Tag Archives: share market

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

Personal Finance – Survey / Polling

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

 

முதல் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • சேமிப்பு, முதலீடு  – இரண்டும் ஒன்றா ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  சேமிப்பு என்பது வெறுமனே உண்டியலில் பணம் சேர்ப்பது போன்று. அது வளர்ச்சியை பெறுவதில்லை. உதாரணத்திற்கு நமது சேமிப்பு வங்கி கணக்கு போல, பணவீக்கத்தை விட குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும். முதலீடு என்பது வளர்ச்சியையும், தொடர்  வருமானத்தையும் கொடுக்கக்கூடியது. உதாரணமாக நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், தொழிலில் முதலீடு.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 

விளக்கம்: ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனிநபருக்கான சலுகைகள், தொழிலுக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை பட்ஜெட்டில் விவாதிக்கப்படும். நமது வரவு-செலவை பாதிக்கும் காரணிகள் பட்ஜெட்டில் இடம்பெறும், அவை நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையலாம்.

 

  • உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?

 

விளக்கம்: அரசின் பட்ஜெட்டை போலவே ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டும் அவசியமாகும். வரவு-செலவு அறிக்கையை முறையாக நாம் பராமரிப்பதால் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்க பட்ஜெட் திட்டமிடல் உதவும். நமது தளத்தில் பட்ஜெட் திட்டமிடல் எவ்வாறு அமைப்பது என்பதை எளிமையாக விளக்கியுள்ளோம் –

 

பட்ஜெட் திட்டமிடலை உருவாக்குவது எப்படி ?

 

  • முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?

 

விடை: பணத்தை பெருக்க (Capital Appreciation)

 

விளக்கம்: முதலீடு என்பது பொதுவாக வளர்ச்சியையும், அதனை சார்ந்து தொடர் வருமானத்தையும் தருவதாக இருக்க வேண்டும். நிலம், பங்குகள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றை முதலீடாக சொல்லலாம்.

 

  • காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: காப்பீடு என்பது ஒரு முதலீட்டு சாதனமாக கருத முடியாது. காப்பீட்டின் நோக்கமே எதிர்பாராத நிதி இழப்பினை சரி செய்வதற்கான பாதுகாப்பு அம்சம் தான். இதனை ஒரு முதலீடாக எடுத்து கொள்ள கூடாது. முழுமையான காப்பீடு திட்டத்திற்கு டேர்ம் பாலிசிகளை வாங்கி கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனங்களில் விற்கப்படும் காப்பீட்டுடன் முதலீடு என்று கூறப்படும் சாதனங்கள் குறிப்பிடத்தக்க வருவாய் தராது.

 

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?
  2. நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?
  3. பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?
  4. நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?
  5. பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

குறிப்பு:

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 2

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

பட்ஜெட் 2018 க்கு பிறகு பங்குச்சந்தை முதலீடு எப்படி ?

பட்ஜெட் 2018 க்கு பிறகு  பங்குச்சந்தை  முதலீடு  எப்படி ?

 

Share Market after impact of Budget 2018 ?

 

சமீபத்தில் (09.02.2018)  மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில்(Fortune Pandiyan Hotel)  நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான கூட்டம் – தேசிய பங்குச்சந்தையின் கூட்டுடன் கோயம்புத்தூர் கேப்பிடல் நிறுவனம் (Coimbatore Capital) சார்பில் நடைபெற்றது.

 

 

முதலீட்டாளர் கூட்டத்தில் பட்ஜெட் 2018 க்கு பிறகான பங்குச்சந்தை தாக்கம் குறித்து  அலசப்பட்ட சில விஷயங்கள்:

 

 

நிறுவனர்  திரு. D. பாலசுந்தரம் (Coimbatore Capital, Founder and Director of Coimbatore Stock Exchange Limited ) பேசுகையில்…

 

  • பொதுவாக  பட்ஜெட்டின்  தாக்கம் 10 வருடங்களுக்கு  பிறகு தான்  ஏற்படும், உடனடியாக  அதன்  தாக்கம்  நடைபெறாது. உதாரணத்திற்கு மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டமும் பல வருடங்களுக்கு பிறகு தான் வெற்றியடைந்துள்ளது. அது போல, பட்ஜெட்டில் அரசு அறிவிக்கும் விஷயங்கள் மெதுவாக வளரலாம் என்றார்.

 

  • நடப்பு கணக்கு பற்றாக்குறை (Fiscal Deficit) – வங்கி வட்டி விகிதத்திலும், பணவீக்கத்திலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

 

  • வட்டி விகிதம் உயர்ந்தால், முதலீட்டாளர்கள் பத்திர சந்தை (Bond Market) நோக்கி செல்வார்கள். அதே நேரத்தில் வட்டி விகித உயர்ந்தால், நிறுவனத்தின் லாபம் குறையலாம்; அதன் பாதிப்பு பங்குச்சந்தையில் வெளிப்படும். எனவே குறைந்த வட்டி விகிதம் கடன் பெறுபவர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும்.

 

  • கொள்முதல் மேலாளர் குறியீடு (Purchasing Manager’ Index – PMI) என்பது ஒரு உற்பத்தி துறையின் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியம் மற்றும் அவசியமான அடையாளம். இந்த குறியீடு தற்போது நன்றாக உள்ளது. இது சந்தைக்கும் நல்ல விஷயம்.

 

  • பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாத துறைகள் – பாதுகாப்பு (Defence), அரசு ஊழியர்களின் சம்பள விகிதம்.

 

  • வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், வங்கி முதலீட்டை கடன் சந்தையில் (Bond / Debt Market) செய்யலாம்.

 

  • பொருள் சந்தையும் (Commodity Market), பங்குச்சந்தையும் இணைக்கப்படலாம். இதன் நிகழ்வு இந்த வருடத்தின் கடைசியில் நடைபெறலாம்.

 

  • வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வரி விகிதங்கள் குறைக்கப்படலாம் என கூறினார் (If Tax Payers will increase, tax rate may decrease).

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

 

தேசிய பங்குச்சந்தை சார்பில் துணை மேலாளர் திரு. சங்கமேஸ்வரன் பேசுகையில்,

 

  • கடன்  வாங்கி, பங்குச்சந்தையில்  ஈடுபட  வேண்டாம் (Don’t borrow and invest).

 

  • பங்குச்சந்தையை பற்றி  புரியாதவர்கள் பங்குச்சந்தையில்  முதலீடு  செய்ய  வேண்டாம். அவர்களுக்காக  வங்கி  மற்றும் அஞ்சலக  திட்டங்கள்  உள்ளன. பரஸ்பர  நிதியிலும் (Mutual Funds) முதலீடு  செய்யலாம் (Don’t invest, if you are not aware of Share market).

 

  • உங்களுக்கான  தேவைகள்  மற்றும்  நிதி  இலக்குகளை  சார்ந்து  சந்தையில்  முதலீடு  செய்யுங்கள் (Stick to Financial goals).

 

  • Asset Allocation  ஐ புரிந்து சரியாக முதலீடு செய்யுங்கள்.

 

  • பங்குச்சந்தையில் உங்கள் பரிவர்த்தனையை சரி பாருங்கள் மற்றும் உங்களுக்கான ஒப்பந்த சீட்டு (Digital Contract Note) தகவல்களை முழுவதுமாய் படித்து பாருங்கள்.

 

  • பங்குச்சந்தை தரகரிடம் நீங்கள் செலுத்திய பணம் மற்றும் பண பாக்கி சரியாக உள்ளதா என பார்த்து கொள்ளுங்கள் என்றார்(Verify settlement of funds and securities).

 

இறுதியாக, SEBI பதிவு பெற்ற ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர்  கார்த்திகேயன் ( SEBI Regd. Research Analyst) அவர்கள் பேசும் போது,

 

  • ஒரு  முதலீட்டாளரின்  ரிஸ்க்  என்பது  பணம்  மற்றும்  வாய்ப்பில் (Money and Opportunity)  தான்  உள்ளது. அதனால்  பணத்தை  கொண்டு  சரியான  வாய்ப்பை  நோக்குங்கள். இரண்டையும்  இழந்து  விட  கூடாது.

 

  • ஒரு  நீண்ட  கால  முதலீட்டாளர் மூன்று  நிலைகளை (Low Return, Zero Return, Negative Return)  கடந்து  தான்  செல்வத்தை  பெருக்க  முடியும். அதனால் சந்தையில்  பொறுமை  அவசியம்.

 

  • LTCG Tax  இருந்தாலும், சந்தையில்  கிடைக்கும்  வருமானம்  பணவீக்கத்தை விட  அதிகம்  தான்.

 

  • பட்ஜெட்  2018 க்கு  பின், சந்தை  இறக்கம் ஒரு  தற்காலிகமே; தொழில்துறை  முன்னேறுவதற்கான  காலங்கள்  அடுத்த  5 – 10 வருடங்கள். அதனால்  சந்தை நன்றாக  தான்  இருக்கும்.

 

  • வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்  தங்கள்  முதலீட்டை சந்தையிலிருந்து  முதன்மை சந்தைக்கு எடுத்து போயுள்ளனர். அதே போல அவர்கள் கடன் சந்தையிலும் முதலீடு செய்கின்றனர். அதன் தாக்கமே கடந்த சில நாட்களாக உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க வட்டி விகித மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் சந்தையை இறக்கின.

 

  • மொத்தத்தில், சந்தை நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும் எனவும், பட்ஜெட் 2018 ல் கூறியுள்ள அம்சங்கள் அமலாகும் போது சந்தை மற்றும் தொழில் முன்னேறும் எனவும் அவர் கூறினார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்கு சந்தை பகுப்பாய்வு – அறிமுகம் (Share Market Fundamental Analysis

பங்கு சந்தை பகுப்பாய்வு – அறிமுகம் (Share Market Fundamental Analysis

 

இந்தியா 2020, இந்தியா 2025, இந்தியா 2030 என்னும் பொருளாதார லட்சியத்தினை நாமும், நமது அரசாங்கமும் அடைய முயற்சிக்கும் இவ்வேளையில் “பணவீக்கம்” (Inflation)  என்ற ஒன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. “பணவீக்கம்” என்ற நிகழ்வு நமது அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இந்த பணவீக்கத்தினை கையாளும் போது, சேமிப்பு மற்றும் முதலீடு (Savings and Investing) மூலம் நாம் நமது வாழ்க்கையை திறம்பட மேம்படுத்துகிறோம். இவற்றில் நாம் முதலீடு என்று சொல்லும் போது, நமக்கு தெரிந்தது நிலம், வீடு, பொருள் , தொழில் முனைவு மற்றும் பங்கு சந்தை. அப்படிப்பட்ட முதலீட்டில் நம்மில் பெரும்பாலானோர் பொறுமை இழப்பது பங்கு சந்தையில் மட்டும் தான். வங்கி சேமிப்பு, நிலம், வீடு, தங்கம் முதலியவற்றில் இருக்கும் நமது காத்திருக்கும் தன்மை, பங்கு சந்தையில் இல்லை. காரணம், நாம் அவற்றை அணுக வேண்டிய முறையை விட்டு விட்டு , “Speculation”   என்னும் ஊகங்களையே ஒரு காரணியாக பயன்படுத்துகிறோம். பங்கு சந்தையில் நாம் பணம் பண்ணுவதற்கும், பணவீக்கத்தினை சமாளிப்பதற்கும் இரண்டு காரணிகள் உள்ளன. அவை தான், அடிப்படை மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு (Fundamental and Technical Analysis). இவற்றில் உங்களை நீண்ட கால முதலீட்டாளராக, தொழில் முனைவோராக ஏற்படுத்துவது, Stock Market – Fundamental Analysis என்னும் அடிப்படை பகுப்பாய்வு தான். முதலில் நாம் அடிப்படை பகுப்பாய்வுக்கான காரணிகள் சிலவற்றை இங்கு ஆராய்வோம்.