என்னிடம் ஆப்பிள் போன் இல்லை; ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் – வாரன் பப்பெட்

என்னிடம் ஆப்பிள் போன் இல்லை; ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் – வாரன் பப்பெட்

A Man who still using a Flip Mobile Phone, but wants to own APPLE Company

 

உலகின் மிகப்பெரும் பணக்காரராகவும், Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவராகவும் அங்கம் வகிப்பவர் வாரன் பப்பெட் (Warren Buffet) ஆவார். 87 வயதாகும் வாரன் பப்பெட் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் உள்ளார். பணக்காரர்கள் பட்டியலில் அதிக வயதுடையவரும் இவரே, தற்சமயம் இவரது சொத்து மதிப்பு 8440 கோடி டாலராகும்.

 

முதலிடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸின் சொத்து மதிப்பு 13,200 கோடி டாலராகும். சமீபத்தில் வாரன் பப்பெட் ஒரு பேட்டியில் கூறியதாவது, “ நாங்கள் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வைத்துள்ளோம். இது ஒரு நீண்ட கால அடிப்படையில் செய்யப்பட்ட முதலீடு. ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகம் நன்றாக உள்ளது. மேலும் முதலீடு செய்ய காத்திருக்கிறோம்; முடிந்தால் 100 சதவீத பங்குகளை வாங்க விரும்புகிறோம்.

 

ஒரு நண்பர் எனக்கு ஐபோன் 10 (iPhone 10)  ஐ பரிசாக அளித்தார். மேலும் அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் எனக்கு விளக்கியிருந்தார். ஒரு சிறு குழந்தைக்கு விளக்குவது போல அவர் ஐபோனை பற்றி என்னிடம் வர்ணித்தார்.

 

நான் இதுவரை அந்த மாதிரியான கைபேசியை பயன்படுத்தியது இல்லை. மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நான் அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்குவதில் ஆவலாக உள்ளோம் “ என்றார்.

 
( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் வாரன் பப்பெட் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் 7.5 கோடி பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்களில் Berkshire Hathaway இரண்டாம் இடம் பிடித்தது.

 

பப்பெட் பெரும் பணக்காரராக இருந்தும், இன்னும் மடக்கு கைபேசியை(Flip Mobile phone) தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். தனது 11 வது வயதிலிருந்து பப்பெட் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் நிறுவனத்தின் பங்குகளை கொஞ்சம் வாங்குவதும், பிற்காலத்தில் அந்த நிறுவனத்தையே கையகப்படுத்துவதும் இவரது முதலீட்டு மந்திரங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

பிளிப்கார்ட் இனி வால்மார்ட் – 2000 கோடி டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம்

பிளிப்கார்ட் இனி வால்மார்ட் – 2000 கோடி டாலர் மதிப்பு கொண்ட நிறுவனம்

Flipkart to sell nearly 75 Percent of its stake to Walmart

 

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதலிடத்தில் உள்ள ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் தனது 75 சதவீத பங்குகளை அமெரிக்காவின் பன்னாட்டு சில்லரை நிறுவனமான வால்மார்ட்டுக்கு விற்பதற்கான முடிவை எடுத்துள்ளது. இது சம்மந்தமான தனது சந்திப்பில் இயக்குனர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

வால்மார்ட் நிறுவனத்துடன், கூகுள் ஆல்பபெட் நிறுவனமும் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் அமேசான் நிறுவனமும் இருந்தது. அமேசான் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவன பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2000 கோடி அமெரிக்க டாலராகும். இவற்றில் சுமார் 1500 கோடி டாலர் மதிப்பிலான 75 % பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஜப்பானை சேர்ந்த சாப்ட்பாங்க் (Softbank) நிறுவனமும், சீன நிறுவனமான டென்செண்டும் (Tencent) முதலீடு செய்துள்ளது. இது போக நாஸ்பெர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. பிளிப்கார்ட் – வால்மார்ட் ஒப்பந்த முடிவில், ஜப்பானை சேர்ந்த சாப்ட்பாங்க் நிறுவனம் தனது அனைத்து பங்குகளையும் விற்று விட்டு வெளியேற இருக்கிறது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2007 ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக குழுவின் தலைவராக சச்சின் பன்சால் உள்ளார். இவருடன் மற்றொரு நிறுவனராக பின்னி பன்சால் இருந்தார். பிளிப்கார்ட் விற்பனை தருணத்தில், இணை நிறுவனர் சச்சின் பன்சால் தன்னிடமுள்ள 5.5 % பங்குகளை விற்று விட்டு நிறுவனத்திலிருந்து  வெளியேறும் முடிவில் உள்ளார்.

 

வால்மார்ட் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய  சில்லரை விற்பனை நிறுவனமாகும். இது ஒரு பன்னாட்டு நிறுவனமும் கூட, இதன் வருவாய் 48,600 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமானதாகும். பிளிப்கார்ட் விற்பனைக்கு பிறகு, நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்யாண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிறுவனர் பின்னி பன்சால் வால்மார்ட்டிலும் தொடர்ந்து இருப்பார்கள் என தெரிகிறது.

 

பிளிப்கார்ட் இனி வால்மார்ட் என்ற பெயரில்… !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

ஜியோவின் நான்காவது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி

ஜியோவின் நான்காவது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி

Reliance Jio’s 4th Quarter Profit of Rs. 510 Crores

 

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டிருக்குகிறது. ஜியோ தனது ஆரம்ப நிலையில் நஷ்டத்தை சந்தித்தாலும் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அளித்த சேவை (Rs. 49/- Pack Offer) மூலம் கடந்த இரு காலாண்டுகளில் லாபத்தை நோக்கி சென்றுள்ளது.

 

கடந்த நான்காவது காலாண்டில் (FY 2017-18 – 4th Quarter) ஜியோ நிறுவனம் வருவாயாக 7128 கோடி ரூபாயை எட்டியுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபமாக ரூ. 510 கோடி இருந்துள்ளது. இது இதற்கு முன்னர் இருந்த காலாண்டை காட்டிலும் 1.2 சதவீத லாப வளர்ச்சியாகும். ஏர்டெல் நிறுவனம் கடந்த காலாண்டில் பெற்ற வளர்ச்சியை விட, ஜியோவின் இந்த லாப வளர்ச்சி அதிகமாகும்.

 

ஜியோவின் வரி மற்றும் வட்டிக்கு முந்தைய (EBITDA) வருமானமாக ரூ. 2694 கோடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மூன்றாவது காலாண்டை விட 2.5 சதவீத வளர்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மார்ஜின் 1.1 சதவீதமாக குறைந்துள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நான்காவது காலாண்டில் ஜியோ நிறுவனம் கூடுதலாக 2.65 கோடி புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த காலத்தில் அதன் வாடிக்கையாளர்கள் 2.15 கோடியாக இருந்தனர். மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.66 கோடியாகும்.

 

ரிலையன்ஸ் ஜியோ கடந்த காலாண்டில் லாபமீட்டினாலும் அதன் ARPU (Average Revenue Per User) என்று சொல்லப்படும் ஒரு பயனாளருக்கான சராசரி வருவாய் 11 % குறைந்துள்ளது. தற்போது ஜியோவின் ARPU வருவாய் ரூ. 137 /- ஆக உள்ளது. இருப்பினும் இந்த பயனாளருக்கான வருவாய் ஏர்டெல் நிறுவனத்தை காட்டிலும் அதிகமாக தான் உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ARPU வருவாய் ரூ. 116/- ஆக நிலை கொண்டுள்ளது.

 

ஜியோவின் தரவு போக்குவரத்து (Data Traffic) 4940 கோடி ஜி. பி.(4940 Crore GB) ஆகவும், ஒரு பயனாளரின் தரவு பயன்பாடு சராசரியாக 9700 MB ஆகவும் உள்ளது. குரல் அழைப்பு (Voice Calls) பயன்பாடு வாடிக்கையாளர்  ஒருவருக்கு அதிகபட்சமாக 716 நிமிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே ஏர்டெல் பயனாளிகளுக்கு 670 நிமிட அழைப்புகள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

 

தள்ளுபடி பணப்பாய்வு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 13.0

தள்ளுபடி பணப்பாய்வு மற்றும்  பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 13.0

Discounted Cash Flow and Margin of Safety

Discounted Cash Flow (DCF) Valuation:

 

நீங்கள் ஏதேனும் ஒரு முதலீட்டு சாதனத்தில் (Investment Products) ரூ. 10,000 /- ஐ ஒரு முறை மட்டுமே முதலீடு செய்கிறீர்கள் என வைத்து கொள்வோம். உங்களுக்கு அந்த தொகை பத்து வருடங்களுக்கு பிறகு தான் தேவைப்படுகிறது. பத்துவருட முடிவில் (10 % வட்டியில்) உங்களுக்கு கிடைப்பது ரூ. 25,937/-. நீங்கள் செய்த முதலீட்டை தவிர்த்து பார்த்தால், உங்களுக்கு கிடைத்த முதலீட்டு வருமானம்  – ரூ. 15,937 /- ( 25,937 – 10,000). இந்த முதலீட்டின் மூலம் கிடைத்த 15,937 ரூபாயை நாம் நிகர தற்போதைய வருமானம் (அ) மதிப்பு (NPV – Net present value) என்கிறோம். இதனை போன்று நமது பங்குச்சந்தை நிறுவனத்திலும். நீங்கள் ரூ. 10,000 ஐ ஒரு நிறுவனத்தில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு கிடைக்கும் நிகர தற்போதைய மதிப்பு என்பது அவசியமானது. நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தின் தொழில் மூலம் கிடைக்கும் NPV மதிப்பு நேர்மறையாக இருந்தால், அந்த நிறுவனத்தின் வருவாய் செலவை காட்டிலும் அதிகமாக உள்ளது எனலாம். NPV மதிப்பு சுழியாக அமைந்தால் (பூஜ்யம்) அந்த நிறுவனத்தின் பணப்பாய்வு அறிக்கையின் படி, வரவு-செலவில் மாற்றமில்லை என எடுத்து கொள்ளலாம். NPV மதிப்பு எதிர்மறையாக இருப்பின், நிறுவனத்தின் செலவு வருவாயை காட்டிலும் அதிகமாயுள்ளது எனலாம். இருப்பினும், சில சமயங்களில் ஒரு நிறுவனம் குறிப்பிட்ட வருடத்தில் புது கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்காக செலவு செய்திருக்கலாம்.அதனால் பணப்பாய்வு அறிக்கையை (Cash Flow statement) ஆராய்வது முக்கியமானதாகும்.

 

ஒரு நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகை குறிப்பிட்ட காலத்தில் சரியாக வந்திருந்தால் அந்த நிறுவனத்தின் மற்ற செயல்பாடுகள் நன்றாக இருந்திருக்கும். ஆகையால் நாம் பார்க்க போகும் இந்த முறை பணப்பாய்வு (Cash Flow) அடிப்படையில் அமையும். ஒரு நிறுவனத்தின் அனைத்து செலவினங்களும் போக, உபரியாக எவ்வளவு தொகையை கொண்டிருக்கிறது என்பதை பணப்பாய்வு அறிக்கையில் அறியலாம். இந்த உபரியை Free Cash Flow (FCF) எனலாம். இது ஒவ்வொரு வருடமும் மாறுபடும். இந்த உபரி என்று சொல்லப்படும் Free Cash Flow ஒரு முதலீட்டாளருக்கு தேவையானது. இதனை கொண்டு நாம் ஒரு பங்கின் உள்ளார்ந்த (அ) உண்மையான விலையை அறியலாம்.

 

DCF முறையில் கணக்கிட தேவையானவை:

 

  • எதிர்கால பணப்பாய்வுகளின் வளர்ச்சி மதிப்பீடு (Growth Estimating in FCF)
  • முனைய வளர்ச்சி விகிதம் (TGT – Terminal Growth Rate)
  • தள்ளுபடி விகிதம் (Discount Rate)

 

ஒரு நிறுவனத்தின் Free Cash Flow -FCF மதிப்பினை பெற அதன் பணப்பாய்வு அறிக்கையை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் கிடைக்கும் Net Cash from /(used in) Operating Activities மதிப்பை, Purchase of Fixed Asset ல் கழித்து கிடைப்பது தான் Free Cash Flow. இதனை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு கணக்கிட்டு அதன் சராசரியை அறிந்து வையுங்கள். ஒரு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை நாம் கணிப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. இருப்பினும், நாம் அந்த நிறுவனத்தின் கடந்த கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு, எதிர்காலத்தில் இதனை போன்று அமையலாம் என DCF முறைக்கு எடுத்து கொண்டோம். எதிர்கால வளர்ச்சியாக சுமார் அடுத்த 10 வருட காலங்களை எடுத்து கொள்ளலாம். சராசரியாக முதல் 5 வருடங்களுக்கு வளர்ச்சி 10 % என எடுத்து கொண்டால், அடுத்த 5 வருட காலத்திற்கு அதனை விட குறைவாக எடுத்து கொள்வது ஒரு முதலீட்டாளரான நமக்கு பாதுகாப்பு தான். ஏனெனில் அடுத்த 5 வருடங்களில் நாம் என்ன செய்யலாம் என்பதை எளிதாக முடிவு செய்யலாம், ஆனால் 10 வருடத்தில் என்ன நடக்கும் என்பதை நம்மால் எளிதாக கூற முடியாது, இதே போல தான் ஒரு நிறுவனத்தின் தொழிலுக்கும்.

 

Discounted cash flow

 

உதாரணத்திற்கு, நாம் எடுத்து கொள்ளும் முதல் 5 வருட வளர்ச்சி – 10 %, அடுத்த 5 வருட வளர்ச்சி – 8 %. நாம் இங்கே எடுத்து கொண்ட நிறுவனம் 10 வருட கால கணக்கீட்டிற்கு தான். முனைய வளர்ச்சி(Terminal Growth) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் எதிர்பார்க்கப்படும் பணப்பாய்வு வளர்ச்சியாகும். அதனால் Terminal Growth Rate எனப்படும் முனைய வளர்ச்சியை பொதுவாக, 0 – 2 சதவீதத்திற்கு இடையில் ஒரு மதிப்பை எடுக்கலாம். தள்ளுபடி விகிதம்(Discount Rate) என்பது எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் தொகைக்கு (Future Cash Flows) இன்றைய மதிப்பில் தள்ளுபடி செய்வது. உதாரணத்திற்கு, நாம் முதலீடு செய்திருக்கும் நம் நண்பரின் தொழிலில் ஒரு ஆண்டுக்கு பிறகு கிடைக்கும் Cash Flow தொகை ரூ. 100 என எதிர்பார்த்தால், நமது தள்ளுபடி 5 % ஆக இருக்கும் பட்சத்தில் நாம் தொழிலுக்கு செலுத்த வேண்டிய தொகை – ரூ. 95.23 /- ( 100 / 1.05); தள்ளுபடி 15 % ஆக இருக்கும் போது, நாம் கொடுக்க வேண்டிய தொகை – ரூ. 86.95 /- (100/1.15). இதன் மூலம் நாம் அறிவது, எந்த அளவுக்கு நமது தள்ளுபடி விகிதம் அதிகரிக்கிறதோ, அந்தளவுக்கு நாம் வாங்க வேண்டிய பங்கின் விலைக்கும் விலை குறைவு கிடைக்கும். ஆக 100 ரூபாய் மதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு 15 % தள்ளுபடியில் ரூ. 86.95 /- கொடுத்தால் போதும். அதிக விலைக்கு சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை.

 

இதற்கான சூத்திரம்:

 

DCF = [CF1 / (1+r)1] + [CF2 / (1+r)2] + … + [CFn / (1+r)n]

 

CF = Cash Flow

r = discount rate (WACC – Weighted Average Cost of Capital)

 

(Source: https://www.investopedia.com/terms/d/dcf.asp )

 

Discounted cash flow

பாதுகாப்பு விளிம்பு (Margin of Safety):

 

நீங்கள் ஓட்டப்பந்தய போட்டியில் கலந்து கொள்ள போகிறீர்கள். கலந்து கொள்ளும் முன் என்ன செய்யலாம் ?

 

பொதுவாக பந்தயத்திற்கான வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். பந்தயத்திற்கான தூரம் மற்றும் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் அறிந்து வைப்போம். முக்கியமாக, பந்தயத்திற்கு தயாராகும் விதமாக நமக்கு நாமே பயிற்சி எடுத்து கொள்வோம் அல்லது ஒரு பயிற்சியாளரிடம் கற்று கொள்வோம். இது போன்ற விஷயத்தில் ஒன்றையும் கடைபிடிக்காமல் நம்மால் பந்தயத்தில் வெல்வது, இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெறுவது சாத்தியமில்லை எனலாம். இதனை தான் நாம் பாதுகாப்பு விளிம்பு என்கிறோம். ஒரு செயலை செய்யும் முன், அதற்கான விஷயங்களை தயார்படுத்தி கொண்டால் நமக்கு கிடைக்கும் விளைவு நேர்மறையாக அமையலாம், இல்லாவிட்டாலும் எதிர்மறை விளைவிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளலாம். உதாரணத்திற்கு, நாம் பேருந்தில் பயணம் செய்யும் முன், பயணக்கட்டணத்தை விட சற்று கூடுதல் பணத்தை கையில் வைத்து கொள்வோம். இது ஒரு பாதுகாப்பு அம்சம் கருதி தான் செய்கிறோம். மழை வரும் என கணித்தால், நம்முடன் மழைக்குடையை எடுத்து செல்வோம். நமது வாகனம் மற்றும் வீட்டு கதவுக்கு இரண்டு சாவிகள், நம்மிடம் உள்ள சான்றிதழ்களுக்கு ஒரு நகல் என நாம் ஒவ்வொரு விஷயத்திலும் பாதுகாப்பு கருதி, வரும் முன் காப்போம் செயலை தினமும் செய்து வருகிறோம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இதனை போல தான் பங்குச்சந்தையிலும்; நாம் ஒரு பங்கின் உண்மையான விலையை கணித்தாயிற்று, ஆனால் சந்தையில் நாம் அதன் உண்மையான விலையில் பங்கை வாங்கிய பின், விலை குறைந்தால் என்ன செய்வது ?

 

அதனால் தான் பங்கிற்கும், வரும் முன் காப்போம் செயல்பாடு. உண்மையான விலையிலிருந்து சற்று குறைவான விலையில் பங்கு கிடைத்தால் நமக்கு நல்லது தானே. பங்கின் விலை அதன் உண்மை விலையிலிருந்து இறங்கினாலும், நம் முதலுக்கு ஆபத்து இல்லையே. உதாரணமாக நாம் கண்டறிந்த ஒரு பங்கின் உண்மையான விலை(Intrinsic Value)  ரூ. 100 என வைத்துக்கொள்வோம். சந்தை ஏதோ ஒரு காரணத்தால் இறக்கமடைகிறது. நாம் வாங்கிய பங்கும் இறங்குகிறது (இறக்கத்தில் விலை – ரூ. 85/-). இப்போது நாம் பாதுகாப்பு விளிம்பு அடிப்படையில் (Margin of Safety) 10 % விலையில் வாங்கியிருந்தால் ( 10 % of Rs. 100 = 90 Rs.) நமக்கு பங்கு ஒன்றுக்கு 5 ரூபாய் தான் நஷ்டம். பாதுகாப்பு விளிம்பு 20 % என்றால் (20 % of Rs. 100 = 80 Rs), நமக்கு சந்தை இறங்கினாலும் 5 ரூபாய் லாபம் தான். ஆக, Margin of Safety மூலம் நாம் நமது முதலீட்டை பாதுகாத்து கொள்ளலாம். சரி, எவ்வளவு சதவீதம் Margin of Safety ஆக வைத்து கொள்ளலாம் என கேட்டால், அது ஒரு முதலீட்டாளரின் ரிஸ்க் தன்மையை பொறுத்து தான் அமையும். உங்கள் வயது, வருமானம் மற்றும் நஷ்டத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய மனக்கட்டுப்பாடு போன்றவை தான் இதனை தீர்மானிக்கும். இருப்பினும் ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளராக 20-30 % Margin of Safety எடுத்து கொள்வது நம் பணத்திற்கு பாதுகாப்பானது.

இப்போது நமக்கு புரிந்திருக்கும், ஒரு பங்குக்கு உள்ளார்ந்த மதிப்பும், பாதுகாப்பு விளிம்பும் எவ்வளவு முக்கியமென்று. அதனால் ஒரு நிறுவனத்தின் பங்கை சந்தையில் வாங்கும் முன் பேரம் பேச தயாராகுங்கள்.

பங்குச்சந்தையில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனம் – TCS

பங்குச்சந்தையில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனம் – TCS

India’s First 100 Billion Dollar Company on Market Cap – TCS

 

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான  டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) சமீபத்தில் தான் தனது  2017 ம் வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. காலாண்டு முடிவில் நிறுவனம் லாபமாக ஈட்டிய தொகை ரூ. 6904 கோடி.

 

இதனை தொடர்ந்து TCS நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு லாபத்தின் ஒரு பகுதியாக ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும் அறிவித்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் நேற்று ஒரு முக்கியமான நிகழ்வை ஏற்படுத்தியது.

 

பங்குச்சந்தையில் திரட்டப்படும் Market Capitalisation என்று சொல்லப்படும் சந்தை மூலதனத்தில் 1000 கோடி டாலரை(1000 Crore US Dollar) கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் படைத்தது. உலகளவில் முதல் இடத்தில் ஆப்பிள் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மூலதனம்  87,700 கோடி டாலர் மதிப்புடையதாகும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்த நிறுவனம் 6 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தில் நிலைபெற்று, வார நாள் இறுதியில் 990 கோடி டாலருக்கு சற்று மேலாக முடிவடைந்தது. இந்நிலையில் நேற்றைய வர்த்தகத்தில் 1000 கோடி டாலரை கடந்த முதல் இந்திய நிறுவனமாக மாறியது.

 

TCS நிறுவனம் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் மட்டுமல்லாமல், நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகவும், அதன் கிளைகள் 46 நாடுகளிலும் பரவியிருக்கிறது. நிறுவனத்தின் மரியாதைக்கு ஏற்ப பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 35 % பெண் ஊழியர்கள் இருப்பதும் இந்த நிறுவனத்திற்கு பெருமைக்குரியதாகும்.

 

டாடா குழுமத்தின் லாபத்தில் 85 % பங்கு TCS நிறுவனத்தின் மூலம் கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது. TCS நிறுவனம் உலகின் முதல் 100 மதிப்பு வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாகவும், தற்போது 97 வது இடத்திலும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

உள்ளார்ந்த மதிப்பு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 12.0

உள்ளார்ந்த மதிப்பு  மற்றும் பாதுகாப்பு விளிம்பு  – வகுப்பு 12.0

 

Intrinsic Value and Margin of Safety

 

சென்ற வகுப்பில் ஒரு நிறுவனத்தின் Cash is King என்று சொல்லப்படும் பணப்பாய்வு அறிக்கையை (Cash Flow Statement) பற்றி பார்த்தோம். ஒரு நிறுவனத்துக்கு பண வரவு எவ்வாறெல்லாம் வருகிறது மற்றும் செலவுகள் எப்படி செலவிடப்படுகின்றன என்பதையும் எளிமையாக பார்த்தோம். இந்த பணப்பாய்வு முறையின் தொடர்ச்சியாக தான் இந்த வகுப்பும் இருக்கும். அதனால் பணப்பாய்வு அறிக்கையை புரிந்து கொள்வது அவசியம்.

 

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வின் 10 காரணிகளில் கடைசி காரணியாகவும் மற்றும் மிகவும் அவசியமான காரணியாகவும் இந்த வகுப்பு அமைகிறது. ஒரு நிறுவனத்தின் அல்லது தொழிலின் விற்பனை மற்றும் வருமானம் எவ்வாறு உள்ளது, அவை எப்படி லாபமீட்டுகிறது, முதலீட்டாளரான நமக்கு அதனால் கிடைக்கும் பலன்கள், நிறுவனம் தனது கடனை எவ்வாறு நிர்வகிக்கிறது போன்றவற்றை நாம் கடந்த சில வகுப்பில் காரணிகளாக கற்று கொண்டோம். நிறுவனத்தின் தொழில் அனைத்தையும் அலசி விட்டோம். இனியும் எதற்காக காத்திருக்க வேண்டும், பங்கு வாங்க செல்வோமோ ?

 

அட, நில்லுங்கப்பா…  

 

சந்தையில் தக்காளி வாங்க போயாச்சு; நல்ல தக்காளியை ஒரு கிலோ கணக்கில் எடை போட்டு எடுத்தாச்சு. இனி விலையை பேச வேண்டுமே ?

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

அது தான் இங்கேயும்; ஒரு நிறுவனத்தின் தொழிலை நாம் இதுவரை ஆராய்ந்து பார்த்து விட்டோம். ஒரு தொழிலின் தன்மையை நாம் எவ்வாறு விளக்குவது என்பது நமக்கு தெரியும். ஆனால் அந்த தொழிலுக்கான உரிய விலையை நாம் கொடுக்கிறோமா என்பது முக்கியம். நான்கு கடையில் தக்காளியை பார்த்து விட்டு தான் வாங்குகிறோம். விலையும் முக்கியமல்லவா ! ஒரு நிறுவனத்தின் பங்கு எப்போதும் அதன் சந்தை விலையில் வர்த்தகமாகிறது. இருப்பினும் நமக்கு அந்த விலை கட்டுப்படியாகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

 

இரு கடையில் ஒரே தரம் உள்ள பொருட்கள் விற்கப்படும் போது, நாம் விலையினை வைத்து தான் நமது கொள்முதலை தீர்மானிப்போம். அதனை போலவே பங்குச்சந்தையிலும் பங்கின் விலை என்ன விலையில் விற்றாலும் நமக்கு வருமானம் தருகிற விலையில் வாங்க வேண்டும், அதுவும் நீண்ட கால வருமானம் ! நான் ஏற்கனவே சொன்னது போல, இந்த வகுப்பு தினசரி வர்த்தகம் புரிபவர்களுக்காக (Day Trading) அல்ல. இது ஒரு முதலீட்டாளருக்கான செய்முறை வகுப்பு. நீண்ட காலத்தில் ஒருவர் பயனடைய வேண்டும், அது தான் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வின் சாராம்சம்.

 

சரி, பங்கு வாங்குவதற்கான விலையை எவ்வாறு கண்டறிவது ? அதற்கு முன், பணத்தை பற்றிய ஒரு எளிய விளக்கத்தினை பார்த்து விடுவோம். ஆங்கிலத்தில் ‘ Time value of money ‘ என்ற பணத்தின் கால மதிப்பை அறிகிற முறை ஒன்று உண்டு. அதாவது உங்களிடம் ஒருவர், “ பத்தாயிரம் ரூபாய் உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது. அந்த தொகையை இன்றே வாங்கி கொள்வீர்களா அல்லது ஒரு பத்து வருடத்திற்கு பிறகு வாங்கி கொள்கிறீர்களா ? எப்போது வாங்கினாலும் பணம் எங்களிடம் பத்திரமாக இருக்கும்.” என சொல்கிறார். இப்போது உங்கள் முடிவு என்ன ?

 

99.99 % முடிவு, நாம் இன்றே அந்த பணத்தை பெறுவது தான். மீதம் இருக்கும் 0.01 சதவீதமும் மறுநாளே பெற்று விடுவது தான் 🙂  ஏன், நாம் பத்து வருடத்திற்கு பிறகு, நமக்கு தேவைப்படும் போது வாங்கி கொள்ளலாமே ? ஆனால் நிகழ்காலத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை. ஏனென்றால், நாம் சொன்ன  பணத்தின் கால மதிப்பு(Time value of money) காரணம். இன்றைய ரூ. 100 மதிப்பு பத்து வருடத்திற்கு பிறகு அதே மதிப்பாக இருப்பதில்லை. அதனால் தான் நாம் இன்று  அந்த 10,000 /- ரூபாயை கையில் பெற்று விட்டால் நமது தற்போதைய செலவுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது அதனை ஏதேனும் ஒரு வங்கியில் டெபாசிட் செய்து வட்டி வருமானத்தை பெறலாம். இன்றைய ரூ. 10,000 /- மதிப்பு என்பது பத்து வருடங்களுக்கு பிறகு (7 % பணவீக்கத்தில்) ரூ. 19,671 /- மதிப்பாக இருக்கும். எனவே, இன்றைய பத்தாயிரம் பத்து வருடங்களுக்கு  பிறகு அதே மதிப்பில் கிடைக்காது. காரணம், விலைவாசி உயர்வு தான். நாம் பள்ளிக்காலத்தில் வாங்கிய பொருட்கள் மற்றும் சிறு வயதில் வாங்கி சாப்பிட்ட திண்பண்டங்கள் எல்லாம் இன்று விலை அதிகரித்து தான் இருக்கின்றன, பணவீக்கத்தால் !

 

இதன் கணக்கு சூத்திரம் =   FV = PV X (1+r) ^n

 

FV – Future value, PV – Present value, r – rate of interest or inflation, n –time or number of periods

 

இந்த பணத்தின் கால மதிப்பெல்லாம், நமது பள்ளிப்பருவ கூட்டு வட்டியின் கணக்கு தான். பணத்தின் மதிப்பை மற்றொரு முறை மூலமும் நாம் அறியலாம். இன்றைய ரூ. 10,000 /- பத்து வருட முடிவில் ரூ. 19,671/- ஆக உள்ளது சரி. பத்து வருடங்களுக்கு பிறகு உள்ள ரூ.10,000 /- ன் மதிப்பு இன்று எவ்வளவு ? இதனை தான் தள்ளுபடி மதிப்பு (Discounted Value) என்கிறோம். எதிர்காலத்தில் கிடைக்கும் ஒரு தொகைக்கு இன்றைய மதிப்பு என்ன என்பதை அறிவதே தள்ளுபடி மதிப்பாகும். நமது கணக்கின் படி, 10 வருடங்களுக்கு பிறகு உள்ள ரூ.10,000 /- ன் மதிப்பு, இன்று (7% பணவீக்கம் அல்லது தள்ளுபடி) 5,083/- ரூபாயாகும்.

 

தள்ளுபடி மதிப்புக்கான சூத்திரம் = DPV = FV X (1 + r/100) ^-n

 

DPV – Discounted present value, FV – Future value, r– rate of interest or inflation or discount, n – time or number of periods.

 

தள்ளுபடி மதிப்பு என்பது வேறொன்றுமில்லை; நாம் பார்த்த கூட்டு வட்டியின் தலைகீழ் விகித மதிப்பு தான் தள்ளுபடி மதிப்பாக இருக்கிறது. இந்த தள்ளுபடி மதிப்பு தான் நமது பங்கு வாங்கும் திறனிலும் உள்ளது. சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் விலைக்கு நாம் கொடுக்கும் மதிப்பு நியாயமானது தானா என்பதனை தான் இந்த தள்ளுபடி சொல்கிறது. ஆடித்தள்ளுபடி, தீபாவளி சலுகை, புத்தாண்டு தள்ளுபடி என கடைகளில் அளிக்கப்படும் தள்ளுபடி மதிப்பு எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் உன்னிப்பாக கவனித்தால் பங்கு வாங்குவதும் எளிதாகும். எந்த ஒரு வணிகமும் நஷ்டத்தில் தள்ளுபடியை அறிவிப்பதில்லை,மாறாக தனது லாபத்தில் ஒரு பங்கையே குறைத்து கொண்டு தள்ளுபடி விலையை அறிவிக்கிறது. நாமும் தள்ளுபடியில் தள்ளுமுள்ளு செய்து கொண்டு பின்தொடர்கிறோம். ஆனால் பங்குச்சந்தையில் ஏனோ நாம் தள்ளுபடியை விரும்பமாட்டேன் என்கிறோம். சந்தையில் ஒவ்வொரு காலத்திலும் தள்ளுபடி என்ற ஒரு விஷயம் உண்டு. அதனை தான் சந்தையில் இருப்போர் கரடி (Bear) மூலம் உணர்த்துகின்றனர். அதற்காக கரடி பருவத்தில் நாம் எந்த பங்கையும் வாங்குவது ஒரு சிறந்த முடிவாக இருக்காது. நாம் ஏற்கனவே சொன்னது போல, நமது அடிப்படை பகுப்பாய்வுக்கு உட்பட்டு, வடிகட்டப்பட்ட நல்ல நிறுவனத்தை சந்தை இறக்கத்தில் வாங்க முயற்சிக்கலாம். அப்போது நமக்கு கிடைப்பது தள்ளுபடி விலையில் தான்.

 

Intrinsic Value (உள்ளார்ந்த மதிப்பு):

 

ஒரு நிறுவனம் அல்லது தொழிலின் எதிர்கால பணப்பாய்வு தொகை அனைத்தையும் இன்றைய மதிப்பில் சொல்வது, தள்ளுபடி பணப்பாய்வு (DCF -Discounted Cash Flow) ஆகும். எதிர்காலத்தில் ஒரு நிறுவனம் இவ்வளவு தொகையை சம்பாதிக்கும் அல்லது கொண்டிருக்கும் என்பதை அதன் கடந்த கால வளர்ச்சி அடிப்படையில் கணித்து அதற்கான இன்றைய மதிப்பு என்ன என்பதனை அறிவது தான் நமக்கான வேலை. இந்த மதிப்பு தான் நாம் இன்று வாங்க வேண்டிய பங்கின் விலை ஆகும். இந்த சலுகை விலை அல்லது மதிப்பை தான் ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) எனலாம். ஒரு பங்கு விலையின் உள்ளார்ந்த மதிப்பை அறிய பல கணக்கு முறைகள் நடைமுறையில் இருந்தாலும் சில முறைகளை மட்டும் நாம் இங்கு கணக்கிட்டு பார்ப்போம். இதன் காரணமாக நாம் எந்த குழப்பமும் இல்லாமல் பங்கு வாங்க செல்லலாம்.

 

  • P/E Valuation

  • P/B Valuation

  • Discounted Cash Flow Valuation (DCF)

 

பொதுவாக ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பை கணக்கிட இருவேறு பிரிவுகளை முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுப்பதுண்டு – முழுமையான மதிப்பீடு (Absolute Valuation) மற்றும் ஒப்பீட்டு மதிப்பீடு (Relative Valuation) மாதிரிகள். இரண்டுமே பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு முறையை கொண்டிருந்தாலும், முதல் மதிப்பீடு ஒரு நிறுவனத்தின் ஈவு தொகை, பணப்பாய்வு, வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. மற்றொரு மதிப்பீடு ஈவுத்தொகை தள்ளுபடி, தள்ளுபடி பணப்பாய்வு போன்றவற்றை ஆராய்வதன் மூலம் கிடைக்கப்பெறும்.

 

Price to Earning (P/E):

 

உங்கள் நண்பர் ஒருவர் தன்னிடம் உள்ள புதிய வணிக வளாகம் ஒன்றை விற்கும் நிலையில் உள்ளார் என வைத்து கொள்வோம். நீங்கள் ஒரு முதலீட்டாளர், அதன் காரணமாக நீங்கள் அந்த வணிக வளாகத்தை வாங்கி வாடகைக்கு ஏதும் விடலாமா என யோசிக்கிறீர்கள். வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் மற்றும் வளாகத்தின் உரிமையாளராகும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் நண்பரிடம் சென்று சில தகவல்களை விசாரிக்கிறீர்கள; அவரும் சில தகவல்களை உங்களுக்கு தருகிறார்.

 

வணிக வளாகத்தின் தற்போதைய மதிப்பு  – ரூ. 50 லட்சம்

வளாகத்தில் உள்ள கடைகளின் எண்ணிக்கை – 5

கடை ஒன்றின் மாத வாடகை – ரூ. 5,000 /- ( ஆண்டுக்கு  ரூ. 60,000 /-)

இப்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் – மாதாமாதம் வாடகை வருமானம் பெறுவது மற்றும் சில வருடங்களுக்கு பிறகு வணிக வளாகத்தை நல்ல விலை கிடைத்தால் விற்பது.

 

உங்களுக்கு அந்த வணிக வளாகத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 3,00,000 /- (60,000 X 5 கடைகள்) வாடகை வருமானம் கிடைக்கும். இதனை தான் நாம் ஒரு பங்கின் மீதான வருமானம்(EPS -Earning per share) என்கிறோம். உங்களுக்கு கிடைக்கும் அந்த வாடகை வருமானம், வணிக வளாகத்தின் மொத்த மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 16 மடங்கு (50 லட்சம் / 3 லட்சம் = 16.66) விகிதத்தில் இருக்கும். வளாகத்தின் சொத்து மதிப்பு ஆண்டு வாடகை வருமானத்தை போல 16 மடங்கில் உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த மடங்கு விகிதத்தை தான் நாம் P/E மதிப்பீடு என்கிறோம். உதாரணமாக, வாடகை வருமானம் மாதத்திற்கு ஒரு கடைக்கு ரூ. 5000 /- லிருந்து ரூ. 6000 /- ஆக அதிகரித்தால், ஆண்டு வாடகை வருமானம் – (72000 X 5 கடைகள்) = ரூ. 3,60,000 /- மற்றும் அதன் P/E மடங்கு – 13.8 Times. வாடகை உயர்வதால் P/E மதிப்பீடு மடங்கு குறைவதை நாம் காண்கிறோம்.

 

மாத வாடகை வருமானம் எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனை போல வளாகத்தின் சொத்து மதிப்பும் உயர வாய்ப்புள்ளது. எது உயர்ந்தாலும் இரண்டும் (EPS and P/E) ஒன்றையொன்று சார்ந்துள்ளது. வாடகை அதிகரித்தால், வளாகத்தை விற்கும் போது அதன் மதிப்பும் உயரும். நல்ல விலை தரும்  வளாகமாக இருக்கும் போது, நாம் தாராளமாக அதிக வாடகை வருமானம் பெறக்கூடும்.

 

இதன் மூலம் நாம் அறிவது, குறைந்த P/E மடங்கில் ஒரு பங்கு கிடைப்பது வாய்ப்பாக கருதி, முதலீடு செய்ய ஏதுவாகும். ஒரு நல்ல வளர்ச்சியுள்ள நிறுவனத்தின் P/E மடங்கு சராசரியாக 20-25 மடங்கில் இருக்கலாம். அதே நேரத்தில் அதிவேகமாக வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு இந்த மடங்கு 30-45 அளவில் இருக்கலாம். உதாரணமாக நுகர்வோர் சம்மந்தமான பொருட்கள் (FMCG – Fast Moving Consumer Goods) கொண்ட நிறுவனங்களின் P/E மதிப்பீடு மடங்கு, தேவை காரணமாக பெரும்பாலும் அதிகமாக தான் இருக்கும். இருப்பினும் இது போன்ற நிறுவனங்கள் வாங்குவதற்கு ஏற்றது தான். சில சமயங்களில் வருவாய் ஏதும் ஈட்டாத நிறுவனங்களுக்கும் P/E மடங்கு மிக குறைவாக இருப்பது போல தோன்றும். இதனை போன்ற நிறுவனங்களை தவிர்த்தல் நல்லது. ஆகையால் P/E மடங்கு குறைவாக இருந்தால் ஒரு முதலீட்டாளருக்கு நல்லது, அதே சமயத்தில் நாம் பார்த்த மற்ற காரணிகளையும் ஒப்பிட்டு பார்த்து ஒரு பங்கினை வாங்க வேண்டும். P/E மடங்கில் விலை குறைவாக உள்ளதே என்று வாங்க வேண்டாம்.

 

Price to Book Value (P/Bv):

 

புத்தக மதிப்பை பற்றி நாம் ஏற்கனவே முந்தைய வகுப்புகளில் பார்த்தோம். நமது பங்கு விலை மதிப்பீட்டில் இது எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கு காண்போம். ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பை தான் நாம் புத்தக மதிப்பு என்கிறோம். நிறுவனத்தின் சொத்துகளிலிருந்து அதன் கடன்களை கழித்தால் கிடைப்பது புத்தக மதிப்பு எனலாம்.

 

ஒரு நிறுவனத்தின் பங்கின் சந்தை விலை அதன் புத்தக மதிப்பில் எத்தனை மடங்கு இருக்கிறது என்பதை தான் P/Bv மதிப்பீடு சொல்கிறது. புத்தக மதிப்பை பெற, ஒரு நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையில் (Balance Sheet) கிடைக்கும் மூலதனம் மற்றும் கையிருப்பு – உபரித்தொகையை சேர்த்தால் வருவது.

 

புத்தக மதிப்பு = மூலதனம் (Equity Capital) + கையிருப்பு மற்றும் உபரித்தொகை (Reserves and Surplus)

 

ஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு ஒரே அளவில் இருப்பதில்லை. பெறப்படும் மூலதனம் மற்றும் கையிருப்பு தொகை மாற்றத்தை பொறுத்து இதன் மதிப்பும் மாற்றமடையும். இந்த தொகை முழுவதும் நம்மை போன்ற முதலீட்டாளர்களால் உருவாக்கப்பட்டது. இந்த புத்தக மதிப்பில் உள்ள தொகை அனைத்துமே பெரும்பாலான சமயங்களில் முதலீட்டாளரை சார்ந்தது. அதனால் தான் ஒரு நிறுவனம் ஏதேனும் காரணத்தால் விற்கப்படும் போது, முதலீட்டாளருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை புத்தக மதிப்பு காட்டுகிறது.

பொதுவாக, ஒரு பங்கின் புத்தக மதிப்பு அதிகமாக இருப்பது நல்லது தான். அதே நேரத்தில் ஒரு பங்கின் விலையில் அதன் புத்தக மதிப்பு மடங்கு (P/Bv) குறைவாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு பங்கின் விலை – ரூ. 100 மற்றும் அதன் புத்தக மதிப்பு – 25 என எடுத்து கொண்டால், அதன் P/Bv மதிப்பீடு மடங்கு – 4 Times (100 /25). எனவே, பங்கின் விலை புத்தக மதிப்பை போல 4 மடங்கில் உள்ளதை காட்டுகிறது. அதிக P/Bv மடங்கு உள்ள நிறுவனத்தின் பங்கு அதிக விலையில் வர்த்தகமாகிறது என்பதை விளக்குகிறது. அதே சமயத்தில் சில நிறுவனங்கள் தனது அறிக்கையில் புத்தக மதிப்பை அதிகரித்து காண்பிக்கும், ஆனால் வருமானம் குறிப்பிடும்படி இருக்காது. இதனை நாம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற நிலையில் குறைவான P/Bv மதிப்பீடு மடங்கை தவிர்ப்பது நன்று.

 

P/E மதிப்பீடு மடங்கை போல், P/Bv மடங்கையும் தனியாக எடுத்து கொண்டு ஒரு பங்கின் விலைக்கு ஆராய கூடாது. முடிந்தவரை மற்ற எல்லா அடிப்படை காரணிகளையும் அலசி விட்டு, P/E அல்லது P/Bv மதிப்பீடு மடங்கிற்கு வருவது ஒரு முதலீட்டாளராக நமக்கு நல்லது.

 

அடுத்து வரும் வகுப்பில் மற்றொரு முறையான Discounted Cash Flow மதிப்பீடு மற்றும் Margin of Safety ஐ பார்ப்போம்.

TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை

TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை

1:1 Bonus issue for TCS Shareholders approved by Board

 

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) தனது 2017 ம் நிதி வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று (19-04-2018) வெளியிட்டது. கடந்த ஜனவரி-மார்ச் காலத்தில் நிறுவனம் லாபமாக ரூ. 6904 கோடியை சம்பாதித்துள்ளது.

 

TCS நிறுவனம் அதன் முந்தைய காலத்தில் (Oct-Dec’ 2017) ஈட்டிய லாபம் ரூ. 6620 கோடியாகும். இதனை ஒப்பிடும் போது, தற்போதைய முடிவுகளின் லாபம் 4.50 % வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த வருமானம் நான்காம் காலாண்டில் ரூ. 32,075 கோடியாகவும், இது ஆண்டுக்கு(கடந்த வருட காலாண்டு)  8.2 % வளர்ச்சியாகவும் உள்ளது.

 

அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 3.93 % இருந்ததாகவும், ஜூலை-செப்டம்பர் மாத காலத்தில் இது 4.29 % இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

 

லாபத்தின் பங்காக நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு: ஒரு பங்குக்கு ரூ. 29 /- (Final Dividend) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும்(Bonus Issue Ratio 1:1) சொல்லப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நிலவிய தேவைகள் மற்றும் நிறுவனத்தின் ஒப்பந்த பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெற்றிகள் போன்றவை நான்காவது காலாண்டு முடிவை ஒரு சிறப்பானதாக மாற்றியது எனவும் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

காலாண்டு முடிவுகள் நேர்மறையாக இருந்ததை தொடர்ந்து இன்றைய பங்கு சந்தையில் TCS நிறுவனத்தின் பங்கு 1 % ஏற்றத்தில் முடிவடைந்தது. TCS நிறுவனம் 1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிலான சொத்துக்களை நிர்வகிக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India

பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India

Equity profits of Rs. 25,000 Crore by LIC India

கடந்த டிசம்பர் 2017 மாத இறுதி புள்ளிவிவரப்படி, LIC India (Life Insurance Corporation of India) ன் பங்கு சார்ந்த சொத்து மதிப்பு ரூ. 5 லட்சம் கோடியாகும். இவை பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் அடங்கிய சொத்துக்களாகும். எல்.ஐ.சி. நிறுவனம் கடந்த 2017-18 ம் நிதியாண்டில் பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் ரூ. 25,000 கோடியை லாபமாக பதிவு செய்துள்ளது.

 

2015-16 ம் நிதி காலத்தில் பங்குகள் மூலம் ரூ. 11,000 கோடியை லாபமாக எல்.ஐ.சி நிறுவனம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-17 ம் நிதி ஆண்டில் ரூ. 19,000 கோடியை லாபமாக பங்குகள் மூலம் பெற்றது. இதனை ஒப்பிடுகையில் அதன் பங்கு மூலமான லாபம் ரூ. 19,000 கோடியிலிருந்து ரூ. 25,000 கோடியாக அதிகரித்துள்ளது(Equity Trading Profit).

 

LIC India நிறுவனம் 2017-18 ம் நிதியாண்டில் பங்கு சந்தையில் மட்டும் ரூ. 80,000 கோடியை முதலீடு செய்தது. இந்த முதலீடு முதன்மை சந்தையில் முதலீடு மற்றும் அரசாங்க நிறுவனத்தில் முதலீடு போன்றவையாக இல்லை. முதன்மை சந்தை மற்றும் அரசாங்க பங்கு விலக்கல் போன்ற முதலீடுகளை எடுத்து கொண்டால் அவற்றில் சுமார் 60,000 கோடியை தனியாக முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த சில காலங்களாக பங்குச்சந்தையில் முதலீடு அதிகரித்து வந்ததால், LIC நிறுவனத்துக்கு விற்பனைக்கான வாய்ப்பும், அதிக லாபமும் பெற முடிந்தது. கடந்த 2017 நிதி வருடத்தின் படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு 11 % லாபத்தை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த வருடத்தின் ஜனவரி – மார்ச் (இறுதி காலாண்டு 2017-18) காலத்தில் சென்செக்ஸ் 3 % சரிவை கண்டுள்ளது.

 

LIC India க்கு கிடைத்த லாபம், அந்த நிறுவனத்தில் பங்கு சார்ந்த காப்பீடு பெறும் முதலீட்டாளருக்கு சாதகமான அம்சமாகும். இருப்பினும் காப்பீடு பெற்றுள்ளோருக்கு இது போனஸ் தொகையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

 

எல்.ஐ.சி. பெறும் முதல் வருட காப்பீட்டாளரின் தொகை மட்டும் ரூ. 45,000 கோடியாகும். இந்த தொகை அதன் ஆண்டு வளர்ச்சியில் 15 % என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மார்ச் மாத சில்லரை பணவீக்கம் 4.28 சதவீதமாக குறைந்தது – March 2018

மார்ச் மாத  சில்லரை பணவீக்கம் 4.28 சதவீதமாக குறைந்தது – March 2018

Retail Inflation India eases to 4.28 % on March 2018

 

2017-18 ம் நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச்சில் நாட்டின் சில்லரை பணவீக்க விகிதம் 4.28 % ஆக இருந்தது. கடந்த பிப்ரவரி 2018 மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த பணவீக்கம் 0.16 சதவீதம் குறைவாகும். பிப்ரவரி மாதத்தில் சில்லரை பணவீக்கம் 4.44 % ஆகவும், ஜனவரி மாதத்தில் 5.07 % ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மார்ச் மாத பணவீக்கம் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, 5 மாத குறைவாகும். உணவு  பொருட்களின் விலை குறைவால் இந்த பணவீக்க விகிதம் ஏற்பட்டதற்கான காரணமாக உள்ளது.

 

உணவுப்பொருட்களின் பணவீக்கம் கடந்த மாதத்தில் 2.81  சதவீதமாகவும், பிப்ரவரியில் 3.26 சதவீதமாகவும் இருந்தது. எரிபொருள் மற்றும்  மின்சார பணவீக்கம் 5.73 % ஆக இருந்தது. இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.8 % ஆக நிலை கொண்டிருந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

காய்கறிகளின் பணவீக்கமும் 17.57 சதவீதத்திலிருந்து மார்ச் மாதத்தில் 11.7 % சதவீதமாக சரிந்தது. அதே நேரத்தில் பழங்களின் பணவீக்கம் 4.8 % லிருந்து 5.78 சதவீதமாக உயர்ந்தது.

 

துணிமணி  மற்றும் காலணிகள் பணவீக்கம் 4.91 % இருந்தது. இதுவே பிப்ரவரியில் 5 சதவீதம் என்ற அளவில் அமைந்தது. பருப்பு வகைகளின் பணவீக்கம் -17.35 % லிருந்து மார்ச்சில் -13.41 சதவீதமாக இருந்தது.

 

இடைக்கால பணவீக்க விகித முறையில், கிராமப்புற பகுதிகளில் 4.44 % ஆகவும், நகர்ப்புற பகுதிகளில் 4.12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆக இருக்கும் – ஆசிய வளர்ச்சி வங்கி

2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆக இருக்கும் – ஆசிய வளர்ச்சி வங்கி

India GDP growth at 7.3 % for FY 2018-19 – Asian Development Bank

 

பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2018-19 ம் நிதியாண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இதனிடையே ஆசிய வளர்ச்சி வங்கி இன்று தனது வெளியீட்டில் கூறியதாவது, நடப்பு 2018-19 ம் நிதியாண்டில் இந்தியாவின் GDP என்று சொல்லக்கூடிய பொருளாதார வளர்ச்சி 7.3 % ஆக இருக்கும் என கணித்துள்ளது.

 

2019-20 ம் நிதி ஆண்டில் இதன் தொடர்ச்சியாக 7.6 சதவீதமாகவும், அதற்கு அடுத்த வருடத்தில் 7.8 % ஆக இருக்கும் எனவும் ஆசிய வளர்ச்சி வங்கி மதிப்பிட்டுள்ளது. பணமதிப்பிழப்புக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் இந்த பொருளாதார வளர்ச்சி விகித எதிர்பார்ப்பாக உள்ளது என சொல்லப்பட்டுள்ளது.

 

GST(Goods and Service Tax) உற்பத்தி அதிகரிப்பு, வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் மற்றும் முதலீட்டு மறுசீரமைப்பு போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

பணமதிப்பிழப்புக்கு பின், கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 % ஆக இருந்தது. புதிய வரி விகித மாற்றங்களும் வருங்கால வளர்ச்சிக்கு துணைபுரியும்.

 

பொதுவாக சொல்லப்பட்ட வளர்ச்சியானது, கிராமப்புற நுகர்வு, நிதி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் எளிமையான கொள்கை, ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணைபுரியும் விதத்தில் இருக்கும்.

 

அதே சமயத்தில் நகர்ப்புற நுகர்வும் மேம்படும் மற்றும் உள்கட்டமைப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்றவை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil