பு ஆகியன தெரிவிக்கப்படும்.

 

பொதுவாக முதன்மை சந்தையில் நிறுவன முதலீட்டாளர்கள் (Institutional Investors), வங்கிகள் (Banks), வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரிய முதலீட்டாளர்கள் தான் பங்கேற்று பங்குகளை பெறுவர். சிறு முதலீட்டாளர்களின் வரவு குறைவே.

 

முதன்மை சந்தையில் வாங்கிய பங்குகள், இரண்டாம் நிலை சந்தையில் (Secondary Market)  விற்பனைக்கு வரும் போது நாம் ஏற்கனவே சொன்ன முதலீட்டாளர்களும், சிறு மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்று பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவர்.

 

சுருக்கமாக சொன்னால், பங்குச்சந்தை மூலம் நிறுவனங்களுக்கு தேவையான முதலீடும், முதலீட்டாளர்களுக்கு நிறுவன பங்கின் உரிமையும் கிடைக்கும்.

 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர்களின் பங்கு லாப – நட்ட மதிப்புக்கு உட்பட்டது. சந்தையில் ஏற்படும் நஷ்டத்திற்கு முதலீட்டாளர்களே பொறுப்பு; நிறுவனம் அல்ல !

 

financial market structure india

 

 

பங்குச்சந்தை அமைப்பு ( Stock Market Exchange ):

 

பங்குச்சந்தையை  சந்தைப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களின்  நலனை  பாதுகாத்தல், பட்டியலிடப்படும்  நிறுவனங்களை  ஒழுங்குமுறைப்படுத்துதல்  போன்றவற்றை  SEBI (Securities and Exchange Board of India ) என்ற  ஒழுங்கு முறை ஆணையம்  நிர்வகிக்கிறது. இந்தியாவில் நிறைய  பங்குச்சந்தைகள்  இருப்பினும், இரண்டு  பங்குச்சந்தைகள்  மட்டும்  பெரும்பாலும்  பரவலாக்கப்பட்டுள்ளன.

 

  • NSE (National Stock Exchange) – தேசிய  பங்குச்சந்தை

 

  • BSE (Bombay Stock Exchange) – மும்பை  பங்குச்சந்தை

 

NSE – இந்தியாவிலுள்ள முன்னணி பங்குச்சந்தை. 2000 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

 

BSE – ஆசியாவின் முதல் மற்றும் மிக  பழமையான  பங்குச்சந்தை  ( Since 1852 ). உலகளவில்  முதல்  பத்து  இடத்தில் இருக்கும்  மிகப்பெரிய  பங்குச்சந்தை  ஆகும். 5000 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.   மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு 4485 பில்லியன் டாலராகும் (ரூ. 4,48,500 கோடிகள்). உலகின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்காவின் NYSE (New york Stock Exchange) – (20 லட்சம் கோடி டாலர்) உள்ளது.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

 

 

பங்கு தரகர் (Stock Broker):

 

பங்கு தரகர் என்பவர் SEBI ஒழுங்குமுறை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட (அங்கீகரிக்கப்பட்ட) ஒரு தரகு நிறுவனம். இந்த பங்கு தரகர் தான் பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு பாலமாக உள்ளார். பங்குச்சந்தையில் நாம் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றால், பங்கு தரகர் இல்லாமல் வாங்க முடியாது. நமக்கு தேவையான பங்கை வாங்க மற்றும் விற்க இவர் மூலமே முடியும். பங்கு தரகராக பதிவு செய்யும் நிறுவனம் கோடிகளில் சொத்து மதிப்பையும் (Networth) கொண்டு, பங்குச்சந்தை அமைப்புக்கு லட்சங்களில் கட்டணங்களை(Fees and Deposits) செலுத்த வேண்டும்.

 

பங்கு தரகர் என்பவர் Trading Member என்றும் சொல்லப்படுவார். இவரிடம் தான் நீங்கள் பங்கு வர்த்தக கணக்கை (Trading Account) ஆரம்பிக்க வேண்டும்.

 

முதலீட்டாளர் (Investor):

 

முதலீட்டாளர் என்பவர் தனது மூலதனத்திற்கு,  எதிர்பார்த்த நிதி சார்ந்த வருவாயை முதலீடு மூலம் செயல்படுத்துபவர். முதலீட்டாளர் தான் எதிர்பார்த்த வருவாய்க்காக பல முதலீட்டு சாதனங்களை (Investment Products) அறிந்து மற்றும் ஆராய்ந்து முடிவெடுப்பார். அவர் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வார். முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை (Risk Management) உணர்ந்து, ஒரு மதிப்புமிக்க முதலீட்டாளராக இருப்பார்.  – Value Investor

 

சந்தை மூலதனம் (அ) மதிப்பு (Market Capitalisation):

 

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் மதிப்பு. நிறுவனத்தின் மொத்த பங்குகளை, பங்கு ஒன்றின் விலையால் பெருக்கினால் கிடைக்கும் மதிப்பு தான் சந்தை மூலதனம் (Market Cap)

 

Rs. 100 / share

 

Market cap = 100 (Share Price)  X 10,00,000 (No. of shares) = 100,000,000  ( 10 கோடி)

 

முக மதிப்பு (Face Value):

 

ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Primary Market) போது, ஒரு பங்கிற்கான மதிப்பு தான் முக மதிப்பு (Face Value).

 

Face value = Rs. 10 / share.

 

சில நிறுவனங்கள் தங்கள் முகமதிப்பிலேயே பங்குகளின் விலையை நிர்ணயிக்கும். இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் தொழிலின் பாரம்பரியம் மற்றும் மதிப்பின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கும். அவை முக மதிப்பை விட விலை அதிகமாக இருக்கும். இதனை Premium price என்பர்.

 

Market Price (with premium) = Rs. 50 / share (Face value – Rs. 10 /share)

 

பொதுவாக, நிறுவனங்கள் முக மதிப்பு அடிப்படையிலே முதலீடுகளை திரட்டும். ஆனால் ஒரு பங்கின் விலை Premium price ல் வரலாம்.

 

புத்தக மதிப்பு (Book Value):

 

ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு தான் அதன் புத்தக மதிப்பு.  புத்தக மதிப்பை ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு எனவும் சொல்லலாம்.

 

Book Value = Total Assets – Intangible Assets – Liabilities

 

நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பை அதன் கடன்கள் மற்றும் தொட்டுணுற முடியாத சொத்துகளிலிருந்து(Intangible Assets) கழித்தால் கிடைப்பது புத்தக மதிப்பு. Intangible Assets – Patents, License, Copyright, Goodwill, Software.

 

ஒரு நிறுவனம் ஏதேனும் காரணத்தால் விற்கப்படுமாயின், முதலீட்டாளருக்கு கிடைக்கும் மதிப்பு அல்லது தொகை – புத்தக மதிப்பு. நமது தேநீர் நண்பர் தனது தொழிலை மற்றவருக்கு விற்று விட்டால், கடன்கள் போக மீதி அவருக்கு (பங்குதாரருக்கு) கிடைப்பது.

 

பங்குச்சந்தை குறியீடு (Market Index):

 

பங்குச்சந்தை குறியீடு என்பது பங்குச்சந்தையின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது பிரிவின் அளவீடு ஆகும்.

 

BSE 500 – மும்பை பங்குச்சந்தை 500 ல் உள்ள பட்டியலிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட 500 நிறுவனங்களின் சந்தை மூலதன (Market Cap) சராசரி மதிப்பு தான் அதன் குறியீடு.

 

S & P BSE – 500:  Index value – 14,500

 

Nifty 50 – 10,400

 

Nifty SML 100 Free – 8480

 

S & P BSE Capital Goods – 19,220

 

சென்செக்ஸ் ( BSE Sensex):

 

இது மும்பை பங்குச்சந்தையின் குறியீடு (Sensitive Index – Sensex). இந்த குறியீட்டின் கீழ் மொத்தம் 30 பட்டியலிடப்பட்ட  நிறுவனங்கள் உள்ளன. இந்த 30 நிறுவனங்களின் தினசரி சராசரி சந்தை மதிப்பை கொண்டே குறியீடு இயங்கும். இதே போல Small Cap, Mid Cap மற்றும் ஒவ்வொரு தொழில் துறைகளுக்கும் (Sector) என பல்வேறு குறியீடுகள் உள்ளன. ஒரு குறியீட்டின் கீழ் அதே நிறுவனங்கள் தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அதன் சந்தை மதிப்பை பொருத்து குறியீடுகள் மாற்றப்படலாம்.

 

உதாரணத்திற்கு BSE: Sensex 30 உள்ள XYZ நிறுவனத்தின் வர்த்தக சந்தை மதிப்பு குறைந்தால் அந்த நிறுவனம் வேறு ஏதேனும் குறியீடுகளுக்கு மாற்றப்படலாம். அதற்கு பதில் BSE: Sensex 30 ல் மற்றொரு நிறுவனம் சேர்க்கப்படும்.

 

நிப்டி (Nifty):

 

இது தேசிய பங்குச்சந்தையின் குறியீடு (NSE Fifty). இந்த குறியீட்டில் நன்றாக செயல்படும் மொத்தம் 50 நிறுவனங்கள் உள்ளன. 50 நிறுவனங்களின் தினசரி சராசரி வர்த்தக மதிப்பை பொருத்து குறியீடு எண் மாறும். BSE Sensex ல் சொன்னது போல இவற்றிலும்  பல குறியீடுகள் உள்ளன.

 

இரண்டு குறியீடுகளுக்கும் இடையே வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டும் இரு வேறு பங்குச்சந்தைகள் – அவ்வளவு தான்.

 

 

பொதுவாக மும்பை பங்குச்சந்தையை விட, தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகமாக நடைபெறும். தேசிய பங்குச்சந்தையை காட்டிலும் மும்பை பங்குச்சந்தையில் நிறுவனங்கள் அதிகம்.

 

 

நாம் மேலே சொன்ன சில வரையறைகள் மூலம் பங்குச்சந்தை அடிப்படையை தெரிந்து கொள்ளலாம்.  இதனை தொடர்ந்து வரும் வகுப்பில், பங்குச்சந்தையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நிதி காரணிகளை (Financial Ratios or Factors) பார்ப்போம்.

 

கற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0

 

கற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0

 

Stock Market –  Fundamental Analysis – Learning Course

பங்குச்சந்தை  –  அடிப்படை  பகுப்பாய்வு கற்றல் வகுப்புக்கு  வரவேற்கிறோம்.

 

கடந்த இரு வகுப்புகள் என்ன சலிப்பாக இருந்ததா ?  🙂

 

என்ன வெறும் கதையாக சொல்லி விட்டு போகீறாரே, அடிப்படை பகுப்பாய்வு என்பது  எங்கே என நீங்கள் கேட்பதுண்டு. கடந்த இரண்டு வகுப்புகள் நமக்கு பணத்தை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தவே…

 

பணம் எவ்வாறு செயல்படுகிறது, வளர்கிறது மற்றும் மாறுபடுகிறது; அது நம்  வாழ்வில் எப்படி உதவுகிறது, பணவீக்கம் என்றால், முதலீட்டில் பங்குச்சந்தையின் பங்கு மற்றும் அதன் தொழில் அமைப்பு ” போன்றவற்றை அறியாமல் நாம் அடுத்த செயலாக்கத்திற்கு நகர முடியாது. பணத்தை நாம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; ஆனால் சம்பாதித்த பணத்தை கொண்டு செல்வத்தை சேர்ப்பதும், அதன் வளர்ச்சியை தக்க வைப்பதும், உங்கள் பணம் உங்களுக்காக உழைத்தால் மட்டுமே முடியும்.  நமது கல்வி பொருளாதாரத்தை பற்றி அவ்வளவாக சொல்லி கொடுக்காததால், நாம் இன்று பொருளாதாரரீதியாக அல்லல்படுகிறோம்.

 

ஏழை – பணக்காரனின் ரகசியம்:

 

” குறுகிய தூரம் செல்பவர்கள் வேகமாக செல்வதும், நெடுந்தூரம் பயணிப்பவர்கள் நிதானமாக செல்வதும் சாலைகளின் ரகசியங்கள்…”

அது தான் ஏழை – பணக்காரனின் ரகசியமும் !

 

 

இந்த வகுப்பு தான், நமது அடிப்படை பகுப்பாய்வுக்கான அடித்தளமாக உள்ளது. வாருங்கள் அலசுவோம்…

 

நாம் சுற்றுலா சென்றாலும் சரி, வேலைக்கு சென்றாலும் சரி, திட்டமிடல் என்பது தனிமனிதருக்கும், குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கும் பொதுவானது தான். திட்டமிடல் என்பது கணிதம் சார்ந்ததாக தான் இருக்கும். இந்த அடிப்படை கணிதத்தை நாம் சரியாக கையாளாததால் தொழில் மற்றும் குடும்பத்தில் நிதிச்சுமை ஏற்படுகிறது. இது  நம் பங்கு முதலீட்டிற்கும் பொருந்தும். ஒரு சிறந்த குடும்பத்தை பொருளாதாரரீதியாக நாம் அலசினால், அது அந்த குடும்பத்தின் வரவு-செலவில் தான். அதே  போல, ஒரு தொழிலின் மதிப்பு என்பது அதன் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பில் உள்ளது. வருமானம் ஈட்டியாதா, இனி வாய்ப்புள்ளதா என கண்டறிவதே வரவு-செலவின் நோக்கம். அதை நாம் எப்படி கண்டறியலாம் ?

 

அதன் நிதி அறிக்கையில் தான் (தொழிலின்  வரவு- செலவு, லாப- நட்டம்)

 

இதற்கு நாம் ஒரு கணித மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நமது பள்ளிக்கால கணக்கே போதும். சில அடிப்படை விஷயங்களை மட்டும் புரிந்து விட்டு செல்வோம்.

 

நிதி அறிக்கைகள் – துளிகள் (Learn Financial Statements):

 

இருப்புநிலை அறிக்கை  ( Balance Sheet ):

 

இருப்பு நிலை அறிக்கை என்பது ஒரு தொழிலின் சொத்துக்கள், கடன்கள் மற்றும்   பங்குதாரர்களின்  பங்கு ஆகியன அடங்கிய  ஒரு  நிதி  அறிக்கை  ஆகும். ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும்  கடன்கள் எவ்வாறு உள்ளது, பங்குதாரர்கள் எவரும் இருந்தால் அவர்களின் பங்கு முதலியவற்றை இந்த அறிக்கை எளிமையாக விளக்கும். இருப்பு நிலை அறிக்கை பொதுவாக கீழ்கண்டவாறு அமையும்:

 

சொத்துக்கள் = கடன்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்கு.

 

Assets = Liabilities and Shareholders’ Equity

 

assets and liabilities

 

மேலே உள்ள இரண்டும் (Sources and Applications) சமமாக இருக்க வேண்டும். Sources ல் உள்ள Liabilities என்பது உங்கள் கடன் சார்ந்ததாக இருக்கும். நீங்கள் உங்கள் தொழிலை ஆரம்பிக்க வங்கியில் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால் அந்த கடன் Liabilities ல் அடங்கும். உங்கள் தொழிலில் உங்கள் சொந்த முதலீடு, அதாவது நீங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை தொழிலுக்காக பயன்படுத்தியிருந்தால் அது Equity ஆகும்.

 

Equity என்பது தொழிலுக்கான உங்கள்  சொந்த முதலீடு, Liabilities ல் நீங்கள் பெற்ற கடன் அல்லது  மற்றவர்களிடம் பெற்ற கடனாகும்.

 

உங்கள் தொழிலுக்காக நீங்கள் ஏதேனும் பொருட்கள், இயந்திரங்கள் வாங்கியிருந்தால் அது Assets ல் அமையும். நீங்கள் கொள்முதல் விற்பனையாளர்கள் யாருக்கும் முன்தொகை ஏதும் கொடுத்திருந்தால் அவையும் Assets ல்  இருக்கும்.

 

பொதுவாக, Sources என்பது பணம் எப்படி வருகிறது மற்றும்  Applications என்பது பணம் எவ்வாறு செல்கிறது என்பதை சுருக்கமாக சொல்கிறது.

 

Sources உள்ள Liabilities ன் பங்கை குறைவாக  இருந்தால் நல்லது. அதாவது உங்கள் கடன்கள் (Liabilities) அதிகமாக இருந்தால் மீண்டும்  செலுத்த வேண்டிய ஒன்று. அதனால் உங்கள் லாபத்தை பொறுத்து உங்கள் கடனும் இருத்தல் நலம். இது ஒவ்வொரு தொழிலுக்கும் மாறுபடும். சில தொழில்களை நாம் பெரும்பாலும் கடன் வாங்கி  (Credit) தான் செய்ய முடியும்.

 

பங்கு மூலதனம் (Share Capital):

 

நாம் ஏற்கனவே சொன்னது போல, Equity என்பது தொழில் அல்லது பங்கு உரிமையாளர்களுக்கு சொந்தமானது. தொழிலை தொடங்கியவர்கள் முதலீடு செய்திருந்தால் அது Capital (மூலதனம்) எனப்படும்.

 

நாம் செய்த முதலீடு போக, பின்னர் பெறப்படும் லாபங்கள் Reserves (கையிருப்பு) எனப்படும். ஒரு நிறுவனத்தில் கையிருப்பு அதிகமாயிருந்தால், அது லாபத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என அர்த்தம். எதிர்காலத்தில் தொழிலில் ஏதேனும் மந்த நிலை ஏற்பட்டாலும், இந்த Reserves ஐ கொண்டு சமாளித்து விடலாம். இந்த Reserves தொகை பங்கு உரிமையாளர்களுக்கு சொந்தமானது எனலாம்.

 

Current Liabilities and Current Assets:

 

கடன்கள் என்பது நாம் செலுத்த வேண்டிய தொகை. இந்த கடன் தொகையை நாம் இரு பிரிவாக ஆராயலாம். நம் நண்பர் தனது தேனீர் கடை தொழிலுக்கு ரூ. 1,00,000 /- கடனாக பெற்றுள்ளார் என வைத்து கொள்வோம். கடனில் நாம் நாளை அல்லது அடுத்த மாதம் செலுத்த வேண்டிய தொகை இருந்தால் அது Current Liabilities. அடுத்த வருடம் தான் இந்த கடன் தொகை செலுத்த வேண்டியிருப்பின் அது, Non-current Liabilities.

 

நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை பெரும்பாலும் Current Liabilities ஆக இருந்தால், உங்களுக்கு அந்தளவு வருமானம் வருகிறதா என பார்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் Current Liabilites ஐ மட்டுமே செலுத்தி கொண்டிருந்தால் லாபம் பார்ப்பது குறைவாக அமையும். இவற்றை கவனத்தில் கொள்ளவும்.

 

Current Liabilities – Bank Interest Payable, Rent, Tax, Salary, Dividends.

 

நீங்கள் யாருக்காவது உங்கள் தொழிலுக்காக முன்பணம் செலுத்தியிருந்தால் (Suppliers), நிலம்,  இயந்திரங்கள் ஏதும் வாங்கியிருந்தால் அவை Non-current Assets எனப்படும். இவற்றை நீங்கள் உடனடியாக பெற முடியாது.

 

தொழிலில் உங்கள் வாடிக்கையாளர்கள் எவரும் பணம் செலுத்த உள்ளவர்கள், பாக்கி பணம் உடனடியாக செலுத்த வேண்டியவர்கள் – Current assets எனப்படும்.

 

Current Assets – Cash, Goods Sales, Short term deposits

 

Working Capital:

 

Working Capital = Current Assets – Current Liabilities

 

Current Assets – 100 ( சில  காலங்களில்  பெற வேண்டிய தொகை )
Current Liabilities – 80 ( இன்னும்  சில காலங்களில்  செலுத்த வேண்டிய பணம்
Working Captial = ( 100 – 80) = 20 (சில காலங்களில் நாம் பணமாக பெறுவது.

 

Working Capital அதிகமாயிருந்தால் ஒரு தொழிலுக்கு ஆரோக்கியமானது. Working Capital தொகை எதிர்மறையாக (Negative) சென்றால், நாம் சம்பாதித்ததை விட கொடுப்பது தான் அதிகமாக இருக்கும். ஆதலால் நாம் பணத்தை பெறுவதற்கான காலங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

லாப – நட்ட அறிக்கை (Profit and Loss Statement ):

 

ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட காலத்தில் இருந்த வரவு, செலவு மற்றும் லாபங்கள் அல்லது நஷ்டங்கள். குறிப்பிட்ட காலம் என்பது காலாண்டு, ஒரு முழு நிதி ஆண்டு என அமையலாம்.

 

லாப – நட்ட அறிக்கை மூலம் ஒரு நிறுவனத்தின் நிதி சூழ்நிலையை அறிந்து கொள்ளலாம். தொழிலின் அனைத்து செலவினங்களையும், மொத்த வருவாயிலிருந்து கழித்தால் கிடைக்கும் லாப – நட்ட செயல்பாட்டை அறியலாம்.

 

Profit and Loss Statement: (For the Period Ended 2017 – 2018 ):

 

profit and loss statement example

 

Sales (விற்பனை):

 

உங்கள் தேநீர் நண்பர் தனது கடையில் இன்று 1000 தேநீரை விற்றிருந்தால் (விலை- ரூ. 10 / Tea) அவரின் அன்றைய மொத்த தேநீர் விற்பனை – ரூ. 10,000 /- (1000 X 10 ). ஒரு தொழிலின் வருமானம் விற்பனையை சார்ந்து தான் உள்ளது. அவை ஒரு பொருள் அல்லது சேவையின் விற்பனையாக இருக்கலாம்.

 

Depreciation (தேய்மானம்):

 

ஒரு சொத்தின் அல்லது பொருட்களின் தேய்மான மதிப்பு குறைவு. நம் தொழிலில் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளுக்கும் நாளடைவில் மதிப்பு குறையும். அதனை தேய்மானம் எனலாம். நாம் வாங்கிய தயாரிப்பு இயந்திரம், கணினி ஆகியவை பிற்காலத்தில் மதிப்பு குறைந்து இருந்தால், அதனை நாம் பராமரிப்பு செலவு செய்து அல்லது அதற்கு பதிலாக வேறு ஒரு புதிய பொருட்களை வாங்க முன் வருவோம். அதற்கான செலவாக தேய்மான செலவு எனலாம். தேய்மான செலவை நமது வருமானத்தில் இருந்து நாம் கழித்து கொள்ளலாம்.

 

ROI (Return on Investment) and ROE (Return on Equity):

 

உங்கள் நண்பர் ரூ. 5,00,000 /- ஐ முதலீடு செய்து தொழில் செய்து வருகிறார். அவர் தனது முதல் வருடத்தின் முடிவில் ரூ. 75,000 /- ஐ லாபமாக ஈட்டியுள்ளார். அவருடைய அந்த வருட ROI =  ( 75000 / 500000 X 100) = 15 % உங்கள் முதலீட்டின் மீதான வருமானம். இந்த ரூ. 5,00,000 /- முதலீடு அவரின் மொத்த முதலீடாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் கடனால் பெற்றிருக்கலாம். ஆனால் மொத்த தொழில் முதலீட்டுக்கே இந்த ROI வருமானம்.

 

ROE:  உங்கள் நண்பரின் தொழிலில் அவருடைய சொந்த முதலீடு (Equity) – ரூ. 2,00,000 மட்டுமே ( 2,00,000 / 5,00,000). மற்றவை நண்பர்கள் மற்றும் வங்கி கடனாக பெற்றவையாக வைத்து கொள்வோம். இப்போது நண்பரின் ROE = ( 75000 / 200000 X 100 = 37.5 %  இதன் அர்த்தம், நண்பர் தனது ஒவ்வொரு 100 ரூபாய் முதலீட்டிற்கும்,  37.50 ரூபாய் வருமானம் பார்க்கிறார்.

 

ROI என்பது மொத்த முதலீட்டின் மீதான வருமானத்தை காட்டுகிறது; ROE என்பது தொழிலின் ஒரு குறிப்பிட்ட பங்குதாரரின் வருமானத்தை வெளிப்படுத்துகிறது.

 

அடுத்த வகுப்பில் அடிப்படை பகுப்பாய்வுக்கான காரணிகளை ஆராயலாம்.

 

 

 

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Feb 2018

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Feb 2018

  • மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) தனது 2018 க்கான  நிதி கொள்கை குழுவில், வங்கிகளுக்கான வட்டி விகித தகவலை இன்று (07.02.2018) வெளியிட்டது.

 

  • சென்ற நிதி கொள்கையில் வெளியிட்ட  குறுகிய கால கடனுக்கான ரெப்போ (Repo Rate) விகிதத்தையே, இம்முறையும் அறிவித்தது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 6 % ஆக தொடரும் எனவும், அதில் மாற்றமில்லை என வெளியிட்டுள்ளது.

 

            What is a Repo Rate ? ( வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம் )

 

  • பணவீக்க மதிப்பீட்டையும் ஜனவரி – மார்ச் (Jan – Mar, 2018) காலத்திற்கு 5.1 % ஆக இருக்கும் என திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர், 2018 ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்க மதிப்பு 4.2 – 4.6 % இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  • ரிவர்ஸ் ரெப்போ (Repo Rate) விகிதத்திலும் மாற்றமில்லை. ஏற்கனவே  உள்ள 5.75 % தொடரும்.

 

  • ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்கள் கூறும் போது, ‘ கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் பட்ஜெட் 2018 ல் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை (Minimum Selling Price – MSP) போன்ற தகவலை அடுத்து குறுகிய காலத்தில் பணவீக்கம் உயரும் ‘ என்றார்.

 

  • 2018 ம் நிதி ஆண்டுக்கான  பொருளாதார வளர்ச்சியையும் குறைத்து 6.6 % ஆக மதிப்பிட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் 7.2 % ஆக இருக்கும் என மதிப்பீட்டு முறையில் கூறியுள்ளது.

 

  • உலகளாவிய நிதிச்சந்தையில் ஏற்பட்டிருக்கும் ஏற்ற தாழ்வும், அமெரிக்க மத்திய வங்கி (US Federal)  நாணய கொள்கையின் இயல்பு நிச்சயமற்றதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

 

நீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடு

நீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடு

Long Term Capital Gains Tax(LTCG) – Effect from April 1, 2018

 

  • நீண்ட கால மூலதன ஆதாய வரி(LTCG) கணக்கீடு ஜனவரி 31, 2018 க்கு பிறகான பங்கு விற்பனைக்கு என பொது பட்ஜெட் 2018 ல் அறிவிக்கப்பட்டது. தற்போது இவற்றில் மத்திய அரசின் நிதி அமைச்சகம் மாற்றத்தை ஏற்படுத்தி, விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் 1, 2018 (Effect from April 1, 2018) பிறகான பங்கு விற்பனைக்கு தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • நீண்ட கால மூலதன ஆதாய வரி (10 % Tax) ஏப்ரல் 1, 2018 முதல் பங்கு மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்.

 

  • ஜனவரி 31, 2018 க்கு முன்பு வாங்கியிருந்த பங்குகளுக்கு, அன்றைய தேதியில் (January 31 ) இருந்த பங்கின் அதிகபட்ச விலையை கொண்டு நீண்ட கால மூலதன ஆதாய வரி கணக்கிடப்படும் எனவும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மற்றும் அதன் லாபத்திற்கு வருமான வரிச்சட்டம் – Exemption on Section 10 (38) of Income Tax Act  கீழ் விலக்கு அளிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

  • பரஸ்பர நிதிக்கும் ஜனவரி 31, 2018 ல் அதன் நிகர சொத்து மதிப்பு (Net asset value -NAV) அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

  • ஜனவரி 31, 2018 வரையிலான பங்கு மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி இல்லை. மார்ச் 1, 2018 பிறகான பங்கு லாபத்திலும் ரூ. 1 லட்சம் வரை விலக்கு உள்ளது.

 

  • பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான நீண்ட கால  மூலதன  நஷ்டத்திற்கு  விலக்கு பெற  முடியாது. ஆனால் ஏப்ரல் 1 முதலான  பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அனுமதிக்கப்படும்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக  மதுரை

 

www.varthagamadurai.com

 

நீண்ட கால மூலதன ஆதாய வரி – விளக்கம் – பொது பட்ஜெட் 2018

நீண்ட கால மூலதன ஆதாய வரி – விளக்கம் – பொது பட்ஜெட் 2018

Long Term Capital Gains Tax (LTCG)- Explained – Budget India 2018

 

மத்திய அரசின் பொது பட்ஜெட்  2018 கடந்த பிப்ரவரி 1 ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அருண் ஜெட்லீயின் தொடர்ச்சியான ஐந்தாவது பட்ஜெட்டாகவும் 2018 பட்ஜெட் இருந்தது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் பல விஷயங்கள் வைக்கப்பட்டாலும், அன்றைய தின பங்குச்சந்தையை ஒரே ஒரு விஷயம் மட்டும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

பங்குச்சந்தை பங்குகள் (Stocks /Equity) மற்றும் பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் (Equity oriented mutual funds) நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 10 % வரி என்பது அன்றைய சந்தையை இறக்கத்திற்கு நகர்த்தியது. பட்ஜெட் அறிவிப்புக்கு அடுத்த நாள் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 840 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 256 புள்ளிகளும் இறங்கின. (Sensex – 839.91 (-2.34 %), Nifty – 256.30 ( -2.33 %) as on Feb 2nd, 2018 ).

 

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்(P. Chidambaram) அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட 2004-05 பட்ஜெட்டில் தான் நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு வரி இல்லை என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் வரி விதிப்பு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2004-05 பட்ஜெட்டுக்கு பின்னர் தற்போது அருண் ஜெட்லீயின் பட்ஜெட்டில் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த 10 % நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பு ஒரு பக்கம் எதிர்மறையாக இருப்பினும், சிறு முதலீட்டாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தை பெரிதும் பாதிக்காது எனலாம். 10 % வரி விதிப்பு இருந்தாலும் பங்குச்சந்தையின் வருமானம் பொதுவாக பணவீக்கத்தை தாண்டியே உள்ளது. அந்த வகையில் வங்கி வருமானத்தை காட்டிலும் பங்குச்சந்தை வருமானம் வரிக்கு பின்னரும் அதிகமாக தான் இருக்கும். இதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள், SIP (Systematic Investment Plan) முறையில் முதலீடு மேற்கொள்பவர்கள் கவலை கொள்ளாமல் தொடர்ந்து முதலீடு செய்யவும். வரி விகிதங்கள் எதிர்காலத்தில் மாற்றப்படலாம். நமது நிதி இலக்குகளுக்கான முதலீடே நமக்கு முக்கியம்.

 

Long Term Capital Gains (LTCG) Tax :  10 %

 

  • பங்குகள்  மற்றும்  பங்குச்சந்தை  சார்ந்த பரஸ்பர நிதிக்கு 10 % நீண்ட கால  மூலதன  ஆதாய  வரி விதிப்பு  என்பது கடந்த 2004-05 நிதியாண்டிலிருந்து இல்லை. பங்குகளுக்கு நீண்ட  மூலதன  ஆதாயம்  என்பது ஒரு வருடத்திற்கு (365 Days) மேற்பட்ட முதலீட்டிற்கே பொருந்தும். நீங்கள்  வாங்கிய  பங்குகளை, வாங்கிய  தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு விற்றால் அதற்கு, குறுகிய கால மூலதன ஆதாயம்(Short Term Capital Gains – STCG) என பெயர். இந்த குறுகிய கால ஆதாயத்திற்கு வரி விதிப்பு 15 % ஆக இருக்கும். வருமான வரி  உயர் விகிதத்தில் உள்ளோர் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.

 

  • இந்த பட்ஜெட் 2018 அறிவிப்பின் படி நீங்கள் வாங்கிய (அ) வாங்கும் பங்கினை ஒரு வருடத்திற்கு பின் விற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 10 % (பணவீக்கம்  சாராமல் – Without Indexation) செலுத்த வேண்டும். வரி விதிப்பு சில விதிமுறை உட்பட்டும் உள்ளது. அதாவது,

 

a) நீங்கள் வாங்கிய பங்கு ஜனவரி 31 ம் தேதிக்கு மற்றும் அதற்கு முன்னதாக இருந்தால், வரிச்சட்ட விலக்கு(Grandfathered Capital Gains Tax free) உண்டு. வரிச்சட்ட விலக்கு போக, நீங்கள் ஈட்டிய லாபத்தில் ரூ. 1 லட்சம் வரை விலக்கும் (upto 1 lakh exemption) உண்டு. அதற்கு போக உள்ள லாபத்திற்கு தான் நீங்கள் 10 % நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.

b)  நீங்கள் வாங்கிய பங்கு ஜனவரி 31, 2018 ம் தேதிக்கு பின்னர் எனில், உங்களுக்கு

Grandfathered (Capital Gains) Tax free விலக்கு அளிக்கப்படாது. நீங்கள் ஒரு வருடத்திற்கு

பிறகு விற்கும் பங்கிற்கு ஈட்டிய லாபத்தில் ரூ. 1 லட்சம் விலக்கு போக,

மீதத்திற்கு 10 % வரி செலுத்த வேண்டும்.

(Updated on changes – 05/02/2018:  நீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடு. தற்போது இவற்றில் மத்திய அரசின் நிதி அமைச்சகம் மாற்றத்தை ஏற்படுத்தி, விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் 1, 2018 (Effect from April 1, 2018) பிறகான பங்கு விற்பனைக்கு தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. )

 Long Term Capital Gains Tax(LTCG) – Effect from April 1, 2018

இதனை சில உதாரணங்கள் மூலம் விளக்கம் அறிவோம். அட்டவணையை பார்க்க:

 

LTCG tax equity

 

Illustration 1:

 

நீங்கள் ஜூன் 10, 2017 அன்று 10 ரூ. மதிப்புள்ள 10,000 பங்குகளையோ (அல்லது) NAV -10 மதிப்புள்ள 10,000 யூனிட்களையோ வாங்கியிருக்கிறீர்கள்.

 

31, ஜனவரி 2018 அன்று அதன் விலை – ரூ. 20 / Share or unit

 

நீங்கள் வாங்கிய ஒரு வருடத்திற்குள்  விற்றால் குறுகிய கால  மூலதன  ஆதாய  வரி  ( 15 %) செலுத்த  வேண்டும். மாறாக நீங்கள் வாங்கிய  தேதியிலிருந்து  ஒரு வருடத்திற்கு  பின் விற்றால் ( விற்கும் அன்று விலை – ரூ. 35 per share or unit ),

 

உங்கள் முதலீடு  – ரூ. 1,00,000 /- ( 10,000 X 10)

 

விற்ற பின் – ரூ. 3,50,000 /- ( 10,000 X 35)

 

லாபம் =  3,50,000 – 1,00,000  = ரூ. 2,50,000 /-

 

Grandfathered Capital Gains Tax  விலக்கு:

 

ஜனவரி 31, 2018 அன்று – ரூ. 2,00,000 (10,000 X 20). ஜனவரி 31 ம் தேதி வரை உள்ள லாபத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே முந்தைய லாபத்திற்கு வரி எதுவும் இல்லை.  (3,50,000 – 2,00,000 = 1,50,000 /- )

 

பட்ஜெட் 2018 ன் படி மூலதன ஆதாய விலக்கு(Capital Gains exemption) – ரூ. 1,00,000 /-  எனவே,

(1,50,000 – 1,00,000 = 50,000 /-)

 

மீதம் ரூ. 50,000 க்கு 10 % வரி –  ரூ. 5000 /-

 

நீங்கள் செலுத்த வேண்டிய வரி – ரூ. 5000 /-

 

Illustration 2:

 

நீங்கள் செப்டம்பர்  25, 2017 அன்று 10 ரூ. மதிப்புள்ள 10,000 பங்குகளையோ (அல்லது) NAV -10 மதிப்புள்ள 10,000 யூனிட்களையோ வாங்கியிருக்கிறீர்கள்.

 

31, ஜனவரி 2018 அன்று  அதன்  விலை  – ரூ. 25 per share or unit

 

குறுகிய  கால  மூலதன  ஆதாய  வரி  – 15 %

 

ஒரு வருடத்திற்கு பிறகு விற்றால் (விற்கும்  அன்று  விலை – ரூ. 22 per share or unit)

 

உங்கள்  முதலீடு – ரூ. 1,00,000 /- (10,000 X 10)

 

விற்ற பின் – ரூ. 2,20,000 ( 10,000 X 22)

 

லாபம் = ( 2,20,000 – 1,00,000 ) = ரூ. 1,20,000 /-

 

Grandfathered Capital Gains Tax விலக்கு:

 

ஜனவரி 31, 2018 அன்று – ரூ. 2,50,000 (10,000 X 25). ஜனவரி 31 ம் தேதி வரை உள்ள லாபத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே முந்தைய லாபத்திற்கு வரி எதுவும் இல்லை. ( 2,50,000 – 1,00,000 = 1,50,000)

 

இங்கே, ஜனவரி  31, 2018 அன்றைய  விலையை விட, நாம் விற்ற தேதியின் விலை குறைவு ( 25 – 22 = 3). அதனால் நாம் வரி எதுவும் செலுத்த தேவையில்லை.

 

IF Grandfathered Capital Gains > Actual Capital Gains on Sell, then LTCG Tax will be Zero. So, No need to pay tax.

 

Illustration 3:

 

நீங்கள் செப்டம்பர்  25, 2017 அன்று 100 ரூ. மதிப்புள்ள 10,000 பங்குகளையோ (அல்லது) NAV -100 மதிப்புள்ள 10,000 யூனிட்களையோ வாங்கியிருக்கிறீர்கள்.

 

31, ஜனவரி 2018 அன்று  அதன்  விலை  – ரூ. 80  per share or unit

 

குறுகிய  கால  மூலதன  ஆதாய  வரி  – 15 %

 

ஒரு வருடத்திற்கு பிறகு விற்றால் (விற்கும்  அன்று  விலை – ரூ. 110 per share or unit )

 

உங்கள்  முதலீடு – ரூ. 10,00,000 /- (10,000 X 100)

 

விற்ற பின் – ரூ. 11,00,000 ( 10,000 X 110)

 

லாபம் = ( 11,00,000 – 10,00,000 ) = ரூ. 1,00,000 /-

 

Grandfathered Capital Gains Tax விலக்கு:

 

ஜனவரி 31, 2018 அன்று – ரூ. 8,00,000 (10,000 X 80). ஜனவரி 31 ம் தேதி வரை உள்ள லாபத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே முந்தைய லாபத்திற்கு வரி எதுவும் இல்லை. ( 8,00,000 – 10,00,000 )=  [ – 2,00,000 ]  ரூ. 2 லட்சம் நஷ்டம்.

 

உண்மையான லாபம் – ( 11,00,000 – 10,00,000) = ரூ. 1,00,000 /-

 

Grandfathered Capital Gains விலக்கு = ( 8,00,000 – 10,00,000 )=  [ – 2,00,000 ]  ரூ. 2 லட்சம் நஷ்டம்.

 

மூலதன ஆதாய வரி – ( 10,00,000 – நஷ்டம் (or) பூஜ்யம் )  = 10,00,000 /-

 

எனவே உங்களுக்கு மூலதன ஆதாய வரி இல்லை. பட்ஜெட் 2018 ன் படி மூலதன ஆதாய விலக்கு(Capital Gains exemption) – ரூ. 1,00,000  இருப்பதையும்  நினைவில் கொள்ளவும்.

illustration 4:

 

நீங்கள் ஏப்ரல் 15, 2018 அன்று 100 ரூ. மதிப்புள்ள 10,000 பங்குகளையோ (அல்லது) NAV -100 மதிப்புள்ள 10,000 யூனிட்களையோ வாங்கியிருக்கிறீர்கள்.

 

உங்களுக்கு Grandfathered Capital Gains Tax விலக்கு இல்லை.

 

குறுகிய  கால  மூலதன  ஆதாய  வரி  – 15 %

 

ஒரு வருடத்திற்கு பிறகு விற்றால், உங்கள் லாபம் ரூ. 1 லட்சம் போக மீதம் உள்ள தொகைக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி – 10 % செலுத்த வேண்டும்.

 

மேலே விளக்கப்பட்ட 4 உதாரணத்திலிருந்து உங்களுக்கு புரிதல் ஏற்பட்டிருக்கும்.

 

இந்த கட்டுரை சம்மந்தமான, உங்களுடைய  கருத்துக்கள் மற்றும் தகவல்களை இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil