TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகை
1:1 Bonus issue for TCS Shareholders approved by Board
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழும் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS – Tata Consultancy Services) தனது 2017 ம் நிதி வருடத்திற்கான நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று (19-04-2018) வெளியிட்டது. கடந்த ஜனவரி-மார்ச் காலத்தில் நிறுவனம் லாபமாக ரூ. 6904 கோடியை சம்பாதித்துள்ளது.
TCS நிறுவனம் அதன் முந்தைய காலத்தில் (Oct-Dec’ 2017) ஈட்டிய லாபம் ரூ. 6620 கோடியாகும். இதனை ஒப்பிடும் போது, தற்போதைய முடிவுகளின் லாபம் 4.50 % வளர்ச்சியாகும். நிறுவனத்தின் மொத்த வருமானம் நான்காம் காலாண்டில் ரூ. 32,075 கோடியாகவும், இது ஆண்டுக்கு(கடந்த வருட காலாண்டு) 8.2 % வளர்ச்சியாகவும் உள்ளது.
அக்டோபர்-டிசம்பர் மாத காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 3.93 % இருந்ததாகவும், ஜூலை-செப்டம்பர் மாத காலத்தில் இது 4.29 % இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
லாபத்தின் பங்காக நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் எடுக்கப்பட்ட முடிவு: ஒரு பங்குக்கு ரூ. 29 /- (Final Dividend) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் TCS பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கு சலுகையும்(Bonus Issue Ratio 1:1) சொல்லப்பட்டுள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நிலவிய தேவைகள் மற்றும் நிறுவனத்தின் ஒப்பந்த பரிமாற்றத்தில் ஏற்பட்ட வெற்றிகள் போன்றவை நான்காவது காலாண்டு முடிவை ஒரு சிறப்பானதாக மாற்றியது எனவும் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
காலாண்டு முடிவுகள் நேர்மறையாக இருந்ததை தொடர்ந்து இன்றைய பங்கு சந்தையில் TCS நிறுவனத்தின் பங்கு 1 % ஏற்றத்தில் முடிவடைந்தது. TCS நிறுவனம் 1968 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று சுமார் 1800 கோடி அமெரிக்க டாலர் அளவிலான சொத்துக்களை நிர்வகிக்கிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை