அனில் அம்பானியின் காலக்கெடு – சரிவான வரலாறு

அனில் அம்பானியின் காலக்கெடு – சரிவான வரலாறு

Anil Ambani’s Time line – The Narrow history of Reliance ADAG – Reliance Communication

 

பணக்காரர்களின் தொழில் வாழ்க்கை நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் கதையாக இருந்தாலும், அவர்களின் தொழில் தோல்விகள் ஒவ்வொருவருக்கும் வரலாற்று பாடமாகவே அமைந்துள்ளது. தொழிற்துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் நிறுவனங்கள் வெகு சிலவென்றே என சொல்லலாம். ஆனால் பின்னாளில் சறுக்கும் நிறுவனங்களே தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழிலில் போட்டி மற்றும் புதுமையான விஷயங்களை தக்க வைத்து கொள்ளாதது தான் பெரும்பாலான தொழில் தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ரிலையன்ஸ்(Reliance) என்ற மாபெரும் நம்பிக்கையை உருவாக்கியவர் திருபாய் அம்பானி அவர்கள். அவரது காலத்திற்கு பின்பு, மைந்தர்களின் பங்களிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. அனைத்து குடும்பங்களில் ஏற்படும் சிக்கல் தான் ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்திற்கும்.

 

திருபாய் அம்பானியின் பிள்ளைகள் முகேஷ் மற்றும் அனில் ஆகிய இருவரும் தங்களுக்கான தொழிலை பிரித்து கொண்டனர். உலக பணக்காரர்கள்  வரிசையில்முன்னணி வகித்த அம்பானி சகோதரர்கள் முதல் சமீபத்திய ஜியோ புரட்சி(JIO) மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால் வரை இவர்களது தொழில் வரலாறு நீண்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் முகேஷ் அம்பானியால் துவங்கப்பட்டாலும், பின்னாளில் முகேஷ் தனது தந்தையின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நிர்வகிக்க சென்றார்.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அனில் அம்பானியிடம் சென்றது, பின்பு அனில் திருபாய் அம்பானி குழுமம்(Reliance ADAG) உருவாக்கப்பட்டது. 2002ம் வருடம் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இன்போகாம்(Reliance Infocomm) என்ற நிறுவனம் தான் பிறகு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என மாற்றம் செய்யப்பட்டது. தொலைத்தொடர்பு துறையில் சி.டி.எம்.ஏ.(CDMA) என்ற தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்த ஆர்.காம்(Rcom) நிறுவனம், 2010ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக 5860 கோடி ரூபாயை செலவிட்டது. 2016ம் வருடத்தில் எம்.டி.எஸ்.(MTS Mobile) நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கையகப்படுத்தியது.

 

ஏர்செல் நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(Reliance Communications) நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தமும் தோல்வியில் முடிந்தது. தொலைத்தொடர்பு துறையில் அடுத்தடுத்த போட்டியினை சமாளிக்க முடியாமல் ஆர்.காம் நிறுவனம் திணறியது. ஜியோ வருகைக்கு பின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் காணாமல் போனது என்றே சொல்லலாம். அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ப்ரா  போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ஸ்பெக்ட்ரம்(Spectrum) அலைவரிசையில் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தாமதப்படுத்தியதால், நீதிமன்றத்தில் அனில் அம்பானி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

 

செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாமல், தனது ஆர்.காம் நிறுவனத்தை திவாலாக அறிவித்தார் அனில் அம்பானி(Anil Dhirubhai Ambani). சில நாட்களுக்கு முன் நீதிமன்றம், ‘ அனில் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 550 கோடி ரூபாயை செலுத்த தவறினால் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் ‘ என எச்சரித்து இருந்தது நினைவிருக்கலாம். அதற்கான காலக்கெடு வரும் செவ்வாய் கிழமை அன்று (19-03-2019) முடிவடைகிறது. ஏற்கனவே அனில் அம்பானி ரிலையன்ஸ் அஸெட் மேனேஜ்மென்ட்(RNAM) நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவெடுத்து, அதனை தொடர்ந்து அந்த தொழிலை நிப்பான் லைப் நிறுவனத்தை வாங்க சொல்லியிருந்தார். ரிலையன்ஸ் பரஸ்பர நிதி நிறுவனத்தில் நிப்பான் லைப்(Nippon Life) ஒரு பங்குதாரராக உள்ளது கவனிக்கத்தக்கது.

 

இதனிடையே தற்போது பி.எஸ்.என்.எல்.(BSNL Telecom) நிறுவனமும் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தரவில்லை என வழக்கு தொடுத்துள்ளது. விமான ஒப்பந்தத்திலும்(Aircraft Deal) அனிலின் குழுமம் பிரச்னையில் உள்ளது. முகேஷ் அம்பானியை விட கல்வியிலும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிய அனில் திருபாய் அம்பானி செலுத்த வேண்டிய கடனை செலுத்தி விட்டு, தனது குழுமத்தை மீட்டெடுப்பாரா, இல்லையெனில் வரலாற்றில் எதிர்மறையான நிலையை ஏற்படுத்துவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். (*அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை தாம் அளிப்பதாக கூறியுள்ளார் -திங்கட்கிழமை இரவு .)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019

The WPI Inflation in India was 2.93 Percent in February 2019

 

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த பிப்ரவரி  மாதத்தில் 2.93 சதவீதமாக இருந்துள்ளது. இதே காலத்தில் கடந்த 2018ம் வருடத்தில் மொத்த விலை பணவீக்கம்(Wholesale price index -WPI) 2.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக இருந்த பணவீக்கம் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சக்தி ஆகியவற்றில் ஏற்பட்ட விலை உயர்வால் பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பிப்ரவரி 2019 மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation -CPI) 2.57 சதவீதமாகவும், இதுவே ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும் இருந்தது.அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பால் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து கடந்த மாதத்தில் இதன் பணவீக்கம் 4.84 சதவீதம் ஆகும். இதுவே ஜனவரி மாதத்தில் 3.54 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்தது.

 

எரிபொருட்கள் மற்றும் மின்சக்தி(Fuel & Energy) ஆகியவற்றின் பணவீக்கமும் அதிகரித்து கடந்த மாதத்தின் முடிவில் 2.23 சதவீதமாக இருக்கிறது. உணவு பொருட்களின் விலையும் கடந்த இரண்டு மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் காலம் வரை உணவு பொருட்களில் விலை சரிவு ஏற்பட்டு பணவாட்டம் காணப்பட்டது.

 

கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் எரிபொருட்களின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைவாகவே உள்ளது. இதன் பணவீக்கம் கடந்த பிப்ரவரி 2018 காலத்தில் 4.6 சதவீதமாக இருந்த போதிலும், கடந்த மாதத்தில் 2.23 சதவீதமாக தான் இருந்தது.

 

நாட்டின் பணவீக்கம்(Inflation India) கடந்த சில காலங்களாக குறைந்த அளவிலே இருந்துள்ளதால், அதனை சார்ந்து பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை அறிவித்து வருகிறது. அடுத்து வரும் நிதி கொள்கை குழுவிலும் பாரத ரிசர்வ் வங்கி, வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம்(RBI Interest Rate) என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்

வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்

India’s First Real Estate Investment Trust(REIT) Opportunity – Advantages & Disadvantages

 

ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளை என்னும் ரெய்ட்(REIT) அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு முதல் செபியால்(SEBI) ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையில் இதுவரை எந்த முதலீடும் திரட்டப்படாத நிலையில், தற்போது பொது மக்களிடையே முதலீட்டை பெறும் நோக்கத்தில் உள்ளது ரெய்ட். ரெய்ட் என்னும் அமைப்பு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை போன்று செயல்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதிகள் பொதுவாக பல்வேறு முதலீட்டாளர்களிடையே பெற்ற தொகையை பங்குகள், அரசாங்க பத்திரங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யும். இதனை போன்றே ரெய்ட் முதலீடும் பொது மக்களிடம் பணத்தை  பெற்று கொண்டு அதனை நிலம் மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யும். முதலீடுகளின் வாயிலாக வாடகை வருமானம், நிலம் மற்றும் மனை விற்பனை மூலம் ஆதாயம் ஆகியவை பெறக்கூடும். இவை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

 

வீட்டு மனையில் நாம் நேரிடையாக அதிக பணத்தை முதலீடு செய்யாமல் ரெய்ட் அமைப்பின் மூலம் நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகைக்கு மட்டும் முதலீடு செய்து விட்டு, வருவாயை ஈட்டலாம். நிலம் மற்றும் வீட்டு வாடகை மூலம் ஒரு குறிப்பிட்ட கால வாரியாக வருமானம் கிடைக்கும். இது போக, சில காலங்களுக்கு பிறகு அந்த மனை விற்கப்படும் நிலையில், மூலதன ஆதாயமும் நமக்கு கிடைக்கப்பெறும்.

 

ரெய்ட் அமைப்பில் செய்யப்பட்ட முதலீட்டை நாம் இடையில் திரும்ப பெற விரும்பினால், பங்குச்சந்தையில்(Stock Exchange) நம்மிடம் உள்ள ரெய்ட் யூனிட்களை விற்று பணமாக பெற்று கொள்ளலாம். சுருங்க சொன்னால், இந்த முதலீடு மியூச்சுவல் பண்ட் முதலீட்டை போன்றே அமையப்பெறும்.

 

ரெய்ட் அமைப்பில் முதல் நிறுவனமாக பெங்களூருவை சேர்ந்த எம்பசி பார்க்ஸ்(Embassy Office Parks) நுழைய இருக்கிறது. முதலீடு திரட்டப்படும் நாள் வரும் 18ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி(March 18-20) வரை ஆகும். பொதுவெளியில்(Public Issue) திரட்டப்பட உள்ள தொகை சுமார் 4750 கோடி ரூபாய். இதற்கு ஐ.சி.ஆர்.ஏ.(ICRA) ஏஜென்சியின் ‘AAA’ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டின் விலை 300 ரூபாயாகவும், குறைந்தபட்ச வாங்க வேண்டிய பங்குகளின் எண்ணிக்கை 800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ரெய்ட் முதலீட்டில் நிறுவன முதலீட்டாளர்களுக்கு 75 சதவீதமும், நிறுவனமல்லாத மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு 25 சதவீத பங்களிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் மூலம் பெறப்படும் வருமானம், வரி நிபந்தனைக்கு உட்பட்டது. அதே வேளையில், பெறப்படும் ஈவுத்தொகைக்கு(Dividend) வரி எதுவும் செலுத்த தேவையில்லை.

 

சாதகமான அம்சமாக உள்ளவை:  ஒழுங்குமுறை ஆணையமாக செபி செயல்பட்டு வருவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். ரெய்ட் முதலீடு அனுபவமிக்க தொழில் முறை நிர்வாகிகளை கொண்டு இயக்கப்படுவதால், நஷ்டத்திற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வீட்டு மனை துறையின் மூலம் தொடர் வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு.

 

பொதுவாக நாம் மனையை வாங்கினால், அதனை உடனடியாக விற்று பணம் பண்ண முடியாது. ஆனால் ரெய்ட் முதலீட்டின் மூலம் உடனடியாக சந்தையில் நாம் வைத்திருக்கும் மனைகளை (யூனிட்களை) விற்று பணம் பெறலாம்.

 

பாதகங்கள்:  ரெய்ட் முதலீட்டில் குறைந்தபட்ச மூலதனம் ரூ. 2 லட்சமாக செபி நிர்ணயித்துள்ளது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இருப்பினும், காலப்போக்கில் இவற்றில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சமீப காலங்களாக ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பார்த்த வருமானம் அவ்வளவாக கிடைப்பதில்லை. மனைகளின் விற்பனை விலையும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை எனலாம். இதனால் நமக்கு கிடைக்கப்பெறும் வருவாய், வங்கி வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை(Bank FD Rates) ஒட்டியே காணப்படும்.

 

இந்த மாதம் வெளிவர உள்ள முதலீடு தான் ரெய்டின் முதல் வெளியீடு ஆகும். எனவே, இந்த துறை இனிவரும் காலத்தில் எவ்வாறு வளரும் என நாம் சற்று பொறுமையாக காத்திருப்போம். அதுவரை நாம் பரஸ்பர நிதி திட்டங்களை(Real Estate Sector Funds) முதலீட்டு வாய்ப்பிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து லாபம் பார்ப்பது எப்படி ?

பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து லாபம் பார்ப்பது எப்படி ?

How to choose good stocks to earn better returns in the Indian Stock Market ?

 

செவ்வாய் கிழமை அன்று (12-03-2019) இந்திய பங்குச்சந்தை நல்ல ஒரு ஏற்றத்தை கண்டிருந்தது. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி(Nifty50) 11,301 புள்ளிகளையும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடு 37,535 என்ற புள்ளிகளிலும் நிலை கொண்டது. அதிகபட்சமாக ஊடகம், வீட்டு மனை மற்றும் மூலதன பொருட்கள்(Capital Goods) ஆகிய துறைகள் இரண்டு சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது தேர்தல் செய்திகள் தவிர்த்து, உலகளாவிய செய்திகள் இந்திய பங்குச்சந்தையில் அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பொதுவாக ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், சந்தை மந்த நிலையில் இருப்பதும், தேர்தல் முடிவுக்கு பின்பு ஏற்றமடைவதும் இயல்பான நிலையாக உள்ளது. நடப்பாண்டில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை பங்குகளை வாங்கி குவிப்பதற்கான காலமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின் நிலையான ஒரு அரசு அமையும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிய கூடும். இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் தெரிய வரலாம்.

 

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(Foreign Institutional Investors) இந்திய பங்குச்சந்தையில் செய்த முதலீடு ரூ. 13,000 கோடிக்கும் அதிகமாகும். நமது நாட்டின் பங்குச்சந்தை வருங்காலத்தில் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், நல்ல நிறுவன பங்குகள் மட்டுமே நீண்ட காலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு லாபத்தை சம்பாதித்து தர முடியும். சந்தை ஏற்றத்தில் பெரும்பாலான பங்குகள் விலை அதிகரித்து வந்தாலும், நல்ல மற்றும் மதிப்பு மிக்க பங்குகள் அடுத்த ஐந்து முதல் பத்து வருட காலத்திற்கு தொடர் வருமானத்தை தரக்கூடியதாக அமையும்.

 

நல்ல நிறுவன பங்குகளை(Growth Stocks) தேர்வு செய்ய அடிப்படை பகுப்பாய்வு காரணிகள் எப்போதும் முன்னிலையில் நிறுத்தப்படும். உலகின் மாபெரும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) சொல்வது போன்று, நல்ல நிறுவன பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்குவதும், அதனை தொடர்ந்து சந்தையில் பொறுமை காப்பதும் அவசியமானது. அடிப்படை பகுப்பாய்வின்(Fundamental Analysis) படி நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று பல தளங்கள் தகவல்களை அளித்து வந்தாலும், வெகு சில தளங்களே பட்டியிலடப்பட்ட நிறுவனங்களின் தரவுகளை முதலீட்டாளருக்கு எளிமையாக அளித்து வருகிறது.

 

அவ்வாறு நிதி தகவல்களை எளிமையாக அளிக்கும் ஒரு தளம் தான் – www.screener.in

 

இந்த தளத்தில் வழங்கப்படும் அடிப்படை நிதி தகவல்களை கொண்டு, நமக்கான நல்ல நிறுவன பங்குகளை நாமே தேர்வு செய்யலாம். ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பவர் பங்கு தரகர்கள் மற்றும் பங்கு சார்ந்த மோசடி செய்திகளால் ஈர்க்கப்படமாட்டார் என்பது கவனிக்கத்தக்கது. நிறுவனங்களின் தகவல்களை அலசி ஆராய்ந்து நாமே சிறந்த நிறுவன பங்குகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதனால் பெறக்கூடிய லாபமும் நன்றாக இருக்கும். நிறுவனங்களை ஆராய நேரம் இல்லாதவர்கள், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் அவ்ரகளுக்கான பங்கு முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.

 

முதலில், www.screener.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். இந்த தளத்தில் இலவசமாக உங்களை பதிவு செய்தும் கொள்ளும் போது, கூடுதலான சில நிதி தகவல்களும் கிடைக்கும்.

Stock Screener India

தளத்தின் வலது பக்க மேற்புறத்தில், கூட்டல் அடையாள குறி(Plus Sign) ஒன்று தென்படும், அதனை கிளிக் செய்யவும். அங்கே நமக்கான தேடல் வினவலை உருவாக்க(Create a Search Query – New Screen) ஒரு பெட்டி கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் எவ்வாறு உங்களது விதிமுறைகளை பதிவிட வேண்டும் என அருகிலேயே வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச பங்குச்சந்தை வகுப்புகள்

 

உதாரணத்திற்கு, கீழே உள்ள விதிமுறைகளை நீங்கள் பதிவிட்டு அதற்கான முடிவுகளை காணலாம்.

Stock Screening Process 1

வினவலின் முடிவுகளில்(Query Results) உங்களுக்கென சில நிறுவன பங்குகளின் பெயர்கள் காண்பிக்கப்படும். கொடுக்கப்பட்டுள்ள நிறுவன பெயர்களை க்ளிக் செய்தால் நிறுவனத்தின் அனைத்து தரவுகளையும் நீங்கள் காணலாம். உங்களுக்கு தேவைப்படும் தரவுகளை நீங்கள் சேர்க்க, ‘Add Quick Ratio’ என்ற பெட்டியில் பதிவிடலாம்.

 

Stock Screening Process 2

 

முடிவுகளில் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிறுவனத்தின் தொழில்கள் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என முதலில் சிந்தியுங்கள். உங்களால் புரிந்து கொள்ளக்கூடிய தொழிலின் பங்குகளை தேர்ந்தெடுத்து, அந்த பங்கின் விலை தற்போது வாங்கக்கூடிய விலையில் உள்ளதா என சரிபார்த்து பின்பு வாங்க முயலுங்கள். நல்ல நிறுவன பங்குகளை ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் வைத்திருக்கும் பட்சத்தில், நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

 

பங்குகளில் முதலீடு செய்வதும் ஒரு கலை(Value Investing) தான், ஆனால் நஷ்டத்தை தவிர்ப்பதே நம்முடைய முதல் இலக்காக இருத்தல் வேண்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?

Indian Stock Market Ups and Downs – What can happen this year 2019 ?

 

கடந்த 2014ம் ஆண்டில் ஏற்றமடைய துவங்கிய சந்தை 2017ம் வருடம் சந்தையின் உச்சத்தில் இருந்தது. கடந்த ஒரு வருடமாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்தில் மட்டுமே வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலை நோக்கி சந்தையின் போக்கு சென்று கொண்டிருந்தாலும், கடந்த வரலாற்றில் அரசியலை சார்ந்து சந்தை பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட் தாக்கல் மற்றும் தேர்தல் காலங்கள் சிறிய ஏற்ற இறக்கத்தை சந்தையில் ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தையில் வெகுவாக இல்லை எனலாம். நடப்பு நிதி ஆண்டில் சந்தையின் ஏற்ற இறக்கம் பெரும்பாலும் நிறுவனத்தின் வருவாய் அறிக்கை(Company Earnings) மற்றும் சந்தை அதிக மதிப்பில்(Market Valuation) வர்த்தகமாகி கொண்டிருந்தது தான் காரணமாக உள்ளது.

 

இனி அடுத்து வரும் காலங்களில் சந்தை எப்படி இருக்கலாம் என கணிப்பது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் வரலாற்று தகவல்கள் அதற்கான வாய்ப்பை நமக்கு எப்போதும் தந்து கொண்டு தான் இருந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், இங்கிலாந்து நாட்டின் பிரெக்ஸிட்(Brexit) பிரச்னை மற்றும் உள்நாட்டு நிகழ்வுகள் சந்தையில் பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கிறது.

 

சந்தையில் முதலீடு செய்ய பல்வேறு வகையான அடிப்படை பகுப்பாய்வுகள் இருப்பினும், ஒட்டுமொத்த சந்தையின் விலையை அறிந்து கொள்ள கீழ்கண்ட நான்கு காரணிகள்(Four Factors) நமக்கு உதவும். இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 

  • Price to Earnings(P/E)

  • Price to Book Value (P/B)

  • G-sec X PE (Price to Earnings)

  • Market Cap to GDP

 

Price to Earnings மற்றும் Price to Book Value பற்றி நமது வர்த்தக மதுரை தளத்தில் நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இவை இரண்டும் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Analysis factors) சார்ந்தவை.

 

பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கல்வி உங்களுக்கு இலவசமாக வேண்டுமா ?

 

சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கின் விலையையோ அல்லது ஒட்டுமொத்த சந்தையின் விலையை அதனதன் வருவாயுடன் ஒப்பிட்டு பார்த்தல் Price to Earnings எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் அல்லது சந்தையின் விலையுடன் புத்தக மதிப்பை கொண்டு ஒப்பிட்டு ஆராய்தல் Price to Book Value ஆகும். கீழ்காணும் தேசிய பங்குச்சந்தையின் இணைய தளத்தில் இதன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சந்தையில் பி.இ. மற்றும் பி.பி. விகிதம் அதிகமாக இருக்கும் சமயத்தில், ஈவு தொகை(Dividend Yield) குறைவாக இருக்கும்.

 

Nifty PE, PB, Dividend Yield Valuation – NSE India

 

மூன்றாவதாக அரசாங்க பத்திரங்கள்(Govt. Securities) வழங்கும் வட்டி விகிதங்களை, PE விகிதத்துடன் பெருக்கி விட்டு அதன் மதிப்பை சார்ந்து பங்குச்சந்தை நகர்வுகளை முடிவெடுப்பது. அரசாங்க பத்திரங்கள் பொதுவாக பத்து வருட காலத்தில்(10 year Bond Yield %)  முதிர்வடையும் திட்டத்திற்கு வட்டி விகிதங்களை அறிவிக்கும். இதனை சந்தையின் பி.இ. விகிதத்தில் ஒப்பிட்டு பார்க்கும் போது, நமக்கு தற்போதைய சந்தையின் நிலை தெரிய வரும்.

 

Valuation = G-Sec X PE

 

நான்காவதாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) எண்களோடு சந்தையின் மதிப்பை(Market Capitalization) ஒப்பிட்டு கொள்வது ஒரு மதிப்பீடு அம்சமாகும். கடந்த பத்து வருட காலத்தில் பங்குச்சந்தையின் மதிப்பை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சில காலங்களில் சந்தையின் மதிப்பு மிக அதிகமாகவும், அதே வேளையில் பல சமயங்களில் சந்தை தள்ளுபடி விலையில் அதன் மதிப்பை கொண்டிருந்தது.

 

சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் சந்தையின் மதிப்பு ரூ. 156 லட்சம் கோடியாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 162 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது. ஆக, உள்நாட்டு உற்பத்தியில் சந்தை மதிப்பு 4 சதவீத தள்ளுபடியில் மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2007ல் சந்தை மதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக பின்னர் பெரிய வீழ்ச்சியை கண்டது நினைவிருக்கலாம். பின்னாளில் மார்ச் 2009ம் வருட காலத்தில் சந்தை 39 சதவீத தள்ளுபடியில் கிடைத்ததும், அந்த நேரத்தில் முதலீடு செய்தவர்கள் இன்று லட்சங்களையும், கோடிகளையும் குவித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

 

தற்போது 2019ம் வருட காலத்தின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 186 லட்சம் கோடியாகவும், சந்தை மதிப்பு 140 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(Gross Domestic Product) சந்தை மதிப்பு 25 சதவீத தள்ளுபடியில் கிடைத்திருப்பதை காட்டுகிறது. சந்தையின் மதிப்பு எப்போதெல்லாம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதோ அப்போது தான் முதலீட்டாளராக நாம் முதலீடு செய்ய வேண்டிய காலமிது.

 

சந்தை இன்னும் இறக்கத்தை காணலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தற்போது சந்தை தள்ளுபடியில் காணப்படுவதால் பங்குகளை வாங்கி வைப்பதற்கான காலமாகவே இன்று பார்க்கப்படுகிறது. சந்தை மேலும் இறக்கத்தில் சென்றாலும், அது முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகவே நாம் பார்க்க வேண்டும். இது கடந்த கால புள்ளிவிவர வரலாறு, எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியாது. நீண்டகாலத்தில் பங்குச்சந்தை நல்ல வருமானத்தை தரும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

Personal Finance – Survey / Polling

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

 

முதல் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • சேமிப்பு, முதலீடு  – இரண்டும் ஒன்றா ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  சேமிப்பு என்பது வெறுமனே உண்டியலில் பணம் சேர்ப்பது போன்று. அது வளர்ச்சியை பெறுவதில்லை. உதாரணத்திற்கு நமது சேமிப்பு வங்கி கணக்கு போல, பணவீக்கத்தை விட குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும். முதலீடு என்பது வளர்ச்சியையும், தொடர்  வருமானத்தையும் கொடுக்கக்கூடியது. உதாரணமாக நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், தொழிலில் முதலீடு.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 

விளக்கம்: ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனிநபருக்கான சலுகைகள், தொழிலுக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை பட்ஜெட்டில் விவாதிக்கப்படும். நமது வரவு-செலவை பாதிக்கும் காரணிகள் பட்ஜெட்டில் இடம்பெறும், அவை நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையலாம்.

 

  • உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?

 

விளக்கம்: அரசின் பட்ஜெட்டை போலவே ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டும் அவசியமாகும். வரவு-செலவு அறிக்கையை முறையாக நாம் பராமரிப்பதால் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்க பட்ஜெட் திட்டமிடல் உதவும். நமது தளத்தில் பட்ஜெட் திட்டமிடல் எவ்வாறு அமைப்பது என்பதை எளிமையாக விளக்கியுள்ளோம் –

 

பட்ஜெட் திட்டமிடலை உருவாக்குவது எப்படி ?

 

  • முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?

 

விடை: பணத்தை பெருக்க (Capital Appreciation)

 

விளக்கம்: முதலீடு என்பது பொதுவாக வளர்ச்சியையும், அதனை சார்ந்து தொடர் வருமானத்தையும் தருவதாக இருக்க வேண்டும். நிலம், பங்குகள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றை முதலீடாக சொல்லலாம்.

 

  • காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: காப்பீடு என்பது ஒரு முதலீட்டு சாதனமாக கருத முடியாது. காப்பீட்டின் நோக்கமே எதிர்பாராத நிதி இழப்பினை சரி செய்வதற்கான பாதுகாப்பு அம்சம் தான். இதனை ஒரு முதலீடாக எடுத்து கொள்ள கூடாது. முழுமையான காப்பீடு திட்டத்திற்கு டேர்ம் பாலிசிகளை வாங்கி கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனங்களில் விற்கப்படும் காப்பீட்டுடன் முதலீடு என்று கூறப்படும் சாதனங்கள் குறிப்பிடத்தக்க வருவாய் தராது.

 

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?
  2. நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?
  3. பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?
  4. நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?
  5. பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

குறிப்பு:

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 2

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

Become a Millionaire / Crorepati with a monthly investment of 1444 rupees in SIP

 

சிலருக்கு செல்வம் சேர்ப்பது ஒரு கலையாக இருந்தாலும், பலருக்கு அது ஒரு எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. செல்வம் சேர்ப்பதின் முதல் ரகசியமே சரியான பட்ஜெட் திட்டமிடல்(Budget Planning) தான். நாம் தினசரி மேற்கொள்ளும் வரவு-செலவுகளை எழுதி வைத்து பழக்கப்படுத்தினாலே நமக்கான செல்வ மகள் தானாக வருவாள். கூட்டு குடும்பத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கூட்டு வட்டியின் பலனை நீங்கள் அனுபவித்தது உண்டா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகின் எட்டாவது அதிசயம், ‘கூட்டு வட்டி (Power of Compounding)’ என்றார் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஏழு அதிசயங்களை நாம் வரலாற்றில் அவ்வப்போது மாற்றி கொண்டாலும், இன்றும் மாறாதது கூட்டு வட்டியின் ரகசியமே. கூட்டு வட்டியின்(Compound Interest) பலனை அறிய நாம் புத்தகங்கள் எதனையும் வாங்கி படிக்க வேண்டாம். சிறு துளி பெருவெள்ளம் போல, நமது பாரம்பரிய அஞ்சலக சேமிப்பு, மாத சீட்டு கட்டும் முறை, பி.எப்.(Provident Fund) தொகையினை சொல்லலாம்.

 

நாம் சேமிக்கும் மாதாந்திர சீட்டு அல்லது பி.எப். தொகையை நாம் உற்று நோக்கினால் அதற்கான பலன் நமக்கு தெரிய வரும். நாம் சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் பின்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான தொகையை நமக்கு கொடுத்திருக்கும். இது கூட்டு வட்டியின் பலனே இன்றி வேறு எதுவுமில்லை. இந்த கூட்டு வட்டியின் பலத்தை நாம் முழுவதுமாக அறிய அல்லது வாழ்நாள் முழுவதும் இதன் பலனை அனுபவிக்க பல முதலீட்டு சாதனங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் எளிமையான மற்றும் நம்பகமான சாதனம் எனில், அது பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) தான்.

 

தங்கம் மற்றும் நிலத்தில் நமது முதலீடுகள் இருப்பினும் நாம் அவற்றில் ஒவ்வொரு மாதமும் அல்லது நம்மிடம் உள்ள சிறு தொகைக்கு வாங்கி வைக்க முடியாது. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நாம் முதலீடு செய்யலாம். பொதுவாக செல்வம் சேர்ப்பதற்கு தொடர்ச்சியான முதலீடு(Regular Investing) அவசியமாகும். நாம் முதலீடு செய்யும் பணம் சிறு தொகையாக இருப்பினும், தொடர் முதலீடு நமக்கான செல்வத்தை சேர்த்து தரும்.

 

பங்குச்சந்தையில் தொடர் முதலீடு நீண்ட காலத்தில் பெரும் செல்வதை கொடுக்கும். அதே வேளையில் பங்குச்சந்தை போன்ற முதலீட்டில் அடிப்படை நிதி கல்வி அவசியமாகும்(Stock Market Analysis). ஏனென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் குறுகிய காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. இதற்கு மாற்றாக நாம் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம். பங்குச்சந்தையை பற்றிய நிதி கல்வியை பெற முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் பங்குச்சந்தை போன்ற நீண்ட கால கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.

 

உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தொகையை பெற வேண்டுமென்றால் உங்களுக்கான கால அளவும்(Investment Period), முதலீடு செய்வதற்கான பணமும்(Minimum Investment) முக்கியம். உங்களுக்கு ஐந்து வருடங்களில் ரூ. 1 கோடி வேண்டுமென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,22,444 பணத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தாக வேண்டும். இதன் மூலம் 12 சதவீத வட்டி வருமானத்தை கொடுக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ரூ. 1.06 கோடி தொகை கிடைக்கும். இதுவே 15 சதவீத வட்டி எனும் போது, நீங்கள் மாதாமாதம் ரூ. 1,12,899 ஐ அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கான ஒரு கோடி ரூபாய் இலக்கை அடைய முடியும்.

 

மாதாமாதம் ரூ. 1 லட்சம் ரூபாய் முதலீடா என மலைப்பாக இருக்கிறதா ?

 

இன்றும், இது போன்ற முதலீட்டு தொகையை சிலர் சாத்தியமாக்கி பயனடைந்து வருகின்றனர். சரி வாருங்கள், சிறிய தொகையை கொண்டு பெரிய விஷயங்களை செய்து பார்க்கலாம். உங்களுக்கு தேவையான ஒரு கோடி ரூபாய் இலக்கை நீங்கள் விரைவாக அடைய வேண்டுமெனில், உங்களுக்கான மாத முதலீடு அதிகமாக தான் இருக்கும். அதற்கு பதிலாக, மாதம் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்து விட்டு, இலக்கிற்கான காலத்தை நீட்டிக்கலாம்(Time). இதன் வாயிலாக நமக்கான நிதி இலக்கை எளிமையாக பெறலாம்.

 

மாதாமாதம் ரூ.36,335 ஐ அடுத்த பத்து வருடங்களுக்கு சேமிக்கும் பட்சத்தில் நாம் ஒரு கோடி ரூபாய் இலக்கை அடையலாம். இல்லையெனில், 20 வருடங்களுக்கு மாதம் ரூ.6,679/- ஐ முதலீடு(Systematic Investment Plan -SIP)  செய்தாலும் அதன் பலனை பெறலாம். இதனை விட ஒரு எளிமையான முறை உள்ளது, இது ஒரு வெற்றி பெற்றவர்களின் முதலீட்டு முறை என்றும் கூறலாம். அதாவது மாதாமாதம் ரூ.1,444 ஐ நீங்கள் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்பது தான். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக (48 ரூபாய்) நீங்கள் முதலீடு செய்ய பழகும் போது, 30 வருடங்களில் உங்கள் கனவு இலக்கு சாத்தியமாகும்.

 

ஒரு முறை முதலீடாக(One Time Investment) 1,50,000 ரூபாயை முதலீடு செய்து விட்டு, அடுத்த 30 வருடங்களுக்கு காத்திருக்கும் பட்சத்தில், 15 சதவீத வட்டி வருமானத்தில் உங்களுக்கான ஒரு கோடி ரூபாயை பெறலாம். முப்பது வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு (Present Value of Future Cash) எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா ?

 

30 வருடங்களுக்கு பின்பு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாய், இன்றைய சராசரி பணவீக்கமாக 5 சதவீதம் என எடுத்து கொண்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 23,13,774. பரஸ்பர நிதி திட்டங்களில் இன்றும் இது போன்ற முதலீட்டு வருமானம் சாத்தியமாக தான் இருக்கிறது. ஏன் மற்ற முதலீடுகளில் கிடைப்பதில்லையா என கேட்கலாம். நிலம், தங்கம் போன்ற முதலீடுகளில் நாம் ஏற்ற-இறக்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு எப்போதும் கிடைப்பதில்லை. ஆனால் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் அந்த வாய்ப்பு ஒவ்வொரு காலத்திலும் அமைந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கத்தில் வருமானம் கடந்த 20 வருடங்களாக வங்கி வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது எனலாம். தங்கத்தின் விலை அதிகரிப்பது டாலர் மதிப்பு உயர்வதால் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணவீக்கம் குறைந்து வருவதால் வங்கி வைப்பு நிதிகள் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் போதுமானதாக இருப்பதில்லை.

 

பரஸ்பர நிதி திட்டங்களில் மாதம் ரூ. 290 ஐ முதலீடு செய்து 30 வருடங்களில் 20 லட்ச ரூபாயை பெறலாம். இது போன்று, மாதாமாதம் 722 /- ரூபாயை முதலீடு செய்து அடுத்த 30 வருடத்தின் முடிவில் 15 சதவீத வட்டி வருமானத்தில் ரூ. 50 லட்சம் கிடைக்கும். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் நீண்ட காலத்தில் 15 சதவீத வட்டி என்பது சராசரியாக பெறக்கூடிய வருமானமாகும்.

 

அப்புறம் என்ன, உங்கள் இலக்குகளுக்காக, உங்கள் குழந்தைகளின் தேவைக்காக இப்போதே ஒரு சிறு தொகையை முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் – கூட்டு வட்டியின் பலனை பெறுங்கள் !

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

Minimum Investment amount of 100 rupees and Free Term Insurance – Mutual Funds Schemes

இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி துறை(Mutual Fund Industry) 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பரஸ்பர நிதி திட்டங்களுக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

1987-1993 ம் வருட காலங்களில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வழங்கி வந்த நிலையில், பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் பரஸ்பர நிதி துறையில் நுழைந்தன. அரசு சார்பில் துவங்கப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதன்முறையாக பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி. நிறுவனமும்(LIC India) திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தின. 1992ம் ஆண்டு பரஸ்பர நிதிக்கான ஒழுங்குமுறை செபியிடம்(SEBI) வந்த பிறகு, முதல் தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக கோத்தாரி பயோனியர்(Kothari Pioneer) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் பிராங்கிளின் டெம்பிள்டன்(Franklin Templeton) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆரம்ப காலத்தில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பினும், தற்போது பரஸ்பர நிதி திட்டங்கள் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புக்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது. இன்றும் சிலருக்கு பரஸ்பர நிதி திட்டங்கள் என்றாலே பங்குச்சந்தை தான் என்ற ஐயம் உள்ளது. சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வும், திட்டங்களில் உள்ள வடிவமைப்பும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பிலும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது கருத்தரங்குகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

பரஸ்பர நிதி சார்ந்த விழிப்புணர்வை நமது ஊரில் பரவலாக விகடன் குழுமம் (நாணயம் விகடன் – Nanayam Vikatan) சேர்த்து வருவது நல்ல விஷயம். சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த அடிப்படை கல்வி நமக்கு பள்ளி, கல்லூரி காலங்களில் கிடைப்பதில்லை என்றாலும், இன்று அதற்கான தளங்கள் அமைய பெற்றிருப்பது மக்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி திட்டங்களில் லிக்விட் பண்டுகள்(Liquid Funds) என்று சொல்லப்படும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் முதல் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள்(Equity oriented Funds) வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீட்டாளரின் நிதி இலக்குகள், கால அளவுகளை கொண்டு மற்றும் ரிஸ்க் தன்மையை பொறுத்து பரஸ்பர நிதி திட்டங்கள் வேறுபடும். நீண்டகாலத்தில் பரஸ்பர நிதித்திட்டங்கள் பணவீக்கத்தை காட்டிலும் நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. அதே வேளையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை காட்டிலும் பெறக்கூடிய நீண்டகால வருமானம் பல மடங்கு லாபத்தை தரக்கூடியவையாக உள்ளது.

இன்றைய நிலையில், வரி சலுகையை பெற மிகவும் குறைந்த லாக் இன் காலம்(Lock in Period) கொண்ட மற்றும் அதிக வருமானத்தை தரும் திட்டமாக மியூச்சுவல் பண்ட் டாக்ஸ் சேவர் திட்டங்கள்(Tax Saving Mutual Funds) உள்ளன. முன்னர் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை (ரூ.500-5000) முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து, தற்போது குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களும் அஞ்சலக சேமிப்பை போல, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டு தொகையை, நாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெற்று கொள்ளலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம். சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நாம் மாதாமாதம் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan -SIP) தொகைக்கு இலவச டேர்ம் பாலிசியையும் வழங்குவது ஆதாயமான விஷயம். நாம் செய்யும் முதலீடு தொகைக்கு ஏற்றாற் போல் மற்றும் கால அளவுகளை பொறுத்து, நமக்கான டேர்ம் காப்பீடு தொகையும்(Term Policy Insurance) அதிகரிக்கும். இதற்காக அந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

இருப்பினும், இலவசமாக காப்பீடு கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு, நீங்கள் உங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் நிலையில் உங்களது காப்பீடு ரத்து செய்யப்படலாம். சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 வருடங்கள் முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கு காப்பீட்டை வழங்கும். எனவே காப்பீடு இலவசமாக கிடைக்கப்பெற்றாலும், தனியாக டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

வரும் காலங்களில் வங்கி வைப்பு தொகை மற்றும் அஞ்சலக திட்டங்களுக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு முழுமையாக இருக்கலாம் என்பது தான் உண்மை. அதனால் தான் என்னவோ, சில வங்கிகள் தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை பரிந்துரைக்கின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்ட மோசடியால் வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ. 7,951 கோடி

எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்ட மோசடியால்  வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ. 7,951 கோடி

SBI Customers who had lost nearly Rs. 7,951 Crore in Fraudulent Cases

 

நாட்டின் மிகப்பெரிய மற்றும் பன்னாட்டு பொதுத்துறை வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி(State bank of India) திகழ்கிறது. கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிய இம்பீரியல் வங்கி(Imperial Bank of India) தான் பின்னாளில் பாரத ஸ்டேட் வங்கியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இரு நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த வங்கி மொத்தம் 24,000 கிளைகளையும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்களையும் கொண்டு வங்கி சேவைகளை நிர்வகித்து வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 2018ம் வருடத்தின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கியின்(SBI) சொத்து மதிப்பு சுமார் 33,12,461 கோடி ரூபாய். கடந்த 2016-17ம் நிதியாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் மட்டும் பணியாளர் ஒருவருக்கு ரூ. 511 /- என்ற அடிப்படையில் வருவாயை ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பிராண்டாகவும்(Branding), நம்பகமான பொதுத்துறை வங்கி என சொல்லப்பட்டாலும் ஸ்டேட் வங்கியில் சிக்கல்கள் ஏராளம்.

 

இந்திய பங்குச்சந்தையில் சந்தை மூலதனமாக ரூ. 2,43,000 கோடியை கொண்டிருக்கும் எஸ்.பி.ஐ. வங்கி கடந்த 2017-18ம் நிதியாண்டில் முதன்முறையாக 4,556 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை அடைந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வங்கியின் வளர்ச்சியும் சொல்லி கொள்ளுமாறு இல்லை. தனியார்  வங்கிகளின் துரிதமான செயல்பாடும், வங்கிகள் அல்லாத நிதி சேவை நிறுவனங்களின்(NBFC) பங்களிப்பும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளன.

 

எஸ்.பி.ஐ. வங்கியின் வாராக்கடன்(Non Performing Assets) பிரச்சனையும், அதனை தொடர்ந்து துணை நிறுவன வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த நிலையிலும் அதன் சேவையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை எனலாம். சமீபத்தில் திரு. சந்திரசேகர் என்பவரால் தகவல் சட்ட உரிமையின்(RTI) கீழ் ஸ்டேட் வங்கியிடம் இருந்து சில தகவல்கள் பெறப்பட்டன.

 

கிடைக்கப்பட்ட தகவலில், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் குழும வங்கியில் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது (ஏப்ரல் – டிசம்பர் 2018) மாதங்களில் மோசடி வழக்குகளாக 1,885 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்பட்ட மோசடியின் மொத்த மதிப்பு சுமார் 7,951 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. நடப்பு நிதி வருடத்தில் முதல் காலாண்டில் 669 புகார்களும், இரண்டாம் காலாண்டில் 660 புகார்களும் மற்றும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 556 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

 

ஒன்பது மாதங்களில் மோசடி பேர்வழிகளால்(Fraudulent Activities) வாடிக்கையாளர்கள் இழந்த தொகை ரூ. 7,951 கோடி, இவற்றில் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலத்தில் மட்டும்  நடந்த மோசடிகளின் மதிப்பு ரூ. 2,395 கோடியாகும்.

 

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியில், வாடிக்கையாளர்கள் இழந்த தொகைக்கான புகார்களில் வங்கியின் தீர்வு என்ன என்பது கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு வங்கியிடம் இருந்த எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 7(9) ன் கீழ், மேற்சொன்ன கேள்விக்கு பதிலளிக்க எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்து விட்டது.

 

வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் சொல்லப்பட்ட போதிலும், நுகர்வோர் சந்தையை அதிகமாக கொண்டிருக்கும் நமது நாட்டில் வங்கி மோசடிகள்(Bank Frauds) நடந்த வண்ணம் தான் உள்ளன. பெரும்பாலான வங்கி மோசடிகள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய பரிமாற்றத்தில் தான் நடைபெறுவதாக வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது – மூன்றாம் காலாண்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது – மூன்றாம் காலாண்டு  

India’s GDP growth slowed to 6.6 percent in the Third Quarter of Current Financial Year 2018-19

 

மத்திய புள்ளியியல் அமைச்சகம்(CSO) நேற்று (28-02-2019) வெளியிட்ட தனது அறிக்கையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதி வருடத்தின்(2018-19) முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 7.1 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம்(Gross Domestic Product -GDP) கடந்த காலாண்டுகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மேலும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவை நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாக அமைந்தன.

 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த 8.2 சதவீதம் மாற்றியமைக்கப்பட்டு 8 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் இருந்த 7.1 சதவீதம் பின்னர் 7 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நடப்பு 2018-19 முழு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 7.4 சதவீதமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

முன்னொரு காலத்தில் விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்த நம் நாடு தற்போது சேவை துறையில்(Service sector) மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது நினைவிருக்கலாம். கடந்த பிப்ரவரி 8ம் தேதி நிலவரப்படி, மொத்த உள்நாட்டு மதிப்பில்(Gross Value Added -GVA) சேவை துறை 54.40 சதவீதமும், உற்பத்தி துறை(Manufacturing) 29.73 சதவீதமும், விவசாயம்(Agriculture) மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் 15.87 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.   

 

உற்பத்தி துறையில் கடந்த சில காலங்களாக மந்தமான நிலை இருப்பினும், வாகன துறை மிகப்பெரிய சந்தையை உள்நாட்டில் கொண்டிருப்பது சாதகமான அம்சம். உற்பத்தி துறை கடந்த மூன்று ஆண்டுகளில் 1.5 சதவீத வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டிருக்கிறது.

 

மூன்றாம் காலாண்டுக்கு சொல்லப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருப்பினும், இது சீன நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக தான் உள்ளது. சீனாவின் மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதமாக அமைந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

Financial Blog in Tamil