Tag Archives: provident fund

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல்

கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக  வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல்

76.48 Lakh New Jobs created in the last 17 Months – EPFO

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவு கூறியிருந்தது. தற்போது இதற்கு மாறாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வேலைவாய்ப்பு சார்ந்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அவை கூறியதாவது, ‘ நாட்டில் கடந்த செப்டம்பர் 2017 முதல் நடப்பு வருட ஜனவரி மாதம் வரையிலான 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் வேலை பெற்றவர்களாக உள்ளனர் ‘.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமைப்பு சார்ந்த துறையில்(Organized Sector) என்பதும் கவனிக்கத்தக்கது. வேலைகள் உருவாக்கப்பட்டதற்கு சான்றாக, சொல்லப்பட்ட 17 மாதங்களில் இ.பி.எப்.ஓ. நிறுவனத்திற்கு 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் மட்டும் 8.96 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட வேலைகளில் சுமார் 2.45 லட்சம் வேலைகள்(Created Jobs) 22-25 வயது பிரிவை சார்ந்தவர்கள், மேலும் 2.24 லட்சம் வேலைகள் 18 வயதிலிருந்து 21 வயது உள்ளவர்கள் ஆவர். இ.பி.எப்.ஓ.(Employees Provident Fund Organization) நிறுவனத்தில் இதுவரை இணைந்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆறு கோடி நபர்களுக்கு மேலாக உள்ளது.

 

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

சொல்லப்பட்ட 17 மாதங்களில் சுமார் 29 ஆயிரம் சந்தாதாரர்கள் இ.பி.எப்.ஓ. திட்டத்திலிருந்து வெளியேறி உள்ளனர். இவற்றில் தனியார் நிறுவனத்திலிருந்து விலகி சென்று அரசு பணியில் சேர்ந்தவர்களும் அடங்குவர். கடந்த வருடத்தின் முடிவில் 7.16 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும்(Employment) என்ற முந்தைய கணிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பின்னர் அதனை 7.03 லட்சமாக மறுமதிப்பீடு செய்திருந்தது.

 

எந்தவொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 20 தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிலையில், அந்த நிறுவனம் இ.பி.எப்.ஓ.(EPFO) திட்டத்துடன் இணைத்து கொள்ள வேண்டும். பின்னர் தனது தொழிலாளர்களின் வருவாயில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, நிறுவனத்தின் சார்பிலும் அதே அளவு தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களின் நிதி சார்ந்த எதிர்காலம் பாதுகாப்பாக அமையும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

Employees Provident Fund Interest Rate History

 

தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தற்சமயம் 2018-19ம் நிதியாண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உள்ளது. வருங்கால வைப்பு நிதி(Employees Provident Fund) என்று சொல்லப்படும் பி.எப். க்கான வட்டி விகிதங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 1952ம் வருடம் மார்ச் மாதத்தில் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான சட்டம்(EPF Act) நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் தங்களது நிறுவனத்தை இ.பி.எப். அமைப்பில்(EPFO) பதிவு செய்ய வேண்டும். இ.பி.எப். அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பி.எப். க்கான தொகையை தங்கள் தொழிலாளர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்திருக்க வேண்டும். அதே வேளையில் நிறுவனத்தின் பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படும் தொகை அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில்(Bonds) மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி பி.எப். தொகையை பங்குச்சந்தையிலும்(Equity exposure) முதலீடு செய்யலாம் என்ற சட்டம் சில காலங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. எனவே, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். தொகையின் ஒரு பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

EPF Interest Rate History 1952

1952ம் வருடம் இ.பி.எப். க்கான சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 1952-53ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட முதல் வட்டி விகிதம் 3 சதவீதமாகும். பின்னர் பி.எப். வட்டி விகிதங்கள்(Interest rate) நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க எண்களை சார்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டன.

 

1976-77 மற்றும் 1977-78ம் நிதி ஆண்டுகளில் பி.எப். சந்தாதாரர்கள் தங்களது பி.எப். கணக்கில் எந்தவொரு பணத்தையும் எடுக்காத பட்சத்தில், 1978-79ம் நிதியாண்டில் 8.25 சதவீத வட்டியுடன் 0.5 சதவீத போனஸ் வட்டியும்(Bonus Rate) அளிக்கப்படும் என இ.பி.எப். வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.

 

1990ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு பி.எப். வட்டி விகிதம் 12 சதவீதமாக கொடுக்கப்பட்டது, இது இ.பி.எப். வரலாற்றில் அளிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி விகிதம். பின்னர் 2001ம் வருடம் முதல் பி.எப்.வட்டி விகிதம் குறைந்து கொண்டே வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டி விகிதமாக, 2011-12ம் ஆண்டு 8.25 சதவீதமாக இருந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு

தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு  

The EPF interest rate hiked to 8.65 for FY 2018-19

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) நேற்று (21-02-2019) வெளியிட்ட தனது அறிக்கையில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தியது. கடந்த ஐந்து வருடங்களில் தற்போது தான் இதற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் நாம் வர்த்தக மதுரை தளத்தில் பொது வருங்கால வைப்பு நிதியின் கடந்த கால வட்டி விகிதங்களை(PPF Rate History) பற்றி பதிவிட்டிருந்தோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 2014-15ம் நிதியாண்டில் 8.75 சதவீதமாக இருந்த பி.எப். வட்டி விகிதம் பின்னர் 2015-16ம் வருடத்தில் 8.8 % ஆகவும், 2016-17ம் ஆண்டில் 15 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டில் (2017-18) ஐந்து வருட குறைவாக பி.எப். வட்டி விகிதம்(Provident Fund Interest rate) 8.55 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். க்கான மொத்த வைப்பு தொகை(Annual Deposits) கடந்த 2017-18ம் ஆண்டில் ரூ.1,31,000 கோடியாக இருந்தது. நடப்பு வருடத்தில் இது ரூ.1,46,000 கோடியாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்டுள்ள 8.65 சதவீத வட்டியின் மூலம் 6 கோடி பி.எப். சந்தாதாரர்கள்(Subscribers) பயனடைவர் என கூறப்படுகிறது. அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் இல்லாத காலத்தில், தனியார் துறைக்கும் இந்த வருங்கால வைப்பு நிதி(PF) ஒரு நீண்டகால மற்றும் பாதுகாப்பு தரும் முதலீட்டு சாதனமாக அமைகிறது.

 

பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின்(EPS) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது பற்றியும் வாரியத்தின் சார்பில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விஷயத்தில் அடுத்து வரவிருக்கும் குழு கூட்டத்தில் தான் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

 

நடப்பு நிதி வருடத்தில் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை காட்டிலும் பி.எப். வட்டி விகித அறிவிப்பு (மூத்த குடிமக்கள் திட்டம் தவிர்த்து) சற்று அதிகமாக தான் உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதிக்கான(PPF) சமீபத்திய வட்டி விகிதம் 8 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. செல்வ மகள் சிறு சேமிப்பு திட்டத்திற்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் 8.50 சதவீதமாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

Interest Rate hikes for Small Savings Schemes – 2018

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு வரும் அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கு உரியதாகும். இதன் மூலம் வங்கி டெபாசிட்களுக்கான  வட்டிவிகிதமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே சில வங்கிகள் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை (20-09-18) வெளியிட்ட அறிக்கையின் படி, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund -PPF) மற்றும் தேசிய சேமிப்பு பத்திர (National Savings Certificate -NSC) திட்டத்திற்கு 8 சதவீத வட்டியும், செல்வமகள் (Sukanya Samriddhhi Account) திட்டத்திற்கு 8.5 சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

 

இதற்கு முன்னர் PPF மற்றும் NSC திட்டங்களுக்கு 7.6 சதவீத வட்டியும், செல்வமகள் திட்டத்திற்கு 8.1 சதவீதமும் இருந்தன. அதே போல கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.3 சதவீதத்திலிருந்து 7.7 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 118 மாத முதிர்வை கொண்ட இந்த பத்திரம் தற்போது 112 மாத கால அளவில் முதிர்வடையும்.

 

Small Savings Schemes Interest Rate

 

ஒரு வருடத்திற்கான டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்திலிருந்து 6.9 % ஆகவும், இரண்டு வருடத்திற்கு 6.7 % இலிருந்து 7 சதவீதமாகவும், ஐந்து வருடத்திற்கு 7.4 % லிருந்து 7.8 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen Savings Scheme)  5 வருட திட்டத்திற்கு 8.3 சதவீதத்திலிருந்து 8.7 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

5 வருட ஆர்.டி. (Recurring Deposit -RD) கணக்குக்கு வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வரும் மாதாந்திர வருமானம் தரும் (Monthly Income) கணக்கிற்கு 7.7 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகத்தின் இந்த வட்டி விகித மாற்றம் வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO

ஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO

44 Lakhs Jobs Created in 9 Months – EPFO

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organization -EPFO) கடந்த வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு சம்மந்தமான ஒரு தகவலை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 2017 இலிருந்து 2018 மே மாதம் வரை, ஒன்பது மாதங்களில் நாட்டில் 44 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளது.

 

2017 செப்டம்பர் – 2018 ஏப்ரல் காலத்தில் வருங்கால வைப்பு நிதி புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 41.26 லட்சமாகும். கடந்த மே மாதத்தில் மட்டும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 லட்சமாகும்.

 

மே மாதத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கையில் 18-21 வயது பிரிவில் மட்டும் 2.50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். 22-25 வயது பிரிவில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை 1.90 லட்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமைப்பு சுமார் 6 கோடி உறுப்பினர்களையும், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியையும் நிர்வகிக்கிறது.

 

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களது வருமானத்திலிருந்து சேமிக்கின்றனர். ஊழியர்களின் நிறுவனமும், ஊழியர்களின் சார்பில் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்களிப்பை செலுத்திகிறது.

 

EPFO அமைப்பின் சார்பில் மூன்று விதமான வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமைப்பு(EPFO) 1952 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment) மற்றும் இந்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.

 

மேலே குறிப்பிடப்பட்ட தரவுகள் அந்தந்த மாதத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை என்றும், அவர்களின் பங்களிப்பு அடுத்தடுத்த மாதத்தில் தவறும் பட்சத்தில் தரவுகளின் எண்ணிக்கையிலும் மாறுபாடு இருக்கலாம் என EPFO அமைப்பு கூறியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

Provident Fund interest rate hiked to 8.8%

Provident Fund interest rate hiked to 8.8%

பி.எப் வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்வு

 

  • 2015-2016 ம் நிதி ஆண்டுக்கான பி.எப் (வருங்கால வைப்பு நிதி) வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • இதற்கு முன்னர் பி.எப் வட்டி(Provident Fund) விகிதம் 8.75 % இருந்தது.

 

  • EPFO ன் கமிட்டி [ EPFO Finance Audit and Investment committee (FAIC) ] வட்டி விகிதத்தை 8.95 % ஆக உயர்த்த பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Provident Fund(PF) interest rate hiked to 8.8% for the financial year 2015-2016.

Read more on:  வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

நன்றி, வர்த்தக மதுரை 

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com