Tag Archives: pan aadhaar linking

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு

மீண்டும் பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு 

PAN-Aadhaar linking deadline extended to March 31, 2022

நடப்பில் எந்தவொரு நிதி சார்ந்த தேவைகளுக்கும், அரசின் உதவிகளை பெறுவதற்கும் ஆதார் எண்ணை கொண்டிருப்பது அவசியமாக உள்ளது. ரேசன் கடை முதல் வருமான வரி தாக்கல் செய்வது வரை ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது. இவற்றில் நம்மிடம் உள்ள பான்(PAN) எண்ணுடன் ஆதார்(Aadhaar) எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணை பெறுவதற்கு வருமான வரி செலுத்துபவர்கள் மட்டும் தான் வைத்திருக்க வேண்டும் என்று நடைமுறையில் இல்லை. வங்கியில் புதிய கணக்கை துவங்குதல், ஒரு பரிவர்த்தனை(Transaction) 50,000 ரூபாய்க்கு மிகும் போது, தொழில் நிறுவனத்தினை பதிவு செய்கையில், சொத்துக்களை வாங்க மற்றும் விற்க, அன்னிய செலாவணி(வெளிநாட்டு வருவாய்) போன்றவற்றுக்கும் பான் எண்ணை கொண்டிருப்பது அவசியமாகிறது.

பான் எண்ணை பெறுவதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. 5 வயது குழந்தைக்கும் பான் கார்டு எண்ணை பெறலாம். நமக்கான அடையாள சான்றாகவும் சில சமயங்களில் பான் கார்டு எண் பயன்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. வரி ஏய்ப்பை தடுக்கும் ஏற்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது.

பான் – ஆதார் இணைப்பில் பொது மக்களுக்கு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களால் இதற்கான காலக்கெடு ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பான் மற்றும் ஆதார் எண்களில் உள்ள தரவுகள் சரியாக பொருந்தினால் மட்டுமே அவை இணைக்கப்படுவது சாத்தியமாகிறது. இல்லையெனில், அவை இணைக்கப்படாத நிலையாகவே எடுத்து கொள்ளப்படுகிறது.

பெயரில் உள்ள பிழை, ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பான் எண்ணில் பெயர் பிழைகளை சரி செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. அவற்றுக்கு சரியான அடையாள ஆவணம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, ஆதார் கார்டில் உள்ள தகவல் சரிசெய்யப்பட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பான் – ஆதார் எண்ணுக்கான இணைப்பு காலக்கெடு 2022ம் ஆண்டின் மார்ச் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர்  30, 2021 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தளத்தில் ஏற்பட்டிருக்கும் கோளாறுகளும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம்

மியூச்சுவல் பண்டு முதலீட்டை தொடர இனி பான் – ஆதார் இணைப்பு அவசியம் 

PAN – Aadhaar linking is mandatory for Mutual Fund Transactions – From 1st July

மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள், கடந்த சில வருடங்களாக பிரபலமடைந்து வருகிறது. மே மாத முடிவின் படி, சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகித்து வரும் இந்த துறை, முதலீட்டுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.

செபியின்(Securities and Exchange Board of India) கீழ் வரும் மியூச்சுவல் பண்டு துறை, ஆம்பி(AMFI) துணை மூலம் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள் இருந்தாலும், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய கே.ஒய்.சி.(KYC) நடைமுறையை பதிவு செய்வது அவசியம்.

பரஸ்பர நிதிகளில் தங்கம், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு நிறுவன முதலீடு மற்றும் பங்குச்சந்தை என பல கலவை திட்டங்கள் உள்ளன. குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை, முதலீடு செய்யும் ஒருவருக்கு தேவையான தனித்துவமான திட்டங்களை வழங்கி வருகிறது. பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயக்கம் உள்ளவர்கள், மியூச்சுவல் பண்டுகளில் கிடைக்கப்பெறும் திட்டங்களை எளிமையாக பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், மியூச்சுவல் பண்டில் ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்கள் மற்றும் புதிதாக கணக்கு துவங்க உள்ளவர்கள், தங்களது பான் – ஆதார்(PAN – Aadhaar) எண்ணை இணைப்பது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

சொல்லப்பட்ட காலத்திற்குள் இணைப்பை ஏற்படுத்தாதவர்கள், தாங்கள் ஏற்கனவே முதலீடு செய்த பணத்தை வெளியே எடுக்கவும், புதிதாக முதலீட்டை தொடரவும் சிக்கல் ஏற்படலாம். பொதுவான முறையில், பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவும் வரும் ஜூன், 30ம் தேதியுடன் முடிவடைகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

இணைப்புக்கான காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாதவர்களின் பான் எண் செல்லாதவையாக சொல்லப்படும் எனவும், வருமான வரி தாக்கல் செய்யும் நிலையில் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் எந்தவொரு முதலீட்டை உள்நாட்டில் தொடர, பான் – ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. (பான் – ஆதார் இணைப்புக்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?

Deadline for PAN – Aadhaar Linking – 31, December, 2019

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி, 2019 என வருமான வரி அலுவலகம் கூறியுள்ளது. வருமான வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் – ஆதார் எண் இணைப்பை ஏற்படுத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட தேதிக்குள், இணைக்காத பட்சத்தில் வரும் நாட்களில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. மேலும் நாம் வாங்கிய பான் கார்டு(PAN) எண்ணும் செயலிழக்கப்படும். இந்த இணைப்பை இந்திய குடிமக்கள் (பான் இருப்பு) அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த முறை, பட்ஜெட் தாக்கலில் பான் எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை(Aadhaar) கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என சொல்லப்பட்டிருந்தது. பின்பு பான் – ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு 30, செப்டம்பர், 2019 என சொல்லப்பட்டது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தற்போது வரும் 31, டிசம்பர், 2019 என நிர்ணயிக்கப்பட்டது.

ஆதார் – பான் எண் இணைப்பை இரண்டு வகைகளில் கையாளலாம். முதல் முறை, வருமான வரி தாக்கல் இணைய தளத்திற்கு சென்று பதிவிடுவது. மற்றொன்று குறுஞ்செய்தி (SMS) வாயிலாக இந்த இணைப்பை ஏற்படுத்தலாம். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

பான் – ஆதார் எண் இணைப்பு – இரு முறைகள்(PAN – Aadhaar Linking) 

மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து பான் – ஆதார் எண் இணைப்பு வழிமுறையை பின்பற்றுங்கள்.

பான் – ஆதார் எண் இணைப்பதில் சில நபர்களுக்கு விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆதார் மற்றும் பான் எண்ணில், உங்கள் பெயர், பிறந்த காலம் மாறுபட்டிருந்தால் உடனடியாக தேவையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதன் பின்பு, மறு இணைப்பை ஏற்படுத்த முயற்சியுங்கள். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு – டிசம்பர் 31, 2019

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு – டிசம்பர் 31, 2019

PAN – Aadhaar Linking extended to 31, December, 2019

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நாளையுடன் (30-09-2019) முடிவடையும் நிலையில், தற்போது அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பிற்கான கடைசி தேதியாக 2019ம் ஆண்டின் டிசம்பர் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான்(PAN) எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வருமான வரி தாக்கல் செயல்முறையில் பான் எண்ணுக்கு மாற்றாக ஆதார்(Aadhaar) எண் சொல்லப்பட்டிருந்தது.

இருப்பினும், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதில் எந்த மாற்றமும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் காலக்கெடுவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(Central Board of Direct Taxes) சார்பில் ஏழாவது முறையாக பான்-ஆதார் எண் காலக்கெடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள், தாக்கல் செய்த பின் மின்னணு சரிபார்ப்பு(E-verify Return) செய்தால் மட்டுமே, அது முழுமையான வரி தாக்கல் செய்ததாக கருதப்படும். தற்போதைய நிலையில் மின்னணு சரிபார்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது.

தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருவாய்க்கு, வருமான வரி தாக்கல் செய்ய உள்ளவர்களின் காலக்கெடுவும் செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்தை தாண்டும் பட்சத்தில், வரிப்பிடித்தம் இல்லையெனினும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் வருமானத்தை வரி தாக்கல் செய்யும் போது, ரூ. 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி தள்ளுபடி உண்டு(Only Tax Rebate). அதே வேளையில் வரி தாக்கல் செய்தால் மட்டுமே, வரி தள்ளுபடி என்பதை மறக்க வேண்டாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

Deadline Extended to 31st August – IT Returns Filing for Individuals

 

நேற்று மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டதாவது, தனி நபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் ஜூலை 31ம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 31ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இது 2018-19ம் நிதியாண்டில் பெற்ற வருமானத்திற்கு வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடுவாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நேரடி வரிகளின் மத்திய வாரியம்(CBBT) தனது அறிக்கையில், ‘ 2018-19ம் நிதியாண்டுக்கான வருவாயை 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் வரி தாக்கல் செய்ய வேண்டும். தனி நபர் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31. ஆனால் இம்முறை நிறுவனத்திடம் இருந்து பணியாளர்கள் படிவம் 16(Form 16) ஐ பெறுவதில் காலதாமதமாக ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான படிவம் 16ஐ நிறுவனம் ஜூலை 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் ‘ என சொல்லப்பட்டிருந்தது.

 

இதன் காரணமாக வரி தாக்கல் செய்வதில் தனி நபர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தற்போது தனி நபர் வரி தாக்கலுக்கான காலக்கெடுவை ஜூலை 31ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ம் தேதியாக அறிவித்துள்ளது. கடந்த வருடமும் இதே போல வரி தாக்கல் காலக்கெடு மாற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.

 

தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு காலக்கெடுவில் மாற்றம் எதுவும் சொல்லப்படவில்லை. நடப்பு 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை வரி தாக்கல்(Income Tax Returns Filing) செய்தவர்களின் எண்ணிக்கை 36.14 லட்சம். சுமார் 2.6 கோடி பேர் பான் – ஆதார் அட்டையை இணைக்கவில்லை என வருமான வரி தளம் சொல்லியிருக்கிறது.

 

வருமான வரி தாக்கலில் இம்முறை ஆதார் இணைப்பை ஏற்படுத்தா விட்டால் வரி தாக்கல் செய்ய இயலாது. அதனால், வரி தாக்கல் செய்யும் முன் பான் – ஆதார் இணைப்பை(PAN – Aadhaar linking) ஏற்படுத்தி விட்டு, பின்பு வரி தாக்கல் செய்வது நல்லது. காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பான் – ஆதார் இணைப்பில் சிக்கல் இருக்கும் பட்சத்தில் அதனை தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் இடைப்பட்ட நாட்களில் சரி செய்து கொள்ளலாம்.

 

பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்து கொள்ளலாம் என நடப்பு 2019 பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பான் எண்ணுக்கு மாற்றாக தற்போது ஆதார் எண்ணும் பார்க்கப்படுகிறது. ஆதார் தகவலில் பொதுவாக பிழைகள் இருப்பின், அதனை சரி செய்து கொள்வது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தாது.

 

(Image source: @stpatsschool.org)

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com