Tag Archives: stock market

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள்

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள் 

The next Four Big challenges await for the Global Market 

2020ம் ஆண்டு உலக சந்தையின் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது கோவிட்-19. வரலாற்றில் Great Depression, Great Recession என்ற நிலையை தாண்டி இப்போது Great Shutdown (Lockdown) என்ற நிலைக்கு வந்துள்ளது உலக நாடுகள்.

பொதுவாக பொருளாதார வீழ்ச்சிக்கான(Recession) காலங்கள் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கலாம். நடப்பில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தான் ஊரடங்கு காலம் அதிகமாக இருந்துள்ளது. இதன் தாக்கம் வரும் காலாண்டுகளின் பொருளாதார எண்களில் தெரிய வரும்.

கடந்த 2007ம் ஆண்டு நிகழ்ந்த சப் பிரைம் அடமான நெருக்கடியால் உலக சந்தை ஆட்டம் கண்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மீண்டு வருவதற்கு 18 மாதங்கள் எடுத்து கொண்டன. 2001ம் ஆண்டு ஏற்பட்ட டாட் காம் குமிழி(Dotcom Bubble) பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமெரிக்க சந்தை 75 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை எடுத்து கொண்ட காலம் வெறும் 8 மாதங்களே.

1929ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை சுமார் நான்கு ஆண்டுகள்  இருந்தது. 1929 முதல் 1933 வரை இருந்த இந்த மந்தநிலை, பொருளாதார உலகில் மிகப்பெரிய சரிவாக(Great Depression) சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு தயாரான நிலையில், இந்த பொருளாதார மந்தநிலை மீண்டு வர காரணமாக இருந்தது என பொருளாதார வல்லுனர்களும் அக்காலத்தில் கூறியிருந்தனர்.

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை எப்போது சரியாகும் என்பதற்கான அறிகுறி தற்போதைய நிலையில் கிடைக்க  பெறவில்லை. இருப்பினும் அடுத்த இரு வருடங்கள் இந்த நிலை நீடிக்கலாம் எனவும், அதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் பொருளாதார வல்லுநர்களால் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மெல்ல மெல்ல தளர்வின் மூலம் விடுவிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் பெரிய வீழ்ச்சி கண்ட உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏப்ரல் மாதத்தில் நல்ல ஒரு ஏற்றத்தை சந்தித்தன. இருப்பினும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் தவிர மற்ற நாடுகளில் உள்ள சந்தைகள் பெரியளவில் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

நடப்பு மாதத்தின் இறுதியில் நாட்டின் ஜனவரி – மார்ச் காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சியை அறிவிக்க உள்ளது ரிசர்வ் வங்கி. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் நாட்களில் பெரும்பாலானவை வெளிவர உள்ளது. இதன் காரணமாக சந்தை போக்கு மாறலாம்.

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த சவாலாக சில முக்கிய காரணிகள் நடப்பு 2020ம் ஆண்டில் உள்ளது. ஊரடங்குக்கு பிறகான தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் நிலைமை முக்கியத்துவம் பெறுகிறது. இதனை ஒட்டியே வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார மாற்றம் நிகழும்.

இரண்டாவதாக ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அமெரிக்க – சீன வர்த்தக போர் எவ்வாறு சூடுபிடிக்க உள்ளது என்பதனையும் உலக சந்தைகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனங்களின் நிலை என்ன என்பதும் அவசியமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சம்மந்தமாக அமெரிக்கா மற்ற நாடுகளை கூட்டு சேர்த்துள்ளது. இது சீனாவுக்கு எதிராக செயல்படும் நிலையில், உலகின் முக்கிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, அதனை எப்படி கையாள போகிறது என்பதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுவரை தொற்றுநோய் என்றாலே மூன்று நிலைகளுக்கு மேல் இருந்ததாக வரலாற்று தகவல்கள் சொல்கின்றன. ஆனால் சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற தொற்றுகளில் அவ்வாறான பாதிப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. ஒரு வேளை கோவிட்-19 மனிதர்களின் உடலுக்குள் மாற்றமடைந்து(Mutation) விட்டால், அது இரண்டாவது அலைக்கு வித்திடலாம். இன்றைய அறிவியல் வளர்ச்சி, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பதும் சவாலான விஷயம் தான்.

வைரஸ்களின் வரலாற்றில் இதுவரை பெரும்பான்மையான மற்றும் முக்கிய தொற்றுநோய்களுக்கு மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது ஆராய்ச்சியில் உள்ளது எனலாம். தொற்றுநோய்களின் தன்மை தானாக வந்து, மறைவதாக தான் உள்ளது. இரண்டாம் அலை வந்தால், ஊரடங்கை அமல்படுத்த போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது திட்டமிட்டபடி நடக்குமா, நடக்கும் பட்சத்தில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியை பிடித்தால், அமெரிக்காவின் புதிய கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதனையும் சந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆக, 2020ம் ஆண்டு பங்குச்சந்தைக்கு பண்டிகை காலமாக மாறியுள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. உலக பங்குச்சந்தை பல வீழ்ச்சிகளையும், பிரமாண்டமான ஏற்றங்களையும் பார்த்த வரலாறு உண்டு.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய பங்குச்சந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது ? – முதலீட்டாளரின் ஆவல்

இந்திய பங்குச்சந்தை எங்கே சென்று கொண்டிருக்கிறது ? – முதலீட்டாளரின் ஆவல் 

An Investor’s interest about the current Indian Stock Market

நடப்பு வாரத்தின் வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை தனது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு(Nifty50) 12,100 புள்ளிகள் என்ற நிலையை தாண்டி வர்த்தகமானது. இது போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடும் 41,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

நவம்பர் மாதத்தின் நேற்றைய புதன் கிழமை (27-11-2019) வரை அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் வாங்கி குவித்த பங்குகளின் மதிப்பு சுமார் 13,800 கோடி ரூபாய். அதற்கு மாறாக உள்ளூர் முதலீட்டாளர்கள் சுமார் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்கேற்பதும், அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையின் உச்சத்தில் முதலீடு செய்வதும், சந்தையின் இயல்பு. இதன் காரணமாகவே உள்ளூர் முதலீட்டாளர்கள் தங்கள் லாபங்களை சந்தையின் உச்சத்தில் பதிவு செய்வதுண்டு. இந்திய பங்குச்சந்தையின் புதிய ஏற்றத்திற்கு துணையாக பரஸ்பர நிதி திட்டங்களும்(Mutual Funds) ஊக்குவிக்கின்றன.

உண்மையில், தற்போது பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பது நாம் அறிந்ததே. இருப்பினும் சந்தை இதற்கு மாறாக ஏற்றம் பெற்று செல்கிறதே என நமது கேள்வி அமையலாம். சந்தையின் போக்கை கணிப்பது யாராலும் முடியாது. ஆனால் பொருளாதார புள்ளி விவரங்களை நம்மால் கணிக்க இயலும்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் பெரும்பாலான நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளன. அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வரி குறைப்பு(Corporate Tax Cut), இம்முறை நிறுவனங்களின் லாபத்திற்கு உதவியுள்ளது எனலாம். இரண்டாம் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களின் லாப வளர்ச்சி, வரி குறைப்பு நடவடிக்கையால் வந்தவை தான். இல்லையெனில் அவை நஷ்டத்தில் சென்றிருக்க கூடும்.

இந்த ஒரு நிலையே, இந்திய பங்குச்சந்தையை தாங்கி பிடித்துள்ளது. ஆனால் இந்த வரி குறைப்பு என்பது ஒரு நிரந்தரமான தீர்வாக அமையாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவு(GDP), வட்டி விகிதம் குறைவாக காணப்படுவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் சாதகமாக இல்லாதது என பல குறைகள் காணப்பட்டாலும், நடப்பு நிலைமை சரி செய்யப்படும் என்ற ஆவல் தான் சந்தையை நகர்த்தி கொண்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி எப்போதெல்லாம் குறைவாக காணப்படுகிறதோ, அப்போது சந்தையிலும் பங்குகளின் விலை மலிவாக கிடைக்கப்பெறுகிறது. தற்போதைய நிலையில் சந்தை புதிய உச்சத்தை பெற்றிருந்தாலும், இன்னும் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப்(Small Cap) பிரிவுகளில் நல்ல நிறுவன பங்குகள் தள்ளுபடி விலையில் காணப்படுகிறது. கடந்த 2007-2008 காலங்களில் காணப்பட்ட சந்தை வீழ்ச்சி போல், தற்போது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமில்லை எனலாம். அதே வேளையில் தற்போதைய நிலைமை உடனடியாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்க வில்லை.

நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் வரும் நாட்களில் மேலும் வலுவடையலாம். உலகளவில் மாற்றம் வேகமாக ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், சில பகுதிகளில் அத்தியாவசிய தேவைக்கும் போராட வேண்டியுள்ளது. வரும் காலங்களில் இந்த நிலைமை சரி செய்யப்பட்ட வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் நாம் நகரலாம்.

தற்போதைய நிலையில், முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது – பங்குகளில் அதிகபட்ச லாபங்களை பதிவு செய்திருந்தால், அதனை விற்று லாபம் பார்க்கலாம். இல்லையெனில் லாபம் பார்த்த தொகையை கொண்டு, மலிவான விலையில் இருக்கும் நல்ல நிறுவன பங்குகளை கண்டறியலாம். நடப்பு சந்தையில் லாபம் ஈட்டவில்லை என்பவர்கள் கவலையடைய வேண்டாம். கையிருப்பு தொகை இருக்கும்பட்சத்தில், நல்ல பங்குகளை குறைவான விலையில் வாங்க முயற்சி செய்யுங்கள்.

சந்தை உச்சத்தில் உள்ளது, நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள், பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுத்து தொடர் முதலீட்டை மேற்கொள்ளலாம். சந்தையை கணிப்பது அவ்வளவு எளிதல்ல. பொருளாதார புள்ளிவிவரங்களை அறிந்து கடந்து செல்லலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0

Stock Market Fundamentals – Definitions

பங்குச்சந்தை அடிப்படை  வரையறை – வகுப்பு 4.0 :

பங்கு  என்பது  என்ன  ?  (What is a Share or Stock  ? )

 

பங்கு (Share or Stock) என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிலில் உள்ள ஒரு பகுதி (அ) பகுதிகளுக்கான உரிமை. ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் தனது நிதி சார்ந்த முதலீட்டை பல பகுதிகளாக பிரித்து வைத்திருக்கும். உரிமை கோரும் ஒவ்வொருவருக்கும் தேவையான பகுதிகள் ஒதுக்கப்படும். அவையே பங்குகள் எனப்படும். பங்குகள் வாங்குவதினால் அந்நிறுவனத்தின் ஒரு பகுதி உரிமையாளாராகலாம். அந்த நிறுவனத்தின் லாபங்களில் நமக்கான பங்கும் உண்டு.

 

XYZ நிறுவனம் தனக்கான முதலீடு ரூ. 1,00,000 /- ஐ பங்கு ஒன்றுக்கு ரூ.10  வீதம் பிரித்தால் 10,000 பங்குகள் பிரிக்கப்படும். இந்த  10,000 பங்குகளில் உரிமை கோருபவருக்கு தேவையான பங்குகள் ஒதுக்கப்படும்.

 

பங்கு ஒன்றுக்கு ரூ. 10 என்பது முக மதிப்பு (Face value) எனப்படும். எனவே 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட 10,000 பங்குகள் சேர்ந்தால் ரூ. 1,00,000 /- முதலீடு ஆகும்.

 

பங்குச்சந்தை என்பது என்ன ? (What is a Share Market ?)

 

பங்குச்சந்தை (Stock Market) என்பது நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழில்  முதலீட்டை பொதுவெளியில் (Publicly) திரட்டிக்கொள்ளும் ஒரு சந்தை ஆகும். நிறுவனங்கள் என்பது தனியாராகவோ (அ) அரசு சார்ந்த நிறுவனம் (அ) அரசாங்கமே இருக்கலாம். பங்குச்சந்தையில் பங்கு வாங்குவது மற்றும் விற்பது நடக்கும். பங்குச்சந்தையில் நிறுவனங்கள் முதலீடு திரட்டுவதற்கு பொதுவுடைமை  நிறுவனமாக (Public Limited Company) பதிவு செய்திருக்க வேண்டும்.

 

பங்குச்சந்தையில் இரு வகை சந்தைகள் உள்ளன. ஒன்று முதன்மை சந்தை (Primary Market), மற்றொன்று இரண்டாம் நிலை சந்தை (Secondary Market). பங்குச்சந்தையில் புதிதாக ஒரு நிறுவனம் பொதுவுடைமை நிறுவனமாக்கப்பட்டு, முதலீடு திரட்டுவதற்கு விண்ணப்பிக்கும் போது, அவை முதலில் முதன்மை சந்தையில்(Primary Market) தான் பட்டியலிடப்படும். இந்த முறையை Initial Public Offer (IPO) எனப்படும். IPO வில் நிறுவனங்கள் தங்கள் தொழிலின் அறிக்கைகள், முதலீடு திரட்டுவதற்கான அறிவிப்புகள் மற்றும் காரணங்கள், முதலீட்டின் மதிப்பு, ஒரு பங்குக்கான விலை வரம்பு ஆகியன தெரிவிக்கப்படும்.

 

பொதுவாக முதன்மை சந்தையில் நிறுவன முதலீட்டாளர்கள் (Institutional Investors), வங்கிகள் (Banks), வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரிய முதலீட்டாளர்கள் தான் பங்கேற்று பங்குகளை பெறுவர். சிறு முதலீட்டாளர்களின் வரவு குறைவே.

 

முதன்மை சந்தையில் வாங்கிய பங்குகள், இரண்டாம் நிலை சந்தையில் (Secondary Market)  விற்பனைக்கு வரும் போது நாம் ஏற்கனவே சொன்ன முதலீட்டாளர்களும், சிறு மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களும் பங்கேற்று பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவர்.

 

சுருக்கமாக சொன்னால், பங்குச்சந்தை மூலம் நிறுவனங்களுக்கு தேவையான முதலீடும், முதலீட்டாளர்களுக்கு நிறுவன பங்கின் உரிமையும் கிடைக்கும்.

 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர்களின் பங்கு லாப – நட்ட மதிப்புக்கு உட்பட்டது. சந்தையில் ஏற்படும் நஷ்டத்திற்கு முதலீட்டாளர்களே பொறுப்பு; நிறுவனம் அல்ல !

 

financial market structure india

 

 

பங்குச்சந்தை அமைப்பு ( Stock Market Exchange ):

 

பங்குச்சந்தையை  சந்தைப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களின்  நலனை  பாதுகாத்தல், பட்டியலிடப்படும்  நிறுவனங்களை  ஒழுங்குமுறைப்படுத்துதல்  போன்றவற்றை  SEBI (Securities and Exchange Board of India ) என்ற  ஒழுங்கு முறை ஆணையம்  நிர்வகிக்கிறது. இந்தியாவில் நிறைய  பங்குச்சந்தைகள்  இருப்பினும், இரண்டு  பங்குச்சந்தைகள்  மட்டும்  பெரும்பாலும்  பரவலாக்கப்பட்டுள்ளன.

 

  • NSE (National Stock Exchange) – தேசிய  பங்குச்சந்தை

 

  • BSE (Bombay Stock Exchange) – மும்பை  பங்குச்சந்தை

 

NSE – இந்தியாவிலுள்ள முன்னணி பங்குச்சந்தை. 2000 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

 

BSE – ஆசியாவின் முதல் மற்றும் மிக  பழமையான  பங்குச்சந்தை  ( Since 1852 ). உலகளவில்  முதல்  பத்து  இடத்தில் இருக்கும்  மிகப்பெரிய  பங்குச்சந்தை  ஆகும். 5000 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன.   மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு 4485 பில்லியன் டாலராகும் (ரூ. 4,48,500 கோடிகள்). உலகின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்காவின் NYSE (New york Stock Exchange) – (20 லட்சம் கோடி டாலர்) உள்ளது.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

 

 

பங்கு தரகர் (Stock Broker):

 

பங்கு தரகர் என்பவர் SEBI ஒழுங்குமுறை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட (அங்கீகரிக்கப்பட்ட) ஒரு தரகு நிறுவனம். இந்த பங்கு தரகர் தான் பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு பாலமாக உள்ளார். பங்குச்சந்தையில் நாம் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றால், பங்கு தரகர் இல்லாமல் வாங்க முடியாது. நமக்கு தேவையான பங்கை வாங்க மற்றும் விற்க இவர் மூலமே முடியும். பங்கு தரகராக பதிவு செய்யும் நிறுவனம் கோடிகளில் சொத்து மதிப்பையும் (Networth) கொண்டு, பங்குச்சந்தை அமைப்புக்கு லட்சங்களில் கட்டணங்களை(Fees and Deposits) செலுத்த வேண்டும்.

 

பங்கு தரகர் என்பவர் Trading Member என்றும் சொல்லப்படுவார். இவரிடம் தான் நீங்கள் பங்கு வர்த்தக கணக்கை (Trading Account) ஆரம்பிக்க வேண்டும்.

 

முதலீட்டாளர் (Investor):

 

முதலீட்டாளர் என்பவர் தனது மூலதனத்திற்கு,  எதிர்பார்த்த நிதி சார்ந்த வருவாயை முதலீடு மூலம் செயல்படுத்துபவர். முதலீட்டாளர் தான் எதிர்பார்த்த வருவாய்க்காக பல முதலீட்டு சாதனங்களை (Investment Products) அறிந்து மற்றும் ஆராய்ந்து முடிவெடுப்பார். அவர் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வார். முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை (Risk Management) உணர்ந்து, ஒரு மதிப்புமிக்க முதலீட்டாளராக இருப்பார்.  – Value Investor

 

சந்தை மூலதனம் (அ) மதிப்பு (Market Capitalisation):

 

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் மதிப்பு. நிறுவனத்தின் மொத்த பங்குகளை, பங்கு ஒன்றின் விலையால் பெருக்கினால் கிடைக்கும் மதிப்பு தான் சந்தை மூலதனம் (Market Cap)

 

Rs. 100 / share

 

Market cap = 100 (Share Price)  X 10,00,000 (No. of shares) = 100,000,000  ( 10 கோடி)

 

முக மதிப்பு (Face Value):

 

ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Primary Market) போது, ஒரு பங்கிற்கான மதிப்பு தான் முக மதிப்பு (Face Value).

 

Face value = Rs. 10 / share.

 

சில நிறுவனங்கள் தங்கள் முகமதிப்பிலேயே பங்குகளின் விலையை நிர்ணயிக்கும். இன்னும் சில நிறுவனங்கள் தங்கள் தொழிலின் பாரம்பரியம் மற்றும் மதிப்பின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்கும். அவை முக மதிப்பை விட விலை அதிகமாக இருக்கும். இதனை Premium price என்பர்.

 

Market Price (with premium) = Rs. 50 / share (Face value – Rs. 10 /share)

 

பொதுவாக, நிறுவனங்கள் முக மதிப்பு அடிப்படையிலே முதலீடுகளை திரட்டும். ஆனால் ஒரு பங்கின் விலை Premium price ல் வரலாம்.

 

புத்தக மதிப்பு (Book Value):

 

ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பு தான் அதன் புத்தக மதிப்பு.  புத்தக மதிப்பை ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு எனவும் சொல்லலாம்.

 

Book Value = Total Assets – Intangible Assets – Liabilities

 

நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பை அதன் கடன்கள் மற்றும் தொட்டுணுற முடியாத சொத்துகளிலிருந்து(Intangible Assets) கழித்தால் கிடைப்பது புத்தக மதிப்பு. Intangible Assets – Patents, License, Copyright, Goodwill, Software.

 

ஒரு நிறுவனம் ஏதேனும் காரணத்தால் விற்கப்படுமாயின், முதலீட்டாளருக்கு கிடைக்கும் மதிப்பு அல்லது தொகை – புத்தக மதிப்பு. நமது தேநீர் நண்பர் தனது தொழிலை மற்றவருக்கு விற்று விட்டால், கடன்கள் போக மீதி அவருக்கு (பங்குதாரருக்கு) கிடைப்பது.

 

பங்குச்சந்தை குறியீடு (Market Index):

 

பங்குச்சந்தை குறியீடு என்பது பங்குச்சந்தையின் ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது பிரிவின் அளவீடு ஆகும்.

 

BSE 500 – மும்பை பங்குச்சந்தை 500 ல் உள்ள பட்டியலிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட 500 நிறுவனங்களின் சந்தை மூலதன (Market Cap) சராசரி மதிப்பு தான் அதன் குறியீடு.

 

S & P BSE – 500:  Index value – 14,500

 

Nifty 50 – 10,400

 

Nifty SML 100 Free – 8480

 

S & P BSE Capital Goods – 19,220

 

சென்செக்ஸ் ( BSE Sensex):

 

இது மும்பை பங்குச்சந்தையின் குறியீடு (Sensitive Index – Sensex). இந்த குறியீட்டின் கீழ் மொத்தம் 30 பட்டியலிடப்பட்ட  நிறுவனங்கள் உள்ளன. இந்த 30 நிறுவனங்களின் தினசரி சராசரி சந்தை மதிப்பை கொண்டே குறியீடு இயங்கும். இதே போல Small Cap, Mid Cap மற்றும் ஒவ்வொரு தொழில் துறைகளுக்கும் (Sector) என பல்வேறு குறியீடுகள் உள்ளன. ஒரு குறியீட்டின் கீழ் அதே நிறுவனங்கள் தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அதன் சந்தை மதிப்பை பொருத்து குறியீடுகள் மாற்றப்படலாம்.

 

உதாரணத்திற்கு BSE: Sensex 30 உள்ள XYZ நிறுவனத்தின் வர்த்தக சந்தை மதிப்பு குறைந்தால் அந்த நிறுவனம் வேறு ஏதேனும் குறியீடுகளுக்கு மாற்றப்படலாம். அதற்கு பதில் BSE: Sensex 30 ல் மற்றொரு நிறுவனம் சேர்க்கப்படும்.

 

நிப்டி (Nifty):

 

இது தேசிய பங்குச்சந்தையின் குறியீடு (NSE Fifty). இந்த குறியீட்டில் நன்றாக செயல்படும் மொத்தம் 50 நிறுவனங்கள் உள்ளன. 50 நிறுவனங்களின் தினசரி சராசரி வர்த்தக மதிப்பை பொருத்து குறியீடு எண் மாறும். BSE Sensex ல் சொன்னது போல இவற்றிலும்  பல குறியீடுகள் உள்ளன.

 

இரண்டு குறியீடுகளுக்கும் இடையே வித்தியாசம் ஒன்றுமில்லை. இரண்டும் இரு வேறு பங்குச்சந்தைகள் – அவ்வளவு தான்.

 

 

பொதுவாக மும்பை பங்குச்சந்தையை விட, தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் அதிகமாக நடைபெறும். தேசிய பங்குச்சந்தையை காட்டிலும் மும்பை பங்குச்சந்தையில் நிறுவனங்கள் அதிகம்.

 

 

நாம் மேலே சொன்ன சில வரையறைகள் மூலம் பங்குச்சந்தை அடிப்படையை தெரிந்து கொள்ளலாம்.  இதனை தொடர்ந்து வரும் வகுப்பில், பங்குச்சந்தையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நிதி காரணிகளை (Financial Ratios or Factors) பார்ப்போம்.

 

Stock Market – Fundamental Analysis – Course – 1.0

Stock Market –  Fundamental Analysis – Learning Course

 

பங்குச்சந்தை  –  அடிப்படை  பகுப்பாய்வு கற்றல் வகுப்புக்கு  வரவேற்கிறோம்.

 

இது ஒரு இணைய வழி கற்றல் முறை(Online Learning Course). அனைத்து வகுப்புகளும் மற்றும் அதன் தகவல்கள் நேரிடையாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே(Subscribed Email Address) அனுப்பப்படும். வகுப்புகள் தினசரி என்றில்லாமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது  வாரத்திற்கு மூன்று நாட்களாகவோ இருக்கலாம். இந்த கற்றல் வகுப்பு உங்களுக்கு பங்குச்சந்தை பற்றிய உள்ளார்ந்த அறிவு மற்றும் செயல்முறை விளக்கமாகவும் அமையும். அதனால் நீங்கள் பெறும் ஒவ்வொரு தகவலையும் பரிசோதித்து பார்க்கலாம்.

 

நீங்கள் ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் ?

 

நம் ஒவ்வொருக்கும் வாழ்க்கையில் தேவைகள் மற்றும் விருப்பங்கள் இருக்கும். தேவைகள் பொதுவானவை; ஆனால் விருப்பங்கள் மாறுபடலாம். முதலில் நாம் நம் தேவைகளை பட்டியலிடுவோம்:

 

  • உணவு (Food)
  • உடை  (Clothing)
  • இருப்பிடம் (Shelter)
  • மருத்துவம் (Medical)
  • கல்வி  (Education for Future and Growth)
  • ஓய்வு காலம் (Retirement Stage)

 

விருப்பங்கள் சில…

 

  • விரும்பிய வாகனம் வாங்குவது (Buying a Car)
  • சுற்றுலா செல்வது (Vacation and  Foreign Tour)
  • குழந்தைகளுக்கு நல்ல கல்வி முறையை கொடுப்பது (Education for Children)
  • வீடு பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்(House Repair and Maintenance)
  • புதிய தொழில் தொடங்குவது (Starting a Business)
  • மற்றவர்களுக்கு உதவி செய்ய (Helping others)

 

நீங்களும் உங்களுக்கான பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். தேவையோ, விருப்பங்களோ எதுவாயினும் அவற்றிற்கு நிதி அல்லது பணம் தேவை. நாம் பட்டியலிட்ட அனைத்து தேவைகள் மற்றும் விருப்பங்கள் நமக்கானவை. இவற்றை நாம் பெரும்பாலும் எப்படி பெறுகிறோம் ?

 

நாம் அதற்காக உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், பின்பு நமக்கான தேவை, விருப்பங்களை நிறைவேற்றுகிறோம். நமது விருப்பங்களை காலத்திற்கு ஏற்றவாறு நாம் மாற்றியமைக்கலாம் அல்லது தள்ளி போடலாம், ஆனால் நமது தேவைகள் அவ்வாறில்லை. எனவே நமது தேவையை முதலில் நிறைவேற்றுவது அவசியம். ஆனால் நம்மில் பலருக்கு தேவைகளை பூர்த்தி செய்வதிலே காலம் முழுவதும் கடந்து விடுகிறது. அப்புறம் எங்கே நமது விருப்பங்கள், கனவுகள் ! சில நேரங்களில் நம்மால் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க முடிகிறது, அதனை கொண்டு நமது தேவை மற்றும் விருப்பங்களை அணுகுகிறோம். பல சமயங்களில் வருமானம் பற்றாக்குறையாகவே உள்ளது. ஏன் சிலருக்கு மட்டும் பணம் எப்போதும் கையில் இருக்கிறது, பலருக்கு இது சாத்தியமாக இல்லை ?

 

அதனை தான் நமது பள்ளி மற்றும் கல்லூரி கால படிப்பு நமக்கு கற்று தர தவறி விட்டது. Rich Dad, Poor Dad ன் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி சொல்வது போன்று, நமக்கான அடிப்படை கல்வியில் பணத்தை பற்றியும், அதனை எப்படி கையாள வேண்டும் என்பதனை பற்றியும் சொல்லி தரவில்லை. மாறாக, நமக்கு அறிவியலும், புவியியலும் சொல்லி கொடுக்கப்பட்டது. அவற்றை கூட நாம் நம் தினசரி வாழ்க்கை மற்றும் வேலையிடத்தில் பயன்படுத்த முழுமையாக சொல்லவில்லை. நீங்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் மற்றும் ஒரு நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டுமென்பதே நம் கல்வி முறை கொடுத்தது.

 

நம் நாட்டில் பணத்தை பற்றிய அடிக்கடி பழக்கப்பட்ட ஒரு விஷயமென்றால், அது சேமிப்பு  (Savings) தான். நாம் எவ்வாறு சேமிக்க வேண்டுமென்று காலங்காலமாக சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும், எப்படி தொழில் செய்யலாம் என சொல்லித்தந்தது மிக குறைவு தான். பங்குச்சந்தையிலும் இது தான் நமக்கு சிக்கலே. சேமிப்பிற்கும், முதலீடிற்கும் உள்ள இடைவெளி தெரியாமல் முடிவில், ஊக வணிகம் (Speculation) செய்து விடுகிறோம். நமக்கு கிடைப்பது பணமுதல் இழப்பு. பங்குச்சந்தைக்கும், தரகருக்கும் கிடைக்கிறது சேவை மற்றும் தரகு கட்டணம்.

 

சரி, நாம் காலங்காலமாக சில சேமிப்பு முறைகளை பின்பற்றி வந்திருக்கிறோம். நமக்காக அல்ல, நம் பெற்றோர்கள் சொன்னார்கள் என்று. அவற்றின் கடந்த கால வருமான தாக்கம் மற்றும் ஏற்ற-இறக்கத்தை பார்த்து விடுவோம்.

 

January 2000 ல் 100 ரூ. விலையுள்ள ஒரு பொருள் அல்லது சேவை, கடந்த October 2017 ல் ரூ. 308 /- ஆக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தின் மடங்குகளை இதன் மூலம் நாம் அறியலாம். அதே ஜனவரி 2000 ல் நம் கையிலிருந்த ரூ. 100 ன் மதிப்பு, அக்டோபர் 2017 ல் ரூ. 33 /- மட்டுமே. இதனை நாம் பணத்தை கொண்டு வாங்கும் திறன்(Purchasing Power) என்போம். இதன்  விளைவாக  தான்  நாம் சேமிக்க  பழகுகிறோம்.

 

Gold Prices (Last 5 Years):

Gold price 5 years

Bank Interest Rate (Since 2000):

 

interest rate 2017 india

 

Returns of Equity, Gold, Money market mutual fund, FD:

 

returns of equity and gold

 

மேலே உள்ள தகவல்களை கொண்டு நமக்கு சில சிந்தனைகள் கிடைத்திருக்கும்.

 

Financial Goal(s):

 

நிதி இலக்குகளை பற்றி நாம் ஏற்கனவே நமது அறிமுக வகுப்பில் மற்றும் காணொளியில் (See the video) அறிந்திருப்போம். நமது நிதி இலக்குகள் வங்கி வைப்பு தொகை, தங்கம் மற்றும் மனையில் வெற்றி பெறுவதில்லை, ஆனால் பரவலாக்கப்படலாம். நிதி இலக்குகளில் வெற்றி அடைய இரண்டே வழி: பங்குச்சந்தை மற்றும் தொழில் தொடங்குவது.  நமது இலக்குகள் வெற்றியடையாமல் போவதற்கான முதற்காரணம் – பணவீக்கம். நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை வேண்டுமானால் கூட்டி கொள்ளலாம். பணவீக்கத்தை தடுக்க முடியாது. ஆனால் புத்தியால் கையாளலாம். அது தான் பணவீக்கத்தை தாண்டிய வருமானம். விலைவாசியை தாண்டிய வருமானம் வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் தொழிலில் அதை விட லாபம் அதிகமாக தான் பெற வேண்டும்.

 

சேமிப்பும், பணவீக்கமும் ஒன்றையொன்று சார்ந்தது

 

மேலே உள்ள வாக்கியத்தை மறவாதீர்கள்; விலைவாசி (பணவீக்கம்) உயர்ந்தால் உங்களால் அதிமாக சேமிக்க  முடியாது. விலைவாசி உயர்ந்தால் மட்டுமே வங்கிகள் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். விலை குறையும் போது அல்ல… உங்களால் எப்போது  அதிகமாக சேமிக்க முடியும் ? அப்போது வங்கிகள் மற்றும்  அரசாங்கம் உங்களுக்கு குறைந்த வட்டியே கொடுக்க முன்வருகிறது. வருமான  வரி கட்டுபவராக நீங்கள் இருந்தால், உங்கள் வங்கி வைப்பு தொகைக்கும் வரி உள்ளதை மறக்க வேண்டாம்.

 

Post Tax Returns(CAGR):

Post tax returns

 

ஏன்  வங்கிகள் அவ்வப்போது வட்டி விகிதத்தை குறைக்கின்றன ?

 

வங்கி சேமிப்பில் உள்ள ரிஸ்குகள் – ஆபத்தானவை

 

பணவீக்கம் ஒரு சாதாரண சேமிப்பு விஷயத்திற்கே இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், உங்கள் நீண்ட கால இலக்குகளை யோசித்து பாருங்கள். 10 அல்லது 20 வருடத்திற்கு முன் நீங்கள் வாங்கிய பொருளின் விலை இன்று இல்லை. அதன் இன்றைய மதிப்பு பணவீக்க மதிப்பு  தான். இப்போது நினைத்து பாருங்கள்  உங்கள் எதிர்கால கல்வி செலவுகள், வீடு, ஓய்வு, மருத்துவம் – பணவீக்கத்தில் !

 

Inflation India chart since 2004

 

நினைவில்  கொள்ளுங்கள் நிதி இலக்குகள் பொதுவாக நீண்ட கால இலக்குகள் ஆகும்.

பங்குச்சந்தை ஆபத்தானதா, சூதாட்டமா  ?

 

முதலீடு  பற்றி பேசும் போது, நான் அடிக்கடி ஒரு வாசகத்தை  சொல்வதுண்டு…

 

“ Drive the Car without knowing the Basic, is Ridiculous and Dangerous “

 

 

நீங்கள்  கல்வியை தொடங்குவதற்கு முன்னரே கல்வி நிலையங்களில் கட்டணத்தை வசூலிக்கின்றனர். அவர்கள் உங்களை ஏமாற்றி விட்டால் (கற்று தரவில்லை)  ?   🙂

 

இது தான்  பங்குச்சந்தையும்; அடிப்படை விஷயங்களை அறியாமல், அனுபவம் பெறாமல் நாம் எதையும் சொல்ல விட முடியாது. ஒதுக்கி விடவும் இயலாது. நீங்கள் வேண்டுமானால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் போகலாம். ஆனால் அரசாங்கமும், நீங்கள் உழைக்கும் நிறுவனமும் பங்குச்சந்தையில்  தான்  லாபம் பார்த்து கொண்டு இருக்கின்றனர் – உங்கள் முதலீட்டை (பணம்) கொண்டு  தான் 🙂

 

Stock market historical chart

 

Data reference:   

 

Inflation Calculation and Forecasting

Inflation India

Gold Price History

Fixed Deposit Rates Historical data

Stock Market Performance

 

 

Disclaimer:

This content is an information for the purpose of learning. It’s not recommending any stock or listed company or make any investment in a certain financial products. All content as a text here are reserved by the part of website(www.varthagamadurai) and the images shown for the reference has attributed (image courtesy).