இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் ரூ. 6,099 கோடி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் ரூ. 6,099 கோடி

Indian Oil Corporation(IOC) Q4FY19 net profit rises to Rs. 6,099 Crore

 

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC) புது டில்லியை தலைமையிடமாக கொண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த தொழிலை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தனது 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபமாக 6,099 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 5,218 கோடி ரூபாயாக இருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மார்ச் மாத காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,26,214 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,15,338 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவன இயக்க லாபம் ரூ.10,876 கோடி. இதர வருமானமாக ரூ.1,059 கோடி குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் இருந்த அதிகபட்ச தொகையாகும்.

 

ஐ.ஓ.சி. நிறுவனத்தின் விற்பனை அளவு கடந்த ஐந்து வருட காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. பத்து வருட காலத்தில் இதன் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 6 சதவீதத்தை ஒட்டியே உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் லாப வளர்ச்சி கடந்த 5 வருடத்தில் காணும் போது 34 சதவீதமாக உள்ளது.

 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) 1,40,800 கோடி ரூபாயாகவும், புத்தக மதிப்பு 115 ரூபாய் என்ற அளவிலும் இருந்து வருகிறது. தற்போது நிறுவனத்தின் கடன் அளவு(Debt) 83,260 கோடி ரூபாயாக உள்ளது.

 

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு(Crude Processing) மற்றும் வருவாய் இரண்டிற்கும் உள்ள இடைவெளி பேரலுக்கு 5.40 (Per Barrel) அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இதுவே 2017-18ம் ஆண்டில் 8.49 டாலர்கள் இருந்ததாக நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சொத்து மதிப்பு ரூ.1,24,216 கோடியாகவும் மற்றும் நடப்பு கடன் மதிப்பு 1,53,463 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை – எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 9

வருடத்திற்கு ரூ.6 லட்சம் வருமானம் இருந்தாலும் வரி இல்லை – எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 9

How to save tax if you are earning up to 6 Lakh per annum – Income Tax Returns – Lesson 9

 

நடப்பு வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ஒரு நிதியாண்டில் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்தை கொண்டுள்ளவருக்கு முழுவதுமாக வரியில்லை என அரசு சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, மாறாக வரி தள்ளுபடி(Tax Rebate) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2019-20ம் நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஆண்டு வருமானமாக ரூ.5 லட்சம் பெற்றிருப்பின் அவருக்கு வருமான வரி விகிதமாக 5 சதவீதம் வசூலிக்கப்படும். 5 சதவீத வரி எனும் போது, அவர் வரியாக செலுத்த வேண்டிய தொகை ரூ. 12,500/-. இந்த வரி தொகையை, ஒருவர் வேலை பார்க்கும் நிறுவனமே டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்து வருமான வரி துறைக்கு செலுத்தும். இந்த தொகையை நாம் வருமான வரி தாக்கல் செய்யும் போது வரி தள்ளுபடியாக திரும்ப கிடைக்க பெறும். இதனையே பட்ஜெட்டில் வரி தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது.

 

2018-19ம் நிதியாண்டில் ரூ.3.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடியாக (பிரிவு 87A) 2500 ரூபாய் இருந்தது. இது 2019-20ம் காலத்தில் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 12,500 ரூபாய் என சொல்லப்பட்டது, அவ்வளவே. இருப்பினும் மற்ற பிரிவுகளில் வருமான வரி சலுகைகள் தரப்பட்டுள்ளது. இதனை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம்.

 

குமார் என்பவர் தனது வேலையின் மூலம் ஒரு நிதியாண்டில்(2018-19) சம்பாதித்த மொத்த வருமானம் ரூ. 3 லட்சம் எனில், அவர் தனது வருமானத்தில் நிலைக்கழிவாக ரூ. 40,000/- ஐ கழித்து கொள்ளலாம். மீதம் உள்ள ரூ.2,60,000 தொகையில் 2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி ஏதுமில்லை. நிலைக்கழிவு மற்றும் அடிப்படை வரி வரம்பு சலுகை (ரூ. 2.5 லட்சம்) போக உள்ள தொகைக்கு 500 ரூபாய் (10,000 X 5%) வருமான வரி விதிக்கப்படும். இதனை அவர் பிரிவு 87A ன் கீழ் வரி தள்ளுபடியாக பெறலாம். எனவே வருமான வரி தாக்கலுக்கு பின், வரி ஏதும் செலுத்த தேவையில்லை (வரி தள்ளுபடி காரணத்தால்). டி.டி.எஸ். பிடித்தம் செய்த தொகையை ஒருவர் வருமான வரி தாக்கல் செய்தால் மட்டுமே திரும்ப பெற முடியும்.

 

குமாரின் ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய் என வைத்து கொள்வோம். தனது வருமானத்தில் நிலைக்கழிவாக ரூ.40,000/- வரை(2018-19) கழித்து கொள்ள குமாருக்கு அனுமதி உண்டு. மீதம் உள்ள 5,60,000/- ரூபாய்க்கு அவர் வரி செலுத்த வேண்டிய தொகை ரூ. 24,500/- ஆகும்.

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு (ரூ. 40,000) = வரி வருவாய் (ரூ.5,60,000)

 

வரி வருவாய் (ரூ. 5,60,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 3,10,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

 

ரூ. 5,00,001-ரூ. 5,60,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 20% = ரூ. 12,000/-*

 

(* செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தனி)

 

குமார் வரி சலுகை திட்டங்களை பயன்படுத்துவதன் மூலமாக வரி செலுத்த வேண்டிய தொகையை குறைத்து கொள்ளலாம் – இதற்கு 80C, 80D, 80E மற்றும் 80G ஆகிய வரி பிரிவுகள் உள்ளன.

 

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

 

2019-20ம் நிதியாண்டிற்கு நிலைக்கழிவு தொகையாக ரூ. 50,000/- வரை சலுகை பெறலாம். நடப்பு நிதியாண்டில் குமாரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கான நிலைக்கழிவு கூடுதலாக 10,000 ரூபாய் கிடைக்கப்பெறும். இவருக்கான வருமான வரியை கணக்கிட,

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு (ரூ. 50,000) = வரி வருவாய் (ரூ.5,50,000)

 

வரி வருவாய் (ரூ. 5,50,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 3,00,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

 

ரூ. 5,00,001-ரூ. 5,50,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 20% = ரூ. 10,000/-*

 

(* செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தனி)

 

வரியில்லா (வரி தள்ளுபடி) திட்டம்:

 

லைப் இன்சூரன்ஸ்(Life Insurance) மற்றும் மருத்துவ காப்பீடு – ரூ. 50,000/- ஆண்டுக்கு

 

வருமானம் (ரூ.6 லட்சம்) – நிலைக்கழிவு(ரூ.50,000) – காப்பீடு(ரூ.50,000) =  வரி வருவாய்(ரூ. 5,00,000/-)

 

வரி வருவாய் (ரூ. 5,00,000) – வரி வரம்பு சலுகை (ரூ. 2,50,000) = ரூ. 2,50,000 /-

 

ரூ. 2,50,001 – 5,00,000 ரூபாய் வரையிலான வருமானத்திற்கு = 5 % =  ரூ. 12,500/- *

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வருமான வரி தாக்கலுக்கு பின், வரி தள்ளுபடியாக 12,500/-  ரூபாயை திரும்ப பெற்று கொள்ளலாம். இது 2019-20ம் நிதியாண்டிற்கான வருமானம், அதாவது ஒருவர் 2020-21 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யும் போது இந்த சலுகையை பெறலாம்.

 

வரி சலுகையை (80C, 80D, 80E, 80G, etc) பெறும் தனிநபர் ஒருவர் அதற்கான ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்வது அவசியம். வரி சலுகைக்கான திட்டத்தில்(Tax Savings Plan) ஒருவர் முதலீடு செய்யாமல், வரி சலுகையை பெற முற்பட்டால் வருமான வரி சிக்கலில் மாட்டி கொள்ள நேரிடும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்வு

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்வு

India’s Retail Inflation increased to 2.92 percent in the month of April 2019

 

கடந்த ஏப்ரல் மாதத்தில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் சில்லரை பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 2.86 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஐந்து வருட காலமாக பணவீக்கத்தின்(Consumer Price Index -CPI) அளவு குறைந்து வந்துள்ள நிலையில், பாரத ரிசர்வ் வங்கி பணவீக்க மதிப்பீட்டின் அடிப்படையில் வட்டி விகிதத்தையும்(Repo Rate) குறைத்து வந்தது. இதனால் வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து இருந்தது வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் சில்லரை பணவீக்கம் சற்று உயர்ந்து இருப்பினும், சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த 2.97 சதவீத பணவீக்கம் என்ற அளவை எட்டவில்லை.

 

2.92 சதவீத பணவீக்கம் என்பது கடந்த ஆறு மாதத்தில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் முடிவில் 0.30 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்கம்(Food Inflation), தற்போது 1.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது போல காய்கறிகளின் விலை 2.87 சதவீதமும், மீன் மற்றும் மாமிசம் 7.55 சதவீதமாகவும் மற்றும் பால் பொருட்கள் 0.42 சதவீதமாகவும் இருந்துள்ளது.

 

பழங்கள், சர்க்கரை மற்றும் பருப்பு வகைகளின் விலை கடந்த மாதம் குறைந்துள்ளது. எரிபொருட்களின்(Fuel & Light) பணவீக்கம் 2.42 சதவீதத்திலிருந்து 2.56 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டு மனை, ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவை விலை குறைந்து காணப்படுகிறது.

 

மார்ச் மாதத்தில் கிராமப்புறங்களில் காணப்பட்ட 1.80 சதவீதமாக இருந்த பணவீக்கம், கடந்த மாதத்தில் 1.87 சதவீதமாக(Rural Inflation) உயர்ந்துள்ளது. இது போல நகர்ப்புற(Urban) பணவீக்க விகிதம் 3.43 சதவீதத்திலிருந்து 4.23 சதவீதமாக அதிகரித்து இருந்தது.

 

பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) மதிப்பீட்டின் படி, ஏப்ரல் மாத பணவீக்கம் எதிர்பார்த்த அளவில் உயரவில்லை. இதனால் அடுத்து வரும் காலங்களிலும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

யோகேஷ் தேவேஸ்வரின் பிரமாண்டமான ஐ.டி.சி. நிறுவனத்தின் கதை

யோகேஷ் தேவேஸ்வரின் பிரமாண்டமான ஐ.டி.சி. நிறுவனத்தின் கதை

The Story of ITC – Lead by Yogesh Chander Deveshwar

 

கடந்த சனிக்கிழமை அன்று(11-05-2019) ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் திரு. யோகேஷ் சந்தர் தேவேஸ்வர் உடல் நலக்குறைவால் காலமானார். இந்திய தொழில் உலகில் மாபெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு, 1947ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாகூரில் பிறந்தவர் யோகேஷ் தேவேஸ்வர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

டெல்லி ஐ.ஐ.டி.கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற யோகேஷ், பின்பு அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தொழில் சார்ந்த கல்வியை பயின்றார். 1910ம் வருடம் வில்ஸ்(Wills) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட புகையிலை நிறுவனம் தான் ஐ.டி.சி. ஆரம்ப காலத்தில் இம்பீரியல் புகையிலை நிறுவனம்(Imperial Tobacco Company) என்ற பெயரிலிருந்து இந்திய புகையிலை நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1974ம் காலங்களில் ஐ.டி.சி.(ITC Limited) நிறுவனம் என சுருக்கம் பெற்றது.

 

1968ம் ஆண்டு ஐ.டி.சி. நிறுவனத்தில் இணைந்த யோகேஷ், அடுத்த 15 வருடத்தில் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் முக்கிய பதவி வகித்தார். 1996ம் வருடம் யோகேஷ் தேவேஸ்வர் ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவரானார்(CEO). இவர் இருந்த காலத்தில் புகையிலையை மட்டுமே கொண்டு இயங்கும் நிறுவனம் என விமர்ச்சிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்டில் இன்று பெரும்பாலான நுகர்வோர் பொருட்களின் பிராண்டாக ஐ.டி.சி. நிறுவனத்தை மாற்றினார்.

 

புகையிலையை பெரும்பான்மை தொழிலாக இந்த நிறுவனம் கொண்டிருந்தாலும், கடந்த சில வருடங்களாக புகையிலை பங்களிப்பை குறைத்து வருகிறது. நுகர்வோர் துறையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களில் இந்த நிறுவனத்தின் சேவை வியக்கத்தக்க வகையில் இருக்கிறது.

 

உணவுப்பொருட்கள், அழகு பொருட்கள், அலுவலகம் சார்ந்த பொருட்கள், தீப்பெட்டி, ஊதுவத்தி, பேப்பர் சார்ந்த பொருட்கள் என தனது தொழிலை பன்முகத்தன்மையாக உருவாக்கினார் யோகேஷ். இந்திய ஹோட்டல் துறையில் 90க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகளை கொண்டு நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது ஐ.டி.சி. நிறுவனம். தொழில்நுட்ப துறையிலும் இதன் பங்கு முக்கியத்துவமாக அமைகிறது.

 

ஆசிர்வாத்(Aashirvaad), சன் பீஸ்ட், கேண்டி மேன், பியாமா வில்ஸ்(Fiama Di Wills), லைப் ஸ்டைல், கிளாஸ் மேட்(Classmate) நோட்டு புத்தகங்கள், மங்கள் தீப்(Mangaldeep), பார்க் ஹோட்டல்கள் என பல பிராண்டுகளில் புரட்சியை ஏற்படுத்தினார். தற்போது ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,65,000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், 26,000க்கு மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.

 

இந்த நிறுவனம் சமீபமாக விவசாயம் மற்றும் பால் வளம் சார்ந்த தொழிலில் கவனம் செலுத்தி வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழுவிலும் பொறுப்பு வகிக்கும் யோகேஷ் தேவேஸ்வர்(YC Deveshwar), 2013ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த நிறுவன தலைவர்களில் 7வது இடத்தை பிடித்தார். 2011ம் ஆண்டு அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இந்திய கார்ப்பரேட் தொழிலில் நீண்டகாலம் தலைவர் பதவி வகித்தவர்களில் தற்போது இவரே முதலிடத்தில் உள்ளார்.

 

இன்று(13-05-2019) ஐ.டி.சி. நிறுவனத்தின் 2018-19ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளும் வெளிவர உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வங்கி வைப்பு நிதிக்கு வரிகள்(Fixed Deposit) எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 8

வங்கி வைப்பு நிதிக்கு வரிகள்(Fixed Deposit) எப்படி ? வருமான வரி தாக்கல் – பாடம் 8

Tax for Fixed Deposits – Income Tax Returns – Lesson 8

 

வங்கியில் முதலீடு செய்யும் வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி வருமானம் வரி விதிப்புக்கு உட்பட்டது என நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். பொதுவாக வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வட்டி வருவாய், வருமான வரி சட்டத்தின் படி இதர வருமானமாக(Other Source of Income) கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வட்டி வருவாய் கிடைக்கும் போது, வங்கி மூலம் டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். நடப்பு மதிப்பீட்டு வருடத்தின்(AY 2019-20) படி, வைப்பு நிதி வட்டி வருமானம் ஒரு நிதியாண்டில் ரூ.10,000/- ஐ தாண்டும் பட்சத்தில் டி.டி.எஸ். உண்டு. 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட வருமானத்திற்கு 10 சதவீதம்(பாண் எண்ணை சமர்பித்திருந்தால்) டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படும். பாண்(PAN) எண்ணை வங்கியில் இணைக்காத நிலையில் அதிகபட்சமாக 20 சதவீதம் வரை வங்கிகள் வரி பிடித்தம் செய்யலாம்.

 

வங்கிகளில் டி.டி.எஸ்.(Tax Deducted at Source) பிடித்தம் செய்யாமல் இருக்க படிவம் 15G ஐ ஒருவர் பயன்படுத்தலாம். அதே வேளையில் ஒருவர் வருமான வரி செலுத்துபவராக இருப்பின், அவர் வருமான வரி தாக்கல் செய்யும் போது, இந்த வட்டி தொகைக்கு வரி செலுத்த நேரிடலாம். வங்கிகளில் வைப்பு நிதியின் மூலம் பெறப்படும் வருவாய், படிவம் 26AS மூலம் கண்டறியப்படும். வருமான வரம்பிற்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்தம் செய்த டி.டி.எஸ். தொகையை, வரி தாக்கல் செய்த பின் திரும்ப பெறலாம்.

 

ஒருவர் வெவ்வேறு வங்கிகளில் அல்லது ஒரே வங்கியில் பல பிக்ஸட் டெபாசிட் கணக்குகளை வைத்திருந்தாலும், அனைத்தும் ஒன்றாக சேர்க்கப்பட்டு வட்டி வருமானம் கணக்கிடப்படும். மூத்த குடிமக்களுக்கு பெறப்படும் வட்டி வருமானத்தில் ரூ.50,000/- வரை டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படமாட்டாது. மூத்த குடிமக்களுக்கு டி.டி.எஸ். பிடிக்காமல் இருக்க படிவம் 15H ஐ நிரப்ப வேண்டும்.

 

தனிநபர் ஒருவரின் மாத சம்பளத்துடன், வங்கியில் பெறும் வட்டி வருவாய் இதர வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அவரது மொத்த வருமானத்தில் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். வைப்பு நிதிக்கு சொல்லப்பட்ட வரி விதிப்பு முறை, தொடர் வைப்பு கணக்கு(Recurring Deposit) மற்றும் சேமிப்பு கணக்கிற்கும் பொருந்தும்.

 

வரி சேமிப்பை கொண்ட ஐந்து வருட வங்கி வைப்பு நிதி திட்டமும்(Tax saving FD) உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து வருட காலத்திற்கு முதலீட்டை பெற முடியாது. வருமான வரி சட்ட பிரிவு 80சி மூலம் ஒருவர் இதற்கு வரி சலுகையை பெறலாம். ஆனால் முதலீட்டின் முடிவில் கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வரி விதிப்பு உண்டு. இது போன்ற சமயங்களில் ஒருவர் பங்கு சார்ந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதிகளை(Equity linked savings scheme -ELSS) தேர்ந்தெடுக்கலாம். பங்கு சார்ந்த வரி சேமிப்பு திட்டத்தில் மூன்று வருட லாக்-இன்(Lock-in) காலமாகும். இவற்றில் கிடைக்கும் வருமானத்திற்கும் வரி சலுகை உண்டு(EEE -Exempt) என்பதை கவனிக்கலாம்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு – எச்சரிக்கை மணியா ?

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு – எச்சரிக்கை மணியா ?

Alert: India’s increasing Trade Deficit – 10.89 Billion US Dollar

 

நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவை அரசாங்கம் குறைக்க முனைந்தாலும், உற்பத்தி மற்றும் தேவைக்கான இடைவெளி ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. ஒரு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பை காட்டிலும், அந்த நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு அதிகமாக காணப்பட்டால், அதுவே நாட்டின் வர்த்தக பற்றாக்குறை எனப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை என்பது ஒரு கடன் சுமையாகவே நாம் பார்க்கலாம். வர்த்தக பற்றாக்குறையின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரிக்காமல் இருக்க, இறக்குமதி அளவை நாம் குறைத்தாக வேண்டும். இல்லையெனில், நாட்டின் ஏற்றுமதி அளவை அதிகரிக்க தயாராக வேண்டும்.

 

சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க-சீன வர்த்தக போருக்கான காரணமே, அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறை தான். இதன் காரணமாகவே சீன பொருட்களுக்கு அமெரிக்கா(US-China Trade War) இரு மடங்கிற்கு மேல் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது. நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த மார்ச் மாத முடிவில் 10.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

 

நடப்பு வருட பிப்ரவரி மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 9.60 பில்லியன் டாலராகவும், இதற்கு முந்தைய வருடத்தின் மார்ச் மாதத்தில் 13.51 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட மார்ச் 2019ம் காலத்தில் ஏற்றுமதியில்(Exports India) 11 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டது. இதற்கு ரசாயனங்கள், பொறியியல் பொருட்கள், ஆடைகள், மருந்துகள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் வளர்ச்சி துணைபுரிந்துள்ளது.

 

இறக்குமதியின் பங்களிப்பு மார்ச் மாதத்தில் 1.5 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் 6.3 பில்லியன் டாலரிலிருந்து மார்ச் மாதத்தில் 8.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியும் மார்ச் மாத காலத்தில் கணிசமாக உயர்ந்து நிகர மதிப்பு அடிப்படையில் 2.97 பில்லியன் டாலராக இருந்தது.

 

கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி(Crude Import) செய்வதற்கான செலவினமும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. 2018-19ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் சுமார் 11,200 கோடி டாலராக இருந்தது. இது இதற்கு முந்தைய வருடத்தில் 8,800 கோடி அமெரிக்க டாலராக இருந்துள்ளது.

 

இந்தியாவின் வர்த்தக பங்காளராக முதல் மூன்று இடங்களில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளது. தங்கம் மற்றும் எண்ணெய் இறக்குமதியின் அளவை அரசு குறைக்க, கடந்த சில வருடங்களாக நடவடிக்கை எடுத்து வந்த பின்பும் உள்நாட்டில் தேவைப்பாடு அதிகமாயுள்ளது. தங்க இறக்குமதி அளவை குறைப்பதற்காக தங்க முதலீட்டில் பல்வேறு திட்டங்களும் (Gold ETF, Bond Scheme, Gold Deposit), மாற்றங்களும் கொண்டுவரப்பட்டிருந்தது. இது போல வாகன துறையில் அடுத்து வரவிருக்கும் காலங்களில் மின்சார வாகனங்கள் முக்கியத்துவம் பெறும் காலம் வெகு விரைவில்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனர்கள் – ரிலையன்ஸ், வோடபோன்

பங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனர்கள் – ரிலையன்ஸ், வோடபோன்  

Pledged shares by the Promoters – Reliance Infra, Vodafone

 

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவருவது போன்று, நிறுவனங்களின் பங்குகளில் உரிமையாளர் வைத்திருக்கும் பங்கு சதவீதமும் ஒவ்வொரு காலாண்டிலும் பங்குச்சந்தை அமைப்புக்கு தெரிவிக்கப்படும். கடந்த ஜனவரி – மார்ச் 2019ம் காலாண்டில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பி.எஸ்.இ. 500(BSE 500) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. ஜனவரி-மார்ச் மாத காலத்தில் இவர்களின் பங்கு அடமான விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல்(Reliance Capital) முறையே 22 மற்றும் 15 சதவீத பங்குகள் மார்ச் காலாண்டில் அடமான விகிதத்தை அதிகரித்துள்ளது. இதுவரை ரிலையன்ஸ் இன்ப்ராவின் மொத்த அடமானம் 98 சதவீதம் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடல் 97 சதவீதமாகும். ஏற்கனவே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(Rcom) நிறுவனம் தனது முழு பங்குகளையும் அடமானம் வைத்து விட்டு, கடனில் தத்தளித்து கொண்டு தற்போது திவால் நிலைக்கு வந்து விட்டது.

 

டிஷ் டிவி(Dish TV) நிறுவனர்களின்  பங்குகள் 94.6 சதவீதம் வரை அடமானம் வைக்கப்பட்டுள்ளது. ஜீ டிவி(Zee) நிறுவனம் 66 சதவீதமும், எவெரெடி(Eveready) நிறுவனர்கள் 50 சதவீதமும், சன் பார்மா 11 சதவீதமும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனம் 78 சதவீதம் என்ற அளவிலும் நிறுவனர் பங்குகளை அடமானம் வைத்துள்ளது.

 

இது போல வோடபோன் நிறுவனம் 44 சதவீத பங்குகளை வோடபோன் ஐடியா நிறுவனத்தில் அடமானம் செய்துள்ளது. தற்போது வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனத்தை 71 சதவீத பங்களிப்புடன் வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா நிறுவனங்கள் நிர்வாகம் செய்து வருகிறது.

 

கடந்த காலாண்டில் அசோக் லேலாண்ட் நிறுவனமும் 2.3 சதவீதம் என்ற அளவில் பங்குகளை அடமானம் வைத்துள்ளது. இதன் மொத்த நிறுவனர்களின் பங்கு அடமான விகிதம் 6.7 சதவீதமாகும். பியூச்சர் குழுமத்தின் (பிக் பஜார்) பியூச்சர் லைப் ஸ்டைல் நிறுவனம் 23 சதவீத பங்குகளையும், JSW நிறுவனம் 60 சதவீத பங்குகளையும் மற்றும் ஜே.கே. டயர் 28 சதவீதமும் உரிமையாளர்களின் பங்குகளை அடமானம் செய்துள்ளது.

 

பொதுவாக நிறுவனர்களின் நிறுவனர்கள் தங்கள் சொந்த தேவை அல்லது வணிக நோக்கங்களுக்காக, தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை மற்றொரு நிறுவனத்திடமோ அல்லது   வங்கிகளிடமோ அடமானம் வைப்பதுண்டு. இது ஒரு நீண்ட கால முதலீட்டாளருக்கு ஆரோக்கியமான விஷயமல்ல. நல்ல முதலீட்டாளர்கள், நிறுவனர்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்வதில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மீண்டும் வலுக்கும் சீன-அமெரிக்க வர்த்தக போர்

மீண்டும் வலுக்கும் சீன-அமெரிக்க வர்த்தக போர்

China-US Trade war to Reinforce 2019

 

உலக பொருளாதாரத்தில் கடந்த ஒரு வருடமாக பேசப்பட்டு வந்த விஷயம் அமெரிக்க-சீன வர்த்தக போர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இறக்குமதி வரியை உயர்த்தப்படவுள்ள நிலையில், இதன் மதிப்பு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்து வருகிற இந்த வர்த்தக போரில், ஏற்கனவே அமெரிக்காவுக்கான சீன பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு கடந்த சில காலங்களாக வெகுவாக குறைந்துள்ளது. டிரம்ப்(Donald Trump) முடிவினால், வரவிருக்கும் நாட்களில் இரு நாடுகளுக்கிடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படலாம் என சீன அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் வரி உயர்வு(Import Tax) கொள்கை மற்ற நாடுகளை மட்டுமில்லாமல், தங்களது நாட்டிலும் அமெரிக்க மக்கள் விலை உயர்வை சந்திக்கலாம். இதன் காரணமாக அமெரிக்க நாட்டிலும், பெரும்பாலானவர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரி உயர்த்தப்படும் நிலையில், சீன யுவான் மதிப்பு மற்றும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகின்றன.

 

2018ம் ஆண்டில், அமெரிக்காவின் 3வது பெரிய ஏற்றுமதி(Largest Export) நாடாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் அமெரிக்காவிலிருந்து சீன நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது இதற்கு முந்தைய வருடத்தை விட 7 சதவீத குறைவாகும்.

 

இது போல அமெரிக்காவின் மிக பெரிய இறக்குமதி(Largest Import) நாடாக சீன இருந்து வருகிறது. 2018ம் ஆண்டில் சீன நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தகம் சுமார் 540 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 6.7 சதவீத வளர்ச்சியாகும்.

 

சீனாவுடனான அமெரிக்க நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீன நாட்டில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டில்(FDI) அமெரிக்காவின் பங்கு சுமார் 107 பில்லியன் டாலர்களாகும் (2017ம் ஆண்டு இறுதியின் படி). சீனாவின் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது பருத்தி, தேயிலை, அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் சோயா பீன்ஸ்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் – வருமான வரி தாக்கல் – பாடம் 6

குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயம் – வருமான வரி தாக்கல் – பாடம் 6

Short term and Long term Capital Gains – Income Tax Returns – Lesson 6

வீட்டுக்கடன் மூலம் வாங்கிய அல்லது கட்டிய வீடு உங்கள் சொத்தாக கருத முடியாது, அது ஒரு கடனே(Liability). நீங்கள் உங்கள் கடனை முடிக்கும் வரையில், அது மற்றொருவரின் (வங்கியின்) சொத்து ஆகும். நீங்கள் உரிமையாளர் அல்ல… இதனை நம்மில் எத்தனை பேர் ஒத்துக்கொள்வோம் என தெரியவில்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக நம் நாட்டில் சொத்து(Assets) எனப்படுவது ஒரு நிலமாகவோ, கட்டிடமாகவோ, தங்கமாகவோ அல்லது மதிப்புமிக்க ஏதோ ஓன்றாக இருக்கலாம். சொத்துக்கள் என்பது தொட்டு உணரக்கூடிய உறுதியான சொத்துக்கள் மற்றும் நிதி சார்ந்த சொத்துக்களாக இருக்கலாம். நிலம், வீடு, கட்டிடம், அணிகலன்கள், காப்புரிமைகள், பங்கு உரிமை மற்றும் இயந்திரங்கள் போன்றவை மூலதன சொத்துக்களாக(Capital Assets) சொல்லப்படுகிறது. விவசாய நிலம் மூலதன சொத்தாக கருதப்படாது.

 

நிலம், வீடு, இயந்திரங்கள் ஆகியவை தொட்டு உணரக்கூடிய சொத்தாகவும்(Physical Assets), காப்புரிமை, பங்குகள், வங்கி முதலீடுகள், வர்த்தக முத்திரைகள் ஆகியவை நிதி சார்ந்த சொத்துக்களாகவும்(Financial Assets)  சொல்லப்படுகிறது. நிதி சார்ந்த சொத்துக்கள் காகித வடிவிலான சொத்துக்கள் எனவும் அழைக்கப்படும்.

Capital Gains Assets Holding Period

மூலதன சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானம் அல்லது லாபம், மூலதன ஆதாயம்(Capital Gains) எனப்படுகிறது. மூலதன ஆதாயம் – குறுகிய கால மற்றும் நீண்டகால ஆதாயம் என இரு வகைப்படும். மூலதன ஆதாய காலத்திற்கு(Holding Period) ஏற்ப வரி விகிதங்களும் மாறுபடும்.

 

அசையா சொத்துக்கள்(Immovable) மூலம் கிடைக்கப்பெறும் வருமானம், சொத்தினை வாங்கிய 24 மாதங்களுக்குள் விற்பனை செய்திருப்பின் அது குறுகிய கால மூலதன ஆதாயம்(Short term Capital Gains) எனப்படும். இதுவே 24 மாதங்களுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில், நீண்ட கால மூலதன ஆதாயமாகும். பட்டியலிடப்படாத பங்குகளுக்கு மேலே சொன்ன 24 மாத வரையறை பொருந்தும்.

 

சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள்(Public Listed Shares) மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு குறுகிய காலம் என்பது 12 மாதங்களாகும். வாங்கிய பங்குகள் அல்லது யூனிட்களை 12 மாதங்களுக்குள் விற்றால் அது குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படும். 12 மாதங்களுக்கு மேலான விற்பனை நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகும்.

 

கடன் சார்ந்த பத்திரங்கள்(Debt Instruments) அல்லது கடன் சார்ந்த பரஸ்பர நிதிகள் மற்றும் இதர சொத்துக்களுக்கு 36 மாதங்கள் வரை குறுகிய காலமாகும். 36 மாதங்களுக்கு மேலான முதலீட்டு விற்பனை நீண்ட கால மூலதன ஆதாயம்(LTCG -Capital Gains) என சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil