Share market budget impact

பட்ஜெட் 2018 க்கு பிறகு பங்குச்சந்தை முதலீடு எப்படி ?

பட்ஜெட் 2018 க்கு பிறகு  பங்குச்சந்தை  முதலீடு  எப்படி ?

 

Share Market after impact of Budget 2018 ?

 

சமீபத்தில் (09.02.2018)  மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில்(Fortune Pandiyan Hotel)  நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான கூட்டம் – தேசிய பங்குச்சந்தையின் கூட்டுடன் கோயம்புத்தூர் கேப்பிடல் நிறுவனம் (Coimbatore Capital) சார்பில் நடைபெற்றது.

 

 

முதலீட்டாளர் கூட்டத்தில் பட்ஜெட் 2018 க்கு பிறகான பங்குச்சந்தை தாக்கம் குறித்து  அலசப்பட்ட சில விஷயங்கள்:

 

 

நிறுவனர்  திரு. D. பாலசுந்தரம் (Coimbatore Capital, Founder and Director of Coimbatore Stock Exchange Limited ) பேசுகையில்…

 

  • பொதுவாக  பட்ஜெட்டின்  தாக்கம் 10 வருடங்களுக்கு  பிறகு தான்  ஏற்படும், உடனடியாக  அதன்  தாக்கம்  நடைபெறாது. உதாரணத்திற்கு மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டமும் பல வருடங்களுக்கு பிறகு தான் வெற்றியடைந்துள்ளது. அது போல, பட்ஜெட்டில் அரசு அறிவிக்கும் விஷயங்கள் மெதுவாக வளரலாம் என்றார்.

 

  • நடப்பு கணக்கு பற்றாக்குறை (Fiscal Deficit) – வங்கி வட்டி விகிதத்திலும், பணவீக்கத்திலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

 

  • வட்டி விகிதம் உயர்ந்தால், முதலீட்டாளர்கள் பத்திர சந்தை (Bond Market) நோக்கி செல்வார்கள். அதே நேரத்தில் வட்டி விகித உயர்ந்தால், நிறுவனத்தின் லாபம் குறையலாம்; அதன் பாதிப்பு பங்குச்சந்தையில் வெளிப்படும். எனவே குறைந்த வட்டி விகிதம் கடன் பெறுபவர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும்.

 

  • கொள்முதல் மேலாளர் குறியீடு (Purchasing Manager’ Index – PMI) என்பது ஒரு உற்பத்தி துறையின் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியம் மற்றும் அவசியமான அடையாளம். இந்த குறியீடு தற்போது நன்றாக உள்ளது. இது சந்தைக்கும் நல்ல விஷயம்.

 

  • பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாத துறைகள் – பாதுகாப்பு (Defence), அரசு ஊழியர்களின் சம்பள விகிதம்.

 

  • வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், வங்கி முதலீட்டை கடன் சந்தையில் (Bond / Debt Market) செய்யலாம்.

 

  • பொருள் சந்தையும் (Commodity Market), பங்குச்சந்தையும் இணைக்கப்படலாம். இதன் நிகழ்வு இந்த வருடத்தின் கடைசியில் நடைபெறலாம்.

 

  • வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வரி விகிதங்கள் குறைக்கப்படலாம் என கூறினார் (If Tax Payers will increase, tax rate may decrease).

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

 

தேசிய பங்குச்சந்தை சார்பில் துணை மேலாளர் திரு. சங்கமேஸ்வரன் பேசுகையில்,

 

  • கடன்  வாங்கி, பங்குச்சந்தையில்  ஈடுபட  வேண்டாம் (Don’t borrow and invest).

 

  • பங்குச்சந்தையை பற்றி  புரியாதவர்கள் பங்குச்சந்தையில்  முதலீடு  செய்ய  வேண்டாம். அவர்களுக்காக  வங்கி  மற்றும் அஞ்சலக  திட்டங்கள்  உள்ளன. பரஸ்பர  நிதியிலும் (Mutual Funds) முதலீடு  செய்யலாம் (Don’t invest, if you are not aware of Share market).

 

  • உங்களுக்கான  தேவைகள்  மற்றும்  நிதி  இலக்குகளை  சார்ந்து  சந்தையில்  முதலீடு  செய்யுங்கள் (Stick to Financial goals).

 

  • Asset Allocation  ஐ புரிந்து சரியாக முதலீடு செய்யுங்கள்.

 

  • பங்குச்சந்தையில் உங்கள் பரிவர்த்தனையை சரி பாருங்கள் மற்றும் உங்களுக்கான ஒப்பந்த சீட்டு (Digital Contract Note) தகவல்களை முழுவதுமாய் படித்து பாருங்கள்.

 

  • பங்குச்சந்தை தரகரிடம் நீங்கள் செலுத்திய பணம் மற்றும் பண பாக்கி சரியாக உள்ளதா என பார்த்து கொள்ளுங்கள் என்றார்(Verify settlement of funds and securities).

 

இறுதியாக, SEBI பதிவு பெற்ற ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர்  கார்த்திகேயன் ( SEBI Regd. Research Analyst) அவர்கள் பேசும் போது,

 

  • ஒரு  முதலீட்டாளரின்  ரிஸ்க்  என்பது  பணம்  மற்றும்  வாய்ப்பில் (Money and Opportunity)  தான்  உள்ளது. அதனால்  பணத்தை  கொண்டு  சரியான  வாய்ப்பை  நோக்குங்கள். இரண்டையும்  இழந்து  விட  கூடாது.

 

  • ஒரு  நீண்ட  கால  முதலீட்டாளர் மூன்று  நிலைகளை (Low Return, Zero Return, Negative Return)  கடந்து  தான்  செல்வத்தை  பெருக்க  முடியும். அதனால் சந்தையில்  பொறுமை  அவசியம்.

 

  • LTCG Tax  இருந்தாலும், சந்தையில்  கிடைக்கும்  வருமானம்  பணவீக்கத்தை விட  அதிகம்  தான்.

 

  • பட்ஜெட்  2018 க்கு  பின், சந்தை  இறக்கம் ஒரு  தற்காலிகமே; தொழில்துறை  முன்னேறுவதற்கான  காலங்கள்  அடுத்த  5 – 10 வருடங்கள். அதனால்  சந்தை நன்றாக  தான்  இருக்கும்.

 

  • வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்  தங்கள்  முதலீட்டை சந்தையிலிருந்து  முதன்மை சந்தைக்கு எடுத்து போயுள்ளனர். அதே போல அவர்கள் கடன் சந்தையிலும் முதலீடு செய்கின்றனர். அதன் தாக்கமே கடந்த சில நாட்களாக உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க வட்டி விகித மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் சந்தையை இறக்கின.

 

  • மொத்தத்தில், சந்தை நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும் எனவும், பட்ஜெட் 2018 ல் கூறியுள்ள அம்சங்கள் அமலாகும் போது சந்தை மற்றும் தொழில் முன்னேறும் எனவும் அவர் கூறினார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

One thought on “பட்ஜெட் 2018 க்கு பிறகு பங்குச்சந்தை முதலீடு எப்படி ?”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s