Tag Archives: income tax returns

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்களா ? தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 31, 2021

Income Tax Return Filing for AY 2021-22 Deadline: 31st December, 2021

2020-21ம் நிதியாண்டுக்கான (2021-22 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 2021 என்றிருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் புதிய மென்பொருள் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றால் டிசம்பர் 31, 2021 ஆக நீட்டிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், டிசம்பர் 3, 2021 தேதியின் படி, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கான(Assessment Year) வருமான வரி தாக்கலை இதுவரை மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் செய்துள்ளதாகவும், தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நடப்பில் நாள்தோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 52 சதவீதம் பேர் இணையம் வழியாக வரி தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 59 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 1 (ITR – 1) படிவத்தையும், 9 சதவீதம் ஐ.டி.ஆர் – 3 படிவத்தையும், 8 சதவீதம் பேர் ஐ.டி.ஆர் – 2 படிவத்தையும் பயன்படுத்தி வரி தாக்கல் செய்துள்ளனர்.

இதர படிவங்களான ITR-4, 5, 6, 7 ஆகியவற்றை சுமார் 23 சதவீதம் பேர் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தி உள்ளனர். மூன்று கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல் நடைபெற்றிருந்தாலும், E-Verification என்ற முழுமையான வரி தாக்கல் நிறைவை இதுவரை 2.69 கோடி பேர் மட்டுமே செய்துள்ளதாக வருமான வரி துறை கூறியுள்ளது.

வரி தாக்கலை Verification மூலம் உறுதி செய்வது, பான் – ஆதார் இணைப்பை ஏற்படுத்துதல், ஆதார் கார்டு தகவலில் கைபேசி எண்ணை பதிவு செய்தல், வங்கிக்கணக்கை சரியான முறையில் இணைப்பது ஆகியவற்றை செய்வதால் வருமான வரி தாக்கல் செய்யும் போது சிரமம் ஏற்படாமல் இருக்கும். வருமான வரி தாக்கல் செய்யும் முன் படிவம் 16(Form 16),  படிவம் – 26 ஏ.எஸ். (Form 26AS & AIS, TIS) மற்றும் வருடாந்திர வரித்தகவல் அறிக்கையை சரி பார்த்து கொள்வது அவசியம்.

நீங்கள் வாங்கிய மற்றும் விற்ற பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்பு மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி வருவாய், வீட்டுமனை பண பரிவர்த்தனை மற்றும் இதர நிதி சார்ந்த தகவல்கள் மேலே சொல்லப்பட்ட படிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை சரி பார்த்து மற்றும் உறுதி செய்து தாக்கல் செய்யும் போது, பின்னாளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம். வரக்கூடிய காலக்கட்டங்களில் கடன்கள், காப்பீடுகள், புதிய நிதி சொத்துக்களில் செய்யப்படும் முதலீடுகள் ஆகிய விவரங்களும் இது போன்ற படிவங்களில் புதுப்பிக்கப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு 

Income Tax Returns(ITR) Filing due date extended to December 2021 (For FY2020-21)

2020-21ம் நிதியாண்டில்(Financial Year) சம்பாதித்த வருவாய்க்கு மதிப்பீட்டு(Assessment Year) ஆண்டு 2021-22ம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில்(வரிச்சலுகைகள் போக), வரிப்பிடித்தம் இல்லையென்றாலும் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். தவறும் பட்சத்தில், பின்னொரு நாளில் அபராத தொகை செலுத்த நேரிடும்.

பொதுவாக ஒரு நிதியாண்டில் ஈட்டிய சம்பள வருமானம், வாடகை வருமானம், அஞ்சலகம், வங்கிகள், பங்குகள் மற்றும் பத்திரங்களில் கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் வரி தாக்கல் செய்ய வேண்டும். வரிப்பிடித்தம் செய்த தொகையில் ரீஃபண்ட்(Refund) பெற, வருமான வரி தாக்கல் செய்வதும் கட்டாயம். வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை மாதத்துடன் முடிவடையும்.

ஆனால் கடந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21ம் மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை மாதம் என சொல்லப்பட்ட காலக்கெடு பின்னர் நீட்டிக்கப்பட்டது. இம்முறையும் அது போன்று ஜூலை மாதத்திலிருந்து நடப்பு மாதமான செப்டம்பர் 30 வரை சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று(09-09-2021) மாலை மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடுவை நடப்பாண்டின் டிசம்பர் 31ம் தேதியாக குறிப்பிட்டுள்ளது. நடப்பு 2021-22 மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை 6.01 கோடி பேர் வரி தாக்கல்(e-verified ITR) செய்துள்ளனர்.

வருமான வரி தாக்கலுக்கான புதிய தளம்(e filing 2.0) கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வரி தாக்கல் செய்பவர்கள் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சந்திக்க நேரிட்டது. இந்த சிக்கல்கள் இன்று வரை சரிசெய்யப்படாத நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

புதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்

புதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல் 

Launching of New E-Filing Portal of the Income Tax Department

2020-21ம் நிதியாண்டுக்கான(Financial year) வருமான வரி தாக்கலை 2021-22ம் மதிப்பீட்டு ஆண்டில்(Assessment year) பதிவு செய்ய வேண்டும். பொதுவாக நடப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்க வேண்டிய வருமான வரி தாக்கல், கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை மற்றும் வருமான வரி அலுவலகத்தின் புதிய முறையால் சற்று தாமதமாக துவங்க உள்ளது.

தனிநபர் வருமான வரி தாக்கலை செய்யும் ஒருவர், தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடமிருந்து படிவம்-16 (Form 16) பெற்ற பிறகு தான் வரி தாக்கல் செய்ய வேண்டும். நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு படிவம்-16ஐ அளிப்பதற்கான காலக்கெடுவும், இரண்டாம் அலை காரணமாக ஜூலை 15ம் தேதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யும் நபர், தனது படிவம்-16ஐ, படிவம் 26 ஏ எஸ்(Traces Form 26AS) உடன் சரிபார்த்து கொண்டு பின்னர் வரி தாக்கல் செய்வது, பின்னொரு நாளில் ஏற்படும் வரி சிக்கலை தீர்க்க உதவும். 26AS என்பது தனிநபர் ஒருவரின் வரி சார்ந்த அறிக்கை விவரங்களை தெரிவிக்கும். நிறுவனம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் பிடித்தம் செய்த வரி விவரம், பங்குகள் மூலமான டிவிடெண்ட் தொகை, பத்திரங்கள் மற்றும் பிற வரி சார்ந்த அறிக்கைகளை படிவம் 26 ஏ எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நடப்பு மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவும் ஜூலை மாதத்திலிருந்து நவம்பர் 30ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கான கடைசி தேதியும் அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதமாக சொல்லப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

நேரடி வரி மத்திய வாரியம்(CBDT) சார்பில் இம்முறை புதிய வருமான வரி தாக்கல் மென்பொருள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக நடப்பு ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து ஜூன் 6ம் தேதி வரை வருமான வரி தாக்கல் தளம் செயல்படாது(ITR) என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய தளம் வரும் 7ம் தேதி நிறுவப்பட உள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யும் முறையை எளிமையாக்கவும், வரியை திரும்ப பெறுவதில்(Tax Refund) விரைவாகவும் செயல்படுத்த புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர் சேவை மையம், மின்னணு அரட்டை பெட்டி(Chatbot / Live Agent) ஆகிய நவீன முறையை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வருமான வரிதாரர்கள் தங்களது வரியை செலுத்த புதிய கட்டண அமைப்புகளையும்(Net Banking, UPI, Credit Card and RTGS/NEFT from any account of Tax Payer in any bank) உருவாக்குகிறது.

மேம்படுத்தப்பட்ட மென்பொருள் நிறுவப்பட உள்ளதால் ஜூன் 6ம் தேதி வரை வரி தாக்கல் தளம் செயல்படாது எனவும், இது சார்ந்த தகவல் ஏற்கனவே அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், பதிவு தாரர்கள், ஜி.எஸ்.டி. அலுவலகம் மற்றும் பிற வரி சார்ந்த நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வரி வாரியம் கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – 10, ஜனவரி, 2021

Income Tax Returns Filing for Individuals extended to 10, January 2021

2019-20ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு (AY 2020-21) வருடத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமத்தால் வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு சில மாதங்களுக்கு முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதன் படி தனிநபர் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான காலக்கெடு இன்றுடன் (31-12-2020) முடிவடையும் நிலையில், மீண்டும் ஒரு முறை இதனை நீட்டித்துள்ளது நிதி அமைச்சகம்.

தனிநபர் வருமான வரி தாக்கலில் ஆண்டு வருவாய் (ஒட்டுமொத்த வருவாய்) ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்தை கடந்தால், ஒருவருக்கு வரிப்பிடித்தம் இல்லையென்றாலும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.

நேற்று (30-12-2020) மத்திய நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மதிப்பீட்டு ஆண்டு 2020-21க்கு வருமான வரி தாக்கல் செய்பவர்களில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குதாரர்களுக்கு(Accounts audited) முன்னர் இருந்த 31, ஜனவரி 2021 என்ற காலக்கெடு தற்போது 15, பிப்ரவரி 2021 என சொல்லப்பட்டுள்ளது.

இது போல சர்வேதச மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களுக்கு முன்னர் இருந்த 31,ஜனவரி 2021 என்ற கடைசி தேதி, இப்போது 2021ம் ஆண்டின் பிப்ரவரி 15ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வரிதாரர்களுக்கு (தனிநபர் உட்பட) ஏற்கனவே சொல்லப்பட்ட டிசம்பர் 31, 2020 என்ற காலக்கெடு, தற்போது 2021 ஜனவரி மாதம் 10ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

விவாத்(Vivad Se Vishwas Scheme) திட்டத்திற்கு 31, ஜனவரி 2021 மற்றும் நேரடி வரி மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் செல்லும் அறிவிப்பிற்கு 31, மார்ச் 2021 எனவும் காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய பொருட்கள் மற்றும் சேவை வரி(CGST) 2017 சட்டம், பிரிவு 44ன் கீழ் ஆண்டு வருவாயை சமர்பிப்பதற்கான தேதி 28, பிப்ரவரி 2021 ஆக சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

Deadline Extended to 31st August – IT Returns Filing for Individuals

 

நேற்று மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டதாவது, தனி நபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் ஜூலை 31ம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 31ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இது 2018-19ம் நிதியாண்டில் பெற்ற வருமானத்திற்கு வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடுவாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நேரடி வரிகளின் மத்திய வாரியம்(CBBT) தனது அறிக்கையில், ‘ 2018-19ம் நிதியாண்டுக்கான வருவாயை 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் வரி தாக்கல் செய்ய வேண்டும். தனி நபர் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31. ஆனால் இம்முறை நிறுவனத்திடம் இருந்து பணியாளர்கள் படிவம் 16(Form 16) ஐ பெறுவதில் காலதாமதமாக ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான படிவம் 16ஐ நிறுவனம் ஜூலை 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் ‘ என சொல்லப்பட்டிருந்தது.

 

இதன் காரணமாக வரி தாக்கல் செய்வதில் தனி நபர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தற்போது தனி நபர் வரி தாக்கலுக்கான காலக்கெடுவை ஜூலை 31ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ம் தேதியாக அறிவித்துள்ளது. கடந்த வருடமும் இதே போல வரி தாக்கல் காலக்கெடு மாற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.

 

தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு காலக்கெடுவில் மாற்றம் எதுவும் சொல்லப்படவில்லை. நடப்பு 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை வரி தாக்கல்(Income Tax Returns Filing) செய்தவர்களின் எண்ணிக்கை 36.14 லட்சம். சுமார் 2.6 கோடி பேர் பான் – ஆதார் அட்டையை இணைக்கவில்லை என வருமான வரி தளம் சொல்லியிருக்கிறது.

 

வருமான வரி தாக்கலில் இம்முறை ஆதார் இணைப்பை ஏற்படுத்தா விட்டால் வரி தாக்கல் செய்ய இயலாது. அதனால், வரி தாக்கல் செய்யும் முன் பான் – ஆதார் இணைப்பை(PAN – Aadhaar linking) ஏற்படுத்தி விட்டு, பின்பு வரி தாக்கல் செய்வது நல்லது. காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பான் – ஆதார் இணைப்பில் சிக்கல் இருக்கும் பட்சத்தில் அதனை தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் இடைப்பட்ட நாட்களில் சரி செய்து கொள்ளலாம்.

 

பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்து கொள்ளலாம் என நடப்பு 2019 பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பான் எண்ணுக்கு மாற்றாக தற்போது ஆதார் எண்ணும் பார்க்கப்படுகிறது. ஆதார் தகவலில் பொதுவாக பிழைகள் இருப்பின், அதனை சரி செய்து கொள்வது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தாது.

 

(Image source: @stpatsschool.org)

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

வங்கி வைப்பு நிதிக்கு வரிகள்(Fixed Deposit) எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 8

வங்கி வைப்பு நிதிக்கு வரிகள்(Fixed Deposit) எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 8

Tax for Fixed Deposits – Income Tax Returns – Lesson 8

 

வங்கியில் முதலீடு செய்யும் வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி வருமானம் வரி விதிப்புக்கு உட்பட்டது என நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். பொதுவாக வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வட்டி வருவாய், வருமான வரி சட்டத்தின் படி இதர வருமானமாக(Other Source of Income) கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வட்டி வருவாய் கிடைக்கும் போது, வங்கி மூலம் டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். நடப்பு மதிப்பீட்டு வருடத்தின்(AY 2019-20) படி, வைப்பு நிதி வட்டி வருமானம் ஒரு நிதியாண்டில் ரூ.10,000/- ஐ தாண்டும் பட்சத்தில் டி.டி.எஸ். உண்டு. 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்திற்கு 10 சதவீதம்(பாண் எண்ணை சமர்பித்திருந்தால்) டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படும். பாண்(PAN) எண்ணை வங்கியில் இணைக்காத நிலையில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை வங்கிகள் வரி பிடித்தம் செய்யலாம்.

 

வங்கிகளில் டி.டி.எஸ்.(Tax Deducted at Source) பிடித்தம் செய்யாமல் இருக்க படிவம் 15G ஐ ஒருவர் பயன்படுத்தலாம். அதே வேளையில் ஒருவர் வருமான வரி செலுத்துபவராக இருப்பின், அவர் வருமான வரி தாக்கல் செய்யும் போது, இந்த வட்டி தொகைக்கு வரி செலுத்த நேரிடலாம். வங்கிகளில் வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வருவாய், படிவம் 26AS மூலம் கண்டறியப்படும். வருமான வரம்பிற்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை, வரி தாக்கல் செய்த பின் திரும்ப பெறலாம்.

 

ஒருவர் வெவ்வேறு வங்கிகளில் அல்லது ஒரே வங்கியில் பல பிக்ஸட் டெபாசிட் கணக்குகளை வைத்திருந்தாலும், அனைத்தும் ஒன்றாக சேர்க்கப்பட்டு வட்டி வருமானம் கணக்கிடப்படும். மூத்த குடிமக்களுக்கு பெறப்படும் வட்டி வருமானத்தில் ரூ.50,000/- வரை டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படமாட்டாது. மூத்த குடிமக்களுக்கு டி.டி.எஸ். பிடிக்காமல் இருக்க படிவம் 15H ஐ நிரப்ப வேண்டும்.

 

தனிநபர் ஒருவரின் மாத சம்பளத்துடன், வங்கியில் பெறும் வட்டி வருவாய் இதர வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அவரது மொத்த வருமானத்தில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். வைப்பு நிதிக்கு சொல்லப்பட்ட வரி விதிப்பு முறை, தொடர் வைப்பு கணக்கு(Recurring Deposit) மற்றும் சேமிப்பு கணக்கிற்கும் பொருந்தும்.

 

வரி சேமிப்பை கொண்ட ஐந்து வருட வங்கி வைப்பு நிதி திட்டமும்(Tax saving FD) உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து வருட காலத்திற்கு முதலீட்டை பெற முடியாது. வருமான வரி சட்ட பிரிவு 80சி மூலம் ஒருவர் இதற்கு வரி சலுகையை பெறலாம். ஆனால் முதலீட்டின் முடிவில் கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வரி விதிப்பு உண்டு. இது போன்ற சமயங்களில் ஒருவர் பங்கு சார்ந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதிகளை(Equity linked savings scheme -ELSS) தேர்ந்தெடுக்கலாம். பங்கு சார்ந்த வரி சேமிப்பு திட்டத்தில் மூன்று வருட லாக்-இன்(Lock-in) காலமாகும். இவற்றில் கிடைக்கும் வருமானத்திற்கும் வரி சலுகை உண்டு(EEE -Exempt) என்பதை கவனிக்கலாம்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4

இந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4

Hindu Undivided Family (HUF) – Income Tax Returns – Lesson 4

 

வருமான வரி சட்டத்திலும் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில், கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகமிருந்தாலும் இன்று நாம் அவ்வாறான கூட்டு குடும்பங்களை பார்க்க முடிவதில்லை. இந்து கூட்டு குடும்பம்(HUF) போன்று மற்ற மதங்களுக்கும் வருமான வரி சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக புத்தம், ஜெயின் மற்றும் சீக்கிய குடும்பங்களும் இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்து கூட்டு குடும்பத்தினை உருவாக்குவதன் மூலம் வருமான வரியையும் சேமிக்கலாம். ஒரு தனிநபர் மட்டுமே இந்து கூட்டு குடும்பத்தை ஏற்படுத்த முடியாது. இந்து கூட்டு குடும்பத்தில் குடும்ப தலைவர், மனைவி மற்றும் பிள்ளைகள் இடம் பெறுவர். இந்த குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் அனைவருக்கும் சமமாகவே பிரித்து கொடுக்கப்படும்.

 

இங்கு குடும்ப தலைவர் பெரும்பாலும் மூத்த வயதுள்ள ஆணாக இருப்பார். இவரை கர்த்தா(Karta) என்பார்கள். 2016ம் ஆண்டுக்கு முன் பெண் ஒருவர் கர்த்தாவாக இருக்க முடியாது. ஆனால் தற்போது இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பெண் ஒருவரும் தலைவராக இருக்கலாம். குடும்பத்தில் ஒரு தலைவரை அடுத்து மற்றவர்கள் உறுப்பினர்கள் ஆவர்.

 

இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்க விரும்புபவர்கள் அதற்கான குடும்ப உறுப்பினர்களை கொண்டிருப்பதோடு, குடும்ப பெயரில் பான் எண்ணை(PAN) பெற வேண்டும். வங்கி கணக்கும் இந்து கூட்டு குடும்ப பெயரில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். வரி சட்டம் பிரிவு(Income Tax Act) 80 C ன் கீழ் இந்து கூட்டு குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்(Members) என தனித்தனியாக வரி சலுகை பெறலாம். ஆனால் ஒரே முதலீடு அல்லது சேமிப்புக்கு இருவரும் சலுகை பெற முடியாது.

 

உதாரணத்திற்கு குமார் என்பவரின் குடும்பம் இந்து கூட்டு குடும்பத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு குடும்பத்தின் பெயரில் செய்யப்பட்ட முதலீடு மற்றும் வருமானம், குடும்பத்தின் வருமானமாக எடுத்து கொள்ளப்பட்டு வரி விகிதங்கள் கணக்கிடப்படும். இப்போது குமார் என்பவரும் தனி நபராக வருமான வரி செலுத்துபவர் எனில், அவருக்கான வரி சலுகை தனியே கணக்கிடப்படும். இதன் மூலம் வரி சேமிப்பை(Save Income Tax) ஏற்படுத்தலாம்.

 

கூட்டு குடும்பத்தின் கீழ் சொத்துக்கள், காப்பீடு, வருமானங்களை பெறலாம். பூர்வீக சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து கூட்டு குடும்ப பெயரிலும், குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்குரிய வருமானத்தை தனித்தனியாகவும் வருமான வரி கணக்கில் சமர்ப்பிக்கலாம்.

 

இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பாதகமே, சொத்துக்களில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தனது சொத்தினை பிரிக்க முயற்சிக்கையில், அனைத்து உறுப்பினர்களின் அனுமதி தேவைப்படும். கூட்டு குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூர்வீக சொத்தில் சம உரிமையை பெறும். அது போல குடும்ப உறுப்பினர் ஒருவர் மணம் முடிக்கும் பட்சத்தில், அவரது துணையும் இந்து கூட்டு குடும்பத்தில் அங்கம் பெறுவர். எனவே நிர்வாக திறனை கருத்தில் கொள்வது அவசியம்.

 

கூட்டு குடும்பமாக செயல்பட்டால் நன்று. இல்லையெனில் நிதி சார்ந்த விஷயங்களில் அது பாரமாகவே அமையும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

Income Tax Returns (Filing) – Plan & Benefits – Lesson 1

 

2018-19ம் நிதி வருடத்தை முடித்து விட்டு, 2019-20ம் நிதியாண்டில் நாம் காலெடுத்து வைத்துள்ளோம். முன்னர் வருமான வரி செலுத்துபவர்கள் மட்டுமே வரி தாக்கலை செய்து வந்த நிலையில் இன்று மாத சம்பளம் வாங்கும் (பெரும்பாலும் அமைப்பு சார்ந்த) அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

‘ நான் தான் வருமான வரி கட்ட தேவையில்லையே, அப்புறம் எதற்கு நான் வரி தாக்கல் செய்ய வேண்டும் ? ‘ என கேட்பதற்கு பதிலாக வருமான வரி தாக்கல் சார்ந்த சில எளிமையான விஷயங்களை நாம் கற்று கொண்டாலே, பின்னாளில் அது பயன் தரும். ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், தனி நபர் ஒருவர் தனது வரி தாக்கலை செய்வதற்கு, ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த பகுதியில் நாம் வருமான வரி சார்ந்த சில எளிமையான வழிமுறைகளை தெரிந்து வைத்து கொண்டு(Basics Education), நமக்கான வரி சலுகைகள் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் பயன் பெறலாம். வரி தாக்கல் செய்யும் முன், நாம் முன்னேற்பாடாக சில தகவல்களையும் சேகரித்து வைத்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.

 

வாருங்கள், முதல் பாடத்திற்குள் செல்லலாம்.

 

நாம் இப்போது 2018-19ம் நிதியாண்டின், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்திற்கு வரி தாக்கல் செய்யக்கூடிய காலத்தில் இருக்கிறோம். மேலே சொன்ன காலத்தில் நாம் ஈட்டிய வருவாய்க்கு ஏற்ப நமது வருமான வரி அமையலாம் அல்லது வரி தாக்கல் செய்யக்கூடியவராக இருக்கலாம்.

 

நிதியாண்டு(Financial Year or Fiscal Year) என்றால் என்ன ?

 

ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கத்தை பொறுத்தவரை அதன் கணக்கீட்டு காலம் 52 வாரங்கள் அல்லது 12 மாதங்கள் ஆகும். நிறுவனத்தின் வரவு-செலவு மற்றும் லாப-நட்ட நிதி அறிக்கைகள்(Financial Statements) இந்த 12 மாத அளவில் கணக்கீடு செய்யப்படும். பொதுவாக ஆங்கிலேய காலத்திலிருந்து 12 மாத காலம் என்பது ஒரு வருடத்தின் ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த வருடத்தின் மார்ச் மாதம் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தான் நாம் நிதியாண்டு(Financial Year) என்கிறோம்.

 

சொல்லப்பட்ட ஏப்ரல்-மார்ச் காலத்தில் நாம் ஏதேனும் வருவாய் பெற்றிருந்தால் (இழப்பு இருந்தாலும்) அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 2018-19ம் நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்தில் உள்ள வருவாயை நாம் மார்ச் 2019க்கு பின்னர் தான் மதிப்பீடு செய்ய முடியும். நடந்து முடிந்த ஒரு நிதி வருடத்திற்கான கணக்கை நாம் அடுத்த நிதி வருடத்தில் தான் மதிப்பீடு(Assessing) செய்கிறோம் மற்றும் வரியை தாக்கல் (Income Tax Return Filing) செய்கிறோம். இந்த காலத்தை மதிப்பீட்டு காலம்(Assessment Year) எனலாம்.

 

கவனிக்க:

 

  • நீங்கள் வருவாய் ஈட்டிய காலம் (ஏப்ரல் – மார்ச்) ஒரு நிதியாண்டு எனப்படும். 2010 ஏப்ரல் முதல் 2011 மார்ச் வரை என்பது ஒரு நிதியாண்டு. இதனை 2010-11 நிதி வருடம் அல்லது 2011ம் நிதியாண்டு என்பர் – FY 2010-11 OR Fiscal year 2011.

 

  • நாம் வருவாய் பெற்ற காலத்தை நிதியாண்டு ஆண்டு எனவும், அதனை மதிப்பீடு செய்த காலத்தை மதிப்பீட்டு ஆண்டு(Assessment year) எனவும் அழைக்கிறோம்.

 

  • 2018-19ம் நிதியாண்டிற்கான மதிப்பீட்டு காலம் 2019-20ம் வருடமாகும். நீங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த வருடத்தின் மார்ச் மாத காலம் வரையிலான வருமானத்திற்கு, நடப்பு ஏப்ரல் மாதம் முதல் வரி தாக்கல் செய்யலாம். பொதுவாக வரி தாக்கல் செய்வதற்கு மதிப்பீட்டு காலத்தின் ஜூலை மாதம் வரை அனுமதிக்கப்படும் – ஜூலை 31, 2019 (AY 2019-20)

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கால தாமதமான வருமான வரி தாக்கல் – என்ன செய்ய வேண்டும் ?

கால தாமதமான வருமான வரி தாக்கல் – என்ன செய்ய வேண்டும் ?

Belated Income Tax Returns – What to do ?

 

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஆகஸ்ட்  31ம் தேதியுடன் முடிவடைந்தது. அண்டை மாநிலமான கேரளாவிற்கு மட்டும் செப்டம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை – பான் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி தேதியாக மார்ச் 31, 2019 என மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes -CBDT) அறிவித்துள்ளது.

 

கடந்த வெள்ளிக்கிழமை (31, August 2018) உடன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான(Income Tax Returns) காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் தங்களது வரி தாக்கலை செய்யலாம். அதே நேரத்தில் மத்திய வரிகள் வாரியம் கூறியபடி, ஆகஸ்ட் 31 க்கு பிறகான வரி தாக்கலுக்கு அபராதம் உண்டு.

 

வருமான வரி சட்டம் – பிரிவு 139(4) ன் கீழ் வரி செலுத்துபவர் (அ) வருமான வரி வரம்பில் உள்ளவர் ( வரி விலக்கு இல்லாமல் ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்) வரி தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்த பின்னரும், தாக்கல் செய்வதற்கான முறையை அனுமதிக்கிறது. இத்தகைய வரி தாக்கலை, ‘ தாமதமான அல்லது காலங்கடந்த வரி தாக்கல் (Belated Returns) ‘ என்பர்.

 

இது போன்ற வரி தாக்கலை, அதன் குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டிலோ (அ) நிதி ஆண்டிற்குள் நிறைவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சென்ற நிதி ஆண்டின் (FY 2017-18) வருமானத்திற்கு நாம் இந்த வருடம் டிசம்பர் 31 (மதிப்பீட்டு வருடம்) அல்லது அடுத்த வருடம் மார்ச் 31, 2019 க்குள் (நிதி ஆண்டு) நிறைவு செய்யப்பட வேண்டும். இந்த இரு தேதியில் எது முன்னர் வருகிறதோ அந்த தேதியே வரி தாக்கல் செய்பவரின் காலக்கெடுவாக (தாமதமான தாக்கல்) எடுத்து கொள்ளப்படும்.

 

வருமான வரிச்சட்டம் – பிரிவு 234 F ன் படி, தாமதமாக வரி தாக்கல் செய்பவரிடம் இருந்து, தாமத தாக்கல் கட்டணம் (Late Filing fee) பெறப்படும். தாமதமாக வரி தாக்கல் செய்யும் ஒருவரின் ஆண்டு வருமானம் (வரி விலக்கு இல்லாமல்) ரூ. 2,50,000 லிருந்து ரூ. 5 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் அவரின் வருமானத்தை சார்ந்து தாமத தாக்கல் கட்டணம் ரூ. 1000 (குறைந்தபட்சம்) அல்லது ரூ. 5000 மாகவோ அல்லது ரூ. 10,000 (அதிகபட்சம்) என பெறப்படும். ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருப்பின், தாமத தாக்கல் கட்டணம் ரூ. 5000 /- மாகவோ (ஆகஸ்ட் 31 க்கு பிறகு, ஆனால் டிசம்பர் 31, 2018 க்குள்) அல்லது ரூ. 10,000 /- ( டிசம்பர் 31 க்கு பிறகு) என பிடிக்கப்படும்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இது போக வருமான வரிச்சட்டம் – பிரிவு 234A ன் கீழ், தாமதமான வரி தாக்கலுக்கு, வரி தொகையின் மீதான வட்டியினை செலுத்த வேண்டும். அதாவது ஆகஸ்ட் 31 க்கு பிறகான தாக்கலில் ஒருவரின் வரி தொகையில் மாதம் 1 சதவீதம் என வட்டி பெறப்படும். அதே நேரத்தில் ஒருவர் ரூ. 2.50 லட்ச வரம்பிற்கு மேல் இருந்து, அவருக்கு வரி செலுத்தும் தொகை ஏதும் இல்லை எனும் போது, அவர் வட்டி செலுத்த  வேண்டிய அவசியம் இருக்காது.

 

மேலே சொன்ன விவரங்களை தவிர, மற்றபடி தாமதமான வரி தாக்கல் செய்பவர்கள் எப்போதும் போல வருமான  வரி தாக்கல் இணையதளத்தில் (E-filing) வரி தாக்கலை நிறைவு செய்யலாம். தாமத தாக்கல் கட்டணம் மற்றும் வரி மீதான வட்டி ஆகியவை தளத்திலேயே தானியங்கியாக (Deducted or Added) பிடித்தம் செய்யப்படும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com