பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து லாபம் பார்ப்பது எப்படி ?
How to choose good stocks to earn better returns in the Indian Stock Market ?
செவ்வாய் கிழமை அன்று (12-03-2019) இந்திய பங்குச்சந்தை நல்ல ஒரு ஏற்றத்தை கண்டிருந்தது. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி(Nifty50) 11,301 புள்ளிகளையும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடு 37,535 என்ற புள்ளிகளிலும் நிலை கொண்டது. அதிகபட்சமாக ஊடகம், வீட்டு மனை மற்றும் மூலதன பொருட்கள்(Capital Goods) ஆகிய துறைகள் இரண்டு சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போது தேர்தல் செய்திகள் தவிர்த்து, உலகளாவிய செய்திகள் இந்திய பங்குச்சந்தையில் அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பொதுவாக ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், சந்தை மந்த நிலையில் இருப்பதும், தேர்தல் முடிவுக்கு பின்பு ஏற்றமடைவதும் இயல்பான நிலையாக உள்ளது. நடப்பாண்டில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை பங்குகளை வாங்கி குவிப்பதற்கான காலமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின் நிலையான ஒரு அரசு அமையும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிய கூடும். இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் தெரிய வரலாம்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(Foreign Institutional Investors) இந்திய பங்குச்சந்தையில் செய்த முதலீடு ரூ. 13,000 கோடிக்கும் அதிகமாகும். நமது நாட்டின் பங்குச்சந்தை வருங்காலத்தில் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், நல்ல நிறுவன பங்குகள் மட்டுமே நீண்ட காலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு லாபத்தை சம்பாதித்து தர முடியும். சந்தை ஏற்றத்தில் பெரும்பாலான பங்குகள் விலை அதிகரித்து வந்தாலும், நல்ல மற்றும் மதிப்பு மிக்க பங்குகள் அடுத்த ஐந்து முதல் பத்து வருட காலத்திற்கு தொடர் வருமானத்தை தரக்கூடியதாக அமையும்.
நல்ல நிறுவன பங்குகளை(Growth Stocks) தேர்வு செய்ய அடிப்படை பகுப்பாய்வு காரணிகள் எப்போதும் முன்னிலையில் நிறுத்தப்படும். உலகின் மாபெரும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) சொல்வது போன்று, நல்ல நிறுவன பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்குவதும், அதனை தொடர்ந்து சந்தையில் பொறுமை காப்பதும் அவசியமானது. அடிப்படை பகுப்பாய்வின்(Fundamental Analysis) படி நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று பல தளங்கள் தகவல்களை அளித்து வந்தாலும், வெகு சில தளங்களே பட்டியிலடப்பட்ட நிறுவனங்களின் தரவுகளை முதலீட்டாளருக்கு எளிமையாக அளித்து வருகிறது.
அவ்வாறு நிதி தகவல்களை எளிமையாக அளிக்கும் ஒரு தளம் தான் – www.screener.in
இந்த தளத்தில் வழங்கப்படும் அடிப்படை நிதி தகவல்களை கொண்டு, நமக்கான நல்ல நிறுவன பங்குகளை நாமே தேர்வு செய்யலாம். ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பவர் பங்கு தரகர்கள் மற்றும் பங்கு சார்ந்த மோசடி செய்திகளால் ஈர்க்கப்படமாட்டார் என்பது கவனிக்கத்தக்கது. நிறுவனங்களின் தகவல்களை அலசி ஆராய்ந்து நாமே சிறந்த நிறுவன பங்குகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதனால் பெறக்கூடிய லாபமும் நன்றாக இருக்கும். நிறுவனங்களை ஆராய நேரம் இல்லாதவர்கள், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் அவ்ரகளுக்கான பங்கு முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.
முதலில், www.screener.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். இந்த தளத்தில் இலவசமாக உங்களை பதிவு செய்தும் கொள்ளும் போது, கூடுதலான சில நிதி தகவல்களும் கிடைக்கும்.
தளத்தின் வலது பக்க மேற்புறத்தில், கூட்டல் அடையாள குறி(Plus Sign) ஒன்று தென்படும், அதனை கிளிக் செய்யவும். அங்கே நமக்கான தேடல் வினவலை உருவாக்க(Create a Search Query – New Screen) ஒரு பெட்டி கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் எவ்வாறு உங்களது விதிமுறைகளை பதிவிட வேண்டும் என அருகிலேயே வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
இலவச பங்குச்சந்தை வகுப்புகள்
உதாரணத்திற்கு, கீழே உள்ள விதிமுறைகளை நீங்கள் பதிவிட்டு அதற்கான முடிவுகளை காணலாம்.
வினவலின் முடிவுகளில்(Query Results) உங்களுக்கென சில நிறுவன பங்குகளின் பெயர்கள் காண்பிக்கப்படும். கொடுக்கப்பட்டுள்ள நிறுவன பெயர்களை க்ளிக் செய்தால் நிறுவனத்தின் அனைத்து தரவுகளையும் நீங்கள் காணலாம். உங்களுக்கு தேவைப்படும் தரவுகளை நீங்கள் சேர்க்க, ‘Add Quick Ratio’ என்ற பெட்டியில் பதிவிடலாம்.
முடிவுகளில் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிறுவனத்தின் தொழில்கள் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என முதலில் சிந்தியுங்கள். உங்களால் புரிந்து கொள்ளக்கூடிய தொழிலின் பங்குகளை தேர்ந்தெடுத்து, அந்த பங்கின் விலை தற்போது வாங்கக்கூடிய விலையில் உள்ளதா என சரிபார்த்து பின்பு வாங்க முயலுங்கள். நல்ல நிறுவன பங்குகளை ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் வைத்திருக்கும் பட்சத்தில், நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
பங்குகளில் முதலீடு செய்வதும் ஒரு கலை(Value Investing) தான், ஆனால் நஷ்டத்தை தவிர்ப்பதே நம்முடைய முதல் இலக்காக இருத்தல் வேண்டும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை