Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

சிறந்த 5 நீண்ட கால பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

சிறந்த 5 நீண்ட கால பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

Best 5 Long term Equity Mutual Funds to Invest – 2019

 

பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்திருப்பது இந்திய பங்குச்சந்தையின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது எனலாம். முன்னர் இருந்ததை விட கடந்த மாதத்தில் இறக்குமதியின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்திய டாலர்-ரூபாய் பரிமாற்றத்தில், ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதும் சந்தைக்கு சாதமாக உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளர்ந்து வரும் நாடுகளில், அந்த நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சில காலங்களாக நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவாக இல்லையெனினும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டின் வளர்ச்சி சராசரிக்கும் மேலாகவே உள்ளன. பங்குச்சந்தை ஏற்ற காலங்களில் நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வதே பாதுகாப்பானது. பின்னாளில் சந்தை ஏதேனும் காரணத்தால் இறக்கம் கண்டாலும், நல்ல பங்குகளில் அந்த தாக்கம் அவ்வளவாக இருக்காது.

 

பங்குச்சந்தையில் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis) ஆராய்ந்து பங்குகளை வாங்குவதற்கு நேரம் உள்ளவர்கள் பங்குச்சந்தையில் நேரிடையாக ஈடுபடலாம். மற்றவர்களுக்காகவே பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்  இன்று பல கொட்டி கிடக்கின்றன. தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக நிதி சார்ந்த விஷயங்களும் நல்ல முன்னேற்றம் காணும். அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரக்கூடியது.

 

இந்திய சந்தையில் நாம் முதலீடு செய்கிறோமோ இல்லையோ, ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டின் கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்கு சந்தையில்(Stock Market) தற்போது தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறார்கள். பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள் நீண்ட கால நிதி இலக்குகள் மற்றும் செல்வம் சேர்ப்பதற்கான ஒரு சிறந்த முதலீட்டு சாதனமாக உள்ளது. குறுகிய கால மற்றும் உடனடி தேவை உள்ளவர்களுக்கும் பரஸ்பர நிதிகளில் திட்டங்கள் அமைய பெற்றுள்ளன.

 

நடப்பு 2019ம் வருடத்தில் உங்கள் முதலீட்டை தொடங்குவதற்கான சிறந்த ஐந்து நீண்ட கால பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்(Long term Equity Funds) இங்கே,

 

  • ஆக்ஸிஸ் ப்ளூ சிப் பண்ட் (Axis Blue Chip Fund)
  • ஐ.சி.ஐ.சி.ஐ. புரு ப்ளூ சிப் (ICICI Pru Blue Chip Fund)
  • மிரே அஸெட் எமெர்ஜிங் ப்ளூ சிப் (Mirae Asset Emerging Blue Chip Fund)
  • எச்.டி.எப்.சி. மிட்கேப் ஆஃபர்ச்சுனிடிஸ்(HDFC Midcap Opps Fund)
  • எச்.டி.எப்.சி. டாப் 100 பண்ட் (HDFC Top 100 Fund)

Best Long term Equity funds 2019

 

மேலே சொன்ன மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்(Mutual Funds) நீண்ட காலத்திற்கு உரியவை. ஐந்து வருட காலத்தில் சொன்ன அனைத்து திட்டங்களும் 12 சதவீதத்திற்கு மேல் வருவாயை கொடுத்துள்ளன. இவை எதிர்காலத்திலும் கிடைக்க கூடிய வருவாய் என நாம் சொல்ல முடியாது. அதே வேளையில் நீண்ட கால பயணத்தில் நல்ல வருமானத்தை அளிக்க கூடிய பண்டுகளாக இவை உள்ளன.

 

முதலில் உங்கள் நிதி இலக்குகளை தீர்மானியுங்கள். பிறகு அதன் காலத்திற்கு ஏற்றாற் போல், மேலே சொன்ன திட்டங்களில் முதலீடு செய்து விட்டு இலக்குகளை அடையும் வரை பொறுமையாக இருங்கள். ஐந்து நீண்ட கால பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் செலவின விகிதம்(Expense Ratio) என காணும் போது, சராசரியாக இரண்டிலிருந்து 2.5 சதவீதம் வரை உள்ளன. ஒரு வருடத்திற்குள் உங்கள் முதலீட்டை திரும்ப பெறும்(Redemption) பட்சத்தில், வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுக்கும் முன், உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். ஒவ்வொரு முதலீட்டு சாதனமும் வெவ்வேறான ரிஸ்க் மற்றும் வருவாய் காலத்தை கொண்டிருப்பவை. தெளிவான முதலீட்டு முடிவுகளுக்கு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் பயன் பெறுங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் – ஸ்டேட் வங்கி சேர்மன்

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் – ஸ்டேட் வங்கி சேர்மன்

Banks have to exit Jet Airways in the next two months – SBI Chairman

 

1949ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் திரு.நரேஷ் கோயல். தனது சிறு வயதிலே தந்தையை இழந்ததும், குடும்பத்தில் நிலவிய பொருளாதார சிக்கல்களால் தனது தாயாரின் மாமா வீட்டில் கல்வியை தொடங்கினார் நரேஷ். அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பை முடித்த இவர் 1967ம் ஆண்டு தனது உறவினர் ஒருவரின் பயண நிறுவனத்தில்(Travel Agency) காசாளராக பணிபுரிந்தார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பின்னர் விமானத்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணி வாழ்க்கையை தொடங்கிய அவர் பல பொறுப்புகளை வகித்தார். 1975ம் வருடம் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்(Philippines Airline) நிறுவனத்தில் பிராந்திய மேலாளராக பதவி வகித்த நரேஷ் கோயல் 1993ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் என்ற நிறுவனத்தையும், அதன் விமான சேவையையும் துவங்கினார். தனது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பத்து வருட காலம் பணிபுரிந்த அனிதா என்ற பெண்மணியை மணந்தார்.

 

விமான துறை சார்ந்த சேவைகளுக்கு பல விருதுகளை வாங்கிய இவர், 1990ம் காலகட்டங்களில் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். 25 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நிதி சிக்கலில் மாட்டி கொண்டது. வங்கிகளில் வாங்கிய கடனை(Debt) திரும்ப செலுத்த முடியாமலும், விமான சேவையை தொடர முடியாமலும் திணறியது.

 

ஜெட் ஏர்வேஸ்(Jet Airways) விமான நிறுவனத்தில் 22,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் குழுவில் இருந்தும், சேர்மன் பதவியிலிருந்தும் நரேஷ் கோயல் விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் மற்றும் கடன் அளித்த வங்கிகள் அழுத்தம் கொடுத்தது. இதனையடுத்து நேற்று(25-03-2019) நரேஷ் கோயல்(Naresh Goyal) மற்றும் அவரது மனைவி அனிதா கோயல்(Anita) தங்களது பதவியிலிருந்து விலகினர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அபுதாபி நாட்டின் எதிஹாட் விமான நிறுவனம்(Etihad Airways) 24 சதவீத பங்குகளை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் பதவி விலகலை அடுத்து, வங்கிகளும் தங்களது கடன் தொகையை மீட்டெடுக்கும் முயற்சியில் முழுவதுமாக இறங்கியுள்ளன. வங்கிகளும் இந்த நிறுவனத்தின் பங்குகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை வைத்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேலான வங்கி கடன்கள் நிலுவையில் உள்ளன.

 

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என எஸ்.பி.ஐ. சேர்மன் திரு. ரஜனீஷ் குமார்(Rajnish Kumar) தெரிவித்துள்ளார். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளின் பொறுப்பில் உள்ளன என்றே சொல்லலாம். நிறுவனத்தில் உள்ள கடனை வசூலிப்பதும், பின்னர் அதனிலிருந்து வெளியேறுவதும் தான் வங்கிகளின் நடவடிக்கையாக  சொல்லப்படுகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் விலகியது இந்திய விமானத்துறையில் ஒரு சோகமான நாள் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagmadurai.com

கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல்

கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக  வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல்

76.48 Lakh New Jobs created in the last 17 Months – EPFO

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவு கூறியிருந்தது. தற்போது இதற்கு மாறாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வேலைவாய்ப்பு சார்ந்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அவை கூறியதாவது, ‘ நாட்டில் கடந்த செப்டம்பர் 2017 முதல் நடப்பு வருட ஜனவரி மாதம் வரையிலான 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் வேலை பெற்றவர்களாக உள்ளனர் ‘.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமைப்பு சார்ந்த துறையில்(Organized Sector) என்பதும் கவனிக்கத்தக்கது. வேலைகள் உருவாக்கப்பட்டதற்கு சான்றாக, சொல்லப்பட்ட 17 மாதங்களில் இ.பி.எப்.ஓ. நிறுவனத்திற்கு 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் மட்டும் 8.96 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட வேலைகளில் சுமார் 2.45 லட்சம் வேலைகள்(Created Jobs) 22-25 வயது பிரிவை சார்ந்தவர்கள், மேலும் 2.24 லட்சம் வேலைகள் 18 வயதிலிருந்து 21 வயது உள்ளவர்கள் ஆவர். இ.பி.எப்.ஓ.(Employees Provident Fund Organization) நிறுவனத்தில் இதுவரை இணைந்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆறு கோடி நபர்களுக்கு மேலாக உள்ளது.

 

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

சொல்லப்பட்ட 17 மாதங்களில் சுமார் 29 ஆயிரம் சந்தாதாரர்கள் இ.பி.எப்.ஓ. திட்டத்திலிருந்து வெளியேறி உள்ளனர். இவற்றில் தனியார் நிறுவனத்திலிருந்து விலகி சென்று அரசு பணியில் சேர்ந்தவர்களும் அடங்குவர். கடந்த வருடத்தின் முடிவில் 7.16 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும்(Employment) என்ற முந்தைய கணிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பின்னர் அதனை 7.03 லட்சமாக மறுமதிப்பீடு செய்திருந்தது.

 

எந்தவொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 20 தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிலையில், அந்த நிறுவனம் இ.பி.எப்.ஓ.(EPFO) திட்டத்துடன் இணைத்து கொள்ள வேண்டும். பின்னர் தனது தொழிலாளர்களின் வருவாயில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, நிறுவனத்தின் சார்பிலும் அதே அளவு தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களின் நிதி சார்ந்த எதிர்காலம் பாதுகாப்பாக அமையும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டீர்களா ?

உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டீர்களா ?

Link your Aadhaar to your PAN – Before 31st March, 2019

 

நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இல்லாமல் இருந்தாலும், வருமான வரி தாக்கல் செய்திருக்கும் பட்சத்தில், சமீபத்தில் வருமான வரி துறையின் இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கலாம். அதாவது உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு பற்றிய தகவல் தான் இந்த மின்னஞ்சலில் உள்ளது. மார்ச் 31, 2019 க்கு முன் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விடுங்கள் என வருமான வரி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காத நிலையில், நீங்கள் வருங்காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. தற்போது நீங்கள் வருமான வரி செலுத்தக்கூடியவராக இல்லாமல் இருக்கலாம் அல்லது வருமான வரி தாக்கல் செய்ய தேவையில்லை என்ற நிலையில் இருந்தாலும், பான்-ஆதார் எண்களை இணைப்பது சிறந்தது.

 

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு(Exempt from PAN-Aadhaar Linking) சில விதிவிலக்குகளும் உள்ளன. கீழ்க்கண்ட நபர்களுக்கு பான்-ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை,

 

  • அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் குடியிருக்கும் தனி நபர்  
  • இந்திய குடிமகனாக (குடியிருப்பு) இல்லாத தனி நபர்கள்
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் (தனி நபர் – Non-resident Individual)
  • நாட்டில் குடியிருக்கும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்

 

மேற்சொன்ன நபர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பின்வரும் இணையதள முகவரிக்கு செல்லுங்கள். அங்கே இடது புறத்தில் ‘Link Aadhaar’ என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Income Tax India E Filing Website

 

பின்பு, உங்களுடைய பான்(PAN) மற்றும் ஆதார் எண்ணை(Aadhaar) பதிவிடுங்கள். ஆதார் கார்டில் உள்ளது போன்று உங்களது பெயரை இடுங்கள். பின்னர், உங்களது ஆதார் கார்டில் பிறந்த வருடம் மட்டும் இருக்கும்பட்சத்தில் அந்த தகவலையும் கொடுக்கப்பட்டுள்ள பட்டியில் பதிவிடுங்கள்.

How to link Aadhaar PAN

 

மற்றொரு முறையாக, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு நீங்கள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ். -SMS) வாயிலாகவும் பயன்படுத்தலாம். கீழ்கண்டபடி உங்களது ஆதார் எண் மற்றும் பான் எண்ணை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

 

UIDPAN 123456789012 ABCDE1234A

 

UIDPAN என்ற எழுத்துக்கள் முன்வருமாறு இருக்க, உங்கள் ஆதார் மற்றும் பான் எண்களுக்கு இடையே இடைவெளி விட்டு கொள்ளுங்கள். குறுஞ்செய்தியை 567678 என்ற எண்ணுக்கு அனுப்பிய உடன், உங்களுக்கான ஒரு முறை கடவுச்சொல்(OTP) வரும். அதனை பதிவிட்ட உடன், உங்களுக்கான ஆதார்-பான் இணைப்பு வெற்றிகரமாக முடிவடையும்.

 

உங்களது பெயர் ஆதார் மற்றும் பான் அட்டைகளில் வெவ்வேறாக இருக்கும் போது அல்லது மாறுபடும் நிலையில்(Name Mismatch), உங்களது இணைப்பு முயற்சி ரத்து செய்யப்படும். அவ்வாறான நேரங்களில், நீங்கள் உங்கள் பெயரை ஆதார் அல்லது பான் அட்டைகளில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்.

 

மறந்து விடாதீர்கள், பான் மற்றும் ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு(Deadline) வரும் மார்ச் 31ம் தேதிக்கு முன். 2018-19ம் மதிப்பீட்டு காலத்திற்கான(Assessment year) வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31,மார்ச், 2019 (Filing Income Tax Return) என்பதை மறக்க வேண்டாம். இதற்கு முன்பு வருமான வரி தாக்கல் செய்து விட்டு, மின் சரிபார்ப்பு(E Verify) செய்யவில்லை என்றால், அதற்கான காலக்கெடுவும் மார்ச் 31, 2019.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வேகத்தை இழக்கும் விமான போக்குவரத்து – பிப்ரவரி மாதத்தில் 5.62 சதவீத வளர்ச்சி

வேகத்தை இழக்கும் விமான போக்குவரத்து – பிப்ரவரி மாதத்தில் 5.62 சதவீத வளர்ச்சி

Losing Momentum of Air Traffic in India – 5.62 percent growth in February 2019

 

நம் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்தாலும், விமான நிறுவனங்களின் வருவாய் குறிப்பிடும்படியாக இல்லை. நாட்டில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் நிதி சிக்கலில் தவித்து கொண்டு தான் இருக்கின்றன. உள்ளூர் விமான சேவையில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 5.62 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

5.62 சதவீத வளர்ச்சி என்பது உள்ளூர் விமான போக்குவரத்து(Domestic) சேவையில் கடந்த ஐந்து வருட காலத்தில் காணப்படும் மிகக்குறைவான வளர்ச்சியாக கருதப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் உள்ளூர் விமான பயணிகளின் எண்ணிக்கை 1.13 கோடியாக இருந்துள்ளது.  இது இதற்கு முந்தைய காலத்தில் 1.07 கோடி பயணிகளாக இருந்தது கவனிக்கத்தக்கது.

 

இண்டிகோ(Indigo -Interglobe Aviation) விமான நிறுவனம் பயணிகள் போக்குவரத்து சேவையில் 15 சதவீத வளர்ச்சியுடன் 49.31 லட்சம் பயணிகளை(Passenger Traffic) கொண்டிருந்தது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் முறையே 15.58 லட்சம் மற்றும் 12.92 லட்சம் பயணிகளை கொண்டிருந்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 17 சதவீத வளர்ச்சியையும், அதே நேரத்தில் திவால் நிலையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் பயணிகளின் எண்ணிக்கையில் 28 சதவீத வீழ்ச்சியை கண்டது.

 

கடந்த மாதத்தில் விமான சேவையின் வளர்ச்சி குறைந்து இருப்பதற்கு விமான நிறுவனங்களின் நிதி சிக்கல், பைலட் பற்றாக்குறை மற்றும் நோட்டம்(NOTAM) ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. விமான சேவையை ரத்து செய்த முறையில் ஏர் இந்தியா நிறுவனம்(Air India) 8.15 சதவீத பங்களிப்பையும், ஏர் ஏசியா(Air Asia) மற்றும் ஜெட் ஏர்வேஸ் முறையே 2.4 மற்றும் 2.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

 

சரியான நேரத்தில் விமானத்தை இயக்கிய முறையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சராசரியாக இருக்கையை நிரப்பும் பணியிலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 94 சதவீதத்தை பதிவிட்டு உள்ளன. பிப்ரவரி மாதத்தில் இந்திய விமான போக்குவரத்து சேவையில் ஸ்பைஸ் ஜெட்(Spice Jet) நிறுவனம் முதன்முறையாக, இண்டிகோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது.

 

இண்டிகோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 43 சதவீதமும், ஸ்பைஸ் ஜெட் 13 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளன. இவை இரண்டும் டாட்டா நிறுவனத்தின் விமான சேவை நிறுவனங்கள் ஆகும். கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்(Jet Airways) விமான நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 19 விமானங்களை தரையிறக்கம்(Grounded aircraft) செய்தது. இதன் மூலம் அதன் பயணிகள் எண்ணிக்கையிலும் 28 சதவீத வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

120 கோடி தொலைபேசி வாடிக்கையாளர்கள் – ஜியோவின் அதிரடி சாம்ராஜ்யம்

120 கோடி தொலைபேசி வாடிக்கையாளர்கள் – ஜியோவின் அதிரடி சாம்ராஜ்யம்

1200 Million Telephone Subscribers in India – Reliance Jio’s Action Empire

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஆரம்பித்த ரிலையன்ஸ் ஜியோவின் வேகம் இன்று நாடு முழுவதும் அதன் அதிரடி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு துறை ஆணையம்(Telecom Regulatory Authority of India -TRAI) வெளியிட்ட தகவலில் நாட்டில் உள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜனவரி 2019ம் காலத்தின் படி, 120.3 கோடியாகும். இது கடந்த வருடம் டிசம்பர் மாத முடிவில் 119.7 கோடி சந்தாதாரர்களை கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டில் உள்ள மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின்(Telephone Subscribers) எண்ணிக்கை 120 கோடி என்ற அளவை தற்போது மூன்றாவது முறையாக கடந்துள்ளது. இதற்கு முன் ஜூலை 2017 மற்றும் மே 2018 காலங்களில் 120 கோடி சந்தாதாரர்கள் என்ற எண்ணிக்கையை கடந்து இருந்தது. வாடிக்கையாளர்களின் அதிகரிப்பில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்(Airtel) மற்றும் பி.எஸ்.என்.எல்.(BSNL) ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

 

ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) நிறுவனம் புதிதாக 93 லட்சம் சந்தாதாரர்களை ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 9.82 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது.

 

சொல்லப்பட்ட மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்த நிலையில், வோடபோன் ஐடியா(Vodafone Idea) மற்றும் டாடா டெலிசர்வீஸ் நிறுவனங்கள் மொத்தமாக 44 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.டி.என்.எல். நிறுவனமும் சுமார் 4900 சந்தாதாரர்களை ஜனவரி மாதத்தில் இழந்துள்ளது.

 

பிராட்பேண்ட் சேவையில்(Broadband Internet Services) ஜியோ நிறுவனம் 28.94 கோடி சந்தாதாரர்களையும், ஏர்டெல் 11 கோடி சந்தாதாரர்களையும் மற்றும் வோடபோன் ஐடியா 10.98 கோடியும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 கோடி சந்தாதாரர்களையும் ஜனவரி மாதத்தில் கொண்டுள்ளது. கம்பி வழியிலான(Wireline) தொலைத்தொடர்பு இணைப்பில் டிசம்பர் மாதத்தில் 2.18 கோடி என்றிருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாத காலத்தில் 2.17 கோடியாக குறைந்தது.

 

கம்பி வழியிலான பிராட்பேண்ட் சேவையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முன்னணியில் உள்ளது. இதன் ஜனவரி மாத சந்தாதாரர்கள் எண்ணிக்கை 91.7 லட்சமாக உள்ளது. இந்த துறையில் ஏர்டெல் 23 லட்சம் இணைப்பையும், ஹாத்வே கேபிள் நிறுவனம்(ரிலையன்ஸ்) 7.9 லட்சமும், எம்.டி.என்.எல். 7.7 லட்சமும் மற்றும் அட்ரியா(Atria Convergence -ACT) நிறுவனம் 14 லட்ச இணைப்பையும் கொண்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அனில் அம்பானியின் காலக்கெடு – சரிவான வரலாறு

அனில் அம்பானியின் காலக்கெடு – சரிவான வரலாறு

Anil Ambani’s Time line – The Narrow history of Reliance ADAG – Reliance Communication

 

பணக்காரர்களின் தொழில் வாழ்க்கை நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் கதையாக இருந்தாலும், அவர்களின் தொழில் தோல்விகள் ஒவ்வொருவருக்கும் வரலாற்று பாடமாகவே அமைந்துள்ளது. தொழிற்துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் நிறுவனங்கள் வெகு சிலவென்றே என சொல்லலாம். ஆனால் பின்னாளில் சறுக்கும் நிறுவனங்களே தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழிலில் போட்டி மற்றும் புதுமையான விஷயங்களை தக்க வைத்து கொள்ளாதது தான் பெரும்பாலான தொழில் தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ரிலையன்ஸ்(Reliance) என்ற மாபெரும் நம்பிக்கையை உருவாக்கியவர் திருபாய் அம்பானி அவர்கள். அவரது காலத்திற்கு பின்பு, மைந்தர்களின் பங்களிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. அனைத்து குடும்பங்களில் ஏற்படும் சிக்கல் தான் ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்திற்கும்.

 

திருபாய் அம்பானியின் பிள்ளைகள் முகேஷ் மற்றும் அனில் ஆகிய இருவரும் தங்களுக்கான தொழிலை பிரித்து கொண்டனர். உலக பணக்காரர்கள்  வரிசையில்முன்னணி வகித்த அம்பானி சகோதரர்கள் முதல் சமீபத்திய ஜியோ புரட்சி(JIO) மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால் வரை இவர்களது தொழில் வரலாறு நீண்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் முகேஷ் அம்பானியால் துவங்கப்பட்டாலும், பின்னாளில் முகேஷ் தனது தந்தையின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நிர்வகிக்க சென்றார்.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அனில் அம்பானியிடம் சென்றது, பின்பு அனில் திருபாய் அம்பானி குழுமம்(Reliance ADAG) உருவாக்கப்பட்டது. 2002ம் வருடம் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இன்போகாம்(Reliance Infocomm) என்ற நிறுவனம் தான் பிறகு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என மாற்றம் செய்யப்பட்டது. தொலைத்தொடர்பு துறையில் சி.டி.எம்.ஏ.(CDMA) என்ற தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்த ஆர்.காம்(Rcom) நிறுவனம், 2010ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக 5860 கோடி ரூபாயை செலவிட்டது. 2016ம் வருடத்தில் எம்.டி.எஸ்.(MTS Mobile) நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கையகப்படுத்தியது.

 

ஏர்செல் நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(Reliance Communications) நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தமும் தோல்வியில் முடிந்தது. தொலைத்தொடர்பு துறையில் அடுத்தடுத்த போட்டியினை சமாளிக்க முடியாமல் ஆர்.காம் நிறுவனம் திணறியது. ஜியோ வருகைக்கு பின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் காணாமல் போனது என்றே சொல்லலாம். அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ப்ரா  போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ஸ்பெக்ட்ரம்(Spectrum) அலைவரிசையில் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தாமதப்படுத்தியதால், நீதிமன்றத்தில் அனில் அம்பானி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

 

செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாமல், தனது ஆர்.காம் நிறுவனத்தை திவாலாக அறிவித்தார் அனில் அம்பானி(Anil Dhirubhai Ambani). சில நாட்களுக்கு முன் நீதிமன்றம், ‘ அனில் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 550 கோடி ரூபாயை செலுத்த தவறினால் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் ‘ என எச்சரித்து இருந்தது நினைவிருக்கலாம். அதற்கான காலக்கெடு வரும் செவ்வாய் கிழமை அன்று (19-03-2019) முடிவடைகிறது. ஏற்கனவே அனில் அம்பானி ரிலையன்ஸ் அஸெட் மேனேஜ்மென்ட்(RNAM) நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவெடுத்து, அதனை தொடர்ந்து அந்த தொழிலை நிப்பான் லைப் நிறுவனத்தை வாங்க சொல்லியிருந்தார். ரிலையன்ஸ் பரஸ்பர நிதி நிறுவனத்தில் நிப்பான் லைப்(Nippon Life) ஒரு பங்குதாரராக உள்ளது கவனிக்கத்தக்கது.

 

இதனிடையே தற்போது பி.எஸ்.என்.எல்.(BSNL Telecom) நிறுவனமும் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தரவில்லை என வழக்கு தொடுத்துள்ளது. விமான ஒப்பந்தத்திலும்(Aircraft Deal) அனிலின் குழுமம் பிரச்னையில் உள்ளது. முகேஷ் அம்பானியை விட கல்வியிலும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிய அனில் திருபாய் அம்பானி செலுத்த வேண்டிய கடனை செலுத்தி விட்டு, தனது குழுமத்தை மீட்டெடுப்பாரா, இல்லையெனில் வரலாற்றில் எதிர்மறையான நிலையை ஏற்படுத்துவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். (*அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை தாம் அளிப்பதாக கூறியுள்ளார் -திங்கட்கிழமை இரவு .)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019

The WPI Inflation in India was 2.93 Percent in February 2019

 

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த பிப்ரவரி  மாதத்தில் 2.93 சதவீதமாக இருந்துள்ளது. இதே காலத்தில் கடந்த 2018ம் வருடத்தில் மொத்த விலை பணவீக்கம்(Wholesale price index -WPI) 2.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக இருந்த பணவீக்கம் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சக்தி ஆகியவற்றில் ஏற்பட்ட விலை உயர்வால் பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பிப்ரவரி 2019 மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation -CPI) 2.57 சதவீதமாகவும், இதுவே ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும் இருந்தது.அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பால் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து கடந்த மாதத்தில் இதன் பணவீக்கம் 4.84 சதவீதம் ஆகும். இதுவே ஜனவரி மாதத்தில் 3.54 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்தது.

 

எரிபொருட்கள் மற்றும் மின்சக்தி(Fuel & Energy) ஆகியவற்றின் பணவீக்கமும் அதிகரித்து கடந்த மாதத்தின் முடிவில் 2.23 சதவீதமாக இருக்கிறது. உணவு பொருட்களின் விலையும் கடந்த இரண்டு மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் காலம் வரை உணவு பொருட்களில் விலை சரிவு ஏற்பட்டு பணவாட்டம் காணப்பட்டது.

 

கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் எரிபொருட்களின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைவாகவே உள்ளது. இதன் பணவீக்கம் கடந்த பிப்ரவரி 2018 காலத்தில் 4.6 சதவீதமாக இருந்த போதிலும், கடந்த மாதத்தில் 2.23 சதவீதமாக தான் இருந்தது.

 

நாட்டின் பணவீக்கம்(Inflation India) கடந்த சில காலங்களாக குறைந்த அளவிலே இருந்துள்ளதால், அதனை சார்ந்து பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை அறிவித்து வருகிறது. அடுத்து வரும் நிதி கொள்கை குழுவிலும் பாரத ரிசர்வ் வங்கி, வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம்(RBI Interest Rate) என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்

வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்

India’s First Real Estate Investment Trust(REIT) Opportunity – Advantages & Disadvantages

 

ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளை என்னும் ரெய்ட்(REIT) அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு முதல் செபியால்(SEBI) ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையில் இதுவரை எந்த முதலீடும் திரட்டப்படாத நிலையில், தற்போது பொது மக்களிடையே முதலீட்டை பெறும் நோக்கத்தில் உள்ளது ரெய்ட். ரெய்ட் என்னும் அமைப்பு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை போன்று செயல்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதிகள் பொதுவாக பல்வேறு முதலீட்டாளர்களிடையே பெற்ற தொகையை பங்குகள், அரசாங்க பத்திரங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யும். இதனை போன்றே ரெய்ட் முதலீடும் பொது மக்களிடம் பணத்தை  பெற்று கொண்டு அதனை நிலம் மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யும். முதலீடுகளின் வாயிலாக வாடகை வருமானம், நிலம் மற்றும் மனை விற்பனை மூலம் ஆதாயம் ஆகியவை பெறக்கூடும். இவை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

 

வீட்டு மனையில் நாம் நேரிடையாக அதிக பணத்தை முதலீடு செய்யாமல் ரெய்ட் அமைப்பின் மூலம் நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகைக்கு மட்டும் முதலீடு செய்து விட்டு, வருவாயை ஈட்டலாம். நிலம் மற்றும் வீட்டு வாடகை மூலம் ஒரு குறிப்பிட்ட கால வாரியாக வருமானம் கிடைக்கும். இது போக, சில காலங்களுக்கு பிறகு அந்த மனை விற்கப்படும் நிலையில், மூலதன ஆதாயமும் நமக்கு கிடைக்கப்பெறும்.

 

ரெய்ட் அமைப்பில் செய்யப்பட்ட முதலீட்டை நாம் இடையில் திரும்ப பெற விரும்பினால், பங்குச்சந்தையில்(Stock Exchange) நம்மிடம் உள்ள ரெய்ட் யூனிட்களை விற்று பணமாக பெற்று கொள்ளலாம். சுருங்க சொன்னால், இந்த முதலீடு மியூச்சுவல் பண்ட் முதலீட்டை போன்றே அமையப்பெறும்.

 

ரெய்ட் அமைப்பில் முதல் நிறுவனமாக பெங்களூருவை சேர்ந்த எம்பசி பார்க்ஸ்(Embassy Office Parks) நுழைய இருக்கிறது. முதலீடு திரட்டப்படும் நாள் வரும் 18ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி(March 18-20) வரை ஆகும். பொதுவெளியில்(Public Issue) திரட்டப்பட உள்ள தொகை சுமார் 4750 கோடி ரூபாய். இதற்கு ஐ.சி.ஆர்.ஏ.(ICRA) ஏஜென்சியின் ‘AAA’ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டின் விலை 300 ரூபாயாகவும், குறைந்தபட்ச வாங்க வேண்டிய பங்குகளின் எண்ணிக்கை 800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ரெய்ட் முதலீட்டில் நிறுவன முதலீட்டாளர்களுக்கு 75 சதவீதமும், நிறுவனமல்லாத மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு 25 சதவீத பங்களிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் மூலம் பெறப்படும் வருமானம், வரி நிபந்தனைக்கு உட்பட்டது. அதே வேளையில், பெறப்படும் ஈவுத்தொகைக்கு(Dividend) வரி எதுவும் செலுத்த தேவையில்லை.

 

சாதகமான அம்சமாக உள்ளவை:  ஒழுங்குமுறை ஆணையமாக செபி செயல்பட்டு வருவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். ரெய்ட் முதலீடு அனுபவமிக்க தொழில் முறை நிர்வாகிகளை கொண்டு இயக்கப்படுவதால், நஷ்டத்திற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வீட்டு மனை துறையின் மூலம் தொடர் வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு.

 

பொதுவாக நாம் மனையை வாங்கினால், அதனை உடனடியாக விற்று பணம் பண்ண முடியாது. ஆனால் ரெய்ட் முதலீட்டின் மூலம் உடனடியாக சந்தையில் நாம் வைத்திருக்கும் மனைகளை (யூனிட்களை) விற்று பணம் பெறலாம்.

 

பாதகங்கள்:  ரெய்ட் முதலீட்டில் குறைந்தபட்ச மூலதனம் ரூ. 2 லட்சமாக செபி நிர்ணயித்துள்ளது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இருப்பினும், காலப்போக்கில் இவற்றில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சமீப காலங்களாக ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பார்த்த வருமானம் அவ்வளவாக கிடைப்பதில்லை. மனைகளின் விற்பனை விலையும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை எனலாம். இதனால் நமக்கு கிடைக்கப்பெறும் வருவாய், வங்கி வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை(Bank FD Rates) ஒட்டியே காணப்படும்.

 

இந்த மாதம் வெளிவர உள்ள முதலீடு தான் ரெய்டின் முதல் வெளியீடு ஆகும். எனவே, இந்த துறை இனிவரும் காலத்தில் எவ்வாறு வளரும் என நாம் சற்று பொறுமையாக காத்திருப்போம். அதுவரை நாம் பரஸ்பர நிதி திட்டங்களை(Real Estate Sector Funds) முதலீட்டு வாய்ப்பிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

Minimum Investment amount of 100 rupees and Free Term Insurance – Mutual Funds Schemes

இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி துறை(Mutual Fund Industry) 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பரஸ்பர நிதி திட்டங்களுக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

1987-1993 ம் வருட காலங்களில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வழங்கி வந்த நிலையில், பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் பரஸ்பர நிதி துறையில் நுழைந்தன. அரசு சார்பில் துவங்கப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதன்முறையாக பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி. நிறுவனமும்(LIC India) திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தின. 1992ம் ஆண்டு பரஸ்பர நிதிக்கான ஒழுங்குமுறை செபியிடம்(SEBI) வந்த பிறகு, முதல் தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக கோத்தாரி பயோனியர்(Kothari Pioneer) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் பிராங்கிளின் டெம்பிள்டன்(Franklin Templeton) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆரம்ப காலத்தில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பினும், தற்போது பரஸ்பர நிதி திட்டங்கள் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புக்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது. இன்றும் சிலருக்கு பரஸ்பர நிதி திட்டங்கள் என்றாலே பங்குச்சந்தை தான் என்ற ஐயம் உள்ளது. சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வும், திட்டங்களில் உள்ள வடிவமைப்பும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பிலும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது கருத்தரங்குகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

பரஸ்பர நிதி சார்ந்த விழிப்புணர்வை நமது ஊரில் பரவலாக விகடன் குழுமம் (நாணயம் விகடன் – Nanayam Vikatan) சேர்த்து வருவது நல்ல விஷயம். சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த அடிப்படை கல்வி நமக்கு பள்ளி, கல்லூரி காலங்களில் கிடைப்பதில்லை என்றாலும், இன்று அதற்கான தளங்கள் அமைய பெற்றிருப்பது மக்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி திட்டங்களில் லிக்விட் பண்டுகள்(Liquid Funds) என்று சொல்லப்படும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் முதல் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள்(Equity oriented Funds) வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீட்டாளரின் நிதி இலக்குகள், கால அளவுகளை கொண்டு மற்றும் ரிஸ்க் தன்மையை பொறுத்து பரஸ்பர நிதி திட்டங்கள் வேறுபடும். நீண்டகாலத்தில் பரஸ்பர நிதித்திட்டங்கள் பணவீக்கத்தை காட்டிலும் நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. அதே வேளையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை காட்டிலும் பெறக்கூடிய நீண்டகால வருமானம் பல மடங்கு லாபத்தை தரக்கூடியவையாக உள்ளது.

இன்றைய நிலையில், வரி சலுகையை பெற மிகவும் குறைந்த லாக் இன் காலம்(Lock in Period) கொண்ட மற்றும் அதிக வருமானத்தை தரும் திட்டமாக மியூச்சுவல் பண்ட் டாக்ஸ் சேவர் திட்டங்கள்(Tax Saving Mutual Funds) உள்ளன. முன்னர் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை (ரூ.500-5000) முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து, தற்போது குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களும் அஞ்சலக சேமிப்பை போல, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டு தொகையை, நாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெற்று கொள்ளலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம். சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நாம் மாதாமாதம் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan -SIP) தொகைக்கு இலவச டேர்ம் பாலிசியையும் வழங்குவது ஆதாயமான விஷயம். நாம் செய்யும் முதலீடு தொகைக்கு ஏற்றாற் போல் மற்றும் கால அளவுகளை பொறுத்து, நமக்கான டேர்ம் காப்பீடு தொகையும்(Term Policy Insurance) அதிகரிக்கும். இதற்காக அந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

இருப்பினும், இலவசமாக காப்பீடு கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு, நீங்கள் உங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் நிலையில் உங்களது காப்பீடு ரத்து செய்யப்படலாம். சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 வருடங்கள் முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கு காப்பீட்டை வழங்கும். எனவே காப்பீடு இலவசமாக கிடைக்கப்பெற்றாலும், தனியாக டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

வரும் காலங்களில் வங்கி வைப்பு தொகை மற்றும் அஞ்சலக திட்டங்களுக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு முழுமையாக இருக்கலாம் என்பது தான் உண்மை. அதனால் தான் என்னவோ, சில வங்கிகள் தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை பரிந்துரைக்கின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com