யார் இந்த காபி டே நிறுவனர் – சித்தார்த்தா ?
The Story of Cafe Coffee Day Founder – V G Siddhartha
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிறந்தவர் வி.ஜே. சித்தார்த்தா ஹெக்டே(Siddhartha Hegde). இள வயது முதலே துடிப்பாக விளங்கிய சித்தார்த்தா தனது முதுகலை பட்டப்படிப்பை பொருளாதாரத்தில் பெற்றார். தனது 24வது வயதில் ஜே.எம். மார்கன் ஸ்டான்லி (அப்போது J M Financial) நிறுவனத்தின் மேலாண்மை பிரிவில் பணியாளராக சேர்ந்தார்.
சித்தார்த்தாவின் குடும்பம் காபி தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தாலும், தனது தந்தையிடம் ரூ. 30,000 ஐ முதலீடாக பெற்று கொண்டு, பங்குகளை வாங்க ஆரம்பித்தார். பின்னர் 1999ம் ஆண்டு சிவன் செக்யூரிட்டீஸ் என்ற பெயரில் நிதி சேவை தொழிலில் களமிறங்கினார். இதனிடையே 1993ம் வருடம் எ.பி.சி.(Amalgamated Bean Company) என்ற காபி வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எ.பி.சி. நிறுவனம் ஆண்டுக்கு 28,000 டன்கள் காபியை ஏற்றுமதி செய்து வந்தது. அப்போதே நிறுவனத்தின் ஆண்டு விற்பனை 25,000 கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்தது. நிறுவன லாபத்தினை கொண்டு சுமார் 12,000 ஏக்கர் அளவை கொண்ட காபி தோட்டத்தை வாங்கினார் சித்தார்த்தா.
1996ம் ஆண்டு வாக்கில் சித்தார்த்தா காபி சிற்றுண்டி சாலை ஒன்றை துவக்கினார். இது தான் தற்போதைய கஃபே காபி டே(Cafe Coffee Day) நிறுவனம். காபி டே சிற்றுண்டி சாலையில் வாரத்திற்கு 50,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 1500க்கும் மேற்பட்ட காபி டே கிளைகள் உள்ளன.
நிதி சேவையில் தான் ஆரம்பித்த சிவன் செக்யூரிட்டீஸ் நிறுவனம், தற்போது Way2Wealth செக்யூரிட்டீஸ் என்ற பெயராக மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. இளம் வயதில் அயராத உழைப்பு, கனிவான சேவை போன்றவற்றால் சித்தார்தாவின் தொழில் விரிவடைந்தது. ஐ.டி. துறை, மரச்சாமான்கள்(Daffco Furniture), சரக்கு போக்குவரத்து, வாழைப்பழ ஏற்றுமதி(Banana Exports) என பல தொழில்களில் கால்பதித்தார்.
காபி வர்த்தகத்தில் கர்நாடக மாநிலத்தின் முதல் தொழில்முனைவோராகவும், காபி ஏற்றுமதி மற்றும் உள்நாட்டில் காபி நுகர்வில் இவருடைய பங்கு முக்கியத்துவமாக இருந்தது. 2003ம் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோராகவும், 2011ம் ஆண்டின் சிறந்த அடுத்த தலைமுறை(NextGen) தொழிலதிபராகவும் சொல்லப்பட்டார்.
தொழிலில் வெற்றிகரமாக சித்தார்த்தா செயல்பட்டு வந்தாலும், 2017ம் வருடத்தில் இவரது நிறுவன கிளைகளில் நடந்த வருமான வரி சோதனை பல சர்ச்சைகளுக்கு உள்ளாக்கியது. சமீபத்தில் மைண்ட் ட்ரீ(Mind Tree) நிறுவனம் எல் & டி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் இவருக்கு பங்குகள் மற்றும் இயக்குனர் குழுவில் பொறுப்புகள் இருந்த நிலையில், நிறுவன கையகப்படுத்துதலில் சித்தார்த்தாவிற்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்பட்டது. முடிவில் காபி டே நிறுவனம், மைண்ட் ட்ரீ பங்குகளை விற்று விட்டு சென்றது.
சில மாதங்களுக்கு முன்பு, காபி டே நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை கோகோ கோலா(Coco Cola) நிறுவனம் வாங்குவதற்கான பேச்சு நடைபெற்றது. இவற்றிலும் சித்தார்தாவிற்கு அதிருப்தி இருந்துள்ளது. கடந்த 29ம் தேதி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட காபி டே நிறுவனர் சித்தார்த்தா நேற்று காலை (31-07-2019) மங்களூரு நேத்ராவதி ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார்.
24 வயதில் துடிப்பாக செயல்பட்ட இளைஞர், தனது 60ம் வயதில் நேற்று மர்மமான முறையில் வாழ்வு முற்று பெற்றது. இறப்பிற்கு முன்பு, தனது நிறுவன அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில் தான் தொழில்முனைவோராக தோல்வியடைந்து விட்டதாகவும், சமீப காலமாக பல நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
இன்றும் காபி டே கடைகள், பல சிறு தொழில்முனைவோர்களின் தொழில் பேசும் மன்றமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொழிலதிபர்களில் மிகவும் கனிவான பேச்சையும், காபி டே பணியாளர்கள், வாடிக்கையாளர்களை புன்னைகையுடன் வரவேற்கும் நிகழ்வும் சித்தார்தாவின் நினைவுகளாக கூறப்படுகிறது.
சிறு தொழில்முனைவோர்களான விவசாயிகள் தங்கள் தொழில்களை செய்ய முடியாமல் மோசமான முடிவுகளை எடுக்கும் நிலையில், தற்போது பெரிய நிறுவன தொழிலில் ஈடுபட்டுள்ள இவரை போன்றோரின் மரணமும் தொழிலுலகிற்கு பாதகமானது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை