Income Tax Deadline Extended August 31

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு – ஆகஸ்ட் 31,2019

Deadline Extended to 31st August – IT Returns Filing for Individuals

 

நேற்று மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டதாவது, தனி நபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் ஜூலை 31ம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் 31ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இது 2018-19ம் நிதியாண்டில் பெற்ற வருமானத்திற்கு வரி தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடுவாகும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நேரடி வரிகளின் மத்திய வாரியம்(CBBT) தனது அறிக்கையில், ‘ 2018-19ம் நிதியாண்டுக்கான வருவாயை 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் வரி தாக்கல் செய்ய வேண்டும். தனி நபர் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31. ஆனால் இம்முறை நிறுவனத்திடம் இருந்து பணியாளர்கள் படிவம் 16(Form 16) ஐ பெறுவதில் காலதாமதமாக ஏற்பட்டுள்ளது. பணியாளர்களுக்கான படிவம் 16ஐ நிறுவனம் ஜூலை 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் ‘ என சொல்லப்பட்டிருந்தது.

 

இதன் காரணமாக வரி தாக்கல் செய்வதில் தனி நபர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தற்போது தனி நபர் வரி தாக்கலுக்கான காலக்கெடுவை ஜூலை 31ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ம் தேதியாக அறிவித்துள்ளது. கடந்த வருடமும் இதே போல வரி தாக்கல் காலக்கெடு மாற்றப்பட்டது கவனிக்கத்தக்கது.

 

தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு காலக்கெடுவில் மாற்றம் எதுவும் சொல்லப்படவில்லை. நடப்பு 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் இதுவரை வரி தாக்கல்(Income Tax Returns Filing) செய்தவர்களின் எண்ணிக்கை 36.14 லட்சம். சுமார் 2.6 கோடி பேர் பான் – ஆதார் அட்டையை இணைக்கவில்லை என வருமான வரி தளம் சொல்லியிருக்கிறது.

 

வருமான வரி தாக்கலில் இம்முறை ஆதார் இணைப்பை ஏற்படுத்தா விட்டால் வரி தாக்கல் செய்ய இயலாது. அதனால், வரி தாக்கல் செய்யும் முன் பான் – ஆதார் இணைப்பை(PAN – Aadhaar linking) ஏற்படுத்தி விட்டு, பின்பு வரி தாக்கல் செய்வது நல்லது. காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பான் – ஆதார் இணைப்பில் சிக்கல் இருக்கும் பட்சத்தில் அதனை தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் இடைப்பட்ட நாட்களில் சரி செய்து கொள்ளலாம்.

 

பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்து கொள்ளலாம் என நடப்பு 2019 பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பான் எண்ணுக்கு மாற்றாக தற்போது ஆதார் எண்ணும் பார்க்கப்படுகிறது. ஆதார் தகவலில் பொதுவாக பிழைகள் இருப்பின், அதனை சரி செய்து கொள்வது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்தாது.

 

(Image source: @stpatsschool.org)

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s