Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

மணப்புரம் பைனான்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 399 கோடி

மணப்புரம் பைனான்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 399 கோடி

Manappuram Finance Ltd reported a Net Profit of Rs. 399 Crore in Q3FY20 results

கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1949ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிதி சேவை நிறுவனம் தான் மணப்புரம் பைனான்ஸ்(Manappuram Finance). தற்போது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனமாக செயல்படும் மணப்புரம் நாடு முழுவதும் 4000க்கும் மேற்பட்ட கிளைகளையும், 17,000 க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டிருக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இணைய வழியிலான தங்க நகைக்கடன், கிளைகளில் அளிக்கப்படும் நகைக்கடன், வாகன கடன், அந்நிய நாட்டின் பண மாற்றம்(Forex) மற்றும் பண பரிவர்த்தனை ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது இந்நிறுவனம். மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 15,900 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 60 ரூபாய் விலையிலும், தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் மூன்று மடங்கில் வர்த்தகமாகிறது.

நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், வருவாய் ரூ. 1400 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. செலவினம் ரூ. 382 கோடியாகவும், இதர வருவாய் 15 கோடி ரூபாயாகவும் உள்ளது. மூன்றாம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 399 கோடியாக உள்ளது.

இது கடந்த 2018-19ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வருவாய் ரூ. 1,081 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 245 கோடியாகவும் இருந்துள்ளது. தற்போதைய லாபம் கடந்த வருட காலாண்டை காட்டிலும் 63 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

ஒட்டு மொத்த வாராக்கடன் விகிதமும் இம்முறை சற்று குறைந்துள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 110 சதவீதம் உயர்ந்துள்ளது. 5 வருட காலத்தில் காணும் போது, மணப்புரம் பைனான்ஸ் பங்கின் விலை 43 சதவீதமும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமும் விலை உயர்ந்து காணப்படுகிறது. வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 15 சதவீதமாக உள்ளது.

இது போல லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 33 சதவீதமும், பத்து வருடங்கள் எனும் போது 41 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,887 கோடி. பங்கின் மீதான வருவாய் 22 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மோடி குழுமத்தின் நிறுவனங்கள் மற்றும் அனைத்து சொத்துக்கள் விற்பனைக்கு

மோடி குழுமத்தின் நிறுவனங்கள் மற்றும் அனைத்து சொத்துக்கள் விற்பனைக்கு 

Modi Group of Companies and All Assets for Sale

இந்திய நுகர்வோர் சந்தையில் நேரடி விற்பனை(Direct Sales) என்ற சேவையில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நிறுவனம், ‘மோடி கேர்’ (Modicare). 15-20 வருடங்களுக்கு முன்பு மோடி கேர் மற்றும் ஆம்வே என்ற இரு நிறுவனங்களும் மட்டுமே நேரடி விற்பனை சேவையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த நிறுவனத்தின் உத்தியை நகலெடுத்து பல போலி நிறுவனங்கள் அப்போதைய காலத்தில் வந்து, பின்பு காணாமல் போயின. எம்.எல்.எம்.(MLM) என்று சொல்லிக்கொண்டு பலர் மோசடி பேர்வழிகளிடம் ஏமாந்தனர். இன்றளவிலும் இந்த கதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நேர்மையான பிராண்டுகள் எப்போதும் சந்தையில் நிலைத்து நிற்கின்றன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1933ம் ஆண்டு துவங்கப்பட்ட தனியார் நிறுவனம் தான் மோடி எண்டர்பிரைசஸ்(Modi Enterprises). இந்த நிறுவனம் ஆரம்ப காலத்தில் சர்க்கரை, ரப்பர் மற்றும் வனஸ்பதி ஆகிய பொருட்களில் தனது சேவையை புரிந்து வந்தாலும், பின்னாளில் நாட்டின் மிகப்பெரிய தனியார் குழும நிறுவனமாக மாறியது. இந்நிறுவனத்தின் பிராண்டுகளும் மக்களிடம் பிரபலமானவை.

தற்போது இந்த நிறுவனத்தில் 28,000 க்கு மேற்பட்ட பணியாளர்களும், 80 வருடங்களுக்கு மேல் சேவை புரிந்து வரும் இந்திய குழும நிறுவனமாகவும் உள்ளது. இதன் முக்கிய பிராண்டுகள் Godfrey Phillips, Modicare, Fashion TV, Indofil Industries, Beacon Travels, Ego italian, Ego thai, Shanghai tang, Tea City, Colorbar USA, KK Modi Group, Modi Globe, Synapse India, Maple Bear ஆகியவை. மோடி குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்நிறுவனத்தின் நிறுவனர் திரு. குஜர்மால் மோடி துவங்கிய மோடி நகர் என்ற இடமும் பிரசித்தி பெற்றவை. நிறுவனத்தின் தலைவராக இருந்த இவரது மகன் கே.கே. மோடி (கிருஷ்ணகுமார்) கடந்த நவம்பர் மாதம் காலமானார். இதனை தொடர்ந்து குழுமத்தின் பல சொத்துக்களும், நிறுவனங்களும் விற்பனைக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.கே.மோடியின் மகன் தான் ஐ.பி.எல். பிரபலம் லலித் மோடி. இவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது மற்றொரு கதை. கே.கே. மோடியின் மற்றொரு மகனான சமீர் மோடி(Samri Modi) தான் மோடி கேர் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். ஆம்வே(Amway) என்ற நேரடி விற்பனை சேவை நிறுவனம் அமெரிக்க நாட்டை சேர்ந்த நிறுவனமாக இருந்த நிலையில், இந்த துறையில் துவங்கப்பட்ட முதல் இந்திய நிறுவனமாக மோடி கேர் இருந்தது. தனிநபர் பராமரிப்பு, அழகு சாதனப்பொருட்கள், தோல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, சலவை, விவசாயம் மற்றும் வாகன பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்து வந்தது.

புகையிலை நிறுவனமான காட்பிரே பிலிப்ஸில்(Godfrey Phillips) 47 சதவீத பங்குகளை வைத்துள்ளது மோடி குழுமம். இந்நிறுவனத்தின் தலைவராக பினா மோடி உள்ளார். Modi Guard என்ற பிராண்டும் கண்ணாடி சார்ந்த சேவையில் மோடி குழுமத்தின் சார்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கே.கே. மோடி இறப்புக்கு பின், லலித் மோடியின் சார்பில் உள்ள நிறுவனங்கள், நிலங்கள் மற்றும் இதர சொத்துக்கள் விற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சூழ்நிலையில் மற்ற குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் விற்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

வீட்டுக்கே லேமினேஷன் – ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 764 கோடி

வீட்டுக்கே லேமினேஷன் – ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 764 கோடி

Asian Paints reported Net Profit of Rs. 764 Crore in Q3FY20 – Quarterly Results

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ், பெயிண்ட் துறையில் பூச்சுகள், வண்ணப்பூச்சுகள், அலங்காரத்துடன் தொடர்புடைய பொருட்கள், தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகிய சேவைகளை செய்து வருகிறது. நாட்டின் பெயிண்ட் துறையில் 54 பங்களிப்பை ஏசியன் பெயிண்ட்ஸ்(Asian Paints) நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் முதன்மை பெயிண்ட் நிறுவனமாகவும், ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வலம் வருவது ஏசியன் பெயிண்ட்ஸ். 1942ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1.71 லட்சம் கோடி. கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.03 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 36 மடங்கில் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 53 சதவீதமும், நிறுவனர்கள் தங்களின் பங்குகளில் 13 சதவீத பங்குகளை அடமானம்(Pledged Shares) வைத்துள்ளனர். தற்போதைய பங்கு விலை இதன் புத்தக மதிப்பை காட்டிலும் 17 மடங்கு உள்ளது. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5,420 கோடியாகவும், செலவினம் ரூ. 4,231 கோடியாகவும் இருந்துள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,057 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 764 கோடி. இரண்டாம் காலாண்டில் ஒரு சதவீத வரியை செலுத்தியிருந்த நிலையில், இம்முறை மூன்றாம் காலாண்டில் 26 சதவீத வரியை நிறுவனம் செலுத்தியுள்ளது. அதன் காரணமாக மூன்றாம் காலாண்டில் நிகர லாபத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 2018ம் வருடத்தின் டிசம்பர் காலாண்டை காட்டிலும் தற்போது லாபத்தில் 20 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5,263 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 636 கோடியாகும்.

2018-19ம் நிதியாண்டில் நிறுவனம் வருவாயாக ரூ. 19,342 கோடியை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,159 கோடி. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த பத்து வருட கால அளவில், பங்கின் விலை சுமார் 26 சதவீதம் ஏற்றம் அடைந்துள்ளது. போனஸ் பங்குகள் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) கடந்த ஐந்து வருடத்தில் 10 சதவீதமும், பத்து வருடங்களில் 14 சதவீதமும் வளர்ந்துள்ளது. இது போல கூட்டு லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 12 சதவீதமும், பத்து வருட கால அளவில் 18.50 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக(Reserves) ரூ. 9,975 கோடி உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மோசமான காலாண்டு முடிவுகளை கொடுத்த திவான் ஹவுசிங் – ரூ. 6,705 கோடி நஷ்டம்

மோசமான காலாண்டு முடிவுகளை கொடுத்த திவான் ஹவுசிங் – ரூ. 6,705 கோடி நஷ்டம்

DHFL reported Poor Quarterly Results – Q2FY20 – Loss of Rs. 6,705 Crore

இந்திய நிதித்துறையில் கடந்த சில வருடங்களாக பாதகமான சூழல் நிலவி வருகிறது. வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் வாராக்கடன் சார்ந்த பிரச்னைகள், முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் வட்டியை செலுத்த முடியாமை அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டில் பொருளாதாரத்தை ஆட்டம் கண்ட வைத்த முதல் நிறுவனம் ஐ.எல்.எப்.எஸ்(IL&FS). இதனை தொடர்ந்து திவான் ஹவுசிங் பைனான்ஸ், அல்டிக்கோ(Altico) என நிறுவனங்களின் பிரச்னைகள் அடுத்தடுத்து செய்திகளாக வந்தன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வாங்கிய கடன் மற்றும் பத்திரங்களுக்கான வட்டியை செலுத்த முடியாமல் திவான் ஹவுசிங்(Dewan Housing – DHFL) நிறுவனம் திணறி வந்தது. திவான் ஹவுசிங் பைனான்ஸ் சந்தை மதிப்பு ரூ. 505 கோடி. ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கின் விலை 230 ரூபாயாக இருந்தது. தற்போது பங்கு ஒன்றுக்கு 16 ரூபாய் விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வருட காலத்தில் இதன் பங்கு விலை 92 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. மூன்று வருட காலத்தில் 61 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 42 சதவீதமும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இருப்புநிலை அறிக்கையில் மார்ச் 2019 முடிவில் ரூ. 7,788 கோடியாக இருந்த கையிருப்பு, செப்டம்பர் 2019 முடிவில் ரூ. 765 கோடியாக உள்ளது.

டிசம்பர் காலாண்டு முடிவுகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், திவான் ஹவுசிங் தனது இரண்டாம் காலாண்டு முடிவான செப்டம்பர் 2019 காலத்திற்கான நிதி அறிக்கையை வெளியிட்டது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,107 கோடி என சொல்லப்பட்டது. செப்டம்பர் 2019 காலாண்டு முடிவில் நிறுவனம் ரூ. 6,705 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 12,884 கோடி மற்றும் நிகர நஷ்டம் ரூ. 1,036 கோடி. கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 75.65 ஆக உள்ளது. கடன் சுமார் 82,000 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவனர்கள் தங்களது பங்குகள் முழுவதையும் அடமானம் வைத்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இந்த பங்கில் தற்போது ஏதும் காணப்படவில்லை.

திவான் ஹவுசிங் பங்கு குறைவான விலையில் வர்த்தகமாகிறது என வாங்கி விட்டு, உங்கள் கையை சுட்டு கொள்ள வேண்டாம். இதனை தான் பெரும்பாலோர் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில் செய்தனர். பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றுவது, முதலீட்டாளர்களுக்கு அவசியமான ஒன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அரசு துறையில் முதலீடு செய்ய உள்ளீர்களா – பட்டியலில் உள்ள பங்குகள் என்னென்ன ?

அரசு துறையில் முதலீடு செய்ய உள்ளீர்களா – பட்டியலில் உள்ள பங்குகள் என்னென்ன ?

CPSE (Central Public Sector Enterprises) ETF – Portfolio 

நம்மில் பலர் சேமிப்பு மற்றும் முதலீடு என்றவுடன் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ஏதும் உள்ளதா என கேள்வி கேட்க துவங்குவார்கள். பலரது நம்பிக்கையாக அஞ்சலக சேமிப்பு, பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் (இன்சூரன்ஸ் நிறுவனம் !) காப்பீட்டை பெறுவது என தங்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்வர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏனெனில் பெரும்பாலானோரின் நம்பிக்கை அரசு சார்ந்த நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படாது மற்றும் தங்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதனால் தான். ஆனால் உண்மை நிலவரம் வேறு. ரிஸ்க் என்பது அனைத்து முதலீட்டிற்கும் பொருந்தும். கால அளவை பொறுத்து ரிஸ்க் தன்மையும் மாறுபடும்.

குறுகிய கால தேவைக்கு, குறைந்த வட்டி விகிதத்தை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால், முதலீட்டின் மீதான ரிஸ்கும் அதிகம். நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படுவதால்(Diversification), நல்ல வட்டி வருவாயை பெற இயலும். அங்கே போய் குறைந்த வட்டி விகித முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க கூடாது. இல்லையெனில் பணவீக்கத்தை தாண்டிய வருவாய் ஈட்ட முடியாமல், எதிர்மறையான வருவாயை பெற கூடும்.

கடந்த 2013ம் ஆண்டின் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் ஒப்புதலை தொடர்ந்து, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுத்துறை நிறுவனங்களின்(Public Sector) பங்கு பொது வெளிக்கு விற்பனைக்கு வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அடங்கிய புதிய பண்டு வெளியீடு நடைபெற்றது. இதற்கு  ‘CPSE ETF (Central Public Sector Enterprises) என பெயரிடப்பட்டது. பரஸ்பர நிதிகளில் உள்ள திட்டத்தை போன்றே இந்த பண்டுகளும் செயல்படும். பின்னர் வெவ்வேறு காலத்தில் கூடுதல் நிதி முதலீட்டையும்(Further Fund Offer) மத்திய அரசு மேற்கொண்டது.

இந்த திட்டத்தின் மூலம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்கப்படுவதால் அரசாங்கத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கப்பெறும். இதன் வாயிலாக அரசுக்கான நிதி பற்றாக்குறையை சமாளிக்க இயலும். பங்குகளை வாங்கும் பொது முதலீட்டாளர்கள் அதனை பண்டுகளாக(ETF – Exchange Traded Fund) வைத்திருப்பர். இந்த பண்டுகள் சந்தையிலும் வர்த்தகமாகும் என்பதால், எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.

இதுவரை கூடுதல் நிதி தேவைக்காக மத்திய அரசு ஐந்து முறை பண்டுகளை வெளியிட்டிருந்த நிலையில், இம்மாத இறுதியில் 6வது நிதி தேவைக்கு தயாராகி கொண்டிருக்கிறது. இம்முறை சுமார் ரூ. 10,000 கோடி அளவிலான பங்கு விலக்கல் மூலம் நிதியை திரட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக சி.பி.எஸ்.இ(CPSE ETF) பொதுத்துறை பண்டுகள் குறைவான செலவினத்தை கொண்டிருக்கும். ரிஸ்க் தன்மை பரவலாக்கப்படுவது மற்றும் பல துறையில் உள்ள பொதுத்துறை பங்குகளில் முதலீடு செய்யும் போது சராசரி வருவாயை காட்டிலும் கூடுதல் வருவாயை பெறுவது இதன் சாராம்சம்.

இந்த திட்டத்தில் மொத்தம் 11 அரசு பொதுத்துறை பங்குகள் உள்ளன. அவை NTPC, Coal India, IOC, Rural Electrification Corporation, Power Finance Corporation, Bharat Electronics Ltd, Oil India Ltd, NBCC(India) Ltd, NLC, SJVN ஆகும். மின்துறையில் மூன்று நிறுவனங்களும், நிதித்துறையில் இரண்டு நிறுவனங்களும், எண்ணெய் துறையில் இரு நிறுவனங்களும், தொழிற்துறை மூலதன பொருட்கள், பெட்ரோலியம், கனிம வளம் மற்றும் கட்டுமானத்துறையில் தலா ஒரு நிறுவனம் என்ற அடிப்படையில் நிறுவனங்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே வளர்ச்சி நிலையில் உள்ளவை என சொல்லலாம். கடந்த வருட ஜூலை 2019 பட்ஜெட்டின் படி, மத்திய அரசின் பங்கு விலக்கல் தொகைக்கான இலக்கு ரூ. 1.05 லட்சம் கோடி. இன்னும் அந்த இலக்கு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாரத் பெட்ரோலியம், கான்கார்(Container Corporation) மற்றும் ஷிப்பிங் கார்பொரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடைபெற்று வருவது கவனிக்க வேண்டியது.

சி.பி.எஸ்.இ. திட்டம் கடந்த மூன்று வருடங்களில் 10 சதவீத வருவாயை தந்துள்ளன. அதே வேளையில் பண்டு வெளியிட்ட (2014) தேதியிலிருந்து கணக்கிட்டால் 7.53 சதவீத வருவாய் அளித்துள்ளது. இந்த திட்டத்தை போல பாரத் 22 (Bharat 22 ETF) என்ற ஒரு பண்டும் அரசு துறை சார்பில் உள்ளன.  தனிநபர் மற்றும் குடும்பத்தின் நிதி இலக்கு சார்ந்து இன்று பல பண்டுகள்(Funds) வந்து விட்டது. எனவே ஒருவரின் இலக்கிற்கு ஏற்ப பண்டுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையெனில் தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு முதலீட்டை முடிவு செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரே வருடத்தில் ஒரு லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக மாற்றிய எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) மியூச்சுவல் பண்ட் பங்கு

ஒரே வருடத்தில் ஒரு லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக மாற்றிய எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) மியூச்சுவல் பண்ட் பங்கு

153 Percent Returns in a year – HDFC Asset Management Company – Mutual Fund

எச்.டி.எப்.சி.(HDFC) குழுமத்தின் துணை நிறுவனமான எச்.டி.எப்.சி. அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி(HDFC Asset Management Company) பரஸ்பர நிதி துறையில் தனது சேவையை அளித்து வருகிறது. டிசம்பர் 2019 மாத முடிவின் படி, எச்.டி.எப்.சி. மியூச்சுவல் பண்ட் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 3.82 லட்சம் கோடி. வேறு எந்த பரஸ்பர நிதியும் இந்தளவு தொகையை கொண்டிருக்காததால், தற்போது எச்.டி.எப்.சி. பரஸ்பர நிதி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டாம் இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் பண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனமும் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் எச்.டி.எப்.சி. அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போதைய பங்கு ஒன்றின் விலை ரூ. 1100 என வெளியிடப்பட்டது. தற்போது இந்த நிறுவன பங்கு ஒன்றின் விலை ரூ. 3,178.

எச்.டி.எப்.சி. மியூச்சுவல் பண்டு(Mutual Fund) நிறுவனத்தின் சந்தை மதிப்பு 67,600 கோடி ரூபாய். பரஸ்பர நிதி துறையில் சேவை புரிவதால், நிறுவனத்திற்கு கடன் எதுவும் இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதமும் 258 மடங்கில் உள்ளது முதலீட்டாளருக்கு சாதகமான அம்சம். நிறுவனர்களின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது.

கடந்த மூன்று வருட கால விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 25 சதவீதமாகவும் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கின் விலை ரூ. 1,470 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 52 வார உச்சபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ. 3,844 வரை சென்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 150 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு, நாம் ரூ. 1 லட்சத்தை இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால், பங்கு ஒன்றுக்கு 3,800 ரூபாய் என்ற விலையில் விற்கும் போது, நமக்கு கிடைக்கப்பெறுவது ரூ. 2.58 லட்சம். லாபம் மட்டுமே 1.58 லட்சம் ரூபாய் என அளவிடப்படுகிறது.

டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 525 கோடியாகவும், செலவினம் 111 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 466 கோடி மற்றும் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம்(Net Profit) 353 கோடி ரூபாய். கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் நிகர லாபம் 243 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது சொல்லப்பட்ட லாபம் 45 சதவீதம் கூடுதலாகும்.

2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,075 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 931 கோடி ரூபாயாகவும் இருந்தது. செப்டம்பர் 2019 காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 3,307 கோடி. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) கடந்த ஒரு வருடத்தில் 35 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் – சர்வேதச நாணய நிதியம்

2020ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் – சர்வேதச நாணய நிதியம் 

India’s GDP for FY20 would be 4.8 Percent – IMF Projection

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த செப்டம்பர் காலாண்டு முடிவில் 4.5 சதவீதமாக இருந்தது. இது ஆறு வருட கால குறைவான விகிதமாக சொல்லப்பட்டது. இன்னும் டிசம்பர் 2019 காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 2019-20ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) 4.8 சதவீதமாக இருக்கும் என சர்வேதச நாணய நிதியம் குறைத்து மதிப்பிட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகளாவிய பொருளாதார காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டில் நிலவும் காரணிகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளன. கடந்த அக்டோபர் மாத அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கணித்த சர்வேதச நாணய நிதியம்(IMF), தற்போது இந்த மதிப்பீட்டை குறைத்து வெளியிட்டுள்ளது.

வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டதற்கு காரணமாக சொல்லப்படுவது, ‘ வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் காணப்படும் பிரச்சனைகள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் குறைவான வருமான வளர்ச்சி ஆகியவையே. நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதாக ஊக்குவிக்கப்போவதில்லை.

அதற்கு மாறாக உட்கட்டமைப்பை மேம்படுத்தி அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் கிராமப்புற வருவாயும் மேம்படும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை வலுப்படுத்தும் ‘ எனவும் சொல்லப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம் ஆண்டில் 4.8 சதவீதமாகவும், இதுவே 2020-21ம் நிதியாண்டில் 5.8 சதவீதமாகவும் மற்றும் 2021-22ம் ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கலாம் என நாணய நிதியம் கூறியுள்ளது. இது போல உலக பொருளாதார வளர்ச்சி(World GDP) மதிப்பீட்டையும் குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 2.9 சதவீதமும், 2020-21ம் ஆண்டில் 3.3 சதவீதம் மற்றும் 2021-22ம் நிதியாண்டில் 3.4 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2019-20ம்  நிதியாண்டில் 2.3 சதவீதமாக இருக்கும் எனவும், அதே வேளையில் சீனாவின் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் எனவும் சர்வேதச நாணயம் நிதியம் கூறியுள்ளது. ஏறக்குறைய அனைத்து வளரும் நாடுகளின் வளர்ச்சியும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வேகமாக வளரும் நாடுகளின் (Emerging Economy) வரிசையில் இந்தியா கடந்த சில காலாண்டுகளாக பின்னுக்கு செல்கிறது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாட்டின் பொருளாதார மதிப்பு சுமார் 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அடுத்த 7-10 வருடங்களில் பொருளாதார மதிப்பில் வல்லரசான அமெரிக்காவை வீழ்த்தலாம் என ஒரு கணிப்பு கூறுகிறது. அதே வேளையில் சீன நாட்டின் வளர்ச்சி அடுத்த 30-50 வருடங்களில் அபரிதமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

95 கோடி மக்களின் பணம் ஒரு சதவீத பணக்கார இந்தியர்களிடம் – அதிர்ச்சி தரும் சமத்துவமின்மை அறிக்கை

95 கோடி மக்களின் பணம் ஒரு சதவீத பணக்கார இந்தியர்களிடம் – அதிர்ச்சி தரும் உலகளாவிய சமத்துவமின்மை அறிக்கை 

1 % of Richest Indians hold more than 4 Times of Wealth held by the 95.3 Crore Citizens

பணக்காரர்கள் பணக்காரர்களாக மாறுகின்றனர், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்கின்றனர் – இன்னும் ஓயாத உலக பிரச்சனை இது தான். வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் அடிப்படை தேவை மற்றும் வேலைவாய்ப்பு என நாம் சொல்லிக்கொண்டே சென்றாலும், இன்றும் பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையிலான வளம் சார்ந்த இடைவெளி அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

திரைப்படங்களில் வேண்டுமானால் ஏழையாக பிறக்கும் கதாநாயகன் பணக்காரனாக மாறலாம். இல்லையெனில் மக்களுக்காக போராடி, பணக்கார வில்லனை வீழ்த்தலாம். அங்கேயே பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான மோதல் ஆரம்பித்து விட்டது. உண்மையில் ஒரு ஏழை பணக்காரராவதற்கான வழிமுறையை நம் அடிப்படை கல்வி சொல்லித்தரவில்லை. அதற்கு மாறாக ஆடம்பரத்தை மட்டுமே நாம் விரும்புகிறோம்.

ஆக்ஸ்பேம்(Oxfam) நிறுவனம் கென்யாவின் நைரோபி நகரத்தை தலைமையிடமாக கொண்டு, வறுமை ஒழிப்பு சார்ந்த சேவையை புரிந்து வருகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் உள்ள பணக்காரர்களின் வளம், உலக சமத்துவமின்மை விகிதம் ஆகியவற்றை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான அதிர்ச்சி தரும் சில விஷயங்களை கூறியிருந்தது. உலகின் 60 சதவீத மக்கள் சம்பாதிக்கும் பணத்தை காட்டிலும், அதிக சொத்து மதிப்பு கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 2,153 பில்லினியர்கள். ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து பெண்கள் சம்பாதிக்கும் வளத்தை விட அதிக சொத்து, உலகின் 22 பணக்காரர்களிடம் உள்ளது.

நம் நாட்டில் 95.3 கோடி மக்களின் வளத்தை காட்டிலும் நான்கு மடங்கில் ஒரு சதவீத இந்தியர்களிடம் உள்ளது என அதிர்ச்சி கொடுக்கிறது ஆக்ஸ்பேம். அதாவது நாட்டில் உள்ள 70 சதவீத மக்களின் வளம் வெறும் ஒரு சதவீத பணக்காரரர்களிடம். நாட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தின் தலைமை அதிகாரி சம்பாதிக்கும் ஒரு வருட வருவாயை பெற, பெண் ஊழியர் ஒருவர் 22,277 வருடங்கள் வேலை பார்த்தாக வேண்டும். அவர் பத்து நிமிடங்களில் சேர்க்கும் பணத்தை, தொழிலாளர் ஒருவர் ஒரு வருடம் முழுவதும் உழைத்தால் மட்டுமே கிடைக்கும்.

நாட்டில் உள்ள 63 மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு, நாட்டின் பட்ஜெட் மதிப்பை(2018-19 – ரூ. 24.42 லட்சம் கோடி) காட்டிலும் அதிகமாக உள்ளது. உலகளாவிய சமத்துவமின்மை(Global Inequality) ஒவ்வொரு காலத்திலும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஆக்ஸ்பேம் தெரிவித்துள்ளது. கடந்த தசாப்தத்தில்(Decade) உள்ள கோடீஸ்வரர்களின் வளம் குறைந்திருந்தாலும், இம்முறை கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உள்ளது.

சமத்துவம் சார்ந்த கொள்கைகள் வழிவகுக்கப்பட்டால் ஒழிய பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க இயலாது என இந்த கூட்டமைப்பு சொல்கிறது. நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்கள் வரியை நியாயமாக செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், கிடைக்கும் வரி பணத்தை அரசு முறையாக பொது சேவைகள் மற்றும் உட்கட்டமைப்புக்கு பயன்படுத்துவதை கண்காணிக்கும் முறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் ஆக்ஸ்பேம் மேற்கோள் காட்டுகிறது.

ஒரு பிரபல தொழில்முனைவோரிடம் கேட்ட உரையாடல், ‘ அரசின் கொள்கைகள் மற்றும் தொழில் புரிவதற்கான அம்சங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கூட்டு சேர்ந்து தொழில் புரிய ஆவல் காட்ட வேண்டும். லஞ்சம் ஏதும் கொடுக்காமல் கால தாமதமானாலும், நேர்மையாக அரசின் செயல்பாடுகளை அணுக வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிதி சார்ந்து முன்னேறினால் தான் உண்மையான பணக்காரர்கள் உருவெடுப்பர்.

பணம் சார்ந்த கல்வியை கற்க வேண்டும். சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை உணர வேண்டும். இளம் வயதில் தொழில் புரிய சிறிய அளவில் ரிஸ்க் எடுக்க அஞ்ச கூடாது. அனைவரும் படித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, பலர் தொழில்முனைவை தேர்ந்தெடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் பொருளாதார தன்னிறைவு கிடைக்கப்பெறும். இல்லையெனில், நம் நாட்டில் வயதானவர்களும், இளம் சிறார்களும் தங்கள் குடும்ப சூழ்நிலைக்காக வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். ‘

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

லாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி

லாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி 

India’s Largest Private Sector Bank – HDFC Bank – Q3FY20

வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனமான எச்.டி.எப்.சி.(HDFC) குழுமத்தின் ஒரு அங்கம் தான் எச்.டி.எப்.சி. வங்கி. துணை நிறுவனமாக செயல்படும் இந்த வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகவும் செயல்படுகிறது. இதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் கோடி.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிதி சேவையில் உள்ள இந்த வங்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்களை கொண்டு சேவை புரிந்து வருகிறது. கடந்த ஆண்டில் உலகின் சிறந்த பிராண்டுகளில் 60வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 25 வருடங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank) இன்று 2,700 நகரங்களில் 5,500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு, இதுவரை 2.5 கோடி டெபிட் கார்டுகள் மற்றும் 1.3 கிரெடிட் கார்டுகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது.

வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 11.89 லட்சம் கோடி. இன்று அனைத்து பரஸ்பர நிதி சேவைகளின் திட்டத்தில்(Mutual Funds Scheme Portfolio) முன்னிலை வகிப்பது எச்.டி.எப்.சி. வங்கி தான். வங்கியின் மீதான நம்பிக்கையால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்த பங்கின் விலை 22.50 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. போனஸ் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ. 29,370 கோடி என சொல்லப்பட்டுள்ளது. நிதி லாபமாக ரூ. 3,233 கோடியும், வரிக்கு முந்தைய லாபமாக ரூ. 9,902 கோடியும் உள்ளது. வங்கியின் நிகர லாபமாக ரூ. 7,416 கோடி சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிகர லாபம் 33 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இம்முறை இதர வருவாய் நிகர லாபத்தை ஊக்குவித்துள்ளது.

வங்கியின் வருவாய் கடந்த 10 வருடங்களில் 20 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இது போல வங்கியின் லாப வளர்ச்சியும் கடந்த பத்து வருட காலத்தில் 25 சதவீதமாக இருக்கிறது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE), பத்து வருடங்களில் 18 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக ரூ. 1.48 லட்சம் கோடி உள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் 1.45 சதவீதமாக உள்ளது. நிகர வாராக்கடன் 0.48 சதவீதமாக உள்ளது. இது 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த வாராக்கடன் 1.38 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.42 சதவீதமாகவும் இருக்கிறது. பொறுப்புகளுக்கான ஒதுக்கீடு(Provisions) மூன்றாம் காலாண்டில் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு தொகை முன்னர் ரூ. 2,211 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 3,043 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

எச்.டி.எப்.சி. வங்கியின் கடன்-பங்கு விகிதம் 6.97 மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 1.64 மடங்கில் உள்ளது. பொதுவாக மற்ற துறையில் உள்ள நிறுவனங்களின் கடன்-பங்கு மற்றும் வட்டி பாதுகாப்பு விகிதத்துடன் வங்கித்துறையில் உள்ள நிறுவனங்களை ஒப்பிட கூடாது. ஏனெனில், நிதித்துறையில் கடன் வழங்கினால் மட்டுமே வருவாய் கிடைக்கப்பெறும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 3 லட்சம் கோடி – காலாண்டு முடிவுகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 3 லட்சம் கோடி – காலாண்டு முடிவுகள் 

RIL’s debt of Rs. 3 Lakh Crore – Quarterly Results – Q3FY20

இந்திய சந்தையில் 10 லட்சம் கோடி ரூபாயை சந்தை மதிப்பாக கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries) நிறுவனமாகும். 1973ம் ஆண்டு திருபாய் அம்பானி அவர்களால் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இன்று நாட்டின் மிகப்பெரிய குழும நிறுவனமாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோ கெமிக்கல், ஜவுளி, சில்லரை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம், இசை மற்றும் நிதி சேவை என பல தொழில் முகங்களை கொண்டிருக்கிறது. ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஆகியவை இதன் துணை நிறுவனங்களாகும்.

இந்த நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு 49 சதவீதமாக உள்ளது. புத்தக மதிப்பு 639 ரூபாய் விலையிலும், கடன்-பங்கு விகிதம் 0.62 ஆகவும் இருக்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) குறைந்த அளவாக 4 மடங்கில் உள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,52,939 கோடி மற்றும் செலவினமாக ரூ. 1.30 கோடி சொல்லப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 11,640 கோடி ரூபாய்.

இயக்க லாப வளர்ச்சி(OPM) தொடர்ச்சியாக 15 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது. ஆனால் அதே வேளையில் வட்டி பாதுகாப்பு விகிதம் போதுமான அளவில் இல்லை. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 28 சதவீதமும், ஐந்து வருடங்களில் 5.50 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 14 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.

லாப வளர்ச்சி எனும் போது, கடந்த மூன்று வருட காலத்தில் 10 சதவீதம், ஐந்து வருடங்களில் 14 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 10 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே ஐந்து வருடங்களில் 29 சதவீதமும், 10 வருட கால அளவில் 11.30 சதவீதமும் விலை ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு போனஸ் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் சேர்க்கப்படவில்லை. எப்படியிருப்பினும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு நல்ல வருவாயை அளித்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 3.99 லட்சம் கோடியாக உள்ளது. பணவரத்து சரியாக வந்து கொண்டிருக்கிறது, அதே வேளையில் நிலையான சொத்துக்களும் நிறுவனத்தால் வாங்கப்படுகின்றன. மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் கடன் 3.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் கடனை குறைக்கும் பொருட்டு, தனது எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் சிறு பங்குகளை ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்வு நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் எட்டப்படும்.

அடுத்து வரும் காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லரை வணிகம்(JIO Mart) மற்றும் ஜியோ சேவைக்கு(Reliance JIO) அதிக முக்கியத்துவம் கொடுக்கும். இதன் மூலம் அதன் வருவாயும் மேம்படும். கடன் அதிகம் இருந்தாலும், இதன் விற்பனை வளர்ச்சி அபரிதமாக உள்ளது. இருப்பினும், முதலீட்டாளர்களை பொறுத்தவரை நிறுவனம் தனது கடனை குறைப்பது தான் சாதகமான அம்சமாக அமையும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com