மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு – முனைப்பில் பாரத ரிசர்வ் வங்கி

மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு – முனைப்பில் பாரத ரிசர்வ் வங்கி 

Repo rate cut may again – RBI Monetary Policy

 

தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி பாரத ரிசர்வ் வங்கி(RBI) 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7 சதவீதமாக குறைத்தது. வாகன துறை வீழ்ச்சி, நுகர்வு தேவை குறைந்து வருவது (Weak Consumption Demand) மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் இப்போது வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை போன்றவை மொத்த உள்நாட்டு வளர்ச்சி மதிப்பீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், மத்திய அரசு சார்பில் 5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கும், அதனை சார்ந்து பொதுத்துறை பங்கு விலக்கல்(Disinvestment), வங்கிகள் மற்றும் நிதி சேவையில் உள்ள சிக்கல்களை களையவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் Ernst & Young India(EY) குழு சார்பில் சொல்லப்பட்ட மதிப்பீடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு வருடத்திலும் 9 சதவீத வளர்ச்சியை கொண்டிருந்தால் மட்டுமே 5 டிரில்லியன் பொருளாதார இலக்கு சாத்தியம் என சொல்லப்பட்டுள்ளது.

 

பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு செயல்பாடுகள் சென்று கொண்டிருந்தாலும், மத்திய ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மத்திய நிதி கொள்கை குழு கூட்டம்(Monetary Policy Committee) கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

 

கூட்டத்தின் கடைசி நாளான இன்று, ரெப்போ வட்டி(Repo Rate) விகிதத்தில் மாற்றம் இருக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படலாம். பணவீக்க விகிதத்தை 4 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையிலும் ரிசர்வ் வங்கி முக்கியத்துவம் பெறுகிறது. 

 

கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation CPI) 3.18 சதவீதமாக உள்ளது. இதுவே கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 4.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாகவும் இருக்கிறது. இன்று ரெப்போ விகிதம் 25 புள்ளிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 3.25 % – 3.50 % என்ற அளவில் உள்ளது. ரொக்க கையிருப்பு விகிதம்(CRR) 4 சதவீதமாகும். நடப்பு வருட மழைப்பொழிவு பரவலாக இல்லை என்பதும், உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை ஆகியவை இந்திய சந்தைக்கு சாதகமாக இல்லை. அமெரிக்க-சீன வர்த்தக போரும் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்காக வட்டி குறைப்பை அறிவிக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

பணவீக்க மதிப்பை வெளியிட முடியாத நாடாக ஜிம்பாப்வே

பணவீக்க மதிப்பை வெளியிட முடியாத நாடாக ஜிம்பாப்வே 

The country withholding Inflation data – Zimbabwe

 

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு தான் ஜிம்பாப்வே. காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பெயர் போன இந்நாடு, கடந்த சில வருடங்களாக பொருளாதார உலகில் தனது பெயரை பதித்து வருகிறது.

 

பட்ஜெட் பற்றாக்குறையால் திண்டாடும் ஜிம்பாப்வே, முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்காவின் சக்தி வாய்ந்த பொருளாதார நாடாக விளங்கியது. தவறான நிதி நிர்வாகம் மற்றும் ஊழல் ஆகியவற்றால் இந்நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளது. நாட்டின் வருவாய் நிக்கல்(Nickel), பிளாட்டினம், வைரம் மற்றும் புகையிலை ஏற்றுமதி மூலம் பெறப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நூறு ட்ரில்லியன் டாலர் நோட்டை(100 Trillion Dollar Currency Note) அடித்த பெருமை, ஜிம்பாப்வே நாட்டையே சேரும். தவறான பணமதிப்பிழப்பு கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்தது. இன்று அந்நாட்டில் நீர் ஆதாரம் மற்றும் பொருளாதரம் சார்ந்த விஷயங்கள் மோசமாக உள்ளன.

 

கடந்த 2018ம் வருடம் ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(சில்லரை விலை – CPI) 4.29 சதவீதமாக இருந்தது. அந்நாட்டில் விலைவாசி கிடு கிடுவென ஏறி, இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டின் பணவீக்க மதிப்பு 175.66 சதவீதமாக உள்ளது. 2009ம் ஆண்டில் இந்த நாட்டின் பணவீக்கம் (-7.50) சதவீதமாக இருந்துள்ளது. இதனை பணவாட்டம்(Deflation) என்று சொல்லலாம்.

 

உணவு பொருட்களின் அதிகபட்ச விலை உயர்வால் தான் நாட்டின் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் உணவு பொருட்களின் பணவீக்கம் 252 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் தவிர வீட்டு மனை, போக்குவரத்து மற்றும் இதர சேவைகளில் விலைவாசி அதிகரித்துள்ளது.

 

ஜிம்பாப்வே நாடு 2009ம் ஆண்டில் அமெரிக்க டாலரை தனது நாட்டின் மதிப்பாக ஏற்று கொண்டது. இதனை அடுத்து கடந்த 2015ம் வருடம் பணமதிப்பிழப்பு(Demonetization) நிகழ்வும் ஜிம்பாப்வே நாட்டில் ஏற்பட்டது. இந்த இரண்டு கொள்கைகளும் இந்நாட்டிற்கு சாதகமாக அமையவில்லை எனலாம்.

 

ஏறி கொண்டிருக்கும் விலைவாசியால், இந்நாடு தனது பணவீக்க மதிப்பு வெளியீட்டை ஒத்தி வைத்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணவீக்க விவரங்கள் வெளியிடப்படாது எனவும், பொருளாதாரம் சார்ந்த சில தகவல்களை அரசு சேகரிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஐ.டி.சி. நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 3,174 கோடி

ஐ.டி.சி. நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 3,174 கோடி 

ITC Quarterly Net profit to Rs. 3,174 Crore – Q1FY20

 

பல்துறையில் தொழில் செய்து வரும் ஐ.டி.சி. நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாத காலாண்டில் நிறுவன வருவாய் 11,503 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 6,937 கோடியாகவும் இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் இயக்க லாபம்(Operating profit) ரூ. 4,566 கோடி. கடந்த வருட ஜூன் காலாண்டில் ரூ. 4,202 கோடியாக இருந்தது. இதர வருமானமாக 620 கோடி ரூபாய் காணப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 4,812 கோடியாகவும், முதலாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net profit) ரூ. 3,174 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

புகையிலை, உணவு மற்றும் தனிநபர் பராமரிப்பு(Personal Care) பொருட்களில் 6 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது. ஹோட்டல் துறையில் நிறுவன வருவாய் 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயம் சார்ந்த பொருட்களில் 15 சதவீத வளர்ச்சியும், காகிதம்(Paper Segment) சார்ந்த தொழிலில் நிறுவனத்தின் வருவாய் 13 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

ஏற்கனவே ஐ.டி.சி. நிறுவனம் புகையிலையை குறைத்து உணவு மற்றும் இதர நுகர்வோர்  சார்ந்த பொருட்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து அதன் வருவாயும் மாறுபட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி சராசரியாக 6 சதவீதம் உள்ளது. பத்து வருட காலத்தில் இது 11 சதவீதமாக காணப்படுகிறது.

 

ஐ.டி.சி. நிறுவன லாப வளர்ச்சி ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருடங்களில் 14 சதவீதமாக உள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருட காலத்தில் 24.75 சதவீதமும், பத்து வருடங்களில் 27.50 சதவீதமும் வருவாயை கொடுத்துள்ளது.

 

கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,819 கோடியாக இருந்த நிலையில், தற்போதைய லாபம் 13 சதவீத வளர்ச்சியாகும். ஐ.டி.சி. நிறுவனத்திற்கு கடன்கள்(Debt Free) என்று பெரிதாக எதுவுமில்லை. இதன் சந்தை மதிப்பு 3.5 லட்சம் கோடி ரூபாய். மார்ச் 2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 56,724 கோடி ரூபாயாக கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை

20 நாட்களில் 200 பில்லியன் டாலர்களை இழந்த இந்திய பங்குச்சந்தை 

The Indian Stock Market lost $ 200 Billion in 20 days – Economic Slowdown

 

தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிப்டி(Nifty50) கடந்த ஜூன் மாதத்தில் தனது வாழ்நாள் உச்சமாக 12,100 புள்ளிகளை அடைந்தது. நேற்று (01-08-2019) நிப்டி50 குறியீடு 138 புள்ளிகள் குறைந்து 10,980 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்து கொண்டது. இதே போல மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ்(Sensex) குறியீடு, ஜூன் மாதத்தில் வாழ்நாள் உச்சமாக 40,310 புள்ளிகள் வரை சென்றது. நேற்று சென்செக்ஸ் குறியீடு 37,018 புள்ளிகள் என்ற அளவில் முடிந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த நான்கு வாரங்களில் நிப்டி50 சுமார் 1220 புள்ளிகளும், மும்பை சந்தையின் சென்செக்ஸ் 3,300 புள்ளிகளும் இறக்கத்தை கண்டுள்ளன. அதாவது வர்த்தகமான கடந்த 20 நாட்களில் இந்திய பங்குச்சந்தை சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிலான மதிப்பை இழந்துள்ளது எனலாம். இந்திய மதிப்பில் சுமார் 13.85 லட்சம் கோடி ரூபாய்.

 

நாட்டின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறாத நிலையில், அதனை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையும் இறக்கம் கண்டது. ஜூலை மாதத்தில் பெரும்பாலான பங்குகள் 20 சதவீதத்திற்கும் மேல் இறக்கத்தில் முடிந்தது கவனிக்கத்தக்கது.

 

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை(Economy Slowdown), நாட்டில் உள்ள தொழில், வேலை வாய்ப்பு மற்றும் வாகன துறைக்கு தேவையான மத்திய அரசின் முடிவுகள் எட்டப்படாதது ஆகியவை சந்தையை பாதித்துள்ளன. அரசு சார்பில் மின்சார வாகனத்திற்கு வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏற்கனவே சந்தையில் இருக்கும் வாகனங்களுக்கு வரி சலுகை குறைப்பு ஏற்படாத நிலையில் இந்த துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

 

வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் தொடர்ச்சியாக வருவாய் குறைந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணமாக மத்திய அரசு சரியான கொள்கைகளை வகுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. அதே வேளையில், அடுத்த ஓரிரு வருடங்களில் இந்த நிலை சரிசெய்யப்பட்டு, வாகன துறை மற்றும் நாட்டில் உள்ள மற்ற தொழில்கள் மேம்படும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிப்பு சாதகமாக இல்லை. இதன் காரணமாக கடந்த மாதத்தில் சுமார் 16,870 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறி உள்ளனர். இருப்பினும் ஜூலை மாதத்தில் உள்நாட்டு முதலீடு 20,400 கோடி ரூபாய் சந்தைக்குள் வந்துள்ளது.

 

கடந்த ஒரு மாதத்தில் தேசிய பங்குச்சந்தை நிப்டி 7.5 சதவீதமும், சென்செக்ஸ் 6.7 சதவீதமும் இறக்கத்தை கண்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் சந்தை இறங்கும் பட்சத்தில், நிப்டி(Nifty) 10,600 மற்றும் 10,480 புள்ளிகளை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சந்தையில் தற்போது குறுகிய காலத்தில் முதலீடு செய்யாமலிருப்பது நல்லது. நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து 10-20 சதவீத இறக்கத்தில் சிறுக சிறுக முதலீடு செய்து வரலாம். வாகன துறை கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதமும், ஒரு வருட காலத்தில் 38 சதவீதமும் இறக்கத்தில் உள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

யார் இந்த காபி டே நிறுவனர் – சித்தார்த்தா ?

யார் இந்த காபி டே நிறுவனர் – சித்தார்த்தா ?

The Story of Cafe Coffee Day Founder – V G Siddhartha 

 

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிறந்தவர் வி.ஜே. சித்தார்த்தா ஹெக்டே(Siddhartha Hegde). இள வயது முதலே துடிப்பாக விளங்கிய சித்தார்த்தா தனது முதுகலை பட்டப்படிப்பை பொருளாதாரத்தில் பெற்றார். தனது 24வது வயதில் ஜே.எம். மார்கன் ஸ்டான்லி (அப்போது J M Financial) நிறுவனத்தின் மேலாண்மை பிரிவில் பணியாளராக சேர்ந்தார்.

 

சித்தார்த்தாவின் குடும்பம் காபி தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தாலும், தனது தந்தையிடம் ரூ. 30,000 ஐ முதலீடாக பெற்று கொண்டு, பங்குகளை வாங்க ஆரம்பித்தார். பின்னர் 1999ம் ஆண்டு சிவன் செக்யூரிட்டீஸ் என்ற பெயரில் நிதி சேவை தொழிலில் களமிறங்கினார். இதனிடையே 1993ம் வருடம் எ.பி.சி.(Amalgamated Bean Company) என்ற காபி வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எ.பி.சி. நிறுவனம் ஆண்டுக்கு 28,000 டன்கள் காபியை ஏற்றுமதி செய்து வந்தது. அப்போதே நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 25,000 கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்தது. நிறுவன லாபத்தினை கொண்டு சுமார் 12,000 ஏக்கர் அளவை கொண்ட காபி தோட்டத்தை வாங்கினார் சித்தார்த்தா.

 

1996ம் ஆண்டு வாக்கில் சித்தார்த்தா காபி சிற்றுண்டி சாலை ஒன்றை துவக்கினார். இது தான் தற்போதைய கஃபே காபி டே(Cafe Coffee Day) நிறுவனம். காபி டே சிற்றுண்டி சாலையில் வாரத்திற்கு 50,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட காபி டே கிளைகள் உள்ளன. 

 

நிதி சேவையில் தான் ஆரம்பித்த சிவன் செக்யூரிட்டீஸ் நிறுவனம், தற்போது Way2Wealth செக்யூரிட்டீஸ் என்ற பெயராக மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. இளம் வயதில் அயராத உழைப்பு, கனிவான சேவை போன்றவற்றால் சித்தார்தாவின் தொழில் விரிவடைந்தது. ஐ.டி. துறை, மரச்சாமான்கள்(Daffco Furniture), சரக்கு போக்குவரத்து, வாழைப்பழ ஏற்றுமதி(Banana Exports) என பல தொழில்களில் கால்பதித்தார்.

 

காபி வர்த்தகத்தில் கர்நாடக மாநிலத்தின் முதல் தொழில்முனைவோராகவும், காபி ஏற்றுமதி மற்றும் உள்நாட்டில் காபி நுகர்வில் இவருடைய பங்கு முக்கியத்துவமாக இருந்தது. 2003ம் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோராகவும், 2011ம் ஆண்டின் சிறந்த அடுத்த தலைமுறை(NextGen) தொழிலதிபராகவும் சொல்லப்பட்டார்.

 

தொழிலில் வெற்றிகரமாக சித்தார்த்தா செயல்பட்டு வந்தாலும், 2017ம் வருடத்தில் இவரது நிறுவன கிளைகளில் நடந்த வருமான வரி சோதனை பல சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியது. சமீபத்தில் மைண்ட் ட்ரீ(Mind Tree) நிறுவனம் எல் & டி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் இவருக்கு பங்குகள் மற்றும் இயக்குனர் குழுவில் பொறுப்புகள் இருந்த நிலையில், நிறுவன கையகப்படுத்துதலில் சித்தார்த்தாவிற்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்பட்டது. முடிவில் காபி டே நிறுவனம், மைண்ட் ட்ரீ பங்குகளை விற்று விட்டு சென்றது.

 

சில மாதங்களுக்கு முன்பு, காபி டே நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை கோகோ கோலா(Coco Cola) நிறுவனம் வாங்குவதற்கான பேச்சு நடைபெற்றது. இவற்றிலும் சித்தார்தாவிற்கு அதிருப்தி இருந்துள்ளது. கடந்த 29ம் தேதி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட காபி டே நிறுவனர் சித்தார்த்தா நேற்று காலை (31-07-2019) மங்களூரு நேத்ராவதி ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

 

24 வயதில் துடிப்பாக செயல்பட்ட இளைஞர், தனது 60ம் வயதில் நேற்று மர்மமான முறையில் வாழ்வு முற்று பெற்றது. இறப்பிற்கு முன்பு, தனது நிறுவன அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில் தான் தொழில்முனைவோராக தோல்வியடைந்து விட்டதாகவும், சமீப காலமாக பல நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

 

இன்றும் காபி டே கடைகள், பல சிறு தொழில்முனைவோர்களின் தொழில் பேசும் மன்றமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொழிலதிபர்களில் மிகவும் கனிவான பேச்சையும், காபி டே பணியாளர்கள், வாடிக்கையாளர்களை புன்னைகையுடன் வரவேற்கும் நிகழ்வும் சித்தார்தாவின் நினைவுகளாக கூறப்படுகிறது.

 

சிறு தொழில்முனைவோர்களான விவசாயிகள் தங்கள் தொழில்களை செய்ய முடியாமல் மோசமான முடிவுகளை எடுக்கும் நிலையில், தற்போது பெரிய நிறுவன தொழிலில் ஈடுபட்டுள்ள இவரை போன்றோரின் மரணமும் தொழிலுலகிற்கு பாதகமானது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

டி.எஸ்.ஐ.ஜே. நிறுவனத்தின் ஒன்பது முதலீட்டு பொன்விதிகள்

டி.எஸ்.ஐ.ஜே. நிறுவனத்தின் ஒன்பது முதலீட்டு பொன்விதிகள் 

DSIJ’s Nine Golden Rules for Stock Investing

 

புனே நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான் டி.எஸ்.ஐ.ஜே (Dalal Street Investment Journal). 1986ம் ஆண்டு நிதி சார்ந்த பத்திரிகையை தொடங்கிய இந்நிறுவனம் இன்று பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் நேற்று (28-07-2019) மதுரை ஜே.சி. ரெசிடென்ஸி (JC Residency) விடுதியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

டி.எஸ்.ஐ.ஜே. நிறுவனத்துடன் சுந்தரம் பரஸ்பர நிதி(Sundaram Mutual Fund) நிறுவனமும் கூட்டமைத்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டது. நிகழ்வில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான பல விஷயங்கள் எடுத்து சொல்லப்பட்டது. பங்குச்சந்தைக்கு புதிதாக வருகை தரும் முதலீட்டாளர்கள் எவ்வாறான முன்னெச்சரிக்கைகளை கையாள வேண்டும் என சொல்லப்பட்டது.

 

மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் தற்போது காணப்படும் வாய்ப்புகள் மற்றும் அதனை சார்ந்த பங்கு மதிப்பீட்டு விஷயங்களும் அலசப்பட்டது. தனிநபர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பங்குகளை சார்ந்து இருக்காமல், போர்ட்போலியோ முதலீட்டு முறையை(Portfolio Investment) பின்பற்ற வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட பங்குகளில் ஏற்படும் எதிர்பாராத இழப்பை சரி செய்து கொள்ளலாம்.

 

பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக சரிவை கொண்டிருந்தால், அந்த பங்கினை நீக்கி விட்டு நல்ல நிறுவன பங்கை தேர்ந்தெடுக்க(Restructuring Portfolio) தயக்கம் காட்ட கூடாது. இளம் வயதில் பங்கு முதலீட்டை மேற்கொள்ளும் போது, நீண்ட காலத்தில் மூலதன ஆதாயத்தை பெறுவது மட்டுமில்லாமல் அடுத்த சந்ததியினருக்கு ஒரு முதலீட்டு சொத்தினை வழங்கலாம்.

 

நிகழ்வின் முக்கிய பகுதியாக வெற்றிகரமான பங்கு முதலீட்டிற்கான ஒன்பது பொன்விதிகளும்(Golden Rules) சொல்லப்பட்டது. அவை பின்வருமாறு,

 

  • உங்களால் முடிந்த முதலீட்டு ரிஸ்க்கை மட்டும் பின்பற்றவும்(Risk Profiling)
  • முதலீட்டு காலத்தை முடிவு செய்தல் (Choose Investment Horizon)
  • ஏற்கனவே நீங்கள் கொண்டிருக்கும் பங்கு முதலீட்டை மறு ஆய்வு செய்தல் (Restructuring existing Portfolio)
  • பங்குச்சந்தை இறக்கத்தில் வாய்ப்புகளை கண்டறிதல்
  • ஒரே துறையில்(Sector) 20 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்யக்கூடாது
  • ஒரே நிறுவனத்தில் 15 சதவீதத்திற்கு மேல் முதலீட்டை மேற்கொள்ளக்கூடாது (Limit company exposure to 15 %)
  • சரியான நிதி ஆலோசகரை தேர்ந்தெடுத்தல்(Right Stock / Financial Advisor)
  • தினசரி வர்த்தகத்தில் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது
  • ஒருபோதும் கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம் (Never borrow & Invest).

 

மேற்சொன்ன பொன்விதிகள் பங்கு முதலீட்டில் உள்ளவர்கள் அறிந்திருந்தாலும், இந்த எளிய விதிகளை பின்பற்றும் போது, நமக்கான போர்ட்போலியோ முதலீட்டு சேவை சிறந்ததாக அமையும்.

 

பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை அடையாளம் காண்பதும், தொழில் வருவாய் இல்லாத நிறுவன பங்குகளை களைவது தான் அவசியம். பங்குகளை எந்த விலையில் விற்கலாம் என்பது முக்கியமல்ல. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

பஜாஜ் ஆட்டோ நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 1,126 கோடி

பஜாஜ் ஆட்டோ நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 1,126 கோடி

Bajaj Auto reports a net profit of Rs. 1,126 Crore in Q1FY20

 

2019-20 ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிகர லாபமாக ரூ. 1,126 கோடியை ஈட்டியுள்ளது. ஜூன் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் விற்பனை 7,756 கோடி ரூபாயாகவும், செலவினம் 6,558 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவன இயக்க லாபம்(Operating Profit) சொல்லப்பட்ட முதலாம் காலாண்டில் ரூ. 1,198 கோடியாகும். இயக்க லாப வளர்ச்சி 15 சதவீதத்திலும், இதர வருமானமாக 441 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,579 கோடியாக இருந்துள்ளது.

 

2018-19ம் நிதியாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருவாய் 30,250 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 4,675 கோடி ரூபாயாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிகர லாபம் கடந்த பத்து வருட காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச நிதியாண்டு லாபம் ஆகும்.

 

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales growth) கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது. இது போல, நிறுவன லாப வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 6 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமாகவும் இருந்துள்ளது.

 

நிறுவன கையிருப்பு(Reserves) 2018-19ம் நிதியாண்டின் முடிவில் 21,491 கோடி ரூபாயாக இருக்கிறது. ஈவு தொகை விளைச்சல்(Dividend yield) 2.25 சதவீதமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடனும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதன் கடன்-பங்கு விகிதம் 0.01 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது.

 

வாகனத்துறையில் தற்போதுள்ள சுணக்க நிலையால், மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனத்தின் காலாண்டு லாபம் 27 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1,435 கோடி. விற்பனை குறைவால் மாருதி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வண்ணங்களின் நாயகன், ‘ஏசியன் பெயின்டஸ்’ காலாண்டு லாபம் ரூ. 655 கோடி

வண்ணங்களின் நாயகன், ‘ஏசியன் பெயின்டஸ்’ காலாண்டு லாபம் ரூ. 655 கோடி 

Asian Paints Q1Fy20 – Quarterly Net profit to Rs. 655 Crore

 

சந்தையில் சுமார் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் மதிப்பை கொண்டுள்ள ஏசியன் பெயின்டஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளிவந்தது. 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 655 கோடியாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஜூன் மாத காலாண்டில் நிறுவன வருவாய் ரூ. 5,131 கோடியாகவும், செலவினங்கள் 3,974 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம்(Operating profit) ரூ. 1,156 கோடியாகவும், சொல்லப்பட்ட ரூ. 655 கோடி நிகர லாபம், கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

 

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 4,390 கோடியாகவும், நிகர லாபம் 557 கோடி ரூபாயாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. கடந்த பத்து வருட காலங்களில் ஏசியன் பெயின்டஸ்(Asian Paints) நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 18.50 சதவீதமாகவும் இருக்கிறது.

 

அலங்கார(Decorative) பிரிவில் பெற்ற இரட்டை இலக்க வளர்ச்சி, ஜூன் மாத காலாண்டின் நிகர லாபத்திற்கு துணை புரிந்துள்ளது. இருப்பினும் வாகன(Automotive) பிரிவில் நிறுவனத்தின் வருவாய் இம்முறை குறைந்துள்ளது. உலகளவில் வாகனத்துறையில் காணப்படும் மந்த நிலையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

 

மூலப்பொருட்களின் விலைகளும் பெயிண்ட் துறைக்கான வளர்ச்சிக்கு சாதகமாக இருந்துள்ளன. பங்கின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 27 சதவீதமும், பத்து வருட காலத்தில் 30 சதவீதமும் கொடுத்துள்ளன. மார்ச் 2019ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) ரூ. 9,424 கோடியாகும்.

 

நிறுவனர்களில் பங்களிப்பில் சுமார் 12 சதவீத பங்குகள் அடமானம்(Promoters Pledging) செய்யப்பட்டுள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.07 புள்ளிகளாகவும், கடந்த மூன்று வருட விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும் உள்ளது. தற்போதைய பங்கின் விலை, நிறுவனத்தின் புத்தக மதிப்பில்(Price to Book value) 15 மடங்காகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

Deadline Extended to 31st August – IT Returns Filing for Individuals

 

நேற்று மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டதாவது, தனி நபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் ஜூலை 31ம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 31ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இது 2018-19ம் நிதியாண்டில் பெற்ற வருமானத்திற்கு வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடுவாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நேரடி வரிகளின் மத்திய வாரியம்(CBBT) தனது அறிக்கையில், ‘ 2018-19ம் நிதியாண்டுக்கான வருவாயை 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் வரி தாக்கல் செய்ய வேண்டும். தனி நபர் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31. ஆனால் இம்முறை நிறுவனத்திடம் இருந்து பணியாளர்கள் படிவம் 16(Form 16) ஐ பெறுவதில் காலதாமதமாக ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான படிவம் 16ஐ நிறுவனம் ஜூலை 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் ‘ என சொல்லப்பட்டிருந்தது.

 

இதன் காரணமாக வரி தாக்கல் செய்வதில் தனி நபர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தற்போது தனி நபர் வரி தாக்கலுக்கான காலக்கெடுவை ஜூலை 31ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ம் தேதியாக அறிவித்துள்ளது. கடந்த வருடமும் இதே போல வரி தாக்கல் காலக்கெடு மாற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.

 

தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு காலக்கெடுவில் மாற்றம் எதுவும் சொல்லப்படவில்லை. நடப்பு 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை வரி தாக்கல்(Income Tax Returns Filing) செய்தவர்களின் எண்ணிக்கை 36.14 லட்சம். சுமார் 2.6 கோடி பேர் பான் – ஆதார் அட்டையை இணைக்கவில்லை என வருமான வரி தளம் சொல்லியிருக்கிறது.

 

வருமான வரி தாக்கலில் இம்முறை ஆதார் இணைப்பை ஏற்படுத்தா விட்டால் வரி தாக்கல் செய்ய இயலாது. அதனால், வரி தாக்கல் செய்யும் முன் பான் – ஆதார் இணைப்பை(PAN – Aadhaar linking) ஏற்படுத்தி விட்டு, பின்பு வரி தாக்கல் செய்வது நல்லது. காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பான் – ஆதார் இணைப்பில் சிக்கல் இருக்கும் பட்சத்தில் அதனை தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் இடைப்பட்ட நாட்களில் சரி செய்து கொள்ளலாம்.

 

பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்து கொள்ளலாம் என நடப்பு 2019 பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பான் எண்ணுக்கு மாற்றாக தற்போது ஆதார் எண்ணும் பார்க்கப்படுகிறது. ஆதார் தகவலில் பொதுவாக பிழைகள் இருப்பின், அதனை சரி செய்து கொள்வது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தாது.

 

(Image source: @stpatsschool.org)

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்படுமா ?

வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்படுமா ?

Will the tax rates be reduced for Automotive sector in India ?

 

வாகனத்துறையின் வளர்ச்சி கடந்த சில காலங்களாக தொய்வு நிலையில் காணப்படுகிறது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர் மற்றும் எல்லை பதற்றம் வாகனத்துறையை பாதித்துள்ளது எனலாம்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இருப்பினும், உள்நாட்டில் வாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதமும்(GST rates), காப்பீடு ப்ரீமியமும்(Insurance) சாதகமாக இல்லை. பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் வாகனத்துறையை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டவில்லை. அதன் விற்பனை ஒவ்வொரு காலாண்டிலும் சரிவடைந்து கொண்டு தான் செல்கிறது.

 

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான வரி விகிதம் 28 சதவீதமாக உள்ளது. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு அதற்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க முனைந்தது.

 

நடப்பு வாரத்தில் இது சார்ந்த வரி விகித மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய சக்தி மூலமான மின்சாரம் மற்றும் காற்றாலை(Wind Turbine) திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

வரும் வியாழக்கிழமை (25-07-2019) ஜி.எஸ்.டி. குழு கூட்டம் நடைபெற உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் வரி விகித மாற்றம் இருக்காது எனவும், தற்போதைக்கு அரசு மின்சார வாகனத்திற்கான வரி விகிதங்களை மட்டுமே கருத்தில் கொள்ளும் எனவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil